Friday, December 30, 2011

The authentic chettinad Chicken recipe.

It is needless to mention the specialty of this item in chettinad cusine.The mouth watering taste of this dish is known all over the world .All non vegetarians in Asia for sure would have tasted this at least once. There are hundreds of recipes for chettinad chicken on the net written by almost all food bloggers. Though many of them are similar to the original one. I have tried to find out the original recipe from my mother and grand mother and has presented the authentic chettinad recipe. For the authentic taste, the masala has to be grinded in the hand grinder. But these days it is rather impossible and hence has to be satisfied with the taste of the masala made in the mixie

Ingredients
Chicken-750 gms
Small onion 30 or big onion 2
Tomatoes-2
Garlic 20 pods



To grind No1
Ginger ½ inch piece
Small onion-10
Garlic-10 pods
Green chillies-2
Chillie powder-1 table spoons
Coriander powder-2 table spoons

To grind No2
Coconut grated-5 table spoons
Cashew nut-5 or kasa kasa-2 teaspoons
Fennel seeds-1 teaspoon
To season
Cinnamon-2 pieces
Fennel seeds-1 teaspoon
Clove-2
Cardamom-2
Birinji leaf-little
Mint leaf-handful
Curry leaf little

Traditionally chicken is not marinated before cooking in Chettinad chicken.As they used to cook in low fire for a long time in olden days the chicken will get the salt and hot taste once it gets cooked. These days the chicken we use is tender and gets cooked fast in gas stove. So I feel it is better to marinate the chicken for an hour before cooking. If you do not find time to marinate, then no problem.
To marinate
1 teaspoon kuzhambu milagai thool(the powder used for sambar)
Salt-1 teaspoon
Curd little
Ginger garlic paste-1 teaspoon


Procedure
Mince the onion, garlic and tomatoes.
Keep the kadai in the stove. Season the curry with the items given in ‘to season’ in 2 tablespoons of oil.
Add the onions and saute with a pinch of salt for 3 minutes.
When the onions turn transparent add the garlic, sauté for some time
Add the chopped tomatoes. Sauté till the whole thing gets smashed.
Add the grinded paste of items given in No 1. Sauté it for a while.
Now add the chicken pieces and nicely mix all the masala over the chicken pieces.
You can see lot of water coming out of the chicken. Reduce the flame and cook for 10 to 15 minutes.
Once you find that the chicken pieces are almost cooked increase the flame so that the gravy becomes thick.
Once the curry gets thick add the masala grinded with the items given in No2 and mix nicely
Cook for another 5 minutes.
If you need the curry to be little watery add the masala little earlier and switch off when the curry is in the desired consistency.


The curry should be cooked till the oil seperates

CHICKEN TANGRI KEBAB RECIPE

Chicken leg piece is marinated in curd, ginger garlic and spices and marinated to get this recipe

Ingredients:

2 large leg pieces of chicken
1/2 c curd
1 tblsp lemon
1 tsp garam masala powder
1 tsp red chili powder
Salt to taste
1 tblsp ginger garlic paste
A few drops of edible orange color


How to make chicken tangri kebab:

* Clean and wash the chicken pieces and make random slits on them
* Mix all the ingredients except salt together.
* Rub and wrap chicken pieces in it and keep aside for an hour
* Now mix in the salt.
* Grill the chicken pieces till they are cooked well on both the sides.
* Sprinkle lemon juice and chat masala and serve with onion rings







CHICKEN BIRYANI

Ingredients:

2 cups Basmati Rice
3/4 kg Chicken Pieces
1/2 cup Milk
1 cup Yogurt (curd)
3 sliced onion
1 tsp Ginger Paste
1/2 tsp Garlic Paste
1 tsp Green Chilli Paste
1/2 cup Tomato Puree
2 tsp Red Chilli Powder
1 tsp Turmeric Powder
1 tsp Roasted cumin powder
2 tsp Garam Masala Powder
1/2 tsp Green Cardamom Powder
Saffron a pinch
1 tsp Coriander Powder
2 tbsp Green Coriander Leaves
Salt to taste
7 tbsp Oil
Preparation:

* Mix tomato puree, yogurt, ginger garlic paste, green chilli paste, red chilli powder, turmeric powder, roasted cumin powder, garam masala, coriander powder and salt. Stir well.
* Marinate the chicken with this mixture and keep aside for 3-4 hours.
* Heat oil in a pan. Fry the onions until golden brown.
* Add the marinated chicken and cook for 10 minutes.
* Add 4 cups of water to the rice. Mix saffron in milk and add to it.
* Add cardamom powder. Add the chicken pieces.
* Pressure cook the rice. Mix gently.
* Garnish with green coriander leaves and serve hot.




MURGH AFGHANI RECIPE.......... (Chicken With Melon Seed)

Ingredients:

1 Small whole Chicken
1 tbsp Magaz (Melon Seed) paste
1 1/2 tbsp Cashewnut paste
1 tbsp Khuskhus (Posto / Poppy seeds) paste
1/2 cup Cream
2 tbsp Butter
2 tsp White pepper
Salt To Taste

How to make chicken afgani:

* Clean the chicken and keep aside.
* Make a paste of all the ingredients and marinate the whole chicken well with this. Keep marinated for four hours.
* Grill in a tandoor (charcoal grill) till golden.
* Serve the murgh afgani hot with onion rings.


சூப்பர் சமையல் & விருந்து!

நாம் உண்ணும் உணவு, சுவையாக மட்டுமல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருப்பது மிகவும் முக்கியம். இனிப்பு, புளிப்பு, உப்பு - சுவைகள் உடலை வளர்க்கும். கசப்பு, துவர்ப்பு, காரம் முதலிய சுவைகள் உடலை வற்றச் செய்யும் இயல்புடையன. அறுசுவைகளும் உணவில் அமையுமாறு சாப்பிட்டால், உணவு ஆரோக்கியமானதாக ஆவதோடு,ஒரு மனநிறைவையும் அளிக்கிறது.

முருங்கைப்பூ கட்லெட்

தேவையான பொருள்கள்:

முருங்கைப்பூ - 200 கிராம் (நறுக்கியது), கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா 100 கிராம், அரிசி - 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்- 6, கொத்துமல்லி விதை, உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 1 தேக்கரண்டி, புளி - ஒரு சிறிய கோலி அளவு, வெல்லத் தூள் - 1 தேக்கரண்டி, ரவை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, அரிசி மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, சிறிது சிறிதாக நீர் தெளித்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், உளுத்தம் பருப்பு, புளி, மற்றும் கொத்துமல்லி விதையை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய் மற்றும் வெல்லத்தைக் கலந்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, முருங்கைப் பூ, மற்றும் மசாலா கலவையை இட்டு உப்பு கலந்து கெட்டியாகப் பிசைந்து, எலுமிச்சம் பழம் அளவு உருண்டையாகச் செய்து ரவையில் பிரட்டி தட்டையாக்கி, ஒரு குழிவான தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றிப் பொரிக்கவும்.

சென்னா சாலட்

தேவையான பொருள்கள்:

வேகவைத்த கறுப்பு கொண்டைக்கடலை - 200 கிராம், கேரட் - பெரியது 1, கோஸ் - 100 கிராம், குடை மிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 1 பொடியாக நறுக்கவும், மிளகுத் தூள், சீரகத்தூள் - தலா 1/2 தேக்கரண்டி, கொத்துமல்லித் தழை - 1 கைப்பிடி அளவு, எலுமிச்சைச் சாறு - ருசிக்கு, சாட் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை:

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொண்டைக் கடலை மற்றும் காய்கறிக் கலவை, உப்பு, சீரகத்தூள், மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு, எண்ணெய், கொத்துமல்லித் தழை என எல்லாவற்றையும் போட்டு, அதிக அழுத்தம் கொடுக்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். சுவையான சத்து நிறைந்த சாலட் தயார்.

கொண்டைக்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. மிகக் குறைந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவு கொத்துக் கடலை. இதைச் சாப்பிடும் பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாகத்தான் ஏறும். குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான உணவு.

கொள்ளு சூப்

தேவையான பொருள்கள்: கொள்ளு - 100 கிராம், தக்காளிப் பழம் -1 (அரைத்துக் கொள்ளவும்), பூண்டு - 5 பல் (பொடிதாக அரிந்து கொள்ளவும்), மிளகுப் பொடி - 1 தேக்கரண்டி, சீரகம் -1/2 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, நெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை: கொள்ளினை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கொள்ளுடன், தக்காளிக் கூழ், மற்றும் நான்கு தம்ளர் நீர் கலந்து நன்கு வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த நீரை மிளகுத் தூள், உப்பு கலந்து சிறு தீயில் நுரை வரும் வரை கொதிக்க விடவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, சீரகம், மற்றும் அரிந்து வைத்துள்ள பூண்டையும் பொரித்து அத்துடன் கலந்து கொள்ளவும்.

கொள்ளு, உடல் எடையைக் குறைப்பதுடன், வாதம் காரணமாக உடலில் உண்டாகக்கூடிய உடல் வலிகளை நீக்கவல்லது. சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையும் கொள்ளுக்கு உண்டு.

வெண்பூசணி சாதம்

பூசணிக்காயில் ஏராளமான மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. உடல்சூடு சம்பந்தமான நோய்கள், வயிற்றுப்புண், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள், குறிப்பாகப் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவற்றிற்கு பூசணி மிக முக்கியமான மருந்து.

தேவையான பொருள்கள்:

பெரிய பூசணி பத்தை -2,பச்சரிசி - 2 கப், தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி, கடுகு- 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 5, நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பூசணியைத் துருவி, மிக்ஸியிலிட்டு, சாறு பிழிந்து கொள்ளவும். அரிசியை நன்கு களைந்து, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் சாறு என்ற கணக்கில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் தாளித்து, துருவிய தேங்காய், மற்றும் கறிவேப்பிலையை இட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். சாதம் சற்று சூடு ஆறியதும், தேவையான உப்பு சேர்த்து தேங்காய்க் கலவையில் கலந்து கொள்ளவும். சுவையான சத்தான பூசணி சாதம் தயார்.

நெல்லிக்காய் தயிர் பச்சடி

தேவையான பொருள்கள்:

பெரிய நெல்லிக்காய் - 6,
தேங்காய்த் துருவல் -2 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 1,
கடுகு - 1/2 தேக்கரண்டி தாளிக்க,
தயிர் - 100 மிலி.,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

நெல்லிக்காயை வேகவைத்து கொட்டை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்த நெல்லிக்காய், தேங்காய் அரைத்தது, தயிர், மற்றும் உப்பு கலந்து கடுகைத் தாளித்து, கலந்து கொள்ளவும்.

கசகசா - நட்ஸ் பாயசம்

தேவையான பொருள்கள்:

கசகசா - 2 தேக்கரண்டி, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, சாரைப் பருப்பு - 2 தேக்கரண்டி, அரிசி - 2 தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - 1 கப், சர்க்கரை/வெல்லம் - 200 கிராம், காய்ச்சிய பால் - அரை லிட்டர், உலர் திராட்சை- 10 கிராம், நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

கசகசா, பருப்புகள் மற்றும் அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்து வைத்துள்ள கசகசா, மற்றும் தேங்காய்க் கலவை இட்டு, சிறிது நீர் கலந்து நன்கு கிளறவும். வெந்து வரும் சமயம் சர்க்கரை, அல்லது வெல்லத்தைக் கலக்கவும். கலவை நன்கு வெந்து கொதிக்கும் சமயம், அடுப்பை சிறு தீயில் வைத்து, காயவைத்த பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி திராட்சையை வறுத்து பாயசத்தில் கலந்து கொள்ளவும்.

கசகசா உடலுக்குக் குளிர்ச்சி தரும். தேங்காய், கசகசா பாயசம் சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறும்.

நார்த்தங்காய் ஸ்வீட் அண்டு சார் பச்சடி

தேவையான பொருள்கள்:

நார்த்தங்காய் -/நாரத்தை வற்றல் -100 கிராம்,
புளி - சிறிய எலுமிச்சம் பழம் அளவு,
வற்றல் மிளகாய் - 6,
கடுகு -1 தேக்கரண்டி,
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

நார்த்தங்காயைப் பொடியாக அரிந்து கொள்ளவும். நார்த்தங்காய் கிடைக்காத காலங்களில் நாரத்தை வற்றலை சிறு துண்டுகளாக்கி ஐந்து நிமிடம் சுடுநீரில் இட்டுப் பயன்படுத்தலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து நாரத்தங்காய் துண்டுகளை நன்றாக பிரட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து ஊற்றி அதில் நாரத்தங்காயை வேகவிடவும். நன்கு வெந்தவுடன், உப்பு, மற்றும் வெல்லத்தைக் கலந்து சிறு தீயில் வைத்துக் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். வற்றலைப் பயன்படுத்தும் பொழுது உப்பைக் குறைத்துக் கொள்ளவும்.

