Sunday, August 31, 2008

ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் சமீபத்தில் கொச்சியில் அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது.

சற்றே யோசித்துப் பார்த்தால் ஒரு ரஜினி ரசிகரின் மனநிலையை அவர் பிரதிபலித்திருப்பது புரியும்.

பேட்டி விவரம்:

ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு கெஸ்ட் ரோல் என்பது சரிப்பட்டு வராது. அதை அவர்களது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள், சாதாரண நடிகர்கள் என்ற அந்தஸ்தை தாண்டியவர்கள். அவர்களை ஓரிரு காட்சிகளில் மட்டும் பார்ப்பதை அவர்களது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்.

என்னைப் போன்ற நடிகர்களுக்கு எந்த ரோலும் ஒரு பொருட்டே அல்ல. நான் திடீரென்று கெஸ்ட் ரோல் பண்ணுவேன், நாயகனாகவும் வருவேன். இரண்டு மூன்று கதாநாயகன்களில் ஒருவராககக்கூட வந்து போவேன். மம்முட்டியும் கூட அப்படித்தான். கத பறயும்போல் வெற்றி பெற அதுவும் ஒரு காரணம். இதெல்லாம் கேரளாவில் சகஜம்.

ஆனால், ரஜினி அப்படி நடிப்பதை கேரள மக்கள் கூட விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு ரஜினியை முழுமையாக ரசிக்க வேண்டும். மூன்று மணிநேரமும் ரஜினி இருக்க வேண்டும், என்றார் மோகன்லால்.

நன்றி: மலையாள மனோரமா

மூடநம்பிக்கைகளின் பூர்வீகம்

மக்களை இயல்பாகச் சிந்திக்க விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் மதங்களும், மந்திரவாதிகளும் இந்த மூட நம்பிக்கைகளை பெருமளவுக்கு வளர்த்து விடுகின்றனர். எதேச்சையாய் நடக்கும் செயல்களுக்குக் கூட காரணங்களை இட்டுக்கட்டி பணம் கறக்கும் மனிதர்களால் இந்த மூடப் பழக்கவழக்கங்கள் அழியாமல் நிலைபெறுகின்றன.

சிலை பால் குடிக்கிறது என்றோ, கடல் நீர் கடவுள் கருணையால் இனிக்கிறது என்றோ ஏதேனும் ஒரு பரபரப்புப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கிறது மதம். காரணம் அதற்குத் தேவை சிந்திக்காமல் தலையாட்டியபடியே ஆட்டுமந்தைகளைப் போல கூடும் கூட்டம். எல்லாம் வியாபார மயமாகிவிட்ட சூழலில் மதம் மட்டும் விதிவிலக்கா என்ன ?

வாயிலிருந்து உருவங்களை எடுப்பதும், கண்களிலிருந்து பூக்களை எடுப்பதும் என மூட நம்பிக்கைகளைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் மக்களுக்காகவே நடைபெறுகின்றன நாடகங்கள்.

நமது நாடு இப்படி மூட நம்பிக்கைகளின் கூடாரமாகிக் கிடக்கிறதே என்னும் கவலையில் உலகில் என்னென்ன மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று அலசியதில் கிடைத்த செய்திகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. தூணிலும் துரும்பிலும் இருப்பான் இறைவன் என்பதை தூணிலும் துரும்பிலும் இருக்கும் மூட நம்பிக்கை என்று மாற்ற வேண்டிய அளவுக்கு இந்த மூட நம்பிக்கைகள் உலகெங்கும் பரந்து கிடக்கின்றன.

எட்டு என்பது இந்தியாவில் கெட்ட எண் என்றால் பதிமூன்று மேல்நாட்டினருக்கு அலர்ஜிக்குரிய எண். பதிமூன்று என்னும் எண் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸைக் குறிப்பதாகவும் எனவே பதிமூன்று என்பது கெட்ட எண் என்பதும் மேல் நாட்டினரின் கருத்து. அதுவும் பதிமூன்றாம் தியதி வெள்ளிக்கிழமையாகி விட்டால் அது படு பயங்கரமான மோசமான நாளாம். காரணம் இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை, நோவா காலத்தின் தண்ணீர் பெருக்கு ஆரம்பமானது ஒரு வெள்ளிக்கிழமை, ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை என்று காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

ஸ்பெயின் நாட்டில் பதிமூன்றாம் தியதி செவ்வாய்க்கிழமை வந்து விட்டால் அன்று எந்த நல்ல செயல்களையும் செய்ய மாட்டார்கள். இத்தாலியில் பதின்மூன்றாம் எண்ணைப்போல பதினேழும் கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அது மரணத்தைக் குறிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பெரும்பாலான கட்டிடங்கள் பதிமூன்றாவது மாடி இல்லாமலேயே கட்டப்படுகின்றன. ஏராளமான குடியிருப்புகளில் பதிமூன்றாம் எண் வீடுகளே இருக்காது. விமான நிலையங்களில் கூட பதிமூன்றாவது எண்ணுள்ள வாசல் பல விமான நிலையங்களில் இருப்பதில்லை

மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. மரங்களைத் தட்டினால் அதனுள் இருக்கும் பேய் வெளியே வராது என்பது மேல்நாட்டு நம்பிக்கையாக இன்றும் நிலவுகிறது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் காடுகளிலிருந்து வெட்டி வரும் மரங்களை வீடுகளில் உபயோகப் பொருட்களாக்குவதற்கு முன் பேய் விரட்டும் பூஜை நடக்கிறது !

அமெரிக்கர்கள், அருகிலிருக்கும் யாராவது தும்மி விட்டால் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்பார்கள். தும்மும்போது ஆன்மா வெளியேற முயல்வதாகவும், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லும்போது ஆன்மா மீண்டும் உடலுக்குள் செல்வதாகவும் அவர்கள் நம்பினார்கள்.

இங்கிலாந்தைப் பொறுத்தவ்ரை தும்மும் போதெல்லாம் அசுத்த ஆவி வெளியேறுவதாக ஆறாவது நூற்றாண்டு வரை நம்பப்பட்டது. பின் பிளேக் நோய் தாக்கிய காலத்தில் வலியுடம் தும்முபவர்கள் மரணத்தை நோக்கியிருப்பதாகக் கருதப்பட்டு அவர்களுக்காய் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று வாழ்த்தத் துவங்கினர். இதன் மூலம் அவன் இறக்க நேரிட்டால் அவனுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்து சுவர்க்கத்துக்குச் செல்வான் என்று நம்பப்பட்டது. தும்மும்போது வாழ்த்தும் வழக்கம் எகிப்தில் திபேரியுஸ் சீசரின் காலத்திலேயே வழக்கத்தில் இருந்ததாகவும் சில கதைகள் சொல்கின்றன.

என்னுடைய அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது தும்மும்போது இதயம் ஒரு வினாடி துடிப்பதை நிறுத்துவதாகவும், அது மீண்டும் துடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று கூறுவதாகவும் சொன்னார்.
வீட்டுக்குள் குடையை விரித்தால் மரணம் வரும் என்பது அமெரிக்கா உட்பட பல மேல்நாடுகளின் இன்றும் நிலவி வரும் ஒரு மூட நம்பிக்கை. தொப்பியைப் படுக்கையில் வைத்திருப்பது நல்லதல்ல என்னும் பழக்கம் இன்னும் அமெரிக்கப் பூர்வீகத்தினரிடம் வழக்கத்தில் உள்ளது. அப்படி வைத்தால் மரணம் உட்பட ஏதேனும் தீயது நிகழும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

கொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் துவக்க காலத்தில் வாயைத் திறந்தால் சாத்தான் உள்ளே நுழைந்துவிடுவான் என்று பயந்து கொட்டாவி விடும்போது வாயை மூடியிருக்கிறார்கள்.

நம்மூரில் இரவில் வேப்பமர அடியில் படுத்திருப்பவர்கள் மூச்சுத் திணறி இறக்க நேரிட்டால் முனி அடித்துக் கொன்றதாகச் சொல்வதைப் போல ஒரு நம்பிக்கை முன்பு அமெரிக்காவிலும் இருந்திருக்கிறது.

மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பெல்லாம் மின்னல் என்பதும் இடி என்பதும் வானத்திலிருந்து சாத்தான் எறிபவை என்பவை தான் தான் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாய் இருந்தது. எனவே மழைக்காலங்களில் அவர்கள் சாத்தானைப் பயமுறுத்துவதற்காக ஆலயத்துக்கு ஓடிச்சென்று ஆலய மணியை அடித்துக் கொண்டே இருப்பது வழக்கம். ஆலயம் மற்ற கட்டிடங்களை விட அதிக உயரமுடைய கோபுரத்தைக் கொண்டிருப்பதால் அடிக்கடி ஆலயங்களில் மின்னல் தாக்கி மணி அடிப்பவர்களை மரணம் அடித்துச் செல்வதும் உண்டு. அதையெல்லாம் சாத்தான் அடித்துச் செத்ததாகவே மக்கள் நம்பினார்கள்.

சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்ட நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. சுவரில் ஏணி சாய்த்து வைக்கும்போது முக்கோணம் உருவாகிறது. பிரமிடுகளையும், முக்கோணத்தையும் தங்கள் நம்பிக்கைப் பின்னணியாகக் கொண்டுள்ள எகிப்தியர்கள் ஏணியின் கீழே நடப்பது அந்த முக்கோணத்தின் புனிதத்துவத்தைப் பாழ்படுத்துவதாக நம்புகிறார்கள்.

கல்லறைத் தோட்டத்தைக் கடக்கும்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கடக்கவேண்டும் என்பது அமெரிக்காவில் உலவி வந்த, இன்னும் கூட பல இடங்களில் உலவி வருகின்ற, ஒரு நம்பிக்கை. சிரிக்காதீர்கள், செத்துப் போனவர்கள் நமக்கு மூச்சு இருக்கிறதே என்று பொறாமைப் படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம் !

சாப்பிடும்போது தும்மினால் யாரோ உங்களை நினைக்கிறார்கள் என்று நாம் சொல்வது போல, மூக்கு அரித்தால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்பது அமெரிக்கர்களின் வழக்கமாக இருக்கிறது. அதேபோல உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று இந்தியர்கள் சொல்வது போல அமெரிக்கர்களும் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும், வலது உள்ளங்கை அரித்தால் பணம் போகும்.

ஒரே தீக் குச்சியில் மூன்றுபேர் சிகரெட் பற்றவைப்பது கெடுதல் என்று நம்பப்படுகிறது. முதலாம் உலகப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில் மறைவிடங்களில் இருக்கும் எதிரி வீரர்களின் கவனத்தைக் கவர அந்த நேரம் போதுமானதாக இருக்கும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த வாசகம் உலகெங்கும் மூட நம்பிக்கையாய் இன்று உலவுகிறது.

காதலர்களைப் பொறுத்தவரையில் பேனா பரிசளித்தால் அந்தக் காதல் முறிந்து போகும் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல கத்தியைப் பரிசாகப் பெற்றால் நட்பு முறிந்து விடும் என்பது மேல் நாட்டவரின் நம்பிக்கையாய் இருக்கிறது.

எதிர்வரும் நபரைப் பொறுத்து நமது பயணத்தின் வெற்றியும் தோல்வியும் அமையும் என்று நமது பாட்டிகள் கதை சொல்வதுண்டு. அதிலும் பூனை குறுக்கே வந்தால் போன காரியம் வெளங்காது என்றும் சொல்வார்கள். இது இங்குமட்டுமல்ல, அமெரிக்காவிலும் பூனை குறுக்கே வந்தால் வந்த காரியம் வெற்றியடையாது என்னும் நம்பிக்கை இருந்திருக்கிறது. மேல் நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்தோமென்றால் சாத்தானைக் குறிப்பதற்காக ஒரு கருப்பு நிற பூனையைக் காட்டுவார்கள். ஆதிகால எகிப்திய கலாச்சாரத்தில் கருப்பு நிற பெண் பூனை ஒன்று கடவுளாக வழிபடப்பட்டு வந்தது. பின் அது மற்ற மதத்தினரால் சாத்தானாக சித்தரிக்கப்பட்டது. சாத்தான் என்பவன் கெட்ட சகுனத்தின் சின்னம் தானே !

வீடுகளில் கதவருகே கத்தியை வைத்திருந்தால் கெட்ட ஆவியை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கலாம் என்பது ஸ்பெயின் நாட்டு மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று.

பணப்பையை பணம் ஏதுமில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் அந்த பையில் பணம் தங்காது என்பதும் ஹவாய் தீவு மக்களின் நம்பிக்கை.

காலணிகளை வீட்டில் அணிந்து நடந்தால் வீட்டிற்குள் பேய் உலவும் என்பதும், கால்களை கதவுக்கு நேராக நீட்டி வைத்துப் படுத்தால் இரவில் உயிர்பிரியும் என்பதும் ஹவாய் தீவு மக்களிடமுள்ள நம்பிக்கைகளில் மேலும் சில.

கத்தியையோ, தாவரங்களையோ பெற்றுக் கொள்ளும் போது நன்றி சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் கத்தியினால் ஏதேனும் காயம் படுதலும், தாவரம் பட்டுப்போவதும் தவிர்க்க முடியாது என்பதும் அமெரிக்கர்களின் நம்பிக்கைகளில் ஒன்று. அப்படி கத்திக் காயத்திலிருந்து தப்ப வேண்டுமானால் நீங்கள் கத்தியைப் பெற்றுக் கொள்ளும்போது கொஞ்சம் பணத்தையும் கூடவே கொடுக்க வேண்டும்.

ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கண்ணாடியை உற்றுப் பார்த்தால் இறந்துபோனவர்களின் ஆவியை காணமுடியும் என்பதும், வலது கால் காலணியை முதலில் போடுவது நீண்ட ஆயுளைத் தரும் என்பதும் இங்கிலாந்து உட்பட பல மேல் நாடுகளில் உலவி வரும் மூட நம்பிக்கைகளில் சில.

வலது என்பது எப்போதுமே நல்லது என்பது பல நம்பிக்கைகளில் பளிச்சிடுகின்றன. வலது புறமாக எழும்புதல், வலது காலை முதலில் வைத்தல் என்பன அவற்றில் சில. பைபிளிலும் இயேசு நல்லவர்களை வலப்பக்கமாகப் பிரிப்பதாக வரும் செய்தியால் கிறிஸ்தவர்களிடையேயும் வலது என்பது நன்மையின் சின்னமாக மதிக்கப்படுகிறது.

கழிவறைக்குச் செல்லும்போது இடதுகாலை முன்வைப்பதும், கழிவறையிலிருந்து வெளியே வரும்போது வலதுகாலை முன்வைப்பதும் நன்மை பயக்கும் என்னும் நம்பிக்கை பல இஸ்லாமிய நாடுகளில் நிலவுகின்றன.

இரவில் தூங்கும்போது எந்தப் பக்கமாகப் படுத்தோமோ அந்தப் பக்கமாகவே எழும்புதல் நன்மை பயக்கும் என்பது மேல் நாட்டவரின் நம்பிக்கை. படுத்திருக்கும் யாரையும் தாண்டிப்போகாதே அப்படித் தாண்டிப்போனால் அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கும் என்பது பாட்டி சொன்ன கதை மட்டுமல்ல, அமெரிக்காவில் உலவும் கதையும் கூட.

