Thursday, October 9, 2008

From USA...........The bank story in layman terms

The Recent scenario of the Financial Market is quite dismal. Every day the paper surprises us with another surprise – Trust me this kind of surprise is not much appreciated. The downfall of Lehman Brothers, one of the oldest and certainly one of the pillars of the financial market is the latest surprise. We have understood that markets can be punishing and reversal of fortunes can be dramatic. The situation is far worse, if the organization is over leveraged — when loan and investment books are way more than its capital. What accumulates problems and leads to disaster are strange accounting practice and high-risk nature of the loans and investments. Moreover there are certain disclosure issues: Lehman, in its last conference call with investors, gave no clue that it was actually on the brink.

Lehman building Lehman building Generally an investment bank uses its proprietary book (own money) to lend others and invest.
>
> The entire episode started with the sub prime crisis. Banks like Lehman, were used to buying mortgage loans from other banks, and then packaging them to sell bonds against the loan pool. Often they used to add cash to make the loan pool appear more attractive, so that the bonds can be sold at a higher price. For Eg: a mortgage was earning 6%, these bonds are sold at 4%. The difference is the credit spread which the investment bank earns. The idea is to sell these structured bonds, to raise money and free capital. But when home buyers started to default, these bonds lost their value. It all began like this, and then the virus started to spread across markets.
>
> Moreover slowly over the years, their prop books have multiplied. Investment banks also organise big loans for their clients for funding acquisitions. There are times, when the investment banks take positions, only to palm off the securities to other clients and banks. In a crisis, they may not get the opportunity to down-sell such positions. That is when a liquidity window from the central bank thus comes handy.
>
> For Eg: Lehman faces a redemption and has to repay another bank it has borrowed from. If it sells the mortgage-backed bonds, whose prices have fallen, it will not raise as much as was earlier expected. So, it sells some of the other good assets or bonds which may have nothing to do with mortgages. But since the bank starts dumping these assets, prices of these bonds also dip. This is when the crisis spreads from subprime to prime.
>
> Herein lies the strange accounting of bonds and derivatives like mortgage-backed securities. All banks are required to mark-to-market (MTM) their investments. So, if the price of an instrument falls, the difference between the price at which it was bought and the current market price has to be provided — meaning, it has to be deducted from the earnings. So, a drop in price leads to the MTM loss. But there’s a bigger problem which really has deepened the crisis. An MTM loss can be provided only if there’s a ‘market’. How do you provide when there is no market?
>
> Remember, it’s very different from checking the price of a stock from a stock exchange website. Many of the instruments are over-the-counter derivatives, which are struck on a one-to-one basis between two parties. Suppose, a derivative is linked to variables like the yen-dollar rate, and may be prices of other actively-traded assets, say gold price and US Treasury bill. What the bank does is construct a model, feeds the available market price of these variables in the computer, to arrive at what the market price of the derivatives could or should be. This is an artificial model-generated price. This is called the mark-to-model against mark-to-market.

The trouble is when the bank actually goes out to sell the derivatives; it discovers that there are no takers. And, even if there are buyers, they are willing to pay just a fraction. In other words, there is a sea of difference between the price that is being offered in the market and the high artificially-generated price thrown up by the model. So, when the bank ends up selling the instrument or unwinding derivatives, the loss suffered is far in excess of the mark-to-model loss. Such extra losses on thousands of securities and multiple portfolios can wipe out the capital of the bank

தகவல் உரிமை சட்டம் பற்றி அறிய

தகவல் உரிமை சட்டம் பற்றி அறிய கிழ் கண்ட லிங்க் போகவும்


http://www.tn.gov.in/rti/proactive/guidebook_rtiact.pdf

"சிறப்பு திருமணப் பதிவு

திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.

இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த திருமணங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. காலப்போக்கில் இந்த சட்டங்கள் பல மாறுதல்களை சந்தித்து ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. எனினும் நடைமுறையில் மதங்களை புறக்கணிக்கும் திருமணங்களை நிறைவேற்றுவதற்கோ, அவற்றை அங்கீகரிப்பதற்கோ மதம் சார்ந்த யாரும் தயாராக இருப்பதில்லை. அவர்களுக்கான ஒரே தீர்வு "சிறப்பு திருமணச் சட்டமே" ஆகும்.

எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது.

மதம் சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது. இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது.

இந்து திருமணத்தை பதிவு செய்தல்.

இந்து திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒரே சாதியை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. எனவே சாதிகளை கடந்த மணமக்களும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்து அதை பதிவும் செய்யலாம்.

மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். இந்து மதத்தின் எந்த ஒரு பிரிவு/சமூகத்தின் பழக்க வழக்கங்களின்படியோ, சுயமரியாதை திருமணமாகவோ இந்த திருமணம் நடக்கலாம்.

மணமக்களின் வயதை உறுதி செய்யும் சான்றிதழ்கள், திருமணம் நடந்ததற்கான சான்றுகளுடன் (திருமண அழைப்பிதழ், ஆலயங்களில் வழங்கப்படும் ரசீதுகள், பிற ஆவணங்கள்), அந்த திருமணப் பதிவாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மணமகன்/மணமகள் வசிப்பதற்கான சான்றிதழ் அல்லது திருமணம் நடைபெற்றதற்கான சான்று ஆகியவற்றுடன் திருமணப் பதிவாளருக்கு விண்ணப்பித்தால் திருமணம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

கிறிஸ்தவ திருமணத்தை பதிவு செய்தல்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மதகுருமார்களுக்கும், திருமணப்பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மணமக்கள் இருவருமோ அல்லது மணமக்களில் எவராவது ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும் நிலையில் கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கிறது.

உரிய வயதடைந்த மணமக்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மாவட்ட திருமணப்பதிவாளரிடம் வழங்க வேண்டும்.

அந்த அறிவிப்பில் திருமணம் செய்துகொள்ளவிரும்பும் நபர்களின் பெயர், தொழில் அல்லது நிலை, வசிப்பிடம், அந்த இடத்தில் வசித்த காலம், திருமணம் நடத்தவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.


அதன் நகல் திருமணப்பதிவாளரின் அலுவலகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இந்த திருமணத்திற்கு ஏற்கத்தகுந்த மறுப்புகள் இல்லாத நிலையில் இந்த திருமணத்தை நடத்துவற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

இதையடுத்து இந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட மதகுரு அல்லது திருமணப்பதிவாளரால் நடத்தி வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமண பதிவாளர்கள் அல்லது மதகுருக்களிடமிருந்து பெறப்பட்டு அதன் நகல்கள் பதிவுத்துறை அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும்.

இஸ்லாமியத் திருமணங்கள்

இஸ்லாமியத் திருமணங்கள் முழுமையாக மதம் சார்ந்த நடவடிக்கைகளாகவே உள்ளன. மணப்பெண்களுக்கு மஹர் எனப்படும் மணக்கொடை கொடுத்து மணப்பெண்ணின் சம்மதம் பெற்ற பின்னரே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த திருமணங்கள் "நிக்காஹ் பதிவுப் புத்தக"த்தில் பதிவு செய்யப்படுகிறது.

இஸ்லாமியத் திருமணங்களை ஆண்கள் ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலை இருப்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் திருமணப்பதிவு அவசியமாக்கப்படவில்லை. எனினும் இஸ்லாமிய பெண்கள் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரினால் திருமணம் நடந்தததாக நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் உள்ள பதிவு சான்றாக ஏற்கப்படுகிறது.

பாகிஸ்தான், நிதிநெருக்கடி, பொருளாதாரம்

"எண்ணை பரல் ஒன்றுக்கு $ 135 என, எண்ணைக் கம்பனிகளுக்கு கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருக்கும் நாங்கள், பாகிஸ்தானில் சமாதானத்தை பேணுவது எப்படி?" - பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி.

அமெரிக்க நிதிநெருக்கடி என்ற சுனாமி பல உலகநாடுகளில் பொருளாதார வீழ்ச்சிகளை உருவாக்கி வருகின்றது. சந்தேகத்திற்கிடமின்றி வறிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்படப் போகின்றன. அதன் அறிகுறியாக இப்போது பாகிஸ்தான் என்ற ஒரு தேசமே திவாலாகும் நிலை வந்துள்ளது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகின்றது. மத்திய வங்கியிடம் தற்போது $8.14 பில்லியன் பணம் மட்டுமே கையிருப்பில் இருக்கின்றது. அதிலும் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்களை கழித்துப்பார்த்தால், $ 3 பில்லியன் மட்டுமே எஞ்சும். இந்த பணத்தை வைத்து இன்னும் ஒரு மாதத்திற்கு தான் அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களான எண்ணை, உணவுப் பொருட்களை வாங்க முடியும்.

