Sunday, March 25, 2012

Bangalore Sambhar Recipe

Bangalore Sambhar Recipe
1/2 cup toor dal
1/4 teaspoon turmeric powder
1 cup peeled and cubed Idaho potato
1 cup frozen Fordhook (large size) lima beans
1/4 cup coconut, fresh or powdered
5 dried red chili peppers
2 garlic cloves
1 teaspoon cumin
1 teaspoon salt (more, if desired)
1/4 cup tomato sauce
1/4 cup chopped fresh coriander
1 tablespoon corn oil
1/4 teaspoon asafoetida powder
1 teaspoon black mustard seeds
1 teaspoon urad dal

Boil 4 cups of water in a tall saucepan over medium heat. Add toor dal and turmeric powder. Reduce heat to medium and cook, uncovered, for about 30 minutes until dal becomes creamy. If water evaporates during the cooking process, add another cup of water and cook until dal becomes creamy.

When dal is cooked, place creamy dal in a saucepan and add potatoes and lima beans with 2 cups of water to cover the vegetables.

Cook over medium heat until vegetables are tender, about 10 minutes. Place coconut, 4 red chili peppers, garlic, and cumin in blender. Add about 1/2 cup of warm water to facilitate the grinding. Grind until smooth.

Pour contents of blender into saucepan. Add salt and tomato sauce. Stir well. Add coriander and continue to simmer, covered, until potatoes are tender.

Place corn oil in a small skillet and heat oil over medium heat. When oil is hot, but not smoking, add asafoetida, curry leaves, remaining I red chili pepper, mustard seeds, and urad dal. Fry until mustard seeds pop and urad dal is golden brown. Pour fried mustard seeds and urad dal into sambhar. Stir and let it simmer for a few minutes. If sambhar seems too thick, add 1/2 to 1 cup of warm water as desired and stir. Let it simmer for anther minutes or two.

Andhra Country Chicken Curry

Andhra Country Chicken Curry
Serves 4 to 6

2 lbs skinless bone-in chicken thighs
½ cup plain non-fat yogurt, at room temperature
½ tsp cornstarch
2 tbsp oil
2 cups finely chopped onions
6 whole cloves
4 green cardamom pods, cracked open
1 tbsp minced peeled gingerroot
1 tbsp minced garlic
2 tsp coriander powder
1 tsp cayenne pepper
1 tsp salt or to taste
1 ½ tsp Andhra garam masala
3 tbsp cilantro, chopped


Rinse chicken and pat dry thoroughly. In a bowl, stir together yogurt and cornstarch to a creamy consistency. Set aside

In a saucepan, heat oil over medium heat. Add onions, cloves and cardamom and sauté for 2 minutes. Add chicken and mix well. Saute until chicken is browned on both sides, 6 to 8 minutes.

Add coriander and cayenne and sauté for 2 minutes. Add 1½ cups (375mL) water. Add yogurt and salt. Cover and bring to a boil. Reduce heat to low. Cook, stirring occasionally until chicken is no longer pink inside and gravy is thickened, 20 to 25 minutes. Sprinkle garam masala over top. Garnish with cilantro. Serve over steamed rice.

Chettinad Chicken Kulambu

Chettinad Chicken Kulambu

3 tablespoons corn or canola oil

2 to 3 small pieces cinnamon stick

1 bay leaf, crumbled

¼ teaspoon fennel seeds

½ teaspoon whole cumin seeds

½ teaspoon urad dal

½ cup chopped onion

¼ cup chopped tomato

3 cloves garlic, quartered

1 tablespoon minced fresh ginger

¼ teaspoon turmeric powder

2 pounds (boneless, skinless) chicken breasts or thighs

2 teaspoons curry powder

1 teaspoon cayenne powder

1 teaspoon vindaloo curry paste (more, if desired)

1 cup tomato sauce

½ teaspoon black pepper and cumin powder

1 teaspoon salt

¼ cup chopped fresh coriander

Heat oil in a wide saucepan over medium heat. When oil is hot, but not smoking, add cinnamon stick, bay leaf, fennel seeds, cumin, and urad dal. Fry until dal turns golden. Add onion, tomato, garlic, and ginger and sauté for a few minutes. Add turmeric powder

Cut chicken into small (stew-size pieces). Add chicken pieces to saucepan and continue to sauté for several minutes until chicken turns opaque.

Add curry powder, cayenne powder, vinadloo curry paste, and tomato sauce with approximately 2 cups of water. Stir in back pepper and cumin powder. Add salt and continue cooking over medium-low heat for several minutes.

Add coriander. Reduce heat to low. Cook, covered, stirring often until chicken is tender (approximately 20 minutes). If the sauce becomes too thick, you may add an additional small amount of both water and tomato sauce as desired.

 

Tuesday, March 20, 2012

அமராவதி அணை... சப்தமில்லாமல் தமிழர்களிடம் விளையாடும் கேரள அரசு...! ஒரு அலசல்...! ~ .

அமராவதி மிக அழகான பெயர் ! அம்பிகாபதியோட அமராவதி இல்லைங்க நம்ம உடுமலை பேட்டை இருக்குதா அங்க இருக்கிற அழகான ஒரு அணைதான் அமராவதி. மறுபடியும் அணையா ?! ஒரு அணை பிரச்சனைக்கே இன்னும் விடை தெரியல...இதுல இன்னொரு அணைக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பதறது புரியுது...புது பிரச்சனை இல்ல ரொம்ப நாளாவே போயிட்டு இருக்கிற ஒண்ணுதான். இன்னும் ஒரு தீர்வும் எட்டபடாமல் இழுத்துட்டே போகுது. தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானாம், யாருக்கு புரியுதோ இல்லையோ மத்த மாநிலக்காரங்க நம்மள நல்லா எடை போட்டு வச்சிட்டாங்க. கர்நாடகத்துகிட்ட காவிர கொடுன்னு கெஞ்சி, கேரளாக்கிட்ட அணையை ஒடச்சிடாதனு போராடி, ஆந்திராக்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுன்னு கை ஏந்தி இன்னும் எத்தனை காலந்தான் நாம இப்படியே இருக்க போறோமோ தெரியல !

அப்படி என்ன பிரச்சனை?!

44 டி எம் சி அளவு தண்ணீரை தேக்கி வச்சிருக்கிற அமராவதி அணைக்கும் ஆபத்து வந்து நாளாகிவிட்டது . திருப்பூர், கரூர் மக்களின் உயிர் நாடியாகவும் 70,000 ஏக்கர் விளைநிலங்களை காப்பாத்துகிற இந்த அணைக்கு தண்ணீர் பாம்பாற்றில் இருந்து வருது. இந்த பாம்பாற்றின் குறுக்கே மறையூர் அருகே கோவில்கடவு பகுதியில் புதிய அணை கட்டணும் என்று கேரளா அரசு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டசபைல தீர்மானத்தை நிறைவேற்றி வேலையை வேற தொடங்கிட்டதாக சொல்றாங்க ?! (இரண்டு வருடமாக போயிட்டு இருக்கு இந்த விவகாரம் !!)

கேரளாவுக்கு அங்கே சொந்தமான வயல்வெளிகளும் இல்லை வெறும் காடுதான் ! பின் வேறு என்ன தேவைக்காக இருக்கும் என்று பார்த்தால் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க...தண்ணியில இருந்து மின்சாரம் தயாரிக்க போறதா ஒரு பேச்சும், தண்ணீரை பாட்டில பிடிச்சி விக்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு தாரை வார்த்துகிறதுக்காகவும் அணைகட்ட போறாங்கனு சொல்றாங்க.

அடடா அமராவதி!

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, சின்னாறு, காட்டாறு , பாம்பாறு போன்ற ஆறுகளின் நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டதுதான் அமராவதி அணை. இதில் அதிகபடியான நீரைத் தருவது, எக்காலத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாம்பாறு தான். இதன் உதவியால் தான் அமராவதி அணை நிறைகிறது.

170 கி.மி நீளம் கொண்ட இந்த ஆறு ஆனைமுடி சிகரங்களில் உற்பத்தியாகிறது. இரண்டு சிகரங்களுக்கிடையே வெள்ளியை உருக்கி விட்டது போல ஓடிவரும்அழகே அழகு !

ஆனைமுடி சிகரத்தில் இருந்து அமராவதி வரை இருக்கக்கூடிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள் என்ற பட்டியலில் இருக்கிறது. சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் , இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை வேறு அமைந்திருக்கின்றன. இங்கே எது செய்வதாக இருந்தாலும் மத்தியச்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இவையெல்லாம் தெரிந்தும் என்ன தைரியத்தில் சட்டமன்றத்தில் அணைகட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்களோ தெரியவில்லை ?! (ஒருவேளை மத்தியில் பெரும்பாலோர் கேரளாக்காரர்கள் தானே சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானோ ?!)

110 ஏக்கர் பரப்பளவில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது...நான்கு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்டுகளை வைத்து நீரேற்று விவசாயம் செய்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள் ! இந்த அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் கொஞ்சமும் இரக்கமின்றி அடிக்க பார்க்கிறது கேரளா. விவசாயத்திற்கு எவையெல்லாம் பாதிப்பை கொடுக்கிறது என பகுத்தறிந்து அதனை களைந்து விட்டாலே விவசாயத் தொழில் நிமிர்ந்து விடும்.

70,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கபடுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் குடிநீர் இன்றி தவிக்கும். வனவிலங்குகளும் குடிநீரின்றி அவதியுற நேரும். அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்படலாம்.

நம்ம தலைஎழுத்து நம் மாநிலம் வழியா போனாலும் அள்ளி குடிக்க வகையற்று போய் கொண்டிருக்கிறோம். மேற்கே இருந்து உற்பத்தியாகி கிழக்கு கடலில் கலக்கும் அனைத்து நதிகளும் நமக்கு வேண்டாதவையாக பிறரால் எடுத்துக் கொள்ளபடுகிறது. காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!

நெய்யாறு அணை ?!!

எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.

சேமிக்கப்படும் நீரில் 60 % கேரளாவில் இருந்தும், 40 % குமரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது. தண்ணீரில் பாதி அளவாவது குமரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டமே நெய்யாறு கால்வாய் திட்டம் . ஒன்பது வருவாய் கிராமங்கள், 9 ஆயிரத்து 204 ஏக்கர் நிலங்களும் 162 குளங்களும் பாசனம் பெற்றன.

ஆரம்பத்தில் நிர்ணயித்த படி இந்த கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியது.ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு முற்றிலும் நிறுத்த பட்டது...!!?

என்ன ஒரு முரண்பாடு ?!

மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திராவை அடைந்து கடலில் கலக்கும் கிருஷ்ணா நதியின் நடுவே ஆல்மாட்டி என்ற இடத்தில் 173 கொள்ளளவு கொண்ட அணையை கட்டியது கர்நாடகா...உடனே வீறு கொண்டு எழுந்த ஆந்திரா உச்சநீதிமன்றம் சென்று 123 தி.எம்.சி தண்ணீரை தான் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுவிட்டது. இதுவரை அந்த அளவைத்தாண்டி தேக்குவதில்லை கர்நாடகா. இதே கர்நாடகா தமிழ்நாட்டுகிட்ட என்ன ஆட்டம் காட்டுது ?!!!

2007 இல் காவேரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பின் படி அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே 5 டி.எம்.சி மட்டும் பயன்படுத்தி வந்த கேரளாவிற்கு 30 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்க வேண்டுமாம்...!!!? இதை எதிர்த்து இதுவரை நம் அரசு எதுவும்(?) நடுவர் மன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்தவில்லை என தெரிகிறது. அந்த தீர்ப்பை வைத்து கொண்டு கேரளா அணைகட்ட போறேன், தண்ணி தரமாட்டோம்னு சொல்லிக்கொண்டு இருக்கிறது...!!!?

உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் கொடிப்பிடிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளும், தேவையற்ற ஈகோ போராட்டங்கள், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய துணியும் அரசியல்வாதிகள், வறட்டு ஜம்பங்கள், காட்டுக் கூச்சல்கள், கேட்டு கேட்டு புளித்துப் போன வாக்குறுதிகள், வீணான ஆர்ப்பாட்டங்கள் விதியே என்று சகித்து போய் கொண்டிருக்கும் மக்கள் !!! இத்தனையில் ஒன்று கூட மாற சாத்தியமில்லையா?!

முல்லைபெரியாறு அணை பிரச்சனை என்னவாயிற்று என்று தெரியவில்லை...?! ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்...என்று அரசு இதை எல்லாம் கவனித்து, நடவடிக்கை எடுத்து நல்லதொரு முடிவை எட்ட போகிறதோ ?!

சேர ,சோழ , பாண்டிய , பல்லவ மன்னர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் 39,000 ஏரிகளை வெட்டினார்களாம். அந்த ஏரிகளின் மேல் தான் இன்று அரசு அலுவலகங்க கட்டடங்களும் , புதிய பேருந்து நிலையங்களும் இருக்கிறது. மிச்ச ஏரிகளில் கருவேலமரங்களையும், தைல மரங்களையும் அரசே வளர்க்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சபட்டு வறண்டு போய்விட்டன.மரங்களை வளர்க்க வேறு இடமா இல்லை. ஏரி,குளங்களில் உள்ள மணலை சுரண்டுவது ஒருபக்கம் அமோகமாக நடைபெறுகிறது. தூர்வாருகிறேன் என்று சொல்லி கொள்ளும் நூறுநாள் வேலை தொழிலாளர்கள் உறங்கி கழிக்கிறார்கள் மரத்தடியில்...!

இவர்கள் தூர் வாரி முடிப்பதற்குள் மழை வந்து, நின்றும் போய்விடும்.வழக்கம் போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடும்.உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்தால், இயந்திரங்களின் உதவி கொண்டு வேகமாக முடிக்கலாம். மக்களின் வாழ்வாதார விசயத்தில் தூங்கி வழிகிறது அரசு இயந்திரம் !!

நதிகள் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

2002 இல் பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களுக்கு திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் இரண்டு திட்டங்கள் போடப்பட்டன. ஒன்று தீபகற்ப நதிகள் இணைப்பு, மகாநதி, கோதாவரி நதிகளில் வெள்ளம் வந்து வீணாகும் தண்ணீரை கிருஷ்ணா, வைகை, காவேரி உள்ளிட்ட 16 நதிகளுக்கு திருப்பி விடுவது. 2 வது திட்டம் வட இந்தியாவில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுத்து நீர்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது.

அருமையான இந்த திட்டங்கள் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் "நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேறவேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது !!

மத்திய அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ ?!!

நதிகள் இணைப்பு என்பது நிறைவேறுதோ இல்லையோ அதற்கு முன் இங்கே தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளின் இரு மருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள், அதில் கலக்கும் கழிவு நீர், நடக்கும் மணல் கொள்ளை போன்றவற்றில் கவனம் செலுத்தபடவேண்டும். ஏரி,குளம், குட்டைகளை தூர்வாருவதும்,புதிதாக குளங்களை வெட்டுவதும் அவசியம். அப்போதுதான் பூமியில் விழும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் சேகரிக்கப்படும்.மேலும் நமது அணைகளின் மீதுள்ள பிரச்சனைகளை அரசாங்கம் முயன்றால் முழுமையாக சரிசெய்ய இயலும். நாட்டின் தற்போதைய இன்றியமையாத முக்கிய பிரச்சனை இவையே...! கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள் ?!

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!!