மின்னல் தாக்கி உயிர் பிழைப்பவர்கள் பிரபலமாவார்கள் என்னும் நம்பிக்கை சீனாவிற்குச் சொந்தமானது. கால் நகத்தை வெட்டி பழச்சாறுடன் போட்டு யாருக்கேனும் கொடுத்தால் அவர்கள் உங்களோடு காதல் வயப்படுவார்கள் என்பது திடுக்கிட வைக்கும் மேல் நாட்டு நம்பிக்கைகளில் ஒன்று.

அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்று இந்தியர்கள் பலர் நம்புவதைப் போல, காணும் கனவை காலை உணவுக்கு முன் சொல்லி விட்டால் அந்தக் கனவு பலிக்கும் என்பது மேல்நாட்டினரின் நம்பிக்கை.

நிறைய பணத்தை வைத்து முதலீடு செய்பவர்களிடம் இந்த மூட நம்பிக்கைகள் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது என்பது ஒரு வியப்பூட்டும் செய்தி. அவர்கள் எப்படியேனும் எது செய்தேனும் தங்கள் பணத்தை இழக்கக் கூடாது என்பதற்காக அனைத்திற்கும் தலையாட்டுகிறார்கள். நடிகள் நடிகைகள் சினிமா துறை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை மூட நம்பிக்கை தான்.

அறிவியல் யுகம் இன்று உலகைக் கணினியில் சுருக்கிவிட்டது. அறிவியலின் விஸ்வரூப வளர்ச்சி மனிதனின் சிந்தனையை முழுமையாக மாற்றவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. கணினியில் ஜோசியம், ஜாதகம், திருமண பொருத்தம், ராசிக்கல் வியாபாரம் துவங்கி எல்லா விதமான நம்பிக்கைகளும் நுழைந்து விட்டன. பகுத்து அறியும் தன்மையை மனிதன் வாழ்க்கை நெறியாக இன்னும் வகுத்துக் கொள்ளவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.

பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யென வாழ்தலே ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும்

உதைக்க வேண்டாமா இவர்களையெல்லாம்!,

மக்கள் வாழ்க்கையில் திரைப்பட அரங்குகள் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டன.

என்னதான் அறிவுஜீவிகள் வாய்கிழியப் பேசினாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை சினிமா என்பது முதல்வர்களை உருவாக்கும் இடமாகத்தான் இப்போதும் பார்க்கப்படுகிறது.

இன்றும் மக்களுக்கு குடும்பத்துடன் போய்வர ஒரு எளிய சிற்றுலா மையம் திரைப்பட அரங்குகள்தான்.

ஆனால் இத்தகைய அரங்குகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன?

எக்கச்சக்கமாக கட்டணம் வசூலித்தாலும் எந்த அடிப்படை வசதியும்- ஒரு சில திரையரங்குகளைத் தவிர- மற்றவற்றில் கிடையாது.
மோசமான இருக்கைகள், சுத்தமில்லாத கழிவரைகள், மூன்று நான்கு மடங்கு அதிக விலையில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள்... அடுக்கிக் கொண்டே போகலாம் இத் திரையரங்குகளின் லட்சணத்தை. சென்னை கூட இதற்கு விதிவிலக்கல்ல (சத்யம், ஐநாக்ஸ் என சில வளாகங்கள் தவிர).

குடும்பத்தோடு படத்துக்குப் போகும் ஒருவர் தியேட்டர்காரர்களோடு சண்டை போடாமல் வீடு திரும்பவதே அதிசயம்தான்.

இந்த லட்சணத்தில் அரங்குகளில், பார் வசதி செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.


இக்கோரிக்கையை தீர்மானமாகவே நிறைவேற்றி அதை தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ளனர் திரையரங்க உரிமாயாளர்கள் சங்கத்தினர்.

இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், திரையரங்குகளில் வருமானத்தைப் பெருக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி ஆலோசித்து வருகிறோம். அதில் ஒன்று அரங்குகளிலேயே பார்களைத் திறப்பது!!

வெளிநாடுகளில் இதுபோல பார் வசதி கொண்ட திரையரங்குகள் உள்ளன. இதனால் பெண்கள் வருவது பாதிக்கப்படுவதில்லை. எனவே இதேபோல தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நமக்குத் தெரிந்து பார் தியோட்டர்கள் வெளிநாட்டில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், ஏற்கெனவே குற்றங்களும், அத்துமீறல்களும் மலிந்துவிட்ட தமிழக திரையரங்குகளுக்குப் பொருந்துமா...

பணத்துக்காக இப்போது பார் கேட்பவர்கள், நாளை வாடிக்கையாளர்களுக்கு வசதியாக சிவப்பு விளக்கு கார்னர் ஒன்றை ஏற்படுத்தவும் கோரிக்கை வைப்பார்களோ? (இன்னும் பணத்தை அள்ளலாமே!)

ஒகேனக்கல் பிரச்சினையில் சூப்பர்ஸ்டார் ரஜினி கேட்டாரே ஒரு கேள்வி: ...உதைக்க வேண்டாமா இவர்களையெல்லாம்!, என்று.

நியாயமாக அது இந்த பேராசைக்கார, நேர்மையற்ற வணிகப் பிரதிநிதிகளான தியேட்டர்காரர்களுக்குத்தான் பொருந்தும்!!
Po

Friday, August 29, 2008

கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

டெல்லி: கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க கடந்த 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சிடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக சந்தையிலிருந்து திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் மிகப் பெரிய கள்ள நோட்டு கும்பல் பிடிப்ட்டது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளில், 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகள் அதிகம் இருந்தன. பல கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை இந்த கும்பல் புழக்கத்தில் விட்டிருக்கக் கூடும் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந் நிலையில் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சிடிக்கப்பட்ட 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பனா கிலாவாலா கூறியிருப்பதாவது:

இதனால் இந்த நோட்டுகள் செல்லாது என்று மக்கள் பீதியடையத் தேவையில்லை. இந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். நேரடியாக வங்கிகளை தொடர்பு கொண்டு புதிய நோட்டுகளை பெற்று கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

பொதுமக்களிடம் உள்ள இந்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டால் மீண்டும் இவை புழக்கத்திற்கு வராது. அதற்கு பதிலாக 2006ம் ஆண்டு வெளியான மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும். அதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும். பின்னர் சிறிய தொகை நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றார்.

1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளை படிப்படியாக ஓரங்கட்டும் பணியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. இந்த பணி முற்றிலுமாக நடைபெற்ற பிறகு இவற்றை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிக்கும். அப்போதுதான் இந்த நோட்டுகள் செல்லாதவையாகும்.

மக்களுக்கு வாங்கக்கூடிய விலையில் கம்ப்யூட்டர்

இந்தியாவின் பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெனித், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.14,999 க்கு லேப்டாப்பையும் ரூ.11,999 க்கு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் மூன்று மாடல்களில் இருக்கின்றன. இந்த மாடல்கள் எல்லாம் எக்கோஸ்டைல் என்ற பெயரில் வெளிவருகின்றன. இந்த கம்ப்யூட்டர்களில் உடலுக்கு தீங்கு செய்யும் சாதனங்கள் எதுவும் இல்லை என்றும், இது மற்ற கம்ப்யூட்டர்கரை விட 30 சதவீதம் குறைவான மின்சாரத்தில் வேலை செய்யும் என்று சொல்கிறார்கள். இவைகள் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் விஸ்டா, மைக்ரோசாப்ட் எக்ஸ் பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும். ரூ.14,999 க்கு விற்கப்படும் எக்கோஸ்டைல் லேப்டாப்தான் மார்க்கெட்டில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டில் சிஸ்டத்தை கொண்டுள்ள லேப்டாப் என்று சொல்கிறார்கள். மைக்ரோசாப்ட் இந்தியாவின் சேர்மன் ரவி வெங்கடேசன் இதுகுறித்து பேசியபோது, எங்களது நோக்கமே மக்களுக்கு அவர்களால் வாங்கக்கூடிய விலையில் கம்ப்யூட்டரை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்றார்.
நன்றி : தினமலர்

Wednesday, August 27, 2008

முத்துவேல் கருணாநிதி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

முத்துவேல் கருணாநிதி
தமிழ்நாட்டு முதலமைச்சர்

Constituency
சேப்பாக்கம்

பிறப்பு
ஜூன் 3 1924திருக்குவளை, தமிழ்நாடு

அரசியல் கட்சி
தி.மு.க.

பிள்ளைகள்
4 மகன்கள் 2 மகள்கள்

மே 31 இன் படியான தகவல், 2006மூலம்: Government of Tamil Nadu
கலைஞர் முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) (பிறப்பு - ஜூன் 3, 1924)


திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். 1969 முதல் அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். மே 13, 2006 முதல் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இவருடைய எழுத்து வன்மை, பேச்சாற்றலின் காரணமாக கலைஞர் எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.
ஆரம்ப காலத்தில் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்த இவர், பிற்காலத்தில் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் விமர்சிக்கப்பட்டது


அரசியல்

தி.மு.க.வின் ஆரம்பகால உறுப்பினர்.1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்த பெருமை இவருக்கு உரியது.
1969-1971 -- அண்ணாதுரை மறைவிற்கு பின் முதல் முறை ஆட்சி
1971-1974 -- இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
1989-1991 -- நீண்ட நாள் இடைவேளைக்கு பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001 -- நான்காம் முறை ஆட்சி
2006-இன்றுவரை -- ஐந்தாம் முறையாக ஆட்சி


குடும்பம்

மனைவிகள்
திருமதி. பத்மாவதி
திருமதி. இராசாத்தி அம்மாள
திருமதி. தயாளு அம்மாள்

மகன்கள்
மு. க. முத்து
மு. க. அழகிரி
மு. க. ஸ்டாலின்
மு. க. தமிழரசு

மகள்கள்
கனிமொழி
செல்வி

மு.க. ஸ்டாலின் தற்பொழுதைய (2007) தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார். [1]

திரைப்படப் பணி

கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

கண்ணம்மா
மண்ணின் மைந்தன்
பராசக்தி
புதிய பராசக்தி
மந்திரிகுமாரி
பாலைவனப்பூக்கள்
மனோகரா
உளியின் ஓசை' '
மேலும் பல...

மேடை நாடகங்கள்


சிலப்பதிகாரம்
மணிமகுடம்
ஒரே ரத்தம்
பழனியப்பன்
தூக்கு மேடை
காகிதப்பூ
நானே அறிவாளி
வெள்ளிக்கிழமை
உதயசூரியன்
மேலும் பல...

புத்தகங்கள்

குறளோவியம்
நெஞ்சுக்கு நீதி
தொல்காப்பிய உரை
சங்கத் தமிழ்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
இனியவை இருபது
சங்க தமிழ்
பொன்னார் சங்கர்
திருக்குறள் உரை
மேலும் பல...

Tuesday, August 26, 2008

Tamilish

முதுமை வந்து விட்டால்...சன் டிவி அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது.

முதுமை எப்போது வரும்?
வயதானால் வரும்
தோல்விகள் வரும்போதும் வரும்

சன் டிவி இரண்டாவது வகை.
தற்போது சேனல் போட்டிகளில் தோற்றுக் கொண்டிருக்கிறது.
இன்னும் வீழ்ந்துவிடவில்லை. ஆனாலும் மண்ணை கவ்விக் கொண்டிருக்கிறது.

முதல் காரணம் - தி.மு.க லேபிளை இழந்தது.
அதில் கணிசமானோர் இன்னமும் பழக்க தோஷத்தில் சன் டிவிதான் பார்க்கிறார்கள். ஆனால் இரசிக்கவில்லை.

2வது காரணம் - மதியம் முதல் இரவு வரை அழுகாச்சி சீரியல்கள்
டி.ஆர்.பியில் இடம் பிடிக்க தாய்மார்கள் உதவினாலும், வீட்டில் உள்ள ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் வெறுக்க ஆரம்பித்து விஜய்டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த இடைவெளியில்தான் ஜோடி நம்பர் -1 ஜெயிக்க ஆரம்பித்தது

3வது காரணம் - மாற்றிக் கொள்ள முடியாத பழைய ஸ்டைல்
புரோகிராமிங் ஃபார்மட் முதல் டிரையலர் வரை இன்னும் அதே பழைய ஸ்டைல். நேற்று வந்த சேனல்கள் கூட அசத்தல் கட்டிங்குகளால் கலக்கும்போது, இங்கே இன்னமும் தூரன் கந்தசாமியின் குரலில் ஜவ்வுமிட்டாயாக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் செட், கலர், டிரையலர் என மாற முயற்சித்து அரைவேக்காடாக கைவிட்டுவிட்டார்கள்

4வது காரணம் - செய்திகள்
முன்பு தி்.மு.க நிழலில் இருந்தபோது, ஜெயலலிதா முதல்வர் ஆனதையே லாங் ஷாட்டில் காட்டி மக்களிடம் இருந்து மறைக்கப் பார்த்தார்கள். தற்போது ஜெயலலிதா கொடநாட்டில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தபோதும், அவருக்காக சவுண்டு கொடுத்தவர்கள் சன் டி.விதான். இந்த திடீர் பல்டி அவர்கள் மேலிருந்த நம்பகத்தன்மையை 70 சதவிகிதம் குறைத்துவிட்டது. 30 சதவிகிதம் தேறியதற்கு காரணம் மந்திரியாக இருந்தபோது தயாநிதி மாறனின் அசத்தல் பெர்பாமன்ஸ்.

5வது காரணம் - எக்ஸ்பர்ட்ஸ் இல்லை
ஜெயா டிவியில் சுஹாசினி வந்து விட்டார். விஜய் டிவியில் மதன் பார்வை. இவர்கள் சினிமா என்றால் என்ன என்று தெரிந்தவர்கள். சினிமா எடுக்கும் படைப்பாளிகள் மத்தியில் மரியாதைக்குரியவர்கள். ஆனால் சன் டிவியில் இன்னமும் யாரோ எழுதிக் கொடுப்பதை வாசிக்கும் தொகுப்பாளர்கள்தான் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். செய்தி மற்றும் அலசல் நிகழ்ச்சிகளிலும் இதே நிலை தான்.

6வது காரணம் - பெரிய படங்களை வாங்க முடியாத நிலைமை
தற்போதைய பெரிய படங்கள் அனைத்தையும் தங்கள் அரசியல் பலத்தால் கலைஞர் டி.வி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பலனை கலைஞர் டிவி இன்னமும் அனுபவிக்கவில்லை. ஆனால் பாதகத்தை சன் டிவி அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது சன் டிவியை யாராலும் ஜெயிக்கவே முடியாது என்ற நிலைமை மாறி அது தோற்றுக் கொண்டு வருவதை நேயர்களும், சன் டிவியும் உணருகிற ஒரு சூழ்நிலை இதனால் உருவாகிவிட்டது.

கடைசியாக ஒரு வரி - முதுமை வந்து விட்டால், எப்போதோ நடந்த நல்லதுகளை அசைபோடுவோம். சன் டிவி இப்போது அப்படி ஒரு அசைபோடும் நிலைக்கு வந்துவிட்டது. சமீபத்திய உதாரணம் - மெட்டிஒலி ரிப்பீட்.

Monday, August 25, 2008

ஆஞ்சனேயரை ஸ்மரிப்பவர்களுக்கு

ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள் வாக்கு.

புத்திர் பலம் யசோர் தைர்யம் நிர்பயத்வம் ஆரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.