சுவையான புளிப்பு, இனிப்பு நாரத்தங்காய் பச்சடி பூசணி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Thursday, December 29, 2011

Thanjavur Mutton Kothu Curry........................ Recipe

Ingredients:
Mutton Keema - 1 cup
Onion - 1 cup
Tomato - 1 cup
Ginger Garlic Paste - 3 to 4 tsp
Dhaniya Powder - 2 tsp
Chilli Powder - 2 tsp
Turmeric Powder - 2 tsp
Cloves - 1 tsp
Cinnamon - 1 tsp
Bay Leaf - 1 tsp
Peas - 1/2 cup
Salt as per taste
Water - 3 to 5 cups
Curry Leaves - 1tsp
Mustard Seeds - 1 tsp
Jeera - 1 tsp

Method:
1. In a pressure cooker, add the mutton keema, tomatoes, green chilli, cloves, bay leaf, ginger garlic paste, cinnamon, peas, turmeric powder, red chilli powder, dhaniya powder.
2. Add salt and mix well.
3. Add water.
4. Close the cooker and steam cook for 3 whistles.
5. In a pan heat oil and fry mustard seeds, curry leaves, jeera and bay leaf.
6. Add this to the cooker.
7. Mix well and let it boil for some time.
8. Serve hot with plain rice.

Kashmiri Mutton Biryani Recipe

Ingredients:
1/2 kg mutton-cubed
1/2 kg cooked rice
1/2 cup curd
2 bayleaf
2 black cardamom
2 green cardamom
2 cinnamon sticks
4 cloves
2 tsp shahi jeera
1 tbsp cashew nuts
2 tsp coriander powder
2 tsp chilli powder
2 tsp garam masala powder
1 tsp turmeric powder
1/4 nutmeg-ground
1/2 tsp saffron mixed with 1 tbsp milk
4 tbsp pure ghee
salt to taste
1 cup chopped mint and coriander leaves

Method:
Mix meat with curd, chilli powder, turmeric powder and salt and allow to marinate for one hour.

Cook basmati rice in more than enough water with little salt, till just half done. Drain and keep aside.

Heat ghee in a pan, add cloves, black cardamoms, green cardamoms, cinnamon, bay leaf, shahi jeera, coriander powder, ground nutmeg and garam masala.

Add marinated meat stir and fry well till browned and the curd is absorbed.

Add enough water to cook meat, cook till the meat is tender. Keep aside.

Divide the rice into two portions. To one portion add saffron milk, half meat, half coriander and mint leaves, mix.

Cover with white rice and remaining meat. Sprinkle the remaining coriander and mint leaves and cashew nuts.

Shut the pot tightly. Cook on a low fire for a 30-45 minutes.

Note: For semi boiled rice, bring water to boil, add rice cook till rice is almost done. Drain and use.

HYDERABADI MUTTON BIRYANI........ RECIPE

Ingredients:

1 kg Rice
1 kg Mutton
10 gms Cardamom
10 gms Cinnamon
10 gms Cumminseed
10 gms Cloves
40 gms Ginger
20 gms Garlic
100 gms Green Chillies
50 gms Fried Onion
1 bunch Coriander Leaves
1bunch Pudina
2 Lemon
1/4 Curd
1/4 kg Ghee

How to make meat biryani:

* Wash mutton and take it in a vessel.
* Grind green chillies, ginger, garlic, spices, fried onion, and mix them all, then add this mixture to the meat.
* Then add curd to it, mix the stuff thoroughly. Leave the material for half an hour.
* Take 2 litres of water in a vessel and put it on the stove.
* When water boils well put the rice in the vessel. Take out the semi-cooked rice and spread it on the meat and spices mixture as a layer. Take some more rice and spread as second layer. Finally, spread the fully cooked rice.
* Prepare a mixture of one cup of boiled water and 1/4 kg ghee and spill it on the rice.
* Now put a plate on the vessel and seal the edges with dough. Put the vessel on the stove, cook for 15 minutes on medium flame.
* Then turn off the stove. Leave the stuff for 15 minutes.
* Hyderabadi mutton biryani is ready to serve.




Wednesday, December 21, 2011

அடுத்த முதல்வர் பதவிக்கு ஜாதகம் கணித்த விவகாரம்: சசிகலா குடும்பத்தினர் வெளியேறுவதற்கு காரணம்

சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு.

குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி : முதல்வருக்கு அரசியல் ஆலோசனை கூறும் முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினர் கட்டிய கட்டடத்திற்கு, சி.எம்.டி.ஏ., அனுமதி பெறுவதற்கு சசிகலா உறவினர் ஒருவர் பணம் கேட்ட தகவல், முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சகிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக, சட்ட நிபுணர் ஒருவர் மூலமாக, முன்னாள் நீதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய தகவலும் கிடைத்துள்ளது.சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதற்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு சென்றனர். அப்போது, அங்கு சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர். முதல்வர் பெங்களூரு கோர்ட்டிற்கு சென்ற போது, சசிகலா குடும்பத்தினர் யாரும் வரவில்லை; இதுவும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முதல்வர் யார்?
தி.மு.க., குடும்பத்தினர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தும் மதுபான நிறுவனங்களுக்கு, டாஸ்மாக் கடைகளில் விற்பதற்கான ஏற்பாடுகளை சசிகலா உறவினர்கள் செய்துள்ளனர். பிரபல மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.இவை அனைத்தும் விட மிக முத்தாய்ப்பாக, சொத்து குவிப்பு வழக்கில் முதல்வருக்கு எதிரான தீர்ப்பு கிடைக்குமானால், அடுத்த முதல்வர் யாரை நியமிக்கலாம் என்பதை ஜோதிடர் மூலம் சசிகலாவின் உறவினர்கள், பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து, மூத்த அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும், ஜூனியர் அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரின் ஜாதகத்தை ஜோதிடர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஜூனியர் அமைச்சரை தேர்வு செய்யலாம் என ஜோதிடர் தெரிவித்த தகவலும் கசிந்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் புகார்:
வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், தங்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வையுங்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கான காரணங்கள் குறித்து முதல்வர் கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது, தி.மு.க.,வுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு, முக்கிய பதவி கொடுப்பதற்கு சசிகலா உறவினர்கள் படாத பாடு படுத்திய விவரங்களையும் அதிகாரிகள், முதல்வரிடம் பட்டியலிட்டுள்ளனர். கடந்த பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் சீட் வழங்கப்பட்டதில், சசிகலாவின் உறவினர்கள் பல கோடிகளை வசூலித்த புகாரும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களை முதலில் மாற்ற வேண்டும். அவர்களில் சிலர், தம் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். பாதுகாப்பு பணி போலீசாரின் சகோதரர் ஒருவர், எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். எங்களை, "சின்னம்மா போலீஸ்' என வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

டாஸ்மாக்கில் ஆதிக்கம், கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் தேர்விலும், மண்டலக் குழுத் தலைவர்கள் நியமனத்திலும், மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திலும் வசூல் வேட்டை, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், தி.மு.க., ஆதரவாளர்கள் நியமனம், ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த நடவடிக்கை குறித்து தகவல் பரிமாற்றம் செய்தது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை வளர்த்தது, அதிகார மையங்களின் அராஜகச் செயல் போன்றவை தான், சசிகலாவின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் உடன்பிறவா சகோதரிகளாக இருந்த நிலையில், சசிகலாவும் அவரது ஆதரவாளர்களும் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளதால், 30ம் தேதி நடைபெறும் செயற்குழுவில், கட்சியில் பெரும் மாற்றமும், இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையிலும் அதிரடி மாற்றம் வரும் என, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவும், அவரது குடும்பத்தினர் 13 பேரின் உறவுகள் பிரிந்து, கட்சியிலிருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.


அனைத்திலும் ஆதிக்கம் : இதுகுறித்து, கட்சி வட்டாரத்திலும், அரசு வட்டாரத்திலும் கிடைத்த தகவல்கள் வருமாறு:
ஆட்சி வந்தது முதல், அமைச்சரவையிலும், அதிகார வட்டத்திலும், சசிகலாவின் ஆதரவு ஆட்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு துறையிலும், உயரதிகாரிகளின் டிரான்ஸ்பர், கான்ட்ராக்ட் பணிகள் உள்ளிட்டவை, சசிகலா ஆட்களின் உத்தரவில் தான் நடந்துள்ளன.

குறிப்பாக, தொழிற்துறையில் இது தொடர்பாக, பல திரைமறைவு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. சிவில் சப்ளைஸ் துறையில் உணவுப் பொருட்கள் வாங்குதல், மின்சாரத் துறையில் தனியாரிடம் மின் கொள்முதல், மின் வாரியம், டான்சி, தொழிற்துறை உள்ளிட்டவற்றில் புதிய கான்ட்ராக்ட் பணிகள், பழைய இரும்பு (ஸ்க்ரேப்) விற்பனை போன்றவற்றில், பெரும் தலையீடுகள் இருந்துள்ளன. இலவச திட்டங்களுக்கான கொள்முதல்களிலும், பல பேரங்கள் நடந்துள்ளன.

இதேபோல், தி.மு.க.,விலுள்ள பல வி.ஐ.பி.,க்கள் மீதான நில அபகரிப்பு வழக்குகளில், போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சசிகலாவின் பெயரைச் சொல்லி, பேச்சு நடந்திருக்கிறது. உயர்கல்வி, சுகாதாரம், இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, சமூக நலம், வேளாண்துறை உள்ளிட்டவற்றில், பல்வேறு டிரான்ஸ்பர் மற்றும் கான்ட்ராக்ட் பணிகளில், பெரும் குளறுபடி ஏற்படுத்தியதாக, சசிகலா குடும்பத்தினர் மீது புகார்கள் எழுந்தன.

மிடாஸ் விவகாரம் :
இதேபோல், சசிகலாவுக்குச் சொந்தமான, "மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் லிமிடெட்' நிறுவனத்திற்கு மட்டும், மதுவகைகள் தயாரிப்புக்கான, "ஸ்பிரிட்' தருவதில், பல தில்லுமுல்லுகள் நடந்ததாகத் தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட, தனியார் மது தொழிலதிபர்களும் இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிகிறது. தனியார் சர்க்கரை ஆலைகளில் சிலவற்றில், இதற்கான பணம் கொடுப்பதிலும் பேரம் நடந்ததாக கூறப்படுகிறது.

மின்துறையில் கான்ட்ராக்ட் பணி பார்க்கும் ஒரு நிறுவனம், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீராசாமிக்கும், துரைமுருகனுக்கும் வேண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தொடர்பாக எழுந்த ஒரு பிரச்னையில், விதியை மீறி அவர்களுக்குச் சாதகமான முடிவு எடுக்க, சசிகலா ஆதரவாளர்கள் சிலர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, பல்வேறு புகார்கள் கார்டனுக்கு தொடர்ந்து வந்துள்ளன. ஆனால், சில அதிகாரிகளும், அதிகார மையத்தில் இருந்த சிலரும் அவற்றை முதல்வரின் கவனத்திற்கு செல்லவிடாமல் தடுத்து விட்டனராம்.

பத்திரிகை ஆசிரியர் :

இதேபோல், பெரும்பான்மையான புதிய அமைச்சர்கள் நியமனத்திலும், சசிகலா, நடராஜன், தினகரன், ராவணன் மற்றும் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் பின்னணிகள் இருந்துள்ளன.
இந்த பிரச்னைகள் குறித்து, அதிருப்தி அடைந்த பலர், தங்களது எண்ணக் குமுறல்களை, முதல்வருக்கு வேண்டப்பட்ட அரசியல் ஆலோசகரான, "மூத்த பத்திரிகை ஆசிரியருக்கு' ஆவணங்களுடன் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை, முதல்வரை சந்தித்து, பிரச்னையின் தீவிரம் குறித்து பேசியுள்ளார். இறுதி முடிவெடுப்பது குறித்து, நேற்று முன்தினம் காலையிலும் வந்து, பேசிய பின்னர் தான், சசிகலா குடும்பத்தினரை கூண்டோடு வெளியேற்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இலாகாகளில் மாற்றம் :
சசிகலா குடும்பத்தினரின் வெளியேற்றம், தமிழக அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி, பச்சைமால், நத்தம் விஸ்வநாதன், டாக்டர் விஜய், வைத்தியலிங்கம், கோகுல இந்திரா, பழனியப்பன், வளர்மதி, ஆனந்தன், ஜெயபால், செந்தூர்பாண்டியன், எடப்பாடி பழனிச்சாமி, காமராஜ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் செல்வராஜ் உட்பட ஏராளமான அமைச்சர்களின், இலாகாகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், வரும் 30ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க., செயற்குழுவில், கட்சியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி: தினமலர்

Tuesday, December 6, 2011

துவரம்பருப்பு சட்னி

துவரம்பருப்பு சட்னி

துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 10 இதழ்
வரமிளகாய் - 3
பூண்டு - 5 பல்
பெரிய வெங்காயம் - பாதி
புளி - அரை இன்ச்
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை போட்டு வறுக்கவும்.
பின்னர் மிக்ஸியில் வறுத்த துவரம்பருப்பு, வறுத்த கறிவேப்பிலை, வரமிளகாய், பூண்டு மற்றும் பச்சை வெங்காயத்தை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து புளி வைத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
எளிதாக செய்யக் கூடிய, குறைந்த பொருட்களை கொண்டு சமைக்கக் கூடிய சட்னி ரெடி.