சிக்கன் லாலி பாப்

சிக்கன் லாலி பாப் - 10 துண்டு
உப்பு தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு மேசைகரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
ஓமம் பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சிறிது
எலுமிச்சை - 1/2 + 1/2
தயிர் - ஒரு மேசைகரண்டி

அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு மேசை கரண்டி
கார்ன் மாவு - ஒரு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி

எண்ணை + பட்டர் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் லாலிபாப்பை நன்கு 6 முறை கழுவி ஆங்காங்கே கிறி விட்டு அரை பழம் லெமன் பிழிந்து ஊற வைக்கவும்.1 0 நிமிடம் கழித்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

சிக்கன் ஆயில் தவிர அனைத்து மசாலா, பவுடர் வகைகளை நன்கு பேஸ்ட் போல் குழைத்து சிக்கனில் பிறட்டி ஆலிவ் ஆயிலும் சேர்த்து விறவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
எண்ணை + பட்டரை சூடு படுத்தி வானலியில் கொள்ளும் அளவு முன்று துண்டுகளாக போட்டு டீப் பிரை செய்யவும்.

சுவையான மருத்துவ குணமுள்ள ஓமம் லாலிபாப் ரெடி.






Monday, March 19, 2012

Badam kheer

Any dish made using almonds is unfailingly rich, quite befitting royalty! keep the spices such as cardamom to a minimum in this recipe, so as to highlight the creamy, soothing texture and flavour of almonds. Authentic ‘badam kheer’ made the south indian way omits cardamoms and nutmeg and uses a pinch of raw camphor and saffron (both added after the kheer is removed from the fire) instead. But if you do not find raw camphor, fret not; just go ahead with this recipe as it is!
Add your private note

Soaking Time: 2 Hours
Preparation Time: 10 mins
Cooking Time: 30 mins
Makes 6 servings
Show me for servings

Ingredients
3/4 cup almonds (badam)
5 cups (1 litre) milk
1/2 cup sugar
1/2 tsp cardamom (elaichi) powder (optional)
1 tsp nutmeg (jaiphal) powder (optional)
1 tsp saffron (kesar) strands

Method

Soak the almonds in hot water for 2 hours. Drain, remove the skin and blend in a mixer to a fine paste. Keep aside.
Boil the milk in a heavy-bottomed vessel till it is reduced to ¾ of its quantity, while stirring continuously.
Add the almond paste, sugar, cardamom powder, nutmeg powder and saffron, mix well and simmer for 5 minutes, while stirring continuously. Keep aside.
When it cools completely, refrigerate at least for 2 hours.
Serve chilled.

Subz Biryani

Subz Biryani is a tempting vegetable or subz Biryani recipe with assorted vegetables chopped and stir fried with cooked rice, whole spices and relished garnished with coriander leaves and roasted cashews.
Add your private note

Preparation Time: 10min
Cooking Time: 25min

Ingredients


FOR PASTE:-
6 to 7 flakes of garlic (lehsun)
1 " piece of ginger (adrak)
1 tbsp aniseeds (vilayati saunf)
1 tbsp cumin seeds (jeera)
3 whole dry kashmiri red chillies
1 tbsp coriander (dhania) powder
1 stick of cinnamon (dalchini)
3 to 4 cloves (laung / lavang)
3 to 4 peppercorns
2 black cardamoms (badi elaichi)

OTHER INGREDIENTS:-
2 cups long grained rice (basmati) (soaked for one hour)
1 to 2 carrots, sliced
1 small sized cauliflower, chopped into florets
8 to 10 french beans, chopped into 1" diagonally
2 potatoes, chopped
2 onions, finely sliced
1/2 cup oil
3 tbsp salt
1 tbsp lemon juice
1 bayleaf (tejpatta)

Method

Soak rice for 1 hour
Grind the ingrediants of the paste together with a lil water.
Heat oil in a heavy bottomed pan.add onions,cook till golden brown.
Add the vegetables and stir fry for 3-4 minutes
Add the paste and bay leaf
Measure 4 cups of water and add to the vegetables.
Add salt and lemon juice.
When water boils,drain the soaked rice and add to the water.
Put a tawa under the pan of rice to reduce the heat further.
Cover the pan of rice with a small towel napkin and then with a well fitting lead.keep some heavy weight,on lead.
Slow down the fire and cook till the rice is done(10-15 min).
Serve after 10 minutes.

Sunday, March 11, 2012

முலாயம் சிங்கால் முடிந்தது கருணாநிதியால் முடியாமல் போனது ஏன்?

இன்றைய தினம், இந்தியாவில் தொலைக்காட்சி பார்க்கும் அனைத்து நடுத்தர வர்க்கத்தினரும் உச்சரிக்கும் பெயர், 38 வயது அகிலேஷ். யார் இவர்? எப்படி ஒவ்வொரு வீட்டிலும் குடும்பப் பெயர் போல் ஆகிவிட்டார்?

சுதந்திர இந்தியாவில் முப்பத்தோரு வயதில் ஒரு மாநில முதல்வராக பதவியேற்று சாதனை படைத்தவர் அஸ்ஸாம் கண பரிஷத் தலைவர் பிரஃபுல்ல குமார் மஹந்தா. 1985 ல் அவர் அஸ்ஸாம் முதல்வராக பதவியேற்ற போது நாடெங்கும் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக, இளைய சமுதாயத்திற்கு முன் மாதிரியாக விளங்கினார். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் அவரது புகழ் காலப்போக்கில் நீர்த்துப் போனது வேறு விஷயம்.

2012 ஆம் ஆண்டில் இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல், மார்ச் 15ம் தேதி உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்க போகும் அகிலேஷ் யாதவ்தான். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற முழக்கத்துடன், கடந்த சில வருடங்களாக காங்கிரஸ் இளைஞர் அமைப்பை வலுப்படுத்த நாடெங்கும் சுற்றி வரும் ராகுல் காந்தியை ஒரே ஒரு தேர்தல் மூலம் முந்திவிட்டார் அகிலேஷ்.

எப்படி முதல்வரானார்?

1989 ல் உத்தரபிரதேச மாநில முதல்வராக முலயாம் சிங் ஆட்சிக்கு வந்த போதே, தமிழகம் போல், உ.பி.யிலும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் ஆரம்பித்து விட்டது. இடையில் சில காலம் பாஜக ஆட்சியில் இருந்தாலும் மாநிலக் கட்சிகளான சமாஜ்வாடியும், பகுகுண் சமாஜும் இல்லாமல் அங்கே யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைதான்.

மூன்று முறை முதல்வராக இருந்த முலயாம் சிங்தான் இந்த தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அனைவரும் அவர்தான் முதல்வர் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அகிலேஷ் முன்னிறுத்தப்பட்டார். காரணம் இந்த தேர்தலின் வெற்றி தன்னுடைய மகனின் தீவிர களப்பணியால்தான் என்பதில் உறுதியாக இருந்த முலாயம், அதற்கு பரிசாக முதல்வர் பதவியைத் தந்திருக்கிறார்!

மைசூரில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்று, ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பும் முடித்துள்ள அகிலேஷிடம் உத்தரபிரதேச மக்கள் அதிக எதிர்ப்பார்ப்புகளை வைத்துள்ளனர். ஐஐஎம் ல் பயிற்சி
பெற்ற மேலாண்மை வல்லுனரான அபிஷேக் மிஸ்ராவை முக்கிய துணையாக வைத்துக்கொண்டு, நவீன இந்தியாவின் வெற்றிகரமான முதல்வராக வருவாரா அல்லது மஹந்தா போல் கரைந்து விடுவாரா என்பது அடுத்த ஐந்தாண்டுகளில் தெரிந்து விடும்.

முலயாமும் கருணாநிதியும்…

வி.பி சிங் தலைமையிலான தேசிய முண்ணனியில் முக்கிய தலைவராக இருந்த கருணாநிதியுடன், முலயாம் சிங்கிற்கு 1989லிருந்தே நல்ல நட்பு இருந்து வருகிறது. முலயாம் உள்ளிட்ட சோசலிஸ்டுகள் மீது இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு அதிக பற்றுதல் உண்டு என்பது புதிய விஷயமல்ல.

முலயாம் சிங்கின் இன்றைய அதிரடி முடிவு அகில இந்தியாவையும், குறிப்பாக வாரிசுகளை களம் இறக்கியுள்ள அரசியல் பிரமுகர்களை திரும்பி பார்க்க வைத்து விட்டது. அதே நேரத்தில் குருவி தலையில் பனங்காயை சுமத்தி விட்டாரோ என்றும் குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன.

இந்த முடிவை அவர் செயல்படுத்திய விதம்தான் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களை அவர் கையாண்ட விதம், குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்திய நேர்த்தி, கிங் மேக்கர் காமராஜர் அன்று இந்திராவை பிரதமராக்கிய அரசியல் அனுபவத்திற்கு இணையாக பார்க்கப்படுகிறது.
அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் கருணாநிதி இந்த விஷயத்தில் ‘சோசலிஸ்டு நேத்தாஜி’ முலயாமிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதியின் தவறு

பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, தன் மகள் இந்திராவை காங்கிரஸ் கட்சிக்குள் அழைத்து வந்ததை யாரும் குற்றமாக கருதவில்லை. அதே இந்திரா, நேருவுக்கு பின் பாரத பிரதமராக வந்த போதும் யாரும் குடும்ப ஆட்சி என்று கோஷம் எழுப்பவில்லை. அவரது ஆட்சியில் இளைய மகன் சஞ்சய் காந்தி பொதுச் செயலாளராக இருந்த போதோ, அல்லது இந்திராவிற்கு பிறகு மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமர் ஆன போதோ யாரும் குடும்ப ஆட்சி என்று குறை கூறவில்லை. இன்று நான்காம் தலைமுறையாக ராகுல் காந்தி பொதுச்செயலாளராக உள்ள காங்கிரஸ் கட்சிதான் குடும்ப ஆட்சியின் உச்சக் கட்டம்.

ஆனால் இரண்டாம் தலைமுறையான ஸ்டாலின் மாணவப் பருவத்தில் அரசியலில் நுழைந்த காலத்திலிருந்தே ‘குடும்ப ஆட்சி’ என்ற பழியை சுமந்து வரும் கருணாநிதியின் நிலை பரிதாபத்திற்குரியதுதான்.

இந்திராகாந்தியின் அடக்குமுறை மிசா கொடுமையில் மாநில முதல்வரின் மகன் என்ற பாரபட்சம் இல்லாமல் சிறைக்கொடுமைகளை அனுபவித்த ஸ்டாலின் திமுகவில் ஒவ்வொரு பொறுப்பினை ஏற்கும் போதும் ‘குடும்ப ஆட்சி’ என்ற கோஷம், ஒரு சில சக்திகளால் தீண்டாமை குற்றம் போல் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனங்களுக்காகவே ஸ்டாலினின் அரசியல் பொறுப்புகள் ஆமை வேகத்தில்தான் நகர்ந்து வந்துள்ளது.

தமிழக அரசியலில், விமர்சனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் கருணாநிதி. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இந்த இருவருக்கு மட்டுமே உண்டு. மாபெரும் மக்கள் சக்தியாக விளங்கிய எம்ஜியார் விமர்சனங்களைக் கண்டுகொள்ள மாட்டார். இன்றைய முதல்வரோ தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எப்படி கையாள்வார் என்பது சாமானிய மக்களுக்கே நன்றாக தெரியும்!

இப்படி விமர்சனங்களுக்கு பயந்து, மகன் தானாக நிலை நிறுத்திக் கொள்ளட்டும் என்று, கருணாநிதி தடைபோட்டதன் விளைவு, மாணவர் பருவத்தில் கட்சி பணியாற்ற வந்து, 60 வயதில் திமுக இளைஞர் அணி பொறுப்பிலேயே இருக்கிறார் ஸ்டாலின்!

ஸ்டாலினும் அகிலேஷும்

ஸ்டாலினின் அனுபவத்தை ஒப்பிட்டால், அரசியலில் அகிலேஷ் ஒரு குழந்தை தான்..

மாணவர் திமுக என்று ஆரம்பித்து, மிசா, இளைஞர் அணி, சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், உள்ளாட்சி அமைச்சர், திமுக பொருளாளர் என நீண்ட அரசியல் அனுபவம் பெற்று பிறகும் துணை முதல்வர் அளவுக்கே உயர்ந்துள்ளார் ஸ்டாலின்.
இளைஞர் அணி, நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியின் மாநிலத் தலைவர் என்று பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்திற்கு முதல்வர் ஆகிவிட்டார் அகிலேஷ்.

மதிமுகவை ஆரம்பித்து இளைஞர்களின் எழுச்சியாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான திமுக நிர்வாகிகளை தனது கட்சிக்குள் வைகோ இழுத்துக் கொண்டிருந்த நெருக்கடியான காலத்தில், திமுக இளைஞர் அணிக்கு புத்துயிர் கொடுத்து திமுகவை பாதுகாத்தவர்களில் ஸ்டாலின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல தெற்கில் காணாமல் போகவிருந்த கட்சியை காப்பாற்றியவர் அழகிரிதான். மதிமுகவிலிருந்த மதுரை பொன் முத்துவை, அவரது கோஷ்டியோடு திமுகவுக்கு திரும்ப வைத்தது சாதாரண விஷயமா!

தொடர்ந்து வந்த 1996 இடைத்தேர்தலில் ரஜினியை இணைத்துக்கொண்டு, வைகோவின் எழுச்சிக்கு சாமர்த்தியமாக தடை போட்ட கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம், கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவிய ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க இடம்தரவில்லை. உள்ளத்தில் எண்ணம் இருந்தாலும் விமர்சனங்களுக்கு பயந்து கொண்டு முடிவெடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அன்று கருணாநிதி இருந்த அதே நிலைதான், முலயாம் சிங்குக்கும். ஆனால் அவர் தயங்கவில்லை. துணிந்து ஒரு முடிவெடுத்துவிட்டார். விமர்சனங்களுக்குப் பதில் பாராட்டுக்கள் குவிகின்றன!

1996லேயே ஸ்டாலினை குறைந்தபட்சம் துணை முதல்வராக ஆக்கியிருந்தால் இன்றைக்கு திமுகவில் ஸ்டாலினா அழகிரியா என்ற கேள்வியே எழுந்திருக்காது.

எந்த வாரிசும் இல்லாத எம்ஜியார், தனக்குப் பிறகு அதிமுக எப்படி இருக்க வேண்டும் என கடைசி வரை சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் திமுகவுடன் அதிமுகவை இணைந்து விடலாம் என்ற ஒரு முயற்சியும் ஒரிஸ்ஸா முதல்வர் பட்நாயக்கின் தலைமையில் அரங்கேறியது. இந்த முயற்சியின் சாட்சியாக பட்நாயக், கருணாநிதி, எம்ஜியார் மூவரும் இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் முக்கிய இடத்தை பெற்றன.

எம்ஜியாரின் கடைசி காலத்தில், ஜெயலலிதா ராஜீவ் காந்தியை சந்தித்து ஆட்சியை கைப்பற்ற முயன்றது உள்ளிட்ட விஷயங்கள் அவரை பெருமளவில் மனதை பாதித்து விட்டது. அந்த நேரத்தில் பட்நாயக் போன்றவர்கள் இருந்திருந்தால் திமுக, அதிமுக ஒன்றாகி இருக்கக் கூடும். திராவிட பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்ட எம்ஜியாருக்கு ஜெயலலிதா தலைமையில் கட்சி செல்வது பிடிக்கவில்லை என்பது அந்த நேரத்திலிருந்த எம்ஜியாரின் அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றாகவே தெரியும், கட்சியை விட்டு வெளியேற்றவில்லையே தவிர, ஜெயலலிதாவின் முக்கியத்துவத்தை முற்றிலும் எம்ஜியார் குறைத்துவிட்டார் என்பதுதான் உண்மையும் கூட.