ஆஞ்சனேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அனுக்கிரஹிக்கிறார் என்று இந்த‌ ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக் வன்மை, இத்தனையும் தருகிறார் அவர். சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பான்.பெரிய‌
பலசாலி புத்தியில்லாமல் இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக இருப்பான்.
பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும் அவற்றைப் பிரயோகிக்க‌
சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும்
தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி
ஏறு மாறான குணங்கள் இல்லாமல், எல்லா ஸ்ரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார்
ஆஞ்ச நேயர். காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத பல குணங்கள்,
சக்திகள், அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருந்தன். நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவை
கூட அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருந்தன. உதாரணமாகப் பெரிய புத்திசாலிக்கு அகங்காரம்
இல்லாத பக்தி இராது. ஆஞ்ச நேயரோ தேக பலம், புத்தி பலம், இவற்றைப்போலவே வினயம்,
பக்தி, இவற்றிலும் முதல்வராக நிற்கிறார். வலிவு இருக்கிறவன் கெட்ட வழியில் போவதுண்டு.
அவனுக்கு பக்தி இருக்காது. பக்தி இருக்கிறவர்களுக்கு கூட அதன் ஞானத்தின் தெளிவு இலலாமல்
மூட பக்தியாகவோ, முரட்டு பக்தியாகவோ இருப்பதுண்டு. ஆஞ்ச நேயர் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின்
பரம பக்தராக இருக்கும்போதே பரம ஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸனகாதி
முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீராமன் ஆஞ்சனேய ஸ்வாமியை
முன்னால் வைத்துக்கொண்டு ஞான உபதேசம் செய்கிறார் என்று "வைதேஹி ஸஹிதம் " ஸ்லோகம்
சொல்கிறது. பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும் அது
ஆஞ்ச நேயர் செய்தது என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட தத்துவ ஞானி அவர் ஒன்பது வியாகரணமும்
தெரிந்த ' நவ வியாகரண வேத்தா ' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான்.

ஞானத்தின் உச்ச நிலை, பலத்தில் உச்ச நிலை, பக்தியில் உச்ச நிலை, வீரத்தில் உச்ச நிலை, கீர்த்தியில்
உச்ச நிலை, சேவையில் உச்ச நிலை, வினயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற‌
ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்ச நேய ஸ்வாமிகள் தான்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய பிரம்மசர்யத்தைச் சொல்லவேண்டும். ஒரு க்ஷணம் கூடக்
காமம் என்கிற நினைப்பே வராத மஹா பரிசுத்த மூர்த்தி அவர்.

அவரை நம் தேசத்தில் அனுமார் என்போம். கன்னடச்சீமையில் அவரே ஹனுமந்தையா. சித்தூருக்கு
வடக்கே ஆந்திரா முழுவதும் ஆஞ்சனேயலு. மஹாராஷ்டிரம் முழுவதும் மாருதி. அதற்கும் வடக்கில்
மஹாவீர் .

ஆஞ்ச நேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் நமக்கு தைரியம் வரும், பயம் நிவ்ருத்தி ஆகும். புத்தி வரும். பக்தி வரும். ஞானம் வரும். காமம் நசித்துவிடும்.

ராம் ராம் என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுனான கீர்த்தனம் எங்கெங்கே நடந்தாலும்
அங்கெலாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்ச நேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார். இந்த காலத்தில் நமக்கு மற்ற எல்லா அனுக்கிரஹங்களோடு
முக்கியமாக அடக்கமாக இருக்கிற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. அதை நமக்கு ஆஞ்ச நேயர்
அனுக்கிரஹம் பண்ணவேண்டும். அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை.

நன்றி : கல்கி.

தனியார் வங்கிகளின் சுரண்டல் திரு விளையாடல் ............விவரம் .

என்னடாது.. டெய்லி காலைல ஓன்பது மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் ஆறு , ஏழு மணீ வரைக்கும் விடாம, விடாது கருப்பு போல விடாம உங்ளுக்கு லோன் வேணுமா? கிரெடிட் கார்ட் வேணுமா? ன்னு கேட்க ஆரம்பிச்சி, சரின்னு சொல்லிட்டா உங்க பெண்டாட்டி கூட இவ்வளவு கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க? நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க? எவ்வளவு லோன் போவுது? மாசம் உங்க சம்பளம் என்ன? சொத்து ஏதாவது இருக்கா? யார் பேர்ல இருக்கு?ன்னு உங்களுக்கு பொண்ணு கொடுத்த மாமனார் கூட இவ்வளவு கேள்வி கேட்க மாட்டாரு? சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா? உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா? மன்னிக்கணும்.. இதுவரைக்கும் எல்லாமே ஓகேதான். ஆனா அதுக்கப்புறம்தான் ஆரம்பிக்கும் அவங்க சுரண்டல்

1முதல் சுரண்டல்

லோன் வாங்க அப்ளிக்கேஷனெல்லாம் கொடுத்த பிறகு உங்க செக்குக்காக காத்திருப்பீங்க உங்க லோன் அமொண்ட் 1 லட்சம்ன்னு வச்சீங்கன்னா.. 5000 ரூபாய் ப்ராசஸிங்ன்னு கழிச்சுட்டு 95,000தான் தருவாங்க.. ஆனா இந்த ப்ராசஸிங் பீஸ் பத்தி எதையும்மே முடிஞ்ச வரைக்கும் அந்த் டெலிகாலர் சொல்ல மாட்டாங்க. அப்படியே சொன்னாலும் லோன் ஓகே ஆகி செக் ரெடியாயிருக்கும் போது சொல்வாங்க.. உங்க மனசு கார்பரேஷன் பார்க் ஊஞ்சல் போல சத்தத்துடன் ஆடும். வேற வழியில்லாம சரின்னுடுவீங்க.. கொஞ்சம் வேணாம்ணு சொல்லி பாருங்களேன். உடனே ஓரு பர்சண்ட் ப்ராசஸிங் பீஸ் குறையலைன்னா என் பேரை மாத்திக்கிறேன்.

2 சுரண்டல் இரண்டு

இப்போ நீங்க எடுத்த லோனை முன்கூட்டியே முடிக்கீறீங்க.. அதுக்கு pre-closing chargesனு ஓரு அமொண்ட் அதாவது இப்போ சுமார் 4லிருந்து 5 பர்சண்ட் வரைக்கும் எடுத்துப்பாங்க.. இது என்னடாது கூத்துன்னு பார்த்தா.. அதுக்கப்புறம் தான் ஆரம்பிக்குது.. ஆட்டமே.. முன்கூட்டியே முடிக்கற லோனுக்கு அந்த நாள் வரையான வட்டிய ஓரு பைசாகூட விடாம, ப்ராசஸிங், க்ளோஸிங்னு எல்லா காசையும் வாங்கிட்டு, நம்ம செக்கை திரும்ப கொடுக்கணுமில்ல ஆனா அதுக்கு ஓரு ரூல்ஸ் வச்சுருக்காங்க...அதாவது ஓரு குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் க்ளோஸ் ஆகிற அக்கவுண்டின் செக்கெல்லாம் அடுத்த மாசம் நம்ம அக்கவுண்ட்டில கலக்ஷனுக்கு போட்டு நம்ம பாஸ் பண்ண சொல்லிட்டு அதுக்கப்புறம் நாம அந்த வங்கிய அணுகி நம்ம பணததை க்ளைம் பண்ணிக்கணும். அதாவது அவங்க மட்டும் அவங்க பணத்துக்கு ஓரு நாள் கூட விடாம வட்டி போட்டு வாங்கிப்பாங்க, ஆனா நம்ம பணத்த அவங்க பத்து பதினைந்து நாள் வச்சிக்கிட்டு அதுக்கு ஓரு ரூபாய் கூட வட்டி தரமாட்டாங்களாம் என்ன அநியாயம்? சரி இதுக்கு வேற வழி இல்லையான்னு கேட்டா இருக்கு. அது நம்ம பேங்கில நம்ம செக்கிற்க்கு ஸ்டாப் பேமண்ட் கொடுக்கிறது. ஆனா அதுக்கு ஓவ்வொரு பேங்க் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 200 வரைக்கும் வசூலிக்கிறாங்க.. சரி அந்த காசை யாவது அவங்க திரும்ப கொடுக்கணுமில்ல.. கேட்டா அதெல்லாம் நாங்க லோன் வாங்கும் போதே.. அதில ரூல் அண்ட் ரெகுலேஷனில் போட்டிருக்கோம்ன்னு சொல்றாங்க.. சரின்னு அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷ்னை ப்பார்தா.. அதுல செக்க ஸ்டாப் பேமண்ட் கொடுக்க சொல்லி போட்டிருக்கு.. அனாஅதுக்கான சார்ஜ் க்ளேயிம் பண்ணகூடாதுனு போடல..

Sunday, August 24, 2008

எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்கும், கருணாநிதியின் மிட் நைட் அரெஸ்டிற்கும் சம்பந்தம் இருக்க முடியுமா

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் சைவ - வைணவ மோதலில் கடலுக்குள் போன பெருமாள் விக்ரகத்துக்கும், இந்த நூற்றாண்டில் உலகை உலுக்கிய சுனாமிப் பேரழிவுக்கும் சம்பந்தம் உண்டா?

உண்டு - அப்படி இருக்க சாத்தியமுண்டு என அவை இரண்டையும் ஒன்றாக இணைத்து கமல் தசாவதாரத்தில் அசாத்திய திறமை காட்டியிருந்தார். கேயோஸ் - பட்டாம்பூச்சி தியரிக்கு செல்லுலாயிடில் உரை எழுதியிருந்தார்.

அது போல எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்கும், கருணாநிதியின் மிட் நைட் அரெஸ்டிற்கும் சம்பந்தம் இருக்க முடியுமா என்றால்? முடியும் என்பது என் பதில்.

கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் ஃபோட்டோ
எம்.ஜி.ஆருக்கும் - எம்.ஆர்.ராதாவுக்கும் என்ன பிரச்சனையோ? எதனால் சுட்டுக்கொண்டார்களோ? அதைப் பற்றியெல்லாம் தற்போது விவாதிக்க வேண்டாம். அது அவர்களுடைய Personal பிரச்சனை. ஆனால் அதுதான் தமிழக அரசியலை புரட்டிப் போட்டது என்பது உண்மை.
கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த அந்த ஒரு ஃபோட்டோ, மற்ற அனைவைரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு எம்.ஜி.ஆரை தி.மு.வில் முன்னிலைப் படுத்தியது. தி.மு.க ஜெயிக்க உதவியது.

எம்.ஜி.ஆர் அதன்பின்னர் தனிப்பெரும் சக்தியாக வளர்ந்தது முதல்வரானது அனைவரும் அறிந்த வரலாறு. அவருடைய திரைப்பட கதாநாயகியாக இருந்த ஜெயலலிதா அவருடைய அரசியல் நாயகியாகவும் உருவெடுப்பார் என்பது அப்போது யாரும் யோசித்துப்பார்க்காத விஷயம்.

ஜெயலலிதாவை இழுத்து தள்ளிய காட்சி
எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவருடைய மனைவி வி.என்.ஜானகியை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். கடுப்பான எம்.ஜி.ஆரின் உறவினர் ஒருவர் ஜெயலலிதாவை ஊர்வல வண்டியில் இருந்து இழுத்து கீழே தள்ளினார். அது ஜெயலலிதாவின் அதிர்ஷ்டம், வி.என்.ஜானகியின் துரதிருஷ்டம். அந்த காட்சி தூர்தர்ஷனில் நேரடிக் காட்சியாக ஒளிபரப்பானது. பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பாமரர்களும் உச்சுக்கொட்டினார்கள். அவ்வளவுதான். ஜெயலலிதா மற்ற அனைவரையும் (அப்போது பவர்ஃபுல்லாக இருந்த ஆர்.எம்.வீரப்பனையும்) பின்னுக்குத் தள்ளிவிட்டு, அ.தி.மு.கவில் முன்னுக்கு வந்துவிட்டார்.

அதன் பின்னர் ஜெயலலிதா முதல்வர் ஆனதும், கட் அவுட் வைத்ததும், பதவி இழந்ததும் மீண்டும் பதவியைப் பிடித்தார் என்பதும் இன்னொரு வரலாறு. அந்த வரலாற்றில் ஒரு பக்கம்தான் கருணாநிதியின் நள்ளிரவுக் கைது.

அன்று எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டிருக்காவிட்டால் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகிற அளவுக்கு பிரபலமாகியிருக்க மாட்டார்.
எம்.ஜி.ஆரின் திரைப்பட நாயகி அரசியல் நாயகி ஆகியிருக்க மாட்டார்.
அவர் கருணாநிதியை கைது செய்திருக்க மாட்டார்.

இது கேயோஸ் தியரியை வைத்து, தமிழக அரசியலை நான் பார்க்கும் பார்வை.

ரஜினி மீது மீண்டும் விஷம் கக்கியிருக்கிறது சன் டிவி

ரஜினி மீது மீண்டும் விஷம் கக்கியிருக்கிறது சன் டிவி, குசேலனுக்கு விமர்சனம் எனும் பெயரில்.

குசேலன் நல்ல கதையாம்... அருமையான நடிப்பாம். ஆனால் ரஜினிகாந்த் பகுதி மிகவும் செயற்கையாம். லாஜிக் இல்லாத மேஜிக் நடத்திக் காட்ட முயன்று தோற்றுப் போய் விட்டார்களாம்.

படம் வெளியாகி 25 நாட்கள் கழித்து சன் டிவி கண்டுபிடித்திருக்கும் மாபெரும் உண்மை இது. ஆனால் இதே விமர்சனத்தை சாக்காக வைத்து திரும்பத் திரும்ப ரஜினியைக் காட்டி பல லட்சம் ரூபாயை விளம்பர வருவாயாக கல்லா கட்டினார்களே (25 விளம்பரங்கள். சன் டிவியில் ஒரு விளம்பரத்துக்கான கட்டணம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் - 10 நொடிகளுக்கு!) அப்போதி தெரியவில்லையா இந்த லாஜிக் இல்லா மேஜிக்.

இவர்கள் என்ன நோக்கில் அரை மணி நேர நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப ரஜினியைக் காட்டினார்களோ... அதே லாஜிக்கில்தானே வாசுவும் இந்தப் படத்தை எடுத்திருப்பார்?

இந்த மாதிரி மூன்றாம் தர விமர்சனம் பார்த்த பிறகுதான், மக்கள் அந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என்ற நிலைமை ரஜினியின் எந்தப் படத்துக்கும் இல்லைதான்.

ஆனால் குசேலன் விஷயத்தில் மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அல்லது சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு கடும் விஷத்தைக் கக்கி வருகிறது சன் நெட்வொர்க்.
ரஜினியின் விறுவிறு ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே விரும்பும் ரசிகர்களுக்கு குசேலன் திரைப்படம் ஏமாற்றமாக இருந்தாலும், அது ஒரு நல்ல படம் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

துப்பாக்கி குண்டு எதேச்சையாகப் பாய்ந்ததில் தொண்டையிலிருந்த கேன்சர் நீங்கிவிட்டது என்றும், 12-ம் நூற்றாண்டில் கடலில் போடப்பட்ட ரங்கநாதர் சிலை 10 நூற்றாண்டுகள் கழித்து ரங்கராஜன் நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க சுனாமியை உருவாக்கியது எனும் கேயாஸ் தியரி பகுத்தறிவையும் (பெரியார் இருந்திருந்தால் தாடியாலேயே தூக்கு மாட்டிக் கொண்டிருந்திருப்பார்.... என்னே பகுத்தறிவு!) சிலாகிக்கும் இந்த மோசடிக் கும்பலுக்கு, வாழ்வின் வலிகளையும், நட்பின் உன்னதத்தையும் சொல்லும் குசேலன் லாஜிக் இல்லாத படமாகத்தான் தெரியும்.