சுடு சாதத்திற்கு எனில் கொரகொரப்பாக அரைத்து, சட்னியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி, தோசைக்கு எனில் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக சேர்த்து, கொஞ்சம் நைசாக அரைக்கவும்.

ஓலை பக்கோடா!

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 3/4 கிலோ, பொட்டுக் கடலை - 1/4 கிலோ, உப்பு, காரத்தூள், பெருங்காயம் - தேவைக்கேற்ப, வெண்ணெய் - 50 கிராம், எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக் கடலையை மிக்ஸியில் நன்கு பொடியாக்கி, அரிசி மாவுடன் கலந்து கொள்ளவும். உப்புத்தூள், காரத்தூள், பெருங்காயப் பொடி, வெண்ணெய் கலந்து எண்ணெய்யில் பிழிந்து பொரித்தெடுக்கவும். கரகரப்பான ஓலை பகோடா ரெடி.

பூண்டு வாசனை பிடிக்குமென்றால் சிறிது பூண்டு விழுது சேர்க்கலாம். கடலை மாவுக்குப் பதில் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதால் வாயில் போட்டவுடன் கரையும்.

- என்.சந்திரா, சென்னை-78

சூப்பர் சமையல்.................. அறுசுவை விருந்து!

நாம் உண்ணும் உணவு, சுவையாக மட்டுமல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருப்பது மிகவும் முக்கியம். இனிப்பு, புளிப்பு, உப்பு - சுவைகள் உடலை வளர்க்கும். கசப்பு, துவர்ப்பு, காரம் முதலிய சுவைகள் உடலை வற்றச் செய்யும் இயல்புடையன. அறுசுவைகளும் உணவில் அமையுமாறு சாப்பிட்டால், உணவு ஆரோக்கியமானதாக ஆவதோடு,ஒரு மனநிறைவையும் அளிக்கிறது.

முருங்கைப்பூ கட்லெட்

தேவையான பொருள்கள்:

முருங்கைப்பூ - 200 கிராம் (நறுக்கியது), கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா 100 கிராம், அரிசி - 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்- 6, கொத்துமல்லி விதை, உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 1 தேக்கரண்டி, புளி - ஒரு சிறிய கோலி அளவு, வெல்லத் தூள் - 1 தேக்கரண்டி, ரவை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, அரிசி மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, சிறிது சிறிதாக நீர் தெளித்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், உளுத்தம் பருப்பு, புளி, மற்றும் கொத்துமல்லி விதையை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய் மற்றும் வெல்லத்தைக் கலந்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, முருங்கைப் பூ, மற்றும் மசாலா கலவையை இட்டு உப்பு கலந்து கெட்டியாகப் பிசைந்து, எலுமிச்சம் பழம் அளவு உருண்டையாகச் செய்து ரவையில் பிரட்டி தட்டையாக்கி, ஒரு குழிவான தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றிப் பொரிக்கவும்.

சென்னா சாலட்

தேவையான பொருள்கள்:

வேகவைத்த கறுப்பு கொண்டைக்கடலை - 200 கிராம், கேரட் - பெரியது 1, கோஸ் - 100 கிராம், குடை மிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 1 பொடியாக நறுக்கவும், மிளகுத் தூள், சீரகத்தூள் - தலா 1/2 தேக்கரண்டி, கொத்துமல்லித் தழை - 1 கைப்பிடி அளவு, எலுமிச்சைச் சாறு - ருசிக்கு, சாட் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை:

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொண்டைக் கடலை மற்றும் காய்கறிக் கலவை, உப்பு, சீரகத்தூள், மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு, எண்ணெய், கொத்துமல்லித் தழை என எல்லாவற்றையும் போட்டு, அதிக அழுத்தம் கொடுக்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். சுவையான சத்து நிறைந்த சாலட் தயார்.

கொண்டைக்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. மிகக் குறைந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவு கொத்துக் கடலை. இதைச் சாப்பிடும் பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாகத்தான் ஏறும். குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான உணவு.

கொள்ளு சூப்

தேவையான பொருள்கள்: கொள்ளு - 100 கிராம், தக்காளிப் பழம் -1 (அரைத்துக் கொள்ளவும்), பூண்டு - 5 பல் (பொடிதாக அரிந்து கொள்ளவும்), மிளகுப் பொடி - 1 தேக்கரண்டி, சீரகம் -1/2 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, நெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை: கொள்ளினை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கொள்ளுடன், தக்காளிக் கூழ், மற்றும் நான்கு தம்ளர் நீர் கலந்து நன்கு வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த நீரை மிளகுத் தூள், உப்பு கலந்து சிறு தீயில் நுரை வரும் வரை கொதிக்க விடவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, சீரகம், மற்றும் அரிந்து வைத்துள்ள பூண்டையும் பொரித்து அத்துடன் கலந்து கொள்ளவும்.

கொள்ளு, உடல் எடையைக் குறைப்பதுடன், வாதம் காரணமாக உடலில் உண்டாகக்கூடிய உடல் வலிகளை நீக்கவல்லது. சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையும் கொள்ளுக்கு உண்டு.

வெண்பூசணி சாதம்

பூசணிக்காயில் ஏராளமான மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. உடல்சூடு சம்பந்தமான நோய்கள், வயிற்றுப்புண், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள், குறிப்பாகப் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவற்றிற்கு பூசணி மிக முக்கியமான மருந்து.

தேவையான பொருள்கள்:

பெரிய பூசணி பத்தை -2,பச்சரிசி - 2 கப், தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி, கடுகு- 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 5, நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பூசணியைத் துருவி, மிக்ஸியிலிட்டு, சாறு பிழிந்து கொள்ளவும். அரிசியை நன்கு களைந்து, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் சாறு என்ற கணக்கில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் தாளித்து, துருவிய தேங்காய், மற்றும் கறிவேப்பிலையை இட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். சாதம் சற்று சூடு ஆறியதும், தேவையான உப்பு சேர்த்து தேங்காய்க் கலவையில் கலந்து கொள்ளவும். சுவையான சத்தான பூசணி சாதம் தயார்.

நெல்லிக்காய் தயிர் பச்சடி

தேவையான பொருள்கள்:

பெரிய நெல்லிக்காய் - 6,
தேங்காய்த் துருவல் -2 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 1,
கடுகு - 1/2 தேக்கரண்டி தாளிக்க,
தயிர் - 100 மிலி.,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

நெல்லிக்காயை வேகவைத்து கொட்டை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்த நெல்லிக்காய், தேங்காய் அரைத்தது, தயிர், மற்றும் உப்பு கலந்து கடுகைத் தாளித்து, கலந்து கொள்ளவும்.

கசகசா - நட்ஸ் பாயசம்

தேவையான பொருள்கள்:

கசகசா - 2 தேக்கரண்டி, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, சாரைப் பருப்பு - 2 தேக்கரண்டி, அரிசி - 2 தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - 1 கப், சர்க்கரை/வெல்லம் - 200 கிராம், காய்ச்சிய பால் - அரை லிட்டர், உலர் திராட்சை- 10 கிராம், நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

கசகசா, பருப்புகள் மற்றும் அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்து வைத்துள்ள கசகசா, மற்றும் தேங்காய்க் கலவை இட்டு, சிறிது நீர் கலந்து நன்கு கிளறவும். வெந்து வரும் சமயம் சர்க்கரை, அல்லது வெல்லத்தைக் கலக்கவும். கலவை நன்கு வெந்து கொதிக்கும் சமயம், அடுப்பை சிறு தீயில் வைத்து, காயவைத்த பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி திராட்சையை வறுத்து பாயசத்தில் கலந்து கொள்ளவும்.

கசகசா உடலுக்குக் குளிர்ச்சி தரும். தேங்காய், கசகசா பாயசம் சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறும்.

நார்த்தங்காய் ஸ்வீட் அண்டு சார் பச்சடி

தேவையான பொருள்கள்:

நார்த்தங்காய் -/நாரத்தை வற்றல் -100 கிராம்,
புளி - சிறிய எலுமிச்சம் பழம் அளவு,
வற்றல் மிளகாய் - 6,
கடுகு -1 தேக்கரண்டி,
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

நார்த்தங்காயைப் பொடியாக அரிந்து கொள்ளவும். நார்த்தங்காய் கிடைக்காத காலங்களில் நாரத்தை வற்றலை சிறு துண்டுகளாக்கி ஐந்து நிமிடம் சுடுநீரில் இட்டுப் பயன்படுத்தலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து நாரத்தங்காய் துண்டுகளை நன்றாக பிரட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து ஊற்றி அதில் நாரத்தங்காயை வேகவிடவும். நன்கு வெந்தவுடன், உப்பு, மற்றும் வெல்லத்தைக் கலந்து சிறு தீயில் வைத்துக் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். வற்றலைப் பயன்படுத்தும் பொழுது உப்பைக் குறைத்துக் கொள்ளவும்.

சுவையான புளிப்பு, இனிப்பு நாரத்தங்காய் பச்சடி பூசணி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

நீங்கள் சரியாகத்தான் பால் காய்ச்சுகிறீர்களா ?

காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடித்தால்தான்... சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்குமான முக்கியமான ஊட்டச் சத்தும் பால்தான். அப்படி நமக்கு மிக முக்கிய மாகிப் போன பாலை, நாம் சரியான முறையில் காய்ச்சுகிறோமா..? அப்பா டீ குடிக்கும்போது ஒருமுறை, குழந்தைக்குப் பாலூட்ட ஒரு முறை என பாலை பலமுறை சுடவைக்கும்போது, இது சரிதானா என்று யோசித்துப் பார்த்தது உண்டா..?

''பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம்!'' என்கிறார், உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன். ''காய்ச்சிய பாலை 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும்போது, அதில் இருக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்ஷியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுடவைப்பதால் அந்த சத்துக்கள் வீணாகிவிடும் என்றால், பால் குடிப்பதன் காரணமும் வீணாகிவிடும்தானே?!'' என்று தெளிவுபடுத்திய ஷைனி, பாலைக் காய்ச்சுவதற்கான காரணத்தைக் கூறினார்.

''பசும்பாலில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள், அதைக் காய்ச்சும்போது அழிந்துவிடும். அதனால்தான் பாலைக் காய்ச்சுகிறோம். இன்று பெரும்பாலானவர்கள் பாக்கெட் பால் வாங்குகிறோம். அது ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதனை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்கிற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்துவிடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி சூடாக்கி சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்'' என்றவர், பால் காய்ச்சும் முறையைக் கூறினார்.

பசும்பால் வாங்குபவர்களுக்கு...

''பால் பொங்கியதும் உடனே இறக்கிவிடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால் பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பால் 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.

பாக்கெட் பால் வாங்குபவர்களுக்கு...

'டோன்டு மில்க்’, 'பாஸ்டரைஸ்டு மில்க்’ என்று பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கெனவே பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு இருப்பதால், அதை 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.

யு.ஹெச்.டி (அல்ட்ரா ஹை டெம்ப்ரேச்சர்)

வகை பால் வாங்குபவர்களுக்கு...

இந்த வகைப் பால் வாங்குபவர்கள், அதைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. சுட வைத்தாலே போதுமானது.

எந்த வகைப் பால் ஆயினும், அதை இரண்டு முறைக்கு மேல் சுட வைக்க வேண்டாம். ஒரு முறை பாலைக் காய்ச்சியபின் அதை ரெஃப்ரிஜிரேட்டரில் வைக்கலாம்.

காபி, டீ என தயார் செய்யும்போது மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் காபி/டீ தேவைப்படுகிறதோ, அந்தளவுக்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்'' என்று வழியும் சொன்னார் ஷைனி!

இதை ஆமோதிக்கும் சித்த மருத்துவர் ஜீவா சேகர், ''பாலை 'மைக்ரோ அவன்’ மூலம் சூடு பண்ணுவதைத் தவிர்ப்பதும் நல்லது. காரணம், அதில் சத்துக்கள் எளிதில் ஆவியாகிவிட வாய்ப்புண்டு!'' என்பதையும் குறிப்பிட்டார்.

முழுமையான சத்துக்களைப் பெற, இனி பாலை சரியாகக் காய்ச்சுவோமா..?!

பொங்கலை பல வெரைட்டிகளில் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.