கட்சிக்கு அடுத்த கட்ட தலைவர் என்பது எவ்வளவு முக்கியம், ஜனநாயக கட்சியாகவே இருந்தாலும் அடுத்த தலைவரை அடையாளம் காட்ட வேண்டியதன் அவசியத்தை எம்ஜியார் நன்றாகவே உணர்ந்திருந்தார். சரியான முடிவெடுத்து தன் கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் தெரிவிக்காததால், அவர் நினைத்தது போலவே அதிமுக இரண்டாக உடைந்ததும், அடுத்து நடந்த சம்பவங்களும் அதிமுகவின் வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. எம்ஜியார் இருந்த அதே நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதாவும் இன்று இருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

திமுகவைப் பொறுத்தவரை, முரசொலி மாறனின் ஆசியோடு வைகோ அடுத்த தலைவராக உருவெடுத்து வந்த நிலையில்தான் ‘தனக்கு பின் தனது மகனே’ என்ற ஆசை கருணாநிதிக்கு வந்தது. அந்த ஆசைக்கு வித்திடும் வகையில், ஸ்டாலின் நல்ல உழைப்பை கொடுத்து சாமானியனாகத்தான் கட்சிப்பணி ஆற்றி வந்தார்.
ஸ்டாலின் பொறுப்பிற்கு வந்து விட்டால் தனக்கு முக்கியத்துவம் கிடைக்காது என்ற காரணத்தினால் தான் கருணாநிதிக்கும் வைகோவுக்கும் விரிசல் ஏற்பட்டு மதிமுக என்ற தனிக்கட்சி வரை சென்றது.

அன்று பாராளுமன்ற நாயகனாக இருந்த ‘வைகோ மத்தியிலும், ஸ்டாலின் மாநிலத்திலும்’ என்று பரஸ்பரம் செய்து கொண்டிருந்தால், வைகோ முன்மொழிய ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியை கொடுத்து விட்டு, கருணாநிதி முலயாம் போல் மத்திய அரசியல் பார்வையாளராகவோ அல்லது அவருக்கு பிடித்த எழுத்துத் துறைக்கோ சென்றிருக்கலாம்

தவறை திருத்த முன் வருவாரா கருணாநிதி?

பெரிய வியாபார அல்லது விவசாய குடும்பங்களில் பெரியவர்கள், தாங்கள் நன்றாக இருக்கும் காலத்திலேயே மகன்களுக்குள் பொறுப்பை கொடுத்து அவர்களை வழி நடத்திச் செல்வது இன்றைக்கும் இருக்கும் வழக்கம். தனது காலத்திலேயே தனது பிள்ளைகள் தனியாக முடிவெடுத்து திறமையாக வியாபாரத்தை, விவசாயத்தை கவனித்துக் கொள்கிறார்களா என்ற உண்மையையும் தெரிந்து கொள்கிறார்கள். நல்ல பிள்ளைகள் தந்தையின் அனுபவத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டு மேலும் பெருமை சேர்க்கிறார்கள்.

அரசியலே குடும்பம், குடும்பமே அரசியல் என்று ஒட்டு மொத்த குடும்பமும் அரசியலில் இருப்பவர்களுக்கும் மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் பொருந்தக் கூடியவைதான்.

திமுக என்ற பெரும் இயக்கம் சிதறாமல் வலுவாக இருக்க வேண்டுமானால் அடுத்த தலைவர் யார் என அடையாளம் காட்டப்பட வேண்டியது முக்கியம். அது ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்று கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்தான் என்று இருக்க வேண்டியதில்லை. அடுத்த தேர்தலில் அதிமுகவை திறமையுடன் எதிர்கொள்ளக்கூடிய எவராக இருந்தாலும் அது திமுகவுக்கு நன்மையே.

அகிலேஷ் யாதவ், வெளி நாட்டில் படித்திருந்தாலும் மக்களோடு மக்களாக சகஜமாக எளிதில் பழகியதால்தான் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்று கட்சிக்கு வெற்றியை தேடித் தந்தார். நம்மில் ஒருவர் என்ற எண்ணம் மக்களுக்கு யார் மீது வருகிறதோ அவரே வெற்றித் தலைவராக உருவெடுக்கிறார். புதுவையில் ரங்கசாமியின் வெற்றி ரகசியமும் இதுதான். சைக்கிளில் , டீக்கடையில் சாதாரணமாக பார்க்கக்கூடிய வகையில்தான் அவருக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கம். அது தான் அவரை புதுவையின் ஆட்சிக் கட்டிலில், தனிக்கட்சி கண்ட மிகக் குறுகிய காலத்திலேயே ஏற்றியது.

கருணாநிதியின் மகன் என்ற காரணத்தை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் இன்றைய திமுகவில் மக்களோடு மக்களாக எளிமையாக பழகுபவர், தமிழகம் முழுவதும் நன்றாக அறிமுகமானவர், அமைச்சராக ஊர் ஊராக திட்டங்களை திறமையாக நிறைவேற்றியவர் என்ற வகையில் ஸ்டாலின் அடுத்த தலைமைக்கு ஏற்றவராகவே தெரிகிறார்.

மீண்டும் ஒரு முறை ‘கருணாநிதியா – ஜெயலலிதாவா’ என்ற கேள்வியை மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் விரும்ப மாட்டார்கள். இதைவிட ‘ஜெயலலிதாவா – ஸ்டாலினா’ என்ற கேள்விக்கு சுவாரஸ்யம் அதிகம். தேர்தலில் நல்ல பலனும் கிடைக்கும்.

எனவே ஆறாம் முறை முதல்வர் என்ற கனவை முடித்துக்கொண்டு திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற தெளிவான முடிவை அறிவிப்பதுதான், உரிய காலத்தில் செய்யாமல் விட்ட தவறை திருத்திக் கொள்வதாகவும் இருக்கும்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

என்ற குறளுக்கு, குறளோவியம் கண்ட கருணாநிதிக்கு யாரும் விளக்கம் சொல்ல தேவையில்லை. இப்போதாவது தன் மகன்களில் யாரை அவையில் முந்தியிருக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவெடுப்பாரா?

Sunday, March 4, 2012

Prawn Pickle

Ingredients:-
Prawn - 1 kilo
Red dried chilli - 125 No.s
Jeera - 5 Table spoons
Ginger - 2 inch pieces – 5 nos.
Garlic - 10 whole pod
Green chilli - 40
Gingelly oil - 1-1/4 kilo
Vinegar - 5 cups
Salt - 100 gms (add more taste)
Mustard seed - 2 table spoons
Curry leaves - 1 Handful
Turmeric powder - 1 table spoons

Method:-
Heat the oil and keep it in a vessel.
Clean the prawns and mix with turmeric powder and salt and keep aside for 15 minutes.
In frying pan fry the prawn using a little oil (do not deep fry) turn the slices and when it is well cooked and the water is evaporated remove the fish from the fire.
Remove the skin from the sides of the fried fish, remove all the bones and break the fish into small pieces and keep aside.
Clean the green chilli, keep only little bit of the stem, slit 1/2 inch, with a sharp knife on the thick part of the chilli, this is to help the chilli marinate and soak.
Peel the garlic and keep the small flakes whole, if the flakes are too big, cut into two.
Peel the ginger and cut into small pieces.
Grind the red chilli, using vinegar.
Keep aside two table spoon peeled garlic, 2 table spoon ginger to put whole along with green chilli. Soak them in vinegar.
Grind ginger and garlic and jeera using vinegar.
Heat the remaining oil in a thick bottom pan. When the oil is hot, add mustard seeds, add curry leaves then add the ground masala, cook till the masala is well cooked and the raw smell goes, then add green chilli, ginger and garlic soaked in vinegar, cook well and when the oil comes up, add the fish pieces and salt and cook till the fish is well cooked and mixed with the gravy. Then remove from fire and store in bottles or jars.

ஆட்டுக்கறி வறுவல்,

தேவையான பொருட்கள்:
கறி – 1 கிலோ
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 4
லவங்கம் – 3
ஏலக்காய் – 3
கசகசா – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – கால் ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – 50 கிராம்
பூண்டு – 50 கிராம்
தேங்காய் – 1 கீற்று
சின்ன வெங்காயம் – கால் கிலோ (பொடியாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – கால் கிலோ (பொடியாக வெட்டவும்)
பிரியாணி இலை – 2
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
குக்கரில் கறியைப் போட்டு அரை தம்ளர் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். கறி வெந்த பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை தாளித்து, சின்ன வெங்காயம், தக்காளி வதக்கி அரைத்த மசாலாவை ஒவ்வொன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு கறியைப் போட்டு தேவையானால் மீண்டும் உப்பு சேர்த்துக் கலந்து விடவும். தண்ணீழ் நன்றாக வற்றியதும், சிறு தீயில் வைத்து சுருள வதக்கி கடாயில் ஒட்டாமல் வரும் வரை வதக்கி கருவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்பு: கறியை சிறு தீயில் வைத்து அதிகம் நேரம் வதக்கினால் மசாலா கறியில் நன்றாக ஊறி இருக்கும்.
====================================================================================
SUKKA VARUVAL

தேவையான பொருட்கள்:
கறி – அரைகிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மிளகு – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
மிளகாய் – 5 (சிவப்பு)
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – 10 பல்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம் முதல் பூண்டு வரை உள்ள பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும். கறியுடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து பிசறி 1 மணி நேரம் ஊற விடவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த கறியை போட்டு அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி மூடி விடவும். கறி நன்கு வெந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் தீயைக் குறைத்து சுருள சுருள கிளறி கருவேப்பிலைத் தூவி இறக்கவும்.

கத்தரிக்காய் கொத்சு

தேவை:
பெரிய கத்தரிக்காய் – 200 கிராம்
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
குழம்புப்பொடி – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 2
புளி – நெல்லிக்காயளவு
உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை:
கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு மஞ்சள் தூள், மிளகாய் நறுக்கி போட்டு வேக வைத்து கடைந்து கொள்ளவும். புளியைக் கரைத்து, கரைசலில் குழம்புப் போட்டு சேர்தது காயில் ஊற்றி இறக்கவும்.குறிப்பு: கத்தரிக்காயை தணலில் போட்டு சுட்டு தோலுரித்து பிசைந்து செய்யலாம்

Friday, March 2, 2012

கிங் சமோசா

தேவை:

மைதா மாவு – 125 கிராம்
வற்றல் பொடி – 1 1/2 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
பச்சை பட்டாணி – 100 கிராம்
மல்லி இலை – 25 கிராம்
கடலை எண்ணெய் – 1/4 கிலோ
சிட்ரிக் ஆசிட் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 1 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் வற்றல் பொடி மஞ்சள் பொடி, தேவையான உப்பு, இஞ்சி, கரம் மசாலா வேக வைத்த பட்டாணி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை மல்லி, மிளகாய், சிட்ரிக் ஆசிட் எல்லாவற்றையும் கலந்து வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரித்து கலவையை வதக்கி பின்னர் ஆற வைக்கவும். பிறகு மைதாவுடன் 2 மேஜைக்கரண்டி எண்ணெயை விட்டு, தேவையான உப்பும் போட்டு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சுட்டு சப்பாத்திகளாக இட்டு ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் தண்ணீர் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு மீதி பொன்நிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

செட்டிநாடு, நண்டு, நாட்டு, பொரியல், வறுவல்

நண்டு பொரியல்
தேவை:
பெரிய நண்டு – 5
மிளகாய் வற்றல் – 8
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 6
உப்பு – தேவையான அளவு
மல்லி – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
தேங்காய் சில் – 2

செய்முறை:
பெரிய நண்டு 6 ஐ சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல் 8, மல்லி 2 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, வெங்காயம் 6 தேங்காய் சில் 2 இவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். இதை நண்டுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிறட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் 8 கரண்டி எண்ணெய் ஊற்றிக்காய்ந்ததும் நண்டைப்போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.


வறுத்த நண்டு

தேவை:
நண்டு – 5
இஞ்சி – 1 அங்குலம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மல்லி (தனியா) – 2 தேக்கரண்டி
தக்காளி – 1
சிகப்பு மிளகாய் – 10
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
பெரிய வெங்காயம் – 3

செய்முறை:
நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். 10 சிகப்பு மிளகாய்கள், 1 அங்குலம் இஞ்சி, 1 தேக்கரண்டி சீரகம், 50 கிராம் சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 2 தேக்கரண்டி மல்லி (தனியா) இவற்றை அரைத்துக் கொள்ளவும். 3 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 1 தக்காளியை மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் 10 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி, வதங்கிய பின் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தும் நண்டுகளைப் போடவும். நண்டுகள் வெந்து நன்கு வதங்கிய பின் இறக்கவும்.

Tuesday, February 28, 2012

கல்யாண விருந்து சாப்பாடு

கோதுமை பாயசம்!

தேவை: கோதுமை - 1 கப், வெல்லம் - 3/4 கிலோ, நெய் - சிறிதளவு, முற்றிய தேங்காய் -2, (தேங்காய்ப் பால் 3 முறை), ஏலப் பொடி - 1 சிட்டிகை, முந்திரி, திராட்சை - தேவையான அளவு.

செய்முறை: கோதுமையை ஒன்றிரண்டாகப் பொடித்து, நெய்யில் வறுத்து தேங்காய் 3ம் பால் விட்டுக் குழைய விடவும். வெல்லம் சேர்த்து நன்றாகச் சுருண்டு வரும் வரை கிளறவும். அதில், இரண்டாம் பால் சேர்த்து, ஒரு கொதி வந்தபின் இறக்கி வைத்து முதல் பாலைச் சேர்க்கவும். ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

அவல் பாயசம்!

தேவை: அவல் - 1 கப், சர்க்கரை - 2 1/2 கப், பால் - 1 1/2 லிட்டர், ஏலப் பொடி -1 சிட்டிகை, நெய், முந்திரி, திராட்சை - தேவைக்கு.

செய்முறை: நன்றாக அலம்பிய அவலை நெய்யில் வறுத்து, தண்ணீர் தெளித்து குழைய வேகவிடவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து சுருளக் கிளறவும். பாலைக் காய்ச்சிக் குறுக்கவும். இரண்டையும் சூடாகக் கலந்து ஏலப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

இளநீர் பாயசம்:

தேவை: இளநீர் வழுக்கையுடன் - 1, தேங்காய்ப் பால் - 1 கப், பால் - 1 லிட்டர், சர்க்கரை - தேவையான அளவு ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:இளநீரைத் தனியாக எடுத்து வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கவும். ஒரு லிட்டர் பாலை நன்றாகக் காய்ச்சிக் குறுக்கி சர்க்கரை சேர்க்கவும். தேங்காய்ப் பால், வெட்டி வைத்துள்ள வழுக்கையும் சேர்த்துப் பின் பரிமாறும் அளவுக்கு இளநீரையும் ஏலப்பொடியும் சேர்க்கவும். குளிர வைத்துப் பரிமாறவும்.

தேங்காய்ப் பால் பாயசம்(சதசதயம் கேரளா)

தேவை : தேங்காய்த் துருவல் - 3 கப், சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி அரிசி - 1 கப், நெய் - சிறிதளவு, வெல்லத்தூள் - 1/2 கிலோ, ஏலக்காய் - 1 சிட்டிகை முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை: அரிசியை நெய்யில் வறுத்து, அதில் தேங்காய் மூன்றாம் பாலைச் சேர்த்து குழைய வேகவிடவும். அதில் வெல்லம் சேர்த்துப் பூரணம் போல் திரண்டு வரும் வரை கிளறவும். பின் இரண்டாம் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்தபின், பல் பல்லாக வெட்டிய தேங்காயையும் முந்திரி, திராட்சையையும் நெய்யில் வறுத்துப் போடவும். தேவையெனில் நேந்திரம் பழத் துண்டுகளும் சேர்க்கலாம்.