அண்மைக்காலமாக உலகசந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ள எண்ணை, மற்றும் உணவுப்பொருட்களின் இறக்குமதி பாகிஸ்தான் பொருளாதாரத்தை அதிகளவில் பாழ்படுத்தியுள்ளது. அதேநேரம் முஷாரப் கால தவறான முகாமைத்துவம், ஊழல் என்பன வீழ்ச்சிக்கான பிற காரணங்களாகும். சிலர் முஷாரப் காலம், இப்போது உள்ள நிலைமையை விட சிறந்ததாக இருந்தது என சிலர் கூறத்தலைப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சர்வதேச பொருளாதாரத்தின் தாக்கம் பற்றி குறைத்து மதிப்பிடுவதாலேயே இவ்வாறு கூறுகின்றனர். ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் உலகமயமாக்கல் காரணமாக இந்தியாவில் எவ்வாறு வசதிபடைத்த நடுத்தர வர்க்கம் உருவானதோ, அதேபோன்று முஷாரப் கால பாகிஸ்தானிலும் நடந்தது.

இன்றைய ஜனாதிபதி சர்தாரி பதவியேற்ற நாளில் இருந்தே, அவரை துரதிர்ஷ்டம் துரத்த ஆரம்பித்து விட்டது. தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாலும், அதே நேரம் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுகின்றனர். உள்நாட்டு பணக்காரர்களும் பாகிஸ்தானிய வங்கிக்கணக்கில் இருக்கும் தமது பணத்தை எடுத்துக் கொண்டு போய் துபாய் போன்ற நாடுகளில் பத்திரப்படுத்துகின்றனர். அனேகமாக எல்லா பாகிஸ்தானிய செல்வந்தர்களும் ஏற்கனவே வெளிநாட்டு வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர்.

பாகிஸ்தானிய ரூபாய் இந்த வருடம் 21 சத வீதம் மதிப்பிழந்துள்ளது. பணவீக்கம் 25 வீதத்தை எட்டிப்பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எண்ணை விற்கும் சவூதி அரேபியாவிடம், இவ்வருடம் கொடுக்க வேண்டியுள்ள $ 6 பில்லியன் கடனை இரத்து செய்யுமாறு அந்நாட்டிடம் கெஞ்சிய போதும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் பொருளாதாரத்தை அழிவில் இருந்து காப்பற்ற வேண்டுமாகில் $ 100 பில்லியன் பணம் தேவைப்படுகின்றது. சர்வதேச சமூகத்திடம் கையேந்திய போதும், அது கிடைக்குமா என்பது கேள்விக்குறி. உலகின் பெரிய பணக்கார நாடுகளே தள்ளாடும் போது, பாகிஸ்தானை யார் கவனிக்கப் போகிறார்கள்?

பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால், அது பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம். 160 மில்லியன் சனத்தொகையை கொண்ட பாகிஸ்தானில், 100 மில்லியன் பேர் 25 வயதுக்கு குறைவான இளைஞர்கள். பொருளாதார பிரச்சினை காரணமாக வறுமை அதிகரிக்கும் என்பதால், பெரும்பாலான இளைஞர்கள் தலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுவர். மேலும் தலிபான் இயக்கத்திடம் நிறைய பணம் இருக்கின்றது. அவர்கள் தமது போராளிகளின் குடும்பங்களுக்கு மாதாமாதம் தவறாமல் உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.

Tuesday, October 7, 2008

பிரிட்டன் அமைச்சரவையில் இந்திய பெண்மணி...........

லண்டன்: பிரிட்டன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணியான ஸ்ரீதி வதேரா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஸ்ரீதி வதேரா. முன்னாள் வங்கி அதிகாரியான இவர் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு மிகவும் நெருக்கமானவர்.

