Thursday, April 18, 2013

கோட்டுக்கறி குழம்பு


தேவையான பொருட்கள்:

துவரரிசி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம் (குழம்பில் போட)
பச்சைமிளகாய் - 10 மிளகாய்
பீன்ஸ் - 10 எண்ணிக்கை
உருளைகிழங்கு - 2 கிழங்கு
காரட் - 1
வாழைக்காய் - 1
மரவள்ளிகிழங்கு - 1/2 கிழங்கு
கரனகிழங்கு - 1 கிழங்கு
பரங்கிக்காய் - 1/2 கீற்று
சீரகம் - 50 சீரகம்
பச்சரிசி - 50 கிராம்
மஞ்சள் - 1/2 வில்லு
புளி - 2 எண்ணிக்கை
தக்காளி - 2 எண்ணிக்கை
பெருங்காயம் - 5 கிராம்
கடலைஎண்ணெய் - 50 மில்லி (தேவைகேற்ப)
கடுகு - 1 தேக்கரண்டி
பட்டமிளகாய் - 4 எண்ணிக்கை
கருவேப்பில்லை - 1 கொத்து
மல்லி தழை - 1 கொத்து
சின்ன வெங்கயாம் - 5 எண்ணிக்கை (தாளிப்பதற்கு)

சமைக்கும் முறை:
  1. பச்சரிசி, மஞ்சள், சீரகம் மூன்றையும் நன்றாக வறுத்து அம்மியில் வைத்து பொடியாக அடித்து கொள்ளவும்.
  2. துவரரிசியை வேக வைக்கவும்.
  3. வெந்தவுடன் பச்சைமிளகாய், வெங்காயம் நறுக்கி அதனுடன் வேக வைக்கவும்.
  4. வெந்த பின் காரட், பீன்ஸ், வாழைக்காய், மரவள்ளிகிழங்கு, கரனைகிழங்கு, பரங்கிக்காய், உருளைகிழங்கு ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும்.
  5. இதனுடன் புளியை கரைக்கவும்.
  6. செய்முறையில் முறை 1 இல் உள்ள பொடியை சேர்க்கவும்.
  7. நன்றாக கிளறி குழம்பை கொதிக்க விடவும்
  8. வேறொரு சட்டியில் இதமான சூட்டுடன் எண்ணையை ஊற்றி கடுவுனை சேர்த்து கடுகு வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
  9. கடுகு வெடித்த பிறகு பட்டமிளகாய், வெங்காயம் மற்றும் பெருங்காயபொடி இவற்றை சேர்த்து வதக்கவும்.
  10. வதக்கியபிறகு கருவேப்பில்லை, மல்லி கொத்தை போடவும்.
  11. தாளித்த இவைகளை முன்பு கொதிக்க விட்ட குழம்பில் சேர்க்கவும்.
  12. சுவையான காசாங்காடு கிராம தை பொங்கல் கோட்டுகறி குழம்பு தயார்.

தாவரங்கள் மூலிகைகள் மரங்கள்

 கிராமத்தில் விளையும் மூலிகைகளும் /  தாவரங்களும் / மரங்களும் மற்றும் அதன் தாவரவியல் பெயர்களும்.

நம் ஊரில் விளைய கூடிய செடிகள் / மூலிகைகள் / மரங்கள் விடுபட்டிருப்பின் இணைய குழுவின் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தோட்டகலை பற்றி வேளாண் பல்கலைகழக இணைய தளம் - http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

இந்த மூலிகைகள் நாட்டு (பாட்டி) வைத்திய முறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். 


