டெல்லி:
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்த இந்திய சாப்ட்வேர் துறையில் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக இன்போசிஸ் துணைத் தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.
டெல்லியில் இந்திய வர்த்தக சபையின் கூட்டத்தில் பேசிய அவர்,
சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்திய சாப்ட்வேர் துறை தப்ப முடியாது. இதுவரை தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்த இந்தத் துறையில் மந்தம் ஏற்பட்டுள்ளது உண்மை தான். விரைவில் சரிவும் ஆரம்பிக்கும். ஆனால், இதையெல்லாம் சமாளிக்கும் பலம் இந்திய சாப்ட்வேர் துறைக்கு உண்டு.
வளர்ச்சி குறையலாமே தவிர ஒரேயடியாக முடங்கிவிடாது. இதனால் இந்தத் துறையில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டு தான் இருக்கும். ஆனால், அது கடந்த 5 ஆண்டுகளில் இருந்ததைப் போல இருக்காது.
இந்த ஆண்டுக்கான இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதத்தை நாங்களே குறைத்துவிட்டோம். இந்த ஆண்டில் எங்களது வருவாய் 4.72 பில்லியன் டாலர் முதல் 4.81 பில்லியன் டாலருக்குள் தான் இருக்கும்.
இது போன்ற பொருளாதார நெருக்கடிகள் எந்தத் துறையையும் விட்டு வைக்காது. ஆனால், இதை சமாளித்துக் காட்டியது தான் இந்திய சாப்ட்வேர் துறை. 2001ம் ஆண்டிலும் இதே போன்ற சரிவைத் தான் சந்தித்தோம். ஆனால், அதை வெற்றிகரமாகவே சமாளித்தோம். எங்கள் நிறுவனத்தில் ஊழியர்கள் சேர்ப்பதை நிறுத்தப் போவதி்ல்லை என்றார்.
Tuesday, November 18, 2008
Saturday, November 15, 2008
மன்னவ னானாலும் – மாடோட்டும்
சின்னவ னானாலும்
மண்ணில் பிறந்தாரே – முடிவில்
மண்ணுக் கிரைதானே
இந்தப்பாடல் ரத்தக்கண்ணீர் படத்தில் வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இப்பாடல் திரு. சுப்புவின் பெயர் குறிப்பிடப் படாமல் வருகிறது.
வாலி கேட்கிறார்... “அண்ணா.. ரத்தக் கண்ணீர் படத்துல உங்க பாட்டு வரிகள் வருது. ஆனா பாடலாசிரியர்கள் பெயரிலே உங்க பெயரில்லை. பெருமை வேறு யாருக்கோ போகிறதே?”
கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்:
“டேய்.. நாம எழுதின ஒரு பாட்ட, இன்னொருவன் தன் பாட்டுன்னு சொல்லிக்கறான்னா நீ சந்தோஷப்படணும். ஏன்னா, அடுத்தவன் தன்னுதுன்னு சொல்லிக் கொள்ள ஆசைப்படற மாதிரி – அற்புதமான பாட்டை எழுதியிருக்கேன்னு அர்த்தம். நீ மோசமான பாட்டா எழுதியிருந்தா, மத்தவன் அதத் தன்னுடையதுன்னு சொல்லிக்க மாட்டானே!”
*******************
வாலி கலந்து கொண்ட ஒரு விழாவில் திரு.அவ்வை நடராஜன் பேசினார்:
‘காற்று வாங்கப் போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் –அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்தக்
கன்னி என்ன வானாள்?’ - என்றார் கவியரசர் கண்ணதாசன். இப்படி எழுத இன்றைக்கு யாரேனும் இருக்கிறார்களா?
பலத்த கைதட்டல்.
திருமதி. மனோரமா ஒரு பத்திரிகையில் எழுதினார்.
“‘கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?’ – என்று கண்ணதாசன் எழுதிய மாதிரி கருத்தோட எழுதற கவிஞர்கள் இப்போ குறைஞ்சுட்டே வர்றாங்க”
இந்தப் பாடல்கள் கண்ணதாசன் எழுதியவையல்ல. கவிஞர் வாலி எழுதியது!
சின்னவ னானாலும்
மண்ணில் பிறந்தாரே – முடிவில்
மண்ணுக் கிரைதானே
இந்தப்பாடல் ரத்தக்கண்ணீர் படத்தில் வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இப்பாடல் திரு. சுப்புவின் பெயர் குறிப்பிடப் படாமல் வருகிறது.
வாலி கேட்கிறார்... “அண்ணா.. ரத்தக் கண்ணீர் படத்துல உங்க பாட்டு வரிகள் வருது. ஆனா பாடலாசிரியர்கள் பெயரிலே உங்க பெயரில்லை. பெருமை வேறு யாருக்கோ போகிறதே?”
கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்:
“டேய்.. நாம எழுதின ஒரு பாட்ட, இன்னொருவன் தன் பாட்டுன்னு சொல்லிக்கறான்னா நீ சந்தோஷப்படணும். ஏன்னா, அடுத்தவன் தன்னுதுன்னு சொல்லிக் கொள்ள ஆசைப்படற மாதிரி – அற்புதமான பாட்டை எழுதியிருக்கேன்னு அர்த்தம். நீ மோசமான பாட்டா எழுதியிருந்தா, மத்தவன் அதத் தன்னுடையதுன்னு சொல்லிக்க மாட்டானே!”
*******************
வாலி கலந்து கொண்ட ஒரு விழாவில் திரு.அவ்வை நடராஜன் பேசினார்:
‘காற்று வாங்கப் போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் –அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்தக்
கன்னி என்ன வானாள்?’ - என்றார் கவியரசர் கண்ணதாசன். இப்படி எழுத இன்றைக்கு யாரேனும் இருக்கிறார்களா?
பலத்த கைதட்டல்.
திருமதி. மனோரமா ஒரு பத்திரிகையில் எழுதினார்.
“‘கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?’ – என்று கண்ணதாசன் எழுதிய மாதிரி கருத்தோட எழுதற கவிஞர்கள் இப்போ குறைஞ்சுட்டே வர்றாங்க”
இந்தப் பாடல்கள் கண்ணதாசன் எழுதியவையல்ல. கவிஞர் வாலி எழுதியது!
Friday, November 14, 2008
இது கல்யாணம் ஆகபோறவர்களுக்கு மட்டும்
25 வது திருமண நாளை வெற்றிகரமாக கொண்டாடினார்கள் அந்த தம்பதியர்.
அந்த ஊரில் மிகவும்பிரசித்திபெற்றஜோடிகள்..
காரணம்..அவர்களின் ஒற்றுமை..அவர்களது 25 ஆண்டு கால
வாழ்க்கையில் சண்டை போட்டதே இல்லை..
அதுவும் ஒரு காரணம்..ஏன் அதட்டி ஒரு வார்த்தை கூட அந்த
கணவர் பேசியதில்லை..
அந்த ஊர் தொலைக்காட்சியில் இருந்தும்,பத்திரிக்கையில்
இருந்தும் பேட்டி எடுக்க வந்திருந்தனர்.வீடு முழுவதும் மக்கள்
வெள்ளம்.
பேட்டி ஆரம்பித்தது...
ஒரு நிருபர் கேட்டார்...உங்கள் திருமண வாழ்க்கையின் வெற்றியின்
rakasiyam என்ன?..எவ்வாறு உங்களால் மனைவி மேல் கோபப் படாமல்
இருக்க முடிந்த்தது?...
அவர் கூறினார்...நானும் என் மனைவியும் திருமணம் முடிந்த உடன்
தேனிலவுக்கு சென்றோம்...
அவள் குதிரை சவாரி செல்ல விரும்பினாள்..இருவரும் ஆளுக்கு ஒரு
குதிரையில் சவாரி சென்றோம்..