வதேராவை சிறு வர்த்தக துறையின் அமைச்சராக கார்டன் பிரவுன் நியமித்துள்ளார். இதை பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கார்டன் பிரவுனிடம் நெருக்கமாக இருந்த வதேரா பொருளாதார சிக்கல்களிலிருந்து பிரிட்டன் வங்கிகள் தப்புவதற்கு ஆலோசனை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, October 4, 2008

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கான அஸ்திவாரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். இது ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைய அஸ்திவாரம் போடும் கூட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
1996ம் ஆண்டு பாட்ஷா பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது என்றார். இது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை வெறுப்பேற்றியதால், ரஜினிக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டனர். ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அரசியலுக்கு நேரடியாக வர விரும்பாத ரஜினிகாந்த், அப்போதைய தேர்தலில் ஜி.கே.மூப்பனார் தலைமையில் இருந்த த.மா.கா., மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். சைக்கிள் சின்னத்துக்கும், உதயசூரியனுக்கும் ஒட்டு போடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ரஜினிக்காக எதையும் செய்யத்துணிந்த ரசிகர்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை படுதோல்விக்கு தள்ளினார்கள். ரஜினியின் வாய்ஸ்க்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை 1996 சட்டமன்ற தேர்தல் நிரூபித்தது. அன்று முதல் இன்று வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டு என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது. ரஜினியும் பாட்ஷாவுக்கு பிறகு வந்த முத்து, அண்ணாமலை, படையப்பா என பல படங்களில் அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களை பேசி கைத்தட்டல் பெற்றார். இருப்பினும் அரசியல் குறித்து எந்தவித தெளிவான பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். இன்று வரை அவரது நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.


இதற்கிடையில் ரஜினிக்கு எதிராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியான பேட்டியொன்றை கொடுத்தார். சிகரெட் பிடிப்பது தொடர்பாக பேட்டியளித்த அவர் ரஜினியை நேரடியாகவே தரக்குறைவாக விமர்சித்தார். பாபா படத்தை ஓட விடாமல் செய்வோம் என்று பாமகவினர் தெரிவித்தனர். அப்போதும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் கோரினார்கள். ஆனால் ரஜினி தெடர் மவுனியாகவே இருந்தார். பாபாவும் படு பிளாப்பானது. அந்த நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசினார். இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று நேரடியாகவே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழ் திரையுலகமே கர்நாடகாவை கண்டித்து நெய்வேலியில் பேரணி நடத்தினர். அதில் கலந்து கொள்ளாத ரஜினிகாந்த், சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரத மேடையில் பேசிய ரஜினிகாந்த், நதிகள் இணைப்பு குறித்து பேசினார். அந்த நேரத்திலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று சில அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர். சமீபத்தில் ஒகேனக்கல் குடிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழ் தியேட்டர்கள் நொறுக்கப்படுவதையும் கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திலும் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது பேசிய ரஜினி, கலவரத்தை உண்டு பண்ணுகிறவர்களை உதைக்க வேண்டாமா? என்று ஆவேசமாக பேசினார். (பிறகு அதற்கு மன்னிப்பு கேட்டது தனி கதை).

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டம் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கான அஸ்திவாரம் அமைக்கும் கூட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரஜினியின் அரசியல் பிரவேச முடிவுக்கு அவரது நெருங்கிய நண்பரும் தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவி முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில்தான் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நானும் சமஸ்கிருதமும்

