திருவனந்தபுரத்தில் பத்மநாப ஸ்வாமி ஆலயத்தில், சில ரகசிய அறைகள் இருக்கின்றன என்ற செய்தி அல்ல –
வியப்புக்குரியது அந்த ரகசிய அறைகளில் குவிந்து கிடக்கின்ற எண்ணற்ற தங்க நகைகளும், நாணயங்களும், ரத்தினம், வைரம் போன்றவை பதித்த ஆபரணங்களும் அல்ல – ஜொலிக்கின்றவை;
அந்த நகைகள், நாணயங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்களையும் மீறுகிறது என்ற மதிப்பீடு அல்ல – பிரமிப்பைத் தருவது.
பத்மநாப ஸ்வாமி ஆலயம்
கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்த பொக்கிஷத்தில் கை வைக்க வேண்டும் என்கிற ஆசையே இல்லாத, கோவில் சொத்தை அபகரிக்கும் எண்ணமே இல்லாத, நெருப்பு போன்ற நேர்மை கொண்ட ஒரு மன்னர் பரம்பரை, 250 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே இருந்து வந்திருக்கிறதே... அதுதான் ஜொலிக்கிறது ;
அதுதான் வியப்பைத் தருகிறது; அதுதான் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
1750ஆம் ஆண்டில், முதல் மார்த்தாண்டவர்மன் என்ற மன்னர்தான், இந்த விலை மதிப்பிட முடியாத நகைகளையும், தங்க நாணயங்களையும், பத்மநாப ஸ்வாமிக்கே சமர்ப்பித்ததாகவும், அந்த மன்னர் தன்னை ‘பத்மநாப தாஸன்’ என்றே குறிப்பிட்டுக் கொண்டதாகவும் வருகிற செய்திகள் திருவிதாங்கூர் சமஸ்தான சரித்திரத்தை எடுத்துச் சொல்கின்றன.
வாயளவில் சமத்துவம் பேசாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவில்களைத் திறந்து விட்ட, ‘சித்திரைத் திருநாள்’ என்று அழைக்கப்பட்ட பலராம வர்மன், இந்தப் பரம்பரையைச் சார்ந்தவர்; அதற்கு உறுதுணையாக இருந்தவர் ஸர்.ஸி.பி.ராமஸ்வாமிஐயர். அதே போல, மனித உரிமை பற்றி மேடை போடாமல், மரண தண்டனையை ரத்து செய்த இந்தியாவின் முதல் ராஜ்யமாக திருவிதாங்கூரை திகழச் செய்ததும், இதே சித்திரைத் திருநாள் மன்னர்தான்.
இப்படிப்பட்ட உண்மையான முற்போக்குச் சிந்தனை உடைய இந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் அனைவருக்கும், பத்மநாப ஸ்வாமி கோவில் பொக்கிஷத்தைப் பற்றித் தெரிந்துதான் இருந்தது. 1930ல் இந்த ரகசிய அறை ஒன்றில் இருக்கின்ற நகைகள் பற்றிய கணக்குக் கூட எடுக்கப்பட்டது. 1941ல் மலையாளக் கவிஞர் பரமேஸ்வர ஐயர், தனது புத்தகத்தில் இந்தப் பொக்கிஷம் பற்றிய விவரங்களைக் கூறியிருக்கிறார். பின்னர் 12 பகுதிகளாக வந்த, திருவிதாங்கூர் அரண்மனை சரித்திரத்திலும், இது பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கோவில், தொடர்ந்து மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. அங்கு இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருப்பதை அறிந்திருந்தும், அந்தப் பரம்பரையில் வந்த ஒரு மன்னர் கூட, இத்தனை பொக்கிஷத்தையோ, இவற்றில் ஒரு பகுதியையோ எடுத்து அயல் நாடுகளில் பதுக்கிக் கொள்ளவோ, ஸ்விட்சர்லாந்த் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ளவோ, வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளவோ முனையவில்லை.
அவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல. கோவில் கோபுரத்தை பீரங்கி வைத்துப் பிளப்போம் என்று முழக்கமிட்ட, பகுத்தறிவுக் கூட்டத்தைச் சாராத இந்த மன்னர் பரம்பரை, ‘கோவில் சொத்து, குல நாசம்’ என்று நம்பியது. பொதுச் சொத்து விஷத்திற்குச் சமமானது என்று உணர்ந்தது. அன்று முதல் இன்று வரை – இன்று உள்ள உத்திராடத் திருநாள், மார்த்தாண்ட வர்மன் உட்பட – எந்த மன்னரும், இந்த பொக்கிஷத்தை கபளீகரம் செய்யவில்லை.
மக்கள் சொத்து எனில், அது தங்கள் குடும்ப சொத்து; நாட்டின் வளமை என்றால், அது வாரிசுகளின் வளமை... என்று செயல்படுகிற இந்திய அரசியல்வாதிகள் – அதாவது இன்றைய அரசர்கள் – கையில் இந்த பொக்கிஷம் சிக்கியிருந்தால், என்ன கதி ஆகியிருக்கும்!
இப்போதும் சில ‘சமூக பிரக்ஞை’ உள்ளவர்கள், இதை அரசியல்வாதிகளிடம் கொண்டு போய் சேர்த்து விட வழி தேடுகிறார்கள். ‘மக்களின் ஏழ்மையை, மக்களின் துயரைப் போக்கி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த பொக்கிஷம் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்பது அவர்கள் வாதம். அதாவது, இந்தப் பொக்கிஷத்தில் உள்ள விலையுயர்ந்த நகைகளை விற்று, கிடைக்கிற பணத்தில், ஏழைகளின் துயரை இவர்கள் தீர்த்து விடுவார்களாம்!
ஆமாம், தீர்த்து விடுவார்கள்; பொக்கிஷத்தைத் தீர்த்து விடுவார்கள். அதில் ஒரு சிறு துளி, ஏழைகளுக்குப் போய்ச் சேர்ந்தாலே அதிசயம்தான்! அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பங்கு போட்டு கொண்டு ‘இருந்ததில், பாதிக்கு மேல் பித்தளை’ என்று அறிக்கை விட்டால் கூட வியப்பதற்கில்லை.
250 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கோவில் பொக்கிஷம் – பெருமாள் சொத்து – அப்படியே இருப்பதுதான் முறை. ஆனால் அதை இனி விட்டு வைப்பார்களா என்பது சந்தேகம்தான். ஸ்விட்சர்லாந்திலும், மற்ற சில நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வருகிற யோக்கியதை இல்லாத அரசியல்வாதிகளிடம், இந்த கோவில் சொத்தை ஒப்படைக்கக் கூடாது.
ஏன்?
நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கணக்கெடுக்கப்படட்டும்; அவற்றிலிருந்து சட்டவிரோதமாகக் கிட்டியவை ஒதுக்கப்பட்டு, அவை விற்கப்படட்டும்; அந்தப் பணம் பொது மக்களுக்குப் பயன்படுத்தப்படட்டுமே!
ஏன் அதை யாரும் வற்புறுத்தவில்லை?
சட்டம், சமூகம், தர்மம், நியாயம், பச்சாதாபம், பரிதாபம் – எல்லாம் அங்கே ஒளிந்து கொண்டு விடுகின்றனவே – ஏன்?
ஸ்விட்சர்லாந்திலும், பல அயல் நாடுகளிலும், பல அரசியல்வாதிகளிடமும், அவர்களுடைய பினாமிகளிடமும் புகுந்திருக்கிற பொக்கிஷங்கள், ஏழைகளுக்குப் பயன்படட்டும்.
சுப்ரீம் கோர்ட்டில், இன்றைய மன்னர் வாரிசு உத்திராடத் திருநாள், ‘இந்தச் சொத்து தன்னுடையதோ, தன் குடும்பத்தினரையோ சார்ந்தது அல்ல’ – என்று கூறியிருக்கிறார். ‘கோவில் சொத்தாகிய அது, தெய்வ கைங்கர்யங்களுக்கும், மக்கள் நலனுக்கும் பயன்பட வேண்டியது’ என்ற அவருடைய நேர்மையான கருத்து ஏற்கப்பட வேண்டும்;
அதை விட்டு, ‘இது பொதுச் சொத்து’ என்ற பெயரில், அரசியல்வாதிகளின் அறம் நிலையற்ற துறையிடம் இதை ஒப்படைத்து – திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பாதுகாத்து வந்துள்ள, பெருமாள் கோவில் பொக்கிஷத்தைச் சூறையாட வேண்டாம். அது மன்னர் பரம்பரையினரின் நேர்மைக்குக் கொடுக்கப்படுகிற தண்டனை ஆகிவிடும்.
Monday, July 25, 2011
Sunday, July 24, 2011
மதுரைக்கு துணை முதல்வர் பொட்டு சுரேஷ்
மதுரை 'மதுரா கோட்ஸ்’ மில் ஊழியரான நடராஜப் பிள்ளையின் மகன் சுரேஷ் பாபு. ஆனால்,அது 20 வருடங்களுக்கு முன்பு. இப்போது, 'மதுரைக்கு துணை முதல்வர் பொட்டு சுரேஷ்’ என்று ஜெயலலிதாவே பயோடேட்டா கொடுக்கும் அளவுக்கு, தி.மு.க-வில் ஜெகஜ்ஜாலக் கில்லாடி!
ஆரம்பத்தில் இந்த சுரேஷ்பாபு, அ.தி.மு.க. அனுதாபி. நைட்டி வியாபாரம்தான் தொடக்கம். அப்போது சார் பேரே 'நைட்டி சுரேஷ்’தான். நைட்டி பிசினஸ் ஏனோ அலுத்துப்போனதால், மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஒரு டீக்கடை ஓரத்தில், பஜ்ஜிக் கடை போட்டார். ம்ஹூம்... அதுவும் போணி ஆகவில்லை.
'அமைதிப் படை’ படத்தில் சத்யராஜின் கேரக்டர்தான் சாருக்கு இன்ஸ்பிரேஷன். அரசியலில் இறங்கினார். 90-களில் அ.தி.மு.க. எம்.பி-க்களாக இருந்த ராஜன் செல்லப்பா, முத்துமணி ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்தார். 96-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சுறுசுறுப்பான பஜ்ஜி சுரேஷ், எப்படியோ நூல் பிடித்து அமைச்சர் பரிதி இளம்வழுதியைப் பற்றிக்கொண்டார்.
நெற்றியில் மங்களரமாக குங்குமப் பொட்டு சகிதம் சுரேஷ் செய்த 'பணிவிடை’கள் பிடித்துப்போனதால், அவரைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார் அமைச்சர். ஒரு கட்டத்தில் அங்கேயும் சிக்கலாகி, மீண்டும் மதுரைக்கு வந்தவருக்கு சென்னையில் கற்ற 'வித்தை’கள் நன்றாகவே கைகொடுத்தன.
மறைந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் வீட்டில் பசை தேடி ஒட்டிக்கொண்டார். ஏற்கெனவே 'கிரம்மர்’ சுரேஷ் (இப்போது இவர் அ.தி.மு.க-வில் இருக்கிறார்!) என்பவர் பி.டி.ஆர். முகாமில் இருந்தார். பி.டி.ஆர். ஒரு முறை, ''சுரேஷைக் கூப்பிடுங்கப்பா'' என்று சொல்ல, அங்கே இருந்தவர்கள் கிரம்மரை உள்ளே அனுப்பிவிட்டார்கள். ''இவன் இல்லப்பா... அந்த பொட்டு வெச்சிருக்கிற சுரேஷைக் கூப்பிடு!'' என்றார் பி.டி.ஆர். அதில் இருந்துதான், நைட்டி சுரேஷ் என்ற பஜ்ஜி சுரேஷ், 'பொட்டு சுரேஷ்’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தால் அழைக்கப்படலானார்.