கலைஞர் டிவி ரூ.7 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கிவிட்ட குசேலனை இன்னும் எந்தெந்த வழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளிலும் தாக்கவே செய்யும் இந்த நச்சுக் கும்பல்.
என்ன கொடுமையென்றால்... இந்த நச்சுப் பிரச்சாரத்துக்கு அடிமையாகி ரஜினி ரசிகர்கள் சிலரும், குசேலனை நினைத்து வெறுத்துப்போய் உட்கார்ந்திருப்பதுதான்.

முன்பெல்லாம் மொத்த மீடியாவும் தங்கள் தனிப்பட்ட வெறுப்பை விட்டுவிட்டு வியாபாரத்துக்காக ரஜினி படங்களைக் கொண்டாடுவார்கள். ஞானி மாதிரி சிலர் கூனி வோலை செய்வார்கள். அதனால் அது பெரிதாகத் தெரியவில்லை. துரதிருஷ்டவசமாக இன்று பெரும்பாலும் மீடியாவை கூனிகளே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

ரஜினி நல்ல படம்தான் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைய மோசமான நச்சுத்தனம் மிக்க மீடியா உலகில், அவர்களுக்குரிய 'பங்கு' சரியாகப் போய் சேராததன் விளைவுதான் இந்த விமர்சனத் தாக்குதல்கள்.

மாநிலத்துக்கு மாநிலம் நாராயண கவுடாக்களும், வட்டாள் நாகராஜாக்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் வந்தாரை வாழ வைத்துக் கிழித்து விட்டோம் என்ற ஜம்பம் வேறே

மருத்துவ குணமுள்ள நெல்லிக்காய்

Published in : ஆரோக்கியம், உடலே நலமா?

நெல்லி மரம் ஒரு சிறிய மரம். இமாலயப் பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக வளர்கிறது. தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறியளவில் கொஞ்சம் துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும்.

பல மருத்துவக் குணங்களும் சேர்ந்து இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப் புகழ்கிறார்கள்.

நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள்.தண்ணீர் இனிப்பாக மாறிவிடும்.



பெரியளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய்க்கும், நெல்லி மொரப்பா செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். சிறியதை ஆயுர் வேத மருந்துகள், ஆயுர்வேத லேகியம் முதலியவை செய்ய பயன்படுத்துகிறார்கள்.



தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.



ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.



உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.



ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.



நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும். கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.



அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.





தரமான தலைசாயங்களில் நெல்லிவிதையைத் தான் பயன்படுத்துகிறார்கள். நெல்லி மரத்தின் தண்டிலிருந்து, அதன் இலை, காய், பழம் உட்பட எல்லாமுமே கறுப்புத் தன்மை கொடுப்பதால் மை, தலைசாயம், தோல்களை வண்ணப்படுத்த உதவுகிறது.



தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரமாம்.இத்தனை உபயோகமுள்ள ஒரு மரத்தை தெய்வீக மரம் என்று சொல்லலாமே......

Pigeon in custody for drug smuggling!

Fri, Aug 22 05:35 PM

London, Aug 22 (ANI): Bosnian police have taken a pigeon into custody for smuggling drugs into one of the country's highest security jails.

According to Josip Pojavnik, deputy warden of Zenica prison, prison guards grew suspicious when they saw "four prisoners visibly intoxicated shortly after the pigeon landed on a prison window."

It is believed that the drugs were stuffed into tiny bags and attached to the pigeon's legs.

"We suspect that the pigeon carried the drugs from Tuzla, a town around 70 kilometres more than 40 miles northeast of Zenica in central Bosnia," Telegraph quoted Pojavnik, as saying

The pigeon is behind bars while police investigates who might have loaded with drugs.

"We do not know what to do with the pigeon, but for the time being it will remain behind bars," said Pojavnik.

The prison officials are now considering to closing down a prisoner pigeon-breeding project established in a ward of the jail as part of a rehabilitation programme. (ANI)

Saturday, August 23, 2008

Tata Motors to launch second generation Indica

Tata Motors, one of India`s largest car producers will launch new second-generation Tata Indica by name of Indica Vista, reports Business Standard.

The car was showcased at Auto Expo in New Delhi. It will carry the new tag to differentiate itself from the Indica that is currently in production. The current model and new model of the car will co-exist, the new Indica will be positioned to take on Maruti Suzuki Swift and Hyundai Getz and i10. The car is built on a new platform and will be slightly larger than current Indica.

The car will feature an engine from fiat, the car will have 1.2-liter petrol engine called Saffire and the 1.3-liter common-rail diesel called Quadrajet and also Tata`s own 1.4-liter turbo diesel engine.

The car will be produced at Tata-Fiat`s Ranjangaon facility which has annual production capacity of 200,000 cars and 300,000 engines.

Tata-Fiat will invest Rs 40.20 billion at Ranjangaon facility in a 50:50 proportion.

Shares of the company gained Rs 4.75, or 1.14%, to trade at Rs 422.7. The total volume of shares traded was 43,318 at the BSE (12.32 p.m., Friday).

Thursday, August 21, 2008

Formula-1 Cars - Some more Facts and Figures

Formula-1 Cars – Some more Facts and Figures

How did it start

There was no ‘formula’ for motor racing during the years 1894, when the first ‘organised’ motor race took place from Paris to Rouen, until 1900. The then existing vehicles were simply raced. However, a differentiation was made between those cars on the basis of their method of propulsion (petrol or steam), and their number of seats.

During that time, cars always had at least two seats and it was not until the end of 1920 that single-seater cars were used for racing. The ‘invention’ of the rear-view mirror made an important contribution to this development, since one of the mechanic’s tasks in the 2-seaters was to warn the driver that someone was trying to overtake him!

When the first F1 race took place

The ‘FIA Formula-One’ World Championship was created early in 1950 and its first even was held on 13th May 1950 at ‘Silverstone’ Tracks in the U.K., which continues to be one of the most sought after ones even these days.

Participation Criteria for a ‘Constructor’

A prospective ‘Constructor’ must submit his entry to the FIA, providing evidence that he is both the ‘Designer’ AND ‘Constructor’ of the ‘Chassis’ of his car. He also has to substantiate sufficient technical and financial resources to take part in the Championship. A ‘Constructor’ need not be its engine manufacturer also and the name of the chassis manufacturer is always given before that of the engine manufacturer. In the event of winning a Championship, the title is awarded to the Constructor/Chassis manufacturer.

Drivers of F1 Championships

To qualify to participate, a Driver must hold a ‘Super Licence’, which is awarded on the basis of his past record in junior formulae races and of his having a valid contract with an F1 team which has entered the Championship.

How long does an F1 Race last

The distance is the least number of ‘laps’ which exceeds 305 km, and no race may last for more than two hours. On certain slower circuits (such as Monaco), in the event of rain, the Clerk of the Course is sometimes obliged to stop the race after two hours.

The Race continues whether rain or shine

An F1 event takes place in all weather conditions and tyre manufacturers have developed treaded tyres, which help to avoid the risk of aquaplaning. Nevertheless, the Race Director has the power to stop the event, if this becomes necessary for safety reasons as apart from track-grip, the greatest problem during rain is visibility, which is significantly reduced due to the spray thrown up by the cars’ tyres. In order to counteract this problem, the cars are equipped with a red light at the rear, which must be switched on if it starts to rain.

F1 Engines

The engine of an F1 Car is the most complex piece of equipment that goes into it. It consists of close to 5000 parts of which around 1500 are moving elements. When all of these are meticulously put together after about 2-weeks of work, it can produce more than 750 hp and reach rpm’s higher than 20,000! At their maximum pace, the current V8 engines consume around 60 litres of petrol for 100km of racing.

While manufacturers could easily continue to develop more powerful engines within the 2006 Regulations, the FIA felt that such unnecessary costs should be avoided and thus ruled a freeze on engines’ basic specs as of the 2007 F1 season. So instead of a yearly 20 to 30 hp gain, the manufacturers cannot develop their engines further and are now imposed with a rev limit of 19,000 rpm.

At the end of 2005, the last season where the regulations allowed 3-litre engines with 10-cylinders, some engines were producing more than 980 hp and running very close to the 1000 hp mark, a figure that was never reached since the ban on turbo engines. It was thus a sign for F1’s governing body to change the Regulations, as top speeds of 370 km/h reached at Monza were deemed hazardous for the drivers as well as the spectators.

Starters for F1 Cars
As per FIA, an electric starter has not been obligatory for several years and teams choose not to fit one in order to prevent an additional source of energy/Battery from causing incidents such as a fire or explosion. They are, however, authorised to use a portable starter in front of their pits and on the starting grid, but if a driver stalls on the circuit during the race, he has to retire, even if the car restarts once the marshals have pushed it away from a dangerous position. Most cars nowadays are, however, fitted with sophisticated electronically controlled anti-stall systems.

Gearboxes on F1 Cars
’Automatic’ gearboxes are prohibited by the FIA. However, all the cars are equipped with semi-automatic gearboxes where to change gear, the driver no longer has to activate the clutch pedal at the same time as the gear lever. He simply presses a button on the side of his steering wheel. There is a button on each side: one for changing up, the other for changing down. He, therefore, no longer has to take his hand off the steering wheel also and such a electro-hydraulic device allows the driver to change gear in one or two hundredths of a second, which is unquestionably faster than with a conventional system.

Number of Gears on F1 Cars
The rapid changes possible with semi-automatic gearboxes mean that transmissions with a greater number of ratios (six or seven) can be installed. On circuits with a large number of bends, the drivers only use four or five ratios. Reverse gear is obligatory, but must not be used in the pit-lane.

Brakes of F1 Cars
The brakes on stock cars these days are derived from the ‘disc brakes’ which were first used in racing. All F1 cars nowadays are equipped with brakes with calipers made from light alloys while the discs and pads tend to be made from synthetic materials, i.e. carbon/carbon, as their resistance to heat is much greater than that of stock car brakes and they weigh significantly less. Which is why under certain conditions, the insides of the F1 wheels appear completely incandescent!

The braking power of an F1 Car is uncommonly high. At the end of a ‘straight’, at speeds around 340 kph, an F1 car can brake in less than 100 meters in order to take a slow corner. Naturally, carbon/carbon is expensive. It takes six months to produce a disc, at temperatures of between 900 and 2000°C. The same material is now used to produce clutch discs.



Fuel used in F1 Cars

No specials fuels are used – only Unleaded/‘Green’ Petrol - similar to that available at our roadside filling stations. It has to comply with the strictest EEC standards concerning pollution. At one time, the fuel used in F1’s consisted of a mixture of hydrocarbons and was a very special fuel, which bore little resemblance to commercial petrol. The FIA thus introduced regulations with the dual aim of not only steering the oil companies’ research in the right direction so that it would benefit the ordinary motorcar but also significantly reducing motor exhaust emissions.

Tyre Changes per Race

The present FIA Regulations stipulate that each driver may use a maximum of 32 dry-weather tyres (40 in 1998) and 28 wet-weather tyres throughout the duration of an event. Each driver may use a maximum of two ‘rubber specifications’ for his dry-weather tyres during free practice, but he must designate the rubber specification he wishes to use for the rest of the event before the start of qualifying practice.

Thus, the maximum number of tyres he may use for qualifying practice, the warm-up and the race is 28 (14 front and 14 rear), chosen from amongst the 32. The Scrutineers, who are also responsible for checking that no driver exceeds the maximum number of tyres allowed, identify all of these tyres by means of an FIA-supplied bar-code system.

Refuelling during a Race

It is allowed but not obligatory. It must be carried out with the refuelling equipment specified by the FIA. The system is based on aviation equipment and complies with all the other safety requirements laid down by the FIA.

Speed Limits

Strange though it may seem, yes, but only in the pit lane, where the speed limit is either 80 or 120 kph (50 or 75 mph), depending on the circuit and the configuration of the pit lane. There are electronic devices checking the speed of the cars along the whole of the pit lane. If a competitor exceeds the limit during a Race, he is usually penalised with a time penalty whereas if he exceeds it during a practice session, he is usually fined ($ x km).

However, as in everyday life, the severity of punishment is proportional to the seriousness of offence, and also takes repeat offences into account. To avoid this, most Constructors equip their cars with a speed limiter, which the driver has to activate (usually by pressing a button on the steering wheel) as soon as he enters the pit lane. However, sometimes drivers forget and thus end-up paying a penalty!

Weighing of F1 Cars

The Scrutineers may weigh the cars any time, to make sure they never weigh less than 600 kg, including driver. Electronic weighing devices are located at the entrance to the pit lane to enable these checks. During qualifying practice, an electronic programme selects at random the cars which are to be checked. When a car is chosen by the computer, a red light comes on and the driver returning to his pit must proceed to the weighing area. If the weight of the car is insufficient, the driver could be excluded from the event, but he has the right to request that the car be weighed a second time.

To avoid cheating, any car that breaks down on the circuit is made to pass in front of the computer, which decides whether it must be weighed in the same condition. At the finish of a Race, all the cars are directed to the ‘parc de fermé where they are weighed. The drivers are also weighed separately before proceeding to the podium or to their motor-homes. If a Car+Driver weight does not comply with the 600 kg limit at the finish, it maybe excluded from the classification. This has happened in the past.

Tuesday, August 19, 2008

பிரபலங்கள் இயற்பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் அறிந்த தலைவர்கள், பிரபலங்கள், அறிஞர்கள் ஆகியோர்களின் முழு அல்லது இயற்பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், பட்டப் பெயர்களாலேயே பொதுவாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதன் சிறு முயற்சிதான் இது... இதில் பிழையிருப்பின் தகுந்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன். நிறைய பிரபலங்களின் பெயரை சேர்க்கப்படவில்லயென்பது உண்மையே. ஏனெனில் எனது சிற்றறிவிற்கு எட்டியவரை கொடுத்துள்ளேன். அப்பிரபலங்களும் இதில் இடம்பெறச் செய்யவேண்டுமென்று நீங்கள் கருதினால், அவர்களது பெயரை எமக்கு அனுப்பி வைத்து உதவுங்கள்... நன்றி.