மார்கழி மாதத்தின் சிறப்பு பிரசாதமான பொங்கலை பல வெரைட்டிகளில் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா. அதனுடன் சேர்த்துச் சாப்பிட வகை வகையான வடைகளையும் அளித்துள்ளார். அத்தனையையும் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதத்தில் அழகாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை: அரிசி - 250 கிராம், வெல்லம் - 500 கிராம், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 20, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உலர்ந்த திராட்சை - 20, பால் - 200 மில்லி, குங்குமப்பூ - ஒரு சிட்டிக

செய்முறை: அரிசியை லேசான சூட்டில் வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு... பாலும் தண்ணீரும் சேர்த்து நான்கு பங்கு என்ற அளவில் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு, சிறிது கொதித்தவுடன் வடிகட்டி, உருட்டும் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் பாகு சேர்த்து... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். உலர்ந்த திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுத்துப் போடவும். குங்குமப்பூ மற்றும் மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: அம்மனுக்கு பூஜை செய்யும்போது இந்தப் பொங்கல் மிகவும் சிறந்தது. விருப்பப்பட்டால், சிறிது பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.

சோள வடை

தேவையானவை: இனிப்பு சோளம் (ஸ்வீட் கார்ன்) - 4 கதிர், பொட்டுக்கடலை - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இனிப்பு சோளத்தை கத்தியின் உதவியால் சுரண்டி எடுத்து... பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சோளத்தில் புரதச் சத்து அதிகம். சோளம் அதிக மாக கிடைக்கும் சீஸனில் வடை, அடை, சூப், கஞ்சி என விதம்விதமாக தயாரித்து சாப்பிடலாம்.

வெண் பொங்கல்

தேவையானவை: அரிசி - 250 கிராம், நெய் - 100 மில்லி, பாசிப்பருப்பு - 100 கிராம், மிளகு - 20, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து, சிறிதளவு நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையையும் நெய்யில் வறுக்கவும். வேக வைத்த அரிசி - பருப்பு கலவையுடன் வறுத்த முந்திரி, வறுத்த மிளகு - இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாகக் கலக்கினால்... வெண் பொங்கல் தயார்.

குறிப்பு: மார்கழி மாதத்தில் கோயில்களில் இந்த வெண் பொங்கல் அதிகாலை நைவேத்யம். வடை - தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

கீரை வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பொடியாக நறுக் கிய கீரை - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை : உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டி... இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பொடி யாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: முருங்கைக் கீரை, முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு வகை கீரையில் செய்யலாம். இதற்கு சாம்பார் சிறந்த காம்பினேஷன்.

புளி பொங்கல்

தேவையானவை: அரிசி - 250 கிராம், புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உப்புமா ரவை போல உடைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு... கடுகு, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளிக்கவும். புளித் தண்ணீருடன் நான்கு மடங்கு தண்ணீர் கலந்து இதில் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், உடைத்து வைத்து இருக்கும் அரிசி ரவையை தூவிக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு, நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: இது, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் பிடித்த பொங்கல். புளிப்பும், காரமுமாக...நல்லெண்ணெய் மணத்துடன் அசத்தலான சுவையில் இருக்கும்.

துவரைக்காய் அவல் வடை

தேவையானவை: பச்சைத் துவரைக்காய் - 200 கிராம், (தோல் உரித்து எடுக்கவும்), கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, அவல் - ஒரு கப் (ஊற வைக்கவும்), எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரைக்காயுடன் பச்சை மிளகாய், அவல், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். மாவுடன் துருவிய கேரட், வாழைத் தண்டு, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து... எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: துவரைக்காய் சீஸனில் இந்த வடை மிகவும் ஸ்பெஷல் அயிட்டம். துவரைக்காயில் பொரியல், குருமா, கூட்டு என பலவிதமான 'டிஷ்’கள் தயாரிக்கலாம் .

மசால் வடை

தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். தோல் சீவி, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயை பருப்புடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக் கிய கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்க வும்.

குறிப்பு: சாம்பார் - சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். புதினாவை நறுக்கி சேர்த்தும் செய்யலாம்.

சோளம் பார்லி அவல் பொங்கல்

தேவையானவை: பார்லி - 100 கிராம், அவல் - 250 கிராம், உடைத்த சோளம் - ஒரு கப், மிளகு - சீரகம் (பொடித்தது) - 2 டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு - 20, நெய் - 100 மில்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பார்லி, அவல், சோளம் மூன்றையும் தனித்தனியாக தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அவற்றை ஒன்று சேர்த்து, மூன்று மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். சிறிதளவு நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சியை வறுத்து... வேக வைத்த சோளம், பார்லி, அவல் கலவையுடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை விட்டு... உப்பு, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: சுகர் கம்ப்ளெயின்ட் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்தப் பொங்கல்.

ரவை பொங்கல்

தேவையானவை: வறுத்த ரவை - கால் கிலோ, மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), வறுத்த முந்திரிப் பருப்பு - 10, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 100 மிலி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகு - சீர கத்தை பொடித்துக் கொள்ள வும். கடாயில் நெய் விட்டு... பொடித்த மிளகு - சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதில், ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்கும்போது ரவையை போட்டு கிளறி, இறக்கி முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.

குறிப்பு: இது, எளிதாக செய்யக் கூடிய பொங்கல். புதினா சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

தயிர் வடை


தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பச்சை மிளகாய் - 3, மிளகு - 10, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கேரட் துருவல் - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, தயிர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். மாவை நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கெட்டியான தயிரைக் கொட்டி வைக்கவும். லேசாக சூடாக்கிய தண்ணீரில் வடைகளை போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு பெரிய பிளேட்டில் பரவலாக வைக்கவும். மேலே கொத்தமல்லி, கேரட் துருவல் போட்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு: தயிர் மிகவும் புளிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். இஞ்சி, புதினா, கொத்தமல்லியை அரைத்து தயிரில் கலந்தும் தயிர் வடை தயாரிக்கலாம்.

வெரைட்டி வெஜிடபிள் வடை


தேவையானவை: உளுத்தம்பருப்பு - 200 கிராம், கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், புதினா - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவு டன் கேரட் துருவல், கோஸ் துருவல், குடமிளகாய், புதினா, பட்டாணி சேர்த்துப் பிசைய வும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை வடை களாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்வும்.

குறிப்பு: அவரவர் விருப்பப் படி பிடித்த காய்களை பொடி யாக நறுக்கி சேர்த்து வடை தயாரிக்கலாம். இந்த வடைக்கு சில்லி சாஸ், தக்காளி சாஸ் சிறந்த காம்பினேஷன்.

பால் பொங்கல்

தேவையானவை: அரிசி - 250 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 500 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 20, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, நெய் - 100 மில்லி.

செய்முறை: அரிசியுடன் பாலை கலந்து குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். இதனுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு இறக்கவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதில் கல்கண்டு சேர்க்கலாம். பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு வறுத்து சேர்க்கலாம்.

ஜவ்வரிசி வடை

தேவையானவை: ஜவ்வரிசி - 250 கிராம், பார்லி, அவல் - தலா அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பார்லி, ஜவ் வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, அவல் சேர்த்துப் பிசையவும். இதனுடன் உப்பு, இஞ்சி, வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து பக்கோடா போல கிள்ளிப் போட்டும் பொரிக்கலாம். இதற்கு சாஸ், சட்னி சிறந்த காம்பினேஷன்.

வெஜிடபிள் பொங்கல்

தேவையானவை: பாசிப்பருப்பு (வறுத்தது) - 100 கிராம், அரிசி - 250 கிராம், கோஸ் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பட்டாணி - தலா ஒரு கப், இஞ்சி (துருவிக் கொள்ளவும்) - ஒரு சிறிய துண்டு, மிளகு - 20, சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பாசிப்பருப்பை கலந்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகு - சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுக்கவும். நறுக்கிய, துரு விய காய்கறிகள் எல்லாவற் றையும் கடாயில் போட்டு... நெய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வேக வைத்த சாதத்துடன் வதக்கிய காய் கறிகள், வறுத்த மிளகு - சீரகம், முந்திரி, நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

குறிப்பு: காய்கறிகள் சாப் பிடாத குழந்தைகளை இப்படி காய்கள் சேர்த்த பொங்கல் செய்து சாப்பிட வைக்கலாம். உலர்ந்த திராட்சை, ஸ்வீட் கார்ன் சேர்த்தும் செய்யலாம்.

ஃப்ரூட்ஸ் பொங்கல்

தேவையானவை: அரிசி - கால் கிலோ, உலர்ந்த திராட்சை - 20, மாதுளை முத்துக்கள் - ஒரு கப், வாழைப்பழம் - 2, ஆப்பிள் - ஒன்று, சப்போட்டா - 2, பப்பாளிப்பழத் துண்டுகள் - ஒரு கப், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 10, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: அரிசியை நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைவாக வேகவிடவும். ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வாழைப்பழத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கவும். சப்போட்டாவை தோல் உரித்து விதை நீக்கி நறுக்கவும். பப்பாளியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த சாதத்தை ஒரு அகலமான பேஸினில் போட்டு, எல்லா பழங்களையும் சேர்த்து, நெய் விட்டு, உப்பு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். மேலே உலர்ந்த திராட்சையை தூவவும்... ஃப்ரூட்ஸ் பொங்கல் ரெடி!

குறிப்பு: வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற பொங்கல் இது. பிஸ்தா, பாதாம், பேரீச்சை சேர்த்தும் தயாரிக்கலாம்.

பேரீச்சை அடை .......தஹி சாட்

தஹி சாட்

தேவையானவை: புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 2 கப், ஆம்சூர் பவுடர் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்கா யம் - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

இனிப்பு சட்னிக்கு: பேரீச்சம்பழம் - 50 கிராம், உலர்ந்த திராட்சை - 50 கிராம், புளிக் கரைசல் - 3 டீஸ்பூன், வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, கொதித்ததும் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையை அதில் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து... புளிக் கரைசல், வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால்... இனிப்பு சட்னி ரெடி!

ஒரு கிண்ணத்தில் இனிப்புச் சட்னி விட்டு, அதனுடன் ஆம்சூர் பவுடர், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையுடன் புளிக்காத கெட்டித் தயிரைக் கலக்கவும். எல்லாவற்றையும் கலந்த பின், அந்தக் கலவையின் மேல், ஓமப்பொடி தூவி... நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சாப்பிடும்போது ஸ்பூனால் கலக்கிச் சாப்பிட்டால்... இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு என பலவித சுவையுடன் இருக்கும்.

- ஆர்.மங்களம், ஸ்ரீரங்கம்

பேரீச்சம்பழ இலை அடை

தேவையானவை: அரிசி மாவு, மைதா மாவு, - தலா கால் கிலோ, பால் - அரை லிட்டர், பால் பவுடர் - கால் கப், பேரீச்சம்பழம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், முந்திரி - 20, ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை: பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து அதில் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

முந்திரியை நன்கு பொடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தை ஊற வைத்து நைஸாக அரைத்து... அதனுடன் தேங்காய் துருவல், பால் பவுடர், பொடித்த முந்திரி, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலியில் லேசாக புரட்டவும். பூரணம் தயார்.

நறுக்கிய வாழை இலையை ஒரு தட்டில் வைத்து, மாவுக் கலவையை விட்டு ஒரு ஸ்பூனில் பூரணத்தை வைத்து, இலையின் மறுபாதியால் மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

- கே.விஜயலட்சுமி, சென்னை-41

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

தஹி சாட்: கைப்பிடியளவு கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்த கார சட்னியைச் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.

பேரீச்சம்பழ இலை அடை: பேரீச்சம்பழத்துடன், உலர்ந்த திராட்சை சிறிதளவு சேர்த்தால்... சுவை, மணம் கூடும்.

Sunday, November 27, 2011

கர கர காளான் வடை!

ஷாஹி துக்கடா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, பால் - 3 கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, திராட்சை - 10.

செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி, அதில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரத்தில் உள்ள பிரவுன் பகுதிகளை 'கட்’ செய்து விட்டு, நான்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை நெய்யில் 'மொறுமொறு’வென பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு பால் கலவையில் ஐந்து நிமிடம் ஊற வைத்து, முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, பால் - பிரெட் கலவை மீது தூவி பரிமாறவும்.

- அஸ்வினி ஆனந்த், அம்பத்தூர்

காளான் வடை



தேவையானவை: பட்டன் காளான் - அரை கிலோ, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பையும் வேர்க்கடலையையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பாதி அரைக்கும்போது, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பிறகு, காளானை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உப்புத் தண்ணீரில் அலசவும். வெறும் கடாயில் காளானைப் போட்டு வதக்கவும். அதில் இருக்கும் தண்ணீர் வற்றி காளான் சுருண்டு வந்ததும் இறக்கி, அரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் சேர்க்கவும். இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்... சுவையான காளான் வடை ரெடி!

- எஸ்.கோகிலாம்பாள், திருச்சி

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...ஷாஹி துக்கடா: பாலின் அளவைக் குறைத்து, பால் பவுடர் அல்லது 'மில்க் மெய்ட்' சேர்த்தால் சுவை கூடும்.