பிறகு, பி.டி.ஆரை விட்டுப் பிரிந்த பொட்டு, அழகிரிக்கு நெருக்கமான
நாகேஷிடம் ஒட்டிக்கொண்டு, அப்படியே அழகிரியின் நிழலுக்குள் நுழைந்தார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஆறேழு மாதங்கள் கழித்துத்தான் பொட்டு சுரேஷ், அழகிரியின் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்தார். வழக்கமாக அழகிரி மூலமாக ஏதாவது காரியத்தை முடித்தால், அதில் வரும் நன்மையை தனக்கு இவ்வளவு, அண்ணனுக்கு இவ்வளவு என்றுதான், கட்சியினர் கணக்குப் பிரிப்பார்கள். ஆனால், எவ்வளவு கிடைத்தாலும், அதை அப்படியே அழகிரியிடம் கொடுத்துவிட்டு, ''செலவுக்கு ஏதாச்சும் குடுங்கண்ணே...'' என்று பணிவான பவ்யம் காட்டுவது பொட்டு ஸ்டைல். 'இவ்வளவு விசுவாசமாக்கிடக்கிறானே’ என அழகிரி மனதில் இடம் பிடித்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரையில் அழகிரிக்கு சொந்தமான 'தயா திருமண மஹால்’ கட்டி முடிக்கப்பட்டது. பொட்டுவின் தம்பி சரவணனின் திருமணம்தான், அங்கு நடந்த முதல் விசேஷம். தமிழகம் முழுவதிலும் இருந்து வி.ஐ.பி-க்கள் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். மொய் வரவு மட்டும் கோடிகளில் கொட்டியது. திருமணம் முடிந்த கையோடு அந்தப் பணத்தை மூட்டையாகக் கட்டிக்கொண்டு அழகிரியின் வீட்டுக்கு போனார் பொட்டு. உறக்கத்தில் இருந்த அழகிரியை எழுப்பி, அவருக்கு எதிரில் மூட்டையை அவிழ்த்தாராம். ''என்னய்யா இதெல்லாம்?'' என்றதற்கு, ''என் தம்பி கல்யாணத்துக்கு வந்த மொய்ப் பணம்ணே. இது எனக்கு வந்த பணம் இல்லைண்ணே... எனக்கு நீங்களா பார்த்துப் போட்ட பிச்சை!'' என்று கண்ணீர் மல்க காலில் விழுந்த கதை, மதுரையில் பிரபலம்.
அழகிரி அன்றே, ''பொட்டு எது சொன்னாலும், அது நான் சொன்னதாத்தான் அர்த்தம். அவரு சொல்றதை செஞ்சு குடுங்க; எங்கிட்ட கேக்கணும்கிறது இல்லை...'' என்று முதலமைச்சரின் தனிச் செயலாளருக்கே ஆர்டர் போட்டதாக ஒரு பரபரப்பான பேச்சும் மதுரையில் உண்டு. அழகிரியை இவர் நெருங்க நெருங்க... ஏற்கெனவே அழகிரியோடு நெருக்கமாக இருந்த பலர் விலக்கிவைக்கப்பட்டார்கள்.
இதை எல்லாம்வைத்துத்தான் அழகிரி முதலமைச்சர் என்றால், பொட்டு சுரேஷ் துணை முதலமைச்சர் என்று ஜெயலலிதா பட்டம் கொடுத்தார்!
- ஜூ.வி. க்ரைம் டீம்
ஆரம்பத்தில் இந்த சுரேஷ்பாபு, அ.தி.மு.க. அனுதாபி. நைட்டி வியாபாரம்தான் தொடக்கம். அப்போது சார் பேரே 'நைட்டி சுரேஷ்’தான். நைட்டி பிசினஸ் ஏனோ அலுத்துப்போனதால், மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஒரு டீக்கடை ஓரத்தில், பஜ்ஜிக் கடை போட்டார். ம்ஹூம்... அதுவும் போணி ஆகவில்லை.
'அமைதிப் படை’ படத்தில் சத்யராஜின் கேரக்டர்தான் சாருக்கு இன்ஸ்பிரேஷன். அரசியலில் இறங்கினார். 90-களில் அ.தி.மு.க. எம்.பி-க்களாக இருந்த ராஜன் செல்லப்பா, முத்துமணி ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்தார். 96-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சுறுசுறுப்பான பஜ்ஜி சுரேஷ், எப்படியோ நூல் பிடித்து அமைச்சர் பரிதி இளம்வழுதியைப் பற்றிக்கொண்டார்.
நெற்றியில் மங்களரமாக குங்குமப் பொட்டு சகிதம் சுரேஷ் செய்த 'பணிவிடை’கள் பிடித்துப்போனதால், அவரைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார் அமைச்சர். ஒரு கட்டத்தில் அங்கேயும் சிக்கலாகி, மீண்டும் மதுரைக்கு வந்தவருக்கு சென்னையில் கற்ற 'வித்தை’கள் நன்றாகவே கைகொடுத்தன.
மறைந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் வீட்டில் பசை தேடி ஒட்டிக்கொண்டார். ஏற்கெனவே 'கிரம்மர்’ சுரேஷ் (இப்போது இவர் அ.தி.மு.க-வில் இருக்கிறார்!) என்பவர் பி.டி.ஆர். முகாமில் இருந்தார். பி.டி.ஆர். ஒரு முறை, ''சுரேஷைக் கூப்பிடுங்கப்பா'' என்று சொல்ல, அங்கே இருந்தவர்கள் கிரம்மரை உள்ளே அனுப்பிவிட்டார்கள். ''இவன் இல்லப்பா... அந்த பொட்டு வெச்சிருக்கிற சுரேஷைக் கூப்பிடு!'' என்றார் பி.டி.ஆர். அதில் இருந்துதான், நைட்டி சுரேஷ் என்ற பஜ்ஜி சுரேஷ், 'பொட்டு சுரேஷ்’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தால் அழைக்கப்படலானார்.
பிறகு, பி.டி.ஆரை விட்டுப் பிரிந்த பொட்டு, அழகிரிக்கு நெருக்கமான
நாகேஷிடம் ஒட்டிக்கொண்டு, அப்படியே அழகிரியின் நிழலுக்குள் நுழைந்தார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஆறேழு மாதங்கள் கழித்துத்தான் பொட்டு சுரேஷ், அழகிரியின் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்தார். வழக்கமாக அழகிரி மூலமாக ஏதாவது காரியத்தை முடித்தால், அதில் வரும் நன்மையை தனக்கு இவ்வளவு, அண்ணனுக்கு இவ்வளவு என்றுதான், கட்சியினர் கணக்குப் பிரிப்பார்கள். ஆனால், எவ்வளவு கிடைத்தாலும், அதை அப்படியே அழகிரியிடம் கொடுத்துவிட்டு, ''செலவுக்கு ஏதாச்சும் குடுங்கண்ணே...'' என்று பணிவான பவ்யம் காட்டுவது பொட்டு ஸ்டைல். 'இவ்வளவு விசுவாசமாக்கிடக்கிறானே’ என அழகிரி மனதில் இடம் பிடித்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரையில் அழகிரிக்கு சொந்தமான 'தயா திருமண மஹால்’ கட்டி முடிக்கப்பட்டது. பொட்டுவின் தம்பி சரவணனின் திருமணம்தான், அங்கு நடந்த முதல் விசேஷம். தமிழகம் முழுவதிலும் இருந்து வி.ஐ.பி-க்கள் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். மொய் வரவு மட்டும் கோடிகளில் கொட்டியது. திருமணம் முடிந்த கையோடு அந்தப் பணத்தை மூட்டையாகக் கட்டிக்கொண்டு அழகிரியின் வீட்டுக்கு போனார் பொட்டு. உறக்கத்தில் இருந்த அழகிரியை எழுப்பி, அவருக்கு எதிரில் மூட்டையை அவிழ்த்தாராம். ''என்னய்யா இதெல்லாம்?'' என்றதற்கு, ''என் தம்பி கல்யாணத்துக்கு வந்த மொய்ப் பணம்ணே. இது எனக்கு வந்த பணம் இல்லைண்ணே... எனக்கு நீங்களா பார்த்துப் போட்ட பிச்சை!'' என்று கண்ணீர் மல்க காலில் விழுந்த கதை, மதுரையில் பிரபலம்.
அழகிரி அன்றே, ''பொட்டு எது சொன்னாலும், அது நான் சொன்னதாத்தான் அர்த்தம். அவரு சொல்றதை செஞ்சு குடுங்க; எங்கிட்ட கேக்கணும்கிறது இல்லை...'' என்று முதலமைச்சரின் தனிச் செயலாளருக்கே ஆர்டர் போட்டதாக ஒரு பரபரப்பான பேச்சும் மதுரையில் உண்டு. அழகிரியை இவர் நெருங்க நெருங்க... ஏற்கெனவே அழகிரியோடு நெருக்கமாக இருந்த பலர் விலக்கிவைக்கப்பட்டார்கள்.
இதை எல்லாம்வைத்துத்தான் அழகிரி முதலமைச்சர் என்றால், பொட்டு சுரேஷ் துணை முதலமைச்சர் என்று ஜெயலலிதா பட்டம் கொடுத்தார்!
- ஜூ.வி. க்ரைம் டீம்
கிளம்பிட்டாங்க ஐயா! கிளம்பிட்டாங்க............
ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. மீது திடுக் புகார்
திரும்பிய பக்கம் எல்லாம் தி.மு.க. பிரமுகர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு கள். ஆனால், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலோ, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.வீரமணி மீது புகார் கிளம்பிக் கிடுகிடுக்கிறது.
புகார் கொடுத்த செந்தில்குமார் ஜோலார் பேட்டையை சேர்ந்தவர். அவரை சந்தித்தோம். ''நான் கடந்த மூணு வருஷமா பெப்சி டீலர்ஷிப் எடுத்து, திருப்பத்தூர், ஏலகிரி, நாட்றாம்பள்ளிக்கு சப்ளை பண்ணிட்டு வர்றேன். போன மே மாசம் நான் ஏலகிரியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய என்னுடைய வண்டியில் போனேன். அப்போது அங்கே இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ்காரங்க என்கிட்ட, 'இனி கடைக்காரங்க மட்டும் இல்லை. உங்களை மாதிரி டீலர்களும் மாமூல் கொடுத்தாகணும்’னு சொன்னாங்க. 'என்னால் மாமூல் தர முடியாது’ன்னு அப்பவே கட் அண்ட் ரைட்டா சொன்னேன். உடனே அவங்க கோபமாகி, அந்த இடத்திலேயே என்னை அடிச்சாங்க. நான் ஏலகிரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தேன். அதுக்கு பிறகுதான் எம்.எல்.ஏ. வீரமணி என்கிட்ட பிரச்னைக்கு வந்தார்.
'போலீஸ்ல கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு! அவங்களை மீறி நீ ஏலகிரியில் வியாபாரம் செய்ய முடியாது.’னு மிரட்டினார். என்னை அடிச்சவங்க மேல் நான் புகார் கொடுத்து இருக்கேன், எதுக்காக வாபஸ் வாங்கணும்? முடியாதுனு சொல்லிட்டேன்.
கடந்த 18-ம் தேதி இரவு எங்க வீட்டுக்கு சிலர் வந்தாங்க. 'எம்.எல்.ஏ. உன்னை கூட்டிட்டு வரச் சொன்னார், வா...’ன்னு கூப்பிட்டாங்க. நானும் எம்.எல்.ஏ. வீட்டுக்குப் போனேன். அவர் வீட்டுல ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரோஜினி, அசோக்குமார் இருந்தாங்க.
'நான் அவ்வளவு தூரம் சொல்லியும், நீ ஏன் ஏலகிரியில் கொடுத்த கேஸை வாபஸ் வாங்கலை?’னு எம்.எல்.ஏ. என்கிட்ட கேட்டார். 'என்னை அடிச்ச துக்கு நான் புகார் கொடுத்திருக்கேன். அதை வாபஸ் வாங்கச் சொல்லி, நீங்க எதுக்கு தொல்லை கொடுக்குறீங்க?’னு கேட்டேன்.
'நீ நான் சொல்றதைக் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறியா? சரி... அதை நீ வாபஸ் வாங் கலைன்னா பரவாயில்லை. நாட்றாம்பள்ளியில் உனக்கு 1,200 சதுரஅடி நிலம் இருக்குல்ல... அது எனக்குத் தேவைப்படுது. அதுக்கு என்ன ரேட்டோ, அதை வாங்கிட்டு எனக்கு எழுதிக் கொடுத்துடு’ன்னு எம்.எல்.ஏ. கேட்டார். எனக்கு தூக்கி வாரிப்போட்டுச்சு. 'என்னோட நிலத்தை நான் விற்கிற ஐடியா இல்லைங்க’னு சொன்னதும் எம்.எல்.ஏ-வுக்கு கோபம் வந்துடுச்சு. 'நான் பொறுமையா இருக்கேன். என்னை சோதிக்காதே. இன்னும் 10 நாள்தான். அப்புறம் நான் மந்திரி ஆகிடுவேன். அதுக்குப் பிறகு, உன் குடும்பத்தையே காலி பண்ணிடுவேன். உன் மேலேயும் உன் குடும்பத்தார் மேலேயும் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ள, எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? நான் சொன்னா, இந்த இன்ஸ்பெக்டர் செய்ய மாட்டார்னு நினைக்கிறியா... என்னய்யா செய்வேல்ல?’னு இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் கேட்டார். உடனே அவர், 'செஞ்சிடலாம் சார்’னு சொன்னார். அந்த இடத்தில் என்ன பண்றதுனு எனக்குத் தெரியலை. தப்பிச்சாப் போதும்னு தலையை ஆட்டிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன். அதுக்குப் பிறகு தினமும் எனக்கு மிரட்டல் வந்துட்டே இருக்கு. தி.மு.க. ஆட்சியில் இப்படி நடந்த விஷயங்களைத் தோண்டி எடுத்துத்தான் முதல்வர் கேஸ் போடச் சொல்லி இருக்காங்க. ஆனா, அவங்க கட்சி எம்.எல்.ஏ. ஒருத்தரே இப்படி கட்டப்பஞ்சாயத்து பண்ற கொடுமையை நாங்க எங்கே போய் சொல்றது? ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனே எம்.எல்.ஏ. வீட்டுலதான் நடக்குது. அப்புறம் எப்படி நான் போலீஸுக்குப் போறது?'' என்று வேதனையோடு கேட்டார்.
ஜோலார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான கே.சி.வீரமணியிடம் குற்றச்சாட்டு களைச் சொல்லி விளக்கம் கேட்டோம். ''அந்த ஆளு சொல்ற மாதிரி எல்லாம் நான் மிரட்டக் கிடையாதுங்க. என்னைப்பற்றி ஜோலார்பேட்டையில் விசாரிச்சுப் பாருங்க. மக்களே உங்களுக்குச் சொல்லுவாங்க. புகார் கொடுத்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அதான், என் மீது பழி போடுறார். தொகுதி மக்களை சந்திக்கவும், கட்சிப் பணி ஆற்றவுமே எனக்கு நேரம் சரியா இருக்குது. இதுல கட்டப்பஞ்சாயத்து பண்ண எங்கே நேரம் இருக்கு? எனக்குத் தேவையான அளவு சொத்து இருக்கு. நான் எதுக்கு மத்தவங்க நிலத்தை அபகரிக்க நினைக்கப்போறேன்? என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காம சிலர் அவரைத் தூண்டிவிடுறாங்கனு நினைக்கிறேன். அது யாருன்னு நானே விரைவில் கண்டுபிடிக்கிறேன்...'' என்று சொன்னார்.
பிரச்னையில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக் டர் ராஜேந்திரனிடம் பேசினோம். ''எம்.எல்.ஏ. வீட்டுக்கு நாங்க போனது உண்மைதான். ஆனா, அவர் சொல்ற மாதிரி எந்த சம்பவமும் அங்கே நடக்கவில்லை. எதுக்காக இப்படி ஒரு தப்பான தகவலை சொல்லி இருக்கிறார்னு விசாரிக்கிறேன்!'' என்றார்.
பிரச்னையில் ஜோலார்பேட்டை போலீஸ் சிக்கி இருப்பதால், வேறு போலீஸ் டீம் இந்த விவகாரத்தை விசாரிப்பது நல்லது!
நன்றி: ஜூனியர் விகடன்
திரும்பிய பக்கம் எல்லாம் தி.மு.க. பிரமுகர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு கள். ஆனால், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலோ, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.வீரமணி மீது புகார் கிளம்பிக் கிடுகிடுக்கிறது.
புகார் கொடுத்த செந்தில்குமார் ஜோலார் பேட்டையை சேர்ந்தவர். அவரை சந்தித்தோம். ''நான் கடந்த மூணு வருஷமா பெப்சி டீலர்ஷிப் எடுத்து, திருப்பத்தூர், ஏலகிரி, நாட்றாம்பள்ளிக்கு சப்ளை பண்ணிட்டு வர்றேன். போன மே மாசம் நான் ஏலகிரியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய என்னுடைய வண்டியில் போனேன். அப்போது அங்கே இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ்காரங்க என்கிட்ட, 'இனி கடைக்காரங்க மட்டும் இல்லை. உங்களை மாதிரி டீலர்களும் மாமூல் கொடுத்தாகணும்’னு சொன்னாங்க. 'என்னால் மாமூல் தர முடியாது’ன்னு அப்பவே கட் அண்ட் ரைட்டா சொன்னேன். உடனே அவங்க கோபமாகி, அந்த இடத்திலேயே என்னை அடிச்சாங்க. நான் ஏலகிரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தேன். அதுக்கு பிறகுதான் எம்.எல்.ஏ. வீரமணி என்கிட்ட பிரச்னைக்கு வந்தார்.
'போலீஸ்ல கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு! அவங்களை மீறி நீ ஏலகிரியில் வியாபாரம் செய்ய முடியாது.’னு மிரட்டினார். என்னை அடிச்சவங்க மேல் நான் புகார் கொடுத்து இருக்கேன், எதுக்காக வாபஸ் வாங்கணும்? முடியாதுனு சொல்லிட்டேன்.
கடந்த 18-ம் தேதி இரவு எங்க வீட்டுக்கு சிலர் வந்தாங்க. 'எம்.எல்.ஏ. உன்னை கூட்டிட்டு வரச் சொன்னார், வா...’ன்னு கூப்பிட்டாங்க. நானும் எம்.எல்.ஏ. வீட்டுக்குப் போனேன். அவர் வீட்டுல ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரோஜினி, அசோக்குமார் இருந்தாங்க.
'நான் அவ்வளவு தூரம் சொல்லியும், நீ ஏன் ஏலகிரியில் கொடுத்த கேஸை வாபஸ் வாங்கலை?’னு எம்.எல்.ஏ. என்கிட்ட கேட்டார். 'என்னை அடிச்ச துக்கு நான் புகார் கொடுத்திருக்கேன். அதை வாபஸ் வாங்கச் சொல்லி, நீங்க எதுக்கு தொல்லை கொடுக்குறீங்க?’னு கேட்டேன்.
'நீ நான் சொல்றதைக் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறியா? சரி... அதை நீ வாபஸ் வாங் கலைன்னா பரவாயில்லை. நாட்றாம்பள்ளியில் உனக்கு 1,200 சதுரஅடி நிலம் இருக்குல்ல... அது எனக்குத் தேவைப்படுது. அதுக்கு என்ன ரேட்டோ, அதை வாங்கிட்டு எனக்கு எழுதிக் கொடுத்துடு’ன்னு எம்.எல்.ஏ. கேட்டார். எனக்கு தூக்கி வாரிப்போட்டுச்சு. 'என்னோட நிலத்தை நான் விற்கிற ஐடியா இல்லைங்க’னு சொன்னதும் எம்.எல்.ஏ-வுக்கு கோபம் வந்துடுச்சு. 'நான் பொறுமையா இருக்கேன். என்னை சோதிக்காதே. இன்னும் 10 நாள்தான். அப்புறம் நான் மந்திரி ஆகிடுவேன். அதுக்குப் பிறகு, உன் குடும்பத்தையே காலி பண்ணிடுவேன். உன் மேலேயும் உன் குடும்பத்தார் மேலேயும் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ள, எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? நான் சொன்னா, இந்த இன்ஸ்பெக்டர் செய்ய மாட்டார்னு நினைக்கிறியா... என்னய்யா செய்வேல்ல?’னு இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் கேட்டார். உடனே அவர், 'செஞ்சிடலாம் சார்’னு சொன்னார். அந்த இடத்தில் என்ன பண்றதுனு எனக்குத் தெரியலை. தப்பிச்சாப் போதும்னு தலையை ஆட்டிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன். அதுக்குப் பிறகு தினமும் எனக்கு மிரட்டல் வந்துட்டே இருக்கு. தி.மு.க. ஆட்சியில் இப்படி நடந்த விஷயங்களைத் தோண்டி எடுத்துத்தான் முதல்வர் கேஸ் போடச் சொல்லி இருக்காங்க. ஆனா, அவங்க கட்சி எம்.எல்.ஏ. ஒருத்தரே இப்படி கட்டப்பஞ்சாயத்து பண்ற கொடுமையை நாங்க எங்கே போய் சொல்றது? ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனே எம்.எல்.ஏ. வீட்டுலதான் நடக்குது. அப்புறம் எப்படி நான் போலீஸுக்குப் போறது?'' என்று வேதனையோடு கேட்டார்.
ஜோலார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான கே.சி.வீரமணியிடம் குற்றச்சாட்டு களைச் சொல்லி விளக்கம் கேட்டோம். ''அந்த ஆளு சொல்ற மாதிரி எல்லாம் நான் மிரட்டக் கிடையாதுங்க. என்னைப்பற்றி ஜோலார்பேட்டையில் விசாரிச்சுப் பாருங்க. மக்களே உங்களுக்குச் சொல்லுவாங்க. புகார் கொடுத்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அதான், என் மீது பழி போடுறார். தொகுதி மக்களை சந்திக்கவும், கட்சிப் பணி ஆற்றவுமே எனக்கு நேரம் சரியா இருக்குது. இதுல கட்டப்பஞ்சாயத்து பண்ண எங்கே நேரம் இருக்கு? எனக்குத் தேவையான அளவு சொத்து இருக்கு. நான் எதுக்கு மத்தவங்க நிலத்தை அபகரிக்க நினைக்கப்போறேன்? என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காம சிலர் அவரைத் தூண்டிவிடுறாங்கனு நினைக்கிறேன். அது யாருன்னு நானே விரைவில் கண்டுபிடிக்கிறேன்...'' என்று சொன்னார்.
பிரச்னையில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக் டர் ராஜேந்திரனிடம் பேசினோம். ''எம்.எல்.ஏ. வீட்டுக்கு நாங்க போனது உண்மைதான். ஆனா, அவர் சொல்ற மாதிரி எந்த சம்பவமும் அங்கே நடக்கவில்லை. எதுக்காக இப்படி ஒரு தப்பான தகவலை சொல்லி இருக்கிறார்னு விசாரிக்கிறேன்!'' என்றார்.
பிரச்னையில் ஜோலார்பேட்டை போலீஸ் சிக்கி இருப்பதால், வேறு போலீஸ் டீம் இந்த விவகாரத்தை விசாரிப்பது நல்லது!
நன்றி: ஜூனியர் விகடன்
கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!-- நல்ல ஜோக், நன்றி: சிநேகிதன்
அண்ணே! இது நல்லதில்லண்ணே நல்லதில்ல... ஏண்ணே எம்மேல இம்புட்டு கோவம்? அப்டி என்ன சொல்லிபுட்டேன்னு கொலவெறியோட அலையிறே நீயி... அப்டியே அடிக்கிறதா இருந்தாலும் நேர்ல வந்து அடி... யார் கேட்பா?.. வாரவன் போறவம்லாம் அடிச்சிட்டு போம்போது என் அண்ணன் நீ, உனக்கு அடிக்க உரிமையில்லையா?! நீ எம்புட்டு அடிச்சாலும் தாங்குவேம்ணே அத விட்டுட்டு சின்னபுள்ளதனமா ஆளை வச்சு அடிக்க சொல்றியே... பெரிய மனுஷன் பண்ற காரியமாயா இது?....
உனக்கும் எனக்கும் பிரச்சனை இருந்ததென்னவோ உண்மைதான், ஆனா உன்னைய தேர்தல்ல எதிர்ப்பேன்னு சும்மா ஒரு பேச்சுக்குதாண்ணே சொன்னேன். அதை நம்பி பயபுள்ளைக திடீர்னு ஒரு நா வந்து நீயும் ரவுடிதான் ஜீப்ல ஏறுன்னுட்டாங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த்தில்லையான்னு சொன்னாலும் ஒருத்தன் கேக்கலையே... சரி விடு ஆனது ஆயிபோச்சு ஹிஸ்டிடில நம்ம பேரும் வரட்டும்னு நெனச்சி சரின்னு தலையாட்டுனேன்.
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதூன்னு பிரச்சாரத்துக்கு போனா... சும்மா சொல்லப்பிடாது நம்ம மக்கள் பாசக்கார பயபுள்ளைகண்ணே... போற எடம்மெல்லாம் கூட்டமா கூடி உசுப்பேத்தி விட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா இப்பதான் தெரியுது என்னை ரணகளமாக்கத்தான் கூடியிருக்காங்கன்னு.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அப்போ அங்கே பேசுனதெல்லாம் உனக்கு கெட்டதா தெரியும். ஆனா நல்லா யோசிச்சி பார்ண்ணே. நான் உனக்கு செஞ்சது எல்லாமே நல்லதுதாண்ணே.