(சாதிப் பெயர்களில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் எடுத்துக்கொண்ட தலைப்பு அப்படி என்பதால், என்னை சமாதானப்படுத்திக் கொண்டு பதிவுசெய்கிறேன்)

நேதாஜி சுபாஷ் சந்திரா - 'மாவீரன்' நேதாஜி

கோபால்சாமி துரைசாமி நாயுடு - ஜி. டி. நாயுடு

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் - வ.வே.சு.ஐயர்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - 'மகாத்மா' காந்தி

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் - டாக்டர் அம்பேத்கர்

குமாரசாமி காமராஜ் - 'பெருந்தலைவர்' காமராசர்

மொரார்ஜி ரஞ் சோட்ஜி தேசாய் - மொரார்ஜி தேசாய்

மேரி தெரசா போஜாக்சியூ - அன்னை தெரசா

ஈரோடு வெங்கட்ட நாயக்கர் ராமசாமி - தந்தை பெரியார்

நெல்சன் ரோலிக்லாஹ்லா மண்டேலா - நெல்சன் மண்டேலா

காஞ்சீவரம் நடராஜன் அண்ணாதுரை - பேரறிஞர் அண்ணா

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் - ம.பொ.சி

மருதூர் கோபலன் ராமச்சந்திர மேனன் - 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்

வைக்கம் நாராயணி ஜானகி - வி.என்.ஜானகி (எம்.ஜி.ஆரின் 3 - வது மனைவி)

கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் - கே.பி. சுந்தராம்பாள்

மதராஸ் ராஜகோபால் நாயுடு ராதாகிருஷ்ணன் - எம்.ஆர்.ராதா

பலுவாயி பானுமதி ராமகிருஷ்ணா - நடிகை பானுமதி

பொள்ளாச்சி சின்னப்பா வீரப்பா - பி.எஸ்.வீரப்பா

புரூஸ் ஜுன் ஃபேன் லீ - புரூஸ் லீ

கோச்சேரில் ராமன் நாராயணன் - கே.ஆர். நாராயணன்

பாமுலபார்தி வெங்கட நரசிம்மராவ் - பி.வி. நரசிம்மராவ்

இந்தர் குமார் குஜ்ரால் - ஐ.கே. குஜ்ரால்

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா - ஜே.ஆர்.டி. டாடா

புதுக்கோட்டை உலக நாதப்பிள்ளை சின்னப்பா - பி.யூ.சின்னப்பா

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியகராஜ பாகவதர் - எம்.கே. தியகராஜ பாகவதர்

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - எம்.எஸ். சுப்புலட்சுமி

அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

சான் கோங் சாங் - ஜாக்கி சான்

கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் - கே.ஜே.யேசுதாஸ்

அல்லா ரகா ரஹ்மான் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

வலைப்பதிவர்களை கைது செய்வதும் அல்லது அவர்கள் மீது மானநஷ்ட வழக்குகளை போடுவதும் வருங்காலத்தில் நடப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.

டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். நீதிபதிகளும் அந்த தகவல்களை சொல்லும்படி கூகுள் நிறுவனத்திற்கு தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்கள். இப்போது டாக்ஸிக் ரைட்டரின் வலைப்பதிவு ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். வலைப்பதிவு அழிக்கபட்டது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலில் இதே போன்று ஒரு வழக்கு நடந்தது. ஒரு வலைப்பதிவர் தனது ஊர் முனசிபல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். அந்த அரசியல்வாதிகள், சம்பந்தபட்ட வலைப்பதிவர் மீது தங்களது ஊர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்கள். இஸ்ரேல் நீதிமன்றம் அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனத்தார் தெரிவிக்க வேண்டுமென கேட்டது. கூகுள் நிறுவனம் சார்பாக ஆஜரான வக்கீல்கள் வலைப்பதிவர் சம்பந்தமான தகவல்களை கொடுப்பது கருத்துரிமைக்கு எதிரானது என முதலில் வாதிட்டார்கள். இஸ்ரேல் நீதிபதி இந்த பிரச்சனையில் கிரிமினல் நடத்தை இருப்பதாக சந்தேகபடுவதாக சொன்னவுடன் கூகுள் மறுபேச்சு பேசாமல் தன் வலைப்பதிவரின் IP நம்பரை கொடுத்தது மட்டுமல்ல, அந்த வலைப்பதிவினை அழித்தும் விட்டது. இப்போது அந்த வலைப்பதிவின் முகவரியில் வேறு யாரும் பதிவு தொடங்க முடியாது என கூகுள் அறிவித்து இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு மகாராஸ்டிரா அரசியல் தலைவர் பால் தாக்கரேயினை கொல்வதாக இணையத்தில் கருத்து சொன்ன ஓர் ஆர்குட் உறுப்பினரை கேரளாவில் கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்தார்கள். அதோடு பால் தாக்கரேக்கு எதிராக ஆர்குட்டில் ஏற்படுத்தபட்டு இருக்கும் குழுக்களில் உள்ள உறுப்பினர்களை கண்காணிக்கவும் காவல்துறையினரால் முயற்சிகள் எடுக்கபட்டு வருகின்றன. கருத்தளவில் எனக்கு பால் தாக்கரேயின் மீது கோபம் இருந்து நான் என்றோ ஒரு நாள் பால் தாக்கரேயினை விமர்சிக்கும் குழுவில் உறுப்பினராகி பிறகு அதனை மறந்து விட்டால் கூட இன்று நான் காவல்துறையினரால் கைது செய்யபடும் ஆபத்து இருக்கிறது.


கடந்த ஆண்டு எகிப்தில் 22 வயது மாணவர் அப்துல் கரீம் தனது வலைப்பதிவில் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், எகிப்திய ஜனாதிபதியை பற்றி தவறான கருத்துகளை சொன்னதற்காகவும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டார் என்பதை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். எகிப்தில் அப்துல் மோனம் மகமூத் என்கிற வலைப்பதிவரும் தன் வலைப்பதிவில் எழுதிய விஷயத்திற்காக 46 நாட்கள் சிறையில் இருந்தார். சீனாவில் அரசாங்கத்தை பற்றி தவறாக எழுதும் வலைப்பதிவர்களின் பக்கங்களை தடை செய்து விட்டார்கள் என கேள்விபட்டிருக்கிறோம். சவுதி அரேபியாவில் தனது உண்மையான பெயரை வெளிப்படையாக சொல்லி வலைப்பதிவு நடத்திய ஃபகுத் அல் ஃபர்கான் கடந்த ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் பத்தாம் நாள் கைது செய்யபட்டார்.

இங்கிலாந்தில் வாழும் 31 வயது பால் ரே என்பவர் லயன் ஹார்ட் என்னும் புனை பெயரில் வலைப்பதிவு எழுதி கொண்டு வந்தார். போதை பொருள் கள்ள வணிகம், இஸ்லாமிய அடிப்படைவாதம், காவல்துறை ஊழல் பற்றி அவரது வலைப்பதிவில் கருத்துகள் எழுதினார். இஸ்லாமியர்களுக்கு எதிரான இவரது எழுத்துகளினால் உண்டான பரபரப்பை அடுத்து இவருக்கு எதிராக இங்கிலாந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிருபிக்கபட்டால் அவருக்கு ஏழு வருடம் வரை தண்டனை கிடைக்கலாம். தற்போது அவர் அமெரிக்காவிற்கு குடி பெயர முடிவெடுத்திருக்கிறார்.

இப்போது எழும் கேளவி இது தான்? அரசியல்வாதிகளையோ பெரும் நிறுவனங்களையோ கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு பாதுகாப்பு உண்டா? நம்மூர் பெருந்தலைகளுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் கிடையாது என்பதை பத்திரிக்கையாளர்கள் அறிவார்கள். அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட அமைச்சரை பற்றி, அவரது லஞ்ச லாவண்யத்தை பற்றி தக்க ஆதாரங்களுடன் ஒரு தமிழ் பதிவர் தனது வலைப்பதிவில் எழுதினார் என்றால் அவருக்கு பாதுகாப்பு உண்டா என்பது ஒரு பெரும் கேள்விக்குறி. கூகுள் போன்ற பெரும் இணைய நிறுவனங்கள் தங்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கங்களிடம் மோதி தங்களது வியாபார வளத்தை கெடுத்து கொள்ள மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.

தமிழகத்தில் வலைப்பதிவர்களை கைது செய்வதும் அல்லது அவர்கள் மீது மானநஷ்ட வழக்குகளை போடுவதும் வருங்காலத்தில் நடப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் இது பற்றிய தெளிவான சட்டங்கள் இல்லை என்கிற விஷயத்தால் வலைப்பதிவருக்கு பாதகம் தான் நிகழும். தீவிரவாதிகள் என்னும் முத்திரை விழுந்து விட்டால் கேள்விகளே கேட்க முடியாது. முக்கியமாக விடுதலை புலிகள், நக்ஸ்லைட்கள், சிமி இயக்கத்தை பற்றி தொட்டும் தொடாமல் எழுதினாலே வலைப்பதிவர் மீது வட்டம் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நீதி மன்றத்தில் நின்று ஜெயிப்பதல்ல விஷயம். காவல் நிலையம், நீதிமன்றம் என்று இழுத்தடிக்க படுவதே தண்டனை தான்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தாங்கள் எழுதுவது குறித்து முதலில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடும் விமர்சனங்களை எழுதுபவர்கள் ஆதாரபூர்வமாய் எழுதுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க யாராவது முனையும் பட்சத்தில் அதனை எப்படி எதிர்கொள்வது என தயாராய் இருக்க வேண்டும்.

மான நஷ்ட ஈடு வழக்கு

பேசப்படும் வார்த்தைகள், எழுதபடும் வார்த்தைகள், சைகையால் பரிமாறப்பட்ட தகவல் அல்லது தெளிவாய் புலப்படும் கருத்து பரிமாற்றம் - இவற்றின் மூலம் ஒரு நபருக்கு பாதிப்பு உண்டாக்கும் என தெரிந்தும் அவரது பெயருக்கு மாசு உண்டாக்குவது மான நஷ்ட ஈடு வழக்கிற்கு கீழ் வரும். எனினும் இதில் விதிவிலக்கு உண்டு

* பொது நன்மைக்காக ஒரு நபரை பற்றிய உண்மையை வெளியிடுவது.
* அரசு ஊழியர் தனது கடமையில் இருந்து தவறியதை பற்றிய உண்மைகளை வெளியிடுவது.
* பொதுவில் விவாதிக்கபடும் விஷயத்திற்காக ஒரு நபரை பற்றிய உண்மையை வெளியிடுவது.
* நீதிமன்றத்தால் ஊர்ஜிதமாக்கபட்ட விஷயங்களை வெளியிடுவது.
* பொது மக்களின் கருத்துகளை பெறுவதற்காக செய்யபடும் பொது காரியங்களை பற்றிய கருத்துகள்.
* சட்டப்படி ஒருவரது நடத்தை விமர்சிக்கும் உரிமை இருக்கும் பட்சத்தில் தவறில்லை.
* தனது பாதுகாப்பிற்கோ அல்லது நலனிற்காக மற்றொருவரின் உண்மைகளை வெளியிடுவது.
* ஆபத்தினை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க செய்யபடும் சமூக நலனுக்கான காரியம்.

நான் வழக்கறிஞரோ சட்ட நிபுணரோ அல்ல. மேற்கோள் காட்டபட்டிருப்பது எனது புரிதலினால் எழுதியிருக்கும் சிறு விளக்கமே தவிர இந்த சட்டத்தை பற்றி முழுமையான விளக்கம் அல்ல. ஒருவரின் பெயருக்கு களங்கம் கற்பித்தது நிருபிக்கபட்டால் இரண்டு வருட சிறைதண்டனை கூட கிடைக்கலாம்.

தமிழ் வலைப்பதிவர்கள் மீது வழக்குகள், நடவடிக்கைகள் எடுக்கபட்டு பிறகு வலைப்பதிவுகளிலும் ஊடகங்களிலும் கண்டன குரல்களும் எழுந்து, அவற்றிற்கு பிறகு அரசு அதிகார வட்டங்களில் வலைப்பதிவருக்கான கருத்துரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வரை காத்திருந்தால், அதற்குள் சிலரது தலைகள் உருண்டிருக்கும். வருவதற்கு முன்பே தேவை விழிப்புணர்வு.

Monday, August 18, 2008

எதற்கெடுத்தாலும் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள்.

இப்போது எதற்கெடுத்தாலும் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். வாஷிங் மெஷின் வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி, ஏசி வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். நேனோ என்றால் என்ன? அதில் என்ன சிறப்பு? இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறார்களே, உண்மையிலேயே அதில் அவ்வளவு பயன் இருக்கிறதா?

நேனோ என்பது நீளத்தை அளக்கும் ஒரு அளவு கோல். எப்படி நாம் ஊருக்கு ஊர் இருக்கும் தொலைவை கிலோ மீட்டரிலும், துணியின் நீளத்தை மீட்டரிலும், நகத்தின் தடிமனை மில்லி மீட்டரிலும் சொல்கிறோமோ, அதைப் போல மிகச் சிறிய அளவை நேனோ மீட்டரில் சொல்லலாம். ஒரு மி.மீ.இல் ஆயிரத்தில் ஒரு பங்கை, மைக்ரோ மீட்டர் அல்லத் மைக்ரான் என்று சொல்லலாம். ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கை நேனோ மீட்டர் (நே.மீ.) என்று சொல்லலாம். நேனோ மீட்டர் அளவில் இருக்கும் பொருள்களை வைத்து செய்யும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள்.

நேனோ மீட்டர் அளவுகளில் இருக்கும் பொருள்கள், நம் கண்ணுக்கு தெரியாது. நம் கண்களுக்கு தெரியும் ஒளியின் அலை நீளம் சுமார் 400 முதல் 700 நே.மீ. ஆகும். தற்போது அறிவியல் வழக்கில் ஒரு பொருளின் எந்த அளவாவது (நீளம், அல்லது அகலம் அல்லது தடிமன்) 100 நே.மீ.க்கு குறைந்து இருந்தால், அதை நேனோ அளவு உள்ள பொருள் (nano size material) என்று சொல்லலாம் என்று பலர் கருதுகிறார்கள். சிலர், ஒரு பொருளின் எல்லா அளவுகளுமே 10 நே.மீ.க்கு குறைவாக இருந்தால்தான் அதை நே.மீ. அளவு உள்ள பொருள் என்று சொல்லலாம் என்கிறார்கள். மார்கெட்டிங்கில் இருக்கும் மக்கள், முடிந்த வரை தங்கள் product எல்லாவற்றையுமே நேனோ என்று சொல்லத்தான் விரும்புகிறார்கள்.

நேனோ என்ற அளவானதற்கு என்ன எடுத்துக்காட்டு கொடுக்க முடியும்? நம் கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா போன்ற உயிரினங்களே மைக்ரோ மீட்டர் அளவுக்கு (அதாவது நே.மீ. போல் ஆயிரம் பங்கு) இருக்கிறது. அதனால் தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கும் அல்லது உணரும் எந்தப் பொருளுமே நேனோ மீட்டர் அளவில் இருக்காது.

ஒரு அணுவின் அளவானது சுமார் 0.1 நே.மீ. இருக்கும். பல அணுக்கள் சேர்ந்த ‘அணுக் கூட்டம்' நே.மீ. அளவு இருக்கும். சில நூறு அல்லது ஆயிரம் அணுக்கள் சேர்ந்தால்தான் அது நே.மீ.அளவு வரும். பொதுவாக காற்றில் இருக்கும் மூலக்கூறுகள் அனைத்தும் நேனோ மீட்டர் அளவில் தான் (அல்லது அதை விடக் குறைவாக) இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், உலகு எங்கும் நேனோ டெக்னாலஜி அளவில் இருக்கும் பொருள் (ஆக்சிஜன்) தான் நாம் உயிர் வாழவே உதவுகிறது. அதை நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாமா?

ஆனால், திடப் பொருளாக நே.மீ.அளவில் இருக்கும் பொருள்களைத்தான் நாம் நேனோ டெக்னாலஜி என்று சொல்வதில் பயன்படுத்துகிறோம். ஒரு பொருள், மிகச் சிறிய துகளாக இருக்கும் பொழுது அதன் மேல் பரப்பளவு (surface area) மிக அதிகமாகும். உதாரணமாக, ஒரு செ.மீ. அகலம் இருக்கும் ஒரு cube எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பரப்பளவு 6 சதுர செ.மீ. ஆகும். இதை நான்கு சம பாகங்களாகப் பிரித்தால்? அவற்றின் மொத்த பருமன் (total volume) அதே அளவு இருக்கும். ஆனால் பரப்பளவு அதிகமாகும். இப்படி மறுபடியும் மறுபடியும் பிரித்தால், அதன் பரப்பளவு மிக அதிகமாகும்.

