Tuesday, February 28, 2012

செட்டிநாடு எலும்பு குழம்பு

செட்டிநாடு எலும்பு குழம்பு

mutton-elumbu-kuzhambu

செட்டிநாடு எலும்புக் குழம்பு இது மிகவும் சுவையாக இருக்கும். பாரம்பரியமான செட்டிநாடு சமையல் இதை எளிதில் செய்து விடலாம்.. நீங்களும் செய்து பாருங்கள். நான் சமைத்து ருசித்து பின்பு நீங்களும் செய்து ருசிப்பதற்காக செய்முறை இங்கே! நீங்களும் செய்து பாருங்கள்.நீங்களும் ருசிப்பிர்கள்

தேவையான் பெருட்கள்;-

ஆட்டு எலும்பு - 1/2 கிலோ

தூவரம் பருப்பு – 100 கிராம்

உருளைக்கிழங்கு - 150 கிராம்

கத்திரிக்காய் - 150 கிராம்

முருங்கைக்காய் - 2

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - கால் கிலோ

பச்சைமிளகாய் – 10

வரமிளகாய் - 10

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

பட்டை - 4

பிரியாணி-இலை – 1

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை;-


mutton-elumbu-khzhambu-1

ஒரு குக்கரில் ஆட்டு எலும்பு, தூவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள்தூள், சிறிது உப்பு, மற்றும் 5 கிளாஸ் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம்,சோம்பு, பட்டை,பிரியாணி இலை,பச்சைமிளகாய்,வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் வெங்காயம்(இரண்டும்),தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

அதில் கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,காய் நன்றாக வதங்கியதும்.

இந்த கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புக் கலவையை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும

நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சுவையான செட்டிநாடு எலும்புக் குழம்பு தயார்.

குறிப்பு;-

சாம்பார் தூளுக்கு பதில் மிளகாய்தூள்-2டீஸ்பூன்,மல்லிதூள்-3டீஸ்பூன் சேர்க்கலாம் அப்படி சேர்க்கும் போது மிளகாய் 10ஆக இருப்பதை 5ஆக குறைத்துக் கெள்ளவும்.

Sunday, February 19, 2012

வெட்கம் மானம் பார்த்தா பிழைப்பு நடத்த முடியுமா?

நமது ஊடகங்களிடம் ஒரு அசிங்கமான பழக்கம் உண்டு. அது யாதெனில் - தெரிந்தே, பரபரப்புக்காக - பலரின் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என்கிற நோக்கில் - தவறான ஒரு விஷயத்தை பிரசுரிப்பது. பிறகு சம்பந்தப்பட்டவர்கள் அந்த செய்தி குறித்து கண்டனம் தெரிவித்தால் - சற்றும் வெட்க மானமின்றி "தெரியாமல் நடந்துவிட்டதாக" தெரிந்தே செய்த அட்டூழியத்திற்கு "மன்னிப்பு" கேட்பார்கள். முக்கியமாக சினிமா தொடர்பில் இருப்பவர்கள் என்றால் - ஓரே கல்லில் பல மாங்காய் அடித்தது போல மகிழ்வார்கள். கவர்ச்சிக்கு கவர்ச்சி படம் போடலாம், பரபரப்பான செய்தியாகும், அந்த பரபரப்பில் நான்கு காசு பார்க்கலாம். பிறகு சம்பந்தப்பட்டவர்கள் கண்டனம் தெரிவித்தால்? காசா, பணமா. "மன்னிப்பு கேட்டால் போயிற்று".

தமிழில் கல்கி வார இதழை தவிர ஏனைய பத்திரிகைகள் - இந்த அசிங்கத்தை செய்ய தவறுவதோ, தயங்குவதோ இல்லை. அந்த வகையில் - குமுதம் சென்ற மாதம், தாம் வெளியிட்ட "ஸ்ரூதி தனுஷ் டேட்டிங்கா? கோபத்தில் ரஜினி குடும்பம்" தலைப்பிலான கட்டுரைக்கு ஒரு மாசம் கழித்து இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார்கள். அந்த கட்டுரை குறித்து ஸ்ருதி எழுதிய கடிதம்.

