Friday, July 29, 2011

Facts about Niagara Falls

Categorized by these three names:

American Falls (between Prospect Point and Luna Island) far left

Bridal Veil Falls (between Luna Island and Goat Island) mid left

Canadian/Horseshoe Falls (between Goat Island and Table Rock) right

American Falls & Bridal Veil Falls

length of brink: 1060 feet

height: 176 feet (due to rocks at the base actual fall is 70 feet)

volume of water: 150,000 U.S. Gallons per second
Actual amount varies, there are two hydroelectric plants which draw water into their
reservoirs prior to the Falls. Their intake greatly affects the volume of water flowing over
the falls. The amount of water being siphoned away depends on two variables. The time
of year, and the time of the day. Flow is greatest in the daytime during peak tourist
season (June, July, and August). In the event of an emergency the flow can be
somewhat reduced by the hydroelectric companies increasing their intake.
The Bridal Veil Falls is named for its appearance. It is located next to the American falls,
separated by a small piece of land called Luna Island.
Canadian "Horseshoe" Falls
length of brink: 2600 feet
height: 167 feet
volume of water: 600,000 U.S. gallons per second
Interesting fact: According to the U.S.G.S. (United States Geological Survey) of Niagara
Falls, it appears that almost 1/3 of the Canadian Falls lies within US Territory.


A Brief History of the Falls
Information below graciously provided courtesy of Niagara Parks

Ice Age History of the Niagara River and Whirlpool Rapids

The Niagara River, as is the entire Great Lakes Basin of which the river is an integral part, is a legacy of the last Ice Age. 18,000 years ago southern Ontario was covered by ice sheets 2-3 kilometers thick. As they advanced southward the ice sheets gouged out the basins of the Great Lakes. Then as they melted northward for the last time they released vast quantities of meltwater into these basins. Our water is "fossil water"; less than one percent of it is renewable on an annual basis, the rest leftover from the ice sheets.

The Niagara Peninsula became free of the ice about 12,500 years ago. As the ice retreated northward, its meltwaters began to flow down through what became Lake Erie, the Niagara River and Lake Ontario, down to the St. Lawrence River, and, finally, down to the sea. There were originally 5 spillways from Lake Erie to Lake Ontario. Eventually these were reduced to one, the original Niagara Falls, at Queenston-Lewiston. From here the Falls began its steady erosion through the bedrock.

However, about 10,500 years ago, through an interplay of geological effects including alternating retreats and re-advances of the ice, and rebounding of the land when released from the intense pressure of the ice (isostatic rebound), this process was interrupted. The glacial meltwaters were rerouted through northern Ontario, bypassing the southern route. For the next 5,000 years Lake Erie remained only half the size of today, the Niagara River was reduced to about 10% of its current flow, and a much-reduced Falls stalled in the area of the Niagara Glen.

About 5,500 years ago the meltwaters were once again routed through southern Ontario, restoring the river and Falls to their full power. Then the Falls reached the Whirlpool.

It was a brief and violent encounter, a geological moment lasting only weeks, maybe even only days. In this moment the Falls of the youthful Niagara River intersected an old riverbed, one that had been buried and sealed during the last Ice Age. The Falls turned into this buried gorge, tore out the glacial debris that filled it, and scoured the old river bottom clean. It was probably not a falls at all now but a huge, churning rapids. When it was all over it left behind a 90-degree turn in the river we know today as the Whirlpool, and North America's largest series of standing waves we know today as the Whirlpool Rapids.

The Falls then re-established at about the area of the Whirlpool Rapids Bridge upriver to our right, and resumed carving its way through solid rock to its present location.

Straddling the Canadian-United States International Border and both in the Province of Ontario and the State of New York, Niagara Falls attracts some 12 Million tourists to her majestic awesome beauty each year.
The Niagara is a fairly young river, only 12,000 years old!, a microsecond in geological time. The Niagara Escarpment, which was created by erosion is much older. The glaciers pressed down on the land during the last ice age and laid down layers of sediment, then the slow process of erosion of ice and water ate at the surface of the escarpment

The mighty river plunges over a cliff of dolostone and shale. Niagara Falls is the second largest
falls on the globe next to Victoria Falls in southern Africa.

One fifth of all the fresh water in the world lies in the four Upper Great Lakes-Michigan, Huron,
Superior and Erie. All the outflow empties into the Niagara river and eventually cascades over
the falls.

At the bottom of the falls, the water travels 15 miles over many gorges until it reaches the fifth
Great Lake-Ontario. The land between the lakes does not slope at an even grade, but forms a
spectacular drop approximately the same height as a 20 story building and this is known as the
"Niagara Escarpment" Two billion years ago it was buried under a blanket of ice.
As the years passed, the process of erosion took place, (and still does) five distinct 'gorges' were
formed-Lewiston Brange Gorge, Old Narrow Gorge, Upper & Lower Great Gorges and the
Whirlpool Narrow Gorge.

Approximately 500 years ago the river encountered an obstacle that caused it to 'split into two
channels', thus Goat Island was formed named after John Stedman whose goat herds froze to
death in the winter of 1780). This was the original sediment left from a vanished Lake Tonawanda
(an Indian name).
On the eastern part of the island, the American Falls took shape, the Horseshoe Falls, is on the

western side, where the river angles some 90 degrees.