இப்படி பரப்பளவு அதிகமாவதால் சில பயன்கள் உண்டு. வினை ஊக்கியாக செயல்படும் பொருள்களின் பரப்பளவு அதிகமானால், அதன் வினை ஊக்கும் திறன் அதிகரிக்கும். இந்த வகையில் நேனோ பொருளின் பயன் அதிகம்.

ஆனால், உண்மையில் நேனோ பொருளில் என்ன சிறப்பு? ஒரு அணுவானது தனியாக இருக்கும் பொழுது அதன் பண்புகள் வேறு (atomic properties). அவை கோடிக்கணக்கான அணுக்களுடன் சேர்ந்து இருக்கும் பொழுது அதன் பண்புகள் வேறு (bulk properties). இவை சில நூறு அணுக்கள் அல்லது சில ஆயிரம் அணுக்கள் இருக்கும்பொழுது அதன் பண்பு முற்றிலும் மாறியதாக (அதாவது ஒரு அணுவை போலவும் இருக்காது, கோடிக்கணக்கான அணுக்களைப் போலவும் இருக்காது) இருக்கும். அப்படி மாறி இருக்கும் பண்பு நமக்கு பயன் உள்ளதாக இருந்தால், அது நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாம்.

எடுத்துக் காட்டாக, தங்கம் ஒரு அணுவாக இருந்தால் அதற்கு நிறம் என்று ஒன்றும் கிடையாது. (ஆவி நிலையில் தங்கம் இருந்தால், அது கண்ணுக்கு தெரியும் ஒளியை உறிஞ்சாது). அதுவே நேனோ அளவில் இருந்தால், அது பச்சை நிறமாக இருக்கும். மி.மீ. அளவில் இருந்தால், அது ஒளியை ஊடுருவி செல்ல விடாது. இங்கு தங்கத்தின் நிறம் பச்சையாக இருந்தால் என்ன பயன்? குறிப்பாக ஒன்றும் இல்லை என்று சொன்னால், “நான் தங்கத்தை நேனோ டெக்னாலஜியில் தயாரித்து இருக்கிறேன்” என்று தண்டோரா போடுவது (உண்மை என்றாலும், வாங்குபவர்க்கு பயனற்றது என்பதால்) ஏமாற்று வேலைதான்.

சில சமயங்களில் சில உலோகங்களால் பாக்டீரியா மற்றும் பல கிருமிகள் கொல்லப்படும். சில்வர் நேனோ என்று சொல்லப்படுவது இந்த வகை. (ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் இதை ஆராய்சி செய்து ”தங்கள் சாதனத்தில் இவை பயன் தருகின்றனவா?” என்று பார்த்து சொல்கின்றனவா, இல்லை சும்மா சொல்கின்றனவா என்று தெரியவில்லை). சில்வருடன் தாமிரம் (காப்பர்) சேர்த்தால் இன்னமும் நல்லது. வெள்ளியால் சில வகை கிருமிகள் கொல்லப்படும். தாமிரத்தால் இன்னும் சில வகை கொல்லப்படும். இரண்டும் சேர்ந்தால் இந்த இரண்டு வகை தவிர மூன்றாவதாக சில கிருமிகள் கொல்லப் படும். ஏனென்றால், இந்த மூன்றாம் வகை கிருமிகளின் ‘தோலை' திறக்கும் திறன் தாமிரத்திற்கு உண்டு. ஆனால் அவற்றின் உள்ளே தாமிரத்தால் பாதிப்பு இல்லை. வெறும் தாமிரம் மட்டும் இருந்தால், தோல் பாதிக்கப் படும். பிறகு கிருமி அதை சரி செய்து கொள்ளும். வெள்ளியினால், தோலை பாதிக்கவோ ஊடுருவி செல்லவோ முடியாது. ஆனால், உள்ளே சென்று விட்டால், கிருமியை கொல்ல முடியும். தாமிரமும் வெள்ளியும் சேர்ந்து இருந்தால்தான் இந்த வகை கிருமிகளை கொல்ல முடியும்.

சில சமயங்களில் நேனோ வகைப் பொருள்கள் தயார் செய்யப் படும். ஆனால், அவற்றில் 'நேனோப் பண்புகள்' நமக்கு பயன் உள்ளதாக இருப்பதில்லை. சொல்லப்போனால் தொல்லையாகத்தான் இருக்கிறது. இந்த இடங்களில் ‘நாங்கள் நேனோ டெக்னாலஜியில் வேலை செய்கிறோம்' என்று சொல்வது விவரம் தெரியாதவர்களுக்கு தவறான கருத்தை சொல்வதாக நான் நினைக்கிறேன். எடுத்துக் காட்டாக, சிலிக்கன் சில்லு செய்யும் பொழுது, இப்போது 65 நே.மீ. மற்றும் 35 நே.மீ. அளவில் டிரான்ஸிஸ்டர்கள் செய்கிறார்கள். இதனால், டிரான்ஸிஸ்டரில் பெரிய முன்னேற்றம் இல்லை. அளவு சிறிதாக இருந்தால், ஒரு சில்லில் நிறைய டிரான்ஸிஸ்டர்கள் வைக்க முடியும். அவ்வளவே. நேனோ அளவில் இருப்பதால் இதற்கு சிறப்பு எதுவும் கிடையாது. இன்னம் சொல்லப் போனால், இவற்றை இணைக்கும் கம்பிகள் இவ்வளவு சிறிதாக செய்யும் பொழுது இவற்றின் நேனோ பண்புகளால் எதிர்பாராத பாதிப்புகள் தான் வருகின்றன.

இந்த மாதிரி கம்பெனிகள் ‘நாங்கள் நேனோ டெக்னாலஜியில் செய்கிறோம்” என்று புதிய விஷயத்தைப் போல சொல்வது எனக்கு சரி என்று படவில்லை. அது சரி என்றால், ‘நாங்கள் நேனோவை விட சிறிய அளவில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசித்து, அதைப் போலவே சிறிய அளவில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளி விடுகிறோம். இதை தினமும், தூங்கும் போது கூட செய்கிறோம்” என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்ளலாம்.


நேனோ டெக்னாலஜி என்று ஒருவர் சொன்னால், “இதை நேனோவில் செய்யாமல், மைக்ரானில் செய்தால், அல்லது மி.மீ.இல் செய்தால் என்ன மாற்றம் இருக்கும்?” என்று கேளுங்கள். அந்த மாற்றம் எளிதில் கணிக்கக் கூடியது என்றால், இந்த டெக்னாலஜி ஒன்றும் பெரியது அல்ல. உதாரணமாக, நே.மீ. இருக்கும் பொருளில் பரப்பளவு அதிகமாக இருக்கும். அந்தப் பொருள் சிறிய அளவில் இருப்பதால், அதன் மொத்த அளவு குறைவாக இருக்கும். இவை இரண்டும் தவிர வேறு வித்தியாசமான, பயனுள்ள பண்பு இருந்தால்தான் அது உண்மையிலேயே நேனோ டெக்னாலஜி. இல்லாவிட்டால் வெறும் மார்கெடிங் தான். இந்த வகையில் ஏசி, வாசிங் மெஷின் இவற்றில் இருக்கும் சில்வர் நேனோ கூட உண்மையிலேயே பயன் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. இவற்றை மைக்ரான் அளவில் செய்தாலும் கிருமிகள் சாகும் என்றுதான் நினைக்கிறேன். மைக்ரான் அளவில் செய்தால் பொருள் செலவு கொஞ்சம் அதிகம், அவ்வளவே.


சில பொருள்கள், நேனோ அளவில் இருக்கும் பொழுது அவற்றிற்கு காந்தப் பண்புகள் வருகின்றன. பெரிய அளவிலிருக்கும் பொழுது காந்தப் பண்புகள் இருப்பதில்லை. இவற்றை குவாண்டம் இயற்பியல் விளக்குகிறது. இம்மாதிரி பொருள்களை நேனோ என்று சொல்வதில் தவறில்லை.

இமெயில் மோசடிக்காரர்கள் - நெட் பேங்க்கிங் மோசடி

சென்னையைச் சேர்ந்த னிவாசனின் வீட்டுக் கதவுகள் மூடிக்கிடக்கின்றன... அடித்துக்கொண்டேயிருக்கும் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்... விடாது ஒலித்தால் வெறுத்துப் போய் எடுத்து, 'எதுவும் கேட்காதீங்க... நொந்து வெந்து போயிருக்கேன்... என்ன விட்டுடுங்க...' என்று குரல் கம்மப் பேசிவிட்டு தொடர்பைத் துண்டிக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் 21 லட்ச ரூபாயை இழந்துவிட்டு நின்றால் யாரால்தான் பேசமுடியும்! கம்ப்யூட்டரின் மெயின் இணைப்புவரை எல்லாவற்றையும் துண்டித்துவிட்டார். அந்த வழியாகத்தானே கொள்ளையர்கள் அவருடைய பணத்தை அள்ளிச் சென்றுவிட்டார்கள்.

'உங்கள் வங்கிக் கணக்கை அப்டேட் செய்யவேண்டும்... இந்த பட்டனை க்ளிக் செய்யுங்கள்' என்று ஒற்றை வரி இமெயிலாக வந்த தகவலை அடுத்து, னிவாசன் அந்த பட்டனை க்ளிக் செய்ய, அவருடைய வங்கிக் கணக்கு பற்றிய மொத்தத் தகவலும் களவாடப்பட்டுவிட்டது.

அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய வங்கிக் கணக்கை செக் பண்ணுவதற்காக முயற்சித்தபோது பாஸ்வேர்டு தவறு என்ற தகவலே தொடர்ந்து வந்திருக்கிறது. வங்கிக்குத் தொலைபேசி மூலமாகக் கேட்டபோதுதான் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 21 லட்ச ரூபாய் மும்பையில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுவிட்ட விபரீதம் தெரிய வந்தது.




னிவாசன் போலீஸில் புகார் கொடுக்க... விசாரணை ஆரம்பமாகியிருக்கிறது. மும்பையில் உள்ள வங்கிக் கணக்கு ஒரு பெண்ணின் பெயரில் இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அந்தப் பெண்மணி தொடர்ந்து வங்கிக்கு வந்து, 'ஒரு நிலம் வாங்குவதற்காக சென்னையில் இருந்து பெரிய தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்... கிரெடிட் ஆகிவிட்டதா?' என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். அதனால், கிரெடிட் ஆனவுடன் அவர் பணத்தை எடுத்துச் சென்றது யாருக்கும் உறுத்தலாக இல்லை. னிவாசனுக்கு அந்த இமெயில் ஆஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற அடிப்படையான தகவல்களைத் திரட்டியிருக்கும் காவல் துறை, இந்தப் புகாரை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்கிறது. சைபர் க்ரைம் பிரிவின் உதவியோடு விசாரணையில் இறங்கியிருக்கும் சென்னை மத்திய குற்றப் பிரிவின் (வங்கி மோசடி தடுப்புப் பிரிவு) உதவி கமிஷனர் பன்னீர் செல்வம், இவ்விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார்.

''நெட்பேங்க்கிங் மாதிரியான விஷயங்கள் நம்முடைய வசதிக்காகத்தான் இருக்கின்றன. ஆனால், அதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது ரொம்பவே கவனமாக இருக்கணும். இப்போ 21 லட்சத்தை இழந்துட்டு நிற்கும் னிவாசன் ஒரு ரிட்டயர்ட் வங்கி அதிகாரி. அவருக்கே ஸ்லிப் ஆகிடுச்சு.

அவர் கணக்கு வெச்சிருக்கறது 'பஞ்சாப் நேஷனல் வங்கி'யில். அந்த வில்லங்கமான மெயில் வந்தது 'அட்மின் அட் ஐ.சி.ஐ.சி.ஐ. காம்' (admin@ICICIbank.com) என்கிற மெயில் ஐ.டியில் இருந்து. நம்முடைய வங்கிக் கணக்கை எதற்காக இன்னொரு பேங்க் நிர்வாகம் கேட்கிறதுனு ஒருகணம் யோசிச்சிருந்தா... அது போலியான இமெயில்னு புரிஞ்சிருக்கும். அவசரத்தில் பலர் இதையெல்லாம் கவனிக்கறதில்லை'' என்றார்.

''அவர்கள் எப்படி னிவாசனைக் குறிவைத்தார்கள்?'' என்று கேட்டபோது,

''பொதுவாக, இமெயில் மோசடிக்காரர்கள், எந்த ஒரு தனிநபரையும் குறிவைத்துச் செயல்படுவதில்லை. முதல்கட்டமாக ஆயிரக்கணக்கான இமெயில் முகவரிகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்புகிறார்கள். அதில் எந்த மீன் பதில் போட்டு சிக்குகிறதோ அதை வலையில் வீழ்த்தி விடுவார்கள். இதுதான் டெக்னிக். அதனால், நாம் இதுபோன்ற இமெயில்களுக்கு பதில் சொல்லாமல் டெலிட் செய்தாலே சிக்கலைத் தவிர்த்துவிடலாம்.

முன்பு, அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு கடைசியாக பாஸ்வேர்டு போன்ற முக்கியமான தகவலைக் கேட்டு ஏமாற்றினார்கள். இப்போது விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி, ஒரே க்ளிக்கில் அத்தனை தகவல்களையும் சுருட்டி விடுகிறார்கள். இதைப் பயன்படுத்துபவர்கள் படித்தவர்கள்தான் என்றாலும், ஏமாற்று வேலை மும்முரமாக நடக்கிறது'' என்றார்.

இந்த மோசடியில் ஈடுபடும் சர்வதேச கும்பலின் இலக்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான். இங்குள்ள பணத்தை நேரடியாக வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லமுடியாது என்பதால், இந்தியாவில் உள்ள சிலரை அதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதாவது, மிகச் சுலபமாக வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க ஒரு வழி என்று சொல்லி அவர்களுடைய வங்கிக் கணக்கை வாங்கிக் கொள்கிறார்கள். ஏமாற்றி சுருட்டப்படும் தொகை அந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அவர்கள் சிறிய சதவிகிதத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதியை வேறு கணக்கிலோ அல்லது நேரடியாகவோ கொடுத்துவிட வேண்டும். ஏதாவது சிக்கலாகி வழக்கு அதுஇதுவென்று வந்தால் ஏமாற்றுக் கும்பல் தப்பிவிடும். கமிஷனுக்கு ஆசைப்பட்டு கணக்கு எண்ணைக் கொடுத்தவர் மாட்டிக் கொள்வார்.

சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் சொல்லும் விஷயம் அதற்குச் சரியான உதாரணம்...

''என் அண்ணன் ராஜ்மோகனின் வங்கிக் கணக்குக்கான நெட்பேங்க்கிங் பாஸ்வேர்டை திருடிய இமெயில் மோசடிக் கும்பல், 12 லட்ச ரூபாயை வேறொரு கணக்குக்கு மாற்றிவிட்டார்கள். என் அண்ணன் சென்னை போலீஸூக்கு புகார் கொடுக்க, அவர்களும் விசாரணையில் இறங்கினார்கள்.