சக்கப்பிரதமன்

தேவை: நன்றாகப் பழுத்த பலாச்சுளை - 10, வெல்லம் - 1/2 கிலோ, சுக்குப்பொடி, ஏலப்பொடி - தலா 1 சிட்டிகை, தேங்காய்ப் பால் - 1/2 கப், நெய், முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

பலாச்சுளையை துண்டுகளாக வெட்டி நெய்யில் வதக்கி, வெல்லம் சேர்த்து சுருண்டு வரும் வரை கிளறவும். பின் தேங்காய்ப் பால் சேர்க்கவும். சுக்குப் பொடி, ஏலப்பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

குடைமிளகாய் தயிர்ப் பச்சடி

தேவை: குடைமிளகாய் -100 கிராம், தயிர் - 2 கப், தேங்காய் - 1/2மூடி, பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு, இஞ்சி - சிறு துண்டு. தாளிக்க - எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை:

குடைமிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை பச்சை மிளகாய், இஞ்சியுடன் மைய அரைத்து தயிரில் சேர்க்கவும். குடைமிளகாயும், உப்பும் சேர்த்து எண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பின் பரிமாறவும். குடைமிளகாயை வதக்கியும் சேர்க்கலாம்.

பூந்தி தயிர்ப் பச்சடி

தேவை: காராபூந்தி - 1 கப், தயிர் - 2 கப், தேங்காய் - 1/2 மூடி, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - 1 துண்டு, சர்க்கரை - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, தாளிக்க: கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை:

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி அரைத்து தயிரில் கலக்கவும். பின் உப்பு சர்க்கரை சேர்த்து தனியாக வைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பரிமாறும் சமயத்தில் பூந்தி சேர்த்துப் பரிமாறவும்.

தக்காளி தயிர்ப் பச்சடி!

தேவை: பெங்களூர் தக்காளி - 2, தயிர் - 2 கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சர்க்கரை - சிறிதளவு. தாளிக்க- எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை:தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தயிரில் பச்சை மிளகாய் விழுது, உப்பு, தக்காளி, சர்க்கரை சேர்த்து எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டிப் பரிமாறவும்.

மிக்ஸட் வெஜிடபிள் தயிர்ப் பச்சடி!

தேவை: நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், குடை மிளகாய் கலந்து - 1 கப், தயிர் - 2 கப், தேங்காய் - 1/2 மூடி, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - 1 துண்டு, தாளிக்க - கடுகு, கறிவேப் பிலை, பெருங்காயம், எண்ணெய் உப்பு - தேவையான அளவு

செய்முறை: தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் அரைத்து, தயிரில் சேர்க்கவும். பின், உப்பு, காய்கறிகளைச் சேர்த்து எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பரிமாறவும்.

ஸ்வீட் பச்சடி மாங்காய்!

தேவை: மாங்காய் - 2, வெல்லம் - 1/4 கிலோ, உப்பு - 1 சிட்டிகை தாளிக்க: கடுகு, வரமிளகாய், பெருங் காயம், எண்ணெய்

செய்முறை: மாங்காயைத் தோலுடன் சிறு துண்டங்களாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து மாங்காய் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வேக வைத்து வெந்ததும் வெல்லம், உப்பு சேர்த்துக் கெட்டியானதும் பரிமாறவும்.

வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி!

தேவை: வெண்டைக்காய் - 1/4 கிலோ, வெல்லம் - 1/4 கிலோ, புளி - நெல்லிக்காயளவு உப்பு - தேவையான அளவு,தாளிக்க:கடுகு, வர மிளகாய், பெருங்காயம், எண்ணெய்

செய்முறை: எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்து சிறு துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். பிறகு புளி கரைத்து விட்டு நன்கு கொதி வந்ததும் உப்பு, வெல்லம் சேர்த்துப் பரிமாறவும்.

நார்த்தங்காய் ஸ்வீட் பச்சடி!

தேவை: பழுத்த நார்த்தங்காய் - 1 பெரியது, வெல்லம் -1/4 கிலோ, உப்பு - சிறிதளவு தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய்

செய்முறை: நார்த்தங்காயை சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கி இலேசாகத் தண்ணீர் தெளித்து வேகவிடவும். பின் உப்பு, வெல்லம் சேர்த்து கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.

அன்னாசிப் பச்சடி!

தேவை: நன்கு பழுத்த அன்னாசி - 1, சர்க்கரை - 1/4 கிலோ, ஏலப்பொடி - 1 சிட்டிகை, நெய் -சிறிதளவு, முந்திரி, திராட்சை - தேவையானது

செய்முறை: அன்னாசியைப் பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கிப் பின் சர்க்கரை சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பின் ஏலப்பொடி சேர்த்து நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.

மிக்ஸட் ஃப்ரூட் பச்சடி!

தேவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள், சாத்துக்குடி, பப்பாளி, மாம்பழம், அன்னாசி, திராட்சை போன்றவை - 2 கப், தூள் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி - 1 சிட்டிகை,உப்பு - 1 சிட்டிகை

செய்முறை: பொடியாக நறுக்கிய பழங்களைப் பொடித்த சர்க்கரையுடன் கலந்து ஏலப்பொடி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

மாங்காய் கோசம்பரி!

தேவை: பாசிப் பருப்பு - 1 கப், மாங்காய் - 2, இஞ்சி - 1 துண்டு, தேங்காய்த் துருவல் - 1/4 கப், பச்சை மிளகாய் -2, தாளிக்க: கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - 1 மூடி, கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை: பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் கலந்து வைக்கவும். பாசிப் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து இலேசாக வெந்தவுடன் இந்தக் கலவையைக் கலந்து உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துத் தாளித்துப் பின் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

பருப்பு கோசம்பரி!

தேவை: கடலைப் பருப்பு - 1கப், சர்க்கரை - 1 சிறிய கரண்டி, தேங்காய்த் துருவல் - 1/4 கப், ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை: கடலைப் பருப்பை ஊறவைத்து அரைவேக்காடு வேகவைத்துக் கொள்ளவும். பின் தேங்காய்த் துருவல் சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்துப் பரிமாறவும். தேவையெனில் சிறிதளவு நெய்யும் சேர்க்கலாம்.

வெங்காயத்தாள் கோசம்பரி

தேவை: வெங்காயத்தாள் - 1கட்டு, பாசிப் பருப்பு - 1 கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, எலுமிச்சை - 1 மூடி, கொத்துமல்லி - சிறிது, தாளிக்க : எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: பாசிப் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து இலேசாக வெந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து எலுமிச்சைப் பிழியவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

வெஜிடபிள்கோசம்பரி!

தேவை: வெள்ளரிக்காய், கேரட், குடை மிளகாய் - துருவியது தலா 1 கப், உப்பு சேர்த்து வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப், தேங்காய்த் துருவல் - 1/4 கப், எலுமிச்சை - 1 மூடி, பச்சை மிளகாய், இஞ்சி - பொடியாக நறுக்கியது - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க - எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: துருவிய காய்கறிகள், பட்டாணி, தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பரிமாறவும்.

அவரைக்காய் கறி!

தேவை: அவரைக்காய் - 1/2 கிலோ, தேங்காய்த் துருவல் - 1/2 கப், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, வரமிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க. பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்- தேவையான அளவு

செய்முறை: அவரைக்காயைப் பொடியாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய்த் தாளித்து கறிவேப் பிலை, பெருங்காயம் சேர்த்து அவரைக்காயைப் போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக விடவும். உப்பு சேர்த்து நன்றாக வெந்த பின் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

காலிஃப்ளவர் மஞ்சூரியன்!

தேவை: காலிஃப்ளவர் - 1 (பெரிய பூ), கடலை மாவு, அரிசி மாவு, கார்ன்ஃப்ளார் - தலா 1 தேக் கரண்டி, மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: காலிஃப்ளவரை துண்டு துண்டாக நறுக்கி வெந்நீரில் சுத்தம் செய்ததும், அரை வேக்காடு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். மாவுகளில் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி சேர்த்து ஈரத்துடன் காலிஃப்ளவரை நன்கு கலந்து விடவும். காலிஃப்ளவரில் மாவு நன்றாகக் கலந்ததும் எண்ணெயில் மிதமானத் தீயில் பொரித்தெடுக்கவும்.

பருப்புசிலி!

தேவை: பீன்ஸ், கொத்தவரை, அவரை, குடைமிளகாய்- ஏதாவது ஒன்று பொடியாக நறுக்கி வேகவைத்தது - 1 கப், கடலைப் பருப்பு, து.பருப்பு -தலா 1/4 கப், வர மிளகாய் - 4, மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன், உப்பு- தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்து வர மிளகாயுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இக் கலவையை ஆவியில் வேகவைத்து உதிரியாக உதிர்த்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வேகவைத்த காயுடன் உதிர்த்த பருப்பையும் சேர்த்து நன்கு கலந்து, கிளறிப் பரிமாறவும்.

சேனைக்கிழங்கு ரோஸ்ட்!

தேவை: சேனைக் கிழங்கு - 1/4 கிலோ, புளிக் கரைசல் - 1 கப், மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் பொடி, புளிக்கரைசல், உப்பு சேர்த்து அரைவேக்காடு வேகவைக்கவும். வெந்தவுடன் நீரை வடிகட்டி சூடாக இருக்கும் போதே மிளகாய்ப் பொடி கலந்து பிசிறவும். எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சேனைக்கிழங்கு கலவையைக் கொட்டி குழையாதவாறு சிறு தீயில் நன்கு மொறு மொறுவென வதக்கவும்.

மலபார் அவியல்!

தேவை: கேரட், பீன்ஸ், புடலங்காய், பரங்கிக்காய், காரமணிக்காய், சேனைக் கிழங்கு, முருங்கைக்காய் ஒவ்வொன்றும் நீளவாக்கில் நறுக்கியது - 1 கப், பட்டாணி - 1 கப், தேங்காய் -2, பச்சை மிளகாய் - 5, தயிர் - 1/2 கப்,தேங்காய்ப் பால் - 1 கப்.

தாளிக்க: தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை - சிறிதளவு,

செய்முறை: காய்களை பட்டாணியுடன் குழையாமல் உப்பு சேர்த்து வேகவைத்து வடிக்கவும். தேங்காயை பச்சை மிளகாயுடன், தேங்காய்ப் பால் சேர்த்து கெட்டியாக மைய அரைத்து, தயிரைக் கலக்கவும். எண்ணெயைச் சூடாக்கி கறிவேப்பிலை சேர்த்து அரைத்த கலவையைக் கொட்டவும். இலேசாகக் கொதி வந்ததும் வெந்த காய்களைச் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.

எரிசேரி!

தேவை: சேனைக்கிழங்கு - 1/4 கிலோ, கறுப்பு/வெள்ளை காராமணி -1/2 கப், வரமிளகாய் - 4, தேங்காய் - 1, தேங்காய் எண்ணெய் - தாளிக்க, கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சேனைக்கிழங்கை ஓர் அங்குல அளவில் செதுக்கிக் கொண்டு, முதல் நாள் இரவு ஊறவைத்த காராமணியுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். மிளகாயையும், தேங்காயையும் கெட்டியாக மைய அரைக்கவும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைக் கொட்டவும். இலேசாகக் கொதி வந்ததும் வேக வைத்த சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட்டுச் சூடாகப் பரிமாறவும்.

ஓலன்!

தேவை: நீளமாக நறுக்கிய பரங்கிக்காய் - - 1 கப், வேகவைத்த காராமணி - 1/2 கப், தேங்காய்ப் பால் - 3 கப், தேங்காய் - 1 மூடி, பச்சை மிளகாய் - 3, சீரகம் - 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை: பரங்கிக்காயையும் காராமணியையும் குழையாமல் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றைத் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கெட்டியாக அரைக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இந்த அரவையைக் கொட்டி இலேசாகக் கொதி வந்ததும் வெந்த காயையும், காராமணியையும் கொட்டிக் குழையாமல் நன்கு புரட்டவும். சிறிது தேங்காய் பால் சேர்த்துப் பின் பரிமாறவும்.

உருளைக்கிழங்கு காரக்கறி!

தேவை: உருளைக்கிழங்கு - 1/2 கிலோ, வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப், தக்காளி - 1/4 கிலோ, மிளகாய்ப் பொடி (அ) சாம்பார்ப் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் , கடுகு. உ. பருப்பு, க.பருப்பு - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், கொத்துமல்லி - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துப் பின் பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய்ப் பொடி சேர்த்து மிதமானத் தீயில் நன்கு சுருள வதக்கவும். பின் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து நன்கு கிளறவும். இறக்கியதும் கொத்து மல்லித் தூவி பரிமாறவும்.

பூசணிக்கா புளி கூட்டு!

தேவை: பூசணிக்காய் - டைமன் சைசில் 1 செ.மீ. அளவில் நறுக்கியது 2 கப், வேர்க் கடலை - 1/4 கப், தேங்காய்த் துருவல் - 1 கப், தனியா, க.பருப்பு, உ.பருப்பு - தலா 2 டீஸ்பூன், புளிக்கரைசல்- 1 கப், பெருங்காயம் - 3/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வர மிளகாய் - 2, தாளிக்க - தேங்காய் எண்ணெய், கடுகு, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.

செய்முறை: பூசணிக்காயையும், வேர்க்கடலையையும் உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு வரமிளகாய், தனியா, உ.பருப்பு, கடலைப் பருப்பு, ஆகியவற்றை நன்றாகச் சிவக்க வறுத்து தேங்காய்த் துருவலுடன் கெட்டியாக அரைக்கவும். புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு கொதி வந்ததும் வெந்த காயையும், அரவையையும் சேர்க்கவும். பச்சை வாசனை போக நன்கு கொதி வந்ததும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பின் பரிமாறவும்.

திருநெல்வேலி சொதி!

தேவை: கேரட், பீன்ஸ், பூசணிக்காய், கத்தரிக்காய், குடைமிளகாய் நறுக்கியது - தலா 1 கப், தேங்காய் - 1, பச்சை மிளகாய் - 2, கொத்துமல்லி- சிறிதளவு, உப்பு - தேவையானது, தாளிக்க: எண்ணெய், சோம்பு, இலவங்கம் - சிறிதளவு

செய்முறை: எணணெயில் சோம்பு, இலவங்கம் தாளிக்கவும். கறிகாய்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, பச்சை மிளகாயுடன் வதக்கவும். பின் தேங்காய்ப் பாலில் உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும். கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

வெஜிடபிள் புலவ்!

தேவை: பாசுமதி அரிசி - 2 கப், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், நூக்கல், நீளவாக்கில் நறுக்கிய கலவை - 1 கப், தண்ணீர் - 2 கப், நெய் - 1 கரண்டி, எண்ணெய்- சிறிதளவு. தாளிக்க : பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலை, சோம்பு. இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், புதினா இலைகள் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (மெலிதாக நறுக்கவும்).

செய்முறை: ஓர் அடிகனமான பாத் திரத்தில் எண்ணெய் விட்டு, பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலை, சோம்பு தாளிக்கவும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது இடவும். சிறிதளவு நெய் சேர்த்து இலேசாகப் புரட்டவும். பின்பு தண்ணீர், உப்பு சேர்த்து பாசுமதி அரிசி போட்டு மிதமானத் தீயில் வேக வைக்கவும். அடுப்பில் நேரடியாகச் செய்வதானால் அடிக்கடி இலேசாக உதிர்ப்பது போல் கிளறி விட்டு, நன்கு வெந்ததும் புதினா இலைகளைப் போட்டுப் பின் பரிமாறவும்.