"ஆசிரியர் அவர்களுக்கு, சமீபத்தில் குமுதம் வார இதழில் 10.1.2012 தேதியிட்ட பதிப்பு ஸ்ரூதி தனுஷ் டேட்டிங்கா? கோபத்தில் ரஜினி குடும்பம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அவதூறை கிளப்பும் விதத்திலும் தவறாக சித்தரிக்கும் விதத்திலும் எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையை படித்து அதிர்ச்சி அடைந்தேன். கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் தவறானவை. என் பேருக்கும் புகழுக்கும் பெரியளவில் பங்கம் விளைவிப்பவை. சமுகத்தில் எனக்கிருக்கும் மதிப்பை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனது கடின உழைப்பாலும் ஏற்று கொண்ட தொழிலை மதித்து நடக்கும் தன்மையாலும் திரைத்துறையிலும் சமூகத்திலும் எனக்கு கிடைத்துள்ள நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்துவது தான் உங்கள் நோக்கம் என்பது இந்த கட்டுரையிலிருந்து வெளிப்படையாகவே தெரிகிறது.

கட்டுரையில் வரும் வாசகங்கள் தவறானவை என்ற போதிலும் அதை படிக்கும் திரைதுறையினரும் பொதுமக்களும் அவை அனைத்தும் உண்மை என்று நம்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே இந்த கட்டுரை பொதுமக்களை தவறாக வழி நடத்துவதற்கும் எனக்குள்ள சமூக அந்தஸ்தின் மீது சேற்றை வாரி இறைப்பதற்கான முயற்சி தான். கட்டுரையில் வரும் தவறான, உள்நோக்கத்துடன் கூடிய வாசகங்களும் குற்றச்சாட்டுகளும் துறைரீதியான எனது முன்னேற்றத்தில் சரி செய்ய முடியாத
சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மோசமான பாதிப்பை உண்டாக்கி உள்ளன.

மொத்தத்தில், இந்த கட்டுரை மூலம் எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். என்னை பற்றிய கட்டுரையில் சொல்லப்பட்ட வாசகங்கள் தவறானவை என்று வாசகர்கள் உணர செய்வது உங்கள் கடமை."

தனிப்பட்ட முறையில் ஷ்ருதியை காயப்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. ஆனால் எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. அந்த கட்டுரை ஷ்ருதியின் மனதை புண்படுத்தி இருந்தால் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். ஷ்ருதி ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தின் சுருக்கத்தையும் வெளியிட்டுள்ளோம். ஷ்ருதியின் திரை உலக பயணம் மட்டுமல்ல அவரது எதிர்கால வாழ்க்கை பயணமும் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம் வாழ்த்துகள். ஆசிரியர். "

பக்கத்திலிருந்து பார்த்தது போலோ அல்லது எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்தது போலோ எழுதவேண்டியது. பிறகு வருத்தம் தெரிவிக்க வேண்டியது. அநாகரீகமாக ஒரு செய்தியையும் போட்டு விட்டு,
"அவரது தொழிலும், வாழ்க்கையும் சிறப்பாக அமையவேண்டும் " என்று வாழ்த்துவது கபடத்தனம் இல்லையா? இப்படி எல்லாம் எழுதினால் ஒருவன் எப்படி அய்யா நன்றாக இருக்க முடியும்" என்கிற அறிவு வேண்டாம்.
உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு, வருத்தம் தெரிவித்து விட்டு - கொஞ்ச நாள் கழித்து, எந்த குற்ற உணர்வுமில்லாமல் - திரும்ப சில நாளில் ரஜினியிடம், தனுஷிடம், கமலிடம் அல்லது ஸ்ருதியிடம் வெட்கமின்றி பேட்டி என்று போவார்கள்.

