Saturday, December 27, 2008

ஏசி அறை: ஜில்லென ஒரு ஆபத்து

இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல் ஆரோக்கியம் பாதிப்படும்.

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில், அலுவலங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டருக்கு ஏசி தேவைப்படுகிறது. அதனால் ஏசி இல்லாத அலுவலங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

எனினும் ஒருசில அலுவலகங்களில் ஏசி முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இது உடலுக்கு பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும்.

வெளியில் உள்ள தட்ப வெப்பத்துக்கு பழகிப் போன நம் உடல், அலுவலகத்தில் குளிர்ந்த தட்ப வெப்பநிலையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் உடலில் சில அசவுகரியங்கள் நேரிடலாம்.

அலுவலகத்தில் ஏசி முறையாகப் பராமரிக்கப்படாததாலும் அவ்வப்போது சுத்தப்படுத்தாததாலும், அவை பாக்டீரியா வாழும் இடங்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

அலுவலக ஏசி அறைக்குள் புகை பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களோ வந்து சென்றால், அவர்கள் மூலம் தொற்றுக் கிருமிகள் அறைக்குள் பரவ வாய்ப்புள்ளது.

தரை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட அலுவலக பொருட்களில் ஒட்டிக் கொள்ளும் கிருமிகள், வெளியே செல்லாமல் நம் மீது பரவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் காய்ச்சல், இருமல், நிமோனியா, தலைவலி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு, சாதாரண நோய்யைப் போலவே சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலும், இத்தகைய சுகாதாரக் கேடுகள் தொடர்ந்தால், உடலில் பெரிய தாக்கத்தை அவை ஏற்படுத்தக்கூடும்.
(மூலம் - வெப்துனியா)

Friday, December 26, 2008

"AN INTERVIEW WITH THE SHOE THROWER"

"AN INTERVIEW WITH THE SHOE THROWER"
Column at Nshima.com


His name is Muntazer al-Zaidi and he's the toast of the
Middle East and many other parts of the world. Never before
has anyone achieved so much acclaim for throwing a pair of
shoes. He threw them at President Bush, of course, an act
that he's somewhat embarrassed about, as I learned during an
exclusive telephone interview.

Me: "Muntazer, thank you for taking my call."

Muntazer: "I did not know I could take calls. How much are
you paying the prison warden?"

Me: "I'm giving him a pair of shoes."

Muntazer: "You can send them to me. I will deliver them for
you."

Me: "No, thanks. I saw your last delivery."

Muntazer: "You are right, my friend. It was a bad delivery.
A very bad delivery. I'm embarrassed about it."

Me: "People say you are a hero. Do you consider yourself a
hero?"

Muntazer: "No, I am not a hero. I missed the target. It was
a bad delivery. I should have thrown harder and lower. I did
not practice enough."

Me: "You mean you practiced for this?"

Muntazer: "Of course I practiced. I spent many hours at the
shoeing range."

Me: "Shoeing range? You mean there's a special place where
you can practice throwing shoes?"

Muntazer: "Yes, we have many shoeing ranges here. They
provide us with hundreds of shoes, as well as cardboard
cutouts of President Bush."

Me: "So throwing shoes at President Bush is a national sport
in Iraq?"

Muntazer: "Yes, it is a very popular sport. We have many
competitions. But we do it in secret places. We don't want
the American soldiers to find out."

Me: "You are afraid of getting into trouble?"

Muntazer: "No, we are afraid of having too many players. The
lines are too long already."

Me: "There are lines? People stand in lines to throw shoes
at cutouts of President Bush?"

Muntazer: "Yes, the lines are very long. But it is good for
the people. It is a form of therapy."

Me: "Was it therapeutic for you to throw shoes at the actual
president?"

Muntazer: "Yes, it was. And then they arrested me and
brought me to prison."

Me: "So it's not therapeutic anymore?"

Muntazer: "No, it is very untherapeutic."

Me: "What do you think of the president's reflexes?"

Muntazer: "He moved like a man who is used to having shoes
thrown at him."

Me: "Are you sorry about what you did?"

Muntazer: "Yes, I am sorry. I am sorry that I missed."

Me: "You are extremely popular in the Arab World. I heard
that an Egyptian man has even offered his 20-year-old
daughter in marriage to you. How do you feel about that?"

Muntazer: "I feel like throwing more shoes."

Me: "I heard that the Pittsburgh Pirates want to sign you to
a pitching contract. Is that true?"

Muntazer: "Yes, they made inquiries about my availability.
But I am considering a more lucrative job offer."

Me: "A more lucrative job offer?"

Muntazer: "Yes, Madonna has offered me a job. She wants me
to throw shoes at her ex-husband."

Me: "Which one?"

Muntazer: "I'm not sure. We are still negotiating the
details."

----------------------------------------------------------
(c) Copyright 2008 Melvin Durai. All Rights Reserved.
MelvinDurai.com

Courtesy :Melvin Durai.

Tuesday, December 23, 2008

இன்டர்நெட் திருடர்கள் ஜாக்கிரதை!!

உலகம் இணையதளத்துக்குள் சுருங்கி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இன்று இன்டர்நெட் இல்லாவிட்டால், எதையோ பறிகொடுத்தது போலாகிவிடுகிறது பலருக்கு. காரணம் அதன் உபயோகம் அப்படி.

ஜஸ்ட் மவுஸ் கிளிக்கில் எல்லாமே இன்று கிடைக்கின்றன. பிளாட் வாங்குவது கூட இன்டர்நெட்டில் படத்தைப் பார்த்து கிளிக் செய்து இன்டர்நெட் வழியே பணம் ட்ரான்ஸ்பர் செய்து பிளாட் புக் செய்வது கூட இந்நாளில் எளிதான ஒரு காரியமாக மாறிவிட்டது. இப்படி இன்டர்நெட் வழி பணம் கைமாறும் போதுதான் நாம் கவிழும் வாய்ப்புகளும் அதிகமாகின்றன.

வீட்டில், அலுவலகத்தில் மற்றும் செல்லும் இடமெல்லாம் கம்ப்யூட்டர், பிராட்பேண்ட், நிறுவன சர்வர் என எங்கு சென்றாலும் இணைய இணைப்பு என்பதால் கிரெடிட் கார்டு, டெலிபோன் பில், ஹோம் டிவி கட்டணம் என எதனை வேண்டுமானாலும் நம் பேங்க் இன்டர்நெட் கணக்கின் வழி கட்டத் தொடங்குகிறோம். அப்படிச் செல்கையில் அதிகக் கவனம் தேவை.

இல்லையென்றால் நமது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் நம் அனுமதியோடு, ஆனால் நமக்குத் தெரியாமலே ஸ்வாகா ஆகிவிட்டிருக்கும்.

இந்த சிக்கல்களிலிருந்து தப்ப சில வழிகள் உள்ளன.

திருடுவதில் இதுவும் ஒரு வகை!


இதுவரை பிஷ்ஷிங் என்ற வகை-யில் நம்மை வேறு இணைய தளங்களுக்கு இழுத்துச் சென்று நாம் திசை மாறுகையில் நம் கம்ப்யூட்டரில் புரோகிராம்களைப் பதிந்து நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, வங்கி கணக்கு பாஸ்வேர்டுகளைக் கண்டறிந்து பணத்தை எடுத்து வந்தனர்.
இப்போது மக்கள் உஷாராகிவிட்டனர். பல ஆண்டி மால்வேர், ஆண்டி பிஷ்ஷிங் சாப்ட்வேர் புரோகிராம்களை நிறுவி பாதுகாத்துக் கொண்டனர். உடனே கிரிமினல்கள் பார்மிங் (Pharming) என்று ஒரு புதிய வழியைப் பயன்படுத்துகின்றனர்.

இதில், நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கிலிருந்து உங்களுக்கு ஒரு தகவல் போல இமெயில் ஒன்றை அனுப்புகின்றனர். சில வேளைகளில் பன்னாட்டளவிலான வங்கி ஒன்றிலிருந்து (உங்களுக்கு கணக்கு இல்லை என்றாலும்) உங்கள் கணக்குக்கு உடனே சில தகவல்கள் தந்தால் கணக்கில் பணம் சேரும் என்றெல்லாம் தூண்டில் போட்டு மெயில் அனுப்புகின்றனர். நாமும் இது நம் அதிகாரப்பூர்வ மெயில் தானே என்று மெயிலைத் திறக்கின்றோம். அங்கே ஒரு வங்கியின் வெப்சைட் என்று ஒரு இன்டர்-நெட் முகவரி வங்கியின் பெயரோடு தரப்பட்டிருக்கும்.

வங்கியின் பெயரைப் பார்த்தவுடன் இது சரியான முகவரி என்று எண்ணி கிளிக் செய்தால் வங்கியின் இணைய தளம் போலவே ஒரு வெப்சைட் திறக்கும்.

அங்கு உங்கள் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் தருகிறீர்கள். அவ்வளவுதான், அதற்குப் பின் அந்த தளம் அமைதியாகிவிடும். அதன்பிறகு உங்கள் அக்கவுண்ட்டும் அமைதியாகிவிடும்… இதிலிருந்து உங்களையும் பணத்தையும் பாதுகாத்திட சில வழிகள் உள்ளன.

கவனம்… கவனம்!

முதலில் உங்கள் ஆண்டி வைரஸ் மற்றும் ஆண்டி ஸ்பை வேர் புரோகிராம்-களை எப்போதும் அப்டேட் செய்தே வைத்திருங்கள். வங்கியின் யு.ஆர்.எல். முகவரியில் https என்று இருக்கிறதா என்று பார்க்கவும்.

பாதுகாப்பான தளம் என்று அடையாளம் காட்ட “http” யுடன் இறுதியில் ‘s’ சேர்க்கப்படுகிறது. அண்மைக்காலத்தில் வந்த பிரவுசர்-கள் இது போன்ற பாதுகாக்கப்பட்ட தளம் எனில் அட்ரஸ் பாரின் வண்ணத்தை மஞ்சளாக மாற்றி ஓரத்தில் ஒரு பூட்டின் ஐகானைக் காட்டுகின்றன. இப்படி அடையாளங்கள் தெரிந்தால் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இணைய தளத்திற்குமான தகவல்கள் என்கிரிப்ட் என்ற வகையில் சுருக்கி மாற்றி அனுப்பப்படுகின்றன என்று பொருள்.

பெரும்பாலான போலியான தளங்களில் இந்த வசதிகள் இருக்காது. ஆனால் உங்கள் வங்கியின் இணைய தளம் மிகவும் பலவீனமாக இருந்தால் ஒன்றும் செய்திட முடியாது. ஆனால் பெரும்பாலும் அது போல பாதுகாப்பற்ற தளங்களை வங்கிகள் அமைத்திருப்பதில்லை.

இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள இன்னொரு வழியும் உண்டு. எந்த வங்கிக்கு இமெயிலில் முகவரிகள் தரப்பட்டாலும் அந்த லிங்க்கில் கிளிக் செய்திடாமல் நீங்களாக வங்கியின் இணைய முகவரியை டைப் செய்து அதன் தளத்திற்குச் செல்லவும். மேலும் அந்த முகவரியை புக்மார்க்காக வைத்துக் கொண்டு அடுத்த முறை அதில் கிளிக் செய்து இணைய தளம் செல்லவும்.

மேலும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள இன்னொரு அருமையான வழி உள்ளது. வங்கியின் இணைய தளத்தில் முதலில் போலியான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும். உங்களிடமிருந்து விஷயங்களைக் கறந்திட உள்ள போலியான இணைய தளம் என்றால் நன்றி சொல்லி அந்த தகவல்களை வாங்கிக் கொள்ளும். வங்கியின் உண்மையான இணைய-தளம் என்றால் பாஸ்வேர்ட் சரியில்லை, மீண்டும் முயற்சி செய்க என்று சொல்லி உங்களின் அடுத்த முயற்சிக்குக் காத்திருக்கும்!

வங்கியின் இணையதளங்கள் உள்ளே நுழைவது மிகவும் சிரமம் என்பதால் பணம் திருடுபவர்கள் உங்கள் கம்ப்யூட்டரின் உள்ளே தான் வர முயற்சிப்-பார்கள். எனவே எவ்வளவு அதிகமான பாதுகாப்பு வழிகளை உங்கள் கம்ப்யூட் டரில் மேற்கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு பாதுகாப்பினைப் பலப்படுத்துங்கள்.

சிறந்த ‘ஆண்டி வைரஸ்’ புரோகிராம்களை நிறுவி ஆண்டுதோறும் அதனை புதுப்பித்து அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கவும். பொதுவாக இது போன்ற திருடர்கள் விண்டோஸ் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களையே குறி வைக்கின்றனர்.

லினக்ஸூக்கு மாறுங்கள்!

லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இவர்களின் முயற்சி வெற்றி அடைவதில்லை. எனவே உங்கள் கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களாக லினக்ஸ் சிஸ்டத்தையும் போட்டு வைக்கலாம். நிதி மற்றும் பேங்க் விவகாரங்களைக் கம்ப்யூட்டரில் கையாளுகையில் லினக்ஸ் மூலம் செல்லலாம்.

அடுத்ததாக நாம் பயன்படுத்தும் பிரவுசரின் தன்மை. நாம் பெரும்பாலும் இன்டர்-நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 பயன்படுத்துகிறோம். அண்மையில் செகுனியா(www.secunia.com) என்ற இன்டர்நெட் வல்லுநர்களின் தளத்தில் ஓர் ஆய்வு முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் இன்னும் ஒன்பது (மொத்தம் 21 பக்ஸ்) பலவீனமான இடங்கள் சரி செய்யப்படவில்லை என்ற தகவல் தரப்பட்டுள்ளது.

இதன் பொருள் என்னவென்றால் நம்மைத் திருடும் ஹேக்கர்கள் வர இன்னும் ஒன்பது வழிகள் அடைக்கப்படவில்லை என்பதே. எனவே பயர்பாக்ஸ் அல்லது ஓபரா போன்ற பிரவுசர்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பதிலாகப் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால் PhishTank site checker என்ற புரோகிராமினை இணைக்கவும். இது போலியான வங்கி தளங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும். இந்த தளத்திற்குச் சென்றவுடனேயே உங்களை எச்சரிக்கும்.

எப்போதும் பாஸ்வேர்டினை மிகவும் பாதுகாப்பானதாகவும் அடுத்தவர் கணக்-கிட்டு அறிந்து கொள்ளும் வகையிலும் வைத்துக் கொள்ள வேண்-டாம். பாதுகாப்பான பாஸ்வேர்ட் வைத்துக் கொள்வது எப்படி என்று இந்த இதழில் இன்னொரு இடத்தில் வந்துள்ள குறிப்புகளைப் படிக்கவும்.

பணம் மாற்றும் போது…

வங்கிக் கணக்கில் இன்டர்நெட் மூலம் பணம் அடுத்தவர் அக்கவுண்ட்-டிற்கு மாற்றுகையில் மிகவும் கவனமாக அந்த அக்கவுண்ட் எண்ணை டைப் செய்திட வேண்டும். தவறுதலாக ஏதே-னும் ஒரு எண்ணை டைப் செய்துவிட்டால், அப்படி ஒரு எண்ணில் இன்னொரு அக்கவுண்ட் இருந்தால் நிச்சயம் உங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. வங்கியும் பொறுப்பேற்காது. அந்த அக்கவுண்ட் கொண்டவர் தன் மன சாட்சிக்குப் பயந்து திருப்பித்தந்தால்தான் உண்டு. எனவே எந்த அவசரம் என்றாலும் அதிகக் கவனம் கொள்வது நல்லது. தேதி, அக்கவுண்ட் எண், பணம் எவ்வளவு என்பதை நுணுக்க-மாகப் பார்த்துக் கையாள்வது நல்லது.

எந்த நிலையிலும் பொதுமக்களுக்கான இன்டர்நெட் மையங்களில் உங்கள் பேங்க் அக்கவுண்டினைக் கையாள வேண்டாம். இது நடு ரோட்டில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டைச் சத்தமாகக் கூறுவதற்கு ஒப்பாகும். எனவே எந்நிலையிலும் இந்த பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். வெளியூர் சென்றாலும் அந்த வங்கியின் கிளைக்குச் சென்று நிதி பரிமாற்றத்தை மேற்கொள்ளும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அல்லது இப்போது மொபைல் போனில் இந்த வசதி கிடைத்துள்ளது. உங்கள் மொபைல் போன் மூலம் பணத்தைக் கையாளலாம்.

தகவல்: கார்த்தி

Friday, December 12, 2008

இந்திய அரசியல் நிலை- ஒரு கண்ணோட்டம்

அரசியல்'

அது ஒரு சாக்கடை.
அது ஒரு பிணம்தின்னும் கழுகுக்கூட்டம்.
அது ஒரு நாய்கள் (ம) நரிகளின் கூடாரம்.
அது ஒரு வெட்டிப்பேச்சு பேசுவோர் மன்றம்.
அது ஒரு மக்களை மாக்களாக்கும் முயற்சியின் வெற்றி.
அது தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்ளும் முயற்சி.
மனசாட்சியை விற்றவர்களுக்கு முதலிடம் அளிக்கப்படுமிடம்.

................இப்படி எத்தனை எத்தனையோ.

இத்தகைய நிலை ஏன் உருவாயிற்று? யார் இதற்குக் காரணம்? அனைவருக்கும் தெளிவாக தெரிந்ததுதான், அரசியல்வாதிகள் என்று.

