Tuesday, October 8, 2013

Garlic Onion Kara Chutney

Garlic Onion Kara Chutney
  • Big Onion - 1
  • Garlic flakes - 5
  • Red Chillies - 3 to 4
  • Tamarind - a big gooseberry size
  • Oil - 2 teaspoons
  • Salt - 1 teaspoon or as per taste
Method:
First chop the onion into big pieces.
In a frying pan, add oil, red chillies, onion, garlic and tamarind. Fry all the ingredients until a nice aroma comes out. Let it cool for some time and then grind it along with salt.
This chutney goes well with Idli or Dosai.

Friday, October 4, 2013

கை முறுக்கு

சுவையான கை முறுக்கு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு
திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள் 
  • அரிசி மாவு – 4 கப்
  • உளுத்தம் மாவு – 1/2  கப்
  • மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • வெண்ணெய் / நெய் – 200 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை 
  1. உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த உளுத்தம்பருப்பை மிக்ஸ்யில் நன்கு அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
  2. இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. நெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கையால் நன்கு தேய்த்துக் கொள்ளவும். இதனுடன் மாவு கலவையை சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும்.
  4. மாவை 3 அல்லது 4 பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.
  5. முதலில் ஒரு பகுதி மாவை மட்டும் எடுத்து திக்காக பிசைந்து கொள்ளவும்.
  6. ஒரு ஈரத் துணியின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டையை எடுத்துக் கொள்ளவும்.
  7. கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கலந்து முறுக்கினை சுற்றவும்.
  8. கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருக்கி பாட்டில் மூடியைச் சுற்றிலும் சுற்றி விடவும்.
  9. இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக் கூடாது. தேவையான அளவிற்கு சுற்றுகளின் எண்ணிக்கையை கூடவோ, குறைத்தோ சுற்றிக் கொள்ளலாம்.
  10. கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சுற்றி வைத்துள்ள முறுக்கை கவனமாக எடுத்து, எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்.
  11. இதே போல் அடுத்த பகுதி மாவை எடுத்து பிசைந்து, சுற்றி, பொரித்து எடுக்கவும்.
  12. சுவையான கை முறுக்கு தயார்.

கொத்துக்கறி உருண்டை குழம்பு

சுவையான கொத்துக்கறி உருண்டை குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • கொத்துக்கறி – 500 கிராம்
  • வெங்காயம் பெரியது – 1
  • மிளகாய் வற்றல் – 6
  • வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • தேங்காய் – 1 கப்
  • கசகசா – 1 தேக்கரண்டி
  • பட்டை – 1 அங்குலம்
  • கிராம்பு – 3
  • ஏலக்காய் – 2
  • முந்திரிப்பருப்பு – 6
  • எலுமிச்சம் பழம் – 1/2
  • முட்டை – 1
  • மல்லித்தழை, புதினா – சிறிதளவு
  • நெய் – 2 தேக்கரண்டி
  • எண்ணெய்  – 3 தேக்கரண்டி
செய்முறை
  1. மிளகாய் வற்றல், வர கொத்தமல்லி, சோம்பு, கசகசா, முந்திரிபருப்பு  ஆகியவற்றை இளம் சிவப்பாக வறுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொத்துக்கறியை தண்ணீரில்லாமல் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  3. வதக்கிய கறியை மிக்ஸ்யில் போட்டு லேசாக அடித்துக் கொள்ளவும்.
  4. இதனுடன் அரைத்த மசாலாவில் பாதியை சேர்த்து, முட்டையையும் உடைத்து ஊற்றி நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.
  5. அதே குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லித்தழை, புதினா, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி , எடுத்து வைத்துள்ள மீதமுள்ள  அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. இதனுடன் தேங்காய்ப்பால் ஊற்றி நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
  7. குழம்பு கொதிக்கும்போது செய்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும்.
  8. குழம்பை கிளறாமல் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
  9. இறக்கியவுடன் எலுமிச்சம்பழசாறு பிழிந்து விடவும்.
குறிப்பு
கொத்துக்கறி உருண்டைகளை தனியே எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சேர்க்கலாம்.

நன்றி : TAMIL COOK

சுண்டல், ஸ்வீட், காரம்... மிச்சமாகிப் போனால்... வித்தியாசமான டிஷ்!.......... நன்றி : அவள் விகடன்.

நவராத்திரி சமயத்தில்... நாம் செய்தது, அக்கம்பக்கத்தில் கொடுத்தது என்று பலவிதமான சுண்டல்கள் மிகுந்துவிடும். அவற்றை வைத்து என்ன செய்யலாம்?
இனிப்பு இல்லாத சுண்டல் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பொட்டுக்கடலை மாவு அல்லது ரஸ்க்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு பிசையவும். இந்தக் கலவையை சிறு வடைகள் வடிவத்தில் தட்டி, நான்ஸ்டிக் தவாவில் பரவலாக வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுக்கவும். வித்தியாசமான, சுவையான, சுண்டல் கட்லெட் ரெடி!
தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் வீட்டில் செய்யும்... உறவினர், நண்பர்கள் வாங்கி வரும் ஸ்வீட், கார வகைகள் தேவைக்கு அதிகமாகி விடும்போது அவற்றை வேறு வகையில் பயன்படுத்த முடியுமா?
காராசேவு, மிக்ஸர், நாடா பக்கோடா, தேன் குழல் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்த கலவையை குணுக்கு போல் கிள்ளி போட்டு பொரிக்கவும். வழக்கமாக செய்யும் குணுக்கைவிட இது மேலும் பிரமாதமான ருசியுடன் இருக்கும்.
ஸ்வீட் வகைகளை எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 100 கிராம் கடலைப்பருப்பை வறுத்து வேக வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கிளறி, பொடித்த ஸ்வீட் சேர்த்துக் கலந்து பூரணம் தயாரிக்கலாம். மைதா மாவை தேவையான நீர் விட்டு பிசைந்து, ஸ்வீட் பூரணம் வைத்து மூடி, போளி தயாரிக்கலாம். இந்த மல்டி ஸ்வீட் போளி ஆளை அசத்தும்.
இஞ்சி அதிகமாக கிடைக்கும் சீஸனில், அதை வாங்கி பக்குவப் படுத்தி வைப்பது எப்படி?
இஞ்சியை இளசாக (நார் இல்லாதது) வாங்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி, சிறிதளவு சர்க்கரை, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டால்... சமையலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம். இஞ்சி சாறை கெட்டியாக காய்ச்ச வேண்டியது அவசியம்.
சுகரை கன்ட்ரோலில் வைக்கவும், உடலுக்கு வைட்டமின் சத்து கிடைக்கவும் எளிய உணவு முறை... ப்ளீஸ்!
வெந்தயத்தை வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் மோரில் இந்தப் பொடியை கொஞ்சம் சேர்த்து பருகி வந்தால்... சுகர் கட்டுப்படும்.
நெல்லிக்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியை சேர்த்துக் கலந்து அருந்தினால், வைட்டமின் 'சி’ சத்து கிடைக்கும். இது, வயிற்றுக் கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். நெல்லிப் பொடியை தயிரில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், கூந்தல் நன்கு வளரும்.
டீ தயாரிக்கும்போது டீத்தூள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டினாலும் பொடி தங்குகிறதே... என்ன செய்வது?
தேவையான அளவு டீத்தூள், ஏலக்காய்... இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, மெல்லிய துணியில் வடிக்கட்டவும். இதை சூடான பாலில் கலந்தால்... அருமையான  ஏலக்காய் டீ ரெடி. டீத்தூளும் தங்காது.
பாட்டிலில் போட்டு வைத்த ஊறுகாய்கள் எல்லாம் பழையதாகி கொஞ்சம் கொஞ்சம் தங்கிவிட்டது... இதை என்ன செய்வது?
சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாய் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து, சிறிது வெல்லம் சேர்த்து, வாணலியில் போட்டு கிளறி ஜாம் போல தயாரிக்கலாம். இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
வீட்டுக்கு வரும் உறவினர், விருந்தாளிகளுக்கு வாசனையான மோர் கொடுக்க... ஒரு ஐடியா தருவீர்களா...?
புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து, ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் ட்ரேயில் வைக்கவும். ஒரு டம்ளர் மோரில் 2 ஐஸ் க்யூப், சிறிதளவு உப்பு போட்டுக் கலக்கினால்... அருமையான, கமகம மோர் தயார்
முருங்கை மரம் பூத்து குலுங்குகிறது அவ்வளவு பூவும் காயாகாது. முருங்கைப்பூவை சமையலில் பயன்படுத்தலாமா?
முருங்கைப் பூவை நெய்யில் வதக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து சட்னியாக அரைக்கலாம்.
பொரித்த அப்பளம் நமுத்துவிட்டால், என்ன செய்யலாம்?
அதை வைத்து பச்சடி தயாரிக்கலாம். அப்பளத்தை மிக்ஸியில் கிள்ளிப் போட்டு ஒரு சுற்று சுற்றி, ஒரு கப் தயிருடன் சேர்த்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்து சேர்த்தால்... சுவையான அப்பளப் பச்சடி ரெடி. இதை வெங்காயம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் கலந்தும் தயாரிக்கலாம்.