மும்பையில் உள்ள ஒரு ஆப்டிகல்ஸின் கணக்கில் அந்தப் பணம் மாற்றப்பட்டது தெரிந்து போலீஸ் அங்கே போனது. அந்த ஆப்டிகல்ஸ் உரிமையாளருக்கு எதுவும் தெரியவில்லை. அதன்பிறகு விசாரித்தபோது அந்தக் கடையின் மேனேஜர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அந்தக் கணக்கு எண்ணை மோசடி கும்பலுக்குக் கொடுத்திருக்கிறார். கடைசியில், அந்த மேனேஜருக்காகக் கடையைச் சேர்ந்தவர்கள் பணத்தைக் கட்டினார்கள்'' என்றார்.

விஞ்ஞானம் நமக்கு புதிதுபுதிதாக பல வசதிகளைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. கூடவே, மோசடிப் பேர்வழிகள் அதற்கான குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்கவேண்டும்
இன்னொரு சீட்டிங்!



நெட் பேங்க்கிங் மோசடியைப் போலவே இன்னொரு இமெயில் மோசடி இருக்கிறது. அது உருக்கமான கதைகளைச் சொல்லியோ, அல்லது அதிரடி பரிசுப் போட்டியைச் சொல்லியோ ஏமாற்றுவது.

'அமெரிக்காவில் 300 கோடி டாலர் சொத்து இருக்கிறது. அதை க்ளைம் செய்ய யாருமில்லை. உங்கள் பேர், இனிஷியல் உட்பட எல்லாமே அந்தச் சொத்தின் உரிமையாளருடையதைப் போல இருக்கிறது. அந்தச் சொத்துக்களை உங்கள் பெயரில் மாற்றிவிடலாம். அது வக்கீலாக இருக்கும் என் பொறுப்பு. புதிய டாகுமென்ட்டுகளை எழுதும் செலவு மட்டும்தான்... 1,000 டாலர் அனுப்புங்கள்' என்று மெயில் வரும். அமெரிக்காவில் சுப்பிரமணியோ, கோவிந்தசாமியோ இருக்க வாய்ப்பு இருக்கா என்று யாரும் யோசிப்பதில்லை. 300 கோடி டாலர் யோசிக்க விடாது!

ஆறு மாதம் முன்பு சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு லாட்டரியில் 200 கோடி டாலர் பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கு இன்கம்டேக்ஸ், கஸ்டம்ஸ் டியூட்டி ஆகியவற்றைக் கட்டவேண்டும் என்று சொல்லி பணம் கேட்டிருக்கிறது ஒரு கும்பல். அவரும் அனுப்பியிருக்கிறார்.

அதன்பிறகும் விடாமல் அது இதுவென்று சொல்லி சுமார் 18 லட்ச ரூபாய்வரை கறந்திருக்கிறார்கள். கடைசியாக உங்கள் பணமெல்லாம் கன்டெய்னரில் அனுப்பப்பட்டு மும்பையில் இருக்கிறது. கஸ்டம்ஸ் க்ளியரன்ஸூக்காக 3 லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார்கள். எல்லா பணத்தையும் இழந்த பிறகு போலீஸூக்குப் போயிருக்கிறார் அந்தப் பெண்!

நன்றி: நாணயம் விகடன்

Sunday, August 17, 2008

நடிகர்கள், நடிகைகள் ,வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதோ உங்களுக்காக நடிகர்களின் சம்பள பட்டியல் முழு விவரம்:-

ரஜினிகாந்த் - ரூ.25 முதல் ரூ.40 கோடி வரை

கமல்ஹாசன் - ரூ.10 கோடி

விஜயகாந்த் - ரூ.4 கோடி

சரத்குமார் - ரூ.2 கோடி

அஜித்குமார் - ரூ.10 கோடி

விஜய் - ரூ.8 கோடி

விக்ரம் - ரூ.6 கோடி

விஷால் - ரூ.6 கோடி

சூர்யா - ரூ.6 கோடி

சிம்பு - ரூ. 4 கோடி

தனுஷ் - ரூ.4 கோடி

ஆர்யா - ரூ.3 கோடி

கார்த்தி - ரூ.3 கோடி

ஜெயம் ரவி - ரூ.3 கோடி

மாதவன் - ரூ.1.5 கோடி

சத்யராஜ் - ரூ.75 லட்சம்

பிரசாந்த் - ரூ.50 லட்சம்

பசுபதி - ரூ.30 லட்சம்


மற்ற நடிகர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்கள்.



இதோ உங்களுக்காக நடிகைகளின் சம்பள பட்டியல்...!

நயன்தாரா : ஒரு கோடியே 25 லட்சம்

த்ரிஷா : 1 கோடி

அசின் : 85 லட்சம்

ஸ்ரேயா : 50 லட்சம்

ஜெனிலியா : 50 லட்சம்

ப்ரியாமணி : 50 லட்சம்

பாவனா : 50 லட்சம்

நமீதா : 30 முதல் 40 லட்சம் வரை

சினேகா : 35 லட்சம்

பத்மப்ரியா : 30 லட்சம்

பூஜா : 30 லட்சம்

நவ்யா நாயர் : 25 லட்சம்

சந்தியா : 25 லட்சம்

ஸ்னிக்தா : 25 லட்சம்

இவர்கள் தவிர மற்ற நடிகைகளுக்கு 5 முதல் 20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன.

அவற்றில் இரண்டு சிம்கார்டுகள் (தமிழில் என்ன வார்த்தை?) போடும் வசதி, மேற்கொண்டு இலவச பேட்டரி ஒன்று, ஆடியோ, வீடியோ, கேமெரா, SD கார்டு மற்றும் பிராண்டடு போன்களில் உள்ள அனைத்துவசதிகளும் உள்ளது


மேலும் புளூடூத்திலிருந்து இணைய வசதி வீடியோ சாட் வரை மேலும் டீவி பார்க்கும் வசதி உள்பட உள்ளது என்றும் விரைவில் பாத்ரூம் மற்றும் டாய்லேட் வசதிகள் கூட சைனா போன்களில் வந்துவிடும் என்கிறார்கள்

ஆனால் ஒரு சாரார் மேற்படி சைனா போன்கள் ஒரு தடவை கீழே போட்டால் சுக்குநூறாக உடைந்துவிடும் என்கிறார்கள். பேட்டரி சீக்கிரம் போய்விடும் அதற்குத்தான் இன்னொரு பேட்டரியும் தருகிறார்கள் எனக்கூறுகின்றனர்.

மேலும் ஒரு சிலர் அந்த போன்களில் கதிரியக்கம் அதிகமாக உள்ளது. அதனால் காதில் உள்ள ஜவ்வு அறையில் உள்ள காது கேட்பதற்கு மிகவும் தேவையான மெல்லிய உணர்வு இழைகளை எரித்துவிடும் என்றும் அதனால் காது கேட்கும் திறன் முற்றிலும் இழந்து விடுவார்கள் என்றும் அதற்கு மருத்துவத்தில் சிகைச்சையே இல்லை என்றும் கூறுகின்றனர்.

இது எந்த அளவு உண்மை என்றும் தெரியவில்லை...
ஒருவேளை சைனாக்காரர்கள் இந்தியா நாடு வல்லரசு ஆக முடியாமல் தடுக்க தனது போன்களை குறைந்தவிலையில் விற்று இந்தியர்களை செவிடர்களாக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஆனால் இதற்காக விற்பனை ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. விற்பனை அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.


அனைத்துவசதி கொண்ட கம்பெனீ போன் ஒன்று வாங்கும் விலையில் இப்போன்களை இரண்டுக்கும் மேற்பட்ட போன்களை வாங்கலாம் எனக் கூறுகின்றனர்.

இந்த விசயமெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்கிறிர்களா? எனக்கும் ஒரு சைனா போன் வாங்கும் ஆசை வந்து கொழுந்துவிட்டு எரிகிறது.... அதை வாங்கி எனது காதும் கருகிவிடுமோ என அச்சம் ஏற்பட்டுவிட்டது....

ஆகவே மேற்படி சைனா போன்களை வாங்கி உபயோகித்து, பயனடைந்து, அடுத்தவர்களை வயிரு எரிய வைத்துகொண்டு,அல்லது அதனால் அவஸ்தைப்பட்டு கொண்டு இருப்பவர்கள் தங்களது அனுபவங்களை பின்னுட்டமாகவோ அல்லது பதிவாகவோ கூறினால் அதை வைத்து என்னைப்போல் பலரும் பயனும் அடைவார்கள்.
உள்ளதை கூறுங்கள்... யான் பெற்ற அவஸ்தை இவ்வையகம் பெறட்டும் என எண்ணம் வேண்டாம்

Saturday, August 16, 2008

காமெடி நடிகர் வடிவேலுக்கு ஒரு நாள் சம்பளம் எட்டு லட்சம் ரூபாய்.

காமெடி நடிகர் வடிவேலுக்கு ஒரு நாள் சம்பளம் எட்டு லட்சம் ரூபாய். காமெடி இல்லீங்க...! உண்மைதான்.

இதோ உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பள விவரம்:

நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று ஒப்பந்தமாவார்கள். ஆனால் காமெடி நடிகர்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள். எந்த வகையில் இன்றைய தேதியில் முன்னணியில் இருப்பவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. அவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 8 லட்சம் ரூபாய். நண்பர்களே...! இது காமெடி இல்லை. நிஜம்தான்.

வடிவேலுக்கு அடுத்தபடியாக காமெடியில் அதிக சம்பளம் வாங்குபவராக இருப்பவர் சின்னக் கலைவாணர் விவேக். அவர் ஒரு படத்துக்கு ரூ.3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோர் ரூ.1 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள்.

கவுண்டமணி, செந்தில் இப்போது படங்களில் நடிப்பதில்லை. அவர்கள் கரகாட்டக்காரன் போன்ற காமெடியால் ஹிட் ஆன படங்களில் வாங்கிய சம்பளம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரைதான்.

வில்லன் நடிகர் ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

ரஜினிகாந்த் சம்பளமாக வாங்கிய தொகை திருப்பிக் கொடுக்க முடிவு

குசேலன் படத்தில் நடிப்பதற்காக சம்பளமாக வாங்கிய தொகையில் ரூ.10 முதல் 15 கோடிகள் வரை திருப்பிக் கொடுக்க ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடித்து வெளியான படம் குசேலன். ஆகஸ்ட் 1ம் தேதி வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். ரஜினிகாந்த் படத்தில் ஒரு மணி நேரமே வருவதால் ரசிகர்கள் குசேலனை பார்க்க வரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்கள். இதையெல்லாம் தெரிந்துதானே கோடிக்கணக்கில் பணம் கொடுத்து குசேலன் படத்தை வாங்கினீர்கள் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பதில் வந்ததால், படம் வெளியாகும் நேரத்தில் ரஜினிகாந்த் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதுதான் குசேலன் ஓடாதற்கு காரணம் என்று ரஜினிகாந்த் மீது பழியை தூக்கிப் போட்டார்கள் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தரும்.

இந்த தகவல் அமெரிக்காவில் ரோபோ சூட்டிங்கில் இருந்த ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகுதான் இப்பிரச்னையில் முடிவு எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பு கூறியிருந்த நிலையில், ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து விட்டார். குசேலன் பிரச்னைக்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்று போயஸ் கார்டன் வட்டாரத்தில் உலாவி விசாரித்தபோது, தான் வாங்கிய ரூ.30 கோடி சம்பளத்தில் ரூ.10 முதல் ரூ.15 கோடிகள் வரை திருப்பிக் கொடுக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக தெரியவருகிறது.

குசேலன் படத்தை பிரமிட் சாய்மீரா ரூ.60 கோடிக்கு வாங்கி, மினிமம் கியாரண்டி அடிப்படையில் விநியோகித்தது. தயாரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் மற்ற கலைஞர்களுக்கு ரூ.30 கோடியும், ரஜினிகாந்த்துக்கு ரூ.30 கோடியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாபா படம் பிளாப் ஆனபோதும் ரஜினிகாந்த் பணத்தை திருப்பிக் கொடுத்து தியேட்டர்காரர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதில் இன்னொரு சென்டிமென்ட்டும் அடங்கியிருக்கிறது. அதுதான் ஆகஸ்ட் மாத செண்டிமென்ட். பாபா வெளியானதும் ஆகஸ்ட்தான், குசேலன் வெளியானதும் ஆகஸ்ட்தான்.

Friday, August 15, 2008

Google faces defamation lawsuit in India'

'Friday, 15 August , 2008, 18:49

Google Inc's India subsidiary is being sued for alleged defamation in the Bombay High Court by an Indian construction equipment company, The Wall Street Journal said.

Mumbai-based Gremach Infrastructure Equipments & Projects Ltd is demanding that Google disclose the name of a person who criticized it using Google's blogging service, the paper said.

Google, Yahoo partially disclose terms of ad pact

A blogger using the name "Toxic Writer" criticized the company on blogger.com, a site that allows individuals to create blogs without publicly revealing their identities, the paper said.

The Journal said the Bombay High Court ordered the blog taken down on Feb 26.

"At the present stage, there is merit in the contention ... that the article put up by the defendant on the blog site is defamatory," the paper quoted the court as saying.

The court ordered Google India to reveal the identity of the blogger

Indipendence Day gift: Indian doctors save life of Pakistani student

I-Day gift: Indian docs save life of Pakistani student



At a time when tensions have flared up again between India and Pakistan, doctors in Delhi have saved the life of a young Pakistani engineering student by conducting a rare cardiac surgery.

A team of 11 doctors and staff at the Sir Ganga Ram Hospital has repaired 20-year-old Tayyab Niaz's mitral valve (that controls the blood flow between the upper and lower chamber of the heart) to save his life.

Doctors said the surgery was 'rare, tedious and needs more patience'.

'Tayyab Niaz underwent heart treatment in Pakistan two years back but the mitral valve was ruptured during the medical procedure. Pakistani doctors referred him here and we successfully repaired the damage. Now he is fine and ready to go home,' said Sujay Shad, the lead surgeon who carried out the surgery.

'We carried out detailed tests and conducted an open heart surgery over a period of 90 minutes Aug 1. He was in a difficult condition and without this treatment he may have died in the near future. This is an Independence Day gift,' Shad told IANS.

Niaz, a mechanical engineering student in Multan, had developed a faster than normal heartbeat and underwent a procedure named radio frequency ablation at the Punjab Institute of Cardiology, Karachi, two years ago.

A catheter (small tube) had got stuck inside the heart during the radio frequency ablation and at the time of extraction of this catheter his mitral valve got severely damaged.

'Due to this damage, his heart started growing big, which means more weakness and less life span,' Shad explained.

He said Niaz had two options - either to get operated in Pakistan where surgeons would have changed his mitral valve or come to India and get the valve repaired.

A change in valve would have meant lifelong medication, more expenditure and staying away from games like cricket and football. Shad said as Niaz was a cricket enthusiast he could not have afforded a replacement.

B.K. Rao, a veteran doctor and chairman of the hospital, said: 'Heart valve repair is a more complex operation; it takes more time and more effort. However, the results of a successful valve repair are gratifying.'

Shad, who had been working in Britain till 2005, said a successful repair of the valve needs only a month's medication. The treatment cost Niaz, the son of a businessman, a little over Rs.180,000.

'He underwent a check-up Aug 14 and everything is progressing fine. We have advised him three weeks' rest and four weeks' medication. After that he can lead a normal life like you and me,' he said.