'அரசியல்வாதிகள்', இவர்கள்தான், எத்தனை புத்திசாலிகள்; இவர்களின் திறமையை நிச்சயம் பாராட்டித்தான் தீர வேண்டும். எத்தனை கோடி மக்களானாலும் சரி, அத்துணை பேரையும் மடையர்களாக்கி தாம் நினைத்தை சாதித்துக் கொள்ளும் இவர்களை, பாராட்டித்தானே தீர வேண்டும். மக்களின் மறதியை, அவர்களுடய இயலாமையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள், தேர்தல் நேரங்களில் அள்ளிவீசும் வாக்குறுதிகள்தான் எத்தனை!? அத்தனை வாக்குறுதிகளையும் இவர்கள் நிறைவேற்றியிருந்தால் இன்றைய இந்தியாவின் மக்கள்தொகையில் 40% பேர் நிலவுக்கு குடிபெயர்ந்திருப்பர்!!!!!!!!!!!!!!!!???????????

மன்னராட்சி காலம் :
இக்காலகட்டத்தில் இந்தியாவின் அரசியல் நிலை எப்படி இருந்தது? மக்களின் நிலையென்ன? நாட்டின் நிலையென்ன? மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றமிருந்ததா? உறுதியாக மக்களின் வாழ்க்கைமுறை அர்த்தமுள்ளதாக வும், முன்னேற்றப்பாதையாகவும்தான் இருந்தது. அவரவர் பண்பாடு, சம்பிரதாயம், வழிமுறை ஆகியவற்றிற்கு சரியான அங்கிகாரம் பெரும்பாலான மன்னர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கிடைத்தது. அவரவர் தொழிலை, அவரவர் சிரமேற் கொண்டு செய்தனர். ஆனால், மன்னர்களின் நடவடிக்கைகள்தான், திருப்திகரமானதாக இல்லை.

சிலரின் தன்னிச்சையான, எதேச்சதிகாரபோக்கில் செயல்படும்தன்மை மக்களை கொடுமைப்படித்தியது. சிலரின் நாடுபிடிக்கும் ஆசையினால், மக்களின் அமைதி பாதிக்கப்பட்டதோடில்லாமல், மக்களில் பெரும்பான்மையினோர் போரில் மாண்டனர். சிலரின் சுகபோக வாழ்க்கையினால், நிர்வாகத்தில் பல ஊழல்கள் நடைபெற்றன. ஒரு சிலர் மட்டும், ஒரு சிலர் குடும்பங்கள் மட்டும் என்றும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக்கொண்டுதான் இருந்தது. அவர்கள் மட்டும் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்தனர். மற்றவர்களை கொத்தடிமைகளாக நடத்தினர். இத்தகைய குறைகள் இருந்தாலும், இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது பொற்காலம்தான் (குறிப்பாக தமிழ்நாட்டிற்கு). மக்களிடம் வரிவசூல் செய்யும் விதமும், அதனை மக்களுக்காகவே செலவிடும் முறையும், இன்றைய அரசியல்வாதிகளுக்கு வேப்பங்காயாகத்தான் இருக்கும்.

எத்தனைதான் சிறப்புகள் இருந்தாலும், சிலபல குறைகள் இருந்தாலும், "மக்களனைவரும் சமம்" என்கிற கண்ணோட்டத்தில் மன்னராட்சி என்பது சாத்தியப்படாது. 'ஒருவரின் குடும்பம் மட்டும் ஆட்சி செய்வது' என்பது மற்றவர்களை முட்டாளாக மதிக்கும் செயல். எனவே மன்னராட்சி நடைமுறைக்கு உதவாது.சுதந்திரத்திற்கு முன் :
மன்னர்கள், தம் ஆட்சியை படிப்படியாக ஆங்கிலேயரிடம் இழந்து கொண்டிருந்த காலம். இந்தியா சிறிது சிறிதாக அடிமைத்தனத்தில் மூழ்கி, ஒருநாள் முழுவதுமாக மூழ்கிய காலம். சிப்பாய்கலகத்திற்குப் பிறகு தான் இந்தியாவின் விடுதலை விரும்பிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயரத் தொடங்கியது. 'வெள்ளையரின் சுரண்டலை, ஏகாதிபத்தியத்தை அடியோடு வேரறுக்க வேண்டும்' என்ற எண்ணம் அனைவருடத்திலும் மேலோங்கியது. மிதவாதிகளும், தீவிரவாதிகளும் தத்தம் பாணியில் அறப்போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கினர். இந்தியாவின் விடுதலை மட்டும்தான் அனைவரின்( சில விதிவிலக்குகளை மன்னிப்போம்) குறிக்கோளாக இருந்தது. ஆங்கிலேயருக்கோ, இந்தியாவில் கிடைக்கும் வருமானம்தான் குறிக்கோளாக இருந்தது. அதற்காக, அவர்கள் எதனையும் செய்யத்தயாராக இருந்தனர். பல நன்மைகளையும் செய்தனர் (இன்றை நிலையை ஒப்பிடும்போது).

அந்நியர் ஆட்சி :

"அந்நியர் ஆட்சியை ஏற்றுக்கொண்டால் நம்மிடம் மனிதத்தன்மையும், தன்மான உணர்வும் இல்லை என்பதாகத்தான் பொருளாகும். நமது திறமையின்மைக்கும், பலவீனத்திற்கும் நாமே ஒப்புதல் அளித்ததாகிவிடும். அந்நியர் ஆட்சியையும், அவர்களுடைய பாதுகாப்பையும் நாம் ஏற்றுக்கொண்டால் கொத்தடிமை களாக மாற நாம் தயார் என்றுதான் பொருளாகும்" -என்ற நிதர்சனமான உண்மையை அனைத்து தரப்பினரையும் அடையச்செய்தன பல புரட்சி இயக்கங்கள்.

அரசியலில் ஈடுபட்டிருந்த அத்துணை பேரும் பொதுநலமாக நடந்து கொண்டனர் (ஒருவரை தவிர்த்து). "நாடு விடுதலையடைய வேண்டும், நாம் அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசித்திட வேண்டும், இந்தியா முன்னேற வேண்டும்" என்பதுதான் அவர்களின் உயிர்மூச்சாக இருந்தது. இதனில் முக்கியமாக, தனியாக அடிக்கோடிட்டு குறிப்பிடவேண்டியச் செய்தி, சுதந்திர வேட்கையில், இளைஞர்களின் பங்கு எவ்வாறிருந்தது என்பதுதான்.

சுதந்திர வேட்கையில் இளைஞர்களின் பங்கு :

எத்துணை, எத்துணை இளைஞர்கள், நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்தது. அவர்களனைவரும் தான் 'இந்தியாவின் தூண்கள்'. அவர்களால்தான் இந்தியா இத்தகைய நிலையிலாவதுள்ளது. ஆண்டு அனுபவித்த பிறகு செய்யும் தியாகத்தைவிட, இளமையிலேயே, அனைத்து இன்பங்களையும் துறந்து, 'நாட்டின் விடுதலையே' உயிர்மூச்சாக கொண்டு, நாட்டிற்காகவே உழைத்த, வாழ்ந்த, வீழ்ந்த இளைஞர்கள்தான் உண்மைத் தியாகிகள். உரக்கச் சொல்லுகிறேன் இளைஞர்கள்தான் உண்மைத்தியாகிகள்.

இன்னொன்றையும் குறிப்பிட்டேயாக வேண்டும். அது, அனைத்து இளைஞர்களிடமும் காணப்பட்ட அரசியல் பற்றிய விழிப்புணர்வு. அதுவும் தெளிவான கண்ணோட்டத்துடன் கூடிய விழிப்புணர்வு. நாட்டில் நடக்கும் அனைத்து செய்திகளையும் அவர்கள் அறிந்துருந்தனர். அனைத்து அரசியல்வாதிகளைப் பற்றிய முழுத்தகவல் அவர்களுக்கு தெரிந்திருந்தது. நன்மை, தீமைகளை நடுநிலையாக அலசி ஆராய்ந்தனர். தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை முற்றிலுமாக எதிர்த்தனர். அதற்குக் காரணமானவர்களையும் கடுமையாக தண்டித்தனர். நாட்டின் முதுகெலும்பே தாங்கள் தான் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தனர். அதற்கேற்ற படி திறம்பட செயல்பட்டனர். நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது தாங்கள் தான் என்பதையும் அறிந்திருந்த அவர்கள் அரசியலில்
முக்கியத்துவம் பெற்றனர்.

சுதந்திரத்திற்குப் பின் :

இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. அன்று, அரசியலில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தனர். மூத்தவர்கள், அனுபவமுள்ளவர்கள் என்ற அடிப்படையில் இளைஞர்கள் அவர்களுக்கு வழிவிட்டனர் துரதிருஷ்டவசமாக. "வயதில் மூத்தவர்களூக்குத்தான் அனுபவம் இருக்கும், அவர்களால்தான் திறமையாக ஆட்சி செய்திட முடியும், அனைத்து சூழ்நிலைகளிலும் நிலைதடுமாறாமல் ஆட்சிசெய்வர்" என்ற பேச்சுக்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாகிவிட்டது. நாடு நத்தை வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்க சில தலைவர்கள் வாரிசு அரசியலை உருவாக்குவதிலும், சொத்து சேர்ப்பதிலும் முனைப்புடன் இருந்துவிட்டனர். இவர்களுடைய ஒட்டுமொத்த அனுபவமும், திறமையும் மக்களின் பணத்தை சூறையாடுவதற்கே பெரிதும் பயன்பட்டது, (பயன்படுகிறது).

இத்தகைய சூழ்நிலையிலும் இளைஞர்களின் பங்கு குறிப்பிடும்படியாகவே இருந்தது (1960-1980 களில்). அவ்வப்போது நாட்டுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி தம்முடைய எதிர்ப்பை காட்டி வந்த இவர்கள் மெல்ல அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தனர். ஆனால், இவர்களோ நாட்டின் முன்னேற்றத்தை குப்பையில் போட்டுவிட்டு, தம்முடைய முன்னேற்றத்தில் கண்ணுங்கருத்தமாக இருக்கின்றனர். ஒரு காலகட்டத்தில் மிகவும் ஏழையாக இருந்த இவர்கள், இன்று இந்தியாவையே விலைக்கு வாங்கும் அளவுக்கு பெரும் பணக்காரகளாக மாறியுள்ளனர். எங்கிருந்து வந்தது இவர்களுக்கு அத்துணை பணம்? ஈசன்தான் அறிவான்.

கோஷ்டிப்பூசலையும், ஜாதிக்கலவரங்களையும் தமக்கு சாதகமாக தூண்டிவிட்டு, நாட்டுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவரைப்பற்றியொருவர் கீழ்த்தரமாக விமர்சிப்பதும், அவருக்கு எதிராக சதிசெய்வதும்தான் "இவர்களின் பெரும்பான்மையான பணி. நாடு சுதந்திரமடைந்து இத்துணை ஆண்டுகள் ஆகியும், மக்களின் வாழ்க்கை முறையில் எந்தவித மாற்றமும், முன்னேற்றமும் இல்லையே" என்று சிந்திக்க வேண்டிய இவர்கள், இத்தணை ஆண்டுகால ஆட்சியில் நான் சேர்த்த சொத்துக்கள் இவ்வளவுதானா? என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

courtesy : © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை
http://tamilcafe.net/0805/04/indianPolitics.html

Saturday, December 6, 2008

இந்திய முஸ்லீம் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

முதலில் இந்த செய்தியை படிங்க !

மாநிலம் முழுவதும் தடையை மீறி இன்று ரெயில் மறியல் செய்ய முயன்ற தமுமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அது இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் கட்டித்தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூரில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு அனுமதி இல்லை என்பதால் மறியல் செய்ய முயன்ற சுமார் 500 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் சென்ட்ரலில் மறியல் செய்ய முயன்ற சுமார் 300 தமுமுக வினரையும், சைதாப்பேட்டையில் தவ்கீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன் தலைமையில் ஊர்வலமாக சென்று மறியல் செய்ய முயன்ற சுமார் 1500 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல விழுப்புரம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடையை மீறி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஏராளமான தமுமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

Courtesy :http://nigazhvugal.com


இன்று நாடு திவிரவதிகளின் தாக்கு தல் காரணமாக முஸ்லிம்கள் மீது மன வருத்தத்தில் இருக்கும் போது ,சில வருடங்களுக்கு முன் நடைந்த பாபர் மசூதி விவகாரம் மிண்டும் துளிர்விட வைக்கும் நோக்கம் உங்கள்ளுக்கு நல்லது அல்ல நண்பர்களே !

நம் நாட்டிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் தெரிய இந்தபதிவினை படயுங்கள்.



Country என்பது புவிப்பரப்பு. நாடு. நிலமும் அதன் எல்லைகளும். அந்த எல்லைகள் மாறலாம், விரியலாம், சுருங்கலாம். Nation என்பது உணர்வால் எழுப்பப்படுவது. தேசம். தேசிய உணர்வால் ஒன்றுபடுத்தப்படும் மக்கள். கலாசாரத்தால், மொழியால், இனத்தால் அல்லது இவை அனைத்தையும் மீறிய ஏதோ ஓர் உணர்வால் ஒன்றுபட்ட அல்லது ஒன்றுபடுத்தப்பட்ட மக்கள் குழுமம்.

அப்படியென்றால் State (அல்லது Nation State) என்பது என்ன? அரசியல் அமைப்பு கொண்ட, இறையாண்மை கொண்ட, ஆட்சி அதிகாரம் கொண்ட, குறிப்பிட்ட புவிப்பரப்பை - நாட்டை - ஆளும் பல்வேறு அங்கங்கள் கொண்ட, குறிப்பிட்ட செயலுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் குறிப்பிட்ட தலைமையைக் கொண்ட ஓர் அமைப்பு. அரசாங்கம் என்று குறிப்பிடலாம். அரசாங்கம் என்பது நிர்வாக அமைப்பு, முப்படைகள், பாரா-மிலிட்டரி, காவல்துறை, உளவுத்துறைகள், நீதிமன்றம், சுங்கம், வரி அமைப்பு என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சேர்த்தது.

பிரிட்டன் என்னும் நாடு மூன்று தேசிய இனங்களைக் கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மக்கள் தனித்தனி தேசியக் கொடிகளை வைத்துள்ளனர். சர்வதேச விளையாட்டுகளில் தனித்தனி அணிகளை அனுப்புகின்றனர். ஒலிம்பிக்ஸ் போட்டியில் சேர்ந்த ஒரே அணியை அனுப்புகின்றனர். ஆனால் இவர்களுக்கு ஒரேயோர் அரசாங்கம்தான் உள்ளது.

பாலஸ்தீன மக்கள், ஒரு தேசமாக உணர்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனி நாடு இப்போதைக்குக் கிடையாது. போராட்டம் செய்யும் ஈழத்தமிழர்கள், தங்களைத் தனி தேசமாக நினைக்கிறார்கள். இன்னும் தனி நாடு கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பை உடையது. ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு ஒருங்கமைந்த தேசிய உணர்வு இருக்கிறதா என்பது சந்தேகமே. அத்துடன் பாகிஸ்தான் சுதந்தரம் பெற்ற அன்றிலிருந்தே இன்றுவரை ஒழுங்காக அமையாத அரசாங்கத்தால், அந்த நாடு எப்போதுமே கொந்தளிப்பில் இருந்துவருகிறது. முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்தால் அவர்களுக்கு இடையில் வலுவான தேசிய உணர்வு ஏதும் இல்லை. பஞ்சாபிகள், சிந்திகள், முஹாஜிர்கள் (இந்தியாவிலிருந்து சென்ற உர்தூ பேசுபவர்கள்), பலூச்கள், பஷ்டூன்கள் என்று பிரிந்திருக்கும் இவர்களை இணைப்பது ஒன்றுதான். இந்திய எதிர்ப்பு.

இதுகூட அனைத்து பாகிஸ்தானிகளுக்கும் உள்ளது என்று சொல்லிவிடமுடியாது. எனக்கு பாகிஸ்தானில் பல நண்பர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் சில நாள்கள் இருந்து, பலரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இருந்தபோது, பாகிஸ்தானியர்களைச் சந்தித்து நிறையப் பேசியுள்ளேன்.

ஆனால், பெரும்பான்மை பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய எதிர்ப்பு உணர்வு இருக்கவேண்டும் என்பதில்லை. சிலருக்கு இருந்தாலே போதும். அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையினர் - இவர்களில் 10 சதவிகிதத்தினருக்கு இந்திய வெறுப்பு இருந்தால் போதும். இவர்களுடன் தீவிரவாத முல்லாக்கள், வேலையில்லாமல் ஏழைமையில் வாடுபவர்கள், காஷ்மீர் போராளிகள் ஆகியோரைச் சேர்த்தால், பயங்கரமான காக்டெயில் உருவாகிறது.

சரி, இதுமட்டும் போதுமா? மேலும் தேவை, தோல்வியுற்ற அரசாங்கம்.

தோல்வியுற்ற அரசாங்கம்தான் தேவை என்றில்லை. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவையும் வேறு பல அரசாங்கங்களும், ஒருவர் மற்றவருக்கு இதைத் தாராளமாகச் செய்துள்ளன. ஆனால், இப்போது, பனிப்போர் காலம் முடிந்துவிட்டது. 9/11-க்குப் பிந்தைய காலகட்டம் இது. ஓர் அரசாங்கமே வெளிப்படையாக அடுத்த நாட்டில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதை பிற நாடுகளும் ஐ.நா அமைப்பும் ஏற்காது. சாட்சியம் கிடைத்தால், அதனால், பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட்ட நாட்டுக்கு பலத்த பின்னடைவு ஏற்படும்.

