Showing posts with label ஓலை பக்கோடா. Show all posts
Showing posts with label ஓலை பக்கோடா. Show all posts

Tuesday, December 6, 2011

ஓலை பக்கோடா!

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 3/4 கிலோ, பொட்டுக் கடலை - 1/4 கிலோ, உப்பு, காரத்தூள், பெருங்காயம் - தேவைக்கேற்ப, வெண்ணெய் - 50 கிராம், எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக் கடலையை மிக்ஸியில் நன்கு பொடியாக்கி, அரிசி மாவுடன் கலந்து கொள்ளவும். உப்புத்தூள், காரத்தூள், பெருங்காயப் பொடி, வெண்ணெய் கலந்து எண்ணெய்யில் பிழிந்து பொரித்தெடுக்கவும். கரகரப்பான ஓலை பகோடா ரெடி.

பூண்டு வாசனை பிடிக்குமென்றால் சிறிது பூண்டு விழுது சேர்க்கலாம். கடலை மாவுக்குப் பதில் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதால் வாயில் போட்டவுடன் கரையும்.

- என்.சந்திரா, சென்னை-78