என்னுடைய குதிரை அமைதியாக சென்றுகொண்டிருந்தது..அவளுடையது
கொஞ்சம் சண்டித்தனம் செய்தது..சிறிது தூரம் சென்றதும் அந்த குதிரை
அவளை கீழே தள்ளியது..எழுந்த அவள் இது உனக்கு முதல் சான்ஸ்
என்று கூறி மறுபடியும் சவாரியை ஆரம்பித்தாள்...சிறிது தூரம்
சென்றதும் மறுபடியும் அவளை அது கீழே தள்ளியது..மறுபாடியும் அவள்
எழுந்து இது உனக்கு 2 வது சான்ஸ் அப்படின்னுட்டு மறுபடியும் சவாரி
செய்தாள்..இந்த முறையும் அவளை அந்த குதிரை கீழே தள்ளியது..
எழுந்த அவள் அவளுடைய துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை
சுட்டு விட்டாள்...
எனக்கு உடனே கடுமையான கோபம் வந்து அவளை நோக்கி "உனக்கு
அறிவு இருக்கா?...ஐந்தறிவு பிராணியை இப்படியா செய்வது?..உனக்கும்
அதற்கும் என்ன வித்தியாசம்...ஏன் இப்படி மிருகம் போல் நடந்து
கொள்கிறாய்..என்று திட்டினேன்..
அதற்கு அவள் இது உனக்கு முதல் சான்ஸ் என்று என்னிடம்கூறினாள்..
இது தான் எங்களது மண வாழ்கயின் ரகசியம் ...என்று கூறி முடித்தார் .
அந்த ஊரில் மிகவும்பிரசித்திபெற்றஜோடிகள்..
காரணம்..அவர்களின் ஒற்றுமை..அவர்களது 25 ஆண்டு கால
வாழ்க்கையில் சண்டை போட்டதே இல்லை..
அதுவும் ஒரு காரணம்..ஏன் அதட்டி ஒரு வார்த்தை கூட அந்த
கணவர் பேசியதில்லை..
அந்த ஊர் தொலைக்காட்சியில் இருந்தும்,பத்திரிக்கையில்
இருந்தும் பேட்டி எடுக்க வந்திருந்தனர்.வீடு முழுவதும் மக்கள்
வெள்ளம்.
பேட்டி ஆரம்பித்தது...
ஒரு நிருபர் கேட்டார்...உங்கள் திருமண வாழ்க்கையின் வெற்றியின்
rakasiyam என்ன?..எவ்வாறு உங்களால் மனைவி மேல் கோபப் படாமல்
இருக்க முடிந்த்தது?...
அவர் கூறினார்...நானும் என் மனைவியும் திருமணம் முடிந்த உடன்
தேனிலவுக்கு சென்றோம்...
அவள் குதிரை சவாரி செல்ல விரும்பினாள்..இருவரும் ஆளுக்கு ஒரு
குதிரையில் சவாரி சென்றோம்..
என்னுடைய குதிரை அமைதியாக சென்றுகொண்டிருந்தது..அவளுடையது
கொஞ்சம் சண்டித்தனம் செய்தது..சிறிது தூரம் சென்றதும் அந்த குதிரை
அவளை கீழே தள்ளியது..எழுந்த அவள் இது உனக்கு முதல் சான்ஸ்
என்று கூறி மறுபடியும் சவாரியை ஆரம்பித்தாள்...சிறிது தூரம்
சென்றதும் மறுபடியும் அவளை அது கீழே தள்ளியது..மறுபாடியும் அவள்
எழுந்து இது உனக்கு 2 வது சான்ஸ் அப்படின்னுட்டு மறுபடியும் சவாரி
செய்தாள்..இந்த முறையும் அவளை அந்த குதிரை கீழே தள்ளியது..
எழுந்த அவள் அவளுடைய துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை
சுட்டு விட்டாள்...
எனக்கு உடனே கடுமையான கோபம் வந்து அவளை நோக்கி "உனக்கு
அறிவு இருக்கா?...ஐந்தறிவு பிராணியை இப்படியா செய்வது?..உனக்கும்
அதற்கும் என்ன வித்தியாசம்...ஏன் இப்படி மிருகம் போல் நடந்து
கொள்கிறாய்..என்று திட்டினேன்..
அதற்கு அவள் இது உனக்கு முதல் சான்ஸ் என்று என்னிடம்கூறினாள்..
இது தான் எங்களது மண வாழ்கயின் ரகசியம் ...என்று கூறி முடித்தார் .
மின் உபயோகம்: கருணாநிதியை விஞ்சிய ஜெயலலிதா!
சென்னை:
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான அளவுக்கு மி்ன்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
தமிழக சட்டசபையில் நேற்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,
”தமிழகத்தில் 20 மணி நேரம் மின்சாரம் இல்லை என்றெல்லாம் கூறி அ.தி.மு.க. வினர் தினந்தோறும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நானும் இதை சொல்லக் கூடாது என்று தான் இருந்தேன், ஆனால் சொல்ல வேண்டியதாகிவிட்டது. போராட்டங்களை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தோம்.
அவருக்கு பல வீடுகள் இருந்தாலும் அந்த ஒரு வீட்டில் மட்டும் 2 மாத காலத்துக்கு மின் கட்டணமாக ரூ. 1,02,468 செலுத்தியிருக்கிறார்கள். இதற்கு எத்தனை யூனிட் மின்சாரம் செலவாகியிருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு 2 மாதத்துக்கு ரூ. 15,000 தான் கட்டணம் வந்துள்ளது” என்றார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான அளவுக்கு மி்ன்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
தமிழக சட்டசபையில் நேற்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,
”தமிழகத்தில் 20 மணி நேரம் மின்சாரம் இல்லை என்றெல்லாம் கூறி அ.தி.மு.க. வினர் தினந்தோறும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நானும் இதை சொல்லக் கூடாது என்று தான் இருந்தேன், ஆனால் சொல்ல வேண்டியதாகிவிட்டது. போராட்டங்களை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தோம்.
அவருக்கு பல வீடுகள் இருந்தாலும் அந்த ஒரு வீட்டில் மட்டும் 2 மாத காலத்துக்கு மின் கட்டணமாக ரூ. 1,02,468 செலுத்தியிருக்கிறார்கள். இதற்கு எத்தனை யூனிட் மின்சாரம் செலவாகியிருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு 2 மாதத்துக்கு ரூ. 15,000 தான் கட்டணம் வந்துள்ளது” என்றார்.
Tuesday, November 11, 2008
அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!
1. நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் "ஆடம் ஆப்பிள்" அது என்னவென்று தெரியுமா? கழுத்து எலும்பில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ள கார்டிலேஜ் எலும்புதான் அது.
2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா? ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான்.
3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன.
4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது.
5. நம் தும்மும் போது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் தனது வேலையை நிறுத்திவிடும் "இதயம் கூடத்தான்".
6. குழந்தைகள் பிறக்கும் போது முட்டியில் கிண்ணம் (knee cap) இருக்காது. பொதுவாக 2-6 வயதில்தான் உருவாகும்.
7. பெண்கள் கண் சிமிட்டுவது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.
8. மனிதனின் தலை சராசரியாக 4 கிலோ எடை (head wight) இருக்கும் .
9. நம் உடலில் வளராத ஒரே உறுப்பு கண் மட்டும்தான். ஆனால் காதும், மூக்கும் மனிதனின் இறுதிகாலம் வரை வளரும்.
10. மனிதனின் தலை முடியின் எண்ணிக்கை சராசரியாக 100,000 இருக்கும்.
11. நம் தலையில் 29 வகையான எலும்புகள் இருக்கின்றன.
