Sunday, August 31, 2008

ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் சமீபத்தில் கொச்சியில் அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது.

சற்றே யோசித்துப் பார்த்தால் ஒரு ரஜினி ரசிகரின் மனநிலையை அவர் பிரதிபலித்திருப்பது புரியும்.

பேட்டி விவரம்:

ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு கெஸ்ட் ரோல் என்பது சரிப்பட்டு வராது. அதை அவர்களது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள், சாதாரண நடிகர்கள் என்ற அந்தஸ்தை தாண்டியவர்கள். அவர்களை ஓரிரு காட்சிகளில் மட்டும் பார்ப்பதை அவர்களது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்.

என்னைப் போன்ற நடிகர்களுக்கு எந்த ரோலும் ஒரு பொருட்டே அல்ல. நான் திடீரென்று கெஸ்ட் ரோல் பண்ணுவேன், நாயகனாகவும் வருவேன். இரண்டு மூன்று கதாநாயகன்களில் ஒருவராககக்கூட வந்து போவேன். மம்முட்டியும் கூட அப்படித்தான். கத பறயும்போல் வெற்றி பெற அதுவும் ஒரு காரணம். இதெல்லாம் கேரளாவில் சகஜம்.

ஆனால், ரஜினி அப்படி நடிப்பதை கேரள மக்கள் கூட விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு ரஜினியை முழுமையாக ரசிக்க வேண்டும். மூன்று மணிநேரமும் ரஜினி இருக்க வேண்டும், என்றார் மோகன்லால்.

நன்றி: மலையாள மனோரமா

மூடநம்பிக்கைகளின் பூர்வீகம்

மக்களை இயல்பாகச் சிந்திக்க விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் மதங்களும், மந்திரவாதிகளும் இந்த மூட நம்பிக்கைகளை பெருமளவுக்கு வளர்த்து விடுகின்றனர். எதேச்சையாய் நடக்கும் செயல்களுக்குக் கூட காரணங்களை இட்டுக்கட்டி பணம் கறக்கும் மனிதர்களால் இந்த மூடப் பழக்கவழக்கங்கள் அழியாமல் நிலைபெறுகின்றன.

சிலை பால் குடிக்கிறது என்றோ, கடல் நீர் கடவுள் கருணையால் இனிக்கிறது என்றோ ஏதேனும் ஒரு பரபரப்புப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கிறது மதம். காரணம் அதற்குத் தேவை சிந்திக்காமல் தலையாட்டியபடியே ஆட்டுமந்தைகளைப் போல கூடும் கூட்டம். எல்லாம் வியாபார மயமாகிவிட்ட சூழலில் மதம் மட்டும் விதிவிலக்கா என்ன ?

வாயிலிருந்து உருவங்களை எடுப்பதும், கண்களிலிருந்து பூக்களை எடுப்பதும் என மூட நம்பிக்கைகளைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் மக்களுக்காகவே நடைபெறுகின்றன நாடகங்கள்.

நமது நாடு இப்படி மூட நம்பிக்கைகளின் கூடாரமாகிக் கிடக்கிறதே என்னும் கவலையில் உலகில் என்னென்ன மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று அலசியதில் கிடைத்த செய்திகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. தூணிலும் துரும்பிலும் இருப்பான் இறைவன் என்பதை தூணிலும் துரும்பிலும் இருக்கும் மூட நம்பிக்கை என்று மாற்ற வேண்டிய அளவுக்கு இந்த மூட நம்பிக்கைகள் உலகெங்கும் பரந்து கிடக்கின்றன.

எட்டு என்பது இந்தியாவில் கெட்ட எண் என்றால் பதிமூன்று மேல்நாட்டினருக்கு அலர்ஜிக்குரிய எண். பதிமூன்று என்னும் எண் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸைக் குறிப்பதாகவும் எனவே பதிமூன்று என்பது கெட்ட எண் என்பதும் மேல் நாட்டினரின் கருத்து. அதுவும் பதிமூன்றாம் தியதி வெள்ளிக்கிழமையாகி விட்டால் அது படு பயங்கரமான மோசமான நாளாம். காரணம் இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை, நோவா காலத்தின் தண்ணீர் பெருக்கு ஆரம்பமானது ஒரு வெள்ளிக்கிழமை, ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை என்று காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