உன்ன குடிகாரன்னேன் எதுக்கு?... தமிழ் நாட்ல முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடதான் இருக்கு. நாட்டுல முக்காவாசி பேரு குடிகாரன்தான் (மன்னிச்சுகிங்கையா ஒரு ஃப்லோல வந்துடுச்சி இனிமே குடிகாரர்னே சொல்றேன் நீங்களும் கெளம்பி வந்து கும்மிராதிங்க)... நான் உன்னை குடிகாரர்னு அடையாளம் காட்ட போய்தான்...அத்தனை பேரும், ஓ நம்மாளு... இவரு செயிச்சா நமக்கும் ஏதாவது செய்வாருன்னு நினைச்சு அவன்பாட்டுக்கு "ஙங்கு ஙங்குன்னு" குத்தி தள்ளி, உன்னை ஜெயிக்கவச்சான். ஞாயப்படி எனக்கு நன்றி சொல்லி மாலை போட்டு தூக்கி வச்சி ஆடணுமாக்கும் நீ....அத விட்டுட்டு அடிக்க வர்றாராமாம் அடிக்க...
அப்புறம் எதிர் கட்சி டிவில என்னிக்காவது உன்னய காட்டியிருக்காங்களா?... ஆனா தேர்தல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்க தலிவர டிவில காட்னத விட உன்ன பத்தி காட்னதுதாண்ணே அதிகம். அதுக்கெல்லாம் காரணம் இந்த கைப்புள்ளங்கிறதையே மறந்துட்டு பேசுறே நீ.
நான் எதிர்த்தவன்லாம் வீணா போனதா சரித்திரமே இல்லைண்ணே. ஒத்த எம்மெல்ஏ.வா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு இம்புட்டு எம்மெல்ஏ எப்படிகிடைச்சாங்க அப்படிங்கிறதை யோசிச்சு பார்த்தேன்னா இம்புட்டு கோவம் வராது உனக்கு.
இது தெரிஞ்சுகிட்டுதான் நம்ம சிங்கும், ஒபாமாவும் அடுத்த எலெக்ஷனுக்கு அவங்களுக்கு எதிரா பேசச்சொல்லி இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணியிருக்காங்க.... வேணும்னா நீயும் ஒன்னு போட்டுக்கோ.
அத விட்டுட்டு அடிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு அலையிற நீயி. உனக்கு ஆசையாயிருந்த பார்டர்ல போயி தீவிரவாதியை பிடி, தெருவுல போற ரவுடியை அடி ஆனா இந்த பச்ச மண்ண போயி அடிக்கணும்னு நெனக்கிறியே வெக்கமாயில்லை... உன்னைய நினைச்சா சிப்பு சிப்பாத்தான்யா வருது.
ஆனா ஒன்னுண்ணே யார் என்னை சீண்டுனாலும், போங்கடான்னு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருந்தப்பல்லாம் இம்பூட்டு பிரச்சனை இல்லண்ணே. என்னைக்கு திரும்பி சீண்டனூம்னு நினைச்சனோ அன்னியிலிருந்துதான் பிரச்சனை. எல்லாத்தையும் சிரிக்க வச்ச எம்பொழப்பு இன்னிக்கு சிரிப்பா சிரிக்கிது...
அப்புறம் இன்னொரு விசயம்... ஸ்..ஸ்ஸ்ஸ்.. காத பக்கத்துல கொண்டா... அந்த கட்சியினாலதான் நீ செயிச்சேன்னு சொன்னேன்ல அது சும்ம பேச்சுக்கு... உன்ன உசுப்பேத்தி உடுறதுக்காகத்தான் அப்படி சொன்னேன்...
ம்ம்ம்ம்... உங்களையெல்லாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் பொழப்பு ரணகளாமாகி கிடக்கு...
உனக்கும் எனக்கும் பிரச்சனை இருந்ததென்னவோ உண்மைதான், ஆனா உன்னைய தேர்தல்ல எதிர்ப்பேன்னு சும்மா ஒரு பேச்சுக்குதாண்ணே சொன்னேன். அதை நம்பி பயபுள்ளைக திடீர்னு ஒரு நா வந்து நீயும் ரவுடிதான் ஜீப்ல ஏறுன்னுட்டாங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த்தில்லையான்னு சொன்னாலும் ஒருத்தன் கேக்கலையே... சரி விடு ஆனது ஆயிபோச்சு ஹிஸ்டிடில நம்ம பேரும் வரட்டும்னு நெனச்சி சரின்னு தலையாட்டுனேன்.
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதூன்னு பிரச்சாரத்துக்கு போனா... சும்மா சொல்லப்பிடாது நம்ம மக்கள் பாசக்கார பயபுள்ளைகண்ணே... போற எடம்மெல்லாம் கூட்டமா கூடி உசுப்பேத்தி விட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா இப்பதான் தெரியுது என்னை ரணகளமாக்கத்தான் கூடியிருக்காங்கன்னு.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அப்போ அங்கே பேசுனதெல்லாம் உனக்கு கெட்டதா தெரியும். ஆனா நல்லா யோசிச்சி பார்ண்ணே. நான் உனக்கு செஞ்சது எல்லாமே நல்லதுதாண்ணே.
உன்ன குடிகாரன்னேன் எதுக்கு?... தமிழ் நாட்ல முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடதான் இருக்கு. நாட்டுல முக்காவாசி பேரு குடிகாரன்தான் (மன்னிச்சுகிங்கையா ஒரு ஃப்லோல வந்துடுச்சி இனிமே குடிகாரர்னே சொல்றேன் நீங்களும் கெளம்பி வந்து கும்மிராதிங்க)... நான் உன்னை குடிகாரர்னு அடையாளம் காட்ட போய்தான்...அத்தனை பேரும், ஓ நம்மாளு... இவரு செயிச்சா நமக்கும் ஏதாவது செய்வாருன்னு நினைச்சு அவன்பாட்டுக்கு "ஙங்கு ஙங்குன்னு" குத்தி தள்ளி, உன்னை ஜெயிக்கவச்சான். ஞாயப்படி எனக்கு நன்றி சொல்லி மாலை போட்டு தூக்கி வச்சி ஆடணுமாக்கும் நீ....அத விட்டுட்டு அடிக்க வர்றாராமாம் அடிக்க...
அப்புறம் எதிர் கட்சி டிவில என்னிக்காவது உன்னய காட்டியிருக்காங்களா?... ஆனா தேர்தல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்க தலிவர டிவில காட்னத விட உன்ன பத்தி காட்னதுதாண்ணே அதிகம். அதுக்கெல்லாம் காரணம் இந்த கைப்புள்ளங்கிறதையே மறந்துட்டு பேசுறே நீ.
நான் எதிர்த்தவன்லாம் வீணா போனதா சரித்திரமே இல்லைண்ணே. ஒத்த எம்மெல்ஏ.வா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு இம்புட்டு எம்மெல்ஏ எப்படிகிடைச்சாங்க அப்படிங்கிறதை யோசிச்சு பார்த்தேன்னா இம்புட்டு கோவம் வராது உனக்கு.
இது தெரிஞ்சுகிட்டுதான் நம்ம சிங்கும், ஒபாமாவும் அடுத்த எலெக்ஷனுக்கு அவங்களுக்கு எதிரா பேசச்சொல்லி இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணியிருக்காங்க.... வேணும்னா நீயும் ஒன்னு போட்டுக்கோ.
அத விட்டுட்டு அடிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு அலையிற நீயி. உனக்கு ஆசையாயிருந்த பார்டர்ல போயி தீவிரவாதியை பிடி, தெருவுல போற ரவுடியை அடி ஆனா இந்த பச்ச மண்ண போயி அடிக்கணும்னு நெனக்கிறியே வெக்கமாயில்லை... உன்னைய நினைச்சா சிப்பு சிப்பாத்தான்யா வருது.
ஆனா ஒன்னுண்ணே யார் என்னை சீண்டுனாலும், போங்கடான்னு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருந்தப்பல்லாம் இம்பூட்டு பிரச்சனை இல்லண்ணே. என்னைக்கு திரும்பி சீண்டனூம்னு நினைச்சனோ அன்னியிலிருந்துதான் பிரச்சனை. எல்லாத்தையும் சிரிக்க வச்ச எம்பொழப்பு இன்னிக்கு சிரிப்பா சிரிக்கிது...
அப்புறம் இன்னொரு விசயம்... ஸ்..ஸ்ஸ்ஸ்.. காத பக்கத்துல கொண்டா... அந்த கட்சியினாலதான் நீ செயிச்சேன்னு சொன்னேன்ல அது சும்ம பேச்சுக்கு... உன்ன உசுப்பேத்தி உடுறதுக்காகத்தான் அப்படி சொன்னேன்...
ம்ம்ம்ம்... உங்களையெல்லாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் பொழப்பு ரணகளாமாகி கிடக்கு...
தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள்: ( ஜோக் )
நாளை, ஜூலை 24ம் தேதி மாலை கோவையில் நடக்கும் பொதுக்குழுவின் தீர்மான நகல் தமிழ் லீடருக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இதை அனுப்பி வைத்த ‘உடன்பிறப்புக்கு’ நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்தீர்மானங்களை பிரத்யேகமாக வெளியிடுவதில் தமிழ் லீடர் பெருமை கொள்கிறது.
தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள்:
1. 120 தொகுதிகளில் திமுக கூட்டணி ஜெயிக்கும் என்றும், 2-ஜி வழக்கில் கனிமொழிக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் இறுதி வரை நம்பிக்கை அளித்து, இன்று தி.மு.க.வை முச்சந்தியில் நிறுத்தியிருக்கும் கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கான காரணங்களை நன்றாக ஆராய்ந்த போது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும்பாலான ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட்டதே காரணம் என்பது தெரிய வந்தது. நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றமே என்று சொல்லும் இதழைப் போல இல்லாமல், மற்ற ஊடகங்கள் திமுகவின் ஊழல்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வந்ததால் மக்கள் மனதில் தி.மு.க. மீது வெறுப்பு உண்டாகியது. இதற்கு காரணமான அனைத்து ஊடகங்களையும் இந்தப் பொதுக்குழு கடுமையாக கண்டிக்கிறது.
< நில அபகரிப்பு மோசடி வழக்கில் கைது நடவடிக்கைகள் தொடங்கினால் உத்தேசமாக எடுத்த கணக்கின் படி, வெறும் 18 தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள் என்பதால், நில அபகரிப்பு பிரிவு சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் அ.தி.மு.க. அரசின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை மன்றாடி மீண்டும் மீண்டும் மன்றாடி இந்த பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
4. நில அபகரிப்பு சட்டப் பிரிவின் கீழ் முன்னாள் அமைச்சர்கள் கோசி.மணி,
வெள்ளக்கோவில் சாமிநாதன், பாளையங்கோட்டை மைதீன்கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
5. காவல்துறை தனது கடமையை சரிவரச் செய்து, நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்திருந்தால், இந்தப் பொதுக்குழுவில், திமுக தலைவரும், பொதுச் செயலாளரும் மட்டுமே இருந்திருப்பார்கள். அவ்வாறு செய்யாத காரணத்தால் தான் இந்தப் பொதுக்குழுவுக்கு இத்தனை உறுப்பினர்கள் வருகை தர முடிந்தது. இதற்காக தமிழக காவல்துறைக்கு பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
6. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்டால் மீண்டும் கடும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதாலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடிய திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருப்பதனாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் விட்டுக் கொடுக்கிறோம் என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
karunanidhi-in-pattu-vaetti-sattai7. தென் மண்டல அமைப்பை மாற்றக் கூடாது என்று அழகிரிக்கு ஆதரவாக பேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு போக மாட்டார்கள் என்று உறுதி கொடுத்ததால் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை தொடர்ந்து நீட்டிக்க இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
8. ஒரு குடும்ப ஆதிக்கத்தால் திமுக தோற்கவில்லை என்று பேசிய 1823 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திமுக தலைமை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
9. நமது கட்சித் தொண்டர்கள் மீதும் நமக்கு உறுதுணையாக இருக்கும் சன் டிவி நிறுவனத்தார் மீதும் தொடரப்படும் வழக்குகளுக்கான செலவுகளை மத்திய அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் அவர்களும், கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆகியோர் ஏற்றுக் கொள்வதாக அளித்த வாக்குறுதிக்கு நன்றி தெரிவிக்கப்jayafast படுகிறது.
10. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தனக்கு வேண்டாமென்றும் திகார் சிறையில் தொடர்ந்து இருக்க சம்மதம் தெரிவித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கடிதம் அனுப்பியிருப்பதால், அப்பதவியில் இருந்து அவர் விலக்கப்படுகிறார்.
தலைவர் கலைஞருக்கு கண்ணுக்கு கண்ணாக இருந்து பணிவிடை செய்து வரும் நித்தி என்கிற நித்யானந்தத்துக்கு அந்தப் பதவியை வழங்க பொதுக்குழு தீர்மானிக்கிறது.
11. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று திமுகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும், கரை வேட்டிகளை அவிழ்த்து வைத்து விட்டு, மாறு வேடத்தில் சுற்றியபோதும், திமுக சார்பாக அன்று தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் குஷ்பூ அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
12. இந்தியா முழுவதிலும் இருக்கும் கோயில்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். பின்னர் அக்கோயில்களை நிர்வகிக்க இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தி, அதற்கு ஓர் கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி உருவாக்க வேண்டும். அப்பதவியை தி.மு.க.வுக்கு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
13. வைகைப் புயல் வடிவேலுவுக்கு சிறப்பு அழைப்பு அனுப்பியும் அவருக்கு அழைப்பிதழ் போய் சேரவில்லை. மேலும், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்து வருவதாக தெரிகிறது. ’தினந்தோறும் வடிவலு’ என்ற தொடர் கலைஞர் டிவியில் அவருக்காக கொண்டு வர வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.(அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது)
14. தி.மு.க.வின் தலைவராக இருந்து வரும் கலைஞருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் மனைவி துர்கா கூட, இதற்கு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் கலைஞரே தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என்று இந்தப் பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிப்பதோடு, 2016ல் கருணாநிதியை ஆறாவது முறை முதல்வராக அமர்த்தியே தீர்வது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது. (பலத்த கைத்தட்டல். அக்கைத்தட்டல் 27 நிமிடங்கள் 18 வினாடிகள் நீடித்தது).
-இந்த 14 தீர்மானங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற பொதுக்குழு முடிவு செய்திருப்பதாக நமக்கு ஓர் உடன்பிறப்பு, அதன் விவரங்களை அப்படியே அனுப்பி வைத்திருக்கிறார்.
இத்தீர்மானங்கள், அப்படியே தி.மு.க. இயற்றப்போகும் தீர்மானங்களுடன் ஒத்துப்போனால், அது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே. பொதுக்குழுவுக்கு முன்பாக, தீர்மானம் கசிந்துவிட்டதே, என்று நினைத்து தி.மு.க. தலைமை அதை மாற்றிவிட்டாலும் தமிழ் லீடருக்கு மகிழ்ச்சியே.
தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள்:
1. 120 தொகுதிகளில் திமுக கூட்டணி ஜெயிக்கும் என்றும், 2-ஜி வழக்கில் கனிமொழிக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் இறுதி வரை நம்பிக்கை அளித்து, இன்று தி.மு.க.வை முச்சந்தியில் நிறுத்தியிருக்கும் கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கான காரணங்களை நன்றாக ஆராய்ந்த போது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும்பாலான ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட்டதே காரணம் என்பது தெரிய வந்தது. நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றமே என்று சொல்லும் இதழைப் போல இல்லாமல், மற்ற ஊடகங்கள் திமுகவின் ஊழல்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வந்ததால் மக்கள் மனதில் தி.மு.க. மீது வெறுப்பு உண்டாகியது. இதற்கு காரணமான அனைத்து ஊடகங்களையும் இந்தப் பொதுக்குழு கடுமையாக கண்டிக்கிறது.
< நில அபகரிப்பு மோசடி வழக்கில் கைது நடவடிக்கைகள் தொடங்கினால் உத்தேசமாக எடுத்த கணக்கின் படி, வெறும் 18 தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள் என்பதால், நில அபகரிப்பு பிரிவு சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் அ.தி.மு.க. அரசின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை மன்றாடி மீண்டும் மீண்டும் மன்றாடி இந்த பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
4. நில அபகரிப்பு சட்டப் பிரிவின் கீழ் முன்னாள் அமைச்சர்கள் கோசி.மணி,
வெள்ளக்கோவில் சாமிநாதன், பாளையங்கோட்டை மைதீன்கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
5. காவல்துறை தனது கடமையை சரிவரச் செய்து, நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்திருந்தால், இந்தப் பொதுக்குழுவில், திமுக தலைவரும், பொதுச் செயலாளரும் மட்டுமே இருந்திருப்பார்கள். அவ்வாறு செய்யாத காரணத்தால் தான் இந்தப் பொதுக்குழுவுக்கு இத்தனை உறுப்பினர்கள் வருகை தர முடிந்தது. இதற்காக தமிழக காவல்துறைக்கு பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
6. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்டால் மீண்டும் கடும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதாலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடிய திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருப்பதனாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் விட்டுக் கொடுக்கிறோம் என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
karunanidhi-in-pattu-vaetti-sattai7. தென் மண்டல அமைப்பை மாற்றக் கூடாது என்று அழகிரிக்கு ஆதரவாக பேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு போக மாட்டார்கள் என்று உறுதி கொடுத்ததால் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை தொடர்ந்து நீட்டிக்க இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
8. ஒரு குடும்ப ஆதிக்கத்தால் திமுக தோற்கவில்லை என்று பேசிய 1823 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திமுக தலைமை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
9. நமது கட்சித் தொண்டர்கள் மீதும் நமக்கு உறுதுணையாக இருக்கும் சன் டிவி நிறுவனத்தார் மீதும் தொடரப்படும் வழக்குகளுக்கான செலவுகளை மத்திய அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் அவர்களும், கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆகியோர் ஏற்றுக் கொள்வதாக அளித்த வாக்குறுதிக்கு நன்றி தெரிவிக்கப்jayafast படுகிறது.
10. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தனக்கு வேண்டாமென்றும் திகார் சிறையில் தொடர்ந்து இருக்க சம்மதம் தெரிவித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கடிதம் அனுப்பியிருப்பதால், அப்பதவியில் இருந்து அவர் விலக்கப்படுகிறார்.
தலைவர் கலைஞருக்கு கண்ணுக்கு கண்ணாக இருந்து பணிவிடை செய்து வரும் நித்தி என்கிற நித்யானந்தத்துக்கு அந்தப் பதவியை வழங்க பொதுக்குழு தீர்மானிக்கிறது.
11. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று திமுகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும், கரை வேட்டிகளை அவிழ்த்து வைத்து விட்டு, மாறு வேடத்தில் சுற்றியபோதும், திமுக சார்பாக அன்று தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் குஷ்பூ அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
12. இந்தியா முழுவதிலும் இருக்கும் கோயில்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். பின்னர் அக்கோயில்களை நிர்வகிக்க இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தி, அதற்கு ஓர் கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி உருவாக்க வேண்டும். அப்பதவியை தி.மு.க.வுக்கு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
13. வைகைப் புயல் வடிவேலுவுக்கு சிறப்பு அழைப்பு அனுப்பியும் அவருக்கு அழைப்பிதழ் போய் சேரவில்லை. மேலும், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்து வருவதாக தெரிகிறது. ’தினந்தோறும் வடிவலு’ என்ற தொடர் கலைஞர் டிவியில் அவருக்காக கொண்டு வர வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.(அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது)
14. தி.மு.க.வின் தலைவராக இருந்து வரும் கலைஞருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் மனைவி துர்கா கூட, இதற்கு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் கலைஞரே தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என்று இந்தப் பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிப்பதோடு, 2016ல் கருணாநிதியை ஆறாவது முறை முதல்வராக அமர்த்தியே தீர்வது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது. (பலத்த கைத்தட்டல். அக்கைத்தட்டல் 27 நிமிடங்கள் 18 வினாடிகள் நீடித்தது).
-இந்த 14 தீர்மானங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற பொதுக்குழு முடிவு செய்திருப்பதாக நமக்கு ஓர் உடன்பிறப்பு, அதன் விவரங்களை அப்படியே அனுப்பி வைத்திருக்கிறார்.
இத்தீர்மானங்கள், அப்படியே தி.மு.க. இயற்றப்போகும் தீர்மானங்களுடன் ஒத்துப்போனால், அது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே. பொதுக்குழுவுக்கு முன்பாக, தீர்மானம் கசிந்துவிட்டதே, என்று நினைத்து தி.மு.க. தலைமை அதை மாற்றிவிட்டாலும் தமிழ் லீடருக்கு மகிழ்ச்சியே.
விகடன் குழுமத்துக்கு நன்றியுடன்!
ஒரு காம்பவுண்டு கொட்டடிக்குள் இருப்பது ஒன்றைத்தவிர திஹார் சிறையில் வேறு குறை ஏதுமில்லாததனால் ஆ.ராசாவுக்குத் தெனா வெட்டும்,நக்கலும் கொஞ்சம் கூடக் குறையவில்லை போல!
மனிதர் சிறையில் இருப்பதைக் குறித்து எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார்!கம்பி எண்ணுவது உறுதியானால், தான் மட்டுமே அல்ல, கூடவே பெட்டிகளை வாங்கிக் கொண்ட பேர்வழிகளும் தன்னுடன் கூடவே வரவேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது குறிப்பால் உணர்த்திவிட்டு அமைதியாக இருக்கிறார்.
எல்லாமே பிரதமருக்குத் தெரிந்து, அவருடைய ஒப்புதலுடன் தான் நடந்தது என்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமரையும் மாட்டி விடுகிற மாதிரித் தான், அவருடைய தற்காப்புவாதமாக இருக்கும் என்பதை அடிக்கடி கோடி காட்டி விட்டு அமையாதிவிடுகிறார்.கனிமொழிபோல அழுது புலம்புவதில்லை!
பிரதமரைக் காப்பாற்றுவதற்காகவோ என்னவோ, கடந்த சில நாட்களாக சி பி ஐ எடுத்து வைக்கும் வாதங்கள், ராஜா பிரதமரை நம்ப வைத்து, முடிவுகளைத் தன்னிச்சையாக எடுத்தார், தனக்கு வேண்டப் பட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார், அமைச்சரவைக் குழு கூடி எடுக்கவேண்டிய முடிவுகளைத் தானே தன்னிச்சையாக எடுத்தார், பிரதமரிடமிருந்து உண்மையை மறைத்தார் என்ற ரீதியில் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னாள் சிபிஐ, நீதிபதி அனுமதியுடன் ஆ.ராசாவை மறுபடி விசாரித்தது. வருமானவரித்துறை மறுபடியும் விசாரிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
சம்மரி ஷீட் என்ற ரகத்தில் சிபிஐ, ஆ.ராசா தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு லைசன்ஸ் அளித்தது , ஸ்வான் நிறுவனம் அனில் அம்பானியின் முகமூடி நிறுவனம்,அரசுக்கு இழப்பு ஏற்படும் விதத்தில் முடிவுகளை மேற்கொண்டது, டிபி ரியாலிடி நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் கொடுத்தது, அப்புறம் அது திருப்பிச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுவது எல்லாவற்றையும் தொகுத்து ஒரு ஆவணமாகத் தாக்கல் செய்திருக்கிறது.
சிபிஐ விசாரணையை, இன்றைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தபோது, சந்தடிசாக்கில் நக்கல் செய்திருக்கிறார் ஆ.ராசா! சிபிஐ வழக்கு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறதாம்!
சிபிஐ தரப்பு வழக்கறிஞர் லலித் பேசுவது சரியாகக் காதில் விழவில்லை என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் சார்பில் சொல்லப் பட்டபோது, சந்தடிசாக்கில் ஆ.ராசா புகுந்து, இந்த கமென்ட் அடித்திருக்கிறார். யுனிடெக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "திரு லலித்! நேற்றைக்காவது கொஞ்சம் சத்தமாக பேசினீர்கள் இன்றைக்கு உங்கள் குரல் மிகவும் தணிவாக இருக்கிறது" என்று சொன்னபோது, ஆ.ராசா இடைமறித்து, "அது நாளுக்கு நாள் அவர்கள் தரப்பு பலவீனமாகிக் கொண்டிருப்பதால் தான்!" என்று சொன்னாராம்.
நுணலும் தன் வாயால் கெடும் என்ற கதையாகிவிடப்போகிறது!!
---------------------------------------------------------------------------------------
******
கம்பல்சரி ரிடைர்மென்ட்டில் இருக்கும் சுர்ஜீத் சிங் பர்னாலாவிடம் திமுகவினர் மனுக்கொடுத்து இன்னொரு கேலிக் கூத்தை இன்றைக்கு அரங்கேற்றியிருக்கிறார்கள்!
கோவை ராசியே இல்லை, பொதுக்குழு திருப்பூருக்கு மாற்றப்படுமா, தொடர்ந்து கைதுகள், புறக்கணிக்கப்போவதாக அழகிரி தரப்பில் இருந்து மிரட்டல்,இப்படி வரிசையாக வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்தாலும், திமுக பொதுக்குழு நாளை மறுநாள் கோவையில் கூட இருப்பதாகத்தான் இந்த நிமிடம் வரை செய்திகள் சொல்கின்றன.