அப்படியும், பாகிஸ்தானியர்களின் கை மும்பை தாக்குதலில் இருப்பதற்குக் காரணம் என்ன?

பாகிஸ்தானில் வலுவான அரசாங்கம் கிடையாது. ஏன் இந்தியா போன்ற, ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்க அமைப்புகூடக் கிடையாது. அரசாங்கம், பல்வேறு அமைப்புகளைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. அதனால்தான் பாகிஸ்தானின் அரசாங்கத்தைத் தோல்வியுற்ற அரசாங்க அமைப்பு என்கிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம், ராணுவம், உளவுத்துறை, பயங்கரவாத அமைப்புகள் ஆகிய இந்த நான்கும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு, ஆனால் ஒன்றுக்கு ஒன்று உட்பட்டதாக இல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்புகளாக உள்ளன.

ராணுவம், சட்டப்படி சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. ஆனால் எந்த நேரமும் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்தை டிஸ்மிஸ் செய்து, ஆட்சியைப் பிடிக்கலாம். உளவுத்துறை, சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் இல்லாமல், ராணுவத்தின்கீழ் வருகிறது. ஆனால் உளவுத்துறை தன்னிச்சைப்படி, தனக்கு வேண்டிய பயங்கரவாதிகளை வளர்க்கிறது. பயங்கரவாதிகள், உளவுத்துறையிடமிருந்து பணம், ஆயுதம், பயிற்சிகளைப் பெறுகிறார்கள். அதே நேரம் தன்னிச்சையாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். கட்டுப்படுத்தமுடியாத அரக்கர்களாக விளங்குகிறார்கள்.

இந்தியாமீதான தாக்குதல் என்னும்போது, ஒருவர் மற்றவரைக் கலந்துகொள்ளாமலேயே தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலேயே. கார்கில் போர் நடந்தபோது, முஷரஃப்பின் பாகிஸ்தான் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்திடம் சிறிதும் கலந்துகொள்ளாமலேயே இதனைச் செய்திருந்தது. அதேபோல ஐ.எஸ்.ஐயின் பல செயல்கள், பாகிஸ்தான் ராணுவத்திடமோ, சிவிலியன் நிர்வாகத்திடமோ கலந்துகொள்ளாமல் செய்யப்பட்டவை. பயங்கரவாதிகளும் உளவுத்துறையின் ஆசீர்வாதத்துடன், ஆனால் அனுமதி இன்றி, இந்திய மண்ணில் கொடும் செயல்களைச் செய்கின்றனர்.

ஆனால், இதைச் சொல்லியே, non-state actors-தான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என்று ஜல்லியடித்தே, பாகிஸ்தான் அரசாங்கம், முக்கியமாக அதன் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, தப்பிக்க முடியாது.

courtesy:http://thoughtsintamil.blogspot.com


இந்தியா கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் பாக். ஒத்துக்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாக். இல் இருந்து இந்தியா வந்த அமெரிக்காவின் கூட்டுப்படை தளபதிகளின் தலைவர் மைக்கேல் முல்லன் இத்தகவலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனிடம் தெரிவித்திருக்கிறார்.

முல்லன் பாக். இல் இருந்த பொழுது, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பினரும், ராணுவமும் முல்லனிடம் இந்தியா தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தால் ஒரு லட்சம் துருப்புகளை ஆப்கான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்கு மாற்ற வேண்டி வரும் என்று திட்டவட்டமாக கண்டிப்புடன் தெரிவித்தார்கள் என்று பாக் பத்திரிக்கைகள் பம்மாத்து காட்டின.

ஆனால் உண்மையில் முல்லன், அமெரிக்காவிடம் மும்பை தீவிரவாதத்தில் பாக்கின் பங்கு பற்றிய ஆதாரம் இருப்பதாகவும், அதனை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு இந்த இரண்டு அமைப்பினரும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானியர்கள் எனவும், லஷ்கர் அமைப்பிற்கு தொடர்பிருப்பதை ஒத்துக்கொண்டதாகவும் தெரிகிறது.

பாக் அதிபர், இந்தியாவில் பிடிபட்ட தீவிரவாதி அவர்கள் நாட்டைச் சேர்ந்தவன் என்பதையே ஏற்க மறுத்து அதற்கான ஆதாரத்தை கேட்டதை நினைவுகூறலாம்.

சரி, இந்தியாவை அமெரிக்கா தொடர்ந்து அமைதி காக்க கூறுவதன் காரணம் என்ன? ஏனெனில், ஆப்கானில் இருக்கும் அமெரிக்க துருப்புகள் தங்களது ராணுவ நடவடிக்கைக்கு பாக் எல்லையை உபயோகிக்கின்றன. தற்பொழுது இந்தியா பாக். ஐ நெருக்கினால் பாக் இன் கவனம் இந்தியா பக்கம் திரும்பி இத்தனை வருடங்கள் அமெரிக்காவின் ஆப்கன் உழைப்பு வீணாகிவிடும் என்பதால் அமெரிக்க இந்தியாவிற்கும் பாக்.ற்கும் இடையில் பறக்கிறது. (எலி ஏன் எட்டுமுழ வேட்டி கட்டுதுன்னு பாத்தீங்களா?)மேலும் அமெரிக்கா பத்திரிகையான "தி நியூ யார்க் டைம்ஸ் " இல் வெளியான செய்தியையும் படித்துபாருங்கள்


Panel Fears Use of Unconventional Weapon

Article Tools Sponsored By ERIC SCHMITT
Published: The Newyork Times , Dated: November 30, 2008


WASHINGTON — An independent commission has concluded that terrorists will most likely carry out an attack with biological, nuclear or other unconventional weapons somewhere in the world in the next five years unless the United States and its allies act urgently to prevent that.

In a report to be released this week, the Congressionally mandated panel found that with countries like Iran and North Korea pursuing nuclear weapons programs, and with the risk of poorly secured biological pathogens growing, unconventional threats are fast outpacing the defenses arrayed to confront them.

“America’s margin of safety is shrinking, not growing,” the bipartisan panel concluded.

Prepared before last week’s deadly terrorist attacks in Mumbai — which American officials say were most likely carried out by Pakistani militant groups based in Kashmir — the report also singled out Pakistan as a top security priority for the coming Obama administration.

“Were one to map terrorism and weapons of mass destruction today, all roads would intersect in Pakistan,” the report states, citing the country’s terrorist haven along the border with Afghanistan and its tense relations with nuclear rival India.

“Pakistan is an ally, but there is a grave danger it could also be an unwitting source of a terrorist attack on the United States — possibly with weapons of mass destruction,” the report said.

The report is the result of a six-month study by the Commission on the Prevention of Weapons of Mass Destruction Proliferation and Terrorism, which Congress created last spring in keeping with one of the recommendations of the 9/11 Commission.

The nine-member panel received classified briefings, conducted several site visits, including meetings in Russia, and interviewed more than 250 government and independent experts in several countries.

The New York Times obtained a copy of the report’s 18-page executive summary. Details from draft chapters of the report on the threat of bioterrorism were published Sunday by The Washington Post.

The panel’s 13 recommendations focus on fighting the threat of bioterrorism, including improved bioforensic capabilities, and strengthening international organizations, like the International Atomic Energy Agency, to address the nuclear threat. It also calls for a comprehensive approach for dealing with Pakistan.

Over all, the findings and recommendations seek to serve as a road map for the Obama administration.

“Unless the world community acts decisively and with great urgency, it is more likely than not that a weapon of mass destruction will be used in a terrorist attack somewhere in the world by the end of 2013,” the report states in the opening sentence of the executive summary.

Commission officials said that date is a judgment based on scores of interviews and classified briefings conducted by members of the panel — led by former Senators Bob Graham, Democrat of Florida, and Jim Talent, Republican of Missouri — but does not represent a new formal assessment by the United States intelligence agencies.

Several of the recommendations are not new and have been pursued with varying degrees of success by the Bush administration. On Pakistan, for example, the panel urges the Obama administration to work with Pakistan to eliminate that country’s terrorist havens, secure its nuclear and biological materials, counter extremist ideologies and constrain a “nascent nuclear arms race in Asia.”

But the panel is banking on the fact that some of its Democratic members — including Wendy Sherman, Graham Allison and Tim Roemer— have advised President-elect Barack Obama on national security issues, and could serve in senior positions in his administration.

Ms. Sherman, for instance, is one of two former Clinton administration officials leading the transition team at the State Department for Mr. Obama.

In its wide-ranging findings, the panel faulted the Bush administration for failing to devote the same degree of high-level attention and resources to the threat of a bioterrorist attack as it has to prevent nuclear proliferation and a nuclear attack.

The report calls for conducting a major review of the program to secure dangerous pathogens and tighten oversight of high-containment laboratories.

The commission urges the Obama administration to work to halt the Iranian and North Korean nuclear weapons programs, backing up any diplomatic initiatives with “the credible threat of direct action” — code for military action, a commission official said.

Two weeks ago, the International Atomic Energy Agency reported that Iran had produced roughly enough nuclear material to make, with added purification, a single atom bomb.

The commission also criticized the administration and Congress for not organizing themselves more effectively to combat the threat of unconventional weapons. The report recommended a single White House-level office or individual responsible for directing the nation’s policy to prevent the spread of unconventional weapons and their possible use by terrorists.

Like the 9/11 Commission, this panel called for overhauling the jurisdiction of the Congressional committee that reviews the proliferation of unconventional weapons. “Congressional oversight is dysfunctional,” the report concluded.

Courtesy http://www.nytimes.com/2008/12/01/washington/01bioterror.html?_r=1&ref=world

Thursday, December 4, 2008

Let's hope it wasn't India's 9/11

The terrorist attacks on Mumbai have been called "India's 9/11" by a number of media outlets. That Terrorist attacks scares me. If this was India's 9/11, does that mean that sometime in the future, America is going to have a 11/26? I hope not. I’ve looked at the statistics and, trust me, Americans are quite good at shooting each other. They don't need any help from foreigners.

What scares me even more is the war that might result from India’s 9/11. I mean, haven't the people of Iraq suffered enough? They really don't need another country invading them. It would be a shame if American troops left Iraq in 2009 and Indian troops replaced them in 2010. That might seem like a positive outcome for President Obama, but he’d have trouble convincing Americans that he wasn’t just taking outsourcing to a whole new level.

You might think it's ridiculous to believe that India would invade Iraq. But let’s face facts: Iraq was just as responsible for India's 9/11 as it was for America’s. So don’t be surprised if, sometime in 2011, Indian soldiers do what Americans did several years earlier: pull Saddam Hussein out of a hole and put him on trial. (Chances are, he’ll be a lot more cooperative this time.)

Invading Iraq would be just one of many responses to India’s 9/11, if history is any indication. Before that, India would invade a more blameworthy country, one whose name ends with “stan.” (Sorry, I don't mean to scare my readers in Tajikistan.)

India would also tighten airport security and make flying a little harder for all darker-skinned people. People from the north would glide through airport security with no hassles; people from the south would take the train.

Flying would be particularly difficult for people with Muslim names, such as actor Shahrukh Khan, and people who wear turbans, such as Prime Minister Manmohan Singh.

Security official: “Sorry, Dr. Singh, this is just a random search. Do you mind if I run this metal detector randomly across your body?”

Singh: “Please do it fast. I need to catch a flight to a Navy ship, so I can make a speech under a banner that says ‘Mission Accomplished.’”

Another notable consequence of India’s 9/11 would be the creation of the India Patriot Act. It would allow the authorities to round up suspected terrorists, detain them and torture them –- sort of like they do now. It would also allow the authorities to eavesdrop on phone conversations and other communication, search homes and property without a warrant, and freeze various accounts, including bank, credit card, and, worst of all, Facebook.

India’s 9/11 would result in the loss of many freedoms, including freedom of speech. Newspaper columnists and others would be reluctant to criticize the government, fearing that they’ll be labeled “unpatriotic.” Many of them would instead search for ways to show their patriotism: Older people would display the Indian flag on their cars; younger people would tattoo it on their foreheads. Older people would stand upright, with their hands over the hearts, during the national anthem; younger people would turn down the volume on their iPods.

But the loss of freedom would be nothing compared to the loss of life. The victims of India’s 9/11 would include countless innocent people in Iraq and that country ending with “stan," far more than the terrorists dreamed of killing. Few Indians would keep count, of course. The media would give them only the important numbers, such as the number of Indian soldiers killed, the number of Indian lives lost and the number of theaters showing Shahrukh Khan's movies.

India's 9/11? Let's hope not.

Monday, December 1, 2008

Monday, 01 December 2008 19:32 இது .....நிகழ்வுகள் .காம் , வலை இன் பதிப்பு...

ஒன்றரை ஆண்டு கால மோதலுக்குப் பின்னர் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு. கருணாநிதி தனது மனசாட்சியின் முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரை சந்தித்துப் பேசியது ஏன் என்பதற்கான பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

முரசொலி மாறனின் மறைவுக்கு பிறகு மாறன் குடும்பத்தினருக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு விட்டது. இந்த விரிசல் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து மதுரையில் தினகரன் நாளிதழ் தாக்கப்பட்ட பிறகு பிளவாக மாறியது.

தினகரன் பிரச்சனைக்கு முன்பே இரு குடும்பத்தினருக்கும் இடையே உறவில் இருந்த விரிசலை சமீபத்தில் கலாநிதி மாறன் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டது.

சமீபத்தில் கருணாநிதி சன் டிவி பற்றியும் மாறன் சகோதரர்கள் பற்றியும் அறிக்கை வெளியிட அதைத் தொடர்ந்து கலாநிதி கடிதம் எழுதி அதை பத்திரிகைகளுக்கு அளத்தார். இதனால் மோதல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாறன் சகோதரர்கள் இன்று கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்பின் போது மாறன் சகோதரர்களை கடுமையாக எதிர்த்து வந்த அழகிரியும் இருந்தது பரபரப்பை மேலும் அதிகரித்தது. சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது இரு குடும்பத்தினருக்கும் இடையே உள்ள மோதலை மறந்து இரு குடும்பங்களும் முன்பைப் போலவே இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்ப்பட்டதாக தெரிகிறது.

சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இரு குடும்பங்களும் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

திடீரென இரு குடும்பங்களும் சந்தித்து பகையை மறந்து இணைய முடிவு செய்வதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தயாநிதி மாறன் தனது தந்தை முரசொலி மாறன் பெயரில் பேரவை ஒன்றை தொடங்குவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது இந்த முயற்சிக்கு ஆதரவாக திமுகவில் சிலர் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. இது திமுகவில் பிளவை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் திமுக தலைமைக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம், இலங்கை பிரச்சனை, வெள்ள நிவாரணப் பணிகளில் தொய்வு, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் போன்ற பிரச்சனைகளில் திமுகவுக்கு எதிராக ஜெயா டிவியை காட்டிலும் சன் டிவி செய்திகளை வெளியிட்டு வந்தது.

மேலும் விஜயகாந்த், சரத்குமார், வைகோ, ஜெயலலிதா போன்ற எதிர்க்கட்சியினரைப் பற்றி விரிவான செய்திகளையும் சன்டிவி வெளியிட்டது.

இது தொடருமேயானால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி விடும் என்ற அச்சமும் திமுக தலைமைக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்தக் காரணங்களாலேயே இரு குடும்பங்களும் இணைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இனி திமுக அரசுக்கு ஆதரவாக செய்திகள் முந்தித் தருவதை மட்டுமே சன் டிவி நோக்கமாகக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய நிலை போலவே விஜயகாந்த், சரத்குமார், வைகோ ஆகியோரை முன்னிலைப்படுத்துவது முற்றிலும் கைவிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

6 Baby Names you probably shoudn't give to your kid

by Graeme Wood

Forget Apple and Pilot Inspektor. If you really want to give your kid a hard time growing up, just pick from the following list.

1. BATMAN

In fact, according to their own government, they’re too creative. In September 2007, after hearing about babies named Superman and Batman, state authorities urged parents to pick their names from an approved list of 100 common Spanish monikers. Those conventional names (such as Juanita and Miguel) quickly acquired a patrician ring, ironically giving rise to more novel names, like Hochiminh (after the Vietnamese guerilla) and Eisenhower (after the president). There are also at least 60 Venezuelans with the first name Hitler.

2. ECLIPSE GLASSES

A total solar eclipse was about to cross southern Africa. To prepare, the Zimbabwean and Zambian media began a massive astronomy education campaign focused on warning people not to stare at the Sun. Apparently, the campaign worked. The locals took a real liking to the vocabulary, and today, the birth registries are filled with names like Eclipse Glasses Banda, Totality Zhou, and Annular Mchombo.

3. NAAKTGEBOREN

When Napoleon seized the Netherlands in 1810, he demanded that all Dutchmen take last names, just as the French had done decades prior. Problem was, the Dutch had lived full and happy lives with single
names, so they took absurd surnames in a show of spirited defiance. These included Naaktgeboren (born naked), Spring int Veld (jump in the field), and Piest (pisses). Unfortunately for their descendants, Napoleon’s last-name trend stuck, and all of these remain perfectly normal Dutch names today.

4. VLADIMIR ASHKENAZY

The people of Iceland take their names very seriously. The country permits no one—not even immigrants—to take or keep foreign surnames. So what happened when esteemed Russian maestro Vladimir Ashkenazy asked to become an Icelandic citizen? Well, the government finally decided to make an exception. Vladimir Ashkenazy is now on the short list of approved Icelandic names.