ஸ்பெயின் நாட்டில் பதிமூன்றாம் தியதி செவ்வாய்க்கிழமை வந்து விட்டால் அன்று எந்த நல்ல செயல்களையும் செய்ய மாட்டார்கள். இத்தாலியில் பதின்மூன்றாம் எண்ணைப்போல பதினேழும் கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அது மரணத்தைக் குறிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பெரும்பாலான கட்டிடங்கள் பதிமூன்றாவது மாடி இல்லாமலேயே கட்டப்படுகின்றன. ஏராளமான குடியிருப்புகளில் பதிமூன்றாம் எண் வீடுகளே இருக்காது. விமான நிலையங்களில் கூட பதிமூன்றாவது எண்ணுள்ள வாசல் பல விமான நிலையங்களில் இருப்பதில்லை

மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. மரங்களைத் தட்டினால் அதனுள் இருக்கும் பேய் வெளியே வராது என்பது மேல்நாட்டு நம்பிக்கையாக இன்றும் நிலவுகிறது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் காடுகளிலிருந்து வெட்டி வரும் மரங்களை வீடுகளில் உபயோகப் பொருட்களாக்குவதற்கு முன் பேய் விரட்டும் பூஜை நடக்கிறது !

அமெரிக்கர்கள், அருகிலிருக்கும் யாராவது தும்மி விட்டால் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்பார்கள். தும்மும்போது ஆன்மா வெளியேற முயல்வதாகவும், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லும்போது ஆன்மா மீண்டும் உடலுக்குள் செல்வதாகவும் அவர்கள் நம்பினார்கள்.

இங்கிலாந்தைப் பொறுத்தவ்ரை தும்மும் போதெல்லாம் அசுத்த ஆவி வெளியேறுவதாக ஆறாவது நூற்றாண்டு வரை நம்பப்பட்டது. பின் பிளேக் நோய் தாக்கிய காலத்தில் வலியுடம் தும்முபவர்கள் மரணத்தை நோக்கியிருப்பதாகக் கருதப்பட்டு அவர்களுக்காய் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று வாழ்த்தத் துவங்கினர். இதன் மூலம் அவன் இறக்க நேரிட்டால் அவனுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்து சுவர்க்கத்துக்குச் செல்வான் என்று நம்பப்பட்டது. தும்மும்போது வாழ்த்தும் வழக்கம் எகிப்தில் திபேரியுஸ் சீசரின் காலத்திலேயே வழக்கத்தில் இருந்ததாகவும் சில கதைகள் சொல்கின்றன.

என்னுடைய அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது தும்மும்போது இதயம் ஒரு வினாடி துடிப்பதை நிறுத்துவதாகவும், அது மீண்டும் துடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று கூறுவதாகவும் சொன்னார்.
வீட்டுக்குள் குடையை விரித்தால் மரணம் வரும் என்பது அமெரிக்கா உட்பட பல மேல்நாடுகளின் இன்றும் நிலவி வரும் ஒரு மூட நம்பிக்கை. தொப்பியைப் படுக்கையில் வைத்திருப்பது நல்லதல்ல என்னும் பழக்கம் இன்னும் அமெரிக்கப் பூர்வீகத்தினரிடம் வழக்கத்தில் உள்ளது. அப்படி வைத்தால் மரணம் உட்பட ஏதேனும் தீயது நிகழும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

கொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் துவக்க காலத்தில் வாயைத் திறந்தால் சாத்தான் உள்ளே நுழைந்துவிடுவான் என்று பயந்து கொட்டாவி விடும்போது வாயை மூடியிருக்கிறார்கள்.

நம்மூரில் இரவில் வேப்பமர அடியில் படுத்திருப்பவர்கள் மூச்சுத் திணறி இறக்க நேரிட்டால் முனி அடித்துக் கொன்றதாகச் சொல்வதைப் போல ஒரு நம்பிக்கை முன்பு அமெரிக்காவிலும் இருந்திருக்கிறது.

மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பெல்லாம் மின்னல் என்பதும் இடி என்பதும் வானத்திலிருந்து சாத்தான் எறிபவை என்பவை தான் தான் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாய் இருந்தது. எனவே மழைக்காலங்களில் அவர்கள் சாத்தானைப் பயமுறுத்துவதற்காக ஆலயத்துக்கு ஓடிச்சென்று ஆலய மணியை அடித்துக் கொண்டே இருப்பது வழக்கம். ஆலயம் மற்ற கட்டிடங்களை விட அதிக உயரமுடைய கோபுரத்தைக் கொண்டிருப்பதால் அடிக்கடி ஆலயங்களில் மின்னல் தாக்கி மணி அடிப்பவர்களை மரணம் அடித்துச் செல்வதும் உண்டு. அதையெல்லாம் சாத்தான் அடித்துச் செத்ததாகவே மக்கள் நம்பினார்கள்.

சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்ட நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. சுவரில் ஏணி சாய்த்து வைக்கும்போது முக்கோணம் உருவாகிறது. பிரமிடுகளையும், முக்கோணத்தையும் தங்கள் நம்பிக்கைப் பின்னணியாகக் கொண்டுள்ள எகிப்தியர்கள் ஏணியின் கீழே நடப்பது அந்த முக்கோணத்தின் புனிதத்துவத்தைப் பாழ்படுத்துவதாக நம்புகிறார்கள்.

கல்லறைத் தோட்டத்தைக் கடக்கும்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கடக்கவேண்டும் என்பது அமெரிக்காவில் உலவி வந்த, இன்னும் கூட பல இடங்களில் உலவி வருகின்ற, ஒரு நம்பிக்கை. சிரிக்காதீர்கள், செத்துப் போனவர்கள் நமக்கு மூச்சு இருக்கிறதே என்று பொறாமைப் படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம் !

சாப்பிடும்போது தும்மினால் யாரோ உங்களை நினைக்கிறார்கள் என்று நாம் சொல்வது போல, மூக்கு அரித்தால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்பது அமெரிக்கர்களின் வழக்கமாக இருக்கிறது. அதேபோல உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று இந்தியர்கள் சொல்வது போல அமெரிக்கர்களும் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும், வலது உள்ளங்கை அரித்தால் பணம் போகும்.

ஒரே தீக் குச்சியில் மூன்றுபேர் சிகரெட் பற்றவைப்பது கெடுதல் என்று நம்பப்படுகிறது. முதலாம் உலகப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில் மறைவிடங்களில் இருக்கும் எதிரி வீரர்களின் கவனத்தைக் கவர அந்த நேரம் போதுமானதாக இருக்கும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த வாசகம் உலகெங்கும் மூட நம்பிக்கையாய் இன்று உலவுகிறது.

காதலர்களைப் பொறுத்தவரையில் பேனா பரிசளித்தால் அந்தக் காதல் முறிந்து போகும் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல கத்தியைப் பரிசாகப் பெற்றால் நட்பு முறிந்து விடும் என்பது மேல் நாட்டவரின் நம்பிக்கையாய் இருக்கிறது.

எதிர்வரும் நபரைப் பொறுத்து நமது பயணத்தின் வெற்றியும் தோல்வியும் அமையும் என்று நமது பாட்டிகள் கதை சொல்வதுண்டு. அதிலும் பூனை குறுக்கே வந்தால் போன காரியம் வெளங்காது என்றும் சொல்வார்கள். இது இங்குமட்டுமல்ல, அமெரிக்காவிலும் பூனை குறுக்கே வந்தால் வந்த காரியம் வெற்றியடையாது என்னும் நம்பிக்கை இருந்திருக்கிறது. மேல் நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்தோமென்றால் சாத்தானைக் குறிப்பதற்காக ஒரு கருப்பு நிற பூனையைக் காட்டுவார்கள். ஆதிகால எகிப்திய கலாச்சாரத்தில் கருப்பு நிற பெண் பூனை ஒன்று கடவுளாக வழிபடப்பட்டு வந்தது. பின் அது மற்ற மதத்தினரால் சாத்தானாக சித்தரிக்கப்பட்டது. சாத்தான் என்பவன் கெட்ட சகுனத்தின் சின்னம் தானே !

வீடுகளில் கதவருகே கத்தியை வைத்திருந்தால் கெட்ட ஆவியை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கலாம் என்பது ஸ்பெயின் நாட்டு மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று.

பணப்பையை பணம் ஏதுமில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் அந்த பையில் பணம் தங்காது என்பதும் ஹவாய் தீவு மக்களின் நம்பிக்கை.

காலணிகளை வீட்டில் அணிந்து நடந்தால் வீட்டிற்குள் பேய் உலவும் என்பதும், கால்களை கதவுக்கு நேராக நீட்டி வைத்துப் படுத்தால் இரவில் உயிர்பிரியும் என்பதும் ஹவாய் தீவு மக்களிடமுள்ள நம்பிக்கைகளில் மேலும் சில.