12. நம் உடலில் மிக அதிகமான உணர்ச்சியுள்ள நரம்பு முடிச்சிகள் இருபது நமது முதுகு தண்டு வடத்தில்தான் (spine). 13. வாழ்நாளில் நமது உடலில் இருந்து உதிரும் தோலின் எடை சுமார் 18 கிலோ வரை இருக்கும்.
14. நமது இதயத்தில் உருவாகும் pressure இரத்தத்தை சுமார் 30 அடிகள் வரை சிதறி அடிக்கும் (squirt) திறனுடையது.
15. நமது உடலில் தாடி முடித்தான் மிக வேகமாக வளரும் தன்மையுடையது. வாழ்நாள் முழுவதும் நாம் தாடியை வளர்த்தால் சுமார் 30 அடிகள் வரை வளரும்.
Posted by Dr. சாரதி at 7:13 PM
2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா? ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான்.
3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன.
4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது.
5. நம் தும்மும் போது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் தனது வேலையை நிறுத்திவிடும் "இதயம் கூடத்தான்".
6. குழந்தைகள் பிறக்கும் போது முட்டியில் கிண்ணம் (knee cap) இருக்காது. பொதுவாக 2-6 வயதில்தான் உருவாகும்.
7. பெண்கள் கண் சிமிட்டுவது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.
8. மனிதனின் தலை சராசரியாக 4 கிலோ எடை (head wight) இருக்கும் .
9. நம் உடலில் வளராத ஒரே உறுப்பு கண் மட்டும்தான். ஆனால் காதும், மூக்கும் மனிதனின் இறுதிகாலம் வரை வளரும்.
10. மனிதனின் தலை முடியின் எண்ணிக்கை சராசரியாக 100,000 இருக்கும்.
11. நம் தலையில் 29 வகையான எலும்புகள் இருக்கின்றன.
12. நம் உடலில் மிக அதிகமான உணர்ச்சியுள்ள நரம்பு முடிச்சிகள் இருபது நமது முதுகு தண்டு வடத்தில்தான் (spine). 13. வாழ்நாளில் நமது உடலில் இருந்து உதிரும் தோலின் எடை சுமார் 18 கிலோ வரை இருக்கும்.
14. நமது இதயத்தில் உருவாகும் pressure இரத்தத்தை சுமார் 30 அடிகள் வரை சிதறி அடிக்கும் (squirt) திறனுடையது.
15. நமது உடலில் தாடி முடித்தான் மிக வேகமாக வளரும் தன்மையுடையது. வாழ்நாள் முழுவதும் நாம் தாடியை வளர்த்தால் சுமார் 30 அடிகள் வரை வளரும்.
Posted by Dr. சாரதி at 7:13 PM
கொள்ளைக்காரன் கண்டுபிடித்த வரலாற்று தடயம்
Henrich Schleimann ஒன்பதே வயது நிரம்பிய சிறுவன். The Iliad என அச்சிடப்பட்டிருந்த அப்புத்தகத்தை மூடி வைத்தான். Homer என்ற கிரேக்க குருடன் எழுதிய அந்த புத்தகத்தை பல முறை அவன் வாசித்து விட்டான்.
Schleimann தனது நண்பர்களை காணும் போது சொல்கிறான், ஒரு நாள் நிச்சயமாக நான் Troy கோட்டையை தேடிச் செல்வேன் என்று. அவனது பேச்சு எல்லோருக்கும் நகைப்புக்குள்ளாகிறது. schleimann-னின் பெற்றோரும் அவனது எண்ணத்தை அறிகிறார்கள்.
அவனை அழைத்துச் சொல்கிறார்கள். Trojan போர் என்பது ஒரு புனைவு மட்டுமே. அதில் வரும் பல கடவுளர்களும் புரட்டு விடயமே. ஒரு ஆப்பிளுக்காகவும், பெண்ணுக்காகவும் 10 வருட போர் நடந்தது என்பது கேலிக்குறியது. கதையை கதையாக மட்டுமே பார்க்க வேண்டுமெனவும் மனதை குழப்பிக் கொள்ளாமல் இருக்கவும் சொல்கிறார்கள்.
Minna Meincke எனும் அவனது பெண் தோழி மட்டுமே அவன் கருத்தை செவிமடுக்கிறாள். "நாம் பெரியவர்களானதும் திருமணம் செய்து கொள்வோம். பிறகு Henning Von Holstein-னின் அரண்மனையை தோண்டுவோம், அங்கு கிடைக்கும் செல்வங்களை விற்று துர்க்கிய நாட்டிற்குச் சென்று Troy கோட்டையை தேடுவோம்" என்கிறான். Minna-வும் சம்மதம் தெரிவிக்கிறாள்.
இளைஞனான பிறகு, Schleimann வியாபரம் செய்தும் மாலுமியாக பணி புரிந்தும் பணம் தேடுகிறான். அவனது பல தேச பயணங்களின் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்கிலம், பிரெஞ்ச், மற்றும் துர்க்கிய மொழிகளை பயின்று கொள்கிறான். St.Pettersburg எனும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவணத்தில் பணி புரியும் சமயம் ரஷ்ய மொழியும் கற்றும் கொள்கிறார். வியாபாரமும் நல்ல விதமாய் அமைந்ததால் இளம் பருவத்திலேயே நன்கு பணம் ஈட்டுகிறார்.
தனது இலட்சியங்களையும் மறக்காமல் அதற்கான ஆதாரங்களையும் கேமிக்கிறார்.
அதில் ஈடுபடும் முயற்சியை பொருட்டு முதல் வேளையாக Minnaவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதுகிறார்.அக்கடிதம் கிடைப்பதற்கு ஒரு மாதத்திர்கு முன்னமே Minna வேறொரு ஆடவரை திருமணம் செய்து கொண்டுவிடுகிறாள். Minna-வின் நேர்மையின்மையினால் Schleimann மிகவும் வருந்துகிறார். பிறகு ஒரு ரஸ்ய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் நீடிக்காமல் விவாகரத்தில் முடிகிறது.
1863-ஆம் ஆண்டு Schleimann தனது 41வது வயது நிறைவடையும் சமயம் கோடிஸ்வரன் எனும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். சரித்திர வல்லுனர்களும் ஆய்வாளர்களும் Troy கோட்டை இல்லை என்பதையே அச்சமயம் உறுதியோடு சொன்னார்கள். அவை Scheleimann-னின் எண்ணத்தை சற்றும் சிதறடிக்கவில்லை. அதே ஆண்டு தனது கனவுகளை உறுதிபடுத்திக் கொள்ள துர்க்கி நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஒரு சிலரே Troy நகரம் இருந்திருக்கக் கூடும் என்பதை நம்பினார்கள். அது Aegean எனும் கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் Bunarbashi எனும் மலையில் அமைந்திருக்கலாம் என கருத்துரைக்கிறார்கள். Schleimann, Bunarbashi மலைக்குச் செல்கிறார். அவ்விடம் Homer இலியட்டில் சொன்னதை போல் இல்லாதிருப்பதைக் கண்டு வருத்தமடைகிறார்.
Homer தனது கதையில் சொல்லிய புவியியல் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனது ஆராய்ச்சியில் முற்படுகிறார். அதன் அடிப்படையில் Troy கோட்டையானது Hissarlik அருகே இருக்கும் ஒரு மலையில் இருப்பதாக அறிகிறார். அந்த மலையில் இருந்து Ida மலையைக் காண முடிந்தது. அங்கே சமமான மணல் பரப்பும், எதிரியை துரத்துவதற்கு வசதியான இடமும், கடற்கறையில் இருந்து சற்று தூரத்திலும் அமைந்திருந்தது.
அவரது முயற்சிகள் வீண் போகாமல் இருக்கும் பொருட்டு தன்னை நன்முறையில் தயார்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறார். தொல் பொருள் ஆராய்ச்சி துறையில் தனது மேற்படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுகிறார்.
மீண்டும் துர்க்கிக்குச் சென்று ஆராய்ச்சியை தொடரும் முன் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார். தன் நண்பருக்கு கடிதம் எழுதி தனக்கு ஒரு இளம் மனைவியை தேடும்படியும் அவள் Homer மற்றும் Troy ஆராய்ச்சியின் மீது பற்று கொண்டிருப்பவளாகவும் இருக்க வேண்டுமெனவும் சொல்கிறார்.
Schleimann-னின் கடிதத்தை ஏற்ற அவரது நண்பன் Sophia Engastromoners எனும் 17 வயது நிறம்பிய நங்கையை அவருக்கு அறிமுகப் படுத்துகிறார். பிறகு அவர்களிருவரும் Athens-ல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
துர்க்கிய நாட்டு அரசாங்கத்தின் அனுமதியோடு Troy நகர ஆராய்ச்சி தொடங்குகிறது. Schleimann-னின் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்த சுல்த்தான் கிடைக்கும் பொருட்களில் ஒரு பங்கு துர்க்கி நாட்டு அரசாங்கத்திற்கு சேர வேண்டுமென விதியிடுகிறார்.
1871-ஆம ஆண்டு Hissarlikகில் ஆராய்ச்சி வேலைகள் தொடங்கப்படுகிறது. Schleimann-னின் பாலிய வயது கனவும் நிறைவடைகிறது. அவர் Troy கோட்டையை கண்டுபிடித்தார். அடுக்கடுக்காய் இடிந்து விழுந்தும், தீவைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்த கோட்டையை கண்டுபிடிக்கிறார். இந்த வெற்றி அவரை உலகப் புகழ் பெற செய்தது.
Schleimann-க்கு மன நிறைவு கிடைக்கவில்லை. Priam அரசனின் ஆட்சியின் போது சொல்லப்பட்டிருப்பதை போல் அந்த கோட்டை இல்லாமல் இருந்ததுவே காரணம். இலியடில் சொல்லப்பட்டிருக்கும் Troy கோட்டையின் வடிவம் கிடைக்கும் வரை தனது ஆராய்ச்சியை மேற் கொண்டார்.
வெறித்தனமாக ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட Schleimann-னுக்கு பேராசையும் பற்றி கொண்டது. Hissarlik-க்கு வந்த தனது இலட்சியத்தை மறந்தார். மாறாக புதயலை தேடுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். கிரேக்க இராணுவத்திற்கு பயந்து Priam அரசன் தனது செல்வங்களை எங்கேனும் பதுக்கி வைத்திருக்க வேண்டுமென யூகித்தார். ஆராய்ச்சியின் முதல் குறியாக புதையல் பதுக்கிய இடத்தை அறிவதிலேயே இருந்தது.
160 வேலையாட்களுடன் இவ்வாராய்ச்சி தொடரப்பட்டது. 14 ஜூன் 1873-ஆம் ஆண்டு தொண்டப்பட்டிருந்த சுவற்றினூடே மினுமினுப்பு கதிர்களை கண்டார். ஒளி வந்த இடத்திர்கு அங்கே இருந்த குழியின் வழியே இறங்கிச் சென்று கண்ட போது அவ்வொளிக்கதிர் அங்கிருந்த பீப்பாயில் இருந்து வந்ததைக் காண்கிறார்.
மூடப்பட்டிருந்த பீப்பாய் லேசாக உடைந்திருந்ததினால் அதன் வழியே அதற்குள்ளிருந்த தங்கத்தைக் காண முடிந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் எழுதிய புத்தகத்தில் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் Schleimann. "எனது வேலையாட்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயம், ஒரு பெரிய கத்தியின் துணை கொண்டு அந்த பீப்பாயை வெளியாக்கினேன். அது கடினமாகவும் பேராபத்து நிறைந்த வேலையாகவும் இருந்தது. எந்த நேரத்திலும் அந்த பாழடைந்த தூண்கள் என் மீது விழுந்திருக்கக் கூடும். ஆனல் பீப்பாயில் இருந்து வெளிவந்த தங்க ஒளி அந்த சமயத்தில் என்னை எது வேண்டுமானாலும் செய்ய தூண்டிற்று. ஆகவே அச்சமயத்தில் ஆபத்தை நான் கருதவில்லை".
Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் கிடைத்த முதல் புதையல் அது. அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திலைத்தார்கள். அந்த புதையலுள் இரண்டு கிரிடங்கள் இருக்கக் கண்டணர். அது அரசர் மற்றும் அரசியால் உபயோகப் படுத்தியதாக இருக்கக் கூடும் என நம்பினார்கள்.
மேலும் தோண்டவும் அவ்விடத்தில் இருந்து பீங்கான் தட்டுகள், பொத்தான்கள், கயிறு மற்றும் தங்கத்திலான நூல்களும் கிடைத்தது. இது பொக கை வளையல், வெள்ளிக் கின்னங்களும், வெங்கலத்திலான ஆயுதங்களென பல பொருட்களும் கிடைத்திருக்கிறது. பேராசையின் மிதப்பில் இருந்த Schleimann எல்லா பொருட்களையும் ஜெர்மனிக்கு கடத்திச் சென்றுவிடுகிறார்.
பெருந்திருடனென கூறப்படும் Schleimann
இந்த விடயமறிந்த துர்க்கிய நாட்டு அரசாங்கம் Schleimann-னுக்கு 2000 பவுண்ட்ஸ் ஸ்தெர்லிங் அபராதம் விதித்தது. Schleimann விதிக்கப்பட்ட அபராதத்தைக் காட்டினும் 5 மடங்கு அதிகமான பணத்தை துர்க்கிய நாட்டு அரசாங்கத்திற்குக் கொடுத்தார். துர்க்கிய அரசாங்கம் அவருக்கு மீண்டும் ஆராய்ச்சியை தொடர வாய்ப்பளித்தது. அவரது நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ளும் நிபந்தனையோடு.
ஆனால் Schleimann அதில் ஆர்வம் கொள்ளாமல் இம்முறை தமது ஆராய்ச்சியை கிரேக்க நாட்டில் இருக்கும் Mycenaeகின் மீது செலுத்தினார். Troy மீது படையெடுத்த Agamennon அரசனின் கோட்டையை தேடினார். அவரது அயராத முயற்சியின் பேரில் அந்தக் கோட்டையில் இருந்த புதயலைக் கண்டு பிடிக்கிறார். அவை Troy கோட்டையில் கிடைத்த புதயலை விட அதிக மதிப்பு கொண்டவையாக இருந்தது.
1878-ஆம் ஆண்டு Schleimann மீண்டும் Troy-க்கு வருகிறார். ஆரம்பத்தில் தேடிய அதே இடத்தில் மேலும் சில புதயல்கலைக் கண்டெடுக்கிறார். இடிந்து போன பல அடுக்குகளை அக்கோட்டையில் காண்கிறார். அவற்றில் ஒன்று Priam அரசனின் ஆட்சியின் போது உள்ள கோட்டையென சொல்லப்படுகிறது. Schleimann-னின் தேடலும் ஒரு நிறைவிற்கு வருகிறது.
Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த செல்வங்களையும் பொருட்களையும் நன்கு புணர்ந்த Schleimann 1880-ஆம் ஆண்டு தனது 58வது வயதின் போது அவற்றை ஜெர்மனில் இருக்கும் பெர்லின் பொருட்காட்சி சாலைக்கு கொடுக்கிறார். அதன் பின் 26.12.1890-இல் மரணமடைகிறார்.