5. YAZID

Imam Husayn ibn Ali is one of the holiest figures in the Shi’ite Muslim faith. In the 7th century CE, he lost his head on the orders of the Sunni caliph, Yazid, and the decapitation initiated the biggest schism in Islamic history. While the name Yazid remains common among Sunnis, it is disdained throughout the Shi’a world. The stigma attached to it is equivalent to naming one’s son Stalin or Hitler. Speaking of which…

6. ADOLF

Memories of death camps and fascism have kept parents from christening their kids Adolf for quite some time. But one unlucky youngster acquired the name in 1949. He was the son of William Patrick Hitler—the dictator’s nephew, who moved to America in the 1930s to fight against his uncle. It isn’t clear why William preserved the name, but his four sons (including Alexander Adolf Hitler, now 57) made a pact to never have children in an effort to stunt der Fuehrer’s family tree at its branches.

Sunday, November 30, 2008

அரசியல் வாதிகளும் இதை படிக்கலாம்

தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம்.

முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை

புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் பட்டு சுமார் ஒன்பதரை மணி நேரம் பின்னர். பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுவது "தாக்குதல் நடைபெற்ற 30 நிம்டங்களுக்குள் பதில் தாக்குதல் நடத்தா விட்டால், எதிரிகளை அளிப்பது கடினமான காரியம் ஆகிவிடும்". (நன்றி:டைம்ஸ் ஒப் இந்தியா)

இப்படி வியாழன் காலை 7.00 மணிக்கு உள்ளே சென்ற இந்திய கமாண்டோக்கள் தீவிரவாதிகளை அழிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி இங்கே பார்போம். (நன்றி: மும்பை மிர்றோர்)

தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசு அறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும் பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. இந்த ஹோட்டல் இரு பிரிவுகளாக உள்ளது. அதாவது பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ் டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டு இருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்கு வழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள் சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீ வைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறு இருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்ற நமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது.

இந்திய வீரர்களின் திட்டத்தின் அடிப்படை, முதலில் தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நெருக்குவது, அங்கே அவர்களுடன் சண்டை நடத்துவது, அதற்குள் உள்ளே இருப்பவர்களை காப்பாற்றி வெளியேற்றுவது. இதன் அடிப்படையில் ஒரு குழு தீவிரவாதிகளை தேடி முதல் தளத்திற்கு சென்றது. மற்றொரு குழு மேல் தளத்தில் இருந்து உள்ளே நுழைந்தது. இன்னொரு குழு உள்ளே மாட்டி கொண்டவர்களை மீட்க சென்றது. இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், உண்மையில் ஒரு மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. அந்த தீவிரவாதிகள் மிகுந்த போர் தேர்ச்சி பெற்றிருந்ததுடன் கட்டிடத்தின் உள்ளமைப்பு பற்றி நன்கு தெரிந்து கொண்டிருந்தனர். இதனால், அவர்களால் எளிதாக தளம் மற்றும் கட்டிடம் மாற முடிந்தது.

பலமணி நேரம், கட்டிடத்தின் அடித்தளத்தில் கழித்த இந்திய வீரர்கள் மிக நிதானமாக முதல் மாடியை நோக்கி முன்னேறினர். தீவிரவாதிகள் வீசும் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் சுடும் சத்தம் இவற்றின் அடிப்படையிலேயே நம் வீரர்களால் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கணிக்க முடிந்தது. இவர்கள் முன்னேறும் போது, பின்னே வந்த மற்றொரு குழுவினர் பாதுகாப்பு தந்தனர். முதல் மாடியில் ஒவ்வொரு அறையாக இவர்கள் சோதனை இட்டனர். அப்போது, அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்திருந்த தீவிரவாதிகள் இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டினர். கையெறி குண்டுகளை நம் வீரர்கள் மீது எறிந்தனர். மேலும் பல இடங்களில் தீ வைத்தனர். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க நடை பெற்ற சண்டைக்கு பின்னர், நம் வீரர்களால், அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடிந்ததுடன், தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் நெருக்க முடிந்தது.

தீவிரவாதிகளை நேரில் பார்த்த ஒரு கமாண்டோவின் கூற்றுப் படி, அந்த தீவிரவாதிகள் மிகவும் இளைய வயதினராய் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட நேர சண்டைக்கு பிறகு களைத்துப் போய் விட்டனர். மிகவும் பயந்து போய் கூட இருந்தனர். கைகளை தூக்கி சரணடைவது போல நடித்த ஒருவன் தப்பி ஓட முயல நம் வீரர்கள் அவனை சுட்டுக் கொன்றனர். அவன் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் தப்பி சென்ற மற்றொருவனை தேடும் பணியை தொடர்ந்தனர்.

இதே சமயம், உள்ளே மாட்டி கொண்டிருந்தவர்களில் (அறைகளில் தங்கி இருந்த )பலருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட போலீஸார், அவர்களை அங்கேயே இருக்கும் படி அறிவுறுத்தினர். பின்னர் உள்ளே சென்ற மற்றொரு குழுவினரால் அவர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டனர்.

மேல்தளத்தின் வழியாக , உள்ளே நுழைந்த கமாண்டோக்களின் பணி இன்னும் சிரமாக இருந்தது. தீயை அணைக்க பாய்ச்சப் பட்ட நீர் ஆறாவது மாடியில் கழுத்து வரை நிரம்பி இருந்தது. கொல்லப் பட்டவர்களின் உடல்கள் நீரில் மிதந்து கொண்டிருந்தன. அவர்கள் கொல்லப் பட்டு 24 மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டதால், அந்த உடல்கள் அழுகி கடும் நாற்றம் கிளம்பி இருந்தது. ஒரு கமாண்டோ கூறுகிறார். " என்னால் அந்த சூழல் எப்படி இருந்தது என்று சொல்லவே முடிய வில்லை"

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தீவிரவாதிகளை நெருக்குவது அதே சமயத்தில் உள்ளே மாட்டிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது என்ற "ஆபரேஷன் சைக்ளோன்" என்ற திட்டத்தை முதல் பாதியை சிறப்பாக செயல் படுத்திய நம் வீரர்கள், ஹோட்டலுக்குள் உயிரோடு இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர் என்று தெரிய வந்தவுடன், தமது தாக்குதலை தீவிரப் படுத்தினர்.

அதே சமயம் பல மணி தூங்காமல் தீவிரவாதிகள் மிகுந்த களைப்படைந்திருந்தனர். அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் சண்டையிடச் செய்ததும் நமது வீரர்களின் போர்த்தந்திரம். ஒரு தீவிரவாதி "ரப்பா! ரெஹம் கர்!", அதாவது கடவுளே என்னைக் காப்பாற்று என்று ஒலமிட்டதாகவும் நம் கமாண்டோ தெரிவித்தார். மற்றொருவன், தாக்குதலை நிறுத்துங்கள், வெளியே வந்து விடுகிறேன் என்று கதறியதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, அனைத்து அப்பாவிகளும் தப்பித்தனர் என்று உறுதி செய்து கொண்ட நம் வீரர்கள், அவர்களை நெருக்கி அறைகளுக்குள் ஒளிந்து கொள்ள செய்தனர். பின்னர், தீவிரவாதிகள் ஒளிந்து இருந்ததாக சந்தேகிக்கப் படும் அறைகளின் கதவினை குண்டுகள் கொண்டு தகர்த்தனர். உள்ளே சென்று சில குண்டுகளை மீண்டும் எறிந்தனர்.

சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அனைத்து தீவிரவாதிகளும் ஒழித்துக் கட்டப் பட்டனர். பின்னர் அவர்கள் உடல்களை முற்றிலும் சிதைந்த நிலையில் இவர்கள் கண்டுபிடித்தனர். அதைப் பற்றி ஒரு கமாண்டோ கூறியது. "அவர்கள் ஒரு கொடூரமான சாவை அதற்கான வலியை மெல்ல மெல்ல உணர்ந்தவாறே அடைந்தனர். அவர்கள் உடல்கள் சின்னா பின்னமாகின நிலையில் கண்டெடுக்கப் பட்டன.. ஒருவனது கண்களுக்குள்ளே கூட குண்டுகள் பாய்திருந்தன".

50 மணி நேரம் சாப்பிடாமல், தூங்காமல் போராடி தீவிரவாதிகளை ஒழித்து கட்டியது மட்டுமல்லாமல் பலரின் உயிரை காப்பாற்றிய நம் வீரர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்லும் அதே நேரத்தில் இந்தியாவை தாக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தி.

"ஆயுதம் இல்லாத அப்பாவிகளை கொல்லும் பேடிகளே! ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள், உங்களால் எங்கள் படை வீரர்களை ஒருநாளும் நேருக்கு நேர் சந்திக்கவே முடியாது. அதற்கு வேண்டிய ஆண்மையும் வீரமும் உங்களிடம் இல்லை. மேலும், இந்தியா எனும் வல்லரசுடன் மோதினால் உங்கள் சாவு மிகக் கொடூரமாக இருக்கும். அந்த சாவு கூட, பல ஆண்டுகள் பெருவியாதியால் வேதனைப் பட்டு இறக்கும் ஒருவனது வேதனை முழுவதும் முழுமையாக உணர்ந்த பின்னரே நிகழும். அது மட்டுமல்ல, தாய் நாட்டிற்காக உயிர்நீத்த எங்கள் அருமை வீரர் உடல்கள் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் அதே வேளையில் உங்களது உடலுக்கு தெருவில் அடிப்பட்ட சொறி நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது. இறப்பிலும் நாறும் கேவலமான நிலை உங்களுக்கு தேவையா என்பதை இந்தியா வருவதற்கு முன்னரே (உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால்) முடிவு செய்து கொள்ளுங்கள்"

"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும் சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும் தண்டனை அளிப்பார் என்று எல்லா மதங்களின் புனித வேத நூல்களும் கூறுகின்றன. எனவே, இறக்கும் முன்னரும், இறந்த பின்னரும் இவ்வவளவு கடும் தண்டனை தேவையா என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்"

மும்பாயின் கொடுரத்தில் அடுத்த ஹிட்லர் உருவாகி வருவதை உலக நாடுகள் அறியவேண்டும் .

1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல் கேள்விகளை எதிர்கொண்டது. யூதர்களை ஜெர்மனிய தேசியத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஜெர்மனிய தேசிய வெறியை எதிர்மறையாகத் தூண்டிவிட்டு, அதன் விசையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

1935ல் இயற்றப்பட்ட சட்டங்கள் வழியாக யூதர்களின் இயல்பான சமூக உரிமைகள் பிடுங்கப்பட்டன. யூதர்கள் இரண்டாம்கட்ட குடிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துரிமை தடைசெய்யப்பட்டது. அவர்கள் பிற ஜெர்மனியருடன் மனம்புரிதல் தடைசெய்யப்பட்டது. 1938 நவம்பர் 10 ஆம்தேதி யூதர்களுக்கு எதிராக ‘பொக்ரம்’ என்னும் கூட்டக்கொலை அறிவிக்கப்பட்டது. யூதர்களின் குடிகள் கொள்ளையடிக்கப்பட்டன.

1939ல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது ஹிட்லர் யூதர்களை மானுட எதிரிகள் என்று அறிவித்தார். அவர்கள் பொது இடங்களில் நடமாடுவது, சேர்ந்து வழிபடுவது தடைசெய்யப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கெட்டோக்களில் மட்டுமே அவர்கள் வாழவேண்டுமென ஆணையிடப்பட்டது. 1941ல் யூதர்களில் 12 வயதுக்கு மேல் வயதான எல்லா யூதர்களும் ஆயுதத் தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்புக்குச் செல்லவேண்டுமென ஆணை வந்தது. ஆறு வயதுக்குமேலான எல்லா யூதர்களும் மஞ்சள்நிற அடையாள வில்லை அணிந்தாக வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது

1941ல் போர் தனக்குச் சாதகமாக திரும்பிவிட்டது என்ற எண்ணம் ஹிட்லருக்கு உருவானதும் அவர் ‘கடைசித்தீர்வு’ ஒன்றை முன்வைத்தார். முடிந்தவரை யூதர்களை திரட்டி கொன்று ஒழிப்பதே அந்தத் தீர்வு. யூதர்கள் கூட்டம்கூட்டமாக கைதுசெய்யப்பட்டு கட்டாய உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு அவர்களின் கடைசி துளி உழைப்பு வெளிவரும் வரை கடும் உழைப்புக்கு ஆளாக்கப்பட்டனர். பின்னர் அவர்களை விஷவாயு அறைகளில் தள்ளி கொலைசெய்தார்கள் ஹிட்லரின் சிறப்புப் படையினர்.

கொல்லப்பட்டவர்களின் மயிர் கம்பிளி தயாரிப்புக்குக் கொண்டு செல்லப்பட்டது. தோல் செருப்பு தைக்க பயன்பட்டது. எலும்புகள் பற்கள் எல்லாமே தொழிற்சாலைகளில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன. ஆஷ்விட்ஸ், மாஜ்டனிக், ட்ரெப்ளின்கா, டச்சாவூ, புஷன் வால்ட், பெர்கன் -பெல்சன், செம்னோ, பெல்ஸெக், மெடானக் போன்ற கொலைமையங்களில் இரவும் பகலும் கொலை நடந்தது. 1943-44 களில் சராசரியாக மணிநேரத்துக்கு ஆயிரம்பேர் என்ற அளவில் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட 40 லட்சம் பேரை நாஜிகள் கொன்றார்கள். கட்டாய உழைப்பில் இறந்தவர்கள் உட்பட 57 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது நிபுணர் கணக்கு. ஐரோப்பிய யூதர்களில் 90 சதவீதம் பேரும் இக்காலகட்டத்தில் கொல்லப்பட்டார்கள்.

பின்னர் மனித மனசாட்சியை உலுக்கியது இந்தக்கொலை வரலாறு. மனிதன் இத்தனை குரூரமானவனா என்ற கேள்வி எழுந்து வந்தது. சாதாரண மக்கள் எப்படி இந்தக்கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள்? எளிய படைவீரர்கள் எப்படி இந்த படுகொலைகளைச் செய்தார்கள்? அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்?

நாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்ல சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை மிருகங்களாக பயன்படுத்திக் கொண்டார்கள். அச்செய்திகள் வர வர உலகமே சுய விசாரணை செய்ய ஆரம்பித்தது. மனிதனின் மனசாட்சி பற்றிய இலட்சியவாத நம்பிக்கைகள் தகர்ந்தன. கல்வி மனிதனைப் பண்படுத்தும் என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்து சிதைந்தது.

ரஜினியின் பிறந்த மண்ணு எது தெரியுமா ?

உணர்ச்சி மயமாகவும், உற்சாக விசிலோடும் நடந்த ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பில், `கிருஷ்ணகிரியிலுள்ள நாச்சிக்குப்பத்தில் உங்கள் அம்மா, அப்பா பிறந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவீர்களா?’ என்ற கேள்வி வாசிக்கப்பட, பளிச் என்று பிரகாசமான ரஜினி, “யார்.. யார்.. இந்தக் கேள்வி கேட்டது.. அவர் வந்திருக்கிறாரா?” என்று பரவசப்பட, கேள்வி எழுதி அனுப்பிய கார்த்திகேயனை அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்திருக்கிறார் ரஜினி.
எங்கள் தலைவரும் பச்சைத் தமிழன்தான்” என்று தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சந்தோஷ கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ரஜினியின் பூர்வீக பூமியும், அவர் பிறந்த இடமுமான நாச்சிக்குப்பத்திற்குச் சென்று வந்த ஒரு நிருபர் கிழ்கண்டவாறு எழுதுகிறார் ,


பச்சைப் பசேல் கிராமம். பழங்கால மண் சுவர், நாட்டு ஓடுகள் வேய்ந்த நேர்த்தியான வீடுகள். பெரும்பாலும் மராட்டி மொழி பேசும் ஒவ்வொரு வீட்டிலும் வீரசிவாஜியின் படம் பூஜை அறையில் உள்ளது.

ரஜினியின் தாய் மாமா துக்காராம் ராவின் குடும்பத்தினர்தான் தற்போது இங்கு இருக்கின்றனர். வீட்டின் முன் அறையில் பல குடும்ப போட்டோக்களுக்கு நடுவே தன் தாய்மாமா துக்காராமை பாசத்தோடு கட்டிக் கொண்டு ரஜினி நிற்கும் போட்டோவும் இருந்தது. 76-ல் எடுக்கப்பட்ட அந்த போட்டோ, `ரஜினியின் அப்பா ரானோஜிராவ் உடல் நிலை சரியில்லாத போது, பெங்களூரில் அவரைப் பார்க்கச் சென்றபோது எடுத்த படமாம்.

இப்போது அந்த வீட்டில் ரஜினியின் அத்தை சரஸ்வதி பாய் மட்டுமே இருக்கிறார். ரஜினியின் அம்மா, அப்பா வாழ்ந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.

“ரஜினியோட அப்பா பிறந்த ஊரும் இதுதான். ரஜினி பிறந்த ஊரும் இதுதான். ரஜினி அம்மா ராம்பாய் குடும்பம் இதே ஊர் பக்கத்துல இருந்தாங்க. அவங்க குடும்பமே பிழைப்புத்தேடி பெங்களூர் போய்ட்டாங்க. அப்பப்ப இங்க வந்து போவாங்க. அந்த சமயத்துலதான் ரஜினி அப்பா ரானோஜி ராவ்க்கும், ராம்பாய்க்கும் கல்யாணம் நடந்தது. வயல் வேலை தவிர, வேற எதுவும் இங்க பிழைக்க வழி கிடையாது. இருக்குற நிலத்தை வீட்ல பெரியவங்க பார்த்துப்பாங்க. புள்ளங்களை, சம்பாதிக்க பக்கத்துல இருக்குற பெங்களூருக்கு அனுப்பிடுவாங்க.