எப்போதும்போல, காங்கிரசுடன் உறவு முறிவு, ஆட்சிக்கு ஆதரவு வாபஸ், உள்ளாட்சித் தேர்தலைத் தனியாகவே சந்திப்பது (இவர்கள் இப்படி முடிவெடுப்பதற்கு முன்னாலேயே, பாமக உட்பட அத்தனை கூட்டாளிகளும்,உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்!!}என்று டமாரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆட்சியில் இருந்தபோது, டமாரங்கள் சத்தத்தில் கேட்பவர் காது கிழியும்!இப்போதோ, டமாரங்களே கிழிந்து கிடக்கின்றன!
இந்த வார ஆனந்தவிகடன் இதழில் வெளியாகியிருக்கும் செய்திக் கட்டுரை நாட்டு நடப்பை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது! விகடன் குழுமத்துக்கு நன்றியுடன்!
மனிதர் சிறையில் இருப்பதைக் குறித்து எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார்!கம்பி எண்ணுவது உறுதியானால், தான் மட்டுமே அல்ல, கூடவே பெட்டிகளை வாங்கிக் கொண்ட பேர்வழிகளும் தன்னுடன் கூடவே வரவேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது குறிப்பால் உணர்த்திவிட்டு அமைதியாக இருக்கிறார்.
எல்லாமே பிரதமருக்குத் தெரிந்து, அவருடைய ஒப்புதலுடன் தான் நடந்தது என்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமரையும் மாட்டி விடுகிற மாதிரித் தான், அவருடைய தற்காப்புவாதமாக இருக்கும் என்பதை அடிக்கடி கோடி காட்டி விட்டு அமையாதிவிடுகிறார்.கனிமொழிபோல அழுது புலம்புவதில்லை!
பிரதமரைக் காப்பாற்றுவதற்காகவோ என்னவோ, கடந்த சில நாட்களாக சி பி ஐ எடுத்து வைக்கும் வாதங்கள், ராஜா பிரதமரை நம்ப வைத்து, முடிவுகளைத் தன்னிச்சையாக எடுத்தார், தனக்கு வேண்டப் பட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார், அமைச்சரவைக் குழு கூடி எடுக்கவேண்டிய முடிவுகளைத் தானே தன்னிச்சையாக எடுத்தார், பிரதமரிடமிருந்து உண்மையை மறைத்தார் என்ற ரீதியில் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னாள் சிபிஐ, நீதிபதி அனுமதியுடன் ஆ.ராசாவை மறுபடி விசாரித்தது. வருமானவரித்துறை மறுபடியும் விசாரிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
சம்மரி ஷீட் என்ற ரகத்தில் சிபிஐ, ஆ.ராசா தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு லைசன்ஸ் அளித்தது , ஸ்வான் நிறுவனம் அனில் அம்பானியின் முகமூடி நிறுவனம்,அரசுக்கு இழப்பு ஏற்படும் விதத்தில் முடிவுகளை மேற்கொண்டது, டிபி ரியாலிடி நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் கொடுத்தது, அப்புறம் அது திருப்பிச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுவது எல்லாவற்றையும் தொகுத்து ஒரு ஆவணமாகத் தாக்கல் செய்திருக்கிறது.
சிபிஐ விசாரணையை, இன்றைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தபோது, சந்தடிசாக்கில் நக்கல் செய்திருக்கிறார் ஆ.ராசா! சிபிஐ வழக்கு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறதாம்!
சிபிஐ தரப்பு வழக்கறிஞர் லலித் பேசுவது சரியாகக் காதில் விழவில்லை என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் சார்பில் சொல்லப் பட்டபோது, சந்தடிசாக்கில் ஆ.ராசா புகுந்து, இந்த கமென்ட் அடித்திருக்கிறார். யுனிடெக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "திரு லலித்! நேற்றைக்காவது கொஞ்சம் சத்தமாக பேசினீர்கள் இன்றைக்கு உங்கள் குரல் மிகவும் தணிவாக இருக்கிறது" என்று சொன்னபோது, ஆ.ராசா இடைமறித்து, "அது நாளுக்கு நாள் அவர்கள் தரப்பு பலவீனமாகிக் கொண்டிருப்பதால் தான்!" என்று சொன்னாராம்.
நுணலும் தன் வாயால் கெடும் என்ற கதையாகிவிடப்போகிறது!!
---------------------------------------------------------------------------------------
******
கம்பல்சரி ரிடைர்மென்ட்டில் இருக்கும் சுர்ஜீத் சிங் பர்னாலாவிடம் திமுகவினர் மனுக்கொடுத்து இன்னொரு கேலிக் கூத்தை இன்றைக்கு அரங்கேற்றியிருக்கிறார்கள்!
கோவை ராசியே இல்லை, பொதுக்குழு திருப்பூருக்கு மாற்றப்படுமா, தொடர்ந்து கைதுகள், புறக்கணிக்கப்போவதாக அழகிரி தரப்பில் இருந்து மிரட்டல்,இப்படி வரிசையாக வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்தாலும், திமுக பொதுக்குழு நாளை மறுநாள் கோவையில் கூட இருப்பதாகத்தான் இந்த நிமிடம் வரை செய்திகள் சொல்கின்றன.
எப்போதும்போல, காங்கிரசுடன் உறவு முறிவு, ஆட்சிக்கு ஆதரவு வாபஸ், உள்ளாட்சித் தேர்தலைத் தனியாகவே சந்திப்பது (இவர்கள் இப்படி முடிவெடுப்பதற்கு முன்னாலேயே, பாமக உட்பட அத்தனை கூட்டாளிகளும்,உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்!!}என்று டமாரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆட்சியில் இருந்தபோது, டமாரங்கள் சத்தத்தில் கேட்பவர் காது கிழியும்!இப்போதோ, டமாரங்களே கிழிந்து கிடக்கின்றன!
இந்த வார ஆனந்தவிகடன் இதழில் வெளியாகியிருக்கும் செய்திக் கட்டுரை நாட்டு நடப்பை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது! விகடன் குழுமத்துக்கு நன்றியுடன்!
Friday, July 22, 2011
இதுதாண்டா ஜெ. போலீஸ்!--------- ஆயிரமாயிரம் புகார்கள்... அதிரடிக் கைதுகள்
அடி உதவுற மாதிரி அண்ணன், தம்பிகூட உதவ மாட்டான்’ என்ற பழமொழிதான் ஜெயலலிதாவின் இன்றைய புது வழி!
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க-வை - இன்றும் மத்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள தி.மு.க-வை - 'லப்டப்... லப்டப்...’ என்று திகைக்கவைக்க லத்தியே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர்.
'இன்னும் 30 நாட்களில் போலீஸ் ராஜ்யம்’ ஆரம்பமாகப் போகிறது என்று ரெட் சிக்னல் காட்டுகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். இதற்கென இட்டுக்கட்டியோ... பொய்யாகப் புனைந்தோ, வழக்குகளை அவர் பாய்ச்சப்போவது இல்லை.
தி.மு.க-வினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, யார் யாரை எல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீண்டி னார்களோ... அந்த நபர்களைவைத்தே திருப்பி அடிக்கவிடுவதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
சன் டி.வி. முதல் நில மோசடி வரையிலான ஜெ... மு.க... ரிலே ரேஸ் இதோ!
சன் நோக்கி 'கன்’!
'சன் டி.வி-க்கும் தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று கருணாநிதி சொன்னால்கூட, அதை ஜெயலலிதா ஏற்கத் தயாராக இல்லை. கருணாநிதிக்கான ஆக்சிஜனாக சன் டி.வி-யைத்தான் ஜெ. நினைக் கிறார். ஆட்சிக்கு வந்ததுமே அவர் அசைத்துப் பார்க்க நினைத்தது இவர்களைத்தான்.
''போன தடவை, கருணாநிதி கைதைத் தமிழகம் முழுக்கப் பரப்பி, அனுதாபம் தேடவைத்தது இவர்கள்தான். எனவே, இந்தத் தடவை என்ன நடந்தாலும் தங்கள் மீடியா பலத்தால் இதையே செய்வார்கள். எனவே, அவர்களை முதலில் தட்டிவைக்க அம்மா நினைக்கிறார்'' என்கிறார் அமைச்சர்களில் ஒருவர். அதனால்தான், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனைப் புதுப்பிக்கப் பேசினார். டி.வி. தொழிலுக்கு கேபிள் உயிர் என்பது ஜெ. கணக்கு!
அடுத்து 'சன் இன் லா' குடும்பத்தின் பக்கமும் ஜெ. முகம் திரும்பியது. சினிமாக்காரர்கள் மொத்தப் பேரையும் சினம்கொள்ளவைத்ததாக சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்கப் புற்றீசல் மாதிரி எத்த னையோ தயாரிப்பாளர்கள் புறப்பட்டார் கள். சேலம் கந்தன் ஃபிலிம்ஸ் செல்வராஜ் முதல் 'மாப்பிள்ளை’ ஹித்தேஷ் ஜபக் வரையில் சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்த பல படங்களுக்கு எஃப்.ஐ.ஆர். போடுகிறார்கள். இன்றைய தின நிலவரப்படி... சக்சேனா சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. இது கலாநிதி மாறனையும் குறிவைக்கும் சுழலாகவே சுற்ற ஆரம்பித்து உள்ளது. கடந்த 13-ம் தேதி 'கலைஞர் கருணாநிதி நகர்’ காவல் நிலையத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும். 26-ம் தேதி வரை அவருடைய வக்கீல்கள் அவகாசம் கேட்டு உள்ளார்கள். '26-ம் தேதி வரை பார்ப்போம்’ என்கிறார் அந்தப் பகுதி டெபுடி கமிஷனர். அதற்குப் பிறகு?
மதுர... குலுங்கக் குலுங்க!
'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த அரை நாளில் அழகிரியிடம் இருந்து மதுரை மீட்கப்படும்’ என்று மதுரையில் நின்று சபதம் போட்ட ஜெயலலிதா, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை டெல்லியில் இருந்து தொடங்கினார். அழகிரி மீதான 59 வழக்குகளுக்கான ஆவணங்கள், தமிழக அரசிடம் இருந்து டெல்லி மேலிடத்துக்குத் தரப்பட்டு உள்ளன. அதில் 17 வழக்குகள் அழகிரி நேரடியாகச் சம்பந்தப்பட்டவை என்கிறார்கள். மற்ற வழக்குகள் அழகிரியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அடியாட் கள் நடத்திய அராஜகங்கள். அழகிரி முதலமைச்சர் என்றால், 'பொட்டு’ சுரேஷ் துணை முதல்வர் என்பதில் தொடங்கி, 'அட்டாக்’ பாண்டி வரை அத்தனை பேர் பெயரையும் ஜெயலலிதா மேடையில் வாசித்தார். இந்த நபர்களை வளைக்க கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் சிறப்புப் படை போடப்பட்டு உள்ளது. முதல் வழக்கில் 'அட்டாக்’ பாண்டி கைதாகிவிட்டார். மதுரை தினகரன் நாளிதழ் தாக்குதல் தொடங்கி... வெளிச்சத்துக்கு வராத காரியங்கள் வரை எல்லாமே ரத்த சரித்திரம். 'மொத்தத்தையும் மதுரையில் ஸ்பெஷல் கோர்ட் போட்டு விசாரிக் கலாமா?’ என்ற யோசனை யில் இருக்கிறார் ஜெ..
கொலை கொலையாய்...
இன்னும் மர்மமாக இருக் கும் சில மரணங்கள், தி.மு.க. அமைச்சர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன. அதில் முக்கியமானது திருச்சி இரட்டைக் கொலை. ரியல் எஸ்டேட் புரோக்கர் சகோ தரர்களில் ஒருவர் விஷம் குடித்தும் இன்னொருவர் உயிரோடு எரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட விவகாரத் தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருடைய தம்பி ராம ஜெயம் இருவர் பெயரும் பரவிக்கிடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவராகச் சொல்லப்படும் திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்... கஞ்சா வழக்கில் கைதாகி உள்ளார். இன்னும் பல தி.மு.க-வினரையே சுற்றிச் சுற்றி விசாரிக்கிறது போலீஸ். திருச்சி எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், தனது சொந்தத் தொகுதி என்பதால், இந்தக் கொலையை சீரியஸாகப் பார்க்கிறார் ஜெ.
சேலம் குப்புராஜ் குடும்பத்தில் ஆறு பேர் கொலையானதில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் பாரப்பட்டி சுரேஷ் கைதானார். அவரை ஜெயிலுக்குச் சென்று சந்தித்து, சர்ச்சையில் சிக்கினார் ஆறுமுகம். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இப்போது துரித விசாரணையில் இறங்கி இருக்கும் நிலையில், ஆறு பேர் கொல்லப்பட்ட வீடு மர்மமான முறையில் எரிக்கப்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம். தடயங்களை மறைக்க நடந்ததாகவே இதை சி.பி.சி.ஐ.டி. பார்க்கிறது.