காளான் வடை: வேர்க்கடலையை ஊற வைத்து அரைக்காமல், மிக்ஸியில் கொரகொரவெனப் பொடித்துப் போட்டால் வடை 'க்ரிஸ்பி’யாக இருக்கும்.

30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி

சாப்பாட்டுக்கு 'டிமிக்கி’ கொடுக்கும் குழந்தைகள்கூட, 'இன்னிக்கி பூரி பண்ணப் போறேன்’ என்று சொன்னால், 'ரெடியா?’ என்று உடனே பரபரப்பார்கள்.

அப்படி குட்டீஸ் முதல், சீனியர் சிட்டிசன்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் 30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி, ''எண்ணெய் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதால், பூரி வகைகளை அளவோடு செய்து கொடுத்து ஆரோக்கியத்தோடு வாழுங்கள்'' என்று வாழ்த்துகிறார்.

அத்தனை பூரியையும் அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை, ரவை - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவையையும், சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன், உப்பு, அரைத்த ரவை - சர்க்கரை, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொஞ்சம் கனமானக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: மாவு பிசைந்தவுடனே பூரி செய்தால் எண்ணெய் ஒட்டாமல் இருக்கும்.

பேல் பூரி

தேவையானவை: அரிசிப் பொரி - 3 கப், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை, ஓமப் பொடி, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் - தலா கால் கப், சாட் மசாலா - கால் டீஸ்பூன்.

கார சட்னிக்கு: கொத்தமல்லி, புதினா - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு.

ஸ்வீட் சட்னிக்கு: புளி - 50 கிராம், வெல்லம் - கால் கப், பேரீச்சம்பழம் - சிறிதளவு, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால்... கார சட்னி தயார். வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். ஊற வைத்த புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அதை புளி - வெல்லக் கரைசலில் விட்டு கொதிக்க வைத்து... மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கினால்... ஸ்வீட் சட்னி ரெடி.

வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசிப் பொரி, வெங்காயம், கேரட், தக்காளி, வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கொள்ளவும். ஸ்வீட் சட்னி, கார சட்னியை கலந்து... அதன்மேல் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பானி பூரி

தேவையானவை: ரவை - அரை கப் மைதா - அரை டீஸ்பூன், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, சோடா உப்பு, சர்க்கரை, உப்பு அனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டையாக உருட்டவும்.

அவற்றை சிறு பூரிகளாக இட்டு பொரிக்கவும். பூரியின் நடுவில் ஓட்டை போட்டு உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி ஊற்றி பரிமாறவும்.

ரவா பூரி

தேவையானவை: மைதா, மெல்லிய ரவை - தலா ஒரு கப், நெய் - கால் கப், பால் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு நெய்யை உருக்கி, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரெட் தூள் போல செய்து, பாலை விட்டு கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). 15 நிமிடம் ஊறிய பின் சிறிது கனமான பூரியாக இட்டு, பொரிக்கவும். இந்த பூரி மிகவும் கரகரப்பாக இருக்கும்.

தக்காளி பூரி

தேவையானவை: மைதா - ஒரு கப், கோதுமை மாவு - ஒன்றரை கப், தக்காளி - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, சீரகத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு வடிகட்டி... சிறிதளவு மைதா மாவை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதி மைதா மற்றும் கோதுமை மாவை கலந்து பிசைந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே எடுத்து வைத்திருக்கும் மைதா மாவில் புரட்டி, சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ஷாஹி பட்டூரா

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா மாவு - அரை கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், ஈஸ்ட்,

ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், மோர் - ஒன்றரை கப், சூடான பால் - அரை கப், ஸ்பிரிங் ஆனியன் - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதலில் ஈஸ்ட்டை இளம் சூடான பாலில் போட்டு பொங்கி வரும் வரை வைக்கவும். பின் இந்த கரைசலுடன் கோதுமை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, ஓமம், நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன், மோர், உப்பு சேர்த்துப் பிசையவும். சிறிது நேரம் ஊற வைத்தால் பொங்கி வரும். பின்னர் மாவை எடுத்து சற்று கனமாக பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

தேங்காய் பூரண பூரி

தேவையானவை: கோதுமை மாவு (அல்லது) மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ரவை - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: தேங்காய் துருவல், ரவை, சர்க்கரை மூன்றையும் கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவு (அல்லது) மைதா மாவை ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். உருண்டையை எடுத்து குழி போல் செய்து, அதில் தேங்காய் கலவையில் சிறிது வைத்து மூடி, மெல்லிய பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: தேவையானால், பொடித்த சர்க்கரையை மேலே தூவி பரிமாறலாம்.

ஸ்டஃப்டு வெஜ் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், நெய் - 2 ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மசாலாவுக்கு: வெங்காயம், தக்காளி, வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா ஒன்று , கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து... கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு கிளறவும். பிறகு நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். கோதுமை மாவு, மைதா மாவு, நெய், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை பூரிகளாக தேய்க்கவும் ஒரு பூரியில் மசாலாவை வைத்து, மற்றொரு பூரியை மேலே வைத்து, தண்ணீரால் தொட்டு மூடவும். பிறகு காயும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

பசலைக்கீரை பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பசலைக்கீரை - 2 கட்டு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ஆறிய பிறகு விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான மாவாக பிசைய வும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

சோம்பு பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மைதா மாவு - அரை கப், ரவை - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒன்றரை கப் தண்ணீரை சுடவைத்து அதில் சோம்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற விடவும். கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சர்க்கரை, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, அதில் சோம்பு, வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

மசாலா பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை - அரை டீஸ்பூன், தயிர் - கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, தயிர், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறிது நேரம் ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

காரப் பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 3 கப், ரவை, கடலை மாவு - தலா 2 டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, ரவை, கடலை மாவு, ஓமம், மிளகாய்தூள், உப்பு, நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

மசாலா சீஸ் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 2, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ் - ஒரு துண்டு (துருவிக் கொள்ளவும்), கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி - சிறிய துண்டு, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் (அல்லது துருவிக் கொள்ளவும்). இஞ்சி - பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். வெங்காயம், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். கோதுமை மாவு, மைதாவுடன் துருவிய சீஸ், வதக்கிய வெங்காயம் - இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, நெய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

பிரெட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 3 கப், பிரெட் - 8 ஸ்லைஸ், புளிப்பான கெட்டித் தயிர் - அரை கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலிக்கவும். பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு ஒவ்வொன்றாகத் தண்ணீரில் தோய்த்து உடனே பிழிந்து எடுத்து கையால் நன்றாக மசிக்கவும். இதனுடன் சலித்த மாவு, தயிர் சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). இதை 2 மணி நேரம் ஊற வைத்து பெரிய உருண்டைகளாக செய்து, மைதா மாவில் புரட்டி, சற்று பெரிய பூரி போல் இடவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

புதினா கொத்தமல்லி பூரி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, புதினா - தலா அரை கப், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

வடப்பி

தேவையானவை: சோள மாவு - இரண்டரை கப், கோதுமை மாவு - ஒரு கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு கைப்பிடி அளவு, அரிசி மாவு - அரை கப், புளிக்காத தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - கால் கப் (மாவுக்கு), துருவிய வெள்ளரிப் பிஞ்சு - 2 கப், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பொரிப்பதற்கான எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். மாவை சற்று கனமான பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: மாவை பிசைந்த உடனேயே பூரிகளாக இட்டு பொரித்துவிட வேண்டும்.

காலிஃப்ளவர் மசாலா பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மசாலா பூரணத்துக்கு: துருவிய காலிஃப்ளவர் - 2 கப், தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி - தலா 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள், பேக்கிங் பவுடர், மிளகாய்த்தூள், சீரகத்தூள், நெய் ஆகியவற்றை தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவல், உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்தால்... மசாலா பூரணம் தயார்.

பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நடுவில் மசலா பூரணம் வைத்து, பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

பாதாம் பூரி

தேவையானவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை, பாதாம் - தலா ஒரு கப், குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய் - 5, கேசரி பவுடர் - சிறிதளவு, பால் - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: வெந்நீரில் பாதாமை போட்டு ஊற விடவும். பிறகு தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, கேசரி பவுடர், அரைத்த பாதாம், பொடித்த சர்க்கரை மற்றும் பால் சேர்த்துப் பிசையவும். மாவை உருண்டைகளாக்கி, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

மேத்தி பூரி

தேவையானவை: கோதுமை மாவு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை - தலா 2 கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

தக்காளி சீஸ் பூரி

தேவையானவை: மைதா, கோதுமை மாவு, தக்காளி சாறு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீஸ் துருவல் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், சீஸ் துருவல், உப்பு, தக்காளி சாறு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

கேரட் பூரி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், துருவிய கேரட் - அரை கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட் துருவலை சிறிது நேரம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுதை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ஆலு பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 2 கப், உருளைக்கிழங்கு (வேக வைத்து, தோல் உரித்து, மசித்தது) - ஒன்றரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்). பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து ஒவ்வொன்றாக பொரிக்கவும்.

குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.

தால் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், தனியாதூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிபருப்பை ஒரு பத்திரத்தில் வேக வைத்து (குக்கர் தேவையில்லை), தண்ணீர் இல்லாமல் வடித்து... உப்பு, பச்சை மிளகாய் விழுது, தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவை சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை சற்று கனமாக பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

மத்ரி

தேவையானவை: மைதா - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - 2 சிட்டிகை, ஓமம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும். 15 நிமிடம் ஊற விட்டு, உருண்டைகளாக உருட்டி, சற்று கனமாக இடவும். பின் சிறு வட்ட மூடி (அ) கிண்ணத்தால் வெட்டி முள்கரண்டியால் குத்திவிட்டு, பின்னர் எண்ணெயில் பொரிக்கவும். இது ஒரு குஜராத்தி உணவு.

கேரட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 2 கப், மசித்த கேரட் விழுது - ஒரு கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓரு பாத்திரத்தில் தயிர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றைப் போட்டு கரைக்கவும். இதை மைதா மாவில் சேர்த்துப் பிசிறி, கேரட் விழுதை சேர்த்து நன்கு பிசையவும். இதை ஈரத்துணியால் மூடி மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து பொங்க விடவும். பிறகு மாவை கனமான பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

லுச்சி

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், ஓமம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவில் உப்பு, ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சிறிது ஊறியவுடன் பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும் இந்த வகை பூரி மேற்கு வங்காளத்தில் புகழ் பெற்ற உணவாகும். உருளைக்கிழங்கு சப்ஜி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

இன்ஸ்டன்ட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு - 3 கப், சாதா சோடா - ஒரு பாட்டில், சர்க்கரை - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோடாவில் உப்பையும் சர்க்கரையும் போட்டு நன்கு நுரைக்கும்படி கலக்கவும். பிறகு அதை மைதா மாவுடன் சேர்த்துப் பிசையவும். சிறிது ஊற வைத்து, சற்று கனமான பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

மிளகு சீரக பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா - தலா முக்கால் கப், மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகையும், சீரகத்தையும் வாணலியில் சிறிது சூடு செய்து பொடித்துக் கொள்ளவும். மாவுகளை ஒன்றாக்கி, உப்பு போட்டு கலந்து, அதில் மிளகு - சீரகப் பொடியை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறிது ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ராகி பூரி

தேவையானவை: கேழ்வரகு மாவு - 2 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், ரவை - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை சேர்த்து, கெட்டியாக பிசையவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

கசகசா பூரி

தேவையானவை: மைதா மாவு - 2 கப், நெய் - 5 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பூரணத்துக்கு: கசகசா (அரைத்த விழுது) - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் நெய், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து கசகசா விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். பூரணம் தயார்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, பூரணத்தை நடுவில் வைத்து பரப்பி, ஓரத்தை சேர்த்து மூடி, பூரிகளாக தேய்க்கவும். பிறகு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

கம்யூனிசமே இப்படித்தானா?

ஹிட்லரை பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கேட்பவரை உடனே பாதித்துவிடும். அது எந்தவிதமாக என்பது வேறுவிஷயம். அவரது நோக்கம் கேட்பவர் தன் வார்த்தைகளால் உலுக்கப்பட வேண்டும். அதுதான் முக்கியம். இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லோருமே கொஞ்சம் துணுக்குற்றிருப்பீர்கள். எனக்கு அதுதான் வேண்டும். எனக்கு மட்டுமல்ல பதிவுலகில் பெரும்பாலானோருக்கு இதுதான் வேண்டும். பதிவுலகிற்கு வந்து கொஞ்ச நாளிலேயே நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ஒரு வார்த்தையை பார்த்தவுடன், அதை சொன்னவர் யார்? என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சரி இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள்? யாரும் நினைவுக்கு வரவில்லையா? சரி விடுங்க. அடுத்த பத்திக்கு போகலாம்.