இரண்டாம் உலகப் போரின் போது அவை இரஸ்ய இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகிறது. தற்சமயம் Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த பொருட்கள் யாவும் ரஸ்யாவின், Pushkin அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
Sophia- இவர் அணிந்திருக்கும் நகைகள் TROY கோட்டையின் கண்டெடுக்கப்பட்டது
Troy ஒரு கற்பனையல்ல என்பதை நிருபித்த Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் உலகமே நன்றி கூறியது. ஒரு சில தரப்பினர் Schleimann-னை தொள் பொருள் ஆய்வாளர் என ஏற்க மறுத்தனர். மாறாக அவரை உலகளாவிய பெருந் திருடன் எனவும் பட்டம் சூட்டினர்.
Schleimann-னின் பேராசை போக்கினால் இன்றளவும் துர்க்கி, ஜெர்மன், ரஸ்யா, மற்றும் கிரேக்க நாட்டினருக்கிடையே ஓர் உள் புகைச்சல் இருந்த வண்ணமே இருக்கிறது. தற்சமயம் இருக்கும் சொத்துக்கள் யாவும் தன்னுடையது எனும் எண்ணம் இந்நாடுகளிடையே இருந்து வருகிறது.
Frank Calvert எனும் பிரிட்டானிய ஆராய்ச்சியாளரின் வாரிசுகள், Schleimann கண்டுபிடித்த அப்புதையளின் ஒரு பகுதி தங்களுக்குறியது எனவும் அவை அவர்களது தாத்தாவின் நில பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறதெனவும் சாடியுள்ளார்கள்.
மேலும் தொடரப்பட்ட ஆராய்ச்சியில் Troy கோட்டை குறைந்தபட்சம் ஒன்பது அளவுகளை கொண்டிருக்க வேண்டுமென கூறுகிறார்கள். ஆரம்ப நிலையானது கி.மு 3000 ஆண்டும் இறுதி நிலையானது கி.மு 350 முதல் 400 ஆண்டிற்குட்பட்டதாக இருக்க வேண்டுமென குறிப்பிடுகிறார்கள். Trojan போர் கி.மு 1194 முதல் கி.மு 1184 வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.
Schleimann தான் கண்டுபிடித்த பொருட்கள் Agamemmon மற்றும் Priam அரசருடையது என தபது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அந்தத் தகவல் தவறானது என பின்னாளைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
Mycenace கோட்டையில் Schleimannனுக்கு கிடைத்த புதையலானது Agamemmon ஆட்சி காலத்திற்கு 200 வருடம் முற்பட்டது எனவும். Troy நகரில் கண்டெடுக்கப்பட்ட புதையல் Trojan போருக்கு 1000 வருடங்கள் முந்தயது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
Schleimann தனது நண்பர்களை காணும் போது சொல்கிறான், ஒரு நாள் நிச்சயமாக நான் Troy கோட்டையை தேடிச் செல்வேன் என்று. அவனது பேச்சு எல்லோருக்கும் நகைப்புக்குள்ளாகிறது. schleimann-னின் பெற்றோரும் அவனது எண்ணத்தை அறிகிறார்கள்.
அவனை அழைத்துச் சொல்கிறார்கள். Trojan போர் என்பது ஒரு புனைவு மட்டுமே. அதில் வரும் பல கடவுளர்களும் புரட்டு விடயமே. ஒரு ஆப்பிளுக்காகவும், பெண்ணுக்காகவும் 10 வருட போர் நடந்தது என்பது கேலிக்குறியது. கதையை கதையாக மட்டுமே பார்க்க வேண்டுமெனவும் மனதை குழப்பிக் கொள்ளாமல் இருக்கவும் சொல்கிறார்கள்.
Minna Meincke எனும் அவனது பெண் தோழி மட்டுமே அவன் கருத்தை செவிமடுக்கிறாள். "நாம் பெரியவர்களானதும் திருமணம் செய்து கொள்வோம். பிறகு Henning Von Holstein-னின் அரண்மனையை தோண்டுவோம், அங்கு கிடைக்கும் செல்வங்களை விற்று துர்க்கிய நாட்டிற்குச் சென்று Troy கோட்டையை தேடுவோம்" என்கிறான். Minna-வும் சம்மதம் தெரிவிக்கிறாள்.
இளைஞனான பிறகு, Schleimann வியாபரம் செய்தும் மாலுமியாக பணி புரிந்தும் பணம் தேடுகிறான். அவனது பல தேச பயணங்களின் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்கிலம், பிரெஞ்ச், மற்றும் துர்க்கிய மொழிகளை பயின்று கொள்கிறான். St.Pettersburg எனும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவணத்தில் பணி புரியும் சமயம் ரஷ்ய மொழியும் கற்றும் கொள்கிறார். வியாபாரமும் நல்ல விதமாய் அமைந்ததால் இளம் பருவத்திலேயே நன்கு பணம் ஈட்டுகிறார்.
தனது இலட்சியங்களையும் மறக்காமல் அதற்கான ஆதாரங்களையும் கேமிக்கிறார்.
அதில் ஈடுபடும் முயற்சியை பொருட்டு முதல் வேளையாக Minnaவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதுகிறார்.அக்கடிதம் கிடைப்பதற்கு ஒரு மாதத்திர்கு முன்னமே Minna வேறொரு ஆடவரை திருமணம் செய்து கொண்டுவிடுகிறாள். Minna-வின் நேர்மையின்மையினால் Schleimann மிகவும் வருந்துகிறார். பிறகு ஒரு ரஸ்ய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் நீடிக்காமல் விவாகரத்தில் முடிகிறது.
1863-ஆம் ஆண்டு Schleimann தனது 41வது வயது நிறைவடையும் சமயம் கோடிஸ்வரன் எனும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். சரித்திர வல்லுனர்களும் ஆய்வாளர்களும் Troy கோட்டை இல்லை என்பதையே அச்சமயம் உறுதியோடு சொன்னார்கள். அவை Scheleimann-னின் எண்ணத்தை சற்றும் சிதறடிக்கவில்லை. அதே ஆண்டு தனது கனவுகளை உறுதிபடுத்திக் கொள்ள துர்க்கி நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஒரு சிலரே Troy நகரம் இருந்திருக்கக் கூடும் என்பதை நம்பினார்கள். அது Aegean எனும் கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் Bunarbashi எனும் மலையில் அமைந்திருக்கலாம் என கருத்துரைக்கிறார்கள். Schleimann, Bunarbashi மலைக்குச் செல்கிறார். அவ்விடம் Homer இலியட்டில் சொன்னதை போல் இல்லாதிருப்பதைக் கண்டு வருத்தமடைகிறார்.
Homer தனது கதையில் சொல்லிய புவியியல் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனது ஆராய்ச்சியில் முற்படுகிறார். அதன் அடிப்படையில் Troy கோட்டையானது Hissarlik அருகே இருக்கும் ஒரு மலையில் இருப்பதாக அறிகிறார். அந்த மலையில் இருந்து Ida மலையைக் காண முடிந்தது. அங்கே சமமான மணல் பரப்பும், எதிரியை துரத்துவதற்கு வசதியான இடமும், கடற்கறையில் இருந்து சற்று தூரத்திலும் அமைந்திருந்தது.
அவரது முயற்சிகள் வீண் போகாமல் இருக்கும் பொருட்டு தன்னை நன்முறையில் தயார்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறார். தொல் பொருள் ஆராய்ச்சி துறையில் தனது மேற்படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுகிறார்.
மீண்டும் துர்க்கிக்குச் சென்று ஆராய்ச்சியை தொடரும் முன் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார். தன் நண்பருக்கு கடிதம் எழுதி தனக்கு ஒரு இளம் மனைவியை தேடும்படியும் அவள் Homer மற்றும் Troy ஆராய்ச்சியின் மீது பற்று கொண்டிருப்பவளாகவும் இருக்க வேண்டுமெனவும் சொல்கிறார்.