நன்றி: அவள் விகடன்

30 வகை சுண்டல் - நைவேத்தியம்-----நன்றி : அவள் விகடன்...;

ழகுற வீட்டை அலங்கரித்து... அலைமகள், கலைமகள், மலைமகள் மூவரையும் பூஜித்து... அக்கம்பக்கம், உறவு, நட்பு என அனைவருடனும் சேர்ந்து கொண்டாடி மகிழும் நவராத்திரி பண்டிகை, பெண்களுக்கு ஈடு இணயற்ற திருநாள். நவராத்திரி சமயத்தில், மற்றவர்களின் பாராட்டை உங்களுக்கு வாங்கித் தரும் வகையில் '30 வகை சுண்டல் - நைவேத்தியம்’ வகைகளை அள்ளி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.
''முப்பெரும் தேவியரின் அருளால், உங்கள் இல்லத்தில் தித்திப்பான தருணங்கள் நிரம்பி வழியட்டும்'' என்று பக்திப் பரவசம் பொங்க, பரிவுடன் வாழ்த்துகிறார் பத்மா.
காராமணி இனிப்பு சுண்டல்
தேவையானவை: சிவப்பு காராமணி - ஒரு கப், பாகு வெல்லம் (பொடித்தது) - ஒரு கப், வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து... எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... காராமணி இனிப்பு சுண்டல் தயார்.

கடலைப்பருப்பு சுண்டல்
தேவையானவை:  கடலைப்பருப்பு - 200 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு... வேக வைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து, உப்பு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பார்லி  சாபுதானா சுண்டல்
தேவையானவை: பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை - தலா 100 கிராம், பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து, ஊற வைத்த பார்லி, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பச்சைப் பட்டாணி சுண்டல்
தேவையானவை:  பச்சைப் பட்டாணி - 200 கிராம், துருவிய கேரட் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - ஒரு தலா டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று.
செய்முறை:  தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து வைக்கவும். பச்சைப் பட்டாணியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து... குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வேக வைத்த பட்டாணியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். இதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்ததையும் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லியைத் தூவி கலந்து பரிமாறவும்.

வேர்க்கடலை சுண்டல்
தேவையானவை:  பச்சை வேர்க்கடலை - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தலா ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையுடன் உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து... வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து சேர்த்து, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பயறு இனிப்பு சுண்டல்
தேவையானவை:  பச்சைப் பயறு - 200 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை: பச்சைப் பயறை லேசாக வறுத்து, 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து சிறிது கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடிப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த பயறை தண்ணீர் வடித்து சேர்த்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.

பாசிப்பருப்பு கார சுண்டல்
தேவையானவை:  பாசிப்பருப்பு - 200 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஃப்ரூட் சுண்டல்
தேவையானவை:  முளைகட்டிய சோளம், கொய்யாபழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளிப்பழத் துண்டுகள் - தலா ஒரு கப், உலர் திராட்சை - 10.
செய்முறை: முளைகட்டிய சோளத்துடன் நறுக்கிய கொய்யாப்பழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளி பழத் துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உலர் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: சுலபமாக செய்யக்கூடிய இந்த சுண்டலில் ருசியும், சத்தும் ஏராளம்!

ரங்கோலி சுண்டல்
தேவையானவை: பச்சைப் பட்டாணி, முளைகட்டிய சோளம், சோயா - தலா ஒரு கப், கேரட் துருவல் - 4 டீஸ்பூன், மாங்காய் (துருவியது) - 2 டீஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளம், பட்டாணி, சோயா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி விழுது, மாங்காய் துருவல், கேரட் துருவல், வேக வைத்த சோளம், பட்டாணி, சோயா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவினால்... ரங்கோலி சுண்டல் ரெடி!

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
தேவையானவை:  வெள்ளை கொண்டைக்கடலை - 200 கிராம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைக்கவும். காலையில் நன்றாகக் களைந்து, குக்கரில் வைத்து தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெறும் வாணலியில் தனியா, காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டுக் கிளறி, அரைத்த பொடியை சேர்த்து... பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பயறு  பனீர் சுண்டல்
தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - 2 கப், பனீர் - 10 துண்டுகள், கேரட் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பச்சைப் பயறுடன், கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பனீர் துண்டுகளை நெய்யில் பொரித்து இதனுடன் சேர்த்து, மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.

புதினா  கொத்தமல்லி சுண்டல்
தேவையானவை:  புதினா - ஒரு கட்டு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு கப், வேக வைத்த வேர்க்கடலை - ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்,  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புதினாவை ஆய்ந்து நறுக்கவும். கடாயில் நெய் விட்டு புதினா,கோஸ், கொத்தமல்லி சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். பிறகு, வேக வைத்த வேர்க்கடலை, முளைகட்டிய பச்சைப் பயறு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

நெய் அப்பம்
தேவையானவை:  கோதுமை மாவு - ஒரு கப், நெய் - 100 மில்லி, தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு கப் ஏலக்காய் - 4.
செய்முறை:  தேங்காய் துருவல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, ஏலக்காயை உரித்துப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதை கோதுமை மாவுடன் கலந்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். ஆப்பக் கல்லில் நெய் விட்டு, மாவை சிறு கரண்டியில் எடுத்து ஊற்றி, வெந்தவுடன் திருப்பிப் போட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு:  நவராத்திரி பூஜையில் நெய் அப்பத்துக்கு முக்கிய இடம் உண்டு.

மொச்சை சுண்டல்
தேவையானவை:  காய்ந்த மொச்சை - 250 கிராம், தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மொச்சையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். மொச்சையை தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, இஞ்சி விழுதை போட்டு, வேக வைத்த மொச்சையையும் தண்ணீர் வடித்து சேர்க்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், பொடித்து வைத்த பொடி, கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி, இறக்கும் சமயம் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை மொத்தமாக பொடித்து வைத்துக்கொண்டும் சுண்டலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

மல்டி பருப்பு சுண்டல்
தேவையானவை: கடலைப்பருப்பு, பச்சை வேர்க்கடலை, முளைகட்டிய கொள்ளு - தலா ஒரு கப், எள்ளு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, கொள்ளு, வேர்க்கடலையுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். எள்ளு, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். வேக வைத்த கொள்ளு, கடலைப்பருப்பு, வேர்க்கடலையில் இருந்து தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, எள்ளு - மிளகாய் பொடி, வேக வைத்த பருப்புகள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கிரிஸ்பி சுண்டல்
தேவையானவை:  முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - 100 கிராம், காராபூந்தி - 100 கிராம், உப்பு - தேவையான அளவு
செய்முறை:  பச்சைப் பயறுடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ், ஓமப்பொடி, காராபூந்தி சேர்த்துக் கலந்து சாப்பிடக் கொடுக்கவும்.

பூந்தி தயிர்வடை
தேவையானவை:  உளுத்தம்பருப்பு - 250 கிராம், புளிப்பு இல்லாத தயிர் - அரை லிட்டர், பச்சை மிளகாய் - 3, நறுக்கிய கொத்தமல்லி, கேரட் துருவல் - தலா 2 டீஸ்பூன், காராபூந்தி - 100 கிராம், எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து தண்ணீரை வடித்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுக்கவும். வடைகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து, தயிரில் போடவும். நன்கு ஊறியதும், மேலே பூந்தி, கேரட் துருவல், கொத்தமல்லி தூவவும்.

அவல்  சர்க்கரை புட்டு
தேவையானவை: கெட்டி அவல் - 250 கிராம், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, சர்க்கரை - 200 கிராம்.
செய்முறை:  அவலை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சர்க்கரையை பொடித்து அதனுடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சாப்பிடக் கொடுக்கவும்.

எள்ளு சாதம்
தேவையானவை:  பாசுமதி அரிசி - 250 கிராம், எள்ளு - 25 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை வறுத்துப் பொடித்து, சாதத்தில் சேர்த்து...  நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு:  புரட்டாசி சனிக்கிழமையில் இந்த எள்ளு சாதத்தை பெரும்பாலான வீடுகளில் செய்வார்கள்.

தாளிப்பு தயிர் சுண்டல்
தேவையானவை:  முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பேபிகார்ன்  - ஒரு கப், கேரட் துருவல் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், தயிர் (புளிப்பு இல்லாதது) - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பயறு, கொண்டைக்கடலையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, இஞ்சி தாளித்து, கேரட் துருவலை சேர்க்கவும். இதை தயிரில் போட்டு, உப்பு சேர்த்து... வேக வைத்த பயறு, கொண்டைக்கடலை, வதக்கிய பேபிகார்ன், மிளகுத்தூள் சேர்த்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலையை மேலே தூவி சாப்பிடக் கொடுக்கவும்.
குறிப்பு: ருசியுடன் சத்தும் மிகுந்த இந்த தாளிப்பு சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. விருப்பப்பட்டால், சிறிது சர்க்கரை சேர்த்துக் கலக்கலாம்.