நான் பதிவுலகிற்கு வரும் முன்னரே கம்யூனிசம் மீது கொஞ்சம் ஆர்வம் இருந்தது. அதை பற்றி தெரிந்து கொள்ள பல முயற்சிகள் எடுத்தேன். அதன் பின்னர் பதிவுலகில் நிறைய தோழர்கள் எழுதுகிறார்கள் என்றவுடன், அது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் எண்ணி மகிழ்ந்தேன்.சில பல பதிவுகளை படிக்க தொடங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் இல்லாமல் போய்விட்டது. சொல்லப்போனால் இப்போதெல்லாம் கம்யூனிசம் என்றால் ஏதோ தீவிரவாதிகளின் சித்தாந்தம் என்பது போல தோன்றுகிறது. இது இவர்களின் பிரச்சனையா? இல்லை கம்யூனிசமே இப்படித்தானா? இல்லை எனக்குத்தான் பிரச்சனையா? என்று தெரியவில்லை. என்னை மாதிரியான ஆட்களுக்கென்றே பிரேத்யேகமாக ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் "பொதுபுத்தியில் உறைந்து போன நடுத்தர வர்க்கம்". இந்த வார்த்தைகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு "தெருநாயின் புத்தியை உடைய", என்றே காதில் கேட்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னை ஒரு ஈனபிறவியாக நினைக்க வைத்த பெருமை பதிவுலக காம்ரேடுகளையே சாரும். என்னை பொறுத்தவரை ஒருவன் கீழ்நிலையில் இருக்கிறான் என்றால் அவனுக்கு போதிய அறிவை கற்பித்து அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர மிகுந்த பொறுமை வேண்டும். அந்த மாதிரி கீழ்நிலையில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு இவர்கள் எழுதும் வார்த்தைகள் வெறும் நக்கல் நையாண்டியாகவும், கோபமேற்றுவதாகவுமே உள்ளது. இதுதான் அவர்களது எழுத்தின் நோக்கமா?


சமீபத்தில் நடிகர் அஜீத் அவர்களைப்பற்றிய ஒரு கடுமையான விமர்சன கட்டுரையை ஒரு தளத்தில் அவர்கள் எழுதி இருந்தார்கள். அதனை படித்த கோபத்தில்தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு முன்னால் சூர்யா பற்றியும் எழுதி இருந்தார்கள். இது மட்டுமல்லாமல் அப்துல்கலாம், உதயமூர்த்தி உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள் பற்றியும், அவ்வப்போது அருவருக்கத்தக்க வார்த்தைகளை நிரப்பி கட்டுரைகள் எழுதுவது வாடிக்கை. அந்த வகையில் அஜீத் பற்றி எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையில் அவர்களது அடிப்படை சித்தாந்தக் கருத்துக்களையும் சேர்த்திருந்தார்கள். இந்த கட்டுரையை படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம், அஜீத் செய்தது சரியா தவறா? அடுத்தவருக்கு அன்பின் வெளிப்பாடாக விருந்து படைக்க வேண்டுமானால் கூட அதற்கு தோழர்களின் சம்மதம் வாங்கவேண்டும் போலிருக்கிறது. சமூகத்தில் பிறருக்கு நல்லது செய்பவனுக்கேன்றே சில தகுதிகள் வைத்திருக்கிறார்கள். அவன் பணம் சம்பாதிக்கக்கூடாது, சிகப்பாக இருக்கக்கூடாது, குறிப்பாக இந்துவாகவோ,பார்ப்பனராகவோ இருக்கக்கூடாது. அப்படி உதவி செய்தாலும் அதை வெளியே சொல்லக்கூடாது. ஆனால் மேற்படி நடிகர் ஒரு சிகப்பு சட்டைக்காரராக இருந்திருந்தால், மேலே உள்ள தகுதிகள் எதுவும் செல்லாது. அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த ஜாதியை, எந்த மதத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சும்மா வந்து கொடி பிடித்தாலே அவரது போட்டோவோடு, "எல்லோராலும் 'தல' என்று அன்பாக அழைக்கப்படும் தோழர் அஜீத்குமார்!!", என்று கட்டுரை எழுதுவார்கள். இதுதான் கம்யூனிசமா? எனக்கு தெரியவில்லை. உயர்சாதியில் பிறந்ததாலேயே ஒருவன் அயோக்கியனாகத்தான் இருப்பான் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கருத்து.


"ஹிந்துவாக பிறந்தவனுக்கு தன்மானம் என்பதே கிடையாது.", என்கிற நோக்கில் இவர்கள் எழுதும் கட்டுரைகள் விழிப்புணர்வுக்கு மாறாக, கோபத்தையே உண்டு பண்ணுகிறது. இவர்களின் கட்டுரை எப்போதுமே சிறுபான்மையினரை நோக்கியே இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும், அங்கே சிறுபான்மையினரை கவர்ந்திழுப்பதே இவர்களது நோக்கம். ஏனென்றால் அவர்கள்தான் கொஞ்சம் சீண்டினாலும் சிலிர்த்து எழுந்து விடுவார்கள். முதலில் இவர்களது கட்டுரைகளில் கொஞ்சம் நியாயம் இருப்பது போல தென்பட்டாலும், இவர்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து எழுதுவது, அதனை எதிரியாக பாவிப்பவர்களை கவர்வதற்காக, என்று அப்பட்டமாக தெரிகிறது. அதே போல, "இந்த சமூகத்தில் நல்லது செய்பவன் கண்டிப்பாக கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும். அதிலும் அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும்.", என்ற நோக்கம் இவர்களது கட்டுரைகளில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு கட்டுரையிலும 'பார்ப்பன' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தவறுவதே இல்லை. சரி அவர்கள் சித்தாந்தப்படி எண்ணவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும். சம்பந்தப்பட்ட கட்டுரை படிப்பவர்களை சிந்திக்க வைப்பதை விட, வெறியேற்றவே செய்கிறது. குறிப்பிட்ட மனிதரை, சாதியை, எதிரியாக பாவிப்பவர்கள் தங்களது வயிற்றெரிச்சலை போக்கி கொள்ளும் இடமாகவே இருக்கிறது. படிப்பவர்கள் எந்த மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று இந்த மாதிரி எழுதப்படும் கட்டுரைகளுக்கு வரும் கருத்துரைகளைப் படித்தாலே தெரியும். இதுதான் அவர்களுக்கு வேண்டும். நாம் நினைப்பது போல புதிய சமுதாயம் மலரவேண்டும் என்பது அவர்களது நோக்கம் அல்ல. அவர்களின் நோக்கம் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்குவதுதான். அவர்களே பல இடங்களில் தங்களை நக்சல் அமைப்பு என்று பெருமைப்படக் கூறிக்கொள்கிறார்கள்.


இது போல சிகப்பு சாயம் பூசிக்கொண்டு மறைமுகமாக இந்தியாவில் பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவை புரட்சி என்ற பெயரில் நாட்டில் இனத்தின், மதத்தின், வர்க்கத்தின் பெயரால் குழப்பம் விளைவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. நாமெல்லாம் நினைப்பது போல தீவிரவாதிகள் தங்களுக்கென்று வைத்திருக்கும் வலைத்தளங்கள் அனைத்துமே, "நாங்கள் தீவிரவாதிகள்", என்று சொல்லிக்கொள்வதில்லை. "நாங்கள் சமூக ஆர்வலர்கள். புதிய சமுதாயத்தை மலரச்செய்வோம்.", என்றே கூறிக்கொள்கின்றன. நம் ஆழ்மனதில் உள்ள ஆதங்கங்களை கண்டு பிடித்து, அதற்கு புது அர்த்தம் கற்பித்து, நம்மை மூளைச்சலவை செய்து, ஒரு தேச விரோதியாக மாற்றுவதே இவர்களின் நோக்கம். இவர்கள் பின்னால் செல்வதும், ஒரு சாதி சங்கத்தலைவர் பின்னால் செல்வதும் ஒன்றுதான். இவர்கள், "இன்றுவரை இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது." என்று சொல்லி வருகிறார்கள். உண்மைதான். எல்லா நாடுகளுமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்புவரை கிடையாதுதான். அதற்காக அனைத்தையும் பிரித்து விட்டால் எஞ்சி இருப்பது சூடுகாடுகள் மட்டுமே. நண்பர்களே பூணூல் போட்டிருககும் எல்லாம் பார்பனியம் அல்ல. பல நேரங்களில் அது சிகப்பு சட்டையும் போட்டிருக்கும் என்பதை மறவாதீர்கள்.


பின்குறிப்பு: இந்த கட்டுரை எழுத. நான் அமெரிக்கா உள்ளிட்ட எந்த முதலாளித்துவ நாட்டிடமும், காங்கிரசிடமும், இந்து முன்னணி உள்ளிட்ட எந்த இந்துத்வா அமைப்பிடமும் கூலி எதுவும் பெறவில்லை. மேலும் சினிமாக்காரன் பின்னால் செல்லும் விசிலடிச்சான் குஞ்சும் அல்ல. நான் சாதாரண, தெருநாய் புத்தி உள்ள சாரி, பொதுபுத்தி உடைய நடுத்தர வர்க்கம். அவ்வளவுதான்.

Thursday, November 10, 2011

கல்லடிபடும் சச்சின்!

சோயிப் அக்தர் சச்சினை விமர்சித்து எழுதின புத்தகம், இப்போது டாப் செல்லர். இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஜெயவந்த் லீலே தன்னுடைய I Was There என்கிற புத்தகத்தில் சச்சினைத் தாக்கி, சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில், சச்சினைப் பற்றி லீலே சொன்னதெல்லாம் தினமும் பத்திரிகையில் வந்து கொண்டிருப்பதால் அந்தப் புத்தகமும் அதிக கவனத்துக்கு ஆளாகியிருக்கிறது. லீலே சொல்லும் குற்றச்சாட்டுகள் என்ன?

‘1999ல் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டில் தோற்றுப்போனவுடன் தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் சச்சின். ராஜினாமா கடிதத்தை என்னிடம் கொடுத்தபோது நான் பதறிப் போய்விட்டேன். தொடரில், இன்னுமொரு ஒரு டெஸ்ட் ஆடவேண்டி இருந்தது. ரவி சாஸ்திரி, ராஜ்சிங் துங்கர்புரிடம் பிரச்னையைச் சொன்னேன். அவர்களும் சச்சினிடம் பேசினார்கள். ஆனால் சச்சின் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. வேறுவழியில்லாமல் சச்சினின் மனைவி அஞ்சலியிடம் பேசி நிலைமையை எடுத்துச் சொன்னோம். அவர் சச்சினிடம் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறச் செய்தார். அடுத்த டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது.

ஒரு தேர்வுக்குழுக் கூட்டத்தில், மும்பை பந்துவீச்சாளர் நிலேஷ் குல்கர்னியைப் பரிந்துரைத்தார் சச்சின். ஆனால், அவர் பந்துவீசி சச்சின் பார்த்தது கிடையாது. அந்த ரஞ்சி டிராபி சீஸனில், மும்பை அணியிலிருந்து குல்கர்னியை நீக்கியிருந்ததையும் சச்சின் அறிந்திருக்கவில்லை. யாரோ ஒருவர் தவறாகச் சொன்னதை நம்பி ஏமாந்து போனார்.

1999ல் மேட்ச் பிக்ஸிங் உச்சத்தில் இருந்த நேரம். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்ச் ஒன்றில், இந்திய அணி, நியூசியை ஃபாலோ ஆன் செய்தது. இதனால், தாம் மீண்டும் பந்துவீசப் போவதாக நடுவர்களிடம் சச்சின் அறிவித்தார். ஆனால், இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கபில் மறுத்துவிட்டார். இறுதியில், ஜெயிக்கவேண்டிய டெஸ்ட் டிராவாகிப் போனது. வயதில் மூத்தவர்களுக்கு சச்சின் மிகுந்த மரியாதை அளிப்பார். அவர்கள் சொல்வதை அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். இப்படி நிறைய பேரின் ஆலோசனைகளை கேட்டதனால்தான், கேப்டனாக பிரகாசிக்க முடியவில்லை.’

இது போதாதென்று, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், ‘ஃபியர்ஸ் ஃபோகஸ்’ என்ற நூலில் சச்சினைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.

‘மலேசியாவில், 2006-ல் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சச்சின் சரியாக விளையாடவில்லை. இதையடுத்து ஒரு நாள், 2 மணி நேரத்துக்கும் மேல் என்னுடன் உரையாடினார். அவர் தனது அப்போதைய ஆட்டம் குறித்தும், காயங்கள் குறித்தும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். அவர் மீது கோடிக்கணக்கானோர் வைத்திருந்த எதிர்பார்ப்பின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். சில சமயங்களில் அவர் பலவீனமாக இருப்பார். அணியுடன் பயணம் செய்யும் போது தனது ஹெட் ஃபோனைக் கூட வைத்துக் கொள்ளமாட்டார். முழு கவனமும் விளையாட்டு பற்றியே இருக்கும். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனிடம் கூட மக்கள் இந்த அளவுக்கு எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1989 முதல் மக்களின் எதிர்பார்ப்பை அவர் சுமந்தே வந்துள்ளார். அவருக்கு நண்பர்களும் நிறைய பேர் கிடையாது.’