மாங்காய் சாதம்!

தேவை: மாங்காய்த் துருவல் - 2 கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி -1/2கப், கேரட் துருவல் - 1/4 கப், பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு. உதிராக வடித்த சாதம் -2 கப்.

செய்முறை: எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மாங்காய்த் துருவல், பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் உப்பு சேர்த்து நன்கு வதக்கி சாதத்தைக் கொட்டி உதிர் உதிராகக் கலக்கவும். இறக்கி வைத்து கேரட் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

புதினா சாதம்!

தேவை: புதினா - 2 கட்டு, பச்சை மிளகாய் - 5, இஞ்சி -1 துண்டு, புளி - நெல்லிக்காயளவு, தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு, உப்பு - தேவையான அளவு, வடித்த சாதம் - 2 கப்.

செய்முறை:வாணலியில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சி, சுத்தம் செய்த புதினா ஆகியவற்றை நன்கு வதக்கி உப்பு, புளி சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். வடித்த சாதத்துடன் கடுகு, உ.பருப்பு, க. பருப்பு, பெருங்காயம் தாளித்து அத்துடன் அரைத்த கலவையை உதிராகக் கலந்துப் பரிமாறவும்.

வாங்கிபாத்!

வாங்கிபாத் பொடிக்கு: வர மிளகாய் - 5, தனியா, உ.பருப்பு, க.பருப்பு - தலா 1 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, லவங்கம் - 5, மராட்டிமொக்கு - 2, பெருங்காயம் - 1 சிட்டிகை. தேவை:கத்தரிக்காய் - 1/4 கிலோ, புளிக்கரைசல் - 1/2 கப், மஞ்சள் பொடி 1 சிட்டிகை. உப்பு- தேவையானது, சாதம் -2 கப், வெங்காயம்-2, தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்து மல்லி.

செய்முறை: வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டியவற்றை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வெங்காயம், கத்தரிக்காய் சேர்த்து சிறிது வதங்கியதும் புளிக்கரைசல் பொடி, உப்பு சேர்த்து சுருள வதக்கவும். சாதம் சேர்த்து உதிராகக் கிளறிப் பரிமாறவும்.

கறிவேப்பிலை சாதம்!

தேவை: வடித்த சாதம் -2 கப், கறிவேப்பிலை - 2 கப், உ.பருப்பு, க.பருப்பு, து. பருப்பு - தலா 1 ஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், வர மிளகாய் - 4, பெருங்காயம் - 1 சிட்டிகை. தாளிக்க: எண் ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம், உப்பு - தேவையான அளவு

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய், மிளகு மற்றும் பருப்புகளை சிவக்க வறுக்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதனை உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும். பின் வடித்த சாதத்தில் கடுகு, பெருங்காயம், உ.பருப்பு, க. பருப்பு தாளிக்கவும். அதில் பொடியைச் சேர்த்து நன்கு உதிராகக் கலக்கவும். மேலாக நெய்யில் முந்திரி வறுத்தும் சேர்க்கலாம்.

புளியோதரை!

தேவை: புளிக்கரைசல் கெட்டியாக - 2 கப், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு. மேல் பொடி: வர மிளகாய் - 4, தனியா, க.பருப்பு - தலா 1 ஸ்பூன், உ.பருப்பு - 1/2 ஸ்பூன், வெந்தயம், மஞ்சள் தூள் - தலா 1/2 டீஸ்பூன், நல்லெண்ணெய்- 1 கப், வறுத்த வேர்க் கடலை - 50 கிராம், வடித்த சாதம் - 2 கப், வெல்லம் - நெல்லிக்காயளவு, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப.

உள்பொடி: வர மிளகாய் - 6, தனியா - 2 ஸ்பூன், பெருங்காயம் - 1 ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உள்பொடிக்கு, மேல் பொடிக்குத் தேவையானவற்றை மிதமானத் தீயில் வறுத்து தனித் தனியே பொடிக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வர மிளகாய், உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்துப் பின் புளிக்கரைசல், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். உள்பொடி, வெல்லம் சேர்த்து, நன்கு கொதித்ததும், வடித்து ஆற வைத்த சாதத்தில் இக் கலவையைத் தேவையான அளவு நன்கு கலந்து மேல்பொடியை தூவிப் பரிமாறவும்.

அவல் கேசரி!

தேவை: அவல் - 1 கப், சர்க்கரை - 2 1/2 கப், நெய் - 1/2 கப், பால் - 2 கப், ஏலப்பொடி, முந்திரி, திராட்சை - சிறிதளவு

செய்முறை: நன்கு கழுவி சிறிது ஊறவைத்த அவலை நெய்யில் வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து பால் சேர்த்து குழைய வேகவிடவும். பின் சர்க்கரை சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பின் நெய்யில் முந்திரி திராட்சை வறுத்துப் போட்டு ஏலப்பொடி சேர்த்துப் பரிமாறவும்.

கல்கண்டு பாத்!

தேவை: அரிசி - 1 கப், சர்க்கரை - 2 1/2 கப், பால் - 5 கப், குங்குமப்பூ - 1 சிட்டிகை, நெய் - 1/2 கப், ஏலப்பொடி, பச்சை கற்பூரம், முந்திரி, திராட்சை - தேவையான அளவு,

செய்முறை: அரிசியை நன்கு சுத்தம் செய்து, ஈரத்துடன் நெய்யில் வதக்கி பாலில் நன்கு குழைய வேகவிடவும். சர்க்கரை சேர்த்து நன்கு சுருளக் கிளறி, குங்குமப்பூ, ஏலப் பொடி, பச்சை கற்பூரம் நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சை பொரித்துச் சேர்த்துப் பரிமாறவும்.

அசோகா அல்வா!

தேவை: பாசிப் பருப்பு - 1 கப், கோதுமை மாவு - 1/2 கப், சர்க்கரை - 5 கப், நெய் - 2 கப் முந்திரி, திராட்சை, ஏலப்பொடி - தேவையான அளவு சிவப்பு கலர் - தேவைப்பட்டால்

செய்முறை: கோதுமை மாவை நெய் விட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பை நிறைய தண்ணீர் விட்டு குழைய நீர்க்க வேகவைத்துக் கொள்ளவும். பிறகு கோதுமை மாவில் அதைக் கொட்டி கட்டி தட்டாமல், நன்கு கெட்டியாகும் வரை கிளறவும். இந்தக் கலவை பளபளவென்று வரும் போது சர்க்கரை சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பின் ஏலப் பொடி, கலர் சேர்த்து நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்த்துப் பரிமாறவும்.

காசி அல்வா!

தேவை: பூசணிக்காய்த் துருவல் - 2 கப், சர்க்கரை - 2 கப், சிவப்பு கலர் - 1 சிட்டிகை (தேவைப்பட்டால்), வெள்ளரி விதை - தேவையான அளவு, நெய், முந்திரி, திராட்சை- தேவையான அளவு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம்- சிறிதளவு

செய்முறை: பூசணிக்காய்த் துருவலை கண்ணாடிப் பதம் வரும் வரை நன்றாகத் தண்ணீரில் வேகவைத்து, ஒரு மெல்லியத் துணியில் நன்கு பிழிந்தெடுக்கவும். பிறகு நெய்யில் நன்றாக ஈரம் வற்ற வதக்கி, சர்க்கரை சேர்த்து, சுருளக் கிளறவும். இறக்கியபின் ஏலம், பச்சைக் கற்பூரம், நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை சேர்த்துப் பரிமாறவும்.

அக்கார வடிசல்!

தேவை: அரிசி - 1 கப், துருவிய வெல்லம் - 21/2 கப், பால் - 5 கப், குங்குமப்பூ - 1 சிட்டிகை நெய் - 1 கப், ஏலப்பொடி, முந்திரி திராட்சை, பச்சைக் கற்பூரம் - தேவையான அளவு

செய்முறை: அரிசியைப் பாலில் நன்கு குழைய வேகவிடவும். இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பின் குங்குமப்பூ, ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்து நெய்யில் முந்திரி, திராட்சை தாளித்துப் பின் பரிமாறவும்.

பதிர் பேணி!

தேவை: பதிர் பேணி - 5 வில்லைகள் (கடைகளில் கிடைக்கும்) பாதாம், முந்திரி அரைத்த விழுது - 1 மேசைக்கரண்டி, பால் - 1 லிட்டர், சர்க்கரை - 2 மேசைக் கரண்டி, கலர் இனிப்பு பூந்தி - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 1 மேசைக் கரண்டி, ஏலப்பொடி, குங்குமப்பூ - தலா 1 சிட்டிகை, பாதாம் எஸன்ஸ், கேசரி கலர் (தேவைப்பட்டால்).

செய்முறை: பாலை நன்கு சுண்டக் காய்ச்சவும். இதில் பாதாம், முந்திரி விழுது சேர்த்துக் கொதித்து வந்ததும் சர்க்கரை சேர்த்து இறக்கி ஏலம், குங்குமப்பூ எஸன்ஸ் கலர் சேர்த்து குளிரூட்டவும். தட்டில் ஒரு பதிர்பேணியை இட்டு அதன் மேல் சிறிது பொடித்த சர்க்கரை, பூந்தி, பாதாம் பால் விட்டுப் பரிமாறவும்.

சாக்லெட் பர்ஃபி!

தேவை: கோவா - 1 கப், சர்க்கரை - 1 1/2 கப், சாக்லெட் பவுடர் - 1 மேசைக்கரண்டி, நெய் - சிறிதளவு, பாதாம், பிஸ்தா, முந்திரி- தேவைக்கேற்ப

செய்முறை: கோவாவை சர்க்கரையுடன் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கெட்டியாகக் கிளறவும். இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்தை நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். இரண்டாம் பாகத்தை சாக்லெட் பவுடர் சேர்த்து, நன்கு கையால் பிசைந்து, கொட்டி வைத்துள்ள முதல் பாகத்தின் மீது பரப்பவும். டபுள் டெக்கர் சாக்லெட் பார் தயார். இதன் மீது பாதாம், முந்திரி, பிஸ்தா துருவலைத் தூவி அலங்கரிக்கலாம்.

கேரட் அல்வா (காஜர் அல்வா)!

தேவை: நன்கு சிவந்த கேரட் துருவல் - 2 கப், பால் - 1 லிட்டர், சர்க்கரை - 4 கப், ஏலப்பொடி, முந்திரி, திராட்சை, நெய்- தேவையான அளவு

செய்முறை: கேரட் துருவலை நெய்யில் வதக்கி பாலில் நன்கு வேகவிடவும். பின் சர்க்கரை சேர்த்து சுருளக் கிளறவும். இறக்கியபின் ஏலப்பொடி நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

மெதுவடை!

தேவை: உளுந்து - 1 கப், மிளகு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கியது - தலா 1 ஸ்பூன், தேங்காய் பல்லாக நறுக்கியது - சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, கிரைண்டரில் மைய அரைக்கவும். மசிந்த பின்னும் 5 முதல் 10 நிமிடங் கள் கிரைண்டரில் அரைய விட்டால் மெதுவடை மெத்தென வரும். இதனுடன் உப்பு, மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்ப் பல், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி எண்ணெயில் வடையாகத் தட்டவும்.

வெஜிடபிள் வடை!

தேவை: ஊறவைத்த உளுந்து - 1 கப், நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி கலந்தது - 1 கப், எண்ணெய், பெருங்காயம், உப்பு - தேவைக்கு.

செய்முறை: உளுந்தை தண்ணீர் விடாமல் கொர கொரப்பாக அரைக்கவும். அதில் கறிகாய்களையும், உப்பு, பெருங்காயத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். காய்ந்த எண்ணெயில் மெல்லிய வடைகளாகப் பொரித்தெடுக்கவும்.

ஆமவடை!

தேவை: கடலைப் பருப்பு - 1 கப், வர மிளகாய் - 4, மஞ்சள் தூள், நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, - தேவையான அளவு, எண்ணெய் -பொரித்தெடுக்க.

செய்முறை: கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். இந்த விழுதில் அரை கரண்டி நெய், கறிவேப்பிலை, கொத்துமல்லி கலந்து எண்ணெய் காய்ந்ததும் வடை தட்டிப் பொரித்தெடுக்கவும்.

கீரை வடை!

தேவை: ஊறவைத்த உளுந்து - 1கப், பொடியாக நறுக்கிய கீரை - 1/2 கப், பச்சை மிளகாய், இஞ்சி - சிறிதளவு, உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: உளுந்தை நன்கு வடித்து தண்ணீர் விடாமல் கொர கொரப்பாக அரைத்துக் கொண்டு நறுக்கிய கீரை, பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும். எண்ணெய் காய்ந்ததும் மெல்லிய வடைகளாகத் தட்டிப் பொரிக்கவும்.

தயிர் வடை!

தேவை: ஊறவைத்த உளுந்து - 1 கப், உப்பு - தேவையான அளவு, தயிர் - 6 கப், தேங்காய்த் துருவல் - 1 கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - பொரிக்க. அலங்கரிக்க: கேரட் துருவல், கொத்து மல்லி, மிளகாய்ப் பொடி, பூந்தி

செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்க்காமல் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் பச்சை மிளகாய், உப்பு அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும். எண்ணெயில் வடை தட்டி, முக்கால் வேக்காட்டில் எடுத்துக் கொண்டு சுடச்சுட தயிரில் போடவும். வடை ஊறிய தும் தட்டில் வைத்து மேலே சிறிது தயிர் கலவையை ஊற்றவும். கேரட், கொத்து மல்லி, மிளகாய்ப் பொடி, காராபூந்தி அலங் கரித்துப் பரிமாறவும்.

வாழைப்பூ வடை!

தேவை: சுத்தம் செய்து நறுக்கிய வாழைப் பூ - 1 கப், கடலைப் பருப்பு - 1 கப், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 கப், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி- சிறிதளவு, எண்ணெய் - பொரித்தெடுக்க. பாசிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் - தேவையான அளவு

செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும். பாசிப் பருப்பைத் தனியாக ஊற வைக்கவும். ஒன்றாக ஊறவைத்தவற்றை அரைத்துக் கொண்டு அதில் உப்பு, மஞ்சள் தூள், வாழைப்பூ, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளவும். இதில் ஊறவைத்த பாசிப் பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, வடைகளாகப் பொரித்தெடுக்கவும்.

வாழைக்காய் சிப்ஸ்!

தேவை: முற்றிய வாழைக்காய் - 2, மிளகுத் தூள் -2 டீஸ்பூன், எண்ணெய்- பொரித்தெடுக்க, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சை - 1 மூடி, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை: தோல் சீவிய வாழைக்காயை எலு மிச்சை, உப்பு கலந்த நீரில் போடவும். பிறகு நேரிடையாக எண்ணெயில் பொரித் தெடுக்க நன்கு வெளுப்பாக வரும். பின் மிளகுத் தூள் உப்பு, பொரித்த கறிவேப்பிலை சேர்க்கவும்.

சேனை சிப்ஸ்!

தேவை: சேனைக் கிழங்கு - 1/4 கிலோ, பச்சைப் பட்டாணி (ஊறவைத்தது) - 1/2 கப், உப்பு, மிளகுத் தூள், பெருங்காயத் தூள் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: சேனைக் கிழங்கை பட்டாணி சைஸில் நறுக்கிக் கொண்டு கொதிக்கும் தண்ணீரில் மஞ்சள் தூள், உப்பு, பட்டாணியுடன் சேர்த்துப் போட்டு உடனே இறக்கி வைக்கவும். கால் பாகம் வெந்தால் போதும். பின்பு சேனை, பட்டா ணியை நன்கு தண்ணீர் வடித்து ஒரு துணி யில் காற்றாட ஆறவைக்கவும். வாணலியில் எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் பட்டாணியையும் சேனையையும் ஓசை அடங்கும் வரை பொரித்து எடுத்து பொரித்த கறிவேப்பிலை, உப்பு, மிளகுத் தூள், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். ஊறவைத்த பட்டாணி யானால் தனியாகப் பொரித்தெடுத்துப் பின் கலக்கவும்.