வாழைப்பழ அல்வா
தேவையானவை: வாழைப்பழம் - 4, சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப் பருப்பு, கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.
செய்முறை: வாழைப்பழத்தை நெய் சேர்த்து வதக்கி, நன்கு மசித்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாக கிளறி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

தேங்காய் சாதம்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவலை எண்ணெய் விட்டு வறுக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளிக்க வும். சாதத்தை அகலமான பாத் திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, வறுத்த தேங்காய், தாளித்தது ஆகிய வற்றை சேர்த்துக் கலக்கவும். பிறகு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
குறிப்பு: இதில் வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

பால் பொங்கல்
தேவையானவை: அரிசி - 200 கிராம், பால் - 500 மில்லி, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:  அரிசியுடன் ஒரு பங்குக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து 4 விசில் விட்டு இறக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி, சாதத்துடன் சேர்த்து மசித்து, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு... ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு போட்டு கலந்து, இறக்கவும்.
குறிப்பு:  திராட்சை, பிஸ்தாவை வறுத்து சேர்க்கலாம்.

அன்னாசிப்பழ கேசரி
தேவையானவை:  ரவை - 200 கிராம், சர்க்கரை - 150 கிராம், அன்னாசிப்பழத் துண்டுகள் - ஒரு கப், நெய் - 100 மில்லி, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10.
செய்முறை: ரவையை நெய் விட்டு சிவக்க வறுக்கவும். அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு... அன்னாசிப் பழ விழுது சேர்த்து, கொதித்ததும் ரவையை தூவிக் கிளறி வேகவிடவும். நன்கு வெந்ததும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி... ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தேங்காய்  அரிசி பாயசம்
தேவையானவை:  தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - ஒரு கைப்பிடி அளவு, பொடித்த வெல்லம் - 200 கிராம், காய்ச்சிய பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, வாழைப்பழம் - ஒன்று.
செய்முறை: அரிசி, தேங்காய் துருவலை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் தண் ணீர் விட்டு அரிசி - தேங்காய் விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். நன்கு வெந்ததும், பொடித்த வெல்லம் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன், காய்ச்சிய பாலை சேர்த்து, ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி போட்டு இறக்கவும். வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
குறிப்பு: கொப்பரைத் தேங் காயை, மெல்லியதாக  நறுக்கி நெய்யில் வறுத்து சேர்க்கலாம். பலாச்சுளையையும் நறுக்கி சேர்க்கலாம்.

காய்கறி வடை
தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கோஸ் துருவல், கேரட் துருவல் - தலா 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 250 மில்லி.
செய்முறை:  பருப்புகளை ஒன்றாக ஊற வைத்து, தண்ணீர் வடித்து, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கேரட் துருவல், கோஸ் துருவல் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: கீரை சேர்த்தும் வடை தயாரிக்கலாம்.

அக்கார வடிசல்
தேவையானவை:  அரிசி - 250 கிராம், வெல்லம் - 250 கிராம், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் - 100 மில்லி.
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் பால் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து, சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு வைத்து கெட்டியானதும், சாதத்துடன் கலந்து மசிக்கவும். அதனுடன் வறுத்த முந்திரி, நெய், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

ஜவ்வரிசி பாயசம்
தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, காய்ச்சிய பால் - 500 மில்லி.
செய்முறை:  ஜவ்வரிசியை நன்றாக வேக வைக்கவும். வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின்பு காய்ச்சிய பாலைக் கலந்து, கெட்டியாகும் வரை கிளறவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி, இறக்கவும்.
குறிப்பு: சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்தும் தயாரிக்கலாம்.

உக்காரை
தேவையானவை:  கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், வெல்லம் - 150 கிராம், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, கெட்டியாக பாகு காய்ச்சிக் கொள்ளவும். இட்லித் தட்டில் சிறிது நெய் தடவி, அரைத்த பருப்பை வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து, ஆறிய உடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால்... உதிரி உதிரியாக வரும். இதனுடன் பாகு சேர்த்து நன்கு கலந்து, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.
குறிப்பு: இது பாரம்பரியம் மிக்க இனிப்பு வகைகளில் ஒன்று.

பாதாம்  தேங்காய் பர்ஃபி
தேவையானவை: பாதாம் பருப்பு - 10, நெய் - 4 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், சர்க்கரை - 100 கிராம், ரவை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: தேங்காய் துருவல், பாதாம் பருப்பை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். சர்க்கரையுடன் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறி, ரவை தூவி... கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய உடன் துண்டுகள் போடவும்.
குறிப்பு: முந்திரியை சேர்த்து அரைத்தும் தயாரிக்கலாம்.
தொகுப்பு: பத்மினி 
 படங்கள்: எம்.உசேன்  
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

Thursday, April 18, 2013

கோட்டுக்கறி குழம்பு


தேவையான பொருட்கள்:

துவரரிசி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம் (குழம்பில் போட)
பச்சைமிளகாய் - 10 மிளகாய்
பீன்ஸ் - 10 எண்ணிக்கை
உருளைகிழங்கு - 2 கிழங்கு
காரட் - 1
வாழைக்காய் - 1
மரவள்ளிகிழங்கு - 1/2 கிழங்கு
கரனகிழங்கு - 1 கிழங்கு
பரங்கிக்காய் - 1/2 கீற்று
சீரகம் - 50 சீரகம்
பச்சரிசி - 50 கிராம்
மஞ்சள் - 1/2 வில்லு
புளி - 2 எண்ணிக்கை
தக்காளி - 2 எண்ணிக்கை
பெருங்காயம் - 5 கிராம்
கடலைஎண்ணெய் - 50 மில்லி (தேவைகேற்ப)
கடுகு - 1 தேக்கரண்டி
பட்டமிளகாய் - 4 எண்ணிக்கை
கருவேப்பில்லை - 1 கொத்து
மல்லி தழை - 1 கொத்து
சின்ன வெங்கயாம் - 5 எண்ணிக்கை (தாளிப்பதற்கு)

சமைக்கும் முறை:
  1. பச்சரிசி, மஞ்சள், சீரகம் மூன்றையும் நன்றாக வறுத்து அம்மியில் வைத்து பொடியாக அடித்து கொள்ளவும்.
  2. துவரரிசியை வேக வைக்கவும்.
  3. வெந்தவுடன் பச்சைமிளகாய், வெங்காயம் நறுக்கி அதனுடன் வேக வைக்கவும்.
  4. வெந்த பின் காரட், பீன்ஸ், வாழைக்காய், மரவள்ளிகிழங்கு, கரனைகிழங்கு, பரங்கிக்காய், உருளைகிழங்கு ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும்.
  5. இதனுடன் புளியை கரைக்கவும்.
  6. செய்முறையில் முறை 1 இல் உள்ள பொடியை சேர்க்கவும்.
  7. நன்றாக கிளறி குழம்பை கொதிக்க விடவும்
  8. வேறொரு சட்டியில் இதமான சூட்டுடன் எண்ணையை ஊற்றி கடுவுனை சேர்த்து கடுகு வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
  9. கடுகு வெடித்த பிறகு பட்டமிளகாய், வெங்காயம் மற்றும் பெருங்காயபொடி இவற்றை சேர்த்து வதக்கவும்.
  10. வதக்கியபிறகு கருவேப்பில்லை, மல்லி கொத்தை போடவும்.
  11. தாளித்த இவைகளை முன்பு கொதிக்க விட்ட குழம்பில் சேர்க்கவும்.
  12. சுவையான காசாங்காடு கிராம தை பொங்கல் கோட்டுகறி குழம்பு தயார்.

தாவரங்கள் மூலிகைகள் மரங்கள்

 கிராமத்தில் விளையும் மூலிகைகளும் /  தாவரங்களும் / மரங்களும் மற்றும் அதன் தாவரவியல் பெயர்களும்.

நம் ஊரில் விளைய கூடிய செடிகள் / மூலிகைகள் / மரங்கள் விடுபட்டிருப்பின் இணைய குழுவின் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தோட்டகலை பற்றி வேளாண் பல்கலைகழக இணைய தளம் - http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

இந்த மூலிகைகள் நாட்டு (பாட்டி) வைத்திய முறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். 


அரசமரம் Ficus religiosa 
அரளிப்பூ Nerium oleander 
அருகம்பில்லு Cynodon dactylon 
ஆரஞ்சு மரம் Orange (Citrus Sinensis) 
ஆலமரம் Ficus benghalensis Linn (Banyan)  
உளுந்து (உளுத்தம் பருப்பு) Vigna mungo (Black Gram)  
எலுமிச்சை Citrus limon (Lemon) 
எள் Sesamum indicum 
கத்திரிக்காய் Solanum melongena 
கரும்பு Saccharum officinarum 
கறிவேப்பிலை Murraya koenigii (Curry Leaves) 
காட்டாமணக்கு (புங்கை மரம்) Millettia pinnata 
கிளுவை Commiphora beryii 
கொய்யா Psidium guajava 
கோவக்காய் Tindora 
சந்தனம் Santalum paniculatum (SandalWood) 
சப்பாத்தி கள்ளி PRICKLY PEAR cactus 
சப்போட்டா மரம் Manilkara zapota 
சவுக்கு Casuarina 
செம்பருத்தி Hibiscus rosa-sinensis 
துளசி Ocimum sanctum (Tulsi) 
தூதுவாழை Solanum trilobatum  
தேக்கு Tectona grandis (Teakwood) 
தேங்காய் Coconut 
நார்த்தங்காய் Citrus medica (Citron) 
நீலகிரி(அ) கற்பூரத்தைலமரம் Eucalyptus 
நெல் / அரிசி Oryza sativa (Rice) 
பப்பாளி Carica papaya 
பனை Arecaceae 
பாவைக்காய் Bitter Gourd (Momordica charantia) 
பிலா Artocarpus heterophyllus (Jackfruit)  
புளி Tamarindus indica (Tamirind)  
மணத்தக்காளி Solanum nigrum 
மிளகாய் Chili pepper 
முசுமுசுக்கை Mukia Maderas Patana 
முருங்கை Moringa oleifera 
முளைக்கீரை Amaranth Leaves  
மூங்கில் Bamboo 
ரோஜா Rose 
வெண்டைக்காய் Abelmoschus esculentus 
வேம்பு Azadirachta indica 