2007 உலகக் கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தது பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட சேப்பல், ‘இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மாஃபியா கும்பல் போலச் செயல்பட்டு இளம் வீரர்களை மிரட்டுகிறார்கள்,’ என்று பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்த சச்சின், ’உலகக் கோப்பை போட்டியின்போது வீரர்கள் யாரிடமும் அவர் பேசவே இல்லை. நாங்கள் ஏதாவது கருத்து கூறினால் அதை ஏற்க மறுத்தார். பயிற்சியாளரே இப்படி நடந்து கொண்டால், எப்படி வீரர்களால் சிறப்பாக விளையாட முடியும்,’ என்று கூறினார். அதற்குத்தான் இப்போது மலேசியா தொடரைக் கையில் எடுத்திருக்கிறார் சேப்பல்.

இப்படி கிரிக்கெட் புத்தகம் எழுதுபவர்களெல்லாம் ஏன் சச்சினைக் குறி வைக்கவேண்டும்? புத்தக வெளியீட்டின்போது, சச்சின் குறித்த கருத்துகளை மட்டும் ஏன் மீடியாவுக்கு அளிக்கவேண்டும்?

இதற்கெல்லாம் ஒரே பதில். புத்தகம் அதிக கவனம் பெறவேண்டும். அதிக காப்பிகள் விற்கவேண்டும். ஜெயவந்த் லீலே போன்றவர்கள் ஒரேநாளில் தன் வாழ் நாள் புகழை அடைவார்கள். நிச்சயம் சச்சின் யார்மீதும் மானநஷ்ட வழக்கு போடமாட்டார். சச்சினைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால், அதில் தகவல்கள் மிகச்சரியாக இருக்க வேண்டும். மேலும், ஒரு கிரிக்கெட் வீரர் என்பவர் ரோபோ கிடையாது. எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல் வாழ்வதற்கு. அவர் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும்போதுதான் ரசிகர்களின் கடும் கோபத்துக்கு ஆளாகிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் சச்சின் நிராகரித்து மௌனம் காப்பதுதான் சரியான பதிலடியாக இருக்கிறது.

சூப்பர் சமையல்.................

ஸ்டீம் பனீர் டிலைட்

தேவையான பொருள்கள்:

மைதா மாவு - 1 கப்,

உப்பு - தேவையான அளவு,

பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,

பூரணம் செய்ய:

துருவிய பனீர் - 1/2 கப்,

வெங்காயம் - 2,

பூண்டு - 5-6

துருவிய கோஸ் - 1/2 கப்,

சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,

மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,

சிவப்பு மிளகாய் (அரைத்த விழுது) - 1/2 கப்,

சோயா சாஸ் - 2-3 டீஸ்பூன்,

வினிகர் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாவு தயாரிக்க:

* ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து தனியாக வைக்கவும்.

பூரணம் தயாரிக்க:

* ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* துருவிய கோஸ் சேர்த்து, வதங்கியவுடன், சீரகத் தூள், மிளகுத் தூள், மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

* பின்பு, பனீர், சோயா சாஸ், வினிகர் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

ஸ்டீம் பனீர் டிலைட் தயாரிக்க:

* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மிகவும் மெல்லிய சப்பாத்திகளாக இட்டு இரண்டு/மூன்று டீஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து, ‘பை’ போல் மூடவும்.

* பூரணம் வைத்த ‘பை’களை, இட்லித் தட்டில் அடுக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

* சூடான ஸ்டீம்ட் பனீர் டிலைட்’ ஐ, சாஸுடன் பரிமாறவும்.

சன்னா பாஸ்தா சூப்

தேவையான பொருள்கள்: பாஸ்தா - 1/2 கப், வேகவைத்த வெள்ளை கொண்டைக்கடலை - 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் - 1 கப் (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட் வேகவைத்து வடிகட்டிய தண்ணீர்), ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத் தாள்) - 1/2 கப், இஞ்சி, பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1/4 கப், ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன், சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* நான்-ஸ்டிக் பிரஷர் பான்-இல் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து, பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

* நன்கு வதங்கியவுடன், வெஜிடபிள் ஸ்டாக், பாஸ்தா சேர்க்கவும்.

* பின்பு, உப்பு, மிளகுத்தூள், தக்காளி சாஸ், சில்லி சாஸ், வெள்ளைக் கொண்டைக்கடலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்க விடவும்.

* சாஸ் மற்றும் வினிகருடன் பரிமாறவும்.

மாதுளை புதினா பச்சடி

தேவையான பொருள்கள்: மாதுளை முத்துகள் - 1/2 கப், துருவிய வெள்ளரிக்காய், காரட் - 1/2 கப், தேன் - 2 டீஸ்பூன், கறுப்பு மிளகுத் தூள் - 2 டீஸ்பூன், புதினா சட்னி - 1-2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, புளிக்காத தயிர் - 1 கப்

செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர் இட்டு, நன்றாகக் கலக்கவும். துருவிய வெள்ளரிக்காய், காரட், தேன், கறுப்பு மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு மாதுளை முத்துக்களைச் சேர்க்கவும்.

புதினா சட்னி சேர்த்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

மஷ்ரூம் கோலா புலாவ்

தேவையான பொருள்கள்: (மஷ்ரூம் கோலாவுக்கு), மஷ்ரூம் - 10, பொடித்த பொட்டுக்கடலை - 1/2 கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 5 பல், இலவங்கம் -1, பட்டை- தலா 1 , பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 1/4 கப், மிளகுத் தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய்-100 கிராம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை - 1/2 கப், உப்பு - தேவையான அளவு

புலாவுக்கு:

பாசுமதி அரிசி - 2 கப், தேங்காய்ப் பால் - 2 கப், வெங்காயம் - 4, தக்காளி - 3, இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4-5 (நீளமாக நறுக்கியது), புதினா - 1/4 கப்( பொடியாக நறுக்கியது), பட்டை, இலவங்கம், ஏலக்காய் - 1 (சிறியது), நெய் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

மஷ்ரூம் கோலா செய்முறை:

* மஷ்ரூமை நன்கு கழுவி, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, வெண்ணெயில் வதக்கவும்.

* பொட்டுக்கடலையை நைசாகப் பொடிக்கவும்.

* வதங்கிய மஷ்ரூமுடன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், பட்டை, இலவங்கம், பெருஞ்சீரகம், கொத்துமல்லி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* அரைத்த கலவையில், பொட்டுக் கடலை மாவைச் சேர்த்து, நன்கு பிசைந்து, நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

புலாவ் செய்முறை:

* பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தேங்காய்ப் பாலுடன் ஒரு கப் நீர் சேர்த்து ஊறவைக்கவும்.

* ஒரு பிரஷர் குக்கரில், நெய்+எண்ணெய், பட்டை, இலவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி- பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

* பிறகு தக்காளி, புதினா, மல்லித்தழை, மஞ்சள் தூள் சேர்த்து, ஊறிய அரிசியைப் பாலுடன் அதில் போட்டு, உப்பு சேர்த்து, நன்றாகக் கலக்கி, மூடி, ஒரு விசில் வந்ததும் 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

‘மஷ்ரூம் கோலா புலாவ்’ பரிமாற:

‘புலாவ்’வுடன், மஷ்ரூம் கோலா உருண்டைகளைச் சேர்த்து, சாதம் உடையாமல் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

சுவையான ‘மஷ்ரூம் கோஃப்தா புலாவ்’ விருந்துக்கு ரெடி!

கோபி பட்டர் கறி

தேவையான பொருள்கள்: காலிஃபிளவர் - 1 (சிறு பூக்களாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன் (2+2), மைதா மாவு - 1/2 கப், சோள மாவு - 1/2 கப், முந்திரி - 15, பால் - 1/2 கப், மிளகாய்த் தூள் - 3-4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2-3 (பொடியாக நறுக்கியது), தக்காளி விழுது - 1 கப், வெண்ணெய் - 1/2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள், உப்பு, தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்திற்குக் கலக்கவும்.

* காலிஃபிளவரை அதனுடன் சேர்த்து கலக்கி, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்பு, காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

* முந்திரியை, பாலில் அரை மணி முதல் 1 மணி நேரம் ஊறவிட்டு, தனியாக அரைக்கவும். பாலைத் தனியாக எடுத்து வைக்கவும்.

* ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து, சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* நன்கு வதங்கிய பின், தக்காளி விழுது, பொரித்த காலிஃபிளவர் சேர்க்கவும்.

* பின்பு, அரைத்த முந்திரி விழுது, பால் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போட்டு மூடிவிடவும்.

* நன்றாகக் கெட்டியானதும், வெண் ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சாக்கோ பிஸ்

தேவையான பொருள்கள்: பிரட் (ஸ்வீட்)- 6 துண்டுகள், பொடித்த சர்க்கரை - 1/2 கப், கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், போர்ன்விடா/பூஸ்ட் - 2 டீஸ்பூன், ஃபிரஷ் க்ரீம்-1 கப், பாதாம், பிஸ்தா - தலா 6 (துருவியது)

செய்முறை:

* பிரட்டை, நன்றாகப் பொடித்து ஒரு பெரிய பாத்திரம்/கிளாஸ் பௌலில் பிரட் தூள்களைப் போடவும்.

* அதில் பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர், போர்ன்விடா, பிரஷ் க்ரீம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

* நன்றாகக் கலக்கியதும், ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் கழித்து, துருவிய பாதாம், பிஸ்தா சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

* கேக்-இன் சுவையைத் தோற்கடிக்கும், எளிதான, சுவையான, சத்தான சாக்கோபிஸ்.

Tuesday, November 1, 2011

30 வகை ஈஸி ரெசிபி!

கடைக்குப் போனோமா... ஸ்வீட் பாக்ஸை வாங்கினோமா... முடிஞ்சுது தீபாவளி!' என்கிற நினைப்பு பெருகிவிட்ட காலம் இது. இதற்கு நடுவேயும், 'அது ஒரு முறுக்கா இருந்தாலும், என் கையால செய்து கொடுக்கறப்ப கிடைக்கற சந்தோஷமே தனி!' என்று நெகிழ்பவர்கள், அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரை மேலும் நெகிழ வைப்பதற்காக, இங்கே 30 வகை இனிப்பு - கார ரெசிபியுடன் உதவிக் கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்-2 என்றபடி, பயத்தமாவு லட்டு, வைட்டமின் சத்து கொண்ட நெல்லிக்காய் அல்வா என்று வித்தியாசமாக அவர் தந்திருக்கும் ரெசிபிகளை, கண்ணுக்கு குளுமையளிக்கும் முறையில் அலங்கரிக்கிறார் செஃப் ரஜினி!

மூவர்ண கேக்

தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், சர்க்கரை - 250 கிராம், கேசரி பவுடர் - சிறிதளவு, சாக்லேட் பார் - 4 (அல்லது பூஸ்ட் அல்லது போர்ன்விடா பவுடர் - 4 டீஸ்பூன்), நெய் - 100 மில்லி.

செய்முறை: மைதா மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை தண்ணீர் விட்டு கம்பிப்பதம் வரும் வரை பாகு காய்ச் சவும். மைதா மாவை மூன்று பங்காக பிரிக்கவும். சர்க்கரை பாகையும் மூன்று பங்காக பிரித்து... ஒரு பங்கு மைதாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகை சேர்த்துக் கலக்கி, சாக்லேட்டை கரைத்து விட்டு கிளறி, கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மீண்டும் ஒரு பங்கு மாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகு, கேசரி பவுடர் சேர்த்துக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மிகுந்த ஒரு பகுதி மாவுடன் மீதி சர்க்கரை பாகு சேர்த்துக் கிளறி (கலர் சேர்க்க வேண்டாம்) கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். ஆரஞ்சு, பிரவுன், வெள்ளை என்று மூன்று கலரில் பார்க்க அழகாக இருக்கும்.

பயத்தம் மாவு லட்டு

தேவையானவை: பயத்தம்பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை: பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும். சர்க்கரையும் தனியாக அரைத்து சலிக்கவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக கலந்து, உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: பயத்தம்பருப்பு குளுமை உடையது. வயிற்றுப்புண் வராமல் தடுக்கும்.

வள்ளிக்கிழங்கு அல்வா

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 250 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, நெய் - 100 மில்லி, கேசரி பவுடர் - சிறிதளவு.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு சூடாக்கி, சர்க்கரை கரைந்ததும் மசித்த வள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும். நெய்யை உருக்கி கொஞ்சம் கொஞ்சமாக அதில் விடவும். அல்வா பதம் வந்ததும்... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.

குறிப்பு: உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட்டிலும் இதேபோல அல்வா செய்யலாம்.

பாசிப்பருப்பு அசோகா

தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 500 கிராம், வறுத்த கோதுமை மாவு - ஒரு கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.