முன்னாள் அமைச்சர் ஈரோடு என்.கே.கே.பி.ராஜா, சிவபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தாலும், மேலே கொண்டுசெல்ல இன்றைய அரசு முயற்சிக்கிறது. தஞ்சைப் பகுதி தி.மு.க. மாவட்டச் செயலாளர் கொலையிலும் மர்மம் இன்னும் விடுபட வில்லை. இப்படிப் பல முடிச்சுகளை அவிழ்க்க அவசர உத்தரவுகள் போட்டு இருக்கிறார் ஜெ!
மந்திரி... தந்திரிகள்!
வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்த வழக்கு, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் கே.என். நேரு, துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள் ளிட்ட பலர் மீது போடப்பட்டது. அடுத்து, ஆட்சி மாறியது. விசாரணைகள் முடிந்து தீர்ப்பும் வந்து சிலர் விடுதலை ஆனார் கள். இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டப்போகின்றன. மேலும், 2006-11 ஆண்டு கால ஆட்சியிலும் இதுபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தவர்கள் பட்டியலைத் தயாரிக்கச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.
மெகா கல்லூரிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சாராய ஆலைகள், மணல் குவாரிகள், தொழிற்சாலைகள் எனப் பட்டவர்த்தனமாக உருவாக்கிக்கொண்ட 9 அமைச்சர்கள் மீது முதல் வரிசையில் வழக்குகள் போடப்பட உள்ளன. அதற்கான ரெய்டு நாட்கள் குறிக்கப்பட உள்ளன.
பினாமிகள் ஜாதகம்...
கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பினாமிகள் பெயர்கொண்ட முதல் பட்டியல் தயாராகி உள்ளது. 100 கோடிக்கு மேல் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் தயாராகும் இந்தப் பட்டியலில், சென்னை, மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் பெயர்களும் அடக்கம்.
தி.மு.க. வேஷம் போட ஆரம்பித்த கான்ட்ராக்டர்கள் முதல் இவர்களிடம் பணம் வாங்கி வட்டிக்குவிட்ட கோடீஸ்வர மார்வாடிகள் சிலர் வரை இந்தப் பட்டிய லில் வருகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய மாதத்திலேயே இவர்களில் சிலர் வெளி நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி விட்டார்கள். அறிவாலயத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த நபர் ஒருவரும் இந்தப் பட்டியலில் வருகிறார். விரக்தியில் இருக்கும் தி.மு.க. புள்ளிகள் மூலமாகவே இவர்கள் ஜாதகம் திரட்டப்பட்டு வருகிறது!
பணப் பாதை அடைப்பு!
எதிர்க் கட்சியாக இருக்கும்போதே ஜெயலலிதா கண்காணித்தது இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தைத்தான். கருணாநிதி முதல்முறை முதல்வராக இருந்த காலம் முதல் இன்று வரை அவருக்கும் இந்தக் குழுமத்துக்குமான தொடர்புகளை வெளிப்படையாக ஜெ. போட்டு உடைத்து வந்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத் தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது முதல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமாகச் செய்வது வரை அனைத்துமே இந்த குரூப்தான் செய்து வருகிறது. ''அரசுப் பணம் இந்த குரூப் மூலமாக வெளியே போய்... மீண்டும் கருணாநிதி குடும்பத்துக்கு வருகிறது. அதைவைத்துத்தான் இவர்கள் படம் எடுக்கிறார்கள்'' என்றார் முதல்வர்.
எனவே ஜெ. செய்த முதல் காரியம், புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானத்தை நிறுத்தி விசாரணை கமிஷன் போட்டார். இனி இ.டி.ஏ-வுக்குப் போட்ட பணமும் கிடைக்காது. வர வேண்டியதும் வராது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு 750 கோடி வரை இதுவரை தரப்பட்டு வந்த பிரிமியம் இனி கிடைக்காது. இந்த ஒரு திட்டத்துக்காகவே அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்த 1,200 பேரை ஜூலை 6-ம் தேதி வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இவர்களைப்போலவே 'லம்ப்பாக’ லாபம் அடைந்த நிறுவனங்களைக் கண்டுபிடித்து பணப் பாதையை அடைக்க நினைக்கிறார் ஜெ.
லோக்கல் மனிதர்களுக்குக் கொக்கி!
மந்திரிகள் வி.ஐ.பி-க்களைத் தாண்டி குறிப்பிட்ட ஏரியாவில் செல்வாக்காக இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அதிக ஆபத்தாக ஜெ. பார்க்கிறார். நிலபுலன்கள், கைவச கரன்சி மூலமாகக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த இரண்டாம் கட்ட மாவட்டப் பிரமுகர்கள்... அடுத்து வரும் ஆண்டுகளில் செல்வாக்குப் பெற்று, கட்சிப் பதவிகளைப் பிடிக்கப்போகிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில்கூட இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இவர்கள் மீதான புகார்கள் தூசி தட்டப்படுகின்றன.
'உங்கள் ஊர் லோக்கல் தி.மு.க. பொறுப்பாளர்கள் செய்யும் முறைகேடுகளை தலைமைக் கழகத்துக்கு எழுதுங்கள்’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஜெ. சொல்லி... மலையளவு கடிதங்கள் குவிந்தன. இந்தக் கடிதங்களை ஆதாரமாக வைத்து இவர்களுக்குக் கொக்கி போடப் போகிறார்கள்.
குடும்ப டார்கெட்!
கடந்த முறை முதல்வராக வந்ததும்... ஒருநாள் நள்ளிரவில் கருணாநிதியைத் தூக்கியதுபோன்ற சம்பவம் இனி தேவை இல்லை என்று நினைக்கிறாராம் ஜெ.
ஆனால், அவருடைய குடும்பப் பிரமுகர்கள் 10 பேருக்கு நிச்சயம் தலைவலி காத்து இருக்கிறதாம். ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கலாநிதி மாறன், அழகிரியின் மருமகன்களான வெங்கடேசன், விவேக், ஸ்டாலின் மகன் உதயநிதி, அழகிரி மகன் துரை தயாநிதி... என்று பெயர்களும் சொல்லப்படுகின்றன. இதில் இடம் பெற்ற கனிமொழி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி, சிறையில் இருக்கிறார். தயாநிதியும் சர்ச்சைச் சுழலில் சிக்கிவிட்டார். மீதியுள்ள எட்டு பேருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளனவாம்.
வளைக்கப்பட்ட மண்ணும் மனிதனும்...
தி.மு.க-வை முடக்க ஜெ. கண்டுபிடித்த அபார வழிதான், நில மோசடி வழக்குகள். போலீஸ், வருவாய் மற்றும் பத்திரப் பதிவு அதிகாரிகள், உள்ளூர் ரவுடிகள் மூவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தட்டிப்பறிக்கப்பட்ட நிலங்கள் ஏராளம். அதிகாரத்தில் இருப்பதால் புகார் சொல்ல முடியாமல் தவித்தவர்கள், ஆளும் கட்சி மாறியதும் துணிச்சலாக வெளியில் வந்தார்கள். மே 13 முதல் ஜூலை 1-ம் தேதி வரை மட்டும் தமிழகம் முழுவதும் 1,449 புகார்கள் வந்தன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தி.மு.க. பிரமுகர்கள். இந்த நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கவே சிறப்புப் பிரிவைப் போட்டுவிட்டார் ஜெ. 'நிலம் அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நிலத்தை இழந்தவர்களுக்கு நிலம் கிடைக்கும்’ என்று கொடுத்த வாக்குறுதி, பலருக்கும் பால் வார்த்தது. தி.மு.க-வினருக்கோ வேர்த்தது. கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆனந்தன், திருச்சி கோ.அபிஷேகபுரம் அறிவுடை நம்பி தொடங்கி, கொடைக்கானல் நகர சபைத் தலைவர் முகமது இப்ராஹிம் என கைதுப் பட்டியல் நீள்கிறது. தி.மு.க-வினர் கதறலை அதிகப்படுத்தி இருப்பதும் இது தான்.
வதந்திகளை நம்புங்கள்!
புதருக்குள் கல்லைப் போட்டால், உள்ளே இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும் என்பார்கள். அது மாதிரியே... இவரைக் கைது பண்ணப் போறோம்... அவரை அமுக்கப்போறோம்... என்பது மாதிரியான வதந்திகளைக் கிளப்பிவிட்டு, அதனால் வெளியே வரும் தகவல்களை ரிக்கார்டு செய்ய ஆரம்பித்து உள்ளது போலீஸ்.
தி.மு.க. புள்ளிகளைச் சுற்றி வந்த கரும்புள்ளிகள் அத்தனை பேரைப்பற்றியும் இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதனால் அவர்கள் திகிலடைந்து இருக்கிறார்கள்.
அறிவாலயத்துக்கும் கருணாநிதிக்கும் 'கைது’ வதந்திகள்தான் அதிகமாக வருகின்றன. இதைக் கேள்விப்பட்டு சூடான கருணாநிதி, 'தி.மு.க. வக்கீல்கள் என்ன ஆனார்கள்?’ 'வழக்கறிஞர் அணி என்ற ஒன்று இருக்கிறதா?’ என்று கொந்தளித்துள்ளார்.
ஆளும் கட்சியாக இருக்கும்போது கான்ட்ராக்டர்கள் அணியை மட்டும் நம்பினால், எதிர்க் கட்சியாக ஆகும்போது வக்கீல் அணியைத்தான் நாட வேண்டி இருக்கும்!
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க-வை - இன்றும் மத்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள தி.மு.க-வை - 'லப்டப்... லப்டப்...’ என்று திகைக்கவைக்க லத்தியே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர்.
'இன்னும் 30 நாட்களில் போலீஸ் ராஜ்யம்’ ஆரம்பமாகப் போகிறது என்று ரெட் சிக்னல் காட்டுகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். இதற்கென இட்டுக்கட்டியோ... பொய்யாகப் புனைந்தோ, வழக்குகளை அவர் பாய்ச்சப்போவது இல்லை.
தி.மு.க-வினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, யார் யாரை எல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீண்டி னார்களோ... அந்த நபர்களைவைத்தே திருப்பி அடிக்கவிடுவதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
சன் டி.வி. முதல் நில மோசடி வரையிலான ஜெ... மு.க... ரிலே ரேஸ் இதோ!
சன் நோக்கி 'கன்’!
'சன் டி.வி-க்கும் தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று கருணாநிதி சொன்னால்கூட, அதை ஜெயலலிதா ஏற்கத் தயாராக இல்லை. கருணாநிதிக்கான ஆக்சிஜனாக சன் டி.வி-யைத்தான் ஜெ. நினைக் கிறார். ஆட்சிக்கு வந்ததுமே அவர் அசைத்துப் பார்க்க நினைத்தது இவர்களைத்தான்.
''போன தடவை, கருணாநிதி கைதைத் தமிழகம் முழுக்கப் பரப்பி, அனுதாபம் தேடவைத்தது இவர்கள்தான். எனவே, இந்தத் தடவை என்ன நடந்தாலும் தங்கள் மீடியா பலத்தால் இதையே செய்வார்கள். எனவே, அவர்களை முதலில் தட்டிவைக்க அம்மா நினைக்கிறார்'' என்கிறார் அமைச்சர்களில் ஒருவர். அதனால்தான், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனைப் புதுப்பிக்கப் பேசினார். டி.வி. தொழிலுக்கு கேபிள் உயிர் என்பது ஜெ. கணக்கு!
அடுத்து 'சன் இன் லா' குடும்பத்தின் பக்கமும் ஜெ. முகம் திரும்பியது. சினிமாக்காரர்கள் மொத்தப் பேரையும் சினம்கொள்ளவைத்ததாக சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்கப் புற்றீசல் மாதிரி எத்த னையோ தயாரிப்பாளர்கள் புறப்பட்டார் கள். சேலம் கந்தன் ஃபிலிம்ஸ் செல்வராஜ் முதல் 'மாப்பிள்ளை’ ஹித்தேஷ் ஜபக் வரையில் சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்த பல படங்களுக்கு எஃப்.ஐ.ஆர். போடுகிறார்கள். இன்றைய தின நிலவரப்படி... சக்சேனா சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. இது கலாநிதி மாறனையும் குறிவைக்கும் சுழலாகவே சுற்ற ஆரம்பித்து உள்ளது. கடந்த 13-ம் தேதி 'கலைஞர் கருணாநிதி நகர்’ காவல் நிலையத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும். 26-ம் தேதி வரை அவருடைய வக்கீல்கள் அவகாசம் கேட்டு உள்ளார்கள். '26-ம் தேதி வரை பார்ப்போம்’ என்கிறார் அந்தப் பகுதி டெபுடி கமிஷனர். அதற்குப் பிறகு?
மதுர... குலுங்கக் குலுங்க!