காசன்காடு கிராம கோழி குழம்பு


நபர்கள்: 4
சமைக்கும் நேரம்: 30 நிமிடம்

தேவையான பொருட்கள்:
  1. கோழி இறைச்சி - 1/2 கிலோ
  2. தக்காளி - 1 எண்ணிக்கை
  3. வெங்கயாம் நறுக்கியது - 1/2 கப்
  4. இஞ்சி - 1/2 விரல் நீளம் ( 1" Inch)
  5. பூண்டு - 4 பள்ளு
  6. மஞ்சள்  பொடி - 1/4 தேக்கரண்டி
  7. மல்லி பொடி - 3 மேசை கரண்டி
  8. மிளகாய் தூள் - 1/2 மேசை கரண்டி அல்லது தேவைகேற்றவாறு
  9. சோம்பு - 1 மேசை கரண்டி
  10. சீரகம் - 1/2 மேசை கரண்டி
  11. மிளகு - 2 மேசை கரண்டி
  12. கொத்தமல்லி தலை -  2 தலைகள் -  தேவைகேற்றவாறு
  13. துருவிய தேங்காய் - 1/4 கப்
  14. உப்பு - தேவைகேற்றவாறு
தாளிக்க:
  1. எண்ணெய் - 1 மேசை கரண்டி
  2. சோம்பு - 1 தேக்கரண்டி
  3. கருவேப்பில்லை இலை - 10 இலைகள்
சமைக்கும்  முறை:

  1. சோம்பு, சீரகம், மிளகு போன்றவற்றை (மிளகு வெடிக்கும் வரை) வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
  2. தேங்காய், மல்லிபொடி, மிளகாய்பொடி, மேலே அரைத்த பொடி, சிறிய வெங்கயாம் (1) சேர்த்து நேவாக அரைத்து கொள்ளவும்.
  3. இஞ்சி, பூண்டு துவையலாகும் வரை அரைத்து கொள்ளவும்.
  4. குழம்பு வைக்கும் பத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் வைக்கவும்.
  5. எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
  6. அதனுடன் கோழி, இஞ்சி பூண்டு துவையல்,  மஞ்சத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறிவிடவும்.
  7. 10 - 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  8. கறி நன்றாக வெந்தவுடன் (Step 2) அரைத்த மசாலாவை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. 5 - 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  10. வாணலியில் எண்ணையை ஊற்றி மிதமான சூடு செய்யவும்.
  11. எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு, கருவேப்பில்லை இலை சேர்த்து முன்பு கொதித்த குழம்பில் ஊற்றவும்.
  12. நன்றாக குழம்பை கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  13. சுவையான காசாங்காடு கிராம கோழி குழம்பு தயார்.

Sunday, March 25, 2012

Bangalore Sambhar Recipe

Bangalore Sambhar Recipe
1/2 cup toor dal
1/4 teaspoon turmeric powder
1 cup peeled and cubed Idaho potato
1 cup frozen Fordhook (large size) lima beans
1/4 cup coconut, fresh or powdered
5 dried red chili peppers
2 garlic cloves
1 teaspoon cumin
1 teaspoon salt (more, if desired)
1/4 cup tomato sauce
1/4 cup chopped fresh coriander
1 tablespoon corn oil
1/4 teaspoon asafoetida powder
1 teaspoon black mustard seeds
1 teaspoon urad dal

Boil 4 cups of water in a tall saucepan over medium heat. Add toor dal and turmeric powder. Reduce heat to medium and cook, uncovered, for about 30 minutes until dal becomes creamy. If water evaporates during the cooking process, add another cup of water and cook until dal becomes creamy.

When dal is cooked, place creamy dal in a saucepan and add potatoes and lima beans with 2 cups of water to cover the vegetables.

Cook over medium heat until vegetables are tender, about 10 minutes. Place coconut, 4 red chili peppers, garlic, and cumin in blender. Add about 1/2 cup of warm water to facilitate the grinding. Grind until smooth.

Pour contents of blender into saucepan. Add salt and tomato sauce. Stir well. Add coriander and continue to simmer, covered, until potatoes are tender.

Place corn oil in a small skillet and heat oil over medium heat. When oil is hot, but not smoking, add asafoetida, curry leaves, remaining I red chili pepper, mustard seeds, and urad dal. Fry until mustard seeds pop and urad dal is golden brown. Pour fried mustard seeds and urad dal into sambhar. Stir and let it simmer for a few minutes. If sambhar seems too thick, add 1/2 to 1 cup of warm water as desired and stir. Let it simmer for anther minutes or two.

Andhra Country Chicken Curry

Andhra Country Chicken Curry
Serves 4 to 6

2 lbs skinless bone-in chicken thighs
½ cup plain non-fat yogurt, at room temperature
½ tsp cornstarch
2 tbsp oil
2 cups finely chopped onions
6 whole cloves
4 green cardamom pods, cracked open
1 tbsp minced peeled gingerroot
1 tbsp minced garlic
2 tsp coriander powder
1 tsp cayenne pepper
1 tsp salt or to taste
1 ½ tsp Andhra garam masala
3 tbsp cilantro, chopped


Rinse chicken and pat dry thoroughly. In a bowl, stir together yogurt and cornstarch to a creamy consistency. Set aside

In a saucepan, heat oil over medium heat. Add onions, cloves and cardamom and sauté for 2 minutes. Add chicken and mix well. Saute until chicken is browned on both sides, 6 to 8 minutes.

Add coriander and cayenne and sauté for 2 minutes. Add 1½ cups (375mL) water. Add yogurt and salt. Cover and bring to a boil. Reduce heat to low. Cook, stirring occasionally until chicken is no longer pink inside and gravy is thickened, 20 to 25 minutes. Sprinkle garam masala over top. Garnish with cilantro. Serve over steamed rice.

Chettinad Chicken Kulambu

Chettinad Chicken Kulambu

3 tablespoons corn or canola oil

2 to 3 small pieces cinnamon stick

1 bay leaf, crumbled

¼ teaspoon fennel seeds

½ teaspoon whole cumin seeds

½ teaspoon urad dal

½ cup chopped onion

¼ cup chopped tomato

3 cloves garlic, quartered

1 tablespoon minced fresh ginger

¼ teaspoon turmeric powder

2 pounds (boneless, skinless) chicken breasts or thighs

2 teaspoons curry powder

1 teaspoon cayenne powder

1 teaspoon vindaloo curry paste (more, if desired)

1 cup tomato sauce

½ teaspoon black pepper and cumin powder

1 teaspoon salt

¼ cup chopped fresh coriander

Heat oil in a wide saucepan over medium heat. When oil is hot, but not smoking, add cinnamon stick, bay leaf, fennel seeds, cumin, and urad dal. Fry until dal turns golden. Add onion, tomato, garlic, and ginger and sauté for a few minutes. Add turmeric powder

Cut chicken into small (stew-size pieces). Add chicken pieces to saucepan and continue to sauté for several minutes until chicken turns opaque.

Add curry powder, cayenne powder, vinadloo curry paste, and tomato sauce with approximately 2 cups of water. Stir in back pepper and cumin powder. Add salt and continue cooking over medium-low heat for several minutes.

Add coriander. Reduce heat to low. Cook, covered, stirring often until chicken is tender (approximately 20 minutes). If the sauce becomes too thick, you may add an additional small amount of both water and tomato sauce as desired.

 

Tuesday, March 20, 2012

அமராவதி அணை... சப்தமில்லாமல் தமிழர்களிடம் விளையாடும் கேரள அரசு...! ஒரு அலசல்...! ~ .

அமராவதி மிக அழகான பெயர் ! அம்பிகாபதியோட அமராவதி இல்லைங்க நம்ம உடுமலை பேட்டை இருக்குதா அங்க இருக்கிற அழகான ஒரு அணைதான் அமராவதி. மறுபடியும் அணையா ?! ஒரு அணை பிரச்சனைக்கே இன்னும் விடை தெரியல...இதுல இன்னொரு அணைக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பதறது புரியுது...புது பிரச்சனை இல்ல ரொம்ப நாளாவே போயிட்டு இருக்கிற ஒண்ணுதான். இன்னும் ஒரு தீர்வும் எட்டபடாமல் இழுத்துட்டே போகுது. தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானாம், யாருக்கு புரியுதோ இல்லையோ மத்த மாநிலக்காரங்க நம்மள நல்லா எடை போட்டு வச்சிட்டாங்க. கர்நாடகத்துகிட்ட காவிர கொடுன்னு கெஞ்சி, கேரளாக்கிட்ட அணையை ஒடச்சிடாதனு போராடி, ஆந்திராக்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுன்னு கை ஏந்தி இன்னும் எத்தனை காலந்தான் நாம இப்படியே இருக்க போறோமோ தெரியல !