இப்பக்கூட ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருத்தரோ ரெண்டு பேரோ பெங்களூர்ல வேலை பார்க்குறாங்க. கிருஷ்ணகிரியில வேலை வாய்ப்புக்குவழியில்லாததால, இங்கிருந்து 70 கி.மீட்டர் தூரம் இருக்கிற பெங்களூருக்குப் போயிடுறாங்க. ரஜினி அப்பாவும் மனைவியோட பெங்களூர் போயிட்டார். அனுமந்த் நகர்ல தங்கி அவரு அப்பா போலீஸ் வேலை பார்த்தார். பிரசவத்துக்காக இங்க வந்துடுவாங்க. அப்ப ரஜினி வயித்துல இருக்கும் போது, இங்க இதே காம்பௌண்ட்ல எங்க சொந்தக்காரங்க கூடதான் ராம்பாய் இருந்தாங்க. அப்பல்லாம் ரொம்ப கஷ்டமான சூழ்நிலை. சாப்பாட்டுக்கும் அன்றாட செலவுக்கும் திண்டாட்டமா இருக்கும். அந்தக் கஷ்டமான நேரத்துலதான் ரஜினி பிறந்தார், இதே வீட்டில்” என்று வசூல் சக்ரவர்த்தியின் வரலாற்றுத் தொடக்கத்தைக் கூறினார் சரஸ்வதிபாய்.

“என்னோட கணவர் துக்காராம் மேல ரொம்பப் பிரியம் வெச்சிருந்தார் ரஜினி. அவர் இருக்குற வரைக்கும் சென்னைக்குப்போய் ரஜினியைப் பார்த்துட்டு வந்திட்டிருந்தார். அவரு சின்ன வயசுல இங்கேயே மூணு வருசம் அம்மாவோட தங்கியிருந்தார். பெங்களூர் போன பிறகு அடிக்கடி குடும்பத்தோட வருவாங்க. அவரு மெட்ராஸ் போயி சினிமாவுல சேர்ந்த பிறகு தியேட்டர்ல தான் அவரைப் பார்ப்போம்,” என்று ஏக்கத்தோடு சொன்ன சரஸ்வதி ரஜினியின் தாய்வழி சொந்தங்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

வி.ஐ.பி. கேள்வி கேட்டு, ரஜினியிடம் `வெரிகுட்’ வாங்கிய கார்த்திக்கை சந்தித்தோம். “பல முறை தலைவரை சந்தித்துப் பேசியிருக்கேன். ஒருமுறை என்னை வீட்டுக்கு வரவழைத்து மன்றம் தொடர்பா பேசினப்ப `கிருஷ்ணகிரியிலருந்து நீங்க வர டைம் ஆறு மணி நேரமாகுமா?’னு கேட்டார். `நான் கூட கிருஷ்ணகிரி தான்… நாச்சிக்குப்பம் நான் பிறந்தது’ன்னு போகிற போக்கில் சொன்னார். அப்போது அதுபற்றி நானும் கவனிக்கலை. அந்தக் கேள்விதான் இப்போது கேட்டேன். ரொம்பவும் சந்தோசமாயிட்டார். தலைவர் சந்தோசம் தானே எங்களுக்கு சந்தோசம். இனி அவர் என்ன சொன்னாலும் செய்யத் தயாரா இருக்கோம்” என்று கார்த்திக்கின் குரலில் உற்சாகம் பீரிடுகிறது.

கடந்த 92-ல தான் புதிய மன்றம் தொடங்க தடை போட்டிருக்கிறார் ரஜினி. இதற்கும் ஒரு காரணம் கூறுகிறார்கள். தீவிர ரசிகர்களின் பெற்றோர் சிலர் `எங்க பையன் உருப்படியா வேலை செய்யாம உங்க படத்துக்கு கட்_அவுட் வைக்கிறான்’னு தொடர்ந்து புகார் வர புதிய மன்றப் பதிவை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் ரஜினி.

ஆனால் “ `எந்திரன்’ முடிந்தவுடன் அரசியல் பற்றி உட்கார்ந்து பேசுவோம்” என்ற ஒற்றை வார்த்தை ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.இதையெல்லாம் விட, சமீபத்தில் சென்னை வந்த அத்வானி, ரஜினியிடம் “உங்களுக்கு இருந்த ஒரே தடை கர்நாடகக்காரர் என்கிற முத்திரை. அதுதான் உடைந்து விட்டதே. இனியும் என்ன தயக்கம்? களத்தில் இறங்குங்கள்” என்று வெளிப்படையாக பேசியிருப்பதாகத் தெரிகிறது. மெளனமாக அதைக் கேட்டுக் கொண்டார் ரஜினி. இப்போது அவர் மனதில் நாச்சிக்குப்பத்தில் தாய் தந்தைக்கு நினைவு மண்டபம் கட்டும் திட்டம் ஓடிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள், அவர் முகக் குறிப்பறிந்த நெருங்கிய நண்பர்கள்

இனி நாம் செய்யவேண்டியது , நம்மை காப்பாற்றிக்கொள்ள !

மும்பையில் நடந்த கோர சம்பவத்துக்கு காரணம் இந்தியாவின் அரசியல் தலைமை சரியில்லாததே என்று Wallstreet Journal சொல்கிறது.

One reason is because India is an easy target. Its intelligence units are understaffed and lack resources. Coordination among the country's 28 state police forces is poor. The country's anti terror legal architecture is also inadequate; there is no preventive detention law, and prosecutions can take years. A lack of political leadership is to blame. Yesterday Prime Minister Manmohan Singh promised that "every perpetrator would pay the price." Yet his Congress Party has done little more than
bicker with its coalition allies over the past five years on how best to fight terrorism, as Sadanand Dhume writes here. Or it has tried to deflect responsibility by blaming Pakistan. It may pay a price for its incompetence at the national polls next year.

இந்தியாவின் geo political stability இப்போது அன்னிய முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக மாறி வருவதன் அறிகுறி. இதனால் வருங்காலத்தில் அன்னிய முதலீட்டிற்கான சாதகமான சூழ்நிலைகள் சற்றே குறையக்கூடும். சரிந்து விடாது. ஆனால் முதலீட்டாளர்கள் அதிகமாக கேள்விகள் கேட்பார்கள். Business Resumption Planning முக்கிய காரணியாக அலசப்படும். அதி முக்கிய வர்த்தக செயல்பாடுகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இந்த இடத்தில் சைனா இந்தியாவை அடித்துச் சென்று விடும்.


இந்த முறையும் நிலையில்லாத ஒரு ஆட்சி மத்தியில் அமையுமானால் இந்தியாவின் வளர்ச்சி நிச்சயம் தடை படும். இந்தியா தீவிரவாதத்திற்கு எதிரான மென்மையான போக்கை கடைபிடித்து வருவது மிகவும் ஆபத்தான நிலைப்பாடு. இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் பாகிஸ்தானுடனும் பங்களாதேஷுடனும் இன்னும் வெளிப்படையாகவும் கடுமையானதாகவும் இருக்க வேண்டும். இன்றைய தேதியில் இந்தியாவிற்கு பாகிஸ்தானுடனான உறவில் இரண்டே நிலைகள் தான் இருக்கின்றன.

அ) மிகவும் வெளிப்படையான உறவு - பாகிஸ்தான் அதன் பிரதேசங்களில் இந்திய படைகளுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராண தேடுதல் வேட்டையை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்திய படைகளை பாகிஸ்தானின் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் - இதற்கு நிச்சயம் பாகிஸ்தான் தற்போதைக்கு சம்மதிக்காது. ISIக்கும் IBக்கும் இடையே இன்னுமொரு உடன்படிக்கை வேண்டுமானால் கையெழுத்தாகலாம்.

ஆ) Dushman Humsaaya (பக்கத்து வீட்டு எதிரி) - இந்தியாவின் தேச நலனுக்கு பாகிஸ்தான் எதிரி என்ற பகிரங்கமான நிலைப்பாடை இந்தியா மேற்கொண்டு பாகிஸ்தானுடனான தற்போதைய வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்து வர்த்தக தொடர்புகளையும் முற்றிலுமாக நிறுத்தி விட்டு, சுயேச்சையாக பாகிஸ்தானில் தேடுதல் வேட்டையை தொடர வேண்டும். இதற்கு பாகிஸ்தானுடன் போர் மேற்கொள்வது தான் ஒரே வழி. இப்போதைய பொருளாதார பின்னடைவில் இந்த நிலை மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல - பிற இஸ்லாமிய நாடுகளின் வெறுப்பையும் (ஏன் அமெரிக்காவே இந்த நிலைப்பாட்டை எதிர்த்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை) சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும்.


மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் எப்படி சரி செய்ய போகிறார்கள் என்று இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் முதலில் தெளிவாக மக்களுக்கு சொல்ல வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் இந்தியாவிற்கு இப்போதைய உடனடி தேவைகள்

1) போலீஸ் துறை சீரமைக்கப்பட வேண்டும்: வெறும் லத்திகளை வைத்துக் கொண்டு தீவிரவாதத்தை எதிர்க்க முடியாது. நவின ஆயுதங்களும் தொழில் நுட்பங்களும் போலிஸ் துறைக்கு தரப்படல் வேண்டும். (சைரன் வைத்த காரில் காய்கறி வாங்குவது போல - ஏகே 47 SI பையனின் விளையாட்டு சாமானாகாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்). 9 மாத பிள்ளைதாச்சியைப் போல வயிறை தள்ளிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலிஸ்காரர்கள் குறைக்க (முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் கதை போல) நடவடிக்கை எடுக்க வழி வகை செய்ய வேண்டும். இதற்கான திட்ட விளக்கத்தை கட்சிகள் பிரதானமாக முன் வைக்க வேண்டும்.

2) தீவிரவாதத்திற்கு எதிராண கடுமையான சட்டங்கள் அமலில் இருக்க வேண்டும்: POTAவை மீண்டும் கொண்டு வருவது குறித்த தெளிவான நிலையை ஆளும் காங்கிரஸும் பிஜேபியும் இந்த தேர்தலில் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வட கிழக்கு மாகாணங்களில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களையும் பிற நாடுகளை அடிதளமாகக் கொண்டு இந்தியாவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கங்களையும் அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் தனிமனித உரிமையையும் தடை செய்ய வேண்டும். இது குறித்த நிலையை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் முதன்மையாக தெரிவிக்க வேண்டும்.

3) எல்லைக் காவலை தீவிரப்படுத்த வேண்டும்: இன்னும் தீவிரவாதிகள் இந்தியாவை ஆகாசமார்கமாக மட்டுமே வந்து தாக்கவில்லை. அப்படி வரவும் அதிக நேரம் பிடிக்காது. இன்னும் பல சாமானியர்களின் உயிர்களையும் சில ராணுவ வீரர்களையும் பலி கொடுக்காமல் proactive-ஆக செயல் பட்டு ரோந்துப் பணிகளையும் கண்காணிப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.

4) உள் நாட்டு பிரச்சனைகள் தோன்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்: முக்கியமாக இந்த மாதிரி குழப்ப சூழ்நிலையில் மத கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி மத உணர்வுகளை தூண்டி விடும்படியான அடிப்படை வாத கொள்கைகளை மக்கள் முன் எடுத்துச்செல்லாமல் நடு நிலைமையுடன் அரசியல் கட்சிகளும் மீடியாக்களும் செயல்படுதல் அவசியம்
(ராஜ் தாக்ரேவை விமர்சிக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் - இப்போது வேண்டாம்)

5) உள் கட்டமைப்புகளை இன்னும் தீவிரப் பாதுகாப்பு கண்காணிப்பில் கொண்டு வரவேண்டும்: இன்றைய தேதியில் நமது ரயில்வே ஸ்டேஷன்களும் பேருந்து நிலையங்களும் திறந்த நிலையில் இருப்பது பாதுகாப்பை நாம் எவ்வளவு தூரம் சமரசம் செய்து கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு சிறந்த உதாரணம். இதைத் தவிர முக்கிய சாலைகள், மக்கள் கூடும் பொது இடங்களில் ரகசிய காமெராக்கள் பொருத்தி கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும். இவை மட்டுமன்றி அடிப்படை பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டு கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் முதலில் சீரமைக்கப்பட வேண்டும்.

Friday, November 28, 2008

சீனா வகுப்பு அறை இல் "சிங்கூர் " பாடம்....கவனயுங்கள் செங்கொடி நண்பர்களே ....உங்களால் உபகாரம் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை ,உபத்தரவம் வேண்டாம் .

இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சு என்கிறீர்களா? இது ஒரு கதை அல்ல நிஜம். சென்ற வாரம், சீனாவில் பீஜிங் நகரில் வணிக செய்தி துறை மாணவர்களுக்காக எடுக்கப் பட்ட பாடம் இது. பாடத்தின் பெயர் வெற்றியாளர்களும் தோற்று போனவர்களும் - டாட்டா மோடோர்ஸ் மற்றும் மேற்கு வங்காளம். இந்த பாடத்தை எடுத்துக் கொண்டதற்கு, வகுப்பை நடத்தியவர் (Martin Mulligan of the Financial Times, லண்டன்) கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?


"உலகின் கவனம் இன்றைக்கு இருப்பது நானோ காரின் மேல். நானோ கார் ஒரு சரித்திரம். ஒரு ஆடம்பர மெர்சிடிஸ் காரின் ச்டீரியோவின் (Stereo System) செலவில் ஒரு நானோ கார் வாங்க முடியும். இது ஒரு மிகப் பெரிய சாதனை. அதே சமயத்தில் இந்த பிரச்சினை குறித்து வெவ்வேறு கருத்துகள் உலா வருகின்றன. மேலும் ஒரு காரணம். 8 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு விவசாயத்தை அதிகம் நம்பியுள்ள மாநிலத்தில் இந்த பிரச்சினை நடந்து இருப்பது. இதன் மூலம் அதிக மக்கள் தொகை மற்றும் ஏழ்மை பகுதிகளில் தொழிற்சாலைமயமாக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆராய முடியும்" மேலும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் வாகனத்துறை (Automobile Industry) உலக அளவில் இந்தியாவின் சாதனையான நானோ கார் குறித்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றது.


அவர் சொல்ல விரும்பிய ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு காரணம் கூட உண்டு. சீனாவில் கூட இப்போது தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் தேவைகளுக்காக நில கையகப் படுத்துவதற்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் கூட, சீனாவின் கிழக்கு நகரம் ஒன்றில், வன்முறை கும்பல் (விவசாயிகள்) ஒன்று அரசாங்க அலுவலகத்தை தாக்கியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த பாடத்தின் இறுதியில் இது குறித்து 500 வார்த்தைகளுக்கு குறையாமல் ஒரு கட்டுரை வரையும் படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர் . அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை பார்த்தால் கம்யூனிஸ்ட் நண்பர்கள் நிச்சயம் ஆச்சர்யப் படுவார்கள் . பெரும்பாலான மாணவர்கள், மம்தா செய்தது சரி என்றும் வங்க அரசு செய்தது தவறு என்றும் கருத்து தெரிவித்தனர். மேற்கு வங்க அரசு சரியான இழப்பீட்டு தொகையை நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னமே கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்பது அவர்கள் வாதம் . மேலும், இறுதியாக வெல்லப் போவது யார் என்ற கேள்விக்கு நானோ கார்தான் என்றும் தோற்க போவது மேற்கு வங்கமே என்றும் கருத்து தெரிவித்தனர். (நன்றி: http://www.telegraphindia.com/1081124/jsp/frontpage/story_10155227.jsp)


இப்போது நம் கம்யூனிஸ்ட் நண்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அவர்களுடைய வைத்திய முறையைக் கொண்டே அவர்களுடைய பித்தத்திற்கு வைத்தியம் பார்த்த மம்தாவிற்கு வாழ்த்துகள் சொல்வதா? அல்லது இப்படி கட்சி அரசியல் நடத்தி கொண்டு நாட்டின் தேவைகளை காற்றில் பறக்க விடும் நமது அரசியல்வாதிகளை கண்டு பெருமூச்சு விடுவதா? ஒரு இந்திய சாதனை வேதனையாகிப் போனது மட்டுமல்லாமல் இப்படி இந்திய மானம் கப்பலேறுவதை கண்டு வெட்கப் படுவதா?

Monday, November 24, 2008

பொருளாதார நெருக்கடி: இனிமேல்தான் மோசமான நிலை வரப் போகிறது

IMF

பொருளாதார நெருக்கடி: இனிமேல்தான் மோசமான நிலை வரப் போகிறது-ஐஎம்எஃப்

ஜூரிச்:
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மிகப் பெரிய ஒன்றல்ல. இதை விட மோசமான நிலை இனிமேல்தான் வரும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆலிவர் பிளன்சார்ட் கூறியுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமாகும்.
தற்போது உள்ளதை விட மோசமான நிலை ஏற்படும். 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை படிப்படியாக சரியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜூரிச்சைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு பொருளாதார பிரச்சினைக்கும் பணம் கொடுத்து சரிக்கட்டும் அளவுக்கு ஐ.எம்.எஃப்பிடம் பணம் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர வேண்டும்.