கத்தியையோ, தாவரங்களையோ பெற்றுக் கொள்ளும் போது நன்றி சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் கத்தியினால் ஏதேனும் காயம் படுதலும், தாவரம் பட்டுப்போவதும் தவிர்க்க முடியாது என்பதும் அமெரிக்கர்களின் நம்பிக்கைகளில் ஒன்று. அப்படி கத்திக் காயத்திலிருந்து தப்ப வேண்டுமானால் நீங்கள் கத்தியைப் பெற்றுக் கொள்ளும்போது கொஞ்சம் பணத்தையும் கூடவே கொடுக்க வேண்டும்.

ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கண்ணாடியை உற்றுப் பார்த்தால் இறந்துபோனவர்களின் ஆவியை காணமுடியும் என்பதும், வலது கால் காலணியை முதலில் போடுவது நீண்ட ஆயுளைத் தரும் என்பதும் இங்கிலாந்து உட்பட பல மேல் நாடுகளில் உலவி வரும் மூட நம்பிக்கைகளில் சில.

வலது என்பது எப்போதுமே நல்லது என்பது பல நம்பிக்கைகளில் பளிச்சிடுகின்றன. வலது புறமாக எழும்புதல், வலது காலை முதலில் வைத்தல் என்பன அவற்றில் சில. பைபிளிலும் இயேசு நல்லவர்களை வலப்பக்கமாகப் பிரிப்பதாக வரும் செய்தியால் கிறிஸ்தவர்களிடையேயும் வலது என்பது நன்மையின் சின்னமாக மதிக்கப்படுகிறது.

கழிவறைக்குச் செல்லும்போது இடதுகாலை முன்வைப்பதும், கழிவறையிலிருந்து வெளியே வரும்போது வலதுகாலை முன்வைப்பதும் நன்மை பயக்கும் என்னும் நம்பிக்கை பல இஸ்லாமிய நாடுகளில் நிலவுகின்றன.

இரவில் தூங்கும்போது எந்தப் பக்கமாகப் படுத்தோமோ அந்தப் பக்கமாகவே எழும்புதல் நன்மை பயக்கும் என்பது மேல் நாட்டவரின் நம்பிக்கை. படுத்திருக்கும் யாரையும் தாண்டிப்போகாதே அப்படித் தாண்டிப்போனால் அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கும் என்பது பாட்டி சொன்ன கதை மட்டுமல்ல, அமெரிக்காவில் உலவும் கதையும் கூட.

மின்னல் தாக்கி உயிர் பிழைப்பவர்கள் பிரபலமாவார்கள் என்னும் நம்பிக்கை சீனாவிற்குச் சொந்தமானது. கால் நகத்தை வெட்டி பழச்சாறுடன் போட்டு யாருக்கேனும் கொடுத்தால் அவர்கள் உங்களோடு காதல் வயப்படுவார்கள் என்பது திடுக்கிட வைக்கும் மேல் நாட்டு நம்பிக்கைகளில் ஒன்று.

அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்று இந்தியர்கள் பலர் நம்புவதைப் போல, காணும் கனவை காலை உணவுக்கு முன் சொல்லி விட்டால் அந்தக் கனவு பலிக்கும் என்பது மேல்நாட்டினரின் நம்பிக்கை.

நிறைய பணத்தை வைத்து முதலீடு செய்பவர்களிடம் இந்த மூட நம்பிக்கைகள் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது என்பது ஒரு வியப்பூட்டும் செய்தி. அவர்கள் எப்படியேனும் எது செய்தேனும் தங்கள் பணத்தை இழக்கக் கூடாது என்பதற்காக அனைத்திற்கும் தலையாட்டுகிறார்கள். நடிகள் நடிகைகள் சினிமா துறை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை மூட நம்பிக்கை தான்.

அறிவியல் யுகம் இன்று உலகைக் கணினியில் சுருக்கிவிட்டது. அறிவியலின் விஸ்வரூப வளர்ச்சி மனிதனின் சிந்தனையை முழுமையாக மாற்றவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. கணினியில் ஜோசியம், ஜாதகம், திருமண பொருத்தம், ராசிக்கல் வியாபாரம் துவங்கி எல்லா விதமான நம்பிக்கைகளும் நுழைந்து விட்டன. பகுத்து அறியும் தன்மையை மனிதன் வாழ்க்கை நெறியாக இன்னும் வகுத்துக் கொள்ளவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.

பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யென வாழ்தலே ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும்

உதைக்க வேண்டாமா இவர்களையெல்லாம்!,

மக்கள் வாழ்க்கையில் திரைப்பட அரங்குகள் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டன.