"வெட்கம் மானம் எல்லாம் பார்த்து இருந்தால் அறுபது வருஷம் பத்திரிகை நடத்தி இருக்க முடியுமா" என்கிறார் மூத்த பத்திரிகையாளர்.மேற்கண்ட செய்தியை வாசித்ததும் - சென்ற மாதம் ஒரு வலைத்தளத்தில் குமுதம் ரிப்போர்டரில் பணிபுரிந்தவரின் கட்டுரை ஒன்றும், நான் சிறுவயதில் வாசித்த குமுதம் குறித்த தகவல்களும் ஞாபகத்திற்கு வந்தன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தருகிறேன்.

"என் கைப்பேசிக்கு அந்த அழைப்பு வரும் போது நேரம் நண்பகல் 12 மணிக்கு மேல் (2009, சன.29) இருக்கும். அன்று வியாழக்கிழமை. அப்போது நான் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ செய்தியாளர். வார இருமுறை வரும் அந்தப் பத்திரிகையின் அந்த இதழுக்கான இறுதிக் கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. என்னிடம் பேசிய ஒரு செய்தியாளர், ‘பெண்ணே நீ’ பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இலங்கைப் பிரச்னைக்காக நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்துவிட்டார் என்ற தகவலை சொன்னார்.

அந்த இதழுக்கான ‘வம்பானந்தா’வை (அரசியல் கிசுகிசு) மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த இணையாசிரிடம் போய் சொன்னேன். “சரியான பைத்தியகாரனா இருப்பான் போல,.. சரி.. எதுக்கும் எடிட்டரிடம் சொல்லிப் பாருங்கள். தீக்குளிப்பைப் பற்றி எழுத இடம் நிச்சயம் இருக்காது” என்றார்.
ஆசிரியரிடம் போனேன். பிழை திருத்திக் கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல் சொன்னார்: “இந்த இஸ்யூல சேக்க முடியாது. வம்பானந்தாவில் முடிஞ்சா சேக்கலாம். எதுக்கும் போட்டோகிராபரை மட்டும் அனுப்பி வைங்க”. திரும்பவும் இணையாசிரியரிடம் வந்தேன்.

“சரி, அப்போ போட்டோகிராபரை அனுப்புங்க.” என்றவரிடம், “நானும் போகட்டுமா சார்” என்றேன். “எதுக்கு வேஸ்ட்டா?" என்றார். குமுதம் அலுவலகத்தில் அன்று நடந்த நிகழ்வை தருகிறார் அந்த நிருபர். தீக்குளித்த முத்துக்குமார் செய்தது சரியா, தவறா என்கிற வாதத்தை தள்ளி வைத்துவிட்டு - ஈழத்தமிழர்களுக்காக தம் எதிர்ப்பை உயிர் தியாகம் செய்து காட்டிய நிகழ்வை அலட்சியமாய் பேசியவர்கள் - தங்களை தமிழர்கள் என்றோ, ஊடகக்காரர்கள் என்றோ சொல்ல அருகதை பெற்றவர்களா? நடிகை குறித்த சமாசாரம் என்றால் வேறு செய்தியை வெட்டி விட்டு போட்டிருக்க மாட்டார்கள்.

அதற்கு பிறகு அவர்கள் முத்துக்குமார் குறித்து எழுதிய கட்டுரைகள் எல்லாம் போலியாக, பாசாங்காக தானே இருக்க முடியும். எனது பதின்ம பருவத்தில் படித்த ஒரு செய்தி. குமுதத்தில் பணிபுரிந்த - அந்த எழுத்தாளருக்கு ஒரு வாசகர் கூட்டம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு - அந்த எழுத்தாளர் குமுதத்தில் பணி புரிவது ஏற்புடையதாக இல்லை. ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது, ஒரு வாசகர் "குமுதம் மாதிரி குப்பை பத்திரிகைல வேலை செய்யணுமா" என்று கேட்டார்.