சிறுவயதுகளில் கோயில்களில் சமஸ்கிருதத்தைக் கேட்க நேர்ந்தபோது அது ஒரு மொழி என்ற எண்ணக்கரு என்னிடத்தில் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது கடவுளரோடு பேசும் சங்கேத பாசை என்றும் நினைத்திருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஆரியம் திராவிடம் குறித்த அறிதல்களும் புரிதல்களும் ஏற்பட்டு இருக்கவில்லை. ஆனால் அப்போதிருந்த ஒரு கேள்வியினைச் சொல்ல முடியும். (அது இப்போதும் உண்டு ) பூஜைகளின் போது பயன்படுத்தப்படுகின்ற இந்த சங்கேத பாசைக்கான தமிழ் மொழி பெயர்ப்பினைப் புரிந்துகொண்டுதான் இவர்கள் பாடுகிறார்களா? அல்லது ஆங்கில கவிதைகளை மனனம் செய்து பொருள் தெரியாது ஒப்பிக்கும் என்னைப் போலவே ஒப்பிக்கிறார்களா என்பதுதான் அது. பின்னாளில் ஒருநாள் கோயில்களில் தன் தந்தைக்கு உதவியாற்றும் ஒருவனைப் பிடித்து நீ பாடுறதெல்லாத்துக்கும் உனக்கு பொருள் தெரியுமோடா எனக் கேட்டதற்கு தெரியாதென்றும் புத்தகங்களில் அவை தமிழில் எழுதப்பட்டுள்ளன எனவும் தான் மனனம் செய்து வைத்துள்ளதாகவும் சொன்னான். அட இதுவும் மை நேம் இஸ் சயந்தன் கேஸ்தான் என நினைத்தவாறே உன்ர அப்பாக்கு தெரியுமோட என்றேன். தெரியாது என்று சொல்லி விட்டு ஓடினான். அந்த தெரியாது என்பதற்கு இரு பொருள் உண்டு.

திராவிடம் என்பதில் கூட அப்போது தெளிவான கருத்தினை நான் பெற்றிருக்கவில்லை. அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை என்பது உடமையடா என்ற பாடல்களிலிருந்து அது தமிழ் தமிழன் என்பவற்றைச் சுற்றிய ஒரு கருத்தியல் என்றுதான் நினைத்திருந்தேன். பின்னாளில் வாசிப்பு பரப்பில் அது ஆரியத்திற்கெதிராக முன்னிறுத்தப்பட்ட தென்னிந்திய இனக்குழுக்களை இணைத்த ஒரு பிரிவென சில தெளிவுகள் ஏற்பட்டன.

சமஸ்கிருதம் வடமொழியாக ஆரியர்களுடைய மொழியாக அடையாளப்படுத்தப்படுகிறது. திராவிட மொழிகளின் நேரெதிர் மொழியாகவும் அது பார்க்கப்படுகிறது. ஆக இரண்டுமே தனித்தனியான பிற மொழிகளாக இருந்திருக்க வேண்டும் என எண்ணுவது சாதாரணமானதுதான். ஆக சமஸ்கிருதம் ஆரியர்களினால் கொண்டு வரப்பட்டதா ?

இவைகுறித்து அண்மையில் எரிமலை இதழிலிருந்து படித்த இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழே என்ற கட்டுரையின் கருத்தினடியில் தொடர்ந்து எழுதுகிறேன்.

தமக்கென கல்வியும் கலையும் மொழியும் எழுத்தும் இலக்கியமும் இல்லாத நிலையிலேயே ஆரியர்கள் ஆசியாவின் மேற்கிலிருந்து (நாவலர் தீவு ) இந்தியாவிற்குள் நுழைந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆதலால் சமஸ்கிருதம் அவர்களின் வருகையின் பிற்பட்டே தோன்றிய மொழி எனக்கொள்ளலாம்.

இதற்கிடையில் தமிம் எப்படி பிறமொழிகளாய்த் திரிபடைகிறது என்பதனைப் பார்க்கலாம். அதற்கு முன் உலகின் முதல் மொழி தமிழ் என்பது குறித்த ஆராய்வுகளை நோக்கலாம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலே என்பது அதன் நேரடி அர்த்தத்தில் அதீத மிகைப்படுத்தலாகத் தோன்றினாலும் கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தில் என்பது கல்வியும் மன்னரும் தோன்றாக் காலத்தில் எனப் பொருள்பட்டு சரியாகத்தான் சொல்லப்படுகிறது.

ஜேம்ஸ் சர்ச் வார்ட் என்ற அறிஞர் கடல்கொண்ட லெமுரியா கண்டம் குறித்து எழுதுகையில் 60 000 ஆண்டு பழமை வாய்ந்த நாகரீகம் ஒன்று கடலில் மூழ்கியது என்றும் அதன்போது ஆறு கோடி மக்கள் உயிரிழந்தனர் எனவும் குறிப்பிடுகிறார். தவிர உலகின் முதல் மனிதர் இனத்தின் பிறப்பிடம் லெமுரியாதான் எனவும் கூறுகின்றார்.