என்னதான் அறிவுஜீவிகள் வாய்கிழியப் பேசினாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை சினிமா என்பது முதல்வர்களை உருவாக்கும் இடமாகத்தான் இப்போதும் பார்க்கப்படுகிறது.

இன்றும் மக்களுக்கு குடும்பத்துடன் போய்வர ஒரு எளிய சிற்றுலா மையம் திரைப்பட அரங்குகள்தான்.

ஆனால் இத்தகைய அரங்குகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன?

எக்கச்சக்கமாக கட்டணம் வசூலித்தாலும் எந்த அடிப்படை வசதியும்- ஒரு சில திரையரங்குகளைத் தவிர- மற்றவற்றில் கிடையாது.
மோசமான இருக்கைகள், சுத்தமில்லாத கழிவரைகள், மூன்று நான்கு மடங்கு அதிக விலையில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள்... அடுக்கிக் கொண்டே போகலாம் இத் திரையரங்குகளின் லட்சணத்தை. சென்னை கூட இதற்கு விதிவிலக்கல்ல (சத்யம், ஐநாக்ஸ் என சில வளாகங்கள் தவிர).

குடும்பத்தோடு படத்துக்குப் போகும் ஒருவர் தியேட்டர்காரர்களோடு சண்டை போடாமல் வீடு திரும்பவதே அதிசயம்தான்.

இந்த லட்சணத்தில் அரங்குகளில், பார் வசதி செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.


இக்கோரிக்கையை தீர்மானமாகவே நிறைவேற்றி அதை தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ளனர் திரையரங்க உரிமாயாளர்கள் சங்கத்தினர்.

இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், திரையரங்குகளில் வருமானத்தைப் பெருக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி ஆலோசித்து வருகிறோம். அதில் ஒன்று அரங்குகளிலேயே பார்களைத் திறப்பது!!

வெளிநாடுகளில் இதுபோல பார் வசதி கொண்ட திரையரங்குகள் உள்ளன. இதனால் பெண்கள் வருவது பாதிக்கப்படுவதில்லை. எனவே இதேபோல தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நமக்குத் தெரிந்து பார் தியோட்டர்கள் வெளிநாட்டில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், ஏற்கெனவே குற்றங்களும், அத்துமீறல்களும் மலிந்துவிட்ட தமிழக திரையரங்குகளுக்குப் பொருந்துமா...

பணத்துக்காக இப்போது பார் கேட்பவர்கள், நாளை வாடிக்கையாளர்களுக்கு வசதியாக சிவப்பு விளக்கு கார்னர் ஒன்றை ஏற்படுத்தவும் கோரிக்கை வைப்பார்களோ? (இன்னும் பணத்தை அள்ளலாமே!)

ஒகேனக்கல் பிரச்சினையில் சூப்பர்ஸ்டார் ரஜினி கேட்டாரே ஒரு கேள்வி: ...உதைக்க வேண்டாமா இவர்களையெல்லாம்!, என்று.

நியாயமாக அது இந்த பேராசைக்கார, நேர்மையற்ற வணிகப் பிரதிநிதிகளான தியேட்டர்காரர்களுக்குத்தான் பொருந்தும்!!
Po

Friday, August 29, 2008

கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

டெல்லி: கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க கடந்த 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சிடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக சந்தையிலிருந்து திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் மிகப் பெரிய கள்ள நோட்டு கும்பல் பிடிப்ட்டது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளில், 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகள் அதிகம் இருந்தன. பல கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை இந்த கும்பல் புழக்கத்தில் விட்டிருக்கக் கூடும் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந் நிலையில் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சிடிக்கப்பட்ட 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பனா கிலாவாலா கூறியிருப்பதாவது:

இதனால் இந்த நோட்டுகள் செல்லாது என்று மக்கள் பீதியடையத் தேவையில்லை. இந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். நேரடியாக வங்கிகளை தொடர்பு கொண்டு புதிய நோட்டுகளை பெற்று கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

பொதுமக்களிடம் உள்ள இந்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டால் மீண்டும் இவை புழக்கத்திற்கு வராது. அதற்கு பதிலாக 2006ம் ஆண்டு வெளியான மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும். அதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும். பின்னர் சிறிய தொகை நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றார்.

1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளை படிப்படியாக ஓரங்கட்டும் பணியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. இந்த பணி முற்றிலுமாக நடைபெற்ற பிறகு இவற்றை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிக்கும். அப்போதுதான் இந்த நோட்டுகள் செல்லாதவையாகும்.