சின்ன வெங்காய முருங்கை சாம்பார்!

தேவை: சின்ன வெங்காயம் - 100 கிராம், முருங்கைக்காய் - 2, புளிக்கரைசல் - 2 கப், வேகவைத்த துவரம் பருப்பு - 4 கப், உப்பு,நெய், பெருங்காயம் - தேவைக்கு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, வெல்லம் - சிறிதளவு. மசாலா அரைக்கத் தேவையானவை: மிளகாய் வற்றல் - 4, தனியா, சீரகம் - தலா 1 ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1/2 கப், தாளிக்க: கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: நெய்யில் கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சின்ன வெங்காயம், முருங்கைக்காயை வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். மசாலாப் பொருள்களை வறுத்து தேங்காய், பச்சை வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொதிக்கும் குழம்பில் போட்டு நன்கு கொதி வந்ததும் வெல்லம், வேக வைத்த துவரம் பருப்பு சேர்க்கவும்.கெட்டியானதும், கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

புளி இஞ்சி!

தேவை: புளிக்கரைசல் - 5 கப், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி - 1 கப், கீறிய பச்சை மிளகாய் - 5, மிளகாய்ப் பொடி- 1 டீஸ்பூன், உப்பு, வெல்லம் - தேவைக்கு, தாளிக்க: எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை: வாணலியில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து இஞ்சி, பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும். பின் புளிக்கரைசல் சேர்த்து உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து கெட்டியாகக் கொதித்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

கதம்ப சாம்பார்!

தேவை: வறுக்க: மிளகாய் வற்றல் -5, தனியா- 2 டீஸ்பூன், உ.பருப்பு, வெந்தயம், மிளகு - தலா லீ டீஸ்பூன், க.பருப்பு - 1 டீஸ்பூன், தேங்காய் - 1 மூடி, வெல்லம் - சிறிது, பெருங்காயத்தூள் - லி டீஸ்பூன், காய்கள் - கேரட், கத்தரிக்காய், குடைமிளகாய், பரங்கிக்காய், பூசணிக்காய். வேகவைத்த துவரம் பருப்பு - 4 கப், புளிக்கரைசல் - 3 கப், தாளிக்க: நெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி,உப்பு - தேவைக்கு

செய்முறை: வறுக்க வேண்டியவற்றை, சிவக்க வறுத்து, தேங்காய், வெல்லம் சேர்த்து மைய அரைக்கவும். காய்களை நெய்யில் வதக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும். பின், புளிக்கரைசல் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்ததும் அரைத்த பொடியைப் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு துவரம் பருப்பைப் போட்டுக் கெட்டியானதும் கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கித் தாளிக்கவும்.

மிளகுக் குழம்பு!

தேவை: மிளகு - 1கரண்டி, உ.பருப்பு, து.பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், புளிக் கரைசல் - 5 கப், சுக்கு - 1துண்டு (நசுக்கியது), கறிவேப்பிலை இலைகள் - 2 கப், சீரகம் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் -1 மேசைக்கரண்டி, நெய் -சிறிதளவு. தாளிக்க- கடுகு, சீரகம், பெருங்காயம்.

செய்முறை: சிறிதளவு நல்லெண்ணெயில் மிளகு, உளுத்தம் பருப்பு, தனியா, துவரம் பருப்பு ஆகியவற்றைச் சிவக்க வறுத்து, பின் சீரகம், சுக்கு, கறிவேப்பிலையுடன் நன்கு மைய தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை புளிக்கரைசலில் சேர்த்து உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும் நெய், நல்லெண்ணெய் கலக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்துப் பின் பரிமாறவும்.

வத்தக் குழம்பு!

தேவை: சுண்டைக்காய், மணத்தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் வற்றல்களில் ஏதேனும் ஒன்று - 1 கப், புளிக் கரைசல் - 6 கப், சாம்பார்ப் பொடி - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெல்லம் - 1 எலுமிச்சை அளவு, தாளிக்க: நல்லெண் ணெய், கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு.

செய்முறை: நல்லெண்ணெயில் கடுகு, து.பருப்பு, வெந்தயம், க.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து வற்றலை நன்றாக வறுக்கவும். பின் சாம்பார்ப் பொடி சேர்த்து ஒரு புரட்டு புரட்டவும். புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மூன்றில் ஒரு பங்கான பின் வெல்லம், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

பிட்லை!

வறுத்து அரைக்க: கறிவேப்பிலை, வெல்லம், பெருங் காயம் - சிறிதளவு, வர மிளகாய்- 6, தனியா - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2கப்.

தேவை: கீழ்க்கண்ட காய்களுள் ஏதேனும் ஒன்று வேகவைத்தது. பூசணிக்காய், பாகற்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் - 2 கப், புளிக்கரைசல் - 2 கப், துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு வேகவைத்தது - 2 கப், உப்பு - தேவையான அளவு, நெய், கடுகு, சீரகம், பெருங்காயம் கறிவேப்பிலை - தாளிக்க.

செய்முறை: அரவைக்குத் தேவையானவற்றை நெய் யில் வறுத்து, தேங்காய்த் துருவல் கறிவேப்பிலை, வெல்லம், பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக்கவும். காயை நீளவாக்கில் நறுக்கி வேகவைத்ததும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அரைத்த பொடி மற்றும் பருப்பைக் கொட்டி நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பின் பரிமாறவும்.

பொடி போட்ட பருப்பு சாம்பார்!

தேவை: முருங்கைக்காய் அல் லது விருப்பத்துக்குரிய காய் ஏதேனும் - 2 கப், சாம்பார்ப் பொடி - 2 டீஸ்பூன், துவரம் பருப்பு வேகவைத் தது - 4 கப், புளிக்கரைசல் - 2 கப், வெல்லம் - சிறிதளவு. உப்பு, பெருங் காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி- தேவையான அளவு, பச்சை மிளகாய் - 2 நீளவாக்கில் நறுக்கியது, தாளிக்க - நெய், கடுகு, வெந்தயம், சீரகம்.

செய்முறை: காயை நெய்யில் ஒரு வதக்கு வதக்கி தண்ணீர் ஊற்றி அரைவேக்காடு ஆனதும் புளித் தண்ணீர், சாம்பார்ப் பொடி, உப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மூன்றில் ஒரு பங் காகச் சுண்டியதும் வேகவைத்த து.பருப்பு, வெல்லம், பச்சைமிளகாய் சேர்த்து மேலும் இரண்டு கொதி வரவிடவும். கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளிப்பு சேர்த்து இறக்கவும்.

மோர்க்குழம்பு!

தேவை: கடைந்த தயிர் - 2 கப், து. பருப்பு, க.பருப்பு - தலா 1 டீஸ்பூன், தனியா, மிளகு, சீரகம், வெந்தயம்- தலா 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1துண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 1 மூடி, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தாளிக்க: கடுகு, சீரகம், பெருங்காயம், தே.எண்ணெய்.

செய்முறை: து.பருப்பு, க.பருப்பு, தனியா, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள் பொடியுடன் மைய அரைக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதுடன் தயிர் ஊற்றி இலேசாக ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்து மல்லித் தழை சேர்க்கவும்.

தக்காளி ரசம்!

தேவை: நாட்டுத் தக்காளி - 4, புளிக்கரைசல்- 1/2 கப், வேகவைத்த துவரம் பருப்புடன் தெளிந்த நீர் - 1 கப், மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன், தனியாப் பொடி, மிளகுத் தூள் - தலா 1 டீஸ்பூன், சீரகம் - 2 ஸ்பூன், தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, நெய், உப்பு, பெருங்காயம் - தேவைக்கு

செய்முறை: சிறிதளவு நெய்யில் மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து இலேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். புளிக்கரைசலில் நறுக்கிய தக்காளி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் துவரம் பருப்பு நீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பொடியைச் சேர்க்கவும். கொத்துமல்லி தூவி இறக்கவும். நெய் யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

மைசூர் ரசம்!

மசாலா அரைக்க: வர மிளகாய் - 4, தனியா, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - 2 கப், வேகவைத்து மசித்த துவரம் பருப்பு - 1 கப், உப்பு, வெல்லம், நெய் - தேவைக்கு, தாளிக்க: கடுகு, சீரகம், தேங்காய்த் துருவல், பெருங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: புளிக்கரைசலில் உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் மிளகாய், தனியா, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை நன்கு வறுத்து தேங்காய், வெல்லம் சேர்த்து நன்றாக மைய அரைத்து, கொதிக்கும் புளித்தண்ணீரில் போடவும். இரண்டு கொதி வந்ததும் வேகவைத்து மசித்த துவரம் பருப்பில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ரசத்தில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துப் பரிமாறவும்.

மிளகு ரசம்!

தேவை: புளிக்கரைசல் - 1 கப், மிளகு - 1 டீஸ்பூன், தனியா, து.பருப்பு - தலா 1/2 டீஸ்பூன், உப்பு, நெய், பெருங்காயம் - தேவைக்கு. தாளிக்க: கடுகு, சீரகம், கொத்து மல்லி, கறிவேப்பிலை.

செய்முறை: புளிக்கரைசலில் உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நெய்யில் தனியா, து.பருப்பு, மிளகு சேர்த்து நன்கு வறுத்துப் பொடி செய்து ரசத்தில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப் பிலை, பெருங்காயம் தாளித்து, கொத்துமல்லி தூவிப் பின் பரிமாறவும்.

லெமன் ரசம்!

தேவை: பாசிப் பருப்பு வேகவைத்த நீர் - 2 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, இஞ்சி நசுக்கியது - 1 துண்டு, மிளகு, சீரகப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு, நெய்- தேவைக்கு, தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயம் எலுமிச்சை - 1 பழம்

செய்முறை: சிறிதளவு தண்ணீரில் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து உப்பு, பெருங்காயம் போட்டு நன்கு கொதிக்க விடவும். இதில் பாசிப் பருப்பு நீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மிளகு, சீரகப் பொடி போட்டுப் பின்தாளித்து கொத்துமல்லி சேர்த்து இறக்கவும். சிறிது ஆறியபின் எலுமிச்சை பிழியவும்.

பாதுஷா

தேவை: மைதா - 1 கிலோ, டால்டா (அ) வெண்ணெய் - 250 கிராம், ஏலப்பொடி, ஆப்பசோடா - 1 சிட்டிகை, பேகிங் பவுடர் - 1/4 டீஸ்பூன், சர்க்கரை - 800 கிராம், அலங்கரிக்க: தேங்காய்ப் பூ (அ) செர்ரிப் பழம்

செய்முறை: வெண்ணெயுடன் ஆப்ப சோடா, பேகிங் பவுடர் சேர்த்து நுரை வரும் வரை கலக்கவும். மைதாவை இதன் மேல் தூவினாற்போல் சிறிது சிறிதாகச் சேர்த்து இலேசாகத் தண்ணீர் தெளித்து தளர்வாகப் பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பாதுஷா போல் செய்து வாணலியில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி பொரித்தெடுத்து, கம்பிப்பதம் போல் காய்ச்சி ஏலப்பொடி சேர்த்த சர்க்கரைப் பாகில் போடவும். பத்து நிமிடம் ஊறவைத்து, செர்ரிப் பழம் வைத்து ட்ரேயில் அடுக்கவும். பாதுஷா தயார்.

டிரை ஃப்ரூட்ஸ் பீடா!

தேவை: கல்கத்தா வெற்றிலை, சுண்ணாம்பு நீர், குல்கந்த், டூட்டி ஃப்ரூட்டி, வாசனைப் பாக்கு, டூத் பிக், கிராம்பு - தேவையான அளவு.

செய்முறை: வெற்றிலையைத் துடைத்து, சுண்ணாம்பு கலந்த நீரை தடவவும். வெற்றிலையின் நடுவில் குல்கந்த், டூட்டி ஃப்ரூட்டி, வாசனைப் பாக்கு வைத்து பீடா போல் மடித்து நடுவில் கிராம்பைச் செருகவும். பீடாவை டூத்பிக் குச்சியில் செருகி தட்டில் அடுக்கவும். தேவையெனில் கல்கத்தா மசாலாவையும் சேர்க்கலாம்.

செட்டிநாட்டு கோழி பிரியாணி

* 1. பாசுமதி அரிசி - 1 1/2 கப்
* 2. கோழி - 1/2 கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது)
* 3. வெங்காயம் - 1 (பெரிதாக நறுக்கியது)
* 4. தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)
* 5. பச்சை மிளகாய் - 5
* 6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
* 7. தேங்காய் பால் - 1 1/2 கப்
* 8. தண்ணீர் - 1 1/2 கப்
* 9. கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
* 10. தயிர் - 1/2 கப்
* 11. எண்ணெய் - 100 மில்லி
* 12. நெய் - 3 தேக்கரண்டி
* 13. உப்பு
* 14. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
* 15. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
* 16. கரம் மசாலா தூள் - 1/4 தேகரண்டி
* 17. பட்டை
* 18. லவங்கம் - 5
* 19. பிரியாணி இலை - 1
* 20. ஏலக்காய் - 3



* கோழியுடன் பாதி தயிர், மஞ்சள் தூள், பாதி உப்பு சேர்த்து கிளறி ஊறவிடவும்.
* அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
* இதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
* இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
* இத்துடன் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதம் உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி 3 நிமிடம் வைக்கவும்.
* நன்றாக குழைந்து மிளகாய் தூள் வாசம் போனதும், ஊற வைத்துள்ள கோழியை சேர்த்து வேக விடவும்.
* கோழி வெந்ததும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
* கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி முக்கால் பாகம் வேக விடவும்.
* இப்போது அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிறுந்தீயில் 10 - 15 நிமிடம் தம் போடவும்.
* சாதம் முழுதாக வெந்ததும் இறக்கி விடவும். சுவையான செட்டிநாட்டு கோழி பிரியாணி தயார்.

பட்டாணி சிக்கன் கைமா

பட்டாணி சிக்கன் கைமா
தேவையான பொருட்கள்;

* சிக்கன் (கொத்துக்கறி) – 250 கிராம்
* இஞ்சி , பூண்டு விழுது – 2 ஸ்பூன்
* பச்சை பட்டாணி – 1 கப்
* பட்டை,லவங்கம்,கிராம்பு – தலா 2
* தக்காளி - 2
* வொங்காயம் – 3
* பச்சை மிளகாய் – 5
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* மல்லித்தூள் - 2 ஸ்பூன்
* மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
* கரம்மசாலாத்தூள் – 1 ஸ்பூன்
* உப்பு - தேவைக்கு
* எண்ணெய் - தேவைக்கு
* கொத்தமல்லி - தேவைக்கு

செய்முறை:

*
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்து அதில் வொங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*
அத்துடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
*
அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், காரம்மசாலாத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டு நன்கு வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட்டு இறக்கினால் மிகவும் சுவையான பட்டாணி சிக்கன் கைமா ரெடி.