Schleimann-னின் கடிதத்தை ஏற்ற அவரது நண்பன் Sophia Engastromoners எனும் 17 வயது நிறம்பிய நங்கையை அவருக்கு அறிமுகப் படுத்துகிறார். பிறகு அவர்களிருவரும் Athens-ல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
துர்க்கிய நாட்டு அரசாங்கத்தின் அனுமதியோடு Troy நகர ஆராய்ச்சி தொடங்குகிறது. Schleimann-னின் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்த சுல்த்தான் கிடைக்கும் பொருட்களில் ஒரு பங்கு துர்க்கி நாட்டு அரசாங்கத்திற்கு சேர வேண்டுமென விதியிடுகிறார்.
1871-ஆம ஆண்டு Hissarlikகில் ஆராய்ச்சி வேலைகள் தொடங்கப்படுகிறது. Schleimann-னின் பாலிய வயது கனவும் நிறைவடைகிறது. அவர் Troy கோட்டையை கண்டுபிடித்தார். அடுக்கடுக்காய் இடிந்து விழுந்தும், தீவைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்த கோட்டையை கண்டுபிடிக்கிறார். இந்த வெற்றி அவரை உலகப் புகழ் பெற செய்தது.
Schleimann-க்கு மன நிறைவு கிடைக்கவில்லை. Priam அரசனின் ஆட்சியின் போது சொல்லப்பட்டிருப்பதை போல் அந்த கோட்டை இல்லாமல் இருந்ததுவே காரணம். இலியடில் சொல்லப்பட்டிருக்கும் Troy கோட்டையின் வடிவம் கிடைக்கும் வரை தனது ஆராய்ச்சியை மேற் கொண்டார்.
வெறித்தனமாக ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட Schleimann-னுக்கு பேராசையும் பற்றி கொண்டது. Hissarlik-க்கு வந்த தனது இலட்சியத்தை மறந்தார். மாறாக புதயலை தேடுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். கிரேக்க இராணுவத்திற்கு பயந்து Priam அரசன் தனது செல்வங்களை எங்கேனும் பதுக்கி வைத்திருக்க வேண்டுமென யூகித்தார். ஆராய்ச்சியின் முதல் குறியாக புதையல் பதுக்கிய இடத்தை அறிவதிலேயே இருந்தது.
160 வேலையாட்களுடன் இவ்வாராய்ச்சி தொடரப்பட்டது. 14 ஜூன் 1873-ஆம் ஆண்டு தொண்டப்பட்டிருந்த சுவற்றினூடே மினுமினுப்பு கதிர்களை கண்டார். ஒளி வந்த இடத்திர்கு அங்கே இருந்த குழியின் வழியே இறங்கிச் சென்று கண்ட போது அவ்வொளிக்கதிர் அங்கிருந்த பீப்பாயில் இருந்து வந்ததைக் காண்கிறார்.
மூடப்பட்டிருந்த பீப்பாய் லேசாக உடைந்திருந்ததினால் அதன் வழியே அதற்குள்ளிருந்த தங்கத்தைக் காண முடிந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் எழுதிய புத்தகத்தில் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் Schleimann. "எனது வேலையாட்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயம், ஒரு பெரிய கத்தியின் துணை கொண்டு அந்த பீப்பாயை வெளியாக்கினேன். அது கடினமாகவும் பேராபத்து நிறைந்த வேலையாகவும் இருந்தது. எந்த நேரத்திலும் அந்த பாழடைந்த தூண்கள் என் மீது விழுந்திருக்கக் கூடும். ஆனல் பீப்பாயில் இருந்து வெளிவந்த தங்க ஒளி அந்த சமயத்தில் என்னை எது வேண்டுமானாலும் செய்ய தூண்டிற்று. ஆகவே அச்சமயத்தில் ஆபத்தை நான் கருதவில்லை".
Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் கிடைத்த முதல் புதையல் அது. அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திலைத்தார்கள். அந்த புதையலுள் இரண்டு கிரிடங்கள் இருக்கக் கண்டணர். அது அரசர் மற்றும் அரசியால் உபயோகப் படுத்தியதாக இருக்கக் கூடும் என நம்பினார்கள்.
மேலும் தோண்டவும் அவ்விடத்தில் இருந்து பீங்கான் தட்டுகள், பொத்தான்கள், கயிறு மற்றும் தங்கத்திலான நூல்களும் கிடைத்தது. இது பொக கை வளையல், வெள்ளிக் கின்னங்களும், வெங்கலத்திலான ஆயுதங்களென பல பொருட்களும் கிடைத்திருக்கிறது. பேராசையின் மிதப்பில் இருந்த Schleimann எல்லா பொருட்களையும் ஜெர்மனிக்கு கடத்திச் சென்றுவிடுகிறார்.
பெருந்திருடனென கூறப்படும் Schleimann
இந்த விடயமறிந்த துர்க்கிய நாட்டு அரசாங்கம் Schleimann-னுக்கு 2000 பவுண்ட்ஸ் ஸ்தெர்லிங் அபராதம் விதித்தது. Schleimann விதிக்கப்பட்ட அபராதத்தைக் காட்டினும் 5 மடங்கு அதிகமான பணத்தை துர்க்கிய நாட்டு அரசாங்கத்திற்குக் கொடுத்தார். துர்க்கிய அரசாங்கம் அவருக்கு மீண்டும் ஆராய்ச்சியை தொடர வாய்ப்பளித்தது. அவரது நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ளும் நிபந்தனையோடு.
ஆனால் Schleimann அதில் ஆர்வம் கொள்ளாமல் இம்முறை தமது ஆராய்ச்சியை கிரேக்க நாட்டில் இருக்கும் Mycenaeகின் மீது செலுத்தினார். Troy மீது படையெடுத்த Agamennon அரசனின் கோட்டையை தேடினார். அவரது அயராத முயற்சியின் பேரில் அந்தக் கோட்டையில் இருந்த புதயலைக் கண்டு பிடிக்கிறார். அவை Troy கோட்டையில் கிடைத்த புதயலை விட அதிக மதிப்பு கொண்டவையாக இருந்தது.
1878-ஆம் ஆண்டு Schleimann மீண்டும் Troy-க்கு வருகிறார். ஆரம்பத்தில் தேடிய அதே இடத்தில் மேலும் சில புதயல்கலைக் கண்டெடுக்கிறார். இடிந்து போன பல அடுக்குகளை அக்கோட்டையில் காண்கிறார். அவற்றில் ஒன்று Priam அரசனின் ஆட்சியின் போது உள்ள கோட்டையென சொல்லப்படுகிறது. Schleimann-னின் தேடலும் ஒரு நிறைவிற்கு வருகிறது.
Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த செல்வங்களையும் பொருட்களையும் நன்கு புணர்ந்த Schleimann 1880-ஆம் ஆண்டு தனது 58வது வயதின் போது அவற்றை ஜெர்மனில் இருக்கும் பெர்லின் பொருட்காட்சி சாலைக்கு கொடுக்கிறார். அதன் பின் 26.12.1890-இல் மரணமடைகிறார்.
இரண்டாம் உலகப் போரின் போது அவை இரஸ்ய இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகிறது. தற்சமயம் Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த பொருட்கள் யாவும் ரஸ்யாவின், Pushkin அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
Sophia- இவர் அணிந்திருக்கும் நகைகள் TROY கோட்டையின் கண்டெடுக்கப்பட்டது
Troy ஒரு கற்பனையல்ல என்பதை நிருபித்த Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் உலகமே நன்றி கூறியது. ஒரு சில தரப்பினர் Schleimann-னை தொள் பொருள் ஆய்வாளர் என ஏற்க மறுத்தனர். மாறாக அவரை உலகளாவிய பெருந் திருடன் எனவும் பட்டம் சூட்டினர்.