மக்களுக்கு வாங்கக்கூடிய விலையில் கம்ப்யூட்டர்

இந்தியாவின் பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெனித், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.14,999 க்கு லேப்டாப்பையும் ரூ.11,999 க்கு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் மூன்று மாடல்களில் இருக்கின்றன. இந்த மாடல்கள் எல்லாம் எக்கோஸ்டைல் என்ற பெயரில் வெளிவருகின்றன. இந்த கம்ப்யூட்டர்களில் உடலுக்கு தீங்கு செய்யும் சாதனங்கள் எதுவும் இல்லை என்றும், இது மற்ற கம்ப்யூட்டர்கரை விட 30 சதவீதம் குறைவான மின்சாரத்தில் வேலை செய்யும் என்று சொல்கிறார்கள். இவைகள் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் விஸ்டா, மைக்ரோசாப்ட் எக்ஸ் பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும். ரூ.14,999 க்கு விற்கப்படும் எக்கோஸ்டைல் லேப்டாப்தான் மார்க்கெட்டில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டில் சிஸ்டத்தை கொண்டுள்ள லேப்டாப் என்று சொல்கிறார்கள். மைக்ரோசாப்ட் இந்தியாவின் சேர்மன் ரவி வெங்கடேசன் இதுகுறித்து பேசியபோது, எங்களது நோக்கமே மக்களுக்கு அவர்களால் வாங்கக்கூடிய விலையில் கம்ப்யூட்டரை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்றார்.
நன்றி : தினமலர்

Wednesday, August 27, 2008

முத்துவேல் கருணாநிதி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

முத்துவேல் கருணாநிதி
தமிழ்நாட்டு முதலமைச்சர்

Constituency
சேப்பாக்கம்

பிறப்பு
ஜூன் 3 1924திருக்குவளை, தமிழ்நாடு

அரசியல் கட்சி
தி.மு.க.

பிள்ளைகள்
4 மகன்கள் 2 மகள்கள்

மே 31 இன் படியான தகவல், 2006மூலம்: Government of Tamil Nadu
கலைஞர் முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) (பிறப்பு - ஜூன் 3, 1924)


திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். 1969 முதல் அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். மே 13, 2006 முதல் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இவருடைய எழுத்து வன்மை, பேச்சாற்றலின் காரணமாக கலைஞர் எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.
ஆரம்ப காலத்தில் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்த இவர், பிற்காலத்தில் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் விமர்சிக்கப்பட்டது


அரசியல்

தி.மு.க.வின் ஆரம்பகால உறுப்பினர்.1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்த பெருமை இவருக்கு உரியது.
1969-1971 -- அண்ணாதுரை மறைவிற்கு பின் முதல் முறை ஆட்சி
1971-1974 -- இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
1989-1991 -- நீண்ட நாள் இடைவேளைக்கு பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001 -- நான்காம் முறை ஆட்சி
2006-இன்றுவரை -- ஐந்தாம் முறையாக ஆட்சி


குடும்பம்

மனைவிகள்
திருமதி. பத்மாவதி
திருமதி. இராசாத்தி அம்மாள
திருமதி. தயாளு அம்மாள்

மகன்கள்
மு. க. முத்து
மு. க. அழகிரி
மு. க. ஸ்டாலின்
மு. க. தமிழரசு

மகள்கள்
கனிமொழி
செல்வி

மு.க. ஸ்டாலின் தற்பொழுதைய (2007) தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார். [1]

திரைப்படப் பணி

கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

கண்ணம்மா
மண்ணின் மைந்தன்
பராசக்தி
புதிய பராசக்தி
மந்திரிகுமாரி
பாலைவனப்பூக்கள்
மனோகரா
உளியின் ஓசை' '
மேலும் பல...

மேடை நாடகங்கள்


சிலப்பதிகாரம்
மணிமகுடம்
ஒரே ரத்தம்
பழனியப்பன்
தூக்கு மேடை
காகிதப்பூ
நானே அறிவாளி
வெள்ளிக்கிழமை
உதயசூரியன்
மேலும் பல...

புத்தகங்கள்

குறளோவியம்
நெஞ்சுக்கு நீதி
தொல்காப்பிய உரை
சங்கத் தமிழ்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
இனியவை இருபது
சங்க தமிழ்
பொன்னார் சங்கர்
திருக்குறள் உரை
மேலும் பல...