இப்போது உள்ள உலகப் பொருளாதார நெருக்கடி மிகப் பெரியதல்லை. நிலைமை இன்னும் மோசமாகவில்லை. அந்தக் கட்டம் இனிமேல்தான் வரப் போகிறது.

சகஜ நிலை திரும்ப நிறைய அவகாசம் தேவைப்படும். 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை சரியாகும். அதன் பிறகு பொருளாதார வளர்ச்சி மீண்டும் உத்வேகம் பெறும். 2011ம் ஆண்டு நிலைமை நல்ல சூழ்நிலைக்கு மாறி விடும் என்றார் பிளன்சார்ட்.

பொருளாதார நெருக்கடியால் தத்தளித்துக் கொண்டிருக்கும் உக்ரைன், செர்பியா, பாகிஸ்தான், ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் ஐ.எம்.எஃப் நிதியுதவி அளித்தது. அதேபோல லாத்வியாவுக்கும் அது நிதியுதவி அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தான் சூப்பர் ஸ்டாரின் பாலிசி

பசித்தவனுக்கு மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்று கொடு; அவன் ஆயுளுக்கும் நீ உணவளித்தவனாகிறாய்!!” - இது தான் சூப்பர் ஸ்டாரின் பாலிசி. காரணம் இது உழைப்பை ஊக்குவிக்கும், வளத்தை கொண்டுவரும்.

மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்று கொடு

பசித்தவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடு என்கின்ற இந்த அவரது கொள்கையை தனது மகள் விஷயத்தில் கூட அவர் செயல்படுத்தினார் என்பது தான் உண்மை. இந்த கொள்கைதான் அவரது அரசாங்கத்தின் கொள்கையாகவும் இருக்கும் என்று நம்பலாம். இது குறித்து ஒரு சுவையான சம்பவம் உண்டு.

சொன்னதை செய்துகாட்டிய ரஜினி

தனது வாரிசுகளின் எதிர்காலத்தை பற்றிய கேள்விக்கு 1995 லேய தூர்தர்ஷன் பேட்டியில் அவர் அளித்த பதில் தெரியுமா? ஏற்கனவே நாம் அளித்த தூர்தர்ஷன் பேட்டி தொகுப்பிலிருந்து இதை தருகிறேன். அருகில் தரப்பட்டுள்ள ஸ்கேன் கட்டிங்கை பார்க்கவும்.

சொன்னது போலவே அவர் தனது மகள் தனது சொந்தக் காலில் நிற்கும்படி செய்துவிட்டார். (மற்றவர் திருமணமாகி நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டார். அவரது வாழ்க்கைத்துணை பிரபல நடிகர் என்பதால் ரஜினியின் மகள் என்கின்ற அடையாளம் என்பது போய் தனுஷின் மனைவி என்று அவருக்கென்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. ரஜினி விரும்புவதும் இதைத் தான்.)

மகள் என்பதால் ரஜினி எந்தவித விஷேஷ சலுகையும் அளிக்கவில்லை

சௌந்தர்யா ரஜினியின் அடையாளத்திற்கு பின்னர் இருப்பது அவரது கடும் உழைப்பு. தனது மகள் என்பதால் அவருக்கு ரஜினி எந்தவித விஷேஷ சலுகையும் அளிக்கவில்லை. அனிமேஷன் படிப்பு முடித்த பிறகு, சொந்தமாக தொழில் துவங்க வங்கியில் கடன் பெற்று அந்த கடனை சரியாக ஒழுங்காக கட்டவேண்டுமே என்று வாய்ப்புகளுக்கு அலைந்து, தன் சொந்த முயற்சியால் ஆர்டர்ஸ் பிடித்து எந்த வித சிபாரிசும் இல்லாமல் அனிமேஷன் துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். (வங்கியில் கடன் பெற்று தொழில் தொடங்கியதும், அதற்க்கு அவர் தற்போது ட்யூ கட்டி வருவதும் எத்துனை பேருக்கு தெரியும்?)

ஏழுபேருடன் துவக்கப்பட்ட ஆக்கர்

சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வெறும் ஏழு பேருடன் துவக்கப்பட்ட அவரது ஆக்கர் ஸ்டூடியோஸ் இன்று பல நாடுகளில் கிளைவிட்டு நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் பணிபுரியும்வன்னம் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது. விஷுவல் டெக்னாலஜியில் ஒரு பெரும் சந்தை சக்தியாக உருவெடுதிருக்கிறது. தென்னிந்திய விஷூவல் எபெக்ட்ஸ் சந்தையில் இவரது நிறுவனம் 40% கைப்பற்றியிருப்பது சாதாரணமான விஷயம் அல்ல.

திறமையை நிரூபித்தபிறகு தான் சுல்தான்

எந்தவித சிபாரிசும் இல்லாமல் அவரது சொந்த முயற்சியில் தான் அவரது முதல் வாய்ப்பு சந்திரமுகி படத்துக்காக டைட்டில் டிசைன் செய்வதற்கு கிடைத்தது. அதற்க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

சௌந்தர்யா தனது திறமையை நிரூபித்தபிறகு தான் சுல்தானுக்கு கூட அவர் வாய்ப்பளித்தார். தந்தையை சமாதானம் செய்வது அவருக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை.

இது குறித்து சௌந்தர்யா கூறுவதாவது :

“சுல்தான் படம் என்னுடைய பல வருட கனவு, உழைப்பின் விளைவு என்றுகூடச் சொல்லலாம். இந்தப் படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் நான் திட்டமிட்டேன்.

இல்லாவிட்டால் அப்பாவை அத்தனை சீக்கிரம் யாராலும் கன்வின்ஸ் பண்ணவே முடியாது. தன் மகள் என்பதற்காகவெல்லாம் எந்த வாய்ப்பையும் தந்துவிடமாட்டார் அவர்.

ஆனால் அப்பா ஒரு முறை முடிவு செய்துவிட்டால், கடவுளே நினைத்தாலும் அதை மாற்றமுடியாது. அதுதான் அவரது இயல்பு. ஆரம்பத்திலேயே இந்தப் படம் குறித்த ஒவ்வொரு காட்சிக்கும் அவருக்கு போதிய விளக்கம் கூறி அவருக்கு திருப்தி வரும் வகையில் கதையை அமைத்தேன்.”

(நன்றி: http://envazhi.com)

சௌந்தர்யா ரஜினி சொந்தமாக போராடி பிசினசில் வெற்றிக்கொடி நாட்டியது பற்றி நவம்பர் 26, 2008 தேதியிட்ட இந்தியா டுடே யில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதி தான் நீங்கள் அருகில் காண்பது.

இந்தியா டுடேயில் மேற்படி கட்டுரையை படித்தவுடன் சூப்பர் ஸ்டாரின் மீன் பிடிக்க கற்றுகொடு பாலிசிதான் நினைவுக்கு வந்தது. தனது சொந்த மகளின் விஷயத்தில் கூட அவர் அதை அப்ளை செய்தது எனக்கு பெரிய ஆச்சரியம். அதனால் தான் அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்தேன்.

Sunday, November 23, 2008

யார் இந்த கடல் கொள்ளைகாரர்கள் ?

உலகின் மேற்கு பகுதியையும் கிழக்கு பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய கடல் வழிப் பாதையான ஏடன் கடல் பகுதியில் சோமாலிய நாட்டைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள் பல கப்பல்களை கொள்ளையடித்தும் கடத்தியும் பன்னாட்டு கப்பல் போக்குவரத்து கம்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.

மிகப் பழங்காலத்திலேயே அரேபியா கடல் பகுதியில் மிகப் பெரும் கொள்ளைகள் நடை பெற்றதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. பண்டைய சரித்திரத்தின் அடிப்படையில் எழுதப் பட்ட புகழ் பெற்ற நவீனமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" படித்திருக்கிறீர்களா? அதில் கூட இவர்களைப் பற்றி சில குறிப்புகள் (மூர்க்கமான புதிய வகை அரேபியா கடல் கொள்ளைக்காரர்கள்) உள்ளன. அருள்மொழி செல்வன் உத்தம சோழரை பதவியில் அமர்த்தி விட்டு இந்த கொள்ளை கும்பலை அடக்க செல்ல விரும்புவதாக ஒரு குறிப்பு கூட இருக்கும். இந்தியாவின் மேற்கு கடலோரம் இருக்கும் "வெல்ல முடியாத கடற் கோட்டையை" கட்டியவர்கள் கூட இந்த சொமாலியரே. கொள்ளை அடிக்கும் தொழில் இவர்கள் ஜீன்களிலேயே இருக்கும் போலிருக்கிறது.

சோமாலியா வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு ஏழை நாடு. இங்கு சரியான ஆட்சிமுறை அமையாததும் தொடரும் உள்நாட்டு குழப்பங்களும், எதிஒபியா- சோமாலியா சண்டையும், சோமாலியாவின் பூகோள ரீதியான நிலவமைப்பும் கடற் கொள்ளைகாரர்கள் உருவாகவும் வளரவும் முக்கிய காரணங்கள். ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் (சூயஸ் கால்வாய்) முக்கிய வழியாக ஏடன் கடல் இருப்பதால், இந்த கடல் வழியாக தினசரி ஏராளமான கப்பல்கள் பிரயானிக்கின்றன. சோமாலியா அரசின் கட்டுப்பாடு இந்த நாட்டைச் சார்ந்த கடல் பகுதியில் குறைவாக இருப்பதால், கடற் கொள்ளையர்களுக்கு நல்ல வசதியாக போய் விட்டது.

இந்த கொள்ளைகாரர்கள் பெரும்பாலும் 20 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள். இவர்கள் மூன்று வகையாக உள்ளனர். கடல் பற்றி நன்கு தெரிந்து கொண்டு கடற் கொள்ளையர்களின் கண்களாக இயங்கும் உள்ளூர் மீனவர்கள், உடல் பலத்தை காட்டும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் இவர்களை இயக்கும் மூளைகளான அதி நவீன தொழிற் நுட்ப வல்லுனர்கள். ஒரு முக்கிய விஷயம். இவர்கள் பல குழுக்களாக பிரிந்து கொள்ளையடித்தாலும் தமக்குள்ளே சண்டைகள் இட்டு கொள்ளுவதில்லை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். Pirates of Caribbean படம் பார்த்துள்ளீர்களா? (பார்க்க வில்லையென்றால் நிச்சயம் பாருங்கள். ஜாலியான படம் ) அதில் உள்ளது போல் தமக்குள்ளே சில சட்டதிட்டங்கள் எல்லாம் கூட வைத்திருப்பார்கள் போல.

மேலும் ஒரு வேடிக்கையான தகவல். இவர்கள் வறுமை நாடான சோமாலியாவில் மிக ஆடம்பர வாழ்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்து கூட உண்டு. சமூகத்தின் பெரிய மனிதர்களாக இவர்கள் கருதப் படுகின்றனர். (நம் நாட்டில் கூட சில சமூக கொள்ளையர்களுக்கு மிக பெரிய அந்தஸ்து உண்டுதானே?) இந்த கொள்ளையில் கிடைக்கும் பணத்தை கொண்டு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு இவர்கள் கடன் கூட கொடுக்கிறார்கள். (இது மட்டுமே திவால் ஆகாத வெளி நாட்டு வங்கி).

இவர்களை அடக்க உலக நாடுகள் (குறிப்பாக நேடோ நாடுகள்) எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தும் போதெல்லாம், தப்பி சென்று சோமாலியா கடல் எல்லைக்குள் இவர்கள் நுழைந்து விடுவதால் இவர்களை முழுமையாக அடக்க முடிய வில்லை. இதற்காக, ஜுன் 2008 இல் ஐ.நாவில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சோமாலிய கடல் எல்லைக்குள்ளும் உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தி செல்ல முடியும். ஆனால் இதற்கு பிறகும் கூட, இவர்களை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சிரமமான காரியமாகவே இருக்கிறது. 2008 இல் மட்டுமே 92 முறை கடல் தாக்குதல்கள் நடத்தி உள்ள இவர்கள் 36 முறை கப்பல்களை கடத்தி சென்றுள்ளனர். இவற்றில் இன்னும் 17 கப்பல்கள் மீட்கப் படாமல் உள்ளன. சமீபத்தில் கூட, உலகின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலொன்றை (Sirius Star) இவர்கள் கடத்தி சென்று உள்ளனர்.

இந்தியா கூட ஒன்பதாவது நாடாக ஒரு போர்க்கப்பலை இங்கே நிலை நிறுத்தி உள்ளது. காரணம், இந்த கடல் பாதை வழியே தினமும் ஏராளமான இந்திய சரக்குக் கப்பல்கள் பயணம் செய்கின்றன. மேலும் வெளி நாட்டுக் கப்பல்களில் கூட ஏரளாமான இந்திய மாலுமிகள் பணியாற்றுகின்றனர். நமது கடற் படை இந்த கடல் பகுதியில் மிகச் சிறப்பாக செயல் புரிந்து வருகிறது. இந்தியக் கப்பல்களுக்கு மட்டுமன்றி வேறு நாட்டு கப்பல்களுக்கும் சிறந்த பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. இந்தியக் கடற்படைக்கும் இந்த கொள்ளையருக்கும் சமீபத்தில் கூட ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறு படகை கப்பலின் மீது வேகமாக மோதி விட்டு பின்னர் கப்பலிலிருந்து தாக்குதல் நடத்துவது இவர்களது பாணி. இதை திறம்பட முறியடித்த நமது கடற்படை கொள்ளையர்களின் கப்பலை மூழ்கடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இவர்களை முழுமையாக அடக்க ஒரு "பொன்னியின் செல்வன்" வருவானா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

சோமாலிய ,உலகின் குப்பை தொட்டியா?

ஐ.நா. அனுமதியுடன் கடற்கொள்ளைக்காரர்களை வேட்டையாட போகும் இந்திய கடற்படையினர், சோமாலிய கடலில் அணு உலை, மற்றும் இரசாயன நச்சுக் கழிவுகளை திருட்டுத்தனமாக கொட்டும் பன்னாட்டு கப்பல்களையும் பிடித்து தண்டிப்பார்களா?

சோமாலியா, அரசு இல்லாத தேசம். தட்டிக் கேட்க ஆள் இல்லையென்றால் யாரும் எது வேண்டுமானாலும் செய்யலாம். தொன்னூறுகளில் சோமாலிய பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் சொல்லி விட்டு சென்ற "உலக பொலிஸ்காரனான" அமெரிக்கா கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் அவமானத்துடன் வீடு திரும்பியது. அதற்குப் பிறகு ஆயுதக் குழுக்களின் அதிகாரப் போட்டி காரணமாக, இது வரை நிலையான அரசாங்கம் ஏற்பட இல்லை. வடக்கு பகுதி மாநிலம் மட்டும், தமக்குள் இணக்கப்பாடு கண்டு தனியாட்சி நடத்துகின்றது. "சோமாலிலாந்து" என்றழைக்கப்படும் இந்த தனி நாட்டை உலகில் யாரும் அங்கீகரிக்கவில்லை.

பிற சோமாலிய பகுதிகள் தமக்கு தெரிந்த வகையில் தப்பிப் பிழைக்கின்றன. வியாபாரிகள் தமது பாதுகாப்புக்காக சிறு ஆயுதக் குழுவை பராமரிக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் தொழில் புரியும் சோமாலியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் தவிர, வேறெந்த உலக நாட்டு உதவியும் இல்லை. சோமாலியா மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இருப்பினும் மீனவர்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர். மீன்பிடிக்க கடலில் சென்றால், மீன்கள் கிடைப்பதில்லை. எல்லா மீன்களையும் பிறநாட்டு மீன்பிடி கப்பல்கள் வந்து அள்ளிக் கொண்டு போகின்றன. தனக்கென அரசாங்கமே இல்லாத சோமாலிய மீனவர்களால் இந்த அட்டூழியத்தை கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க தான் முடியும். அவ்வாறு தொழில் இழந்த மீனவர்கள் தான், இப்போது கடற்கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர். அப்போது ஏனென்று கேட்க வராத சர்வதேச நாடுகள், இப்போது மட்டும் கடற்கொள்ளையை கண்டிக்கிறார்களாம். இதுவன்றோ சர்வதேச நீதி!

சோமாலிய மக்களின் பிரச்சினை கடற்கொள்ளையல்ல. அவர்களின் கடலில் நடக்கும் சட்டவிரோத மீன்பிடி மட்டும் ஒரேயொரு பிரச்சினையல்ல. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள், அந்த நாடுகளில் அணு உலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், பிற இரசாயன நச்சுக் கழிவுகளையும் கொண்டு வந்து திருட்டுத்தனமாக கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இந்த நச்சுக் கழிவுகள் சோமாலிய கடற்கரையை மாசுபடுத்துகின்றன. இதனால் மக்களுக்கு புற்றுநோய் உட்பட, முன்பு ஒருபோதும் வராத புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இதையெல்லாம் உலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் கடத்தப்படும் போது மட்டும், முக்கிய செய்தியாக சொல்லும் ஊடகங்கள் எதுவும் சோமாலிய மக்கள் கடந்த பத்தாண்டுகளாக பட்டு வரும் துன்பம் பற்றி எடுத்தச் சொல்லவில்லை. இதனை வாசிக்கும் உங்களில் பலர் இந்த செய்தியை இப்போது தான் கேள்விப் படுகிறீர்கள்.