அதற்கு அந்த எழுத்தாளர், "பத்திரிகை குப்பை தான். என் படைப்பு குப்பையா, குப்பை இல்லையா" என்று மட்டும் பாருங்க என்றார் நறுக்கென்று - நியாயமாய். இந்த செய்தி ஆசிரியரின் காதுக்கு போக, அந்த எழுத்தாளர் விசாரிக்கப்பட்டார். "நீங்க அப்படி சொல்லி இருக்கக்கூடாது" என்றார் ஆசிரியர். "நான் உண்மையை தானே சொன்னேன்" என்று வெளியேறினார் - வேலையை விட்டும்.

நான்கு நடிகைகளின் முதுகில் இருந்து இடுப்பு வரையிலான பின் பகுதியை வெளியிட்டு, "யார் இந்த நடிகைகள்" என்கிற அசிங்கமாக கேட்ட கேள்வியை மனதில் கொண்டு தான் (இந்த தகவலை இன்னுமொரு வலைத்தளத்திலும் வாசித்தேன்) கோபத்தில் அந்த வாசகர், "குமுதம் மாதிரி குப்பை பத்திரிகையில் வேலை செய்யணுமா" என்று கேட்டார். இந்த சம்பவம் நடந்து இருபத்தி ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன். ஆனால் அவர்கள் இன்னும் நடிகைகளின் முந்தானைக்குள் இருந்து வரவே இல்லை.

ஒரு தாய் தன் மகளுக்கு கூறிய அறிவுரைகள்

அந்தக் காலத்தில் ஒரு தாய் தன் மகளுக்கு, அவள் புகுந்த வீடு செல்லும் போது கூறிய அறிவுரைகள் சிவபுராணத்தில் உள்ளது.

பெரும்பாலும் இந்தக் கால தாய்மார்கள், தன் மகளுக்கு புகுந்த வீடு செல்லும்போது கூறும் அறிவுரைகளைக் கலிபுராணமாகக் கொள்ளலாம்.

சிவபுராணம்: கணவனிடம், வீட்டில் இந்தப் பொருள் இல்லை" என்று கூறாமல், வாங்க வேண்டும்" என்று கூறு.

கலிபுராணம்: எந்தப் பொருளும் வாங்கவில்லை; அதனால் அது இல்லை, இது இல்லை" என்று புலம்பு.

சிவபுராணம்: கணவன் வெளியிலிருந்து வந்தவுடன் களைப்புத்தீர உபசரி!

கலிபுராணம்: கணவன் வெளியிலிருந்து வந்தவுடன் நீ களைப்புடன் இருப்பதாகக் கூறு. அப்போதுதான் ஹாய்யாக இருக்க முடியும்.

சிவபுராணம்: கணவன் உன்னைக் காரணமின்றி கடிந்தாலும் சாந்தமாயிரு.

கலிபுராணம்: கணவன், உன்னைக் கடிந்து கொள்ளும் முன் நீ முந்திக் கொள்.

சிவபுராணம்: கணவன் வெளியூரிலிருந்து வந்தவுடன் கால் மேல் கால் போட்டு உட்காராதே. எழுந்து நின்று விட்டு பிறகு உட்கார். கணவன் உனக்கு குரு.

கலிபுராணம்: கணவனும், நீயும் எல்லாவிதத்திலும் சரிசமம். அதனால் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து பதில் சொல்; தப்பேதுமில்லை!

சிவபுராணம்: கணவனின் பந்துக்களை உபசரி.

கலிபுராணம்: கணவனின் பந்துக்களை நெருங்கவே விடாதே. முக்கியமாக கணவனின் கூடப் பிறந்த சகோதரிகளை!

சிவபுராணம்: கணவனை பெயரிட்டோ, நீ என்று ஒருமையிலோ பேசாதே.

கலிபுராணம்: கணவனைப் பெயரிட்டு, ‘நீ’ என்று ஒருமையிலேயே கூப்பிடு. அப்போதுதான் அடங்கிப் போவான்.

சிவபுராணம்: சிரமமாயினும் அவன் ஆணையை நிறைவேற்று.