குறிப்பு:

* சிக்கனை தனியாக வேக வைத்தும் சேர்க்கலாம்.
* காளான், உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்

காலிப்பிளவர் சூப்

காலிப்பிளவர் சூப்
தேவையான பொருட்கள்:

* காலிப்பிளவர் - 1
* பாசிப்பருப்பு - 200 கிராம்
* வெங்காயம் – 250 கிராம்
* தக்காளி – 250 கிராம்
* பச்சை மிளகாய் – 10
* சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
* சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
* மஞ்சத்தூள் - 1/4 ஸ்பூன்
* சீரகம் - 1/2 ஸ்பூன்
* உப்பு - தேவைக்கு

தாளிக்க:

* வரமிளகாய் - 5
* பட்டை, இலை, மிளகு – சிறிது
* எண்ணெய் – தேவைக்கு
* கறிவேப்பிலை,கொத்தமல்லி



செய்முறை:

* ஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
*
பருப்பு ஒரு கொதி வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, ப.மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும்.
* பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலிப்பிளவரைச் (காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்) சேர்த்து நன்கு வேக விடவும். (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்)
* காலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
* வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாள்ளித்து சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார்.

செட்டிநாடு எலும்பு குழம்பு

செட்டிநாடு எலும்பு குழம்பு

mutton-elumbu-kuzhambu

செட்டிநாடு எலும்புக் குழம்பு இது மிகவும் சுவையாக இருக்கும். பாரம்பரியமான செட்டிநாடு சமையல் இதை எளிதில் செய்து விடலாம்.. நீங்களும் செய்து பாருங்கள். நான் சமைத்து ருசித்து பின்பு நீங்களும் செய்து ருசிப்பதற்காக செய்முறை இங்கே! நீங்களும் செய்து பாருங்கள்.நீங்களும் ருசிப்பிர்கள்

தேவையான் பெருட்கள்;-

ஆட்டு எலும்பு - 1/2 கிலோ

தூவரம் பருப்பு – 100 கிராம்

உருளைக்கிழங்கு - 150 கிராம்

கத்திரிக்காய் - 150 கிராம்

முருங்கைக்காய் - 2

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - கால் கிலோ

பச்சைமிளகாய் – 10

வரமிளகாய் - 10

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

பட்டை - 4

பிரியாணி-இலை – 1

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை;-


mutton-elumbu-khzhambu-1

ஒரு குக்கரில் ஆட்டு எலும்பு, தூவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள்தூள், சிறிது உப்பு, மற்றும் 5 கிளாஸ் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம்,சோம்பு, பட்டை,பிரியாணி இலை,பச்சைமிளகாய்,வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் வெங்காயம்(இரண்டும்),தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

அதில் கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,காய் நன்றாக வதங்கியதும்.

இந்த கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புக் கலவையை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும

நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சுவையான செட்டிநாடு எலும்புக் குழம்பு தயார்.

குறிப்பு;-

சாம்பார் தூளுக்கு பதில் மிளகாய்தூள்-2டீஸ்பூன்,மல்லிதூள்-3டீஸ்பூன் சேர்க்கலாம் அப்படி சேர்க்கும் போது மிளகாய் 10ஆக இருப்பதை 5ஆக குறைத்துக் கெள்ளவும்.

Sunday, February 19, 2012

வெட்கம் மானம் பார்த்தா பிழைப்பு நடத்த முடியுமா?

நமது ஊடகங்களிடம் ஒரு அசிங்கமான பழக்கம் உண்டு. அது யாதெனில் - தெரிந்தே, பரபரப்புக்காக - பலரின் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என்கிற நோக்கில் - தவறான ஒரு விஷயத்தை பிரசுரிப்பது. பிறகு சம்பந்தப்பட்டவர்கள் அந்த செய்தி குறித்து கண்டனம் தெரிவித்தால் - சற்றும் வெட்க மானமின்றி "தெரியாமல் நடந்துவிட்டதாக" தெரிந்தே செய்த அட்டூழியத்திற்கு "மன்னிப்பு" கேட்பார்கள். முக்கியமாக சினிமா தொடர்பில் இருப்பவர்கள் என்றால் - ஓரே கல்லில் பல மாங்காய் அடித்தது போல மகிழ்வார்கள். கவர்ச்சிக்கு கவர்ச்சி படம் போடலாம், பரபரப்பான செய்தியாகும், அந்த பரபரப்பில் நான்கு காசு பார்க்கலாம். பிறகு சம்பந்தப்பட்டவர்கள் கண்டனம் தெரிவித்தால்? காசா, பணமா. "மன்னிப்பு கேட்டால் போயிற்று".

தமிழில் கல்கி வார இதழை தவிர ஏனைய பத்திரிகைகள் - இந்த அசிங்கத்தை செய்ய தவறுவதோ, தயங்குவதோ இல்லை. அந்த வகையில் - குமுதம் சென்ற மாதம், தாம் வெளியிட்ட "ஸ்ரூதி தனுஷ் டேட்டிங்கா? கோபத்தில் ரஜினி குடும்பம்" தலைப்பிலான கட்டுரைக்கு ஒரு மாசம் கழித்து இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார்கள். அந்த கட்டுரை குறித்து ஸ்ருதி எழுதிய கடிதம்.

"ஆசிரியர் அவர்களுக்கு, சமீபத்தில் குமுதம் வார இதழில் 10.1.2012 தேதியிட்ட பதிப்பு ஸ்ரூதி தனுஷ் டேட்டிங்கா? கோபத்தில் ரஜினி குடும்பம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அவதூறை கிளப்பும் விதத்திலும் தவறாக சித்தரிக்கும் விதத்திலும் எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையை படித்து அதிர்ச்சி அடைந்தேன். கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் தவறானவை. என் பேருக்கும் புகழுக்கும் பெரியளவில் பங்கம் விளைவிப்பவை. சமுகத்தில் எனக்கிருக்கும் மதிப்பை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனது கடின உழைப்பாலும் ஏற்று கொண்ட தொழிலை மதித்து நடக்கும் தன்மையாலும் திரைத்துறையிலும் சமூகத்திலும் எனக்கு கிடைத்துள்ள நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்துவது தான் உங்கள் நோக்கம் என்பது இந்த கட்டுரையிலிருந்து வெளிப்படையாகவே தெரிகிறது.

கட்டுரையில் வரும் வாசகங்கள் தவறானவை என்ற போதிலும் அதை படிக்கும் திரைதுறையினரும் பொதுமக்களும் அவை அனைத்தும் உண்மை என்று நம்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே இந்த கட்டுரை பொதுமக்களை தவறாக வழி நடத்துவதற்கும் எனக்குள்ள சமூக அந்தஸ்தின் மீது சேற்றை வாரி இறைப்பதற்கான முயற்சி தான். கட்டுரையில் வரும் தவறான, உள்நோக்கத்துடன் கூடிய வாசகங்களும் குற்றச்சாட்டுகளும் துறைரீதியான எனது முன்னேற்றத்தில் சரி செய்ய முடியாத
சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மோசமான பாதிப்பை உண்டாக்கி உள்ளன.

மொத்தத்தில், இந்த கட்டுரை மூலம் எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். என்னை பற்றிய கட்டுரையில் சொல்லப்பட்ட வாசகங்கள் தவறானவை என்று வாசகர்கள் உணர செய்வது உங்கள் கடமை."

தனிப்பட்ட முறையில் ஷ்ருதியை காயப்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. ஆனால் எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. அந்த கட்டுரை ஷ்ருதியின் மனதை புண்படுத்தி இருந்தால் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். ஷ்ருதி ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தின் சுருக்கத்தையும் வெளியிட்டுள்ளோம். ஷ்ருதியின் திரை உலக பயணம் மட்டுமல்ல அவரது எதிர்கால வாழ்க்கை பயணமும் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம் வாழ்த்துகள். ஆசிரியர். "

பக்கத்திலிருந்து பார்த்தது போலோ அல்லது எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்தது போலோ எழுதவேண்டியது. பிறகு வருத்தம் தெரிவிக்க வேண்டியது. அநாகரீகமாக ஒரு செய்தியையும் போட்டு விட்டு,
"அவரது தொழிலும், வாழ்க்கையும் சிறப்பாக அமையவேண்டும் " என்று வாழ்த்துவது கபடத்தனம் இல்லையா? இப்படி எல்லாம் எழுதினால் ஒருவன் எப்படி அய்யா நன்றாக இருக்க முடியும்" என்கிற அறிவு வேண்டாம்.
உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு, வருத்தம் தெரிவித்து விட்டு - கொஞ்ச நாள் கழித்து, எந்த குற்ற உணர்வுமில்லாமல் - திரும்ப சில நாளில் ரஜினியிடம், தனுஷிடம், கமலிடம் அல்லது ஸ்ருதியிடம் வெட்கமின்றி பேட்டி என்று போவார்கள்.

"வெட்கம் மானம் எல்லாம் பார்த்து இருந்தால் அறுபது வருஷம் பத்திரிகை நடத்தி இருக்க முடியுமா" என்கிறார் மூத்த பத்திரிகையாளர்.மேற்கண்ட செய்தியை வாசித்ததும் - சென்ற மாதம் ஒரு வலைத்தளத்தில் குமுதம் ரிப்போர்டரில் பணிபுரிந்தவரின் கட்டுரை ஒன்றும், நான் சிறுவயதில் வாசித்த குமுதம் குறித்த தகவல்களும் ஞாபகத்திற்கு வந்தன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தருகிறேன்.

"என் கைப்பேசிக்கு அந்த அழைப்பு வரும் போது நேரம் நண்பகல் 12 மணிக்கு மேல் (2009, சன.29) இருக்கும். அன்று வியாழக்கிழமை. அப்போது நான் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ செய்தியாளர். வார இருமுறை வரும் அந்தப் பத்திரிகையின் அந்த இதழுக்கான இறுதிக் கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. என்னிடம் பேசிய ஒரு செய்தியாளர், ‘பெண்ணே நீ’ பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இலங்கைப் பிரச்னைக்காக நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்துவிட்டார் என்ற தகவலை சொன்னார்.

அந்த இதழுக்கான ‘வம்பானந்தா’வை (அரசியல் கிசுகிசு) மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த இணையாசிரிடம் போய் சொன்னேன். “சரியான பைத்தியகாரனா இருப்பான் போல,.. சரி.. எதுக்கும் எடிட்டரிடம் சொல்லிப் பாருங்கள். தீக்குளிப்பைப் பற்றி எழுத இடம் நிச்சயம் இருக்காது” என்றார்.
ஆசிரியரிடம் போனேன். பிழை திருத்திக் கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல் சொன்னார்: “இந்த இஸ்யூல சேக்க முடியாது. வம்பானந்தாவில் முடிஞ்சா சேக்கலாம். எதுக்கும் போட்டோகிராபரை மட்டும் அனுப்பி வைங்க”. திரும்பவும் இணையாசிரியரிடம் வந்தேன்.

“சரி, அப்போ போட்டோகிராபரை அனுப்புங்க.” என்றவரிடம், “நானும் போகட்டுமா சார்” என்றேன். “எதுக்கு வேஸ்ட்டா?" என்றார். குமுதம் அலுவலகத்தில் அன்று நடந்த நிகழ்வை தருகிறார் அந்த நிருபர். தீக்குளித்த முத்துக்குமார் செய்தது சரியா, தவறா என்கிற வாதத்தை தள்ளி வைத்துவிட்டு - ஈழத்தமிழர்களுக்காக தம் எதிர்ப்பை உயிர் தியாகம் செய்து காட்டிய நிகழ்வை அலட்சியமாய் பேசியவர்கள் - தங்களை தமிழர்கள் என்றோ, ஊடகக்காரர்கள் என்றோ சொல்ல அருகதை பெற்றவர்களா? நடிகை குறித்த சமாசாரம் என்றால் வேறு செய்தியை வெட்டி விட்டு போட்டிருக்க மாட்டார்கள்.

அதற்கு பிறகு அவர்கள் முத்துக்குமார் குறித்து எழுதிய கட்டுரைகள் எல்லாம் போலியாக, பாசாங்காக தானே இருக்க முடியும். எனது பதின்ம பருவத்தில் படித்த ஒரு செய்தி. குமுதத்தில் பணிபுரிந்த - அந்த எழுத்தாளருக்கு ஒரு வாசகர் கூட்டம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு - அந்த எழுத்தாளர் குமுதத்தில் பணி புரிவது ஏற்புடையதாக இல்லை. ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது, ஒரு வாசகர் "குமுதம் மாதிரி குப்பை பத்திரிகைல வேலை செய்யணுமா" என்று கேட்டார்.

அதற்கு அந்த எழுத்தாளர், "பத்திரிகை குப்பை தான். என் படைப்பு குப்பையா, குப்பை இல்லையா" என்று மட்டும் பாருங்க என்றார் நறுக்கென்று - நியாயமாய். இந்த செய்தி ஆசிரியரின் காதுக்கு போக, அந்த எழுத்தாளர் விசாரிக்கப்பட்டார். "நீங்க அப்படி சொல்லி இருக்கக்கூடாது" என்றார் ஆசிரியர். "நான் உண்மையை தானே சொன்னேன்" என்று வெளியேறினார் - வேலையை விட்டும்.

நான்கு நடிகைகளின் முதுகில் இருந்து இடுப்பு வரையிலான பின் பகுதியை வெளியிட்டு, "யார் இந்த நடிகைகள்" என்கிற அசிங்கமாக கேட்ட கேள்வியை மனதில் கொண்டு தான் (இந்த தகவலை இன்னுமொரு வலைத்தளத்திலும் வாசித்தேன்) கோபத்தில் அந்த வாசகர், "குமுதம் மாதிரி குப்பை பத்திரிகையில் வேலை செய்யணுமா" என்று கேட்டார். இந்த சம்பவம் நடந்து இருபத்தி ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன். ஆனால் அவர்கள் இன்னும் நடிகைகளின் முந்தானைக்குள் இருந்து வரவே இல்லை.

ஒரு தாய் தன் மகளுக்கு கூறிய அறிவுரைகள்

அந்தக் காலத்தில் ஒரு தாய் தன் மகளுக்கு, அவள் புகுந்த வீடு செல்லும் போது கூறிய அறிவுரைகள் சிவபுராணத்தில் உள்ளது.

பெரும்பாலும் இந்தக் கால தாய்மார்கள், தன் மகளுக்கு புகுந்த வீடு செல்லும்போது கூறும் அறிவுரைகளைக் கலிபுராணமாகக் கொள்ளலாம்.

சிவபுராணம்: கணவனிடம், வீட்டில் இந்தப் பொருள் இல்லை" என்று கூறாமல், வாங்க வேண்டும்" என்று கூறு.

கலிபுராணம்: எந்தப் பொருளும் வாங்கவில்லை; அதனால் அது இல்லை, இது இல்லை" என்று புலம்பு.

சிவபுராணம்: கணவன் வெளியிலிருந்து வந்தவுடன் களைப்புத்தீர உபசரி!

கலிபுராணம்: கணவன் வெளியிலிருந்து வந்தவுடன் நீ களைப்புடன் இருப்பதாகக் கூறு. அப்போதுதான் ஹாய்யாக இருக்க முடியும்.

சிவபுராணம்: கணவன் உன்னைக் காரணமின்றி கடிந்தாலும் சாந்தமாயிரு.

கலிபுராணம்: கணவன், உன்னைக் கடிந்து கொள்ளும் முன் நீ முந்திக் கொள்.

சிவபுராணம்: கணவன் வெளியூரிலிருந்து வந்தவுடன் கால் மேல் கால் போட்டு உட்காராதே. எழுந்து நின்று விட்டு பிறகு உட்கார். கணவன் உனக்கு குரு.

கலிபுராணம்: கணவனும், நீயும் எல்லாவிதத்திலும் சரிசமம். அதனால் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து பதில் சொல்; தப்பேதுமில்லை!

சிவபுராணம்: கணவனின் பந்துக்களை உபசரி.