அப்படி என்ன பிரச்சனை?!

44 டி எம் சி அளவு தண்ணீரை தேக்கி வச்சிருக்கிற அமராவதி அணைக்கும் ஆபத்து வந்து நாளாகிவிட்டது . திருப்பூர், கரூர் மக்களின் உயிர் நாடியாகவும் 70,000 ஏக்கர் விளைநிலங்களை காப்பாத்துகிற இந்த அணைக்கு தண்ணீர் பாம்பாற்றில் இருந்து வருது. இந்த பாம்பாற்றின் குறுக்கே மறையூர் அருகே கோவில்கடவு பகுதியில் புதிய அணை கட்டணும் என்று கேரளா அரசு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டசபைல தீர்மானத்தை நிறைவேற்றி வேலையை வேற தொடங்கிட்டதாக சொல்றாங்க ?! (இரண்டு வருடமாக போயிட்டு இருக்கு இந்த விவகாரம் !!)

கேரளாவுக்கு அங்கே சொந்தமான வயல்வெளிகளும் இல்லை வெறும் காடுதான் ! பின் வேறு என்ன தேவைக்காக இருக்கும் என்று பார்த்தால் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க...தண்ணியில இருந்து மின்சாரம் தயாரிக்க போறதா ஒரு பேச்சும், தண்ணீரை பாட்டில பிடிச்சி விக்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு தாரை வார்த்துகிறதுக்காகவும் அணைகட்ட போறாங்கனு சொல்றாங்க.

அடடா அமராவதி!

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, சின்னாறு, காட்டாறு , பாம்பாறு போன்ற ஆறுகளின் நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டதுதான் அமராவதி அணை. இதில் அதிகபடியான நீரைத் தருவது, எக்காலத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாம்பாறு தான். இதன் உதவியால் தான் அமராவதி அணை நிறைகிறது.

170 கி.மி நீளம் கொண்ட இந்த ஆறு ஆனைமுடி சிகரங்களில் உற்பத்தியாகிறது. இரண்டு சிகரங்களுக்கிடையே வெள்ளியை உருக்கி விட்டது போல ஓடிவரும்அழகே அழகு !

ஆனைமுடி சிகரத்தில் இருந்து அமராவதி வரை இருக்கக்கூடிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள் என்ற பட்டியலில் இருக்கிறது. சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் , இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை வேறு அமைந்திருக்கின்றன. இங்கே எது செய்வதாக இருந்தாலும் மத்தியச்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இவையெல்லாம் தெரிந்தும் என்ன தைரியத்தில் சட்டமன்றத்தில் அணைகட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்களோ தெரியவில்லை ?! (ஒருவேளை மத்தியில் பெரும்பாலோர் கேரளாக்காரர்கள் தானே சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானோ ?!)

110 ஏக்கர் பரப்பளவில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது...நான்கு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்டுகளை வைத்து நீரேற்று விவசாயம் செய்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள் ! இந்த அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் கொஞ்சமும் இரக்கமின்றி அடிக்க பார்க்கிறது கேரளா. விவசாயத்திற்கு எவையெல்லாம் பாதிப்பை கொடுக்கிறது என பகுத்தறிந்து அதனை களைந்து விட்டாலே விவசாயத் தொழில் நிமிர்ந்து விடும்.

70,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கபடுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் குடிநீர் இன்றி தவிக்கும். வனவிலங்குகளும் குடிநீரின்றி அவதியுற நேரும். அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்படலாம்.

நம்ம தலைஎழுத்து நம் மாநிலம் வழியா போனாலும் அள்ளி குடிக்க வகையற்று போய் கொண்டிருக்கிறோம். மேற்கே இருந்து உற்பத்தியாகி கிழக்கு கடலில் கலக்கும் அனைத்து நதிகளும் நமக்கு வேண்டாதவையாக பிறரால் எடுத்துக் கொள்ளபடுகிறது. காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!

நெய்யாறு அணை ?!!

எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.

சேமிக்கப்படும் நீரில் 60 % கேரளாவில் இருந்தும், 40 % குமரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது. தண்ணீரில் பாதி அளவாவது குமரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டமே நெய்யாறு கால்வாய் திட்டம் . ஒன்பது வருவாய் கிராமங்கள், 9 ஆயிரத்து 204 ஏக்கர் நிலங்களும் 162 குளங்களும் பாசனம் பெற்றன.

ஆரம்பத்தில் நிர்ணயித்த படி இந்த கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியது.ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு முற்றிலும் நிறுத்த பட்டது...!!?

என்ன ஒரு முரண்பாடு ?!

மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திராவை அடைந்து கடலில் கலக்கும் கிருஷ்ணா நதியின் நடுவே ஆல்மாட்டி என்ற இடத்தில் 173 கொள்ளளவு கொண்ட அணையை கட்டியது கர்நாடகா...உடனே வீறு கொண்டு எழுந்த ஆந்திரா உச்சநீதிமன்றம் சென்று 123 தி.எம்.சி தண்ணீரை தான் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுவிட்டது. இதுவரை அந்த அளவைத்தாண்டி தேக்குவதில்லை கர்நாடகா. இதே கர்நாடகா தமிழ்நாட்டுகிட்ட என்ன ஆட்டம் காட்டுது ?!!!

2007 இல் காவேரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பின் படி அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே 5 டி.எம்.சி மட்டும் பயன்படுத்தி வந்த கேரளாவிற்கு 30 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்க வேண்டுமாம்...!!!? இதை எதிர்த்து இதுவரை நம் அரசு எதுவும்(?) நடுவர் மன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்தவில்லை என தெரிகிறது. அந்த தீர்ப்பை வைத்து கொண்டு கேரளா அணைகட்ட போறேன், தண்ணி தரமாட்டோம்னு சொல்லிக்கொண்டு இருக்கிறது...!!!?

உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் கொடிப்பிடிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளும், தேவையற்ற ஈகோ போராட்டங்கள், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய துணியும் அரசியல்வாதிகள், வறட்டு ஜம்பங்கள், காட்டுக் கூச்சல்கள், கேட்டு கேட்டு புளித்துப் போன வாக்குறுதிகள், வீணான ஆர்ப்பாட்டங்கள் விதியே என்று சகித்து போய் கொண்டிருக்கும் மக்கள் !!! இத்தனையில் ஒன்று கூட மாற சாத்தியமில்லையா?!

முல்லைபெரியாறு அணை பிரச்சனை என்னவாயிற்று என்று தெரியவில்லை...?! ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்...என்று அரசு இதை எல்லாம் கவனித்து, நடவடிக்கை எடுத்து நல்லதொரு முடிவை எட்ட போகிறதோ ?!

சேர ,சோழ , பாண்டிய , பல்லவ மன்னர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் 39,000 ஏரிகளை வெட்டினார்களாம். அந்த ஏரிகளின் மேல் தான் இன்று அரசு அலுவலகங்க கட்டடங்களும் , புதிய பேருந்து நிலையங்களும் இருக்கிறது. மிச்ச ஏரிகளில் கருவேலமரங்களையும், தைல மரங்களையும் அரசே வளர்க்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சபட்டு வறண்டு போய்விட்டன.மரங்களை வளர்க்க வேறு இடமா இல்லை. ஏரி,குளங்களில் உள்ள மணலை சுரண்டுவது ஒருபக்கம் அமோகமாக நடைபெறுகிறது. தூர்வாருகிறேன் என்று சொல்லி கொள்ளும் நூறுநாள் வேலை தொழிலாளர்கள் உறங்கி கழிக்கிறார்கள் மரத்தடியில்...!

இவர்கள் தூர் வாரி முடிப்பதற்குள் மழை வந்து, நின்றும் போய்விடும்.வழக்கம் போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடும்.உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்தால், இயந்திரங்களின் உதவி கொண்டு வேகமாக முடிக்கலாம். மக்களின் வாழ்வாதார விசயத்தில் தூங்கி வழிகிறது அரசு இயந்திரம் !!

நதிகள் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

2002 இல் பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களுக்கு திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் இரண்டு திட்டங்கள் போடப்பட்டன. ஒன்று தீபகற்ப நதிகள் இணைப்பு, மகாநதி, கோதாவரி நதிகளில் வெள்ளம் வந்து வீணாகும் தண்ணீரை கிருஷ்ணா, வைகை, காவேரி உள்ளிட்ட 16 நதிகளுக்கு திருப்பி விடுவது. 2 வது திட்டம் வட இந்தியாவில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுத்து நீர்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது.

அருமையான இந்த திட்டங்கள் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் "நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேறவேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது !!

மத்திய அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ ?!!

நதிகள் இணைப்பு என்பது நிறைவேறுதோ இல்லையோ அதற்கு முன் இங்கே தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளின் இரு மருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள், அதில் கலக்கும் கழிவு நீர், நடக்கும் மணல் கொள்ளை போன்றவற்றில் கவனம் செலுத்தபடவேண்டும். ஏரி,குளம், குட்டைகளை தூர்வாருவதும்,புதிதாக குளங்களை வெட்டுவதும் அவசியம். அப்போதுதான் பூமியில் விழும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் சேகரிக்கப்படும்.மேலும் நமது அணைகளின் மீதுள்ள பிரச்சனைகளை அரசாங்கம் முயன்றால் முழுமையாக சரிசெய்ய இயலும். நாட்டின் தற்போதைய இன்றியமையாத முக்கிய பிரச்சனை இவையே...! கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள் ?!

