Tuesday, April 26, 2011

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் மற்றும் அத் திரைப்படங்கள் வெளியான வருடங்கள்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் ( எம்.ஜி.ஆர்.) நடித்த திரைப்படங்கள் மற்றும் அத் திரைப்படங்கள் வெளியான வருடங்கள் ஆகியவற்றை இங்கே உங்கள் பார்வைக்கும் ஞாபகத்திற்கும் அளித்திருக்கிறோம்...
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்.

1. சதி லீலாவதி -1936
2. இருசகோதரர்கள் -1936
3. தட்சயக்ஞம் -1938
4. வீரஜகதீஷ் -1938
5. மாயாமச்சேந்திரா -1939
6. பிரகலாதா-1939
7. வேதவதி(அ) சீதாஜனனம் -1941
8. அசோக்குமார் -1941
9. தமிழறிவும் பெருமாள் -1941
10. தாசிப்பெண் (அ) ஜோதிமலர் -1943
11. அரிச்சந்திரா -1944
12. சாலிவாகணன் -1945
13. மீரா -1945
14. ஸ்ரீ முருகன் -1946
15. ராஜகுமாரி -1947
16. பைத்தியக்காரன் -1947
17. அபிமன்யு -1948
18. மோகினி -1948
19. ராஜமுக்தி -1948
20. ரத்னக்குமார் -1949
21. மருதநாட்டு இளவரசி -1950
22. மந்திரிகுமாரி -1950
23. மர்மயோகி -1951
24. ஏக்தா ராஜா -1951 (இந்தி)
25. சர்வாதிகாரி -1951
26. சர்வாதிகாரி -1951 (தெலுங்கு)
27. அந்தமான் கைதி -1952
28. குமாரி -1952
29. என் தங்கை -1952
30. நாம் -1953
31. ஜெனோவா -1953(மலையாளம்)
32. ஜெனோவா -1953
33. பணக்காரி -1953
34. மலைக்கள்ளன் -1954
35. கூண்டுக்கிளி -1954
36. குலோபகாவலி -1955
37. அலபாபாவும் 40 திருடர்களும் -1956
38. மதுரை வீரன் -1956
39. தாய்க்குப் பின் தாரம் -1956
40. சக்கரவர்த்தி திருமகள் -1957
41. ராஜராஜன் -1957
42. புதுமைப்பித்தன் -1957
43. மகாதேவி -1957
44. நாடோடி மன்னன் -1958
45. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959
46. பாக்தாத்திருடன் -1960
47. ராஜா தேசிங்கு -1960
48. மன்னாதி மன்னன் -1960
49. அரசிளங்குமரி -1961
50. திருடாதே -1961
51. சபாஷ் மாப்ளே -1961
52. நல்லவன் வாழ்வான் -1961
53. தாய்சொல்லைத் தட்டாதே -1961
54. ராணி சம்யுக்தா -1962
55. மாடப்புறா -1962
56. தாயைகாத்த தனையன் -1962
57. குடும்பத்தலைவன் -1962
58. பாசம் -1962
59. விக்கிரமாதித்தன் -1962
60. பணத்தோட்டம் -1963
61. கொடுத்து வைத்தவன் -1963
62. தர்மம் தலைகாக்கம் -1963
63. கலை அரசி -1963
64. பெரிய இடத்துப் பெண் -1963
65. ஆனந்த ஜோதி -1963
66. நீதிக்கு பின் பாசம் -1963
67. காஞசித் தலைவன் -1963
68. பரிசு -1963
69. வேட்டைக்காரன் -1964
70. என் கடமை -1964
71. பணக்காரக் குடும்பம் -1964
72. தெய்வத்தாய் -1964
73. தொழிலாளி -1964
74. படகோட்டி -1964
75. தாயின் மடியில் -1964
76. எங்க வீட்டுப் பிள்ளை -1965
77. பணம்படைத்தவன் -1965
78. ஆயிரத்தில் ஒருவன் -1965
79. கலங்கரை விளக்கம் -1965
80. கன்னித்தாய் -1965
81. தாழம்பூ -1965
82. ஆசைமுகம் -1965
83. அன்பே வா -1966
84. நான் ஆணையிட்டால் -1966
85. முகராசி -1966
86. நாடோடி -1966
87. சந்திரோதயம் -1966
88. தாலி பாக்கியம் -1966
89. தனிப்பிறவி -1966
90. பறக்கும் பாவை -1966
91. பெற்றால் தான் பிள்ளையா? -1966
92. தாய்க்கு தலை மகன் -1967
93. அரச கட்டளை -1967
94; காவல்காரன் -1967
95. விவசாயி -1967
96. ரகசிய போலீஸ்115 -1968
97. தேர்த்திருவிழா -1968
98. குடியிருந்த கோயில் -1968
99. கண்ணன் என் காதலன் -1968
100. ஒளிவிளக்கு -1968
101. கணவன் -1968
102. புதிய பூமி -1968
103. காதல் வாகனம் -1969
104. அடிமைப் பெண் -1969
105. நம்நாடு -1969
106. மாட்டுக்கார வேலன் -1970
107. என் அண்ணன் -1970
108. தலைவன் -1970
109. தேடிவந்த மாப்பிள்ளை -1970
110. எங்கள் தங்கம் -1970
111. குமரிக்கோட்டம் -1971
112. ரிக் ஷாக்காரன் -1971
113. நீரும் நெருப்பும் -1971
114. ஒரு தாய் மக்கள் -1971
115. சங்கே முழங்கு -1972
116. நல்ல நேரம் -1972
117. ராமன் தேடிய சீதை -1972
118. நான் ஏன் பிறந்தேன் -1972
119. அன்னமிட்டகை -1972
120. இதய வீணை -1972
121. உலகம் சுற்றும் வாலிபன் -1973
122. பட்டிக்காட்டுப் பொன்னையா -1973
123. நேற்று இன்று நாளை -1974
124. உரிமைக்குரல் -1974
125. சிரித்து வாழவேண்டும் -1974
126. நினைத்ததை முடிப்பவன் -1975
127. நாளை நமதே -1975
128;. இதயக்கனி -1975
129. பல்லாண்டு வாழ்க -1975
130. நீதிக்கு தலைவணங்கு -1976
131. உழைக்கும் கரங்கள -1976
132. ஊருக்கு உழைப்பவன் -1976
133. நவரத்தினம் -1977
134. இன்று போல் என்றும் வாழ்க -1977
135. மீனவ நண்பன் -1977
136. மதுரை மீட்டிய சுந்தரப்பாண்டியன் -1977

தெலுங்கு மொழி மாற்றப்படங்கள்

1.அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும); -1956
2.சாகச வீருடு (மதுரை வீரன்) -1956
3.ராஜபுத்திரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) -1957
4.மகாதேவி (மகாதேவி) -1958
5.வீரகட்கம் (புதுமை பித்தன்) -1958.
6.அனகா அனகா ஒக ராஜு (நாடோடி மன்னன்) -1959
7.பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) -1960
8.தேசிங்கு ராஜூ கதா (ராஜா தேசிங்கு) -1961
9.ஜெபு தொங்கா (திருடாதே) -1961
10.கத்திபட்டின தைது(அரசிளங்குமரி)-1961
11.யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) -1962
12.வீர பத்ருடு (தாயைக்காத்த தனையன்) -1962
13.பாக்கிய வந்தலு (நலலவன் வாழ்வான்) -1962
14.இத்தரு கொடுக்குலு (தாய்சொல்லை தட்டாதே) -1962
15.ராஜாதி ராஜூ கதா(ராஜராஜன்) -1963
16.அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) -1963
17.தியாகமூர்த்திலு (மாடப்புறா) -1963
18.ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) -1964
19.ஹந்தரு டெவரு (தர்மம் தலைகாக்கும்) -1954
20.தொங்கலு பட்டின தொரா (நீதிக்குபின் பாசம்) -1954
21.தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) -1964
22.இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) -1964
23.முக்குரமமாயிலு மூடு ஹத்யலு (பரிசு) -1964
24.வீரமார்த்தாண்டா (விக்கிரமாதித்தன்) -1965
25.கராணா ஹத்தகுடு (என் கடமை) -1965
26.சுதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) -1965
27.காலம் மாறிந்தி (படகோட்டி) -1966
28.எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) -1966
29.தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்குத் தலைமகன்) -1967
30.காலச்சக்கதரம் (பணம் படைத்தவன்) -1967
31.அந்துலேயணி ஹந்துடு (தாயின் மடியில்) -1967
32.பெண்ளண்டே பயம் (சந்திரோதயம்) -1967
33.நாமாட்டண்டே (நான் ஆணையிட்டால்) -1967
34.பொண்டி பில்லா (பறக்கும் பாவை) -1967
35.சபாஷ் தங்கா (தனிப்பிறவி) -1967
36.தோப்பிடி தொங்கலு (முகராசி) -1968
37.விசித்திர சோதரலு (குடியிருந்த கோயில்) -1968
38.மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) -1968
39.ஸ்ரீமந்தலு (பணக்கார குடும்பம்) -1968
40.தொப்பகு தொப்பா (ஆசைமுகம்) -1968
41.ரைவர் மோகன் (காவல்காரன்) -1969
42.கொண்ட இன்டிசிம்மம் (அடிமைப்பெண்) -1969
43.பிரேம மனசுலு (அன்பே வா) -1969
44.எவரிபாப்பாய் (பெற்றால் தான் பிள்ளையா) -1970
45.விசித்திர விவாகம் (கண்ணன் என் காதலன்) -1970
46.கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) -1971
47.செகன்ராபாத் சி.ஐ.டி. (தலைவன்) -1971
48.பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) -1972
49.பிராண சினேகிதுலு (நல்ல நேரம்) -1972
50.சிக் ஷ் ராமுடு (ரிக் ஷாக்காரன்) -1972
51.லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) -1973
52.கைதி பென்ட்ளி (கணவன்) -1975
53.மஞசிகோசம் (அன்னமிட்டகை) -1975
54.ரங்கோள ராணி (குமரிக்கோட்டம்) -1975
55.காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) -1976
56.பிரேமா தர்மமா (இதயக்கனி) -1976
57.வஞ்ரால தொங்கா (நினைத்ததை முடிப்பவன்) -1976
58.எதுருலேனி கதாநாயகுடு (இன்றுபோல் என்றும் வாழ்க) -1978
59.தர்மாத்முடு (நேற்று இன்று நாளை) -1978
60.அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) -1978

இந்தி மொழி மாற்ற படங்கள்

1.குல்-இ-பகாவலி (குலேபகாவலி) -1956
2.பாக்தாத் (பாக்தாத்திருடன்) -1961
3.மேரிபஹன் (அரசிளங்குமரி) -1962
4.ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) -1963
5.நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) -1966
6.கோயி குலாம் நஹீ (அடிமைப் பெண்) -1970
7.ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) -1974
8.ரங்கீன் துனியா (உலகம் சுற்றும் வாலிபன்) -1975
9.லவ் இன் காஷ்மீர் (இதயவீணை) -1976

கருணாநிதி அரசின் ஐந்தாண்டு சாதனைகள்

கருணாநிதி அரசின் ஐந்தாண்டு சாதனைகள் :
1.ஸ்பெக்ட்ரம் மூலம் ஒருலட்சத்து எலுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் சுருட்டியது (அமெரிக்க பத்திரிக்கை வரை தமிழனை அறிமுகபடுத்தியது)
2.இரண்டு மகன்கள் ஒரு மகள் பேரன் முதலானோருக்கு பதவி
3.குடும்ப சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது
4.ஐந்தாண்டுகளில் 634 பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்கியது
6.ஐந்தாண்டுகளில் ஏழு உலக புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது
7.ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
8.கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்காமல் அடுத்த கட்சியினரை விலைக்கு வாங்கியது (மதிமுக கூட்டரத்தையே காலி பண்ணிய புண்ணியவான்)
9.ஒட்டு மொத்த ஊடகத்தையும் (பத்திரிக்கை ,தொலைக்காட்சி உட்பட) தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
10.ஓட்டுக்கு பணம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கே அறிமுகபடுத்தியது
11.ஐந்தாண்டு காலம் தினம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் (சென்னையை தவிர) இதுதான் மிகப்பெரிய சாதனை
12.பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரம் ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசு இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு
13.அரைமணி நேரம் உண்ணாவிரதம் (கின்னஸ் சாதனை இதுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை) இருந்து இலங்கை போரை நிறுத்தியதாக நாடகம் ஆடியது
14.அரசு பணத்தை செலவு செய்து கோவையில் குடும்ப மாநாடு நடத்தியது(தனது குடும்பம் மட்டும் பார்த்து ரசிக்க தனி மேடை)
15.அரசு பணத்தில் இலவச டிவி கொடுத்து கேபிள் இணைப்பை தனது பேரன்கள் மூலம் குடுத்து (சுமங்கலி கேபிள், ராயல் கேபிள்) குடும்ப வருமானத்தை பெருக்கியது
16.மனைவி, துணைவி, பெரியமகன், சின்னமகன், பேரன்கள், ஆகியோர் இடையே சண்டை சச்சரவுகள் வராமல் தமிழ் நாட்டை தனித்தனி மண்டலங்களாக பிரித்து கொடுத்தது (ஐந்தாண்டு காலம் இவர் இதற்க்கு தான் அதிக நேரம் செலவிட்டார்)
17.இலவசங்கள் கொடுத்து ஆட்சியை பிடிக்கலாம் என நிரூபித்த மேதை
இன்னும் நிறைய சாதனைகள் செய்துள்ளார் எழுதிக்கொண்டே போகலாம் தமிழக மக்களே மீண்டும் இவரை ஆறாவது முறையாக முதல்வராக்கினால் இது போல் நிறைய சாதனை செய்வார். திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் மீண்டும் திருவாரூக்கே போகிறார் மன்னனாக.
18. தற்போது மீண்டும் ஸ்பெக்ட்ரம் திருடனாக மீண்டும் திருவாரூரில் போட்டியிடும் செம்மலாகிறார்

Read more: http://truetamilans.blogspot.com/2011/03/27-03-2011.html#ixzz1Ht2qyWBB

Thursday, April 7, 2011

அவரது குடும்பம் ஒன்னு விடாம ஒட்டுப்போட்டாலே அவரது கட்சி தனி

கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!
( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?)


ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

(அது ஹோம் கேபினேட் இல்லை.. பங்களா கேபினேட்)

கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!

(நல்ல வேளை அண்ணா இப்போ இல்ல.. இருந்தா கலைஞர் அண்ணா என் கனவுல அதை சொன்னார், இதை சொன்னார்னு பீலா விட முடியாம போய் இருக்கும்)

42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.
(அப்படி புதைத்துவிட்டுத்தான் வதைத்துகொண்டு இருக்காங்களா?)

அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.

(உட்காரவே முடியலைன்னாலும் சிம்மாசனத்தை மட்டும் விட மாட்டேங்கறாரே... )


1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.

(ஆஹா.. நல்லதொரு குடும்பம்.. பல்கலை கலகம் இல்லா கழகம்)


இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

(எல்லோரும் இந்நாட்டு மன்னர்.. ஆனால் மன்னரின் வாரிசுகள் எல்லோரும்னு திருத்திக்கோணும் போல... )_


கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.

( தந்தை மகனுக்காற்றும் உதவி..?)

தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!

(ஐம்பெருங்காப்பியங்கள் மாதிரி அவ்வளவு சீக்கிரம் இவங்களை அழிக்கவே முடியாது போல இருக்கே..?)

குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள்.

( தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி ....)


ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.

( ராசாத்தி உங்களை நம்பி இந்த கோதைப்பொண்ணு இருக்குதுங்கோ.. ஒரு வார்த்தை சொல்லீட்டாக்கா , மினிஸ்டர் போஸ்ட் கிடைக்குமுங்கோ..)


ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.

( போயஸ்க்கு ஒரு சசிகலா... கோபாலபுரத்துக்கு ஒரு ராஜாத்தி ...?)
கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.

(ஹூம்.. ஒரு செல்வியோட அக்குறும்பையே தமிழ்நாடு தாங்கலை... இதுல இன்னொரு செல்வியா? )

கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!

( சொந்தம் எப்போதும் தொடர் கதை தான் ,. முடிவே இல்லாதது...)
இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!
திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.

(இளைஞன் படு டப்பா ஆகியும் கூட இன்னும் கலைஞர் டி வி யில் வெற்றிகரமா ஓடிட்டிருக்கறதா சொல்றாங்களே.. அதுதான்யா அண்டப்புளுகு ஆகாசப்புளுகு)
அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.

( சொல்ல மறந்த சோகக்கதை..?)

பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

(வாலி, வைரமுத்து மாதிரி ஜால்ரா அடிக்க யாராலும் முடியலையே... )


தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!

(சிங்கம் ஒன்று புறப்பட்டதே. அதுக்கு நல்ல காலம்.. நமக்கு கெட்ட காலம்.. )

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை.

உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

( ஜெயில் பாட்டு ஓ வந்ததென்ன கிழ மானே சுச்சூச்சுசூ...அதைக்கேட்டு பெயில் தந்ததென்ன ....)


இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

(ராடியா ராடியா நீராராடியா......சகுனி போல் வளரும் ராடியா....உள்ளே தள்ள சி பி ஐ இல்லையா...?)
கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!

(நான் அடைந்ததிலேயே மிகச்சிறந்த அவமானம் என் மகன் தான்...கலைஞர் )


மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!

(ஃபிரீயா விடு ஃபிரீயா விடு மாமூ.. நேர்மைக்கு இல்லை கேரண்டி... )

தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!

(ஒரு தாதா தாத்தாவை வென்ற கதை...? )


தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!

(கொலை கொலையா தந்திரிக்கா,, கோர்ட்டை கோர்ட்டை சுத்திவா...)


ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!

(உன் குத்தமா? என் குத்தமா? யாரை நான் குத்தம் சொல்ல...)


மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!

(கொடூரக்குற்றங்கள்....அந்தரத்தில் நிற்கும் நீதி..? )


மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!

( காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. )



சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!

( வேர் ஈஸ் த பார்ட்டி.. அட உங்க வீட்ல பார்ட்டி... )


கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!

(ஹலோ ஹலோ சுகமா? ஆமா நீங்க நலமா? )


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!

யாருக்கு ஜாமீன்?யாருக்கு பெயில்? யாருக்கும் புரியல...
அடுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.

( வந்தாள் எழிலரசியே.. இனி என்றும் அவர் ஆட்சியே... )


ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும்.

தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

( தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி.. கேப்பமாரி...)



நான் தான் முன்னமே எழுதியிருக்கிரேனே. அவரது குடும்பம் ஒன்னு விடாம ஒட்டுப்போட்டாலே அவரது கட்சி தனி