Schleimann-னின் பேராசை போக்கினால் இன்றளவும் துர்க்கி, ஜெர்மன், ரஸ்யா, மற்றும் கிரேக்க நாட்டினருக்கிடையே ஓர் உள் புகைச்சல் இருந்த வண்ணமே இருக்கிறது. தற்சமயம் இருக்கும் சொத்துக்கள் யாவும் தன்னுடையது எனும் எண்ணம் இந்நாடுகளிடையே இருந்து வருகிறது.
Frank Calvert எனும் பிரிட்டானிய ஆராய்ச்சியாளரின் வாரிசுகள், Schleimann கண்டுபிடித்த அப்புதையளின் ஒரு பகுதி தங்களுக்குறியது எனவும் அவை அவர்களது தாத்தாவின் நில பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறதெனவும் சாடியுள்ளார்கள்.
மேலும் தொடரப்பட்ட ஆராய்ச்சியில் Troy கோட்டை குறைந்தபட்சம் ஒன்பது அளவுகளை கொண்டிருக்க வேண்டுமென கூறுகிறார்கள். ஆரம்ப நிலையானது கி.மு 3000 ஆண்டும் இறுதி நிலையானது கி.மு 350 முதல் 400 ஆண்டிற்குட்பட்டதாக இருக்க வேண்டுமென குறிப்பிடுகிறார்கள். Trojan போர் கி.மு 1194 முதல் கி.மு 1184 வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.
Schleimann தான் கண்டுபிடித்த பொருட்கள் Agamemmon மற்றும் Priam அரசருடையது என தபது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அந்தத் தகவல் தவறானது என பின்னாளைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
Mycenace கோட்டையில் Schleimannனுக்கு கிடைத்த புதையலானது Agamemmon ஆட்சி காலத்திற்கு 200 வருடம் முற்பட்டது எனவும். Troy நகரில் கண்டெடுக்கப்பட்ட புதையல் Trojan போருக்கு 1000 வருடங்கள் முந்தயது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
Sunday, November 9, 2008
‘எந்திரன் படத்துக்காக ரசிகர்களிடம் நடிக்கும் தந்திரன் ரஜினி’ என சில பாவிகள் செய்யும் பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளவே
முதலிலேயே சொல்லிவிடுகிறோம்… இது ஒப்பீடல்ல!
செய்தி-1: மலப்புரம் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டியின் சட்டையை ஆர்வமிகுதியில் பிடித்து இழுத்த ரசிகரை பலர் முன்னிலையில் பளார் என அறைந்தார் மம்முட்டி. (மலையாள மனோரமா, பிப்.13, 2008)
செய்தி-2: தூத்துக்குடி அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சரத்குமாரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததில் ஒரு ரசிகரின் கை சரத்குமார் கன்னத்தில் பட்டுவிட்டது. உடனே அவர் காலரைப் பிடித்த சரத், ‘தொலைச்சுப் போடுவேன்…’ என எச்சரித்தார் (தினமணி, ஏப்.12, 2008)
செய்தி-3: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறப்போன விஜய்காந்த், திடீரென ஆவேசப்பட்டு தன் ரசிகர் ஒருவரை மேடையிலேயே கன்னத்தில் அறைந்தார். இதைக் கண்ட மக்களும், மீடியா பிரதிநிதிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
பின்னர் அன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னிடம் அறை வாங்கிய நபரை தனது பழைய நண்பர் என்றும், தங்களுக்குள் இது சகஜம் என்றும் அவர் கூறினார் (தினத்தந்தி, ஜூலை. 13, 2008)
செய்தி-4: லண்டனில் உள்ள கலையரங்கம் ஒன்றில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மலையாள ரசிகர்கள் இதற்காகக் கூடியிருந்தார்கள்.
மலையாள பாடகர் அப்சலுடன் இணைந்து மோகன்லால் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தார். அப்போது மோகன்லாலைப் பார்த்த பரவசத்தில் ஒரு ரசிகர் மேடையேறி அவர் அருகே சென்றார். ரசித்துப் பாடிக்கொண்டிருந்த மோகன்லால், திடீரென்று தனக்கு அருகில் வந்துவிட்ட ரசிகரைப் பார்த்ததும் ஆத்திரத்துடன் அவரைத் தாக்கினார். மேடையை விட்டு வேகமாக கீழே தள்ளிவிட்டார். அந்த ரசிகர் தரையில் போய் விழுந்தார்.
பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். சில நிமிடங்கள் நிகழ்ச்சி நின்றது. பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்தது. தாக்கப்பட்ட ரசிகரோ மேடையின் அருகில் அழுதபடியே பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். கடைசிவரை அவரிடம் ஒரு பேச்சுக்குக் கூட மோகன்லால் சமாதானப்படுத்தவில்லை.
இந்த சம்பவம் மலையாளத் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானதால் கேரளா முழுக்க அதிர்ச்சி அலை பரவியுள்ளது. இதை பார்த்த மோகன்லால் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் (தட்ஸ்தமிழ், நவம்பர்.9, 2008).
-இவை சில சமீபத்திய செய்திகள்.
இதோ இப்போது நீங்கள் படிப்பதும் ஒரு செய்திதான்… ஆனால் வித்தியாசத்தைப் பாருங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்!
ஆகஸ்ட் 14-ம் தேதி ஐதராபாத்தின் குசேலன் சிறப்புக் காட்சி. பார்த்து முடித்துவிட்டு வெளியில் வந்தால் டிரைவரைக் காணோம். காரைத் திறக்க முடியவில்லை. ரஜினியைப் பார்த்துவிட்ட கூட்டமோ பரவசத்துடன் அவரைத் தொட்டுத் தரிசிக்க நெருக்கியது.
என்னதான் அவரைச் சுற்றி பாதுகாவலர்களும், போலீசாரும் நின்றாலும், மக்கள் வெள்ளத்துக்கு அணைபோட முடியுமா… அவரது சட்டையை, கையைத் தொட்டுப் பார்க்க ஒரு கூட்டம் முண்டியடிக்க, அமைதியாகச் சிரித்தபடி நின்றார் ரஜினி. அனைவருக்கும் கையசைத்தார். சில நிமிடங்களில் பதறியடித்தபடி டிரைவர் ஓடிவந்துவிட்டார். ரஜினி சிரித்தபடி கையாட்டி விடைபெற்றார்.
மேலே தொடருங்கள்…
தன் ரசிகர்ளை வழி நடத்துவதிலும் சரி, அவர்கள் மீது அக்கறை காட்டுவதிலும் சரி ரஜினிக்கு நிகரான நடிகரை திரையுலகில் பார்ப்பது அரிது.
தன்னைப் பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளிடம் அவர் பேசும் விதம், அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க அவர் ஏற்பாடு செய்யும் விதம் எல்லாமே, ஒரு பாசமிக்க மூத்த சகோதரனின் நடவடிக்கைகளுக்கு இணையாக இருக்கும்.
அவரைப் பார்க்க போயஸ் கார்டன் சென்ற பல ரசிகர்கள் இந்த அனுபவத்தை ஊரெல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்கள்.
சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது கூட, பேசி முடித்த கையோடு அவர் ரசிகர்களுக்குச் சொன்னது, ‘மதிய உணவு அரேஞ்ச் பண்ணியிருக்கு… சாப்பிட்டுவிட்டு போங்க… பத்திரம்… பத்திரமா வீட்டுக்குப் போங்க!’
தேவையின்றி கூட்டம் சேர்ந்து வேலை தடைபடுவதை மட்டும்தான் ரஜினி விரும்ப மாட்டாரே தவிர, ஒரு போதும் தனக்காகவே கூடும் கூட்டத்தை வெறுத்தவரில்லை. குசேலன் படத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார்.