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!!

சிக்கன் லாலி பாப்

சிக்கன் லாலி பாப் - 10 துண்டு
உப்பு தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு மேசைகரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
ஓமம் பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சிறிது
எலுமிச்சை - 1/2 + 1/2
தயிர் - ஒரு மேசைகரண்டி

அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு மேசை கரண்டி
கார்ன் மாவு - ஒரு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி

எண்ணை + பட்டர் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் லாலிபாப்பை நன்கு 6 முறை கழுவி ஆங்காங்கே கிறி விட்டு அரை பழம் லெமன் பிழிந்து ஊற வைக்கவும்.1 0 நிமிடம் கழித்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

சிக்கன் ஆயில் தவிர அனைத்து மசாலா, பவுடர் வகைகளை நன்கு பேஸ்ட் போல் குழைத்து சிக்கனில் பிறட்டி ஆலிவ் ஆயிலும் சேர்த்து விறவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
எண்ணை + பட்டரை சூடு படுத்தி வானலியில் கொள்ளும் அளவு முன்று துண்டுகளாக போட்டு டீப் பிரை செய்யவும்.

சுவையான மருத்துவ குணமுள்ள ஓமம் லாலிபாப் ரெடி.






Monday, March 19, 2012

Badam kheer

Any dish made using almonds is unfailingly rich, quite befitting royalty! keep the spices such as cardamom to a minimum in this recipe, so as to highlight the creamy, soothing texture and flavour of almonds. Authentic ‘badam kheer’ made the south indian way omits cardamoms and nutmeg and uses a pinch of raw camphor and saffron (both added after the kheer is removed from the fire) instead. But if you do not find raw camphor, fret not; just go ahead with this recipe as it is!
Add your private note

Soaking Time: 2 Hours
Preparation Time: 10 mins
Cooking Time: 30 mins
Makes 6 servings
Show me for servings

Ingredients
3/4 cup almonds (badam)
5 cups (1 litre) milk
1/2 cup sugar
1/2 tsp cardamom (elaichi) powder (optional)
1 tsp nutmeg (jaiphal) powder (optional)
1 tsp saffron (kesar) strands

Method

Soak the almonds in hot water for 2 hours. Drain, remove the skin and blend in a mixer to a fine paste. Keep aside.
Boil the milk in a heavy-bottomed vessel till it is reduced to ¾ of its quantity, while stirring continuously.
Add the almond paste, sugar, cardamom powder, nutmeg powder and saffron, mix well and simmer for 5 minutes, while stirring continuously. Keep aside.
When it cools completely, refrigerate at least for 2 hours.
Serve chilled.

Subz Biryani

Subz Biryani is a tempting vegetable or subz Biryani recipe with assorted vegetables chopped and stir fried with cooked rice, whole spices and relished garnished with coriander leaves and roasted cashews.
Add your private note

Preparation Time: 10min
Cooking Time: 25min

Ingredients


FOR PASTE:-
6 to 7 flakes of garlic (lehsun)
1 " piece of ginger (adrak)
1 tbsp aniseeds (vilayati saunf)
1 tbsp cumin seeds (jeera)
3 whole dry kashmiri red chillies
1 tbsp coriander (dhania) powder
1 stick of cinnamon (dalchini)
3 to 4 cloves (laung / lavang)
3 to 4 peppercorns
2 black cardamoms (badi elaichi)

OTHER INGREDIENTS:-
2 cups long grained rice (basmati) (soaked for one hour)
1 to 2 carrots, sliced
1 small sized cauliflower, chopped into florets
8 to 10 french beans, chopped into 1" diagonally
2 potatoes, chopped
2 onions, finely sliced
1/2 cup oil
3 tbsp salt
1 tbsp lemon juice
1 bayleaf (tejpatta)

Method

Soak rice for 1 hour
Grind the ingrediants of the paste together with a lil water.
Heat oil in a heavy bottomed pan.add onions,cook till golden brown.
Add the vegetables and stir fry for 3-4 minutes
Add the paste and bay leaf
Measure 4 cups of water and add to the vegetables.
Add salt and lemon juice.
When water boils,drain the soaked rice and add to the water.
Put a tawa under the pan of rice to reduce the heat further.
Cover the pan of rice with a small towel napkin and then with a well fitting lead.keep some heavy weight,on lead.
Slow down the fire and cook till the rice is done(10-15 min).
Serve after 10 minutes.

Sunday, March 11, 2012

முலாயம் சிங்கால் முடிந்தது கருணாநிதியால் முடியாமல் போனது ஏன்?

இன்றைய தினம், இந்தியாவில் தொலைக்காட்சி பார்க்கும் அனைத்து நடுத்தர வர்க்கத்தினரும் உச்சரிக்கும் பெயர், 38 வயது அகிலேஷ். யார் இவர்? எப்படி ஒவ்வொரு வீட்டிலும் குடும்பப் பெயர் போல் ஆகிவிட்டார்?

சுதந்திர இந்தியாவில் முப்பத்தோரு வயதில் ஒரு மாநில முதல்வராக பதவியேற்று சாதனை படைத்தவர் அஸ்ஸாம் கண பரிஷத் தலைவர் பிரஃபுல்ல குமார் மஹந்தா. 1985 ல் அவர் அஸ்ஸாம் முதல்வராக பதவியேற்ற போது நாடெங்கும் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக, இளைய சமுதாயத்திற்கு முன் மாதிரியாக விளங்கினார். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் அவரது புகழ் காலப்போக்கில் நீர்த்துப் போனது வேறு விஷயம்.

2012 ஆம் ஆண்டில் இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல், மார்ச் 15ம் தேதி உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்க போகும் அகிலேஷ் யாதவ்தான். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற முழக்கத்துடன், கடந்த சில வருடங்களாக காங்கிரஸ் இளைஞர் அமைப்பை வலுப்படுத்த நாடெங்கும் சுற்றி வரும் ராகுல் காந்தியை ஒரே ஒரு தேர்தல் மூலம் முந்திவிட்டார் அகிலேஷ்.

எப்படி முதல்வரானார்?

1989 ல் உத்தரபிரதேச மாநில முதல்வராக முலயாம் சிங் ஆட்சிக்கு வந்த போதே, தமிழகம் போல், உ.பி.யிலும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் ஆரம்பித்து விட்டது. இடையில் சில காலம் பாஜக ஆட்சியில் இருந்தாலும் மாநிலக் கட்சிகளான சமாஜ்வாடியும், பகுகுண் சமாஜும் இல்லாமல் அங்கே யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைதான்.

மூன்று முறை முதல்வராக இருந்த முலயாம் சிங்தான் இந்த தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அனைவரும் அவர்தான் முதல்வர் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அகிலேஷ் முன்னிறுத்தப்பட்டார். காரணம் இந்த தேர்தலின் வெற்றி தன்னுடைய மகனின் தீவிர களப்பணியால்தான் என்பதில் உறுதியாக இருந்த முலாயம், அதற்கு பரிசாக முதல்வர் பதவியைத் தந்திருக்கிறார்!

மைசூரில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்று, ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பும் முடித்துள்ள அகிலேஷிடம் உத்தரபிரதேச மக்கள் அதிக எதிர்ப்பார்ப்புகளை வைத்துள்ளனர். ஐஐஎம் ல் பயிற்சி
பெற்ற மேலாண்மை வல்லுனரான அபிஷேக் மிஸ்ராவை முக்கிய துணையாக வைத்துக்கொண்டு, நவீன இந்தியாவின் வெற்றிகரமான முதல்வராக வருவாரா அல்லது மஹந்தா போல் கரைந்து விடுவாரா என்பது அடுத்த ஐந்தாண்டுகளில் தெரிந்து விடும்.

முலயாமும் கருணாநிதியும்…

வி.பி சிங் தலைமையிலான தேசிய முண்ணனியில் முக்கிய தலைவராக இருந்த கருணாநிதியுடன், முலயாம் சிங்கிற்கு 1989லிருந்தே நல்ல நட்பு இருந்து வருகிறது. முலயாம் உள்ளிட்ட சோசலிஸ்டுகள் மீது இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு அதிக பற்றுதல் உண்டு என்பது புதிய விஷயமல்ல.

முலயாம் சிங்கின் இன்றைய அதிரடி முடிவு அகில இந்தியாவையும், குறிப்பாக வாரிசுகளை களம் இறக்கியுள்ள அரசியல் பிரமுகர்களை திரும்பி பார்க்க வைத்து விட்டது. அதே நேரத்தில் குருவி தலையில் பனங்காயை சுமத்தி விட்டாரோ என்றும் குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன.