கலிபுராணம்: உன் ஆதிக்கத்தை, அதிகாரத்தை ஆரம்ப முதலே அவன் மேல் செலுத்தப் பழகு.

சிவபுராணம்: இரவில் பின் தூங்கி, காலை முன் எழுந்திரு.

கலிபுராணம்: இரவில் சீக்கிரம் படுத்து காலையில் நேரம் கழித்து எழுந்திரு. பெட் காஃபி உனக்கே!

- பரிமளா பாலசுப்ரமணியம், பெங்களூரு-16

சுவை தரும் சொதிக் குழம்பு!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத் திருமணங்களில் சொதிக்குழம்பு எப்படியிருந்தது என்பதை வைத்துத்தான் முழு கல்யாண விருந்தையே எடை போடுவார்கள்... இதோ சுவையான சொதிக் குழம்பு செய்முறை!

தேவையான பொருள்கள்

தேங்காய் - 1, கத்தரிக்காய் - 2, முருங்கைக்காய் - 1, கேரட் - 1, பட்டர்பீன்ஸ் - 50 கிராம், பட்டாணிப் பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய்- 2, பச்சை மிளகாய் - 2, சிறிய வெங்காயம் - 6, இஞ்சி- சிறிய துண்டு, பூண்டு - 5 பல், எலுமிச்சம் பழம்- 1, கடுகு, உ.பருப்பு, வற்றல், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய்த் துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு தம்ளர் நீர் விட்டு அரைக்கவும். பின் அதைப் பிழிந்து பால் எடுக்கவும். இந்த முதல் பாலை தனியாக பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். சக்கையை மீண்டும் இரு முறை அரைத்து பால் எடுத்து தனித்தனி பாத்திரத்தில் வைக்கவும்.

காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், உரித்த பூண்டு, இஞ்சியை வதக்கிக் கொள்ளவும். மூன்றாவதாக எடுத்த பாலில் காய்கறிகளை வேகவைக்கவும். வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை அதில் சேர்த்து வேகவிடவும். கொஞ்சம் தேங்காய்த் துருவலில் இரண்டு மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் சேர்க்கவும். கொதிக்கும் பொழுது அதனுடன் முதலாவது எடுத்த பாலைச் சேர்க்கவும். இதனைக் கொதிக்கவிடக் கூடாது. லேசாக நுரைத்து வரும் போது இறக்கி விடவும். பின்னர் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் இவற்றைத் தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து குழம்பில் விடவும். சுவையான சொதி தயார். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வாழைக்காய் சிப்ஸ், இஞ்சித் துவையல் போன்றவற்றின் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்!

-ரா.சுப்புலட்சுமி, தூத்துக்குடி

நாய் நோய் ஜாக்கிரதை!

கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், செல்லப் பிராணிகளை... குறிப்பாக நாய்களை வளர்க்கும் மோகம் அதிகரித்துவருகிறது. பாதுகாப்புக்காக மட்டும் அல்ல... பாசம் காட்டவும் இப்போது நாய்களே துணை.
இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். காரணம், 'செல்லப் பிராணிகளை ஒருவர் வளர்க்கும்போது அவரது உயர் ரத்த அழுத்தம் குறைவதுடன் சிந்தனைத் திறனும் மேம்படும்’ என்பது அவர்களின் கருத்து. அதேநேரம், இந்த செல்லப் பிராணிகளுக்கு முறையாகத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்காமல் இருந்தால், அவற்றிடம் இருந்து மனிதர்களுக்குத் தொற்றுநோய் பரவுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதுபற்றி தமிழ்நாடு கால்நடைச் சிகிச்சைத் துறையின் இயக்குநர் டாக்டர் எஸ்.பிரதாபன் அக்கறையோடு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகளைக் கொடுத்தார்.
'நாய், குட்டியாக இருக்கும்போது இதன் வயிற்றில் உருண்டைப் புழு இருக்கும். நாயைக் கொஞ்சும்போது இந்தப் புழுவின் முட்டை நம் கைகளில் படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தப்பித்தவறி இந்த முட்டை நம் வயிற்றுக்குள் சென்றால், உடலில் ஆங்காங்கே சின்னச் சின்னக் கட்டிகள் தோன்றும். கண்களைக்கூட இந்தக் கட்டி விட்டுவைக்காது. எனவே, குட்டி பிறந்த 30-வது நாளில் இந்தப் புழு நீக்கத்துக்கான மருந்து கொடுக்க வேண்டும். பின்னர், ஒரு வருடம் வரை மாதத்துக்கு ஒரு முறையும், ஒரு வருடத்துக்குப் பின்னர் அதன் ஆயுட்காலம் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் இந்தப் புழுவை நீக்குவதற்கான மருந்தைக் கொடுத்துவர வேண்டும்.
சிறுநீர் மற்றும் காலைக் கடன்களை கழிக்க நாயை வீட்டுக்கு வெளியில் அழைத்துச் செல்வதுதான் சிறந்த பழக்கம். ஒருவேளை வெளியில் அழைத்துச்செல்ல நீங்கள் விரும்பாவிட்டால், வீட்டின் சுற்றுப்புறத்திலேயே நாய் காலைக் கடன் முடித்ததும் உடனடியாக அதனை அப்புறப்படுத்திவிட வேண்டும். இல்லை என்றால், அதன் கழிவுகளில் தெள்ளுப்பூச்சி என்ற ஒரு வகைப் பூச்சி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துவிடும். அஜாக்கிரதையின் காரணமாக, இந்த முட்டை மனிதர்களின் வயிற்றுக்குள் செல்லும்போது மூளை, நுரையீரல் போன்ற இடங்களில் கட்டி வளர வாய்ப்பு உள்ளது. தற்போது உருண்டைப் புழு, நாடாப் புழு மற்றும் கொக்கிப் புழு ஆகிய மூன்றுக்கும் சேர்த்தே தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த மருந்துகளைப் பயன்படுத்தி குடற்புழுக்களை நீக்க முடியும். ஒரு வருடம் வரை மாதத்துக்கு ஒரு முறையும் ஒரு வருடத்துக்குப் பின்னர் அதன் ஆயுட்காலம் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் குடற்புழு நீக்கத்துக்கான மருந்தைக் கொடுத்துவர வேண்டும்.
பல்வேறு விலங்குகளுக்கு வெறிநோய் (Rabies) ஏற்பட்டாலும், நாயின் மூலம்தான் மனிதனுக்கு இந்த நோய் அதிகமாகப் பரவுகிறது. பெரும்பாலும் வெறிநோயானது தெருநாய்களிடம் இருந்தே வீட்டில் வளர்க்கும் நாய்களுக்குப் பரவும். எனவே, தெருநாய்களிடம் வீட்டில் உள்ள நாய்களைப் பழகவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதே போல வெறிநோய்க்கான தடுப்பு ஊசியையும் நாய்க்குப் போட வேண்டும். குட்டி பிறந்த மூன்றாவது மாதத்தில் முதல் ஊசியும், பின்னர் வருடத்துக்கு ஒரு முறையும் வெறிநோய்த் தடுப்பு ஊசி போட வேண்டும்.
நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு நாய்களின் உடலில் உண்ணி அதிகமாகப் பெருகும். இந்த உண்ணி மூலம் நாய்க்கும் நாயிடம் இருந்து மனிதனுக்கும் பலவிதமான நோய்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே, வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ நாயை சுத்தமாகக் குளிப்பாட்ட வேண்டும். அப்படிக் குளிப்பாட்டும்போது, நாம் பயன்படுத்தும் சோப்பை நாய்க்குப் பயன்படுத்தக் கூடாது.
இப்படி சுகாதாரத்தோடு வளர்க்கப்படும் நாய் கடித்தாலும் பயப்படத் தேவை இல்லை. ஒருவேளை அந்த நாய் வெறிநோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், மருத்துவரிடம் சென்று தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கானத் தடுப்பு ஊசி இலவசமாக போடப்படுகிறது!' என்கிறார் டாக்டர் எஸ்.பிரதாபன்.

Thursday, February 9, 2012

மைசூர் மசாலா தோசை

மசாலா தோசை செ‌ய்‌திரு‌ப்‌பீ‌‌ர்க‌ள், மைசூ‌‌ர் மசாலா தோசை சா‌ப்‌பி‌ட்டிரு‌ப்‌பீ‌ர்களா? உ‌‌ங்களு‌க்காக‌த்தா‌ன் இ‌‌ந்த மைசூ‌ர் மசாலா தோசை.

தேவையான பொருட்கள் :


பச்சரிசி - 1 கப்
அரிசி அவல் - அரை கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
வெந்தயம் - அரை தே‌க்கர‌ண்டி
துவரம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
மெல்லிய ரவை - 2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - அரை தே‌க்கர‌ண்டி

செய்முறை :

அரிசியையும், வெந்தயத்தையும், பருப்பு வகைகளையும் கலந்து 2 அல்லது 3 மணி நேரம் ஒன்றாக ஊற வைக்கவும்.

அவலை தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து எல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மறக்காமல் உப்பு சேருங்கள்.

மாவை புளிக்க வைக்கவும். மறுநாள் காலை தோசை ஊற்றுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தோசை மாவுடன் ரவை, சர்க்கரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு கூடுமானவரை மிக மெல்லியதாக தோசை ஊற்றவும்.

தோசை நன்றாக சிவந்த பிறகு எண்ணெயை சுற்றி விடவும் ( திருப்பி போட வேண்டாம் ). ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு மசாலா உள்ளே வைத்து சிறிது வெண்ணெயை மேலே வைக்கவும். முக்கோணமாக மடித்து தேங்காய் சட்டினி, சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

குழிப் பணியாரம்

தேவையானவை:

1. 1 1/2 கப் பச்சரிசி
2. 1 1/2 புழுங்கல் அரிசி
3. 1/2 கப் உளுத்தம் பருப்பு
4. சிறிது வெந்தயம்
5. வெல்லம் ‍
6. உப்பு
7. பச்சை மிளகாய்
8. தேங்காய் துருவல்
9. கறிவேப்பிலை


செய்முறை:

* இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும்.
* பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை போல‌ஆட்டாமல், அதற்குமுன்னாலேயே கிரைண்டரை நிறுத்தி விடவும்.
* சிறிது உப்பு சேர்த்து, மாவைக் கரைத்து புளிக்க வைக்கவும்.


ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கான்ஸப்ட் இங்கயும் அப்ளை பண்ணலாம் :)

முதல் மாங்காய்: இனிப்புப் பணியாரம்

* வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரையும் வரை விடவும்.
* புளித்த மாவை தேவையான அளவு எடுத்து, தேங்காய் துருவல் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
* அதில் வெல்லக் கரைசலையும் சேர்த்து ஓரளவுக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.


இரண்டாவது மாங்காய்: வெள்ளை

* வானலியில் சிறிது எண்ணைய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுவெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* புளித்த மாவைத் தேவயான அளவு எடுத்து, நீர், உப்பு, தேங்காய் துருவல் சிறிது, மற்றும் தாளித்தவைகளைச் சேர்த்துக் கலக்கவும்.


இப்ப பணியாரம்:

* அடுப்பில் குழிப் பணியாரச் சட்டியை வைத்து, அனைத்துக் குழிகளிலும் சிறிதுஎண்ணைய் விடவும்.
* சட்டி சூடானவுடன், சிறு குழிக் கரண்டியில் எடுத்து ஊற்றவும்.
* சிறிது நேரம் கழித்து கருது ஒரு மூலையில் பிடித்து அப்படியே அலாக்காகதூக்கித் திருப்பி விடவும்.
* சில விநாடிகளில் பணியாரம் ரெடி.