1998 ம் ஆண்டு வெளிவந்த Famiglia Cristiana என்ற பத்திரிகை இத்தாலி நச்சுக்கழிவுகளை சோமாலியாவில் தொடர்ந்து கொட்டிவரும் நாடுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளது. இத்தாலி சோமாலியாவின் முன்னாள் காலனியாதிக்க நாடு என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 1992 ம் ஆண்டு இத்தாலியும் ஒரு உறுப்பினராக கைச்சாத்திட்ட "பாசல் ஒப்பந்தம்", அணு, நச்சுக் கழிவுகளை பிறிதொரு உறுப்பு நாடுகளிலோ அல்லது உறுப்பினரல்லாத நாட்டிலோ கொண்டு போய் கொட்டுவதை தடை செய்கின்றது. அணு நச்சுக் கழிவுகளை ஐரோப்பாவில் பாதுகாப்பாக ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்கு, தொன் ஒன்றிற்கு ஆயிரம் டாலர் செலவாகின்றது. ஆனால் அதனை சோமாலியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கோ தொன்னிற்கு வெறும் இரண்டரை டாலர்கள் தான் செலவாகின்றது! அண்மையில் கடத்தப்பட்ட உக்ரைனிய ஆயுதக்கப்பலை விடுவிக்க பேரம் பேசி கிடைத்த மில்லியன் கணக்கான பணத்தை, சோமாலியாவின் கடற்கரையை தூய்மைப்படுத்த பயன்படுத்தப் போவதாக கடற்கொள்ளையர் தெரிவித்துள்ளனர்.

Thursday, November 20, 2008

There are INDIANS as per " Dharma Sasthra"

Mohali (Punjab):
Manpreet Singh, a milkman did not hesitate even once when he found a bag full of currency notes worth Rs 3,00,000. He knew what had to be done. He carried the bag with him - straight to the police station and the money was returned to the real owner.

"Manpreet, a resident of Kartarpur village in Mohali district in Punjab, around 20 km from Chandigarh, came to us with a bag full of notes. There were bundles of Rs 1,000 notes, some keys and an identity card in the bag," Davinder Singh, investigating officer, said.

After verifying all the details and cross checking every detail we handed over the money to the real owner who resides in Sector 71 here. He had placed the bag on the roof of the car and it fell off from the roof without him realising it," Singh said.

Manpreet said: "I was returning home after delivering the milk when I saw a black coloured bag lying abandoned on the corner of the main road in Sector 71. I got suspicious on seeing the bag and opened it carefully but to my big surprise the bag was full of notes."

He added: "I did not touch the notes and immediately took the bag to the nearby police station. The owner of the bag offered me a prize of Rs 2,000 but I took only Rs 1,000 because I had to incur a loss of Rs 1,000 in the whole process because of the wastage of my milk."

Tuesday, November 18, 2008

இந்திய சாப்ட்வேர் துறையையும்,பொருளாதார நெருக்கடிகள்

டெல்லி:

கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்த இந்திய சாப்ட்வேர் துறையில் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக இன்போசிஸ் துணைத் தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய வர்த்தக சபையின் கூட்டத்தில் பேசிய அவர்,

சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்திய சாப்ட்வேர் துறை தப்ப முடியாது. இதுவரை தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்த இந்தத் துறையில் மந்தம் ஏற்பட்டுள்ளது உண்மை தான். விரைவில் சரிவும் ஆரம்பிக்கும். ஆனால், இதையெல்லாம் சமாளிக்கும் பலம் இந்திய சாப்ட்வேர் துறைக்கு உண்டு.

வளர்ச்சி குறையலாமே தவிர ஒரேயடியாக முடங்கிவிடாது. இதனால் இந்தத் துறையில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டு தான் இருக்கும். ஆனால், அது கடந்த 5 ஆண்டுகளில் இருந்ததைப் போல இருக்காது.

இந்த ஆண்டுக்கான இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதத்தை நாங்களே குறைத்துவிட்டோம். இந்த ஆண்டில் எங்களது வருவாய் 4.72 பில்லியன் டாலர் முதல் 4.81 பில்லியன் டாலருக்குள் தான் இருக்கும்.

இது போன்ற பொருளாதார நெருக்கடிகள் எந்தத் துறையையும் விட்டு வைக்காது. ஆனால், இதை சமாளித்துக் காட்டியது தான் இந்திய சாப்ட்வேர் துறை. 2001ம் ஆண்டிலும் இதே போன்ற சரிவைத் தான் சந்தித்தோம். ஆனால், அதை வெற்றிகரமாகவே சமாளித்தோம். எங்கள் நிறுவனத்தில் ஊழியர்கள் சேர்ப்பதை நிறுத்தப் போவதி்ல்லை என்றார்.

Saturday, November 15, 2008

மன்னவ னானாலும் – மாடோட்டும்
சின்னவ னானாலும்
மண்ணில் பிறந்தாரே – முடிவில்
மண்ணுக் கிரைதானே

இந்தப்பாடல் ரத்தக்கண்ணீர் படத்தில் வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இப்பாடல் திரு. சுப்புவின் பெயர் குறிப்பிடப் படாமல் வருகிறது.

வாலி கேட்கிறார்... “அண்ணா.. ரத்தக் கண்ணீர் படத்துல உங்க பாட்டு வரிகள் வருது. ஆனா பாடலாசிரியர்கள் பெயரிலே உங்க பெயரில்லை. பெருமை வேறு யாருக்கோ போகிறதே?”

கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்:

“டேய்.. நாம எழுதின ஒரு பாட்ட, இன்னொருவன் தன் பாட்டுன்னு சொல்லிக்கறான்னா நீ சந்தோஷப்படணும். ஏன்னா, அடுத்தவன் தன்னுதுன்னு சொல்லிக் கொள்ள ஆசைப்படற மாதிரி – அற்புதமான பாட்டை எழுதியிருக்கேன்னு அர்த்தம். நீ மோசமான பாட்டா எழுதியிருந்தா, மத்தவன் அதத் தன்னுடையதுன்னு சொல்லிக்க மாட்டானே!”

*******************


வாலி கலந்து கொண்ட ஒரு விழாவில் திரு.அவ்வை நடராஜன் பேசினார்:

‘காற்று வாங்கப் போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் –அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்தக்
கன்னி என்ன வானாள்?’ - என்றார் கவியரசர் கண்ணதாசன். இப்படி எழுத இன்றைக்கு யாரேனும் இருக்கிறார்களா?

பலத்த கைதட்டல்.

திருமதி. மனோரமா ஒரு பத்திரிகையில் எழுதினார்.

“‘கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?’ – என்று கண்ணதாசன் எழுதிய மாதிரி கருத்தோட எழுதற கவிஞர்கள் இப்போ குறைஞ்சுட்டே வர்றாங்க”

இந்தப் பாடல்கள் கண்ணதாசன் எழுதியவையல்ல. கவிஞர் வாலி எழுதியது!

Friday, November 14, 2008

இது கல்யாணம் ஆகபோறவர்களுக்கு மட்டும்

25 வது திருமண நாளை வெற்றிகரமாக கொண்டாடினார்கள் அந்த தம்பதியர்.

அந்த ஊரில் மிகவும்பிரசித்திபெற்றஜோடிகள்..

காரணம்..அவர்களின் ஒற்றுமை..அவர்களது 25 ஆண்டு கால

வாழ்க்கையில் சண்டை போட்டதே இல்லை..

அதுவும் ஒரு காரணம்..ஏன் அதட்டி ஒரு வார்த்தை கூட அந்த

கணவர் பேசியதில்லை..


அந்த ஊர் தொலைக்காட்சியில் இருந்தும்,பத்திரிக்கையில்

இருந்தும் பேட்டி எடுக்க வந்திருந்தனர்.வீடு முழுவதும் மக்கள்

வெள்ளம்.


பேட்டி ஆரம்பித்தது...


ஒரு நிருபர் கேட்டார்...உங்கள் திருமண வாழ்க்கையின் வெற்றியின்

rakasiyam என்ன?..எவ்வாறு உங்களால் மனைவி மேல் கோபப் படாமல்

இருக்க முடிந்த்தது?...


அவர் கூறினார்...நானும் என் மனைவியும் திருமணம் முடிந்த உடன்

தேனிலவுக்கு சென்றோம்...


அவள் குதிரை சவாரி செல்ல விரும்பினாள்..இருவரும் ஆளுக்கு ஒரு

குதிரையில் சவாரி சென்றோம்..


என்னுடைய‌ குதிரை அமைதியாக‌ சென்றுகொண்டிருந்த‌து..அவ‌ளுடைய‌து
கொஞ்ச‌ம் ச‌ண்டித்த‌ன‌ம் செய்த‌து..சிறிது தூர‌ம் சென்ற‌தும் அந்த‌ குதிரை

அவ‌ளை கீழே த‌ள்ளிய‌து..எழுந்த‌ அவ‌ள் இது உன‌க்கு முத‌ல் சான்ஸ்

என்று கூறி ம‌றுப‌டியும் ச‌வாரியை ஆர‌ம்பித்தாள்...சிறிது தூர‌ம்

சென்ற‌தும் ம‌றுப‌டியும் அவ‌ளை அது கீழே த‌ள்ளிய‌து..ம‌றுபாடியும் அவ‌ள்
எழுந்து இது உன‌க்கு 2 வ‌து சான்ஸ் அப்ப‌டின்னுட்டு ம‌றுப‌டியும் ச‌வாரி

செய்தாள்..இந்த முறையும் அவ‌ளை அந்த‌ குதிரை கீழே த‌ள்ளிய‌து..

எழுந்த‌ அவ‌ள் அவ‌ளுடைய‌ துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை

சுட்டு விட்டாள்...


என‌க்கு உட‌னே க‌டுமையான‌ கோப‌ம் வ‌ந்து அவ‌ளை நோக்கி "உன‌க்கு

அறிவு இருக்கா?...ஐந்த‌றிவு பிராணியை இப்படியா செய்வ‌து?..உன‌க்கும்

அதற்கும் என்ன‌ வித்தியாச‌ம்...ஏன் இப்ப‌டி மிருக‌ம் போல் ந‌ட‌ந்து

கொள்கிறாய்..என்று திட்டினேன்..

அதற்கு அவ‌ள் இது உனக்கு முத‌ல் சான்ஸ் என்று என்னிடம்கூறினாள்..

இது தான் எங்களது மண வாழ்கயின் ரகசியம் ...என்று கூறி முடித்தார் .

மின் உபயோகம்: கருணாநிதியை விஞ்சிய ஜெயலலிதா!

சென்னை:

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான அளவுக்கு மி்ன்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,

”தமிழகத்தில் 20 மணி நேரம் மின்சாரம் இல்லை என்றெல்லாம் கூறி அ.தி.மு.க. வினர் தினந்தோறும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நானும் இதை சொல்லக் கூடாது என்று தான் இருந்தேன், ஆனால் சொல்ல வேண்டியதாகிவிட்டது. போராட்டங்களை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தோம்.

அவருக்கு பல வீடுகள் இருந்தாலும் அந்த ஒரு வீட்டில் மட்டும் 2 மாத காலத்துக்கு மின் கட்டணமாக ரூ. 1,02,468 செலுத்தியிருக்கிறார்கள். இதற்கு எத்தனை யூனிட் மின்சாரம் செலவாகியிருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு 2 மாதத்துக்கு ரூ. 15,000 தான் கட்டணம் வந்துள்ளது” என்றார்.

Tuesday, November 11, 2008

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

1. நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் "ஆடம் ஆப்பிள்" அது என்னவென்று தெரியுமா? கழுத்து எலும்பில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ள கார்டிலேஜ் எலும்புதான் அது.
2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா? ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான்.
3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன.

4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது.

5. நம் தும்மும் போது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் தனது வேலையை நிறுத்திவிடும் "இதயம் கூடத்தான்".

6. குழந்தைகள் பிறக்கும் போது முட்டியில் கிண்ணம் (knee cap) இருக்காது. பொதுவாக 2-6 வயதில்தான் உருவாகும்.

7. பெண்கள் கண் சிமிட்டுவது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.

8. மனிதனின் தலை சராசரியாக 4 கிலோ எடை (head wight) இருக்கும் .

9. நம் உடலில் வளராத ஒரே உறுப்பு கண் மட்டும்தான். ஆனால் காதும், மூக்கும் மனிதனின் இறுதிகாலம் வரை வளரும்.

10. மனிதனின் தலை முடியின் எண்ணிக்கை சராசரியாக 100,000 இருக்கும்.

11. நம் தலையில் 29 வகையான எலும்புகள் இருக்கின்றன.


12. நம் உடலில் மிக அதிகமான உணர்ச்சியுள்ள நரம்பு முடிச்சிகள் இருபது நமது முதுகு தண்டு வடத்தில்தான் (spine). 13. வாழ்நாளில் நமது உடலில் இருந்து உதிரும் தோலின் எடை சுமார் 18 கிலோ வரை இருக்கும்.

14. நமது இதயத்தில் உருவாகும் pressure இரத்தத்தை சுமார் 30 அடிகள் வரை சிதறி அடிக்கும் (squirt) திறனுடையது.

15. நமது உடலில் தாடி முடித்தான் மிக வேகமாக வளரும் தன்மையுடையது. வாழ்நாள் முழுவதும் நாம் தாடியை வளர்த்தால் சுமார் 30 அடிகள் வரை வளரும்.

Posted by Dr. சாரதி at 7:13 PM

கொள்ளைக்காரன் கண்டுபிடித்த வரலாற்று தடயம்

Henrich Schleimann ஒன்பதே வயது நிரம்பிய சிறுவன். The Iliad என அச்சிடப்பட்டிருந்த அப்புத்தகத்தை மூடி வைத்தான். Homer என்ற கிரேக்க குருடன் எழுதிய அந்த புத்தகத்தை பல முறை அவன் வாசித்து விட்டான்.

Schleimann தனது நண்பர்களை காணும் போது சொல்கிறான், ஒரு நாள் நிச்சயமாக நான் Troy கோட்டையை தேடிச் செல்வேன் என்று. அவனது பேச்சு எல்லோருக்கும் நகைப்புக்குள்ளாகிறது. schleimann-னின் பெற்றோரும் அவனது எண்ணத்தை அறிகிறார்கள்.
அவனை அழைத்துச் சொல்கிறார்கள். Trojan போர் என்பது ஒரு புனைவு மட்டுமே. அதில் வரும் பல கடவுளர்களும் புரட்டு விடயமே. ஒரு ஆப்பிளுக்காகவும், பெண்ணுக்காகவும் 10 வருட போர் நடந்தது என்பது கேலிக்குறியது. கதையை கதையாக மட்டுமே பார்க்க வேண்டுமெனவும் மனதை குழப்பிக் கொள்ளாமல் இருக்கவும் சொல்கிறார்கள்.


Minna Meincke எனும் அவனது பெண் தோழி மட்டுமே அவன் கருத்தை செவிமடுக்கிறாள். "நாம் பெரியவர்களானதும் திருமணம் செய்து கொள்வோம். பிறகு Henning Von Holstein-னின் அரண்மனையை தோண்டுவோம், அங்கு கிடைக்கும் செல்வங்களை விற்று துர்க்கிய நாட்டிற்குச் சென்று Troy கோட்டையை தேடுவோம்" என்கிறான். Minna-வும் சம்மதம் தெரிவிக்கிறாள்.


இளைஞனான பிறகு, Schleimann வியாபரம் செய்தும் மாலுமியாக பணி புரிந்தும் பணம் தேடுகிறான். அவனது பல தேச பயணங்களின் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்கிலம், பிரெஞ்ச், மற்றும் துர்க்கிய மொழிகளை பயின்று கொள்கிறான். St.Pettersburg எனும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவணத்தில் பணி புரியும் சமயம் ரஷ்ய மொழியும் கற்றும் கொள்கிறார். வியாபாரமும் நல்ல விதமாய் அமைந்ததால் இளம் பருவத்திலேயே நன்கு பணம் ஈட்டுகிறார்.


தனது இலட்சியங்களையும் மறக்காமல் அதற்கான ஆதாரங்களையும் கேமிக்கிறார்.
அதில் ஈடுபடும் முயற்சியை பொருட்டு முதல் வேளையாக Minnaவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதுகிறார்.அக்கடிதம் கிடைப்பதற்கு ஒரு மாதத்திர்கு முன்னமே Minna வேறொரு ஆடவரை திருமணம் செய்து கொண்டுவிடுகிறாள். Minna-வின் நேர்மையின்மையினால் Schleimann மிகவும் வருந்துகிறார். பிறகு ஒரு ரஸ்ய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் நீடிக்காமல் விவாகரத்தில் முடிகிறது.


1863-ஆம் ஆண்டு Schleimann தனது 41வது வயது நிறைவடையும் சமயம் கோடிஸ்வரன் எனும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். சரித்திர வல்லுனர்களும் ஆய்வாளர்களும் Troy கோட்டை இல்லை என்பதையே அச்சமயம் உறுதியோடு சொன்னார்கள். அவை Scheleimann-னின் எண்ணத்தை சற்றும் சிதறடிக்கவில்லை. அதே ஆண்டு தனது கனவுகளை உறுதிபடுத்திக் கொள்ள துர்க்கி நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஒரு சிலரே Troy நகரம் இருந்திருக்கக் கூடும் என்பதை நம்பினார்கள். அது Aegean எனும் கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் Bunarbashi எனும் மலையில் அமைந்திருக்கலாம் என கருத்துரைக்கிறார்கள். Schleimann, Bunarbashi மலைக்குச் செல்கிறார். அவ்விடம் Homer இலியட்டில் சொன்னதை போல் இல்லாதிருப்பதைக் கண்டு வருத்தமடைகிறார்.