இந்த முடிவை அவர் செயல்படுத்திய விதம்தான் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களை அவர் கையாண்ட விதம், குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்திய நேர்த்தி, கிங் மேக்கர் காமராஜர் அன்று இந்திராவை பிரதமராக்கிய அரசியல் அனுபவத்திற்கு இணையாக பார்க்கப்படுகிறது.
அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் கருணாநிதி இந்த விஷயத்தில் ‘சோசலிஸ்டு நேத்தாஜி’ முலயாமிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதியின் தவறு

பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, தன் மகள் இந்திராவை காங்கிரஸ் கட்சிக்குள் அழைத்து வந்ததை யாரும் குற்றமாக கருதவில்லை. அதே இந்திரா, நேருவுக்கு பின் பாரத பிரதமராக வந்த போதும் யாரும் குடும்ப ஆட்சி என்று கோஷம் எழுப்பவில்லை. அவரது ஆட்சியில் இளைய மகன் சஞ்சய் காந்தி பொதுச் செயலாளராக இருந்த போதோ, அல்லது இந்திராவிற்கு பிறகு மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமர் ஆன போதோ யாரும் குடும்ப ஆட்சி என்று குறை கூறவில்லை. இன்று நான்காம் தலைமுறையாக ராகுல் காந்தி பொதுச்செயலாளராக உள்ள காங்கிரஸ் கட்சிதான் குடும்ப ஆட்சியின் உச்சக் கட்டம்.

ஆனால் இரண்டாம் தலைமுறையான ஸ்டாலின் மாணவப் பருவத்தில் அரசியலில் நுழைந்த காலத்திலிருந்தே ‘குடும்ப ஆட்சி’ என்ற பழியை சுமந்து வரும் கருணாநிதியின் நிலை பரிதாபத்திற்குரியதுதான்.

இந்திராகாந்தியின் அடக்குமுறை மிசா கொடுமையில் மாநில முதல்வரின் மகன் என்ற பாரபட்சம் இல்லாமல் சிறைக்கொடுமைகளை அனுபவித்த ஸ்டாலின் திமுகவில் ஒவ்வொரு பொறுப்பினை ஏற்கும் போதும் ‘குடும்ப ஆட்சி’ என்ற கோஷம், ஒரு சில சக்திகளால் தீண்டாமை குற்றம் போல் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனங்களுக்காகவே ஸ்டாலினின் அரசியல் பொறுப்புகள் ஆமை வேகத்தில்தான் நகர்ந்து வந்துள்ளது.

தமிழக அரசியலில், விமர்சனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் கருணாநிதி. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இந்த இருவருக்கு மட்டுமே உண்டு. மாபெரும் மக்கள் சக்தியாக விளங்கிய எம்ஜியார் விமர்சனங்களைக் கண்டுகொள்ள மாட்டார். இன்றைய முதல்வரோ தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எப்படி கையாள்வார் என்பது சாமானிய மக்களுக்கே நன்றாக தெரியும்!

இப்படி விமர்சனங்களுக்கு பயந்து, மகன் தானாக நிலை நிறுத்திக் கொள்ளட்டும் என்று, கருணாநிதி தடைபோட்டதன் விளைவு, மாணவர் பருவத்தில் கட்சி பணியாற்ற வந்து, 60 வயதில் திமுக இளைஞர் அணி பொறுப்பிலேயே இருக்கிறார் ஸ்டாலின்!

ஸ்டாலினும் அகிலேஷும்

ஸ்டாலினின் அனுபவத்தை ஒப்பிட்டால், அரசியலில் அகிலேஷ் ஒரு குழந்தை தான்..

மாணவர் திமுக என்று ஆரம்பித்து, மிசா, இளைஞர் அணி, சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், உள்ளாட்சி அமைச்சர், திமுக பொருளாளர் என நீண்ட அரசியல் அனுபவம் பெற்று பிறகும் துணை முதல்வர் அளவுக்கே உயர்ந்துள்ளார் ஸ்டாலின்.
இளைஞர் அணி, நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியின் மாநிலத் தலைவர் என்று பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்திற்கு முதல்வர் ஆகிவிட்டார் அகிலேஷ்.

மதிமுகவை ஆரம்பித்து இளைஞர்களின் எழுச்சியாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான திமுக நிர்வாகிகளை தனது கட்சிக்குள் வைகோ இழுத்துக் கொண்டிருந்த நெருக்கடியான காலத்தில், திமுக இளைஞர் அணிக்கு புத்துயிர் கொடுத்து திமுகவை பாதுகாத்தவர்களில் ஸ்டாலின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல தெற்கில் காணாமல் போகவிருந்த கட்சியை காப்பாற்றியவர் அழகிரிதான். மதிமுகவிலிருந்த மதுரை பொன் முத்துவை, அவரது கோஷ்டியோடு திமுகவுக்கு திரும்ப வைத்தது சாதாரண விஷயமா!

தொடர்ந்து வந்த 1996 இடைத்தேர்தலில் ரஜினியை இணைத்துக்கொண்டு, வைகோவின் எழுச்சிக்கு சாமர்த்தியமாக தடை போட்ட கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம், கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவிய ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க இடம்தரவில்லை. உள்ளத்தில் எண்ணம் இருந்தாலும் விமர்சனங்களுக்கு பயந்து கொண்டு முடிவெடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அன்று கருணாநிதி இருந்த அதே நிலைதான், முலயாம் சிங்குக்கும். ஆனால் அவர் தயங்கவில்லை. துணிந்து ஒரு முடிவெடுத்துவிட்டார். விமர்சனங்களுக்குப் பதில் பாராட்டுக்கள் குவிகின்றன!

1996லேயே ஸ்டாலினை குறைந்தபட்சம் துணை முதல்வராக ஆக்கியிருந்தால் இன்றைக்கு திமுகவில் ஸ்டாலினா அழகிரியா என்ற கேள்வியே எழுந்திருக்காது.

எந்த வாரிசும் இல்லாத எம்ஜியார், தனக்குப் பிறகு அதிமுக எப்படி இருக்க வேண்டும் என கடைசி வரை சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் திமுகவுடன் அதிமுகவை இணைந்து விடலாம் என்ற ஒரு முயற்சியும் ஒரிஸ்ஸா முதல்வர் பட்நாயக்கின் தலைமையில் அரங்கேறியது. இந்த முயற்சியின் சாட்சியாக பட்நாயக், கருணாநிதி, எம்ஜியார் மூவரும் இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் முக்கிய இடத்தை பெற்றன.

எம்ஜியாரின் கடைசி காலத்தில், ஜெயலலிதா ராஜீவ் காந்தியை சந்தித்து ஆட்சியை கைப்பற்ற முயன்றது உள்ளிட்ட விஷயங்கள் அவரை பெருமளவில் மனதை பாதித்து விட்டது. அந்த நேரத்தில் பட்நாயக் போன்றவர்கள் இருந்திருந்தால் திமுக, அதிமுக ஒன்றாகி இருக்கக் கூடும். திராவிட பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்ட எம்ஜியாருக்கு ஜெயலலிதா தலைமையில் கட்சி செல்வது பிடிக்கவில்லை என்பது அந்த நேரத்திலிருந்த எம்ஜியாரின் அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றாகவே தெரியும், கட்சியை விட்டு வெளியேற்றவில்லையே தவிர, ஜெயலலிதாவின் முக்கியத்துவத்தை முற்றிலும் எம்ஜியார் குறைத்துவிட்டார் என்பதுதான் உண்மையும் கூட.

கட்சிக்கு அடுத்த கட்ட தலைவர் என்பது எவ்வளவு முக்கியம், ஜனநாயக கட்சியாகவே இருந்தாலும் அடுத்த தலைவரை அடையாளம் காட்ட வேண்டியதன் அவசியத்தை எம்ஜியார் நன்றாகவே உணர்ந்திருந்தார். சரியான முடிவெடுத்து தன் கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் தெரிவிக்காததால், அவர் நினைத்தது போலவே அதிமுக இரண்டாக உடைந்ததும், அடுத்து நடந்த சம்பவங்களும் அதிமுகவின் வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. எம்ஜியார் இருந்த அதே நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதாவும் இன்று இருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

திமுகவைப் பொறுத்தவரை, முரசொலி மாறனின் ஆசியோடு வைகோ அடுத்த தலைவராக உருவெடுத்து வந்த நிலையில்தான் ‘தனக்கு பின் தனது மகனே’ என்ற ஆசை கருணாநிதிக்கு வந்தது. அந்த ஆசைக்கு வித்திடும் வகையில், ஸ்டாலின் நல்ல உழைப்பை கொடுத்து சாமானியனாகத்தான் கட்சிப்பணி ஆற்றி வந்தார்.
ஸ்டாலின் பொறுப்பிற்கு வந்து விட்டால் தனக்கு முக்கியத்துவம் கிடைக்காது என்ற காரணத்தினால் தான் கருணாநிதிக்கும் வைகோவுக்கும் விரிசல் ஏற்பட்டு மதிமுக என்ற தனிக்கட்சி வரை சென்றது.

அன்று பாராளுமன்ற நாயகனாக இருந்த ‘வைகோ மத்தியிலும், ஸ்டாலின் மாநிலத்திலும்’ என்று பரஸ்பரம் செய்து கொண்டிருந்தால், வைகோ முன்மொழிய ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியை கொடுத்து விட்டு, கருணாநிதி முலயாம் போல் மத்திய அரசியல் பார்வையாளராகவோ அல்லது அவருக்கு பிடித்த எழுத்துத் துறைக்கோ சென்றிருக்கலாம்

தவறை திருத்த முன் வருவாரா கருணாநிதி?