அரசமரம் Ficus religiosa 
அரளிப்பூ Nerium oleander 
அருகம்பில்லு Cynodon dactylon 
ஆரஞ்சு மரம் Orange (Citrus Sinensis) 
ஆலமரம் Ficus benghalensis Linn (Banyan)  
உளுந்து (உளுத்தம் பருப்பு) Vigna mungo (Black Gram)  
எலுமிச்சை Citrus limon (Lemon) 
எள் Sesamum indicum 
கத்திரிக்காய் Solanum melongena 
கரும்பு Saccharum officinarum 
கறிவேப்பிலை Murraya koenigii (Curry Leaves) 
காட்டாமணக்கு (புங்கை மரம்) Millettia pinnata 
கிளுவை Commiphora beryii 
கொய்யா Psidium guajava 
கோவக்காய் Tindora 
சந்தனம் Santalum paniculatum (SandalWood) 
சப்பாத்தி கள்ளி PRICKLY PEAR cactus 
சப்போட்டா மரம் Manilkara zapota 
சவுக்கு Casuarina 
செம்பருத்தி Hibiscus rosa-sinensis 
துளசி Ocimum sanctum (Tulsi) 
தூதுவாழை Solanum trilobatum  
தேக்கு Tectona grandis (Teakwood) 
தேங்காய் Coconut 
நார்த்தங்காய் Citrus medica (Citron) 
நீலகிரி(அ) கற்பூரத்தைலமரம் Eucalyptus 
நெல் / அரிசி Oryza sativa (Rice) 
பப்பாளி Carica papaya 
பனை Arecaceae 
பாவைக்காய் Bitter Gourd (Momordica charantia) 
பிலா Artocarpus heterophyllus (Jackfruit)  
புளி Tamarindus indica (Tamirind)  
மணத்தக்காளி Solanum nigrum 
மிளகாய் Chili pepper 
முசுமுசுக்கை Mukia Maderas Patana 
முருங்கை Moringa oleifera 
முளைக்கீரை Amaranth Leaves  
மூங்கில் Bamboo 
ரோஜா Rose 
வெண்டைக்காய் Abelmoschus esculentus 
வேம்பு Azadirachta indica 

காசன்காடு கிராம கோழி குழம்பு


நபர்கள்: 4
சமைக்கும் நேரம்: 30 நிமிடம்

தேவையான பொருட்கள்:
  1. கோழி இறைச்சி - 1/2 கிலோ
  2. தக்காளி - 1 எண்ணிக்கை
  3. வெங்கயாம் நறுக்கியது - 1/2 கப்
  4. இஞ்சி - 1/2 விரல் நீளம் ( 1" Inch)
  5. பூண்டு - 4 பள்ளு
  6. மஞ்சள்  பொடி - 1/4 தேக்கரண்டி
  7. மல்லி பொடி - 3 மேசை கரண்டி
  8. மிளகாய் தூள் - 1/2 மேசை கரண்டி அல்லது தேவைகேற்றவாறு
  9. சோம்பு - 1 மேசை கரண்டி
  10. சீரகம் - 1/2 மேசை கரண்டி
  11. மிளகு - 2 மேசை கரண்டி
  12. கொத்தமல்லி தலை -  2 தலைகள் -  தேவைகேற்றவாறு
  13. துருவிய தேங்காய் - 1/4 கப்
  14. உப்பு - தேவைகேற்றவாறு
தாளிக்க:
  1. எண்ணெய் - 1 மேசை கரண்டி
  2. சோம்பு - 1 தேக்கரண்டி
  3. கருவேப்பில்லை இலை - 10 இலைகள்
சமைக்கும்  முறை:

  1. சோம்பு, சீரகம், மிளகு போன்றவற்றை (மிளகு வெடிக்கும் வரை) வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
  2. தேங்காய், மல்லிபொடி, மிளகாய்பொடி, மேலே அரைத்த பொடி, சிறிய வெங்கயாம் (1) சேர்த்து நேவாக அரைத்து கொள்ளவும்.
  3. இஞ்சி, பூண்டு துவையலாகும் வரை அரைத்து கொள்ளவும்.
  4. குழம்பு வைக்கும் பத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் வைக்கவும்.
  5. எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
  6. அதனுடன் கோழி, இஞ்சி பூண்டு துவையல்,  மஞ்சத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறிவிடவும்.
  7. 10 - 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  8. கறி நன்றாக வெந்தவுடன் (Step 2) அரைத்த மசாலாவை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. 5 - 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  10. வாணலியில் எண்ணையை ஊற்றி மிதமான சூடு செய்யவும்.
  11. எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு, கருவேப்பில்லை இலை சேர்த்து முன்பு கொதித்த குழம்பில் ஊற்றவும்.
  12. நன்றாக குழம்பை கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  13. சுவையான காசாங்காடு கிராம கோழி குழம்பு தயார்.