Homer தனது கதையில் சொல்லிய புவியியல் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனது ஆராய்ச்சியில் முற்படுகிறார். அதன் அடிப்படையில் Troy கோட்டையானது Hissarlik அருகே இருக்கும் ஒரு மலையில் இருப்பதாக அறிகிறார். அந்த மலையில் இருந்து Ida மலையைக் காண முடிந்தது. அங்கே சமமான மணல் பரப்பும், எதிரியை துரத்துவதற்கு வசதியான இடமும், கடற்கறையில் இருந்து சற்று தூரத்திலும் அமைந்திருந்தது.


அவரது முயற்சிகள் வீண் போகாமல் இருக்கும் பொருட்டு தன்னை நன்முறையில் தயார்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறார். தொல் பொருள் ஆராய்ச்சி துறையில் தனது மேற்படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுகிறார்.
மீண்டும் துர்க்கிக்குச் சென்று ஆராய்ச்சியை தொடரும் முன் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார். தன் நண்பருக்கு கடிதம் எழுதி தனக்கு ஒரு இளம் மனைவியை தேடும்படியும் அவள் Homer மற்றும் Troy ஆராய்ச்சியின் மீது பற்று கொண்டிருப்பவளாகவும் இருக்க வேண்டுமெனவும் சொல்கிறார்.

Schleimann-னின் கடிதத்தை ஏற்ற அவரது நண்பன் Sophia Engastromoners எனும் 17 வயது நிறம்பிய நங்கையை அவருக்கு அறிமுகப் படுத்துகிறார். பிறகு அவர்களிருவரும் Athens-ல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

துர்க்கிய நாட்டு அரசாங்கத்தின் அனுமதியோடு Troy நகர ஆராய்ச்சி தொடங்குகிறது. Schleimann-னின் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்த சுல்த்தான் கிடைக்கும் பொருட்களில் ஒரு பங்கு துர்க்கி நாட்டு அரசாங்கத்திற்கு சேர வேண்டுமென விதியிடுகிறார்.

1871-ஆம ஆண்டு Hissarlikகில் ஆராய்ச்சி வேலைகள் தொடங்கப்படுகிறது. Schleimann-னின் பாலிய வயது கனவும் நிறைவடைகிறது. அவர் Troy கோட்டையை கண்டுபிடித்தார். அடுக்கடுக்காய் இடிந்து விழுந்தும், தீவைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்த கோட்டையை கண்டுபிடிக்கிறார். இந்த வெற்றி அவரை உலகப் புகழ் பெற செய்தது.
Schleimann-க்கு மன நிறைவு கிடைக்கவில்லை. Priam அரசனின் ஆட்சியின் போது சொல்லப்பட்டிருப்பதை போல் அந்த கோட்டை இல்லாமல் இருந்ததுவே காரணம். இலியடில் சொல்லப்பட்டிருக்கும் Troy கோட்டையின் வடிவம் கிடைக்கும் வரை தனது ஆராய்ச்சியை மேற் கொண்டார்.

வெறித்தனமாக ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட Schleimann-னுக்கு பேராசையும் பற்றி கொண்டது. Hissarlik-க்கு வந்த தனது இலட்சியத்தை மறந்தார். மாறாக புதயலை தேடுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். கிரேக்க இராணுவத்திற்கு பயந்து Priam அரசன் தனது செல்வங்களை எங்கேனும் பதுக்கி வைத்திருக்க வேண்டுமென யூகித்தார். ஆராய்ச்சியின் முதல் குறியாக புதையல் பதுக்கிய இடத்தை அறிவதிலேயே இருந்தது.
160 வேலையாட்களுடன் இவ்வாராய்ச்சி தொடரப்பட்டது. 14 ஜூன் 1873-ஆம் ஆண்டு தொண்டப்பட்டிருந்த சுவற்றினூடே மினுமினுப்பு கதிர்களை கண்டார். ஒளி வந்த இடத்திர்கு அங்கே இருந்த குழியின் வழியே இறங்கிச் சென்று கண்ட போது அவ்வொளிக்கதிர் அங்கிருந்த பீப்பாயில் இருந்து வந்ததைக் காண்கிறார்.

மூடப்பட்டிருந்த பீப்பாய் லேசாக உடைந்திருந்ததினால் அதன் வழியே அதற்குள்ளிருந்த தங்கத்தைக் காண முடிந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் எழுதிய புத்தகத்தில் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் Schleimann. "எனது வேலையாட்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயம், ஒரு பெரிய கத்தியின் துணை கொண்டு அந்த பீப்பாயை வெளியாக்கினேன். அது கடினமாகவும் பேராபத்து நிறைந்த வேலையாகவும் இருந்தது. எந்த நேரத்திலும் அந்த பாழடைந்த தூண்கள் என் மீது விழுந்திருக்கக் கூடும். ஆனல் பீப்பாயில் இருந்து வெளிவந்த தங்க ஒளி அந்த சமயத்தில் என்னை எது வேண்டுமானாலும் செய்ய தூண்டிற்று. ஆகவே அச்சமயத்தில் ஆபத்தை நான் கருதவில்லை".

Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் கிடைத்த முதல் புதையல் அது. அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திலைத்தார்கள். அந்த புதையலுள் இரண்டு கிரிடங்கள் இருக்கக் கண்டணர். அது அரசர் மற்றும் அரசியால் உபயோகப் படுத்தியதாக இருக்கக் கூடும் என நம்பினார்கள்.
மேலும் தோண்டவும் அவ்விடத்தில் இருந்து பீங்கான் தட்டுகள், பொத்தான்கள், கயிறு மற்றும் தங்கத்திலான நூல்களும் கிடைத்தது. இது பொக கை வளையல், வெள்ளிக் கின்னங்களும், வெங்கலத்திலான ஆயுதங்களென பல பொருட்களும் கிடைத்திருக்கிறது. பேராசையின் மிதப்பில் இருந்த Schleimann எல்லா பொருட்களையும் ஜெர்மனிக்கு கடத்திச் சென்றுவிடுகிறார்.

பெருந்திருடனென கூறப்படும் Schleimann
இந்த விடயமறிந்த துர்க்கிய நாட்டு அரசாங்கம் Schleimann-னுக்கு 2000 பவுண்ட்ஸ் ஸ்தெர்லிங் அபராதம் விதித்தது. Schleimann விதிக்கப்பட்ட அபராதத்தைக் காட்டினும் 5 மடங்கு அதிகமான பணத்தை துர்க்கிய நாட்டு அரசாங்கத்திற்குக் கொடுத்தார். துர்க்கிய அரசாங்கம் அவருக்கு மீண்டும் ஆராய்ச்சியை தொடர வாய்ப்பளித்தது. அவரது நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ளும் நிபந்தனையோடு.
ஆனால் Schleimann அதில் ஆர்வம் கொள்ளாமல் இம்முறை தமது ஆராய்ச்சியை கிரேக்க நாட்டில் இருக்கும் Mycenaeகின் மீது செலுத்தினார். Troy மீது படையெடுத்த Agamennon அரசனின் கோட்டையை தேடினார். அவரது அயராத முயற்சியின் பேரில் அந்தக் கோட்டையில் இருந்த புதயலைக் கண்டு பிடிக்கிறார். அவை Troy கோட்டையில் கிடைத்த புதயலை விட அதிக மதிப்பு கொண்டவையாக இருந்தது.

1878-ஆம் ஆண்டு Schleimann மீண்டும் Troy-க்கு வருகிறார். ஆரம்பத்தில் தேடிய அதே இடத்தில் மேலும் சில புதயல்கலைக் கண்டெடுக்கிறார். இடிந்து போன பல அடுக்குகளை அக்கோட்டையில் காண்கிறார். அவற்றில் ஒன்று Priam அரசனின் ஆட்சியின் போது உள்ள கோட்டையென சொல்லப்படுகிறது. Schleimann-னின் தேடலும் ஒரு நிறைவிற்கு வருகிறது.

Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த செல்வங்களையும் பொருட்களையும் நன்கு புணர்ந்த Schleimann 1880-ஆம் ஆண்டு தனது 58வது வயதின் போது அவற்றை ஜெர்மனில் இருக்கும் பெர்லின் பொருட்காட்சி சாலைக்கு கொடுக்கிறார். அதன் பின் 26.12.1890-இல் மரணமடைகிறார்.

இரண்டாம் உலகப் போரின் போது அவை இரஸ்ய இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகிறது. தற்சமயம் Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த பொருட்கள் யாவும் ரஸ்யாவின், Pushkin அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

Sophia- இவர் அணிந்திருக்கும் நகைகள் TROY கோட்டையின் கண்டெடுக்கப்பட்டது
Troy ஒரு கற்பனையல்ல என்பதை நிருபித்த Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் உலகமே நன்றி கூறியது. ஒரு சில தரப்பினர் Schleimann-னை தொள் பொருள் ஆய்வாளர் என ஏற்க மறுத்தனர். மாறாக அவரை உலகளாவிய பெருந் திருடன் எனவும் பட்டம் சூட்டினர்.
Schleimann-னின் பேராசை போக்கினால் இன்றளவும் துர்க்கி, ஜெர்மன், ரஸ்யா, மற்றும் கிரேக்க நாட்டினருக்கிடையே ஓர் உள் புகைச்சல் இருந்த வண்ணமே இருக்கிறது. தற்சமயம் இருக்கும் சொத்துக்கள் யாவும் தன்னுடையது எனும் எண்ணம் இந்நாடுகளிடையே இருந்து வருகிறது.

Frank Calvert எனும் பிரிட்டானிய ஆராய்ச்சியாளரின் வாரிசுகள், Schleimann கண்டுபிடித்த அப்புதையளின் ஒரு பகுதி தங்களுக்குறியது எனவும் அவை அவர்களது தாத்தாவின் நில பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறதெனவும் சாடியுள்ளார்கள்.
மேலும் தொடரப்பட்ட ஆராய்ச்சியில் Troy கோட்டை குறைந்தபட்சம் ஒன்பது அளவுகளை கொண்டிருக்க வேண்டுமென கூறுகிறார்கள். ஆரம்ப நிலையானது கி.மு 3000 ஆண்டும் இறுதி நிலையானது கி.மு 350 முதல் 400 ஆண்டிற்குட்பட்டதாக இருக்க வேண்டுமென குறிப்பிடுகிறார்கள். Trojan போர் கி.மு 1194 முதல் கி.மு 1184 வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.

Schleimann தான் கண்டுபிடித்த பொருட்கள் Agamemmon மற்றும் Priam அரசருடையது என தபது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அந்தத் தகவல் தவறானது என பின்னாளைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Mycenace கோட்டையில் Schleimannனுக்கு கிடைத்த புதையலானது Agamemmon ஆட்சி காலத்திற்கு 200 வருடம் முற்பட்டது எனவும். Troy நகரில் கண்டெடுக்கப்பட்ட புதையல் Trojan போருக்கு 1000 வருடங்கள் முந்தயது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

Sunday, November 9, 2008

‘எந்திரன் படத்துக்காக ரசிகர்களிடம் நடிக்கும் தந்திரன் ரஜினி’ என சில பாவிகள் செய்யும் பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளவே

முதலிலேயே சொல்லிவிடுகிறோம்… இது ஒப்பீடல்ல!

செய்தி-1: மலப்புரம் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டியின் சட்டையை ஆர்வமிகுதியில் பிடித்து இழுத்த ரசிகரை பலர் முன்னிலையில் பளார் என அறைந்தார் மம்முட்டி. (மலையாள மனோரமா, பிப்.13, 2008)

செய்தி-2: தூத்துக்குடி அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சரத்குமாரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததில் ஒரு ரசிகரின் கை சரத்குமார் கன்னத்தில் பட்டுவிட்டது. உடனே அவர் காலரைப் பிடித்த சரத், ‘தொலைச்சுப் போடுவேன்…’ என எச்சரித்தார் (தினமணி, ஏப்.12, 2008)

செய்தி-3: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறப்போன விஜய்காந்த், திடீரென ஆவேசப்பட்டு தன் ரசிகர் ஒருவரை மேடையிலேயே கன்னத்தில் அறைந்தார். இதைக் கண்ட மக்களும், மீடியா பிரதிநிதிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

பின்னர் அன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னிடம் அறை வாங்கிய நபரை தனது பழைய நண்பர் என்றும், தங்களுக்குள் இது சகஜம் என்றும் அவர் கூறினார் (தினத்தந்தி, ஜூலை. 13, 2008)

செய்தி-4: லண்டனில் உள்ள கலையரங்கம் ஒன்றில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மலையாள ரசிகர்கள் இதற்காகக் கூடியிருந்தார்கள்.
மலையாள பாடகர் அப்சலுடன் இணைந்து மோகன்லால் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தார். அப்போது மோகன்லாலைப் பார்த்த பரவசத்தில் ஒரு ரசிகர் மேடையேறி அவர் அருகே சென்றார். ரசித்துப் பாடிக்கொண்டிருந்த மோகன்லால், திடீரென்று தனக்கு அருகில் வந்துவிட்ட ரசிகரைப் பார்த்ததும் ஆத்திரத்துடன் அவரைத் தாக்கினார். மேடையை விட்டு வேகமாக கீழே தள்ளிவிட்டார். அந்த ரசிகர் தரையில் போய் விழுந்தார்.

பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். சில நிமிடங்கள் நிகழ்ச்சி நின்றது. பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்தது. தாக்கப்பட்ட ரசிகரோ மேடையின் அருகில் அழுதபடியே பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். கடைசிவரை அவரிடம் ஒரு பேச்சுக்குக் கூட மோகன்லால் சமாதானப்படுத்தவில்லை.

இந்த சம்பவம் மலையாளத் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானதால் கேரளா முழுக்க அதிர்ச்சி அலை பரவியுள்ளது. இதை பார்த்த மோகன்லால் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் (தட்ஸ்தமிழ், நவம்பர்.9, 2008).

-இவை சில சமீபத்திய செய்திகள்.

இதோ இப்போது நீங்கள் படிப்பதும் ஒரு செய்திதான்… ஆனால் வித்தியாசத்தைப் பாருங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்!

ஆகஸ்ட் 14-ம் தேதி ஐதராபாத்தின் குசேலன் சிறப்புக் காட்சி. பார்த்து முடித்துவிட்டு வெளியில் வந்தால் டிரைவரைக் காணோம். காரைத் திறக்க முடியவில்லை. ரஜினியைப் பார்த்துவிட்ட கூட்டமோ பரவசத்துடன் அவரைத் தொட்டுத் தரிசிக்க நெருக்கியது.

என்னதான் அவரைச் சுற்றி பாதுகாவலர்களும், போலீசாரும் நின்றாலும், மக்கள் வெள்ளத்துக்கு அணைபோட முடியுமா… அவரது சட்டையை, கையைத் தொட்டுப் பார்க்க ஒரு கூட்டம் முண்டியடிக்க, அமைதியாகச் சிரித்தபடி நின்றார் ரஜினி. அனைவருக்கும் கையசைத்தார். சில நிமிடங்களில் பதறியடித்தபடி டிரைவர் ஓடிவந்துவிட்டார். ரஜினி சிரித்தபடி கையாட்டி விடைபெற்றார்.

மேலே தொடருங்கள்…

தன் ரசிகர்ளை வழி நடத்துவதிலும் சரி, அவர்கள் மீது அக்கறை காட்டுவதிலும் சரி ரஜினிக்கு நிகரான நடிகரை திரையுலகில் பார்ப்பது அரிது.

தன்னைப் பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளிடம் அவர் பேசும் விதம், அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க அவர் ஏற்பாடு செய்யும் விதம் எல்லாமே, ஒரு பாசமிக்க மூத்த சகோதரனின் நடவடிக்கைகளுக்கு இணையாக இருக்கும்.
அவரைப் பார்க்க போயஸ் கார்டன் சென்ற பல ரசிகர்கள் இந்த அனுபவத்தை ஊரெல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்கள்.

சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது கூட, பேசி முடித்த கையோடு அவர் ரசிகர்களுக்குச் சொன்னது, ‘மதிய உணவு அரேஞ்ச் பண்ணியிருக்கு… சாப்பிட்டுவிட்டு போங்க… பத்திரம்… பத்திரமா வீட்டுக்குப் போங்க!’

தேவையின்றி கூட்டம் சேர்ந்து வேலை தடைபடுவதை மட்டும்தான் ரஜினி விரும்ப மாட்டாரே தவிர, ஒரு போதும் தனக்காகவே கூடும் கூட்டத்தை வெறுத்தவரில்லை. குசேலன் படத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார்.

‘தன் மீது கொண்ட அதீத பாசமே ரசிகர்களை இப்படியெல்லாம் நடந்து கொள்ள வைக்கிறது என்று அவருக்கும் தெரியும். அதனால்தான் அந்த மாதிரி ரசிகர்கள் பக்குவமடைய வேண்டும் என்ற நோக்கில் பல நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அவர்கள் பக்குவப்படக் காத்திருக்கிறார்,’ என்கிறார் ரஜினியை பல வருடமாகப்பார்த்து வரும் மூத்த பத்திரிகையாளர் ராதாராஜ்.

பொறுமை, பொறுப்பு இரண்டும் இருந்தால் பெருமைக்குரிய ரசிகனாக சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ரஜினி காட்டியிருக்கும் வழி.

யாரோடும் ரஜினியை ஒப்பிடுவதற்கல்ல இந்தப் பதிவு.

‘எந்திரன் படத்துக்காக ரசிகர்களிடம் நடிக்கும் தந்திரன் ரஜினி’ என சில பாவிகள் செய்யும் பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளவே இது!