'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த அரை நாளில் அழகிரியிடம் இருந்து மதுரை மீட்கப்படும்’ என்று மதுரையில் நின்று சபதம் போட்ட ஜெயலலிதா, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை டெல்லியில் இருந்து தொடங்கினார். அழகிரி மீதான 59 வழக்குகளுக்கான ஆவணங்கள், தமிழக அரசிடம் இருந்து டெல்லி மேலிடத்துக்குத் தரப்பட்டு உள்ளன. அதில் 17 வழக்குகள் அழகிரி நேரடியாகச் சம்பந்தப்பட்டவை என்கிறார்கள். மற்ற வழக்குகள் அழகிரியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அடியாட் கள் நடத்திய அராஜகங்கள். அழகிரி முதலமைச்சர் என்றால், 'பொட்டு’ சுரேஷ் துணை முதல்வர் என்பதில் தொடங்கி, 'அட்டாக்’ பாண்டி வரை அத்தனை பேர் பெயரையும் ஜெயலலிதா மேடையில் வாசித்தார். இந்த நபர்களை வளைக்க கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் சிறப்புப் படை போடப்பட்டு உள்ளது. முதல் வழக்கில் 'அட்டாக்’ பாண்டி கைதாகிவிட்டார். மதுரை தினகரன் நாளிதழ் தாக்குதல் தொடங்கி... வெளிச்சத்துக்கு வராத காரியங்கள் வரை எல்லாமே ரத்த சரித்திரம். 'மொத்தத்தையும் மதுரையில் ஸ்பெஷல் கோர்ட் போட்டு விசாரிக் கலாமா?’ என்ற யோசனை யில் இருக்கிறார் ஜெ..
கொலை கொலையாய்...
இன்னும் மர்மமாக இருக் கும் சில மரணங்கள், தி.மு.க. அமைச்சர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன. அதில் முக்கியமானது திருச்சி இரட்டைக் கொலை. ரியல் எஸ்டேட் புரோக்கர் சகோ தரர்களில் ஒருவர் விஷம் குடித்தும் இன்னொருவர் உயிரோடு எரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட விவகாரத் தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருடைய தம்பி ராம ஜெயம் இருவர் பெயரும் பரவிக்கிடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவராகச் சொல்லப்படும் திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்... கஞ்சா வழக்கில் கைதாகி உள்ளார். இன்னும் பல தி.மு.க-வினரையே சுற்றிச் சுற்றி விசாரிக்கிறது போலீஸ். திருச்சி எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், தனது சொந்தத் தொகுதி என்பதால், இந்தக் கொலையை சீரியஸாகப் பார்க்கிறார் ஜெ.
சேலம் குப்புராஜ் குடும்பத்தில் ஆறு பேர் கொலையானதில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் பாரப்பட்டி சுரேஷ் கைதானார். அவரை ஜெயிலுக்குச் சென்று சந்தித்து, சர்ச்சையில் சிக்கினார் ஆறுமுகம். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இப்போது துரித விசாரணையில் இறங்கி இருக்கும் நிலையில், ஆறு பேர் கொல்லப்பட்ட வீடு மர்மமான முறையில் எரிக்கப்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம். தடயங்களை மறைக்க நடந்ததாகவே இதை சி.பி.சி.ஐ.டி. பார்க்கிறது.
முன்னாள் அமைச்சர் ஈரோடு என்.கே.கே.பி.ராஜா, சிவபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தாலும், மேலே கொண்டுசெல்ல இன்றைய அரசு முயற்சிக்கிறது. தஞ்சைப் பகுதி தி.மு.க. மாவட்டச் செயலாளர் கொலையிலும் மர்மம் இன்னும் விடுபட வில்லை. இப்படிப் பல முடிச்சுகளை அவிழ்க்க அவசர உத்தரவுகள் போட்டு இருக்கிறார் ஜெ!
மந்திரி... தந்திரிகள்!
வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்த வழக்கு, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் கே.என். நேரு, துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள் ளிட்ட பலர் மீது போடப்பட்டது. அடுத்து, ஆட்சி மாறியது. விசாரணைகள் முடிந்து தீர்ப்பும் வந்து சிலர் விடுதலை ஆனார் கள். இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டப்போகின்றன. மேலும், 2006-11 ஆண்டு கால ஆட்சியிலும் இதுபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தவர்கள் பட்டியலைத் தயாரிக்கச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.
மெகா கல்லூரிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சாராய ஆலைகள், மணல் குவாரிகள், தொழிற்சாலைகள் எனப் பட்டவர்த்தனமாக உருவாக்கிக்கொண்ட 9 அமைச்சர்கள் மீது முதல் வரிசையில் வழக்குகள் போடப்பட உள்ளன. அதற்கான ரெய்டு நாட்கள் குறிக்கப்பட உள்ளன.
பினாமிகள் ஜாதகம்...
கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பினாமிகள் பெயர்கொண்ட முதல் பட்டியல் தயாராகி உள்ளது. 100 கோடிக்கு மேல் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் தயாராகும் இந்தப் பட்டியலில், சென்னை, மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் பெயர்களும் அடக்கம்.
தி.மு.க. வேஷம் போட ஆரம்பித்த கான்ட்ராக்டர்கள் முதல் இவர்களிடம் பணம் வாங்கி வட்டிக்குவிட்ட கோடீஸ்வர மார்வாடிகள் சிலர் வரை இந்தப் பட்டிய லில் வருகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய மாதத்திலேயே இவர்களில் சிலர் வெளி நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி விட்டார்கள். அறிவாலயத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த நபர் ஒருவரும் இந்தப் பட்டியலில் வருகிறார். விரக்தியில் இருக்கும் தி.மு.க. புள்ளிகள் மூலமாகவே இவர்கள் ஜாதகம் திரட்டப்பட்டு வருகிறது!
பணப் பாதை அடைப்பு!
எதிர்க் கட்சியாக இருக்கும்போதே ஜெயலலிதா கண்காணித்தது இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தைத்தான். கருணாநிதி முதல்முறை முதல்வராக இருந்த காலம் முதல் இன்று வரை அவருக்கும் இந்தக் குழுமத்துக்குமான தொடர்புகளை வெளிப்படையாக ஜெ. போட்டு உடைத்து வந்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத் தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது முதல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமாகச் செய்வது வரை அனைத்துமே இந்த குரூப்தான் செய்து வருகிறது. ''அரசுப் பணம் இந்த குரூப் மூலமாக வெளியே போய்... மீண்டும் கருணாநிதி குடும்பத்துக்கு வருகிறது. அதைவைத்துத்தான் இவர்கள் படம் எடுக்கிறார்கள்'' என்றார் முதல்வர்.
எனவே ஜெ. செய்த முதல் காரியம், புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானத்தை நிறுத்தி விசாரணை கமிஷன் போட்டார். இனி இ.டி.ஏ-வுக்குப் போட்ட பணமும் கிடைக்காது. வர வேண்டியதும் வராது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு 750 கோடி வரை இதுவரை தரப்பட்டு வந்த பிரிமியம் இனி கிடைக்காது. இந்த ஒரு திட்டத்துக்காகவே அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்த 1,200 பேரை ஜூலை 6-ம் தேதி வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இவர்களைப்போலவே 'லம்ப்பாக’ லாபம் அடைந்த நிறுவனங்களைக் கண்டுபிடித்து பணப் பாதையை அடைக்க நினைக்கிறார் ஜெ.
லோக்கல் மனிதர்களுக்குக் கொக்கி!
மந்திரிகள் வி.ஐ.பி-க்களைத் தாண்டி குறிப்பிட்ட ஏரியாவில் செல்வாக்காக இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அதிக ஆபத்தாக ஜெ. பார்க்கிறார். நிலபுலன்கள், கைவச கரன்சி மூலமாகக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த இரண்டாம் கட்ட மாவட்டப் பிரமுகர்கள்... அடுத்து வரும் ஆண்டுகளில் செல்வாக்குப் பெற்று, கட்சிப் பதவிகளைப் பிடிக்கப்போகிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில்கூட இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இவர்கள் மீதான புகார்கள் தூசி தட்டப்படுகின்றன.
'உங்கள் ஊர் லோக்கல் தி.மு.க. பொறுப்பாளர்கள் செய்யும் முறைகேடுகளை தலைமைக் கழகத்துக்கு எழுதுங்கள்’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஜெ. சொல்லி... மலையளவு கடிதங்கள் குவிந்தன. இந்தக் கடிதங்களை ஆதாரமாக வைத்து இவர்களுக்குக் கொக்கி போடப் போகிறார்கள்.
குடும்ப டார்கெட்!
கடந்த முறை முதல்வராக வந்ததும்... ஒருநாள் நள்ளிரவில் கருணாநிதியைத் தூக்கியதுபோன்ற சம்பவம் இனி தேவை இல்லை என்று நினைக்கிறாராம் ஜெ.
ஆனால், அவருடைய குடும்பப் பிரமுகர்கள் 10 பேருக்கு நிச்சயம் தலைவலி காத்து இருக்கிறதாம். ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கலாநிதி மாறன், அழகிரியின் மருமகன்களான வெங்கடேசன், விவேக், ஸ்டாலின் மகன் உதயநிதி, அழகிரி மகன் துரை தயாநிதி... என்று பெயர்களும் சொல்லப்படுகின்றன. இதில் இடம் பெற்ற கனிமொழி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி, சிறையில் இருக்கிறார். தயாநிதியும் சர்ச்சைச் சுழலில் சிக்கிவிட்டார். மீதியுள்ள எட்டு பேருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளனவாம்.
வளைக்கப்பட்ட மண்ணும் மனிதனும்...
தி.மு.க-வை முடக்க ஜெ. கண்டுபிடித்த அபார வழிதான், நில மோசடி வழக்குகள். போலீஸ், வருவாய் மற்றும் பத்திரப் பதிவு அதிகாரிகள், உள்ளூர் ரவுடிகள் மூவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தட்டிப்பறிக்கப்பட்ட நிலங்கள் ஏராளம். அதிகாரத்தில் இருப்பதால் புகார் சொல்ல முடியாமல் தவித்தவர்கள், ஆளும் கட்சி மாறியதும் துணிச்சலாக வெளியில் வந்தார்கள். மே 13 முதல் ஜூலை 1-ம் தேதி வரை மட்டும் தமிழகம் முழுவதும் 1,449 புகார்கள் வந்தன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தி.மு.க. பிரமுகர்கள். இந்த நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கவே சிறப்புப் பிரிவைப் போட்டுவிட்டார் ஜெ. 'நிலம் அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நிலத்தை இழந்தவர்களுக்கு நிலம் கிடைக்கும்’ என்று கொடுத்த வாக்குறுதி, பலருக்கும் பால் வார்த்தது. தி.மு.க-வினருக்கோ வேர்த்தது. கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆனந்தன், திருச்சி கோ.அபிஷேகபுரம் அறிவுடை நம்பி தொடங்கி, கொடைக்கானல் நகர சபைத் தலைவர் முகமது இப்ராஹிம் என கைதுப் பட்டியல் நீள்கிறது. தி.மு.க-வினர் கதறலை அதிகப்படுத்தி இருப்பதும் இது தான்.
வதந்திகளை நம்புங்கள்!
புதருக்குள் கல்லைப் போட்டால், உள்ளே இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும் என்பார்கள். அது மாதிரியே... இவரைக் கைது பண்ணப் போறோம்... அவரை அமுக்கப்போறோம்... என்பது மாதிரியான வதந்திகளைக் கிளப்பிவிட்டு, அதனால் வெளியே வரும் தகவல்களை ரிக்கார்டு செய்ய ஆரம்பித்து உள்ளது போலீஸ்.
தி.மு.க. புள்ளிகளைச் சுற்றி வந்த கரும்புள்ளிகள் அத்தனை பேரைப்பற்றியும் இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதனால் அவர்கள் திகிலடைந்து இருக்கிறார்கள்.
அறிவாலயத்துக்கும் கருணாநிதிக்கும் 'கைது’ வதந்திகள்தான் அதிகமாக வருகின்றன. இதைக் கேள்விப்பட்டு சூடான கருணாநிதி, 'தி.மு.க. வக்கீல்கள் என்ன ஆனார்கள்?’ 'வழக்கறிஞர் அணி என்ற ஒன்று இருக்கிறதா?’ என்று கொந்தளித்துள்ளார்.
ஆளும் கட்சியாக இருக்கும்போது கான்ட்ராக்டர்கள் அணியை மட்டும் நம்பினால், எதிர்க் கட்சியாக ஆகும்போது வக்கீல் அணியைத்தான் நாட வேண்டி இருக்கும்!
Subscribe to:
Posts (Atom)