செய்முறை: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, ஊற வைத்து, வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விடவும். கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு, வறுத்த கோதுமை மாவு சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் விட்டு மேலும் கிளறி... குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஓம தட்டை

தேவையானவை: ஓமம் - 100 கிராம், மைதா மாவு - 250 கிராம், வெண்ணெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓமத்தை தண்ணீரில் அலசி எடுத்து, வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும். மைதா மாவு, உப்பு, வெண்ணெய், பொடித்த ஓமம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவை தட்டைகள் போல் செய்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: ஓம வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த தட்டையை ஓமம் சேர்க்காமலும் செய்யலாம். பிறகு அதைப் பொரித்து ஜீராவில் போட்டு பரிமாறலாம்.

கைமுறுக்கு

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணெய், சீரகம், உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை விரல் களால் சிறிய இழைகளாக முறுக்கி, வட்டமாக முறுக்கு வடிவில் சுற்றி ஈரத்தை உறிஞ்சும் துணியில் வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து, முறுக்கு சிறிது உலர்ந்ததும் எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: எண்ணெய் காய்ந்ததும் முறுக்கை கவனமாகப் போட்டு, எண்ணெய் ஓசை அடங்கி வரும்போது எடுக்கவும். சீரகத்துக்குப் பதில் எள்ளும் போடலாம்.

ஹெர்பல் ஓமப்பொடி

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், கடலை மாவு - 100 கிராம், ஓமம் - 25 கிராம், புதினா, துளசி இலை - தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டுப் பல் - 4, வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: ஓமத்தை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரில் அலசி எடுத்து... புதினா, துளசி இலை, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, தோல் உரித்த பூண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெயை ஒன்றாக சேர்த்து, வடிகட்டிய தண்ணீரை விட்டு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பிசைந்து வைத்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து, இருபுறமும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இது வாய்க்கு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.

ஜீரோ போளி

தேவையானவை: ரவை - 200 கிராம், கேசரி பவுடர் - சிறிதளவு, சர்க்கரை - 200 கிராம், எண்ணெய் - 250 மில்லி.

செய்முறை: ரவையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து, கேசரி பவுடர் சேர்த்து மேலும் பிசைந்து 2 மணி நேரம் மூடி வைக்கவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி, சிறிய அப்பள வடிவில் இடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அப்பள வடிவில் இட்டு வைத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஜீரா காய்ந்ததும் (கம்பிப் பதம்), பொரித்து வைத்ததை இருபுறமும் பாகால் நனையும்படி போட்டு எடுத்து தனியே வைக்கவும். ஜீரா மேலே பூத்து வந்ததும் அப்படியே சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். பாலை நன்கு காய்ச்சி போளியின் மேல் விட்டு, ஊறியதும் சாப்பிட்டால்... சுவையாக இருக்கும். மேலே குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் தூவலாம்.

மல்டி பருப்பு மிக்ஸர்

தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒவ்வொரு பயறாக பொரித்து எடுக்கவும். பொரித்த பயறுகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி, கறிவேப்பிலை பொரித்துப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: மழைக்காலத்தில் இந்த மல்டி பருப்பு மிக்ஸரை தயாரித்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்தால், ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.

மசாலா கடலை

தேவையானவை: அரிசி மாவு - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு

செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்துக் கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வேர்க்கடலையை மாவில் தோய்த்துப் போட்டு பொரிக்கவும்.

குறிப்பு: கொண்டைக்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.

கர்ச்சிக்காய்

தேவையானவை: ஈர அரிசி மாவு ( அரிசியை ஊற வைத்து, களைந்து, துணியில் போட்டு உலர்த்தி அரைத்த மாவு) - 200 கிராம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொட்டுக்கடலை - ஒரு கப், எண்ணெய் - 250 மில்லி.

செய்முறை: தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், வெல்லம் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். அரை லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை சொப்பு போல் செய்து, பொடித்து வைத்திருக்கும் பொடியுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி, உள்ளே வைத்து மூடவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து சொப்புபோல செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இது பாட்டி காலம் முதல் செய்யப்பட்டு வரும் பழைமையான ஸ்வீட்.

நாரத்தை இலை சீடை

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், நாரத்தை இலை - ஒரு கைப்பிடி அளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், நாரத்தை இலையை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அரிசி மாவு உளுத்தம் மாவுடன் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். மாவை சீடைகளாக உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சீடைகளைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: கொப்பரைத் தேங்காய் துருவலும் சேர்க்கலாம்.

கலர் கார முறுக்கு

தேவையானவை: ஈர அரிசி மாவு (பச்சரிசியை ஊற வைத்து, களைந்து, துணியில் போட்டு உலர்த்தி, அரைத்து, சலித்த மாவு) - 300 கிராம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் நிற கேசரி பவுடர் - சிறிதளவு, வெண்ணெய் - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று பாகமாக பிரிக்கவும். பிறகு ஒவ்வொரு பாகத்திலும் ஒரு கலர் பவுடரை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து தனித் தனியாக வைக்கவும். மாவை சிறிய இழைகளாக முறுக்கி, வட்டமாக முறுக்கு வடிவில் சுற்றி, ஈரத்தை உறிஞ்சும் துணியில் வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து முறுக்குகளைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மூன்று கலர்களில், பார்வைக்கு அழகாகவும், சுவையில் அசத்தலாகவும் இருக்கும் இந்த முறுக்கு.

மாலாடு

தேவையானவை: பொட்டுக்கடலை - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். சர்க்கரையையும் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்று சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய்யை சூடாக்கி மாவில் விட்டு, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை போட்டு கலந்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தூள் சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்.

எனர்ஜி லட்டு

தேவையானவை: பார்லி, ஜவ்வரிசி, அவல், பொட்டுக்கடலை - தலா 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், நெய் - 100 மில்லி, முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: பார்லி, ஜவ்வரிசி, அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து சலிக்கவும். சர்க்கரைப் பொடியுடன் மாவைக் கலந்து, நெய்யை லேசாக சூடுபடுத்தி சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டுக் கலந்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: இந்த உருண்டை ஒன்றை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் போதும்... உடம்பு புத்துணர்ச்சி பெறும்.

நியூட்ரிஷியஸ் மிக்ஸர்

தேவையானவை : அரிசி மாவு - 250 கிராம், கடலை மாவு - 250 கிராம், மிளகாய்த்தூள் - 25 கிராம், முந்திரிப் பருப்பு - 10, பாதாம் பருப்பு - 10, பிஸ்தா பருப்பு - 10, அவல் - ஒரு கப், பொட்டுக்கடலை - ஒரு கப், வேர்க்கடலை - ஒரு கப், கறிவேப்பிலை, சீரக மிட்டாய் - சிறிதளவு, ஓமம் (வறுத்துப் பொடித்தது) - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் சிறிதளவு எடுத்து (சம அளவு) உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

அரிசி மாவு, கடலை மாவை மீண்டும் சம அளவில் எடுத்து, உப்பு சேர்த்து, பொடித்த ஓமத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

சிறிதளவு கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி பூந்தி தேய்த்து எண்ணெயில் வேகவிட்டு எடுக்கவும்.

அவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து எடுக்கவும். பிஸ்தா, முந்திரி, பாதாம் பருப்பை நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையை பொரிக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, மிளகாய்த்தூள், சீரகமிட்டாய் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: காரம் அதிகம் போடாமல் தயாரித்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எள் தட்டை

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், எள் - 4 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் வறுத்த அரைத்த உளுத்தம் மாவு, எள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டை வடிவில் தட்டி, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் தட்டைகளைப் போட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: கறிவேப்பிலை, கொத்தமல்லிக்குப் பதிலாக புதினாவை பொடியாக நறுக்கிப் போட்டும் தட்டை செய்யலாம். எள்ளுக்குப் பதிலாக ஓமம், பொட்டுக்கடலை, உடைத்த வேர்க்கடலை சேர்த்தும் தயாரிக்கலாம்.

பொருள் விளங்கா உருண்டை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கொப்பரைத் தேங்காய் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - சிறிதளவு.

செய்முறை: வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுக்கவும். பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். கடலைப்பருப்பையும் தனியாக வறுக்கவும். பின்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். வெல்லத்தை நீரில் கரைய விட்டு இளம் பாகாக காய்ச்சவும் (லேசாக உருட்ட வரும் மெழுகு பதம்). நறுக்கிய கொப்பரையை நெய் விட்டு வறுத்து, சலித்து வைத்திருக் கும் மாவுடன் சேர்க்கவும். சுக்குத் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி, சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: இதில் என்ன பொருள் சேர்த்துள்ளது என்று கண்டுபிடிப்பதே கடினம் என்பதால்தான் இந்த உருண்டைக்கு 'பொருள் விளங்கா உருண்டை’ என்று பெயர். கெட்டியாக இருப்பதால் 'கெட்டி உருண்டை’ என்றும் கூறுவார்கள்.

ரஸ்க் முந்திரி ஃப்ரை

தேவையானவை: ரஸ்க் - ஒரு பாக்கெட், முந்திரிப் பருப்பு - 30, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - 4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை : அரிசி மாவுடன் பொடித்த ரஸ்க், கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முந்திரியை மாவுக் கரைசலில் தோய்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.

தேங்காய் பர்ஃபி

தேவையானவை: தேங்காய் - ஒன்று, சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். சர்க்கரையை கம்பிப் பதமாக பாகு காய்ச்சி... தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறவும். இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.

குறிப்பு: பாதாம், முந்திரியை அரைத்து சேர்க்கலாம். சிறிது ரவை சேர்த்தும் தயாரிக்கலாம்.

பொட்டுக்கடலை உருண்டை

தேவையானவை: பொட்டுக்கடலை - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும். (பாகை தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). ஒரு அகலமான பேஸினில் பொட்டுக்கடலையைப் போட்டு, பாகை சிறிது சிறிதாக ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்பு: பொட்டுக்கடலை புரோட்டீன் சத்து மிகுந்தது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

மனோகர லட்டு

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, வெல்லம் - 300 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு பிழியும் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். பின்பு வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். (பாகை தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). முறுக்கை வாய் அகலமான பேஸினில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகை ஊற்றிக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: முறுக்கில் உப்பு சேர்க்கக் கூடாது. இந்த லட்டு, முறுக்கின் கரகரப்பும் வெல்லத்தின் இனிப்பும் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும்.

நெல்லிக்காய் அல்வா

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரத்துக்குப் பிறகு உதிர்த்து, விதை நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு நெல்லிக்காய் விழுதை வதக்கி, பின்பு சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து, மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

முள்ளு தேன்குழல்

தேவையானவை : அரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு - 400 கிராம், எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, உப்பு, எள், பெருங்காயத்தூள் வெண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை முள்ளு தேன் குழல் அச்சில் போட்டு பிழிந்து எடுக்கவும்.

பாதாம் முந்திரி கேக்

தேவையானவை: பாதாம் பருப்பு - 15, முந்திரிப் பருப்பு - 20, சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 ஸ்பூன்.

செய்முறை: பாதாம், முந்திரியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் பருப்பை தோல் உரிக்கவும். பிறகு, பாதாம் பருப்பு, முந்திரியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, சர்க்கரை கரைந்ததும் அரைத்த பாதாம் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறவும். கெட்டியாக வந்ததும், இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

சீரக முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, சீரகம், வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சிறிய சிறிய முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

ரவா லட்டு

தேவையானவை: ரவை - 250 கிராம், சர்க்கரை - 500 கிராம், வறுத்த முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 200 மில்லி.

செய்முறை : ரவையை பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். சர்க்கரையும் மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யை உருக்கி மாவில் விட்டு, முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

சீஸ் பனீர் ரோல்

தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், துருவிய பனீர் - 100 கிராம், சீஸ் - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் சீஸ், வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய சப்பாத்தி வடிவில் இட்டு, மேலே பரவலாக பனீர் துரு வலைப் போட்டு லேசாக உருட்டவும். இதை சிறிது சிறிதாக 'கட்’ செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: சீஸ், பனீர் சேர்ந்த புதுமாதிரியான இந்த ரோலை குழந்தைள் விரும்புவார்கள்.

கடலை உருண்டை

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - 250 கிராம், பாகு வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி, சுத்தம் செய்யவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி கெட்டியாகப் பாகு காய்ச்சவும். பாகு காய்ந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அகலமான பேஸினில் வேர்க்கடலையைப் போட்டு, சிறிது சிறிதாக பாகை ஊற்றிக் கலந்து உருண்டை பிடிக்கவும்.

ரோஜா குல்கந்து

தேவையானவை: பன்னீர் ரோஜாப்பூ - 20, நெய் - 100 மில்லி, சர்க்கரை - ஒரு கப், பால் - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை: ரோஜாப்பூவை இதழ்களாக ஆய்ந்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது நெய் விட்டு வதக்கவும். பின்பு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக பால் சேர்த்து கெட்டியாகக் கிளறி, மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். கூடவே, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.