கலிபுராணம்: கணவனின் பந்துக்களை நெருங்கவே விடாதே. முக்கியமாக கணவனின் கூடப் பிறந்த சகோதரிகளை!

சிவபுராணம்: கணவனை பெயரிட்டோ, நீ என்று ஒருமையிலோ பேசாதே.

கலிபுராணம்: கணவனைப் பெயரிட்டு, ‘நீ’ என்று ஒருமையிலேயே கூப்பிடு. அப்போதுதான் அடங்கிப் போவான்.

சிவபுராணம்: சிரமமாயினும் அவன் ஆணையை நிறைவேற்று.

கலிபுராணம்: உன் ஆதிக்கத்தை, அதிகாரத்தை ஆரம்ப முதலே அவன் மேல் செலுத்தப் பழகு.

சிவபுராணம்: இரவில் பின் தூங்கி, காலை முன் எழுந்திரு.

கலிபுராணம்: இரவில் சீக்கிரம் படுத்து காலையில் நேரம் கழித்து எழுந்திரு. பெட் காஃபி உனக்கே!

- பரிமளா பாலசுப்ரமணியம், பெங்களூரு-16

சுவை தரும் சொதிக் குழம்பு!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத் திருமணங்களில் சொதிக்குழம்பு எப்படியிருந்தது என்பதை வைத்துத்தான் முழு கல்யாண விருந்தையே எடை போடுவார்கள்... இதோ சுவையான சொதிக் குழம்பு செய்முறை!

தேவையான பொருள்கள்

தேங்காய் - 1, கத்தரிக்காய் - 2, முருங்கைக்காய் - 1, கேரட் - 1, பட்டர்பீன்ஸ் - 50 கிராம், பட்டாணிப் பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய்- 2, பச்சை மிளகாய் - 2, சிறிய வெங்காயம் - 6, இஞ்சி- சிறிய துண்டு, பூண்டு - 5 பல், எலுமிச்சம் பழம்- 1, கடுகு, உ.பருப்பு, வற்றல், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய்த் துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு தம்ளர் நீர் விட்டு அரைக்கவும். பின் அதைப் பிழிந்து பால் எடுக்கவும். இந்த முதல் பாலை தனியாக பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். சக்கையை மீண்டும் இரு முறை அரைத்து பால் எடுத்து தனித்தனி பாத்திரத்தில் வைக்கவும்.

காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், உரித்த பூண்டு, இஞ்சியை வதக்கிக் கொள்ளவும். மூன்றாவதாக எடுத்த பாலில் காய்கறிகளை வேகவைக்கவும். வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை அதில் சேர்த்து வேகவிடவும். கொஞ்சம் தேங்காய்த் துருவலில் இரண்டு மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் சேர்க்கவும். கொதிக்கும் பொழுது அதனுடன் முதலாவது எடுத்த பாலைச் சேர்க்கவும். இதனைக் கொதிக்கவிடக் கூடாது. லேசாக நுரைத்து வரும் போது இறக்கி விடவும். பின்னர் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் இவற்றைத் தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து குழம்பில் விடவும். சுவையான சொதி தயார். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வாழைக்காய் சிப்ஸ், இஞ்சித் துவையல் போன்றவற்றின் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்!

-ரா.சுப்புலட்சுமி, தூத்துக்குடி

நாய் நோய் ஜாக்கிரதை!

கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், செல்லப் பிராணிகளை... குறிப்பாக நாய்களை வளர்க்கும் மோகம் அதிகரித்துவருகிறது. பாதுகாப்புக்காக மட்டும் அல்ல... பாசம் காட்டவும் இப்போது நாய்களே துணை.
இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். காரணம், 'செல்லப் பிராணிகளை ஒருவர் வளர்க்கும்போது அவரது உயர் ரத்த அழுத்தம் குறைவதுடன் சிந்தனைத் திறனும் மேம்படும்’ என்பது அவர்களின் கருத்து. அதேநேரம், இந்த செல்லப் பிராணிகளுக்கு முறையாகத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்காமல் இருந்தால், அவற்றிடம் இருந்து மனிதர்களுக்குத் தொற்றுநோய் பரவுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதுபற்றி தமிழ்நாடு கால்நடைச் சிகிச்சைத் துறையின் இயக்குநர் டாக்டர் எஸ்.பிரதாபன் அக்கறையோடு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகளைக் கொடுத்தார்.
'நாய், குட்டியாக இருக்கும்போது இதன் வயிற்றில் உருண்டைப் புழு இருக்கும். நாயைக் கொஞ்சும்போது இந்தப் புழுவின் முட்டை நம் கைகளில் படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தப்பித்தவறி இந்த முட்டை நம் வயிற்றுக்குள் சென்றால், உடலில் ஆங்காங்கே சின்னச் சின்னக் கட்டிகள் தோன்றும். கண்களைக்கூட இந்தக் கட்டி விட்டுவைக்காது. எனவே, குட்டி பிறந்த 30-வது நாளில் இந்தப் புழு நீக்கத்துக்கான மருந்து கொடுக்க வேண்டும். பின்னர், ஒரு வருடம் வரை மாதத்துக்கு ஒரு முறையும், ஒரு வருடத்துக்குப் பின்னர் அதன் ஆயுட்காலம் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் இந்தப் புழுவை நீக்குவதற்கான மருந்தைக் கொடுத்துவர வேண்டும்.
சிறுநீர் மற்றும் காலைக் கடன்களை கழிக்க நாயை வீட்டுக்கு வெளியில் அழைத்துச் செல்வதுதான் சிறந்த பழக்கம். ஒருவேளை வெளியில் அழைத்துச்செல்ல நீங்கள் விரும்பாவிட்டால், வீட்டின் சுற்றுப்புறத்திலேயே நாய் காலைக் கடன் முடித்ததும் உடனடியாக அதனை அப்புறப்படுத்திவிட வேண்டும். இல்லை என்றால், அதன் கழிவுகளில் தெள்ளுப்பூச்சி என்ற ஒரு வகைப் பூச்சி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துவிடும். அஜாக்கிரதையின் காரணமாக, இந்த முட்டை மனிதர்களின் வயிற்றுக்குள் செல்லும்போது மூளை, நுரையீரல் போன்ற இடங்களில் கட்டி வளர வாய்ப்பு உள்ளது. தற்போது உருண்டைப் புழு, நாடாப் புழு மற்றும் கொக்கிப் புழு ஆகிய மூன்றுக்கும் சேர்த்தே தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த மருந்துகளைப் பயன்படுத்தி குடற்புழுக்களை நீக்க முடியும். ஒரு வருடம் வரை மாதத்துக்கு ஒரு முறையும் ஒரு வருடத்துக்குப் பின்னர் அதன் ஆயுட்காலம் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் குடற்புழு நீக்கத்துக்கான மருந்தைக் கொடுத்துவர வேண்டும்.
பல்வேறு விலங்குகளுக்கு வெறிநோய் (Rabies) ஏற்பட்டாலும், நாயின் மூலம்தான் மனிதனுக்கு இந்த நோய் அதிகமாகப் பரவுகிறது. பெரும்பாலும் வெறிநோயானது தெருநாய்களிடம் இருந்தே வீட்டில் வளர்க்கும் நாய்களுக்குப் பரவும். எனவே, தெருநாய்களிடம் வீட்டில் உள்ள நாய்களைப் பழகவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதே போல வெறிநோய்க்கான தடுப்பு ஊசியையும் நாய்க்குப் போட வேண்டும். குட்டி பிறந்த மூன்றாவது மாதத்தில் முதல் ஊசியும், பின்னர் வருடத்துக்கு ஒரு முறையும் வெறிநோய்த் தடுப்பு ஊசி போட வேண்டும்.
நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு நாய்களின் உடலில் உண்ணி அதிகமாகப் பெருகும். இந்த உண்ணி மூலம் நாய்க்கும் நாயிடம் இருந்து மனிதனுக்கும் பலவிதமான நோய்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே, வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ நாயை சுத்தமாகக் குளிப்பாட்ட வேண்டும். அப்படிக் குளிப்பாட்டும்போது, நாம் பயன்படுத்தும் சோப்பை நாய்க்குப் பயன்படுத்தக் கூடாது.
இப்படி சுகாதாரத்தோடு வளர்க்கப்படும் நாய் கடித்தாலும் பயப்படத் தேவை இல்லை. ஒருவேளை அந்த நாய் வெறிநோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், மருத்துவரிடம் சென்று தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கானத் தடுப்பு ஊசி இலவசமாக போடப்படுகிறது!' என்கிறார் டாக்டர் எஸ்.பிரதாபன்.

Thursday, February 9, 2012

மைசூர் மசாலா தோசை

மசாலா தோசை செ‌ய்‌திரு‌ப்‌பீ‌‌ர்க‌ள், மைசூ‌‌ர் மசாலா தோசை சா‌ப்‌பி‌ட்டிரு‌ப்‌பீ‌ர்களா? உ‌‌ங்களு‌க்காக‌த்தா‌ன் இ‌‌ந்த மைசூ‌ர் மசாலா தோசை.

தேவையான பொருட்கள் :


பச்சரிசி - 1 கப்
அரிசி அவல் - அரை கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
வெந்தயம் - அரை தே‌க்கர‌ண்டி
துவரம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
மெல்லிய ரவை - 2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - அரை தே‌க்கர‌ண்டி

செய்முறை :

அரிசியையும், வெந்தயத்தையும், பருப்பு வகைகளையும் கலந்து 2 அல்லது 3 மணி நேரம் ஒன்றாக ஊற வைக்கவும்.

அவலை தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து எல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மறக்காமல் உப்பு சேருங்கள்.

மாவை புளிக்க வைக்கவும். மறுநாள் காலை தோசை ஊற்றுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தோசை மாவுடன் ரவை, சர்க்கரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு கூடுமானவரை மிக மெல்லியதாக தோசை ஊற்றவும்.

தோசை நன்றாக சிவந்த பிறகு எண்ணெயை சுற்றி விடவும் ( திருப்பி போட வேண்டாம் ). ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு மசாலா உள்ளே வைத்து சிறிது வெண்ணெயை மேலே வைக்கவும். முக்கோணமாக மடித்து தேங்காய் சட்டினி, சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

குழிப் பணியாரம்

தேவையானவை:

1. 1 1/2 கப் பச்சரிசி
2. 1 1/2 புழுங்கல் அரிசி
3. 1/2 கப் உளுத்தம் பருப்பு
4. சிறிது வெந்தயம்
5. வெல்லம் ‍
6. உப்பு
7. பச்சை மிளகாய்
8. தேங்காய் துருவல்
9. கறிவேப்பிலை


செய்முறை:

* இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும்.
* பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை போல‌ஆட்டாமல், அதற்குமுன்னாலேயே கிரைண்டரை நிறுத்தி விடவும்.
* சிறிது உப்பு சேர்த்து, மாவைக் கரைத்து புளிக்க வைக்கவும்.


ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கான்ஸப்ட் இங்கயும் அப்ளை பண்ணலாம் :)

முதல் மாங்காய்: இனிப்புப் பணியாரம்

* வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரையும் வரை விடவும்.
* புளித்த மாவை தேவையான அளவு எடுத்து, தேங்காய் துருவல் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
* அதில் வெல்லக் கரைசலையும் சேர்த்து ஓரளவுக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.


இரண்டாவது மாங்காய்: வெள்ளை

* வானலியில் சிறிது எண்ணைய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுவெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* புளித்த மாவைத் தேவயான அளவு எடுத்து, நீர், உப்பு, தேங்காய் துருவல் சிறிது, மற்றும் தாளித்தவைகளைச் சேர்த்துக் கலக்கவும்.


இப்ப பணியாரம்:

* அடுப்பில் குழிப் பணியாரச் சட்டியை வைத்து, அனைத்துக் குழிகளிலும் சிறிதுஎண்ணைய் விடவும்.
* சட்டி சூடானவுடன், சிறு குழிக் கரண்டியில் எடுத்து ஊற்றவும்.
* சிறிது நேரம் கழித்து கருது ஒரு மூலையில் பிடித்து அப்படியே அலாக்காகதூக்கித் திருப்பி விடவும்.
* சில விநாடிகளில் பணியாரம் ரெடி.

Friday, February 3, 2012

Useful Tips for Nava Graha Temples Visit

Details about Nava Graha temples
Surya (Sun)
Chandra (Moon)
Chevaai (Mars) ( Mangala in Kannada)
Budhan (Mercury)
Guru (Jupiter)
Shukran (Venus)
Shani (Saturn)
Rahu
Ketu

1. Suriyanaar Temple (SUN ):
As per sastra, first you have to visit THIRUMANGALAKUDI temple (Lord Peraana Nateshwarar & Magalambigai), and only after that you have to go to SURIYANAAR Temple.
Temple Timings for Abishegam: Sunday 5.30 AM &5.30 PM
All other days: 7.30 AM,10.30 AM &5.30 PM

2. Thiru Kanjanoor ( SUKKIRAN- Venus)

Its only 2 Kms to the east of Suriyanar temple.
Worship Timings: 7.00 AM to 12.30 PM
4.00 PM to 8.00 PM
3. Thingalur (Moon)
Worship Timings: 7.00 AM to 8.00 PM

4. Aalangudi (GURU-Jupitor)
Abishegam Timings: 8.00 AM , 12.00 Noon & 4.00 PM

5. Vaithishwaran Koil ( Chevai – Mars)
Worship Timings: 6.00 AM to 1.00 PM
4.00 PM to 9 PM
6. Thiru Venkadu (Bhudan- Mercury )
Worship Timings: 6.00 AM to 12.00 Noon
4.00 PM to 9.00 PM
7. Thiru Nallar (SANI-Saturn)
Worship Timings:
Saturday :6 AM to 9.00 PM
Other days 6.00 AM to 1.00 PM
4.00 PM to 9.00 PM
Marahatha Linga Pooja is the Speciality here

8. Thiru Nageshwaram (Raaghu)
Worship Timings: 6.00 AM to 1.00 PM
4.00 PM to 8.30 PM

Abishegam will be done only at Raaghu Kalam of that day, so try to visit the temple at Raaghu Kalam.



9.Keel PerumPallam (Keethu)
Worship Timings: 7.00 AM to 12.00 Noon,4.00 PM to 8.00 PM

Abishegam will be done only at Raaghu Kalam of that day, so try to visit the temple at Raaghu Kalam.
===================================================================================
Note to Visiters:

Trichy ,Tanjore and Kumbakonam are neighbouring cities. you can stay at Kumbakonam to visit all Nava Graha temples around the city. It will take 2 days to cover all the temples. Nava Graha temples visit will also be arranged by the Hotal travel Department on request.


Hotel address :
Hotel Chela, Phone : 0435-2430336, 2400526 to 2400530, Mobile: 99443 04657
No.9, Aayar Kulam Road
Kumbakonam.
Room Charges : A/c Double Room.Rs.850 + tax. (24 hours Check out). Please do reservation.

Friday, January 27, 2012

மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்: ............வேர்க்கடலை கட்லெட்:

மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்



தேவையானவை: முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ (கலந்தது) - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், சுத்தம் செய்த முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி... உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

அல்சர் பிரச்னை இருப்பவர்களுக்கு இது சிறந்த கை மருந்து!

- வே.சித்ரா வேடியப்பன், திருவண்ணாமலை

வேர்க்கடலை கட்லெட்

தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 3, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 5, பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - கொத்தமல்லி - கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பொடி செய்த வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இந்தக் கலவை ஆறியவுடன் சிறு சிறு வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.

பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். தட்டிய வடைகளை அதில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் இதற்கு சரியான சைட் டிஷ்!

- சுபஸ்ரீ பரத்வாஜ், வளசரவாக்கம்