Terming it as an Independence Day gift, Shad said: 'Though Pakistan President Pervez Musharaff is speaking against India, we don't see any difference between Indians and Pakistanis.'

'All people need love, affection and proper medical treatment. I don't think the common man in Pakistan has any problem with India.'

Niaz, the son of a businessman, said though he has some pain in his chest even now, he is feeling much better. The doctors, staff and the people of Delhi are very nice, he said.

'I am taking back goodwill from India. Common people never hate Indians. I think it's the politicians who create the problem.'

கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்க வழிகாட்டி

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் கலந்து உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வழிகாட்டி முறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.உ.பி.,யில் சமீபத்தில் வங்கி கருவூலத்தில் இருந்து நிஜ ரூபாய் நோட்டுக்களுடன் போலி ரூபாய் நோட்டுக்கள் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது. போலி நோட்டுக்களை கண்டறிய ரிசர்வ் வங்கி அவ்வப்போது அனைத்து வங்கிகளுக்கும் வழிமுறைகளை அனுப்பி வருகிறது.உண்மையான ரூபாய் நோட்டுக்களைப் பற்றி அறிய பொதுமக்கள் ரிசர்வ் வங்கியின், இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.அசல் ரூபாய் நோட்டுக்களை கண்டறிய சில வழிமுறைகள்:* ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை லேசாக மடித்துப் பார்த்தால், அதில் பச்சை நிறத்துடன் மற்றொரு பக்கத்தின் நீல நிறமும் பார்க்கமுடியும்.* இந்தியில் அச்சிடப்பட்டுள்ள ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவை தொட்டுப் பார்த்தால் அதன் எழுத்துக்கள் சிறிது மேடாக இருக்கும்.
* ஆயிரம் ரூபாய் நோட்டில், 'பாரத்' என்ற சொல் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும்.
* மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் பாங்கின் சீல் கேரன்டி, அசோக ஸ்தம்பம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்து 10 ரூபாய் நோட்டுத் தவிர மற்ற எல்லா நோட்டுக்களிலும் விசேஷ இன்டாக்லியோ பிரின்டிங் கால் தயார் செய்யப்பட்டுள்ளன.
* 'அல்ட்ரா வயலட்' விளக்கின் உதவியால் நோட் டின் விசேஷ ஆப்டிகல் பைபர் மற்றும் மையை பார்க்க முடியும்.
நன்றி : தினமலர்

Thursday, August 7, 2008

சுஜாதாவின் உயிர்மை

பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத் தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாண யத்தைக் கொடுத்து 'நினைவாக வைத்துக்கொள் ளுங்கள்' என்று கொடுத்தார்.

சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம்.
புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின. 'அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்' என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங் கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தை யும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன் பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத் தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டி லைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார்.
கோவை ஞானி, நிகழ் இதழில் எனது கவிதைகளை 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. 'கால்களின் ஆல்பம்' அப்போதுதான் நிகழில் வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர் தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் 'அம்மா இல்லாத முதல் ரம்ஜான்' கவிதையை அவர் வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன்முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதி னேன். ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், 'உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர் களுக்கு அறிமுகம் செய்கிறேன்' என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவ ருக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே இந்த நோட் டுப் புத்தகம் பற்றிய குறிப்புடன் சுயம்புலிங்கத்தின் 'தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்' கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருவார். 'இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை' என்பார். அவருக்கு கவிதை வரி களைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது.
சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். 'சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்' என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்துகொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக்கொண்டிருந்தேன்.
சென்னைக்கு வந்தபிறகு அவரை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய் களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன். நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக் கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத் தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறுவிதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதி யுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட அவர் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒரு போதும் அந்த சந்தர்ப்பங்களை பதிவு செய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒருபோதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.
உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைகதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள்.
கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். 'உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது' என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த இடைவெளியில் 'சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்' என்றார்.
அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.
எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.

( நன்றி: உயிர்மை மார்ச் 2008 )


உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

Tuesday, August 5, 2008

தென்னை மரம் ஏற, எளிய முறையிலான புதிய கருவி

பெ.நா.,பாளையம்:
தென்னை மரம் ஏற, எளிய முறையிலான புதிய கருவியை, கோவை இளைஞர் வடிவமைத்துள்ளார். இதை பயன்படுத்தி, 50 முதல் 60 அடி உயரமுள்ள தென்னை மரத்தை சில வினாடிகளில் ஏற முடிகிறது. இக்கருவியை வடிவமைத்த, கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன் கூறியதாவது: "விசான் டெக்' என்ற இந்த கருவியை பயன்படுத்தி, சில வினாடிகளில் மரம் ஏறி விடலாம். இரண்டு ஆண்டாக பல்வேறு விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து வடிவமைத்துள்ளேன். வீட்டுத் தோட்டங்களில் தென்னை மரம் வைத்துள்ளவர்களுக்கும், 50 முதல் 100 தென்னை மரம் வைத்துள்ளவர்களுக்கும், இக்கருவி நல்ல பயனை கொடுக்கும். தென்னை மரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இரும்பு பாகங்கள் படும் பகுதியில்,"ரப்பர் புஷ்' பொருத்தப்பட்டுள்ளது. தென்னை மரத்தின் உச்சிப் பகுதிக்கு சென்றபின், மரத்தை சுற்றி வந்து காய்களை பறிக்கவும், மரத்தில் உள்ள பாளைகளை சுத்தம் செய்யவும் முடியும். 60 முதல் 80 கிலோ எடையுள்ள நபர்கள், இக்கருவியின் உதவியால், எளிதில் மரம் ஏற முடியும். இதன் தற்போதைய விலை, 3,000 முதல் 3,500 ரூபாய் வரை. அரசு மானியம் அளித்தால், விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு தர முடியும். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்.

தமிழக மருத்துவ நிபுணர்களை அழைக்கிறது கர்நாடகம்.

பெங்களூர்:

கர்நாடகத்தில் முதுகலைப் படிப்பு முடித்த டாக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த குறையைப் போக்க பக்கத்து மாநிலங்களிலிருந்து மருத்துவ நிபுணர்களை அழைக்கிறது கர்நாடகம்.

பக்கத்து மாநிலங்கள் தமிழகம், ஆந்திரம் மற்றும் மகாராஷ்ட்ராவுடன் கடும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வரும் கர்நாடகம், நிலைமையை உணர்ந்து இறங்கி வருகிறது.

இந்த மூன்று மாநில அரசுகளிடமும் பேசி கர்நாடகத்தின் டாக்டர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ராமச்சந்திர கவுடா.

டாக்டர்கள் பற்றாக்குறை!:

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மாநிலத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக உறுப்பினர்கள் புகார் எழுப்பினர்.

இந்தப் புகாருக்கு அமைச்சர் ராமச்சந்திர கவுடா பதிலளிக்கையில்,

கர்நாடகத்தில் டாக்டர்கள் குறைபாடு இருப்பது உண்மைதான். அதைப்போக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ முதுகலைப் படிப்பு படித்த டாக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இங்கு படித்து பட்டம் பெறும் டாக்டர்கள் அரசு சம்பளம் குறைவு என்று கருதி அரசாங்க வேலைக்கு வர மறுக்கிறார்கள். அவர்களுக்கு கவர்ச்சிகரமான அளவில் சம்பளத்தை உயர்த்தி அரசுப் பணிக்கு வரும்படி ஏற்பாடுகள் செய்துஇருக்கிறோம்.

தமிழக டாக்டர்கள்:

என்றாலும் தொடர்ந்து மருத்துவர்கள் குறைவாக இருப்பதால் தமிழகம், ஆந்திரம், மராட்டியம் மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு வேலைக்கு வர விரும்பும் உயர் படிப்பு படித்த டாக்டர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை கர்நாடகத்துக்கு அழைத்து வர எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.

பெங்களூர் மருத்துவக் கல்லூரியை அகில இந்திய மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்துக்கு இணையாக மாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அப்படி மாற்றப்படும்போது இங்கு மேல்படிப்பு படித்து வரும் டாக்டர்கள் அதிக அளவு கிடைப்பார்கள். அப்போது இந்தப் பற்றாக்குறை தீரும், என்றார்.

மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் பேசி, மருத்துவர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Friday, August 1, 2008

சேது"என்பது இருந்ததே கிடையாது!

சேது"என்பது இருந்ததே கிடையாது!

தொல்லியல், புவியியல் அறிஞர்களின் தெளிவான கருத்து இது!
அரசு இதன் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் கூறியுள்ளது

"டைம்ஸ் ஆப் இந்தியா"வின் படப்பிடிப்பு

புதுடில்லி, ஜூலை 29- "ராம சேது" என ஒன்று இருந்ததே கிடை யாது என்று அரசு கூறியதற்கு அடிப்படையான ஆதாரமே புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள், பூகோளவியல் அறிஞர்களின் கருத்துக் குறிப் புகள்தான்; இவ்வகை ஆய்வா ளர்களில் ஆர்.எஸ்.எஸ்.கார ரான பி.பி. லால் என்பவரும் அடக்கம். ராமசேனை பாலம் கட்டியது என்பதை மறுத்து இவர் அசைக்க முடியாத ஆதாரங்களைத் தந்துள்ளார்.

(இந்திய அரசின்) பண் பாட்டு அமைச்சகம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கூறி, இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தை (ICHR) அணுகி அதன் கருத்துகளைப் பெறு மாறு கேட்டுக்கொண்டது. இந்திய வரலாற்று ஆய்வு மய்யம் தொல்லியலாளர்களாகிய எச்.டி.சங்காலியா, பி.பி. லால், எச்.பார்க்கர், பூகோளவியலாளர் ஓ.எச்.கே. ஸ்பேட் மற்றும் 1909 ஆம் ஆண்டைய இந்திய அரசு கெஜட்டீர் ஆகியவற்றை மேற்கோள் காண்பித்து பாலம் என்பது கற்பனைப் புனைவு என்றும் அதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடை யாது என்றும் தெரிவித்தது.

சங்காலியாவின் ஆராய்ச்சி நூலான வரலாற்றுப் பார்வை யில் ராமாயணம் எனும் நூல் ராமன் தன் அம்புகளால் கட லைப் பணிய வைக்கத் தன் அக்னி அஸ்திர அம்புகளை விட்டது, மனித உருவில் கடல் ராமன் முன்பு தோன்றியது, பாலம் கட்ட உதவி செய்வேன் என உறுதி கூறியது போன்ற வற்றை விளக்குகிறது. பின்னர், வானரங்கள் எல்லா வகை யான மரங்களைக் கொண்டும் (சால், அசுவாபரணா, குடாஜூ, அர்ஜூனா, தடா, ரிலோகா, திமிடா, வில்வகா, சடாபரணா, கார்னிகாரா, சூடா அசோகா முதலியவை) கடலைத் தூர்த் தன. அதன்பின், பெரிய பாறைக் கற்கள் கடலில் போடப்பட்டன. இப்படியாக பெரிய பாலம் ஒன்று (மகா சேது) பத்து யோஜனை அக லம், நூறு யோஜனை நீளத்தில் நளனால் கட்டப் பட்டது என்றும் அந்நூலில் உள்ளது.

மணல்மேடுதான்

இவற்றை ஆதாரமாகக் கொண்டு - நிலவியல் எப்படி இருக்கிறது என்பதையும் சங் காலியா கூறுகிறார்: ராமேசு வரத்தில் தேரி எனப்படும் மணல்மேடுகளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை; இவையும் மூன்று வகையாக இருக்கின் றன - செம்பு போன்ற சிகப்பு, பழுப்பு மற்றும் வெண்மை அல்லது சாம்பல் நிறம் - முதல் வகை மிகப் பழைமையானது. அந்தப் பகுதி எப்படி அந்தக் காலத்தில் இருந்தது, அதாவது 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இருந்தது என்ப தைக் காண்பிக்கிறது. இன் றைக்கும் கூட, அந்தப் பகுதி யில், சில பனைமரங்களும் ஒன்றிரண்டு வேறு வகை மரங் களும் மட்டுமே இருக்கின்றன, வேறு எதுவுமே அங்கு முளைத்து வளர்வதில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். கல் அந்தப் பகுதியில் காணக் கிடைக்கவில்லை, பல மைல் கள் தூரம் உள்ளே போனால் தான் கல் இருக்கிறது. அங்கே யும்கூட, பாறைக் குன்றுகளை உடைத்துத்தான் கல் பாளங்களைக் கொண்டு வர முடியும் எனவும் எழுதுகிறார்.

பாலத்தின் நீளம் (100 யோஜனா) அகலம் (10 யோஜனா) பற்றி இதிகாசத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும், அந்த இடத்தைப் பார்க்கும் எவரும், அந்த இரண்டு முனை களுக்கிடையே உள்ள தூரத்தை அறிந்த எவரும், உலகில் எந்த இடத்திலும் இல் லாத வகையில் மரத்துண்டு களையும் கல்பாளங்க ளையும் வைத்துக் கட்டப்பட்ட பாலம் இதுவாகத்தான் இருக்க முடி யும் என்று எளிதாகச் சொல்லி விடுவார்கள்(!). உண்மையைச் சொன்னால், இது முழுக்க முழுக்கக் கற்பனையில் புனையப்பட்ட மிகப் பெரிய அற்புதம் என்றும் அது போலவே இலங்கையைப் பற்றியும் கருத வேண்டும்.

லால்கூறும் கருத்து

லால் தெளிவாகத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்: தெற்கு ஆசியாவின் ஆகப் பழைய நாகரிகம் எனும் நூலில் (இலங்கையின்) வட முனையான யாழ்ப்பாணம் (இந்திய) எல்லைப் பகுதியிலி ருந்து 30 கி.மீ. தூரமே உள்ளது. இதனிடையில் உள்ள கடல் பகுதி ஆழம் அற்றது, இமய மலைப் பகுதியில் கடல் நீர் பனிக்கட்டியாக உறைந்து இருந்த காலத்திலும் கூட, நிலப் பகுதியுடன் இலங்கை இணைந்திருக்கும் வகையில் சில நிலப் பகுதிகள் தோன்றியிருக்கலாம் என்று எழுதியுள்ளார்.

கவிஞனின் கற்பனை தான் பாலம் என எழுதிப் பாலம் கட்டிய கதையைப் புறம் தள் ளிய பார்க்கர், மிகச் சிறிய அஸ்திவாரத்தின் மேல் தெற்கத்திய இனத்தாரிடம் இந்து மதம் அல்லது ஆரிய கலாச் சாரத்தைப் பரப்பிவிடுவது இலங்கையைப் பொறுத்த மட்டில் அழிந்துபட்டது; எப்படி என்றால், தீவின் பூர்வக் குடிகளின் வழி வந்தவர்கள் - உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்த வேத்தர்கள் எப்போதுமே இந்துக் கடவுள்களைக் கும்பிட வில்லை. வரலாறு அறிந்தவரை ஆரிய கலாச்சாரத்தைப் பின் பற்றவில்லை என்று எழுதுகிறார்.

"ஆதாம் பாலம் என்பது பவழப் பூச்சித் தொகுப்புகள் கடல் மட்டம் உயர்ந்ததால் கொல்லப்பட்டுப் பவழப் பாறைகளாகிவிட்டவை" என்றுதான் ஸ்பேட் கூறியுள்ளார்.

------------------------- நன்றி: "டைம்ஸ் ஆஃப் இந்தியா", 29.7.2008
Posted by தமிழ் ஓவியா at 19:14