பெரிய வியாபார அல்லது விவசாய குடும்பங்களில் பெரியவர்கள், தாங்கள் நன்றாக இருக்கும் காலத்திலேயே மகன்களுக்குள் பொறுப்பை கொடுத்து அவர்களை வழி நடத்திச் செல்வது இன்றைக்கும் இருக்கும் வழக்கம். தனது காலத்திலேயே தனது பிள்ளைகள் தனியாக முடிவெடுத்து திறமையாக வியாபாரத்தை, விவசாயத்தை கவனித்துக் கொள்கிறார்களா என்ற உண்மையையும் தெரிந்து கொள்கிறார்கள். நல்ல பிள்ளைகள் தந்தையின் அனுபவத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டு மேலும் பெருமை சேர்க்கிறார்கள்.

அரசியலே குடும்பம், குடும்பமே அரசியல் என்று ஒட்டு மொத்த குடும்பமும் அரசியலில் இருப்பவர்களுக்கும் மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் பொருந்தக் கூடியவைதான்.

திமுக என்ற பெரும் இயக்கம் சிதறாமல் வலுவாக இருக்க வேண்டுமானால் அடுத்த தலைவர் யார் என அடையாளம் காட்டப்பட வேண்டியது முக்கியம். அது ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்று கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்தான் என்று இருக்க வேண்டியதில்லை. அடுத்த தேர்தலில் அதிமுகவை திறமையுடன் எதிர்கொள்ளக்கூடிய எவராக இருந்தாலும் அது திமுகவுக்கு நன்மையே.

அகிலேஷ் யாதவ், வெளி நாட்டில் படித்திருந்தாலும் மக்களோடு மக்களாக சகஜமாக எளிதில் பழகியதால்தான் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்று கட்சிக்கு வெற்றியை தேடித் தந்தார். நம்மில் ஒருவர் என்ற எண்ணம் மக்களுக்கு யார் மீது வருகிறதோ அவரே வெற்றித் தலைவராக உருவெடுக்கிறார். புதுவையில் ரங்கசாமியின் வெற்றி ரகசியமும் இதுதான். சைக்கிளில் , டீக்கடையில் சாதாரணமாக பார்க்கக்கூடிய வகையில்தான் அவருக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கம். அது தான் அவரை புதுவையின் ஆட்சிக் கட்டிலில், தனிக்கட்சி கண்ட மிகக் குறுகிய காலத்திலேயே ஏற்றியது.

கருணாநிதியின் மகன் என்ற காரணத்தை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் இன்றைய திமுகவில் மக்களோடு மக்களாக எளிமையாக பழகுபவர், தமிழகம் முழுவதும் நன்றாக அறிமுகமானவர், அமைச்சராக ஊர் ஊராக திட்டங்களை திறமையாக நிறைவேற்றியவர் என்ற வகையில் ஸ்டாலின் அடுத்த தலைமைக்கு ஏற்றவராகவே தெரிகிறார்.

மீண்டும் ஒரு முறை ‘கருணாநிதியா – ஜெயலலிதாவா’ என்ற கேள்வியை மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் விரும்ப மாட்டார்கள். இதைவிட ‘ஜெயலலிதாவா – ஸ்டாலினா’ என்ற கேள்விக்கு சுவாரஸ்யம் அதிகம். தேர்தலில் நல்ல பலனும் கிடைக்கும்.

எனவே ஆறாம் முறை முதல்வர் என்ற கனவை முடித்துக்கொண்டு திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற தெளிவான முடிவை அறிவிப்பதுதான், உரிய காலத்தில் செய்யாமல் விட்ட தவறை திருத்திக் கொள்வதாகவும் இருக்கும்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

என்ற குறளுக்கு, குறளோவியம் கண்ட கருணாநிதிக்கு யாரும் விளக்கம் சொல்ல தேவையில்லை. இப்போதாவது தன் மகன்களில் யாரை அவையில் முந்தியிருக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவெடுப்பாரா?

Sunday, March 4, 2012

Prawn Pickle

Ingredients:-
Prawn - 1 kilo
Red dried chilli - 125 No.s
Jeera - 5 Table spoons
Ginger - 2 inch pieces – 5 nos.
Garlic - 10 whole pod
Green chilli - 40
Gingelly oil - 1-1/4 kilo
Vinegar - 5 cups
Salt - 100 gms (add more taste)
Mustard seed - 2 table spoons
Curry leaves - 1 Handful
Turmeric powder - 1 table spoons

Method:-
Heat the oil and keep it in a vessel.
Clean the prawns and mix with turmeric powder and salt and keep aside for 15 minutes.
In frying pan fry the prawn using a little oil (do not deep fry) turn the slices and when it is well cooked and the water is evaporated remove the fish from the fire.
Remove the skin from the sides of the fried fish, remove all the bones and break the fish into small pieces and keep aside.
Clean the green chilli, keep only little bit of the stem, slit 1/2 inch, with a sharp knife on the thick part of the chilli, this is to help the chilli marinate and soak.
Peel the garlic and keep the small flakes whole, if the flakes are too big, cut into two.
Peel the ginger and cut into small pieces.
Grind the red chilli, using vinegar.
Keep aside two table spoon peeled garlic, 2 table spoon ginger to put whole along with green chilli. Soak them in vinegar.
Grind ginger and garlic and jeera using vinegar.
Heat the remaining oil in a thick bottom pan. When the oil is hot, add mustard seeds, add curry leaves then add the ground masala, cook till the masala is well cooked and the raw smell goes, then add green chilli, ginger and garlic soaked in vinegar, cook well and when the oil comes up, add the fish pieces and salt and cook till the fish is well cooked and mixed with the gravy. Then remove from fire and store in bottles or jars.

ஆட்டுக்கறி வறுவல்,

தேவையான பொருட்கள்:
கறி – 1 கிலோ
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 4
லவங்கம் – 3
ஏலக்காய் – 3
கசகசா – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – கால் ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – 50 கிராம்
பூண்டு – 50 கிராம்
தேங்காய் – 1 கீற்று
சின்ன வெங்காயம் – கால் கிலோ (பொடியாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – கால் கிலோ (பொடியாக வெட்டவும்)
பிரியாணி இலை – 2
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
குக்கரில் கறியைப் போட்டு அரை தம்ளர் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். கறி வெந்த பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை தாளித்து, சின்ன வெங்காயம், தக்காளி வதக்கி அரைத்த மசாலாவை ஒவ்வொன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு கறியைப் போட்டு தேவையானால் மீண்டும் உப்பு சேர்த்துக் கலந்து விடவும். தண்ணீழ் நன்றாக வற்றியதும், சிறு தீயில் வைத்து சுருள வதக்கி கடாயில் ஒட்டாமல் வரும் வரை வதக்கி கருவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்பு: கறியை சிறு தீயில் வைத்து அதிகம் நேரம் வதக்கினால் மசாலா கறியில் நன்றாக ஊறி இருக்கும்.
====================================================================================
SUKKA VARUVAL

தேவையான பொருட்கள்:
கறி – அரைகிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மிளகு – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
மிளகாய் – 5 (சிவப்பு)
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – 10 பல்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம் முதல் பூண்டு வரை உள்ள பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும். கறியுடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து பிசறி 1 மணி நேரம் ஊற விடவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த கறியை போட்டு அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி மூடி விடவும். கறி நன்கு வெந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் தீயைக் குறைத்து சுருள சுருள கிளறி கருவேப்பிலைத் தூவி இறக்கவும்.

கத்தரிக்காய் கொத்சு

தேவை:
பெரிய கத்தரிக்காய் – 200 கிராம்
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
குழம்புப்பொடி – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 2
புளி – நெல்லிக்காயளவு
உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை:
கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு மஞ்சள் தூள், மிளகாய் நறுக்கி போட்டு வேக வைத்து கடைந்து கொள்ளவும். புளியைக் கரைத்து, கரைசலில் குழம்புப் போட்டு சேர்தது காயில் ஊற்றி இறக்கவும்.குறிப்பு: கத்தரிக்காயை தணலில் போட்டு சுட்டு தோலுரித்து பிசைந்து செய்யலாம்

Friday, March 2, 2012

கிங் சமோசா

தேவை:

மைதா மாவு – 125 கிராம்
வற்றல் பொடி – 1 1/2 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
பச்சை பட்டாணி – 100 கிராம்
மல்லி இலை – 25 கிராம்
கடலை எண்ணெய் – 1/4 கிலோ
சிட்ரிக் ஆசிட் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 1 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் வற்றல் பொடி மஞ்சள் பொடி, தேவையான உப்பு, இஞ்சி, கரம் மசாலா வேக வைத்த பட்டாணி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை மல்லி, மிளகாய், சிட்ரிக் ஆசிட் எல்லாவற்றையும் கலந்து வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரித்து கலவையை வதக்கி பின்னர் ஆற வைக்கவும். பிறகு மைதாவுடன் 2 மேஜைக்கரண்டி எண்ணெயை விட்டு, தேவையான உப்பும் போட்டு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சுட்டு சப்பாத்திகளாக இட்டு ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் தண்ணீர் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு மீதி பொன்நிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.