‘தன் மீது கொண்ட அதீத பாசமே ரசிகர்களை இப்படியெல்லாம் நடந்து கொள்ள வைக்கிறது என்று அவருக்கும் தெரியும். அதனால்தான் அந்த மாதிரி ரசிகர்கள் பக்குவமடைய வேண்டும் என்ற நோக்கில் பல நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அவர்கள் பக்குவப்படக் காத்திருக்கிறார்,’ என்கிறார் ரஜினியை பல வருடமாகப்பார்த்து வரும் மூத்த பத்திரிகையாளர் ராதாராஜ்.
பொறுமை, பொறுப்பு இரண்டும் இருந்தால் பெருமைக்குரிய ரசிகனாக சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ரஜினி காட்டியிருக்கும் வழி.
யாரோடும் ரஜினியை ஒப்பிடுவதற்கல்ல இந்தப் பதிவு.
‘எந்திரன் படத்துக்காக ரசிகர்களிடம் நடிக்கும் தந்திரன் ரஜினி’ என சில பாவிகள் செய்யும் பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளவே இது!
செய்தி-1: மலப்புரம் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டியின் சட்டையை ஆர்வமிகுதியில் பிடித்து இழுத்த ரசிகரை பலர் முன்னிலையில் பளார் என அறைந்தார் மம்முட்டி. (மலையாள மனோரமா, பிப்.13, 2008)
செய்தி-2: தூத்துக்குடி அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சரத்குமாரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததில் ஒரு ரசிகரின் கை சரத்குமார் கன்னத்தில் பட்டுவிட்டது. உடனே அவர் காலரைப் பிடித்த சரத், ‘தொலைச்சுப் போடுவேன்…’ என எச்சரித்தார் (தினமணி, ஏப்.12, 2008)
செய்தி-3: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறப்போன விஜய்காந்த், திடீரென ஆவேசப்பட்டு தன் ரசிகர் ஒருவரை மேடையிலேயே கன்னத்தில் அறைந்தார். இதைக் கண்ட மக்களும், மீடியா பிரதிநிதிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
பின்னர் அன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னிடம் அறை வாங்கிய நபரை தனது பழைய நண்பர் என்றும், தங்களுக்குள் இது சகஜம் என்றும் அவர் கூறினார் (தினத்தந்தி, ஜூலை. 13, 2008)
செய்தி-4: லண்டனில் உள்ள கலையரங்கம் ஒன்றில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மலையாள ரசிகர்கள் இதற்காகக் கூடியிருந்தார்கள்.
மலையாள பாடகர் அப்சலுடன் இணைந்து மோகன்லால் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தார். அப்போது மோகன்லாலைப் பார்த்த பரவசத்தில் ஒரு ரசிகர் மேடையேறி அவர் அருகே சென்றார். ரசித்துப் பாடிக்கொண்டிருந்த மோகன்லால், திடீரென்று தனக்கு அருகில் வந்துவிட்ட ரசிகரைப் பார்த்ததும் ஆத்திரத்துடன் அவரைத் தாக்கினார். மேடையை விட்டு வேகமாக கீழே தள்ளிவிட்டார். அந்த ரசிகர் தரையில் போய் விழுந்தார்.
பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். சில நிமிடங்கள் நிகழ்ச்சி நின்றது. பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்தது. தாக்கப்பட்ட ரசிகரோ மேடையின் அருகில் அழுதபடியே பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். கடைசிவரை அவரிடம் ஒரு பேச்சுக்குக் கூட மோகன்லால் சமாதானப்படுத்தவில்லை.
இந்த சம்பவம் மலையாளத் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானதால் கேரளா முழுக்க அதிர்ச்சி அலை பரவியுள்ளது. இதை பார்த்த மோகன்லால் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் (தட்ஸ்தமிழ், நவம்பர்.9, 2008).
-இவை சில சமீபத்திய செய்திகள்.
இதோ இப்போது நீங்கள் படிப்பதும் ஒரு செய்திதான்… ஆனால் வித்தியாசத்தைப் பாருங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்!
ஆகஸ்ட் 14-ம் தேதி ஐதராபாத்தின் குசேலன் சிறப்புக் காட்சி. பார்த்து முடித்துவிட்டு வெளியில் வந்தால் டிரைவரைக் காணோம். காரைத் திறக்க முடியவில்லை. ரஜினியைப் பார்த்துவிட்ட கூட்டமோ பரவசத்துடன் அவரைத் தொட்டுத் தரிசிக்க நெருக்கியது.
என்னதான் அவரைச் சுற்றி பாதுகாவலர்களும், போலீசாரும் நின்றாலும், மக்கள் வெள்ளத்துக்கு அணைபோட முடியுமா… அவரது சட்டையை, கையைத் தொட்டுப் பார்க்க ஒரு கூட்டம் முண்டியடிக்க, அமைதியாகச் சிரித்தபடி நின்றார் ரஜினி. அனைவருக்கும் கையசைத்தார். சில நிமிடங்களில் பதறியடித்தபடி டிரைவர் ஓடிவந்துவிட்டார். ரஜினி சிரித்தபடி கையாட்டி விடைபெற்றார்.
மேலே தொடருங்கள்…
தன் ரசிகர்ளை வழி நடத்துவதிலும் சரி, அவர்கள் மீது அக்கறை காட்டுவதிலும் சரி ரஜினிக்கு நிகரான நடிகரை திரையுலகில் பார்ப்பது அரிது.
தன்னைப் பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளிடம் அவர் பேசும் விதம், அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க அவர் ஏற்பாடு செய்யும் விதம் எல்லாமே, ஒரு பாசமிக்க மூத்த சகோதரனின் நடவடிக்கைகளுக்கு இணையாக இருக்கும்.
அவரைப் பார்க்க போயஸ் கார்டன் சென்ற பல ரசிகர்கள் இந்த அனுபவத்தை ஊரெல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்கள்.
சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது கூட, பேசி முடித்த கையோடு அவர் ரசிகர்களுக்குச் சொன்னது, ‘மதிய உணவு அரேஞ்ச் பண்ணியிருக்கு… சாப்பிட்டுவிட்டு போங்க… பத்திரம்… பத்திரமா வீட்டுக்குப் போங்க!’
தேவையின்றி கூட்டம் சேர்ந்து வேலை தடைபடுவதை மட்டும்தான் ரஜினி விரும்ப மாட்டாரே தவிர, ஒரு போதும் தனக்காகவே கூடும் கூட்டத்தை வெறுத்தவரில்லை. குசேலன் படத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார்.
‘தன் மீது கொண்ட அதீத பாசமே ரசிகர்களை இப்படியெல்லாம் நடந்து கொள்ள வைக்கிறது என்று அவருக்கும் தெரியும். அதனால்தான் அந்த மாதிரி ரசிகர்கள் பக்குவமடைய வேண்டும் என்ற நோக்கில் பல நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அவர்கள் பக்குவப்படக் காத்திருக்கிறார்,’ என்கிறார் ரஜினியை பல வருடமாகப்பார்த்து வரும் மூத்த பத்திரிகையாளர் ராதாராஜ்.
பொறுமை, பொறுப்பு இரண்டும் இருந்தால் பெருமைக்குரிய ரசிகனாக சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ரஜினி காட்டியிருக்கும் வழி.
யாரோடும் ரஜினியை ஒப்பிடுவதற்கல்ல இந்தப் பதிவு.
‘எந்திரன் படத்துக்காக ரசிகர்களிடம் நடிக்கும் தந்திரன் ரஜினி’ என சில பாவிகள் செய்யும் பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளவே இது!
Subscribe to:
Posts (Atom)
