Friday, September 24, 2010

நாக்குல சனி உட்கார்ந்திருச்சு

என்னங்க மதியத்துக்கு பிரியாணி பண்ணவா ?"

(எனக்கு பகீர்ன்னு ஆகிப்போச்சு ,ஆஹா , டே, மங்கு உனக்கு ஆப்பு ரெடியாகுது பீ கேர்புல் )

"என்னம்மா இன்னைக்கு என்ன விசேசம் ?"

"அது ஒன்னும் இல்லைங்க வர்ற குவாட்டர்லி லீவுக்கு என்னோட அண்ணன் தம்பி ரெண்டு பேரும் நம்மள அங்க வரச்சொன்னாங்க , நான்தான் உங்களுக்கு லீவு கிடைக்காது அதுனால நீங்க எல்லாரும் இங்க வாங்கன்னு சொல்லிட்டேன்" .

" லீவு கிடைக்காதுன்னு நான் எப்ப சொன்னேன் ?" (மங்கு வலைவிரிக்கிறாங்க மாட்டிக்காத ?)

இவனுக வந்தா எப்படியும் வாடகைக்கு கார் எடுத்துக்கிட்டு 25 வது தடவையா ஒரு நாள் மகாபலிபுரம் போகணும் , ஒரு நாள் ஜூ-க்கு போகணும் , ஒரு நாள் சில்ட்ரன்ஸ் பார்க் ,பீச் போகணும் , ஒரு நாள் கிஸ்கிந்தா அப்புறம் ரெண்டு படம் பார்க்கணும் . இதுல காருக்கே 5000 ரூபா வந்திடும் . அப்புறம் தினம் வகைவகையா சாப்பாடு எல்லா செலவும் சேத்து எப்படியும் 10000 இல்லை 12000 வந்திடும் . (எல்லாம் சொந்த அனுபவம் தானுங்க ) . இவனுக எத்தின தடவ வந்தாலும் மேல சொன்ன எல்லாத்தையும் பாக்காம போகமாட்டேன்குராணுக .

என்ன பண்ணலாம் .....??????

பேசாம நாம அங்க போனமின்னா ? டிரைன் டிக்கட் தவிர அங்க போய் கொடைக்கானல் , வகை ஆணை போற செலவெல்லாம் அவனுக தலைல கட்டிரலாம்.

என் பையன் கிட்ட கொடைக்கானல் போற ஆசைய காட்டி லைட்டா தூண்டிவிட்டேன் , கரக்ட்டா வொர்கவுட் ஆகி நாங்களே ஊருக்கு போறதா முடிவாயிடுச்சு . (டே மங்கு நீ கிங்குடா , அசத்திட்ட எனக்கு நானே கைகுடுத்துக்கிட்டேன் )

"என்னங்க ஊருக்கு போறோம் கொலுசு ரொம்ப பழசா போயி , முத்து எல்லாம் உதிந்து போச்சு , அதை மட்டும் மாத்திகுவமா ?"

"சே...சே .... கொலுசு மாத்துறது தானே , என்ன ஒரு 1000 ரூபா எக்ஸ்ட்ரா வருமா ? வா போயி மாத்திட்டு வரலாம் ". (இங்க தான் என் நாக்குல சனி உட்கார்ந்திருச்சு )

கொலுசு மாத்த டி.நகர் போனோங்க, சொக்கா உனக்கு இரக்கமே இல்லையா ????

மொத்த பில்லு 6900 ரூபா , கொலுசுக்கு 1600 , ஒரு தோடு எக்சேன்ஜ் 3500 ,ரெண்டு புடவை , அப்புறம் பையன்னுக்கு சூ........... எக்ஸ்சட்ரா.............(..ம்ம்ம்.... என்னது எனக்கா ? பில்லு மட்டும் தாங்க எனக்கு )

உஸ் .... இப்பவே கண்ண கட்டுதே , ஒரு கொலுசு எக்சேன்ஜ் பன்னவந்தது தப்பாப்பா ?

டிரைன் , இப்ப பில்லு ரெண்டையும் சேத்து இப்பவே 8500 , எமாந்துட்டடா மங்கு , ஏமாந்துட்ட????

ஊர்ல போய் இன்னும் என்னன்னா ஆப்பு இருக்குன்னு தெரியலையே ?????

டிஸ்கி : பேசாம மச்சினன்கள இங்க வரச்சொல்லி இருக்கலாமோ ? அப்புறம் அங்க போயி என்ன ஆச்சுன்னு போயிட்டு வந்து சொல்றேன் .

No comments: