Sunday, March 25, 2012

Bangalore Sambhar Recipe

Bangalore Sambhar Recipe
1/2 cup toor dal
1/4 teaspoon turmeric powder
1 cup peeled and cubed Idaho potato
1 cup frozen Fordhook (large size) lima beans
1/4 cup coconut, fresh or powdered
5 dried red chili peppers
2 garlic cloves
1 teaspoon cumin
1 teaspoon salt (more, if desired)
1/4 cup tomato sauce
1/4 cup chopped fresh coriander
1 tablespoon corn oil
1/4 teaspoon asafoetida powder
1 teaspoon black mustard seeds
1 teaspoon urad dal

Boil 4 cups of water in a tall saucepan over medium heat. Add toor dal and turmeric powder. Reduce heat to medium and cook, uncovered, for about 30 minutes until dal becomes creamy. If water evaporates during the cooking process, add another cup of water and cook until dal becomes creamy.

When dal is cooked, place creamy dal in a saucepan and add potatoes and lima beans with 2 cups of water to cover the vegetables.

Cook over medium heat until vegetables are tender, about 10 minutes. Place coconut, 4 red chili peppers, garlic, and cumin in blender. Add about 1/2 cup of warm water to facilitate the grinding. Grind until smooth.

Pour contents of blender into saucepan. Add salt and tomato sauce. Stir well. Add coriander and continue to simmer, covered, until potatoes are tender.

Place corn oil in a small skillet and heat oil over medium heat. When oil is hot, but not smoking, add asafoetida, curry leaves, remaining I red chili pepper, mustard seeds, and urad dal. Fry until mustard seeds pop and urad dal is golden brown. Pour fried mustard seeds and urad dal into sambhar. Stir and let it simmer for a few minutes. If sambhar seems too thick, add 1/2 to 1 cup of warm water as desired and stir. Let it simmer for anther minutes or two.

Andhra Country Chicken Curry

Andhra Country Chicken Curry
Serves 4 to 6

2 lbs skinless bone-in chicken thighs
½ cup plain non-fat yogurt, at room temperature
½ tsp cornstarch
2 tbsp oil
2 cups finely chopped onions
6 whole cloves
4 green cardamom pods, cracked open
1 tbsp minced peeled gingerroot
1 tbsp minced garlic
2 tsp coriander powder
1 tsp cayenne pepper
1 tsp salt or to taste
1 ½ tsp Andhra garam masala
3 tbsp cilantro, chopped


Rinse chicken and pat dry thoroughly. In a bowl, stir together yogurt and cornstarch to a creamy consistency. Set aside

In a saucepan, heat oil over medium heat. Add onions, cloves and cardamom and sauté for 2 minutes. Add chicken and mix well. Saute until chicken is browned on both sides, 6 to 8 minutes.

Add coriander and cayenne and sauté for 2 minutes. Add 1½ cups (375mL) water. Add yogurt and salt. Cover and bring to a boil. Reduce heat to low. Cook, stirring occasionally until chicken is no longer pink inside and gravy is thickened, 20 to 25 minutes. Sprinkle garam masala over top. Garnish with cilantro. Serve over steamed rice.

Chettinad Chicken Kulambu

Chettinad Chicken Kulambu

3 tablespoons corn or canola oil

2 to 3 small pieces cinnamon stick

1 bay leaf, crumbled

¼ teaspoon fennel seeds

½ teaspoon whole cumin seeds

½ teaspoon urad dal

½ cup chopped onion

¼ cup chopped tomato

3 cloves garlic, quartered

1 tablespoon minced fresh ginger

¼ teaspoon turmeric powder

2 pounds (boneless, skinless) chicken breasts or thighs

2 teaspoons curry powder

1 teaspoon cayenne powder

1 teaspoon vindaloo curry paste (more, if desired)

1 cup tomato sauce

½ teaspoon black pepper and cumin powder

1 teaspoon salt

¼ cup chopped fresh coriander

Heat oil in a wide saucepan over medium heat. When oil is hot, but not smoking, add cinnamon stick, bay leaf, fennel seeds, cumin, and urad dal. Fry until dal turns golden. Add onion, tomato, garlic, and ginger and sauté for a few minutes. Add turmeric powder

Cut chicken into small (stew-size pieces). Add chicken pieces to saucepan and continue to sauté for several minutes until chicken turns opaque.

Add curry powder, cayenne powder, vinadloo curry paste, and tomato sauce with approximately 2 cups of water. Stir in back pepper and cumin powder. Add salt and continue cooking over medium-low heat for several minutes.

Add coriander. Reduce heat to low. Cook, covered, stirring often until chicken is tender (approximately 20 minutes). If the sauce becomes too thick, you may add an additional small amount of both water and tomato sauce as desired.

 

Tuesday, March 20, 2012

அமராவதி அணை... சப்தமில்லாமல் தமிழர்களிடம் விளையாடும் கேரள அரசு...! ஒரு அலசல்...! ~ .

அமராவதி மிக அழகான பெயர் ! அம்பிகாபதியோட அமராவதி இல்லைங்க நம்ம உடுமலை பேட்டை இருக்குதா அங்க இருக்கிற அழகான ஒரு அணைதான் அமராவதி. மறுபடியும் அணையா ?! ஒரு அணை பிரச்சனைக்கே இன்னும் விடை தெரியல...இதுல இன்னொரு அணைக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பதறது புரியுது...புது பிரச்சனை இல்ல ரொம்ப நாளாவே போயிட்டு இருக்கிற ஒண்ணுதான். இன்னும் ஒரு தீர்வும் எட்டபடாமல் இழுத்துட்டே போகுது. தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானாம், யாருக்கு புரியுதோ இல்லையோ மத்த மாநிலக்காரங்க நம்மள நல்லா எடை போட்டு வச்சிட்டாங்க. கர்நாடகத்துகிட்ட காவிர கொடுன்னு கெஞ்சி, கேரளாக்கிட்ட அணையை ஒடச்சிடாதனு போராடி, ஆந்திராக்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுன்னு கை ஏந்தி இன்னும் எத்தனை காலந்தான் நாம இப்படியே இருக்க போறோமோ தெரியல !

அப்படி என்ன பிரச்சனை?!

44 டி எம் சி அளவு தண்ணீரை தேக்கி வச்சிருக்கிற அமராவதி அணைக்கும் ஆபத்து வந்து நாளாகிவிட்டது . திருப்பூர், கரூர் மக்களின் உயிர் நாடியாகவும் 70,000 ஏக்கர் விளைநிலங்களை காப்பாத்துகிற இந்த அணைக்கு தண்ணீர் பாம்பாற்றில் இருந்து வருது. இந்த பாம்பாற்றின் குறுக்கே மறையூர் அருகே கோவில்கடவு பகுதியில் புதிய அணை கட்டணும் என்று கேரளா அரசு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டசபைல தீர்மானத்தை நிறைவேற்றி வேலையை வேற தொடங்கிட்டதாக சொல்றாங்க ?! (இரண்டு வருடமாக போயிட்டு இருக்கு இந்த விவகாரம் !!)

கேரளாவுக்கு அங்கே சொந்தமான வயல்வெளிகளும் இல்லை வெறும் காடுதான் ! பின் வேறு என்ன தேவைக்காக இருக்கும் என்று பார்த்தால் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க...தண்ணியில இருந்து மின்சாரம் தயாரிக்க போறதா ஒரு பேச்சும், தண்ணீரை பாட்டில பிடிச்சி விக்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு தாரை வார்த்துகிறதுக்காகவும் அணைகட்ட போறாங்கனு சொல்றாங்க.

அடடா அமராவதி!

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, சின்னாறு, காட்டாறு , பாம்பாறு போன்ற ஆறுகளின் நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டதுதான் அமராவதி அணை. இதில் அதிகபடியான நீரைத் தருவது, எக்காலத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாம்பாறு தான். இதன் உதவியால் தான் அமராவதி அணை நிறைகிறது.

170 கி.மி நீளம் கொண்ட இந்த ஆறு ஆனைமுடி சிகரங்களில் உற்பத்தியாகிறது. இரண்டு சிகரங்களுக்கிடையே வெள்ளியை உருக்கி விட்டது போல ஓடிவரும்அழகே அழகு !

ஆனைமுடி சிகரத்தில் இருந்து அமராவதி வரை இருக்கக்கூடிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள் என்ற பட்டியலில் இருக்கிறது. சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் , இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை வேறு அமைந்திருக்கின்றன. இங்கே எது செய்வதாக இருந்தாலும் மத்தியச்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இவையெல்லாம் தெரிந்தும் என்ன தைரியத்தில் சட்டமன்றத்தில் அணைகட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்களோ தெரியவில்லை ?! (ஒருவேளை மத்தியில் பெரும்பாலோர் கேரளாக்காரர்கள் தானே சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானோ ?!)

110 ஏக்கர் பரப்பளவில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது...நான்கு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்டுகளை வைத்து நீரேற்று விவசாயம் செய்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள் ! இந்த அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் கொஞ்சமும் இரக்கமின்றி அடிக்க பார்க்கிறது கேரளா. விவசாயத்திற்கு எவையெல்லாம் பாதிப்பை கொடுக்கிறது என பகுத்தறிந்து அதனை களைந்து விட்டாலே விவசாயத் தொழில் நிமிர்ந்து விடும்.

70,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கபடுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் குடிநீர் இன்றி தவிக்கும். வனவிலங்குகளும் குடிநீரின்றி அவதியுற நேரும். அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்படலாம்.

நம்ம தலைஎழுத்து நம் மாநிலம் வழியா போனாலும் அள்ளி குடிக்க வகையற்று போய் கொண்டிருக்கிறோம். மேற்கே இருந்து உற்பத்தியாகி கிழக்கு கடலில் கலக்கும் அனைத்து நதிகளும் நமக்கு வேண்டாதவையாக பிறரால் எடுத்துக் கொள்ளபடுகிறது. காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!

நெய்யாறு அணை ?!!

எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.

சேமிக்கப்படும் நீரில் 60 % கேரளாவில் இருந்தும், 40 % குமரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது. தண்ணீரில் பாதி அளவாவது குமரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டமே நெய்யாறு கால்வாய் திட்டம் . ஒன்பது வருவாய் கிராமங்கள், 9 ஆயிரத்து 204 ஏக்கர் நிலங்களும் 162 குளங்களும் பாசனம் பெற்றன.

ஆரம்பத்தில் நிர்ணயித்த படி இந்த கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியது.ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு முற்றிலும் நிறுத்த பட்டது...!!?

என்ன ஒரு முரண்பாடு ?!

மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திராவை அடைந்து கடலில் கலக்கும் கிருஷ்ணா நதியின் நடுவே ஆல்மாட்டி என்ற இடத்தில் 173 கொள்ளளவு கொண்ட அணையை கட்டியது கர்நாடகா...உடனே வீறு கொண்டு எழுந்த ஆந்திரா உச்சநீதிமன்றம் சென்று 123 தி.எம்.சி தண்ணீரை தான் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுவிட்டது. இதுவரை அந்த அளவைத்தாண்டி தேக்குவதில்லை கர்நாடகா. இதே கர்நாடகா தமிழ்நாட்டுகிட்ட என்ன ஆட்டம் காட்டுது ?!!!

2007 இல் காவேரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பின் படி அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே 5 டி.எம்.சி மட்டும் பயன்படுத்தி வந்த கேரளாவிற்கு 30 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்க வேண்டுமாம்...!!!? இதை எதிர்த்து இதுவரை நம் அரசு எதுவும்(?) நடுவர் மன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்தவில்லை என தெரிகிறது. அந்த தீர்ப்பை வைத்து கொண்டு கேரளா அணைகட்ட போறேன், தண்ணி தரமாட்டோம்னு சொல்லிக்கொண்டு இருக்கிறது...!!!?

உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் கொடிப்பிடிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளும், தேவையற்ற ஈகோ போராட்டங்கள், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய துணியும் அரசியல்வாதிகள், வறட்டு ஜம்பங்கள், காட்டுக் கூச்சல்கள், கேட்டு கேட்டு புளித்துப் போன வாக்குறுதிகள், வீணான ஆர்ப்பாட்டங்கள் விதியே என்று சகித்து போய் கொண்டிருக்கும் மக்கள் !!! இத்தனையில் ஒன்று கூட மாற சாத்தியமில்லையா?!

முல்லைபெரியாறு அணை பிரச்சனை என்னவாயிற்று என்று தெரியவில்லை...?! ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்...என்று அரசு இதை எல்லாம் கவனித்து, நடவடிக்கை எடுத்து நல்லதொரு முடிவை எட்ட போகிறதோ ?!

சேர ,சோழ , பாண்டிய , பல்லவ மன்னர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் 39,000 ஏரிகளை வெட்டினார்களாம். அந்த ஏரிகளின் மேல் தான் இன்று அரசு அலுவலகங்க கட்டடங்களும் , புதிய பேருந்து நிலையங்களும் இருக்கிறது. மிச்ச ஏரிகளில் கருவேலமரங்களையும், தைல மரங்களையும் அரசே வளர்க்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சபட்டு வறண்டு போய்விட்டன.மரங்களை வளர்க்க வேறு இடமா இல்லை. ஏரி,குளங்களில் உள்ள மணலை சுரண்டுவது ஒருபக்கம் அமோகமாக நடைபெறுகிறது. தூர்வாருகிறேன் என்று சொல்லி கொள்ளும் நூறுநாள் வேலை தொழிலாளர்கள் உறங்கி கழிக்கிறார்கள் மரத்தடியில்...!

இவர்கள் தூர் வாரி முடிப்பதற்குள் மழை வந்து, நின்றும் போய்விடும்.வழக்கம் போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடும்.உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்தால், இயந்திரங்களின் உதவி கொண்டு வேகமாக முடிக்கலாம். மக்களின் வாழ்வாதார விசயத்தில் தூங்கி வழிகிறது அரசு இயந்திரம் !!

நதிகள் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

2002 இல் பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களுக்கு திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் இரண்டு திட்டங்கள் போடப்பட்டன. ஒன்று தீபகற்ப நதிகள் இணைப்பு, மகாநதி, கோதாவரி நதிகளில் வெள்ளம் வந்து வீணாகும் தண்ணீரை கிருஷ்ணா, வைகை, காவேரி உள்ளிட்ட 16 நதிகளுக்கு திருப்பி விடுவது. 2 வது திட்டம் வட இந்தியாவில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுத்து நீர்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது.

அருமையான இந்த திட்டங்கள் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் "நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேறவேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது !!

மத்திய அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ ?!!

நதிகள் இணைப்பு என்பது நிறைவேறுதோ இல்லையோ அதற்கு முன் இங்கே தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளின் இரு மருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள், அதில் கலக்கும் கழிவு நீர், நடக்கும் மணல் கொள்ளை போன்றவற்றில் கவனம் செலுத்தபடவேண்டும். ஏரி,குளம், குட்டைகளை தூர்வாருவதும்,புதிதாக குளங்களை வெட்டுவதும் அவசியம். அப்போதுதான் பூமியில் விழும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் சேகரிக்கப்படும்.மேலும் நமது அணைகளின் மீதுள்ள பிரச்சனைகளை அரசாங்கம் முயன்றால் முழுமையாக சரிசெய்ய இயலும். நாட்டின் தற்போதைய இன்றியமையாத முக்கிய பிரச்சனை இவையே...! கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள் ?!

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!!

சிக்கன் லாலி பாப்

சிக்கன் லாலி பாப் - 10 துண்டு
உப்பு தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு மேசைகரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
ஓமம் பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சிறிது
எலுமிச்சை - 1/2 + 1/2
தயிர் - ஒரு மேசைகரண்டி

அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு மேசை கரண்டி
கார்ன் மாவு - ஒரு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி

எண்ணை + பட்டர் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் லாலிபாப்பை நன்கு 6 முறை கழுவி ஆங்காங்கே கிறி விட்டு அரை பழம் லெமன் பிழிந்து ஊற வைக்கவும்.1 0 நிமிடம் கழித்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

சிக்கன் ஆயில் தவிர அனைத்து மசாலா, பவுடர் வகைகளை நன்கு பேஸ்ட் போல் குழைத்து சிக்கனில் பிறட்டி ஆலிவ் ஆயிலும் சேர்த்து விறவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
எண்ணை + பட்டரை சூடு படுத்தி வானலியில் கொள்ளும் அளவு முன்று துண்டுகளாக போட்டு டீப் பிரை செய்யவும்.

சுவையான மருத்துவ குணமுள்ள ஓமம் லாலிபாப் ரெடி.






Monday, March 19, 2012

Badam kheer

Any dish made using almonds is unfailingly rich, quite befitting royalty! keep the spices such as cardamom to a minimum in this recipe, so as to highlight the creamy, soothing texture and flavour of almonds. Authentic ‘badam kheer’ made the south indian way omits cardamoms and nutmeg and uses a pinch of raw camphor and saffron (both added after the kheer is removed from the fire) instead. But if you do not find raw camphor, fret not; just go ahead with this recipe as it is!
Add your private note

Soaking Time: 2 Hours
Preparation Time: 10 mins
Cooking Time: 30 mins
Makes 6 servings
Show me for servings

Ingredients
3/4 cup almonds (badam)
5 cups (1 litre) milk
1/2 cup sugar
1/2 tsp cardamom (elaichi) powder (optional)
1 tsp nutmeg (jaiphal) powder (optional)
1 tsp saffron (kesar) strands

Method

Soak the almonds in hot water for 2 hours. Drain, remove the skin and blend in a mixer to a fine paste. Keep aside.
Boil the milk in a heavy-bottomed vessel till it is reduced to ¾ of its quantity, while stirring continuously.
Add the almond paste, sugar, cardamom powder, nutmeg powder and saffron, mix well and simmer for 5 minutes, while stirring continuously. Keep aside.
When it cools completely, refrigerate at least for 2 hours.
Serve chilled.

Subz Biryani

Subz Biryani is a tempting vegetable or subz Biryani recipe with assorted vegetables chopped and stir fried with cooked rice, whole spices and relished garnished with coriander leaves and roasted cashews.
Add your private note

Preparation Time: 10min
Cooking Time: 25min

Ingredients


FOR PASTE:-
6 to 7 flakes of garlic (lehsun)
1 " piece of ginger (adrak)
1 tbsp aniseeds (vilayati saunf)
1 tbsp cumin seeds (jeera)
3 whole dry kashmiri red chillies
1 tbsp coriander (dhania) powder
1 stick of cinnamon (dalchini)
3 to 4 cloves (laung / lavang)
3 to 4 peppercorns
2 black cardamoms (badi elaichi)

OTHER INGREDIENTS:-
2 cups long grained rice (basmati) (soaked for one hour)
1 to 2 carrots, sliced
1 small sized cauliflower, chopped into florets
8 to 10 french beans, chopped into 1" diagonally
2 potatoes, chopped
2 onions, finely sliced
1/2 cup oil
3 tbsp salt
1 tbsp lemon juice
1 bayleaf (tejpatta)

Method

Soak rice for 1 hour
Grind the ingrediants of the paste together with a lil water.
Heat oil in a heavy bottomed pan.add onions,cook till golden brown.
Add the vegetables and stir fry for 3-4 minutes
Add the paste and bay leaf
Measure 4 cups of water and add to the vegetables.
Add salt and lemon juice.
When water boils,drain the soaked rice and add to the water.
Put a tawa under the pan of rice to reduce the heat further.
Cover the pan of rice with a small towel napkin and then with a well fitting lead.keep some heavy weight,on lead.
Slow down the fire and cook till the rice is done(10-15 min).
Serve after 10 minutes.

Sunday, March 11, 2012

முலாயம் சிங்கால் முடிந்தது கருணாநிதியால் முடியாமல் போனது ஏன்?

இன்றைய தினம், இந்தியாவில் தொலைக்காட்சி பார்க்கும் அனைத்து நடுத்தர வர்க்கத்தினரும் உச்சரிக்கும் பெயர், 38 வயது அகிலேஷ். யார் இவர்? எப்படி ஒவ்வொரு வீட்டிலும் குடும்பப் பெயர் போல் ஆகிவிட்டார்?

சுதந்திர இந்தியாவில் முப்பத்தோரு வயதில் ஒரு மாநில முதல்வராக பதவியேற்று சாதனை படைத்தவர் அஸ்ஸாம் கண பரிஷத் தலைவர் பிரஃபுல்ல குமார் மஹந்தா. 1985 ல் அவர் அஸ்ஸாம் முதல்வராக பதவியேற்ற போது நாடெங்கும் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக, இளைய சமுதாயத்திற்கு முன் மாதிரியாக விளங்கினார். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் அவரது புகழ் காலப்போக்கில் நீர்த்துப் போனது வேறு விஷயம்.

2012 ஆம் ஆண்டில் இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல், மார்ச் 15ம் தேதி உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்க போகும் அகிலேஷ் யாதவ்தான். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற முழக்கத்துடன், கடந்த சில வருடங்களாக காங்கிரஸ் இளைஞர் அமைப்பை வலுப்படுத்த நாடெங்கும் சுற்றி வரும் ராகுல் காந்தியை ஒரே ஒரு தேர்தல் மூலம் முந்திவிட்டார் அகிலேஷ்.

எப்படி முதல்வரானார்?

1989 ல் உத்தரபிரதேச மாநில முதல்வராக முலயாம் சிங் ஆட்சிக்கு வந்த போதே, தமிழகம் போல், உ.பி.யிலும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் ஆரம்பித்து விட்டது. இடையில் சில காலம் பாஜக ஆட்சியில் இருந்தாலும் மாநிலக் கட்சிகளான சமாஜ்வாடியும், பகுகுண் சமாஜும் இல்லாமல் அங்கே யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைதான்.

மூன்று முறை முதல்வராக இருந்த முலயாம் சிங்தான் இந்த தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அனைவரும் அவர்தான் முதல்வர் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அகிலேஷ் முன்னிறுத்தப்பட்டார். காரணம் இந்த தேர்தலின் வெற்றி தன்னுடைய மகனின் தீவிர களப்பணியால்தான் என்பதில் உறுதியாக இருந்த முலாயம், அதற்கு பரிசாக முதல்வர் பதவியைத் தந்திருக்கிறார்!

மைசூரில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்று, ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பும் முடித்துள்ள அகிலேஷிடம் உத்தரபிரதேச மக்கள் அதிக எதிர்ப்பார்ப்புகளை வைத்துள்ளனர். ஐஐஎம் ல் பயிற்சி
பெற்ற மேலாண்மை வல்லுனரான அபிஷேக் மிஸ்ராவை முக்கிய துணையாக வைத்துக்கொண்டு, நவீன இந்தியாவின் வெற்றிகரமான முதல்வராக வருவாரா அல்லது மஹந்தா போல் கரைந்து விடுவாரா என்பது அடுத்த ஐந்தாண்டுகளில் தெரிந்து விடும்.

முலயாமும் கருணாநிதியும்…

வி.பி சிங் தலைமையிலான தேசிய முண்ணனியில் முக்கிய தலைவராக இருந்த கருணாநிதியுடன், முலயாம் சிங்கிற்கு 1989லிருந்தே நல்ல நட்பு இருந்து வருகிறது. முலயாம் உள்ளிட்ட சோசலிஸ்டுகள் மீது இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு அதிக பற்றுதல் உண்டு என்பது புதிய விஷயமல்ல.

முலயாம் சிங்கின் இன்றைய அதிரடி முடிவு அகில இந்தியாவையும், குறிப்பாக வாரிசுகளை களம் இறக்கியுள்ள அரசியல் பிரமுகர்களை திரும்பி பார்க்க வைத்து விட்டது. அதே நேரத்தில் குருவி தலையில் பனங்காயை சுமத்தி விட்டாரோ என்றும் குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன.

இந்த முடிவை அவர் செயல்படுத்திய விதம்தான் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களை அவர் கையாண்ட விதம், குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்திய நேர்த்தி, கிங் மேக்கர் காமராஜர் அன்று இந்திராவை பிரதமராக்கிய அரசியல் அனுபவத்திற்கு இணையாக பார்க்கப்படுகிறது.
அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் கருணாநிதி இந்த விஷயத்தில் ‘சோசலிஸ்டு நேத்தாஜி’ முலயாமிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதியின் தவறு

பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, தன் மகள் இந்திராவை காங்கிரஸ் கட்சிக்குள் அழைத்து வந்ததை யாரும் குற்றமாக கருதவில்லை. அதே இந்திரா, நேருவுக்கு பின் பாரத பிரதமராக வந்த போதும் யாரும் குடும்ப ஆட்சி என்று கோஷம் எழுப்பவில்லை. அவரது ஆட்சியில் இளைய மகன் சஞ்சய் காந்தி பொதுச் செயலாளராக இருந்த போதோ, அல்லது இந்திராவிற்கு பிறகு மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமர் ஆன போதோ யாரும் குடும்ப ஆட்சி என்று குறை கூறவில்லை. இன்று நான்காம் தலைமுறையாக ராகுல் காந்தி பொதுச்செயலாளராக உள்ள காங்கிரஸ் கட்சிதான் குடும்ப ஆட்சியின் உச்சக் கட்டம்.

ஆனால் இரண்டாம் தலைமுறையான ஸ்டாலின் மாணவப் பருவத்தில் அரசியலில் நுழைந்த காலத்திலிருந்தே ‘குடும்ப ஆட்சி’ என்ற பழியை சுமந்து வரும் கருணாநிதியின் நிலை பரிதாபத்திற்குரியதுதான்.

இந்திராகாந்தியின் அடக்குமுறை மிசா கொடுமையில் மாநில முதல்வரின் மகன் என்ற பாரபட்சம் இல்லாமல் சிறைக்கொடுமைகளை அனுபவித்த ஸ்டாலின் திமுகவில் ஒவ்வொரு பொறுப்பினை ஏற்கும் போதும் ‘குடும்ப ஆட்சி’ என்ற கோஷம், ஒரு சில சக்திகளால் தீண்டாமை குற்றம் போல் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனங்களுக்காகவே ஸ்டாலினின் அரசியல் பொறுப்புகள் ஆமை வேகத்தில்தான் நகர்ந்து வந்துள்ளது.

தமிழக அரசியலில், விமர்சனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் கருணாநிதி. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இந்த இருவருக்கு மட்டுமே உண்டு. மாபெரும் மக்கள் சக்தியாக விளங்கிய எம்ஜியார் விமர்சனங்களைக் கண்டுகொள்ள மாட்டார். இன்றைய முதல்வரோ தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எப்படி கையாள்வார் என்பது சாமானிய மக்களுக்கே நன்றாக தெரியும்!

இப்படி விமர்சனங்களுக்கு பயந்து, மகன் தானாக நிலை நிறுத்திக் கொள்ளட்டும் என்று, கருணாநிதி தடைபோட்டதன் விளைவு, மாணவர் பருவத்தில் கட்சி பணியாற்ற வந்து, 60 வயதில் திமுக இளைஞர் அணி பொறுப்பிலேயே இருக்கிறார் ஸ்டாலின்!

ஸ்டாலினும் அகிலேஷும்

ஸ்டாலினின் அனுபவத்தை ஒப்பிட்டால், அரசியலில் அகிலேஷ் ஒரு குழந்தை தான்..

மாணவர் திமுக என்று ஆரம்பித்து, மிசா, இளைஞர் அணி, சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், உள்ளாட்சி அமைச்சர், திமுக பொருளாளர் என நீண்ட அரசியல் அனுபவம் பெற்று பிறகும் துணை முதல்வர் அளவுக்கே உயர்ந்துள்ளார் ஸ்டாலின்.
இளைஞர் அணி, நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியின் மாநிலத் தலைவர் என்று பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்திற்கு முதல்வர் ஆகிவிட்டார் அகிலேஷ்.

மதிமுகவை ஆரம்பித்து இளைஞர்களின் எழுச்சியாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான திமுக நிர்வாகிகளை தனது கட்சிக்குள் வைகோ இழுத்துக் கொண்டிருந்த நெருக்கடியான காலத்தில், திமுக இளைஞர் அணிக்கு புத்துயிர் கொடுத்து திமுகவை பாதுகாத்தவர்களில் ஸ்டாலின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல தெற்கில் காணாமல் போகவிருந்த கட்சியை காப்பாற்றியவர் அழகிரிதான். மதிமுகவிலிருந்த மதுரை பொன் முத்துவை, அவரது கோஷ்டியோடு திமுகவுக்கு திரும்ப வைத்தது சாதாரண விஷயமா!

தொடர்ந்து வந்த 1996 இடைத்தேர்தலில் ரஜினியை இணைத்துக்கொண்டு, வைகோவின் எழுச்சிக்கு சாமர்த்தியமாக தடை போட்ட கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம், கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவிய ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க இடம்தரவில்லை. உள்ளத்தில் எண்ணம் இருந்தாலும் விமர்சனங்களுக்கு பயந்து கொண்டு முடிவெடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அன்று கருணாநிதி இருந்த அதே நிலைதான், முலயாம் சிங்குக்கும். ஆனால் அவர் தயங்கவில்லை. துணிந்து ஒரு முடிவெடுத்துவிட்டார். விமர்சனங்களுக்குப் பதில் பாராட்டுக்கள் குவிகின்றன!

1996லேயே ஸ்டாலினை குறைந்தபட்சம் துணை முதல்வராக ஆக்கியிருந்தால் இன்றைக்கு திமுகவில் ஸ்டாலினா அழகிரியா என்ற கேள்வியே எழுந்திருக்காது.

எந்த வாரிசும் இல்லாத எம்ஜியார், தனக்குப் பிறகு அதிமுக எப்படி இருக்க வேண்டும் என கடைசி வரை சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் திமுகவுடன் அதிமுகவை இணைந்து விடலாம் என்ற ஒரு முயற்சியும் ஒரிஸ்ஸா முதல்வர் பட்நாயக்கின் தலைமையில் அரங்கேறியது. இந்த முயற்சியின் சாட்சியாக பட்நாயக், கருணாநிதி, எம்ஜியார் மூவரும் இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் முக்கிய இடத்தை பெற்றன.

எம்ஜியாரின் கடைசி காலத்தில், ஜெயலலிதா ராஜீவ் காந்தியை சந்தித்து ஆட்சியை கைப்பற்ற முயன்றது உள்ளிட்ட விஷயங்கள் அவரை பெருமளவில் மனதை பாதித்து விட்டது. அந்த நேரத்தில் பட்நாயக் போன்றவர்கள் இருந்திருந்தால் திமுக, அதிமுக ஒன்றாகி இருக்கக் கூடும். திராவிட பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்ட எம்ஜியாருக்கு ஜெயலலிதா தலைமையில் கட்சி செல்வது பிடிக்கவில்லை என்பது அந்த நேரத்திலிருந்த எம்ஜியாரின் அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றாகவே தெரியும், கட்சியை விட்டு வெளியேற்றவில்லையே தவிர, ஜெயலலிதாவின் முக்கியத்துவத்தை முற்றிலும் எம்ஜியார் குறைத்துவிட்டார் என்பதுதான் உண்மையும் கூட.

கட்சிக்கு அடுத்த கட்ட தலைவர் என்பது எவ்வளவு முக்கியம், ஜனநாயக கட்சியாகவே இருந்தாலும் அடுத்த தலைவரை அடையாளம் காட்ட வேண்டியதன் அவசியத்தை எம்ஜியார் நன்றாகவே உணர்ந்திருந்தார். சரியான முடிவெடுத்து தன் கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் தெரிவிக்காததால், அவர் நினைத்தது போலவே அதிமுக இரண்டாக உடைந்ததும், அடுத்து நடந்த சம்பவங்களும் அதிமுகவின் வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. எம்ஜியார் இருந்த அதே நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதாவும் இன்று இருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

திமுகவைப் பொறுத்தவரை, முரசொலி மாறனின் ஆசியோடு வைகோ அடுத்த தலைவராக உருவெடுத்து வந்த நிலையில்தான் ‘தனக்கு பின் தனது மகனே’ என்ற ஆசை கருணாநிதிக்கு வந்தது. அந்த ஆசைக்கு வித்திடும் வகையில், ஸ்டாலின் நல்ல உழைப்பை கொடுத்து சாமானியனாகத்தான் கட்சிப்பணி ஆற்றி வந்தார்.
ஸ்டாலின் பொறுப்பிற்கு வந்து விட்டால் தனக்கு முக்கியத்துவம் கிடைக்காது என்ற காரணத்தினால் தான் கருணாநிதிக்கும் வைகோவுக்கும் விரிசல் ஏற்பட்டு மதிமுக என்ற தனிக்கட்சி வரை சென்றது.

அன்று பாராளுமன்ற நாயகனாக இருந்த ‘வைகோ மத்தியிலும், ஸ்டாலின் மாநிலத்திலும்’ என்று பரஸ்பரம் செய்து கொண்டிருந்தால், வைகோ முன்மொழிய ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியை கொடுத்து விட்டு, கருணாநிதி முலயாம் போல் மத்திய அரசியல் பார்வையாளராகவோ அல்லது அவருக்கு பிடித்த எழுத்துத் துறைக்கோ சென்றிருக்கலாம்

தவறை திருத்த முன் வருவாரா கருணாநிதி?

பெரிய வியாபார அல்லது விவசாய குடும்பங்களில் பெரியவர்கள், தாங்கள் நன்றாக இருக்கும் காலத்திலேயே மகன்களுக்குள் பொறுப்பை கொடுத்து அவர்களை வழி நடத்திச் செல்வது இன்றைக்கும் இருக்கும் வழக்கம். தனது காலத்திலேயே தனது பிள்ளைகள் தனியாக முடிவெடுத்து திறமையாக வியாபாரத்தை, விவசாயத்தை கவனித்துக் கொள்கிறார்களா என்ற உண்மையையும் தெரிந்து கொள்கிறார்கள். நல்ல பிள்ளைகள் தந்தையின் அனுபவத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டு மேலும் பெருமை சேர்க்கிறார்கள்.

அரசியலே குடும்பம், குடும்பமே அரசியல் என்று ஒட்டு மொத்த குடும்பமும் அரசியலில் இருப்பவர்களுக்கும் மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் பொருந்தக் கூடியவைதான்.

திமுக என்ற பெரும் இயக்கம் சிதறாமல் வலுவாக இருக்க வேண்டுமானால் அடுத்த தலைவர் யார் என அடையாளம் காட்டப்பட வேண்டியது முக்கியம். அது ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்று கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்தான் என்று இருக்க வேண்டியதில்லை. அடுத்த தேர்தலில் அதிமுகவை திறமையுடன் எதிர்கொள்ளக்கூடிய எவராக இருந்தாலும் அது திமுகவுக்கு நன்மையே.

அகிலேஷ் யாதவ், வெளி நாட்டில் படித்திருந்தாலும் மக்களோடு மக்களாக சகஜமாக எளிதில் பழகியதால்தான் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்று கட்சிக்கு வெற்றியை தேடித் தந்தார். நம்மில் ஒருவர் என்ற எண்ணம் மக்களுக்கு யார் மீது வருகிறதோ அவரே வெற்றித் தலைவராக உருவெடுக்கிறார். புதுவையில் ரங்கசாமியின் வெற்றி ரகசியமும் இதுதான். சைக்கிளில் , டீக்கடையில் சாதாரணமாக பார்க்கக்கூடிய வகையில்தான் அவருக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கம். அது தான் அவரை புதுவையின் ஆட்சிக் கட்டிலில், தனிக்கட்சி கண்ட மிகக் குறுகிய காலத்திலேயே ஏற்றியது.

கருணாநிதியின் மகன் என்ற காரணத்தை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் இன்றைய திமுகவில் மக்களோடு மக்களாக எளிமையாக பழகுபவர், தமிழகம் முழுவதும் நன்றாக அறிமுகமானவர், அமைச்சராக ஊர் ஊராக திட்டங்களை திறமையாக நிறைவேற்றியவர் என்ற வகையில் ஸ்டாலின் அடுத்த தலைமைக்கு ஏற்றவராகவே தெரிகிறார்.

மீண்டும் ஒரு முறை ‘கருணாநிதியா – ஜெயலலிதாவா’ என்ற கேள்வியை மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் விரும்ப மாட்டார்கள். இதைவிட ‘ஜெயலலிதாவா – ஸ்டாலினா’ என்ற கேள்விக்கு சுவாரஸ்யம் அதிகம். தேர்தலில் நல்ல பலனும் கிடைக்கும்.

எனவே ஆறாம் முறை முதல்வர் என்ற கனவை முடித்துக்கொண்டு திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற தெளிவான முடிவை அறிவிப்பதுதான், உரிய காலத்தில் செய்யாமல் விட்ட தவறை திருத்திக் கொள்வதாகவும் இருக்கும்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

என்ற குறளுக்கு, குறளோவியம் கண்ட கருணாநிதிக்கு யாரும் விளக்கம் சொல்ல தேவையில்லை. இப்போதாவது தன் மகன்களில் யாரை அவையில் முந்தியிருக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவெடுப்பாரா?

Sunday, March 4, 2012

Prawn Pickle

Ingredients:-
Prawn - 1 kilo
Red dried chilli - 125 No.s
Jeera - 5 Table spoons
Ginger - 2 inch pieces – 5 nos.
Garlic - 10 whole pod
Green chilli - 40
Gingelly oil - 1-1/4 kilo
Vinegar - 5 cups
Salt - 100 gms (add more taste)
Mustard seed - 2 table spoons
Curry leaves - 1 Handful
Turmeric powder - 1 table spoons

Method:-
Heat the oil and keep it in a vessel.
Clean the prawns and mix with turmeric powder and salt and keep aside for 15 minutes.
In frying pan fry the prawn using a little oil (do not deep fry) turn the slices and when it is well cooked and the water is evaporated remove the fish from the fire.
Remove the skin from the sides of the fried fish, remove all the bones and break the fish into small pieces and keep aside.
Clean the green chilli, keep only little bit of the stem, slit 1/2 inch, with a sharp knife on the thick part of the chilli, this is to help the chilli marinate and soak.
Peel the garlic and keep the small flakes whole, if the flakes are too big, cut into two.
Peel the ginger and cut into small pieces.
Grind the red chilli, using vinegar.
Keep aside two table spoon peeled garlic, 2 table spoon ginger to put whole along with green chilli. Soak them in vinegar.
Grind ginger and garlic and jeera using vinegar.
Heat the remaining oil in a thick bottom pan. When the oil is hot, add mustard seeds, add curry leaves then add the ground masala, cook till the masala is well cooked and the raw smell goes, then add green chilli, ginger and garlic soaked in vinegar, cook well and when the oil comes up, add the fish pieces and salt and cook till the fish is well cooked and mixed with the gravy. Then remove from fire and store in bottles or jars.

ஆட்டுக்கறி வறுவல்,

தேவையான பொருட்கள்:
கறி – 1 கிலோ
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 4
லவங்கம் – 3
ஏலக்காய் – 3
கசகசா – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – கால் ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – 50 கிராம்
பூண்டு – 50 கிராம்
தேங்காய் – 1 கீற்று
சின்ன வெங்காயம் – கால் கிலோ (பொடியாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – கால் கிலோ (பொடியாக வெட்டவும்)
பிரியாணி இலை – 2
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
குக்கரில் கறியைப் போட்டு அரை தம்ளர் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். கறி வெந்த பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை தாளித்து, சின்ன வெங்காயம், தக்காளி வதக்கி அரைத்த மசாலாவை ஒவ்வொன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு கறியைப் போட்டு தேவையானால் மீண்டும் உப்பு சேர்த்துக் கலந்து விடவும். தண்ணீழ் நன்றாக வற்றியதும், சிறு தீயில் வைத்து சுருள வதக்கி கடாயில் ஒட்டாமல் வரும் வரை வதக்கி கருவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்பு: கறியை சிறு தீயில் வைத்து அதிகம் நேரம் வதக்கினால் மசாலா கறியில் நன்றாக ஊறி இருக்கும்.
====================================================================================
SUKKA VARUVAL

தேவையான பொருட்கள்:
கறி – அரைகிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மிளகு – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
மிளகாய் – 5 (சிவப்பு)
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – 10 பல்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம் முதல் பூண்டு வரை உள்ள பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும். கறியுடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து பிசறி 1 மணி நேரம் ஊற விடவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த கறியை போட்டு அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி மூடி விடவும். கறி நன்கு வெந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் தீயைக் குறைத்து சுருள சுருள கிளறி கருவேப்பிலைத் தூவி இறக்கவும்.

கத்தரிக்காய் கொத்சு

தேவை:
பெரிய கத்தரிக்காய் – 200 கிராம்
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
குழம்புப்பொடி – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 2
புளி – நெல்லிக்காயளவு
உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை:
கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு மஞ்சள் தூள், மிளகாய் நறுக்கி போட்டு வேக வைத்து கடைந்து கொள்ளவும். புளியைக் கரைத்து, கரைசலில் குழம்புப் போட்டு சேர்தது காயில் ஊற்றி இறக்கவும்.குறிப்பு: கத்தரிக்காயை தணலில் போட்டு சுட்டு தோலுரித்து பிசைந்து செய்யலாம்

Friday, March 2, 2012

கிங் சமோசா

தேவை:

மைதா மாவு – 125 கிராம்
வற்றல் பொடி – 1 1/2 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
பச்சை பட்டாணி – 100 கிராம்
மல்லி இலை – 25 கிராம்
கடலை எண்ணெய் – 1/4 கிலோ
சிட்ரிக் ஆசிட் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 1 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் வற்றல் பொடி மஞ்சள் பொடி, தேவையான உப்பு, இஞ்சி, கரம் மசாலா வேக வைத்த பட்டாணி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை மல்லி, மிளகாய், சிட்ரிக் ஆசிட் எல்லாவற்றையும் கலந்து வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரித்து கலவையை வதக்கி பின்னர் ஆற வைக்கவும். பிறகு மைதாவுடன் 2 மேஜைக்கரண்டி எண்ணெயை விட்டு, தேவையான உப்பும் போட்டு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சுட்டு சப்பாத்திகளாக இட்டு ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் தண்ணீர் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு மீதி பொன்நிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

செட்டிநாடு, நண்டு, நாட்டு, பொரியல், வறுவல்

நண்டு பொரியல்
தேவை:
பெரிய நண்டு – 5
மிளகாய் வற்றல் – 8
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 6
உப்பு – தேவையான அளவு
மல்லி – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
தேங்காய் சில் – 2

செய்முறை:
பெரிய நண்டு 6 ஐ சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல் 8, மல்லி 2 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, வெங்காயம் 6 தேங்காய் சில் 2 இவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். இதை நண்டுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிறட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் 8 கரண்டி எண்ணெய் ஊற்றிக்காய்ந்ததும் நண்டைப்போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.


வறுத்த நண்டு

தேவை:
நண்டு – 5
இஞ்சி – 1 அங்குலம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மல்லி (தனியா) – 2 தேக்கரண்டி
தக்காளி – 1
சிகப்பு மிளகாய் – 10
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
பெரிய வெங்காயம் – 3

செய்முறை:
நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். 10 சிகப்பு மிளகாய்கள், 1 அங்குலம் இஞ்சி, 1 தேக்கரண்டி சீரகம், 50 கிராம் சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 2 தேக்கரண்டி மல்லி (தனியா) இவற்றை அரைத்துக் கொள்ளவும். 3 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 1 தக்காளியை மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் 10 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி, வதங்கிய பின் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தும் நண்டுகளைப் போடவும். நண்டுகள் வெந்து நன்கு வதங்கிய பின் இறக்கவும்.