லெமூரியா கடல்கொண்டமையானது மூன்று கட்டங்களாக நடந்துள்ளது. ஆரம்பத்தில் தென் அமெரிக்கா ஆபிரிக்கா அவுஸ்ரேலியா போன்ற நிலப்பரப்புக்கள் பிரிந்து சென்ற போது மக்கள் கூட்டத்தினரிடையேயும் பிரிவுகள் ஏற்பட்டன. (செவ்விந்தியர்கள் அம்மா என்ற சொல்லை அன்னை என்றே அழைக்கின்றனர். புலம் என்ற கண்ணினைக் குறிக்கும் பழந்தமிழ் சொல் இப்போது கண்ணினை குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. சீன மொழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் உண்டு.. மா என்பது சீன மொழியிலும் குதிரையை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்.

இறுதிக்கட்ட கடல் கோளின் போதே இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்தது. பறுணியாறு குமரியாறு போன்ற வடிநிலங்களில் இருந்தோர் பாண்டி நாட்டுக்குள் புகுந்தனர். குமரியில் இருந்து தமிழ் வடக்கே செல்ல அது திராவிடமானது. மேலும் செல்லச் செல்ல பிராகிருதமாகி அதுவே ஆரியரிடத்தில் கலந்து சமஸ்கிருதமானது என மொழியியல் அறிஞர் பாவாணார் குறிப்பிடுகிறார்.

அடிப்படையானதும் முதன்மையானதுமான தமிழ் சொற்களெல்லாம் வட சொல் திரிபாக காட்டப்பட்டன. ஆயிரக்கணக்கான வேண்டா அயற்சொற்கள் நிலைபெற்று இந்தி உருவானது. இவ்வாறு தமிழை அடிப்படையாக கொண்ட கலவைமொழி அன்றாடம் பேசக் கூடிய மொழியாக இருக்கவில்லை. அது பேச்சு வழக்கில் புகக்கூடிய வடிவைக் கொண்டிருக்காத காரணத்திலாயே விரைவில் அழிந்து போனது.

ஆயினும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடமொழியாளர் செல்வாக்குற்றிருந்ததனால் சமஸ்கிருதத்தை ஒரு வேத மொழியாகக் காட்ட முற்பட்டனர். பிற நாட்டு மொழியியலாளர்கள் இந்திய மொழிகளைக் குறித்த ஆய்வகளைச் செய்ய முற்பட்ட போது அவாகளுக்கு சமஸ்கிருதம் பரிந்துரைக்கப்பட்டு அது இந்திய மொழிகளின் தாயாக காட்ட முயற்சிக்கப்பட்டது.

சமஸ்கிருதத்தில் ஐந்தில் இரண்டு பங்கு தமிழ்ச் சொற்கள் உள்ளன என்கிறார் பாவாணர். ஆர்வாட் பல்கலைக் கழகத்தில் உலக முதன் மொழியை கண்டுபிடிக்க கையாள வேண்டிய நெறிமுறை பற்றி ஆய்வறிக்கை அளித்துள்ள முனைவர் மதிவாணன் வட இந்திய மொழிகளுக்கு தமிழே மூலமென நிறுவியுள்ளார்.

இது போலவே இது நாள் வரை சிங்களவர் ஆரிய வழித்தோன்றல்கள் என்ற எண்ணக்கருத்தை முறியடித்த கட்டுரையொன்றையும் வாசித்தேன். சிங்களவர் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கவில்லையெனவும் மரபணு ரீதியில் அவர்கள் தென்னிந்திய மக்கட் கூட்டத்தினருடனே பெருமளவில் ஒத்திருப்பதாகவும் கட்டுரை சொல்லியது. சிங்கள எழுத்துவடிவம் ஆரம்பத்தில் தமிழைப் பெருமளவு ஒத்திருந்தது குறித்தும் அக்கட்டுரை ஆராய்கிறது.
Tags: சமஸ்கிருதம், சிங்களம், தமிழ், மொழி
இவ்விடுகையோடு தொடர்புடைய வேறும் சில

* வேர்ட்பிரஸ் - தமிழில் பின்னூட்டத்தினை உள்ளிடுதல் (8)
* மெல்பேண் இன்னிசைக் குசு (5)
* தமிழ் - ஆங்கிலம் - தமிங்கிலம் - சில பகிர்வுகள் (15)