The water flow on the American side of the falls is much less in strength because of Goat Island,
whereas Horseshoe Falls has no obstruction to divert it.
It should be noted that a third much narrower falls exists. Over the years these falls have been

called at different times; Luna Falls, Iris Falls and is currently named Bridal Veil Falls.
Man has not been able to completely control the flow of the water over the falls, even modern
engineers have tried. Much of the water today is fed through underground channels and pipes to
nearby hydro electric power stations.

Do the Falls Freeze over in the Winter?

Yes and No...... We'll try to explain
The tremendous volume of water never stops flowing, However, the falling
water and mist create ice formations along the banks of the falls and river.
This can result in mounds of ice as thick as fifty feet. If the Winter is cold for
long enough, the ice will completely stretch across the river and form what
is known as the "ice bridge". This ice bridge can extend for several miles
down river until it reaches the area known as the lower rapids.
Until 1912,visitors were allowed to actually walk out on the ice bridge and

view the Falls from below. February 24th of 1888 the local newspaper
reported that at least 20,000 people watched or tobogganed on the ice.
Shanties selling liquor, photographs and curiosities abounded. On February
4th 1912 the ice bridge broke up and three tourists lives were lost.

There can also be a great deal of "mini-icebergs" which flow down the
Niagara River from frozen Lake Erie. The flow of ice has been reduced
considerably by the yearly installation of the "ice-boom" on Lake Erie. The
ice-boom is a long floating chain (2miles- 3.2 KM) of steel floats strung across
the Niagara River from Buffalo New York to Fort Erie Ontario.
It is set in place during the month of December and removed during the
month of March or April. It is maintained by the New York State Power
Authority. The ice boom helps prevent the ice from clogging the river and most
importantly the hydroelectric companies water intakes.

Ice_flow_under_Grand_Island_Bridge.jpg (85596 bytes)

Spring Ice flowing underneath the North Grand Island Bridge
HOWEVER.... The flow of water was stopped completely over both falls
on March 29th 1848 due to an ice jam in the upper river for several hours. This
is the only known time to have occurred. The Falls did not actually freeze
over, but the flow was stopped to the point where people actually walked out
and recovered artifacts from the riverbed!

The "Ice Bridge" underneath the Rainbow Bridge. 1997

Interesting facts about Niagara Falls
The flow over the American Falls was stopped completely for several months
in 1969. The idea was to determine the feasibility of removing the large
amount of loose rock from the base of the falls to enhance it's appearance.
In the end the final decision was that the expense would be too great.

photo credit: Lindsay News & Photo
The word "Niagara" is derived from the Iroquois Indian word "Onguiaahra"
meaning "the strait"
There is an international boundary between the United States and Canada.
Before the invention of film, tourists would sketch pictures of the Falls.
The flow was also halted over both falls on March 30th 1848 due to an ice jam
in the upper river.

The movies Niagara and Superman were filmed in part at the Falls.

In the past ten years, two daredevils lost their lives trying to conquer Niagara.
In the evenings, intense spotlights bathe the falls with different shades of color.


The first person to go over the Falls in a barrel and survive was a 63 year old
female schoolteacher.
High wire tightrope acts used to be performed across the river. Most notably
was "Blondin" who once actually carried his manager across on his back,
stopping midway to rest !
The Falls make a tremendous sound as the water goes over and lands at the
bottom.
Twenty percent of the worlds freshwater lies in the Great Lakes, and most flows
over Niagara Falls.

Thursday, July 28, 2011

அறுசுவை விருந்து!

சேம்பு பக்கோடா

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 8, கடலை மாவு, அரிசிமாவு - தலா 1/2 கப், மிளகாப் பொடி - 11/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சேப்பங்கிழங்கை பாதி வெந்தவுடன் தோலுரித்து, மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் (நன்கு வேகவிடாமல், அரை வேக்காட்டில் வேகவிடவும்) கடலை மாவு மற்றும் அரிசி மாவுடன் மிளகாப் பொடி, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் கரைத்துக்கொண்டு, சேம்பு வில்லைகளை ஒவ்வொன்றாகத் தோய்க்கவும். நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

முள்ளங்கி சூப்

தேவையான பொருட்கள்:

இளசான முள்ளங்கி - 1, சிறிய கேரட் - 1, பச்சைப்பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, முள்ளங்கி இலை (இருந்தால்) பொடியாக நறுக்கியது, ஒருகைப்பிடி அளவு, சோளமாவு - 2 டீஸ்பூன், வெண்ணெ - 2 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1/2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன், கொத்துமல்லி - பொடியாக நறுக்கியது - 1/4 கப், சோளமாவு - 2 டீஸ்பூன்

செய்முறை:

முள்ளங்கியைத் தோல் சீவிப் பொடிப் பொடியாக சீவி, மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் விட்டு, விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சிறிய வாணலியில், வெண்ணெயுடன், கேரட் துருவல், பச்சைப்பட்டாணி, முள்ளங்கி இலை ஆகியவற்றை மிதமான தீயில், நன்கு வதக்கவும். அதை, அரைத்த முள்ளங்கி விழுதுடன் கலக்கவும். பின் சோளமாவுடன் தண்ணீர் சேர்த்து விழுதாகக் கரைத்து ஊற்றி, இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.

கொத்துமல்லி இலைகளை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும். தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்துப் பரிமாறவும்

வாழைத்தண்டு ரைத்தா

தேவையான பொருட்கள்:

இளம் வாழைத்தண்டு - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 1 சிறியது, இஞ்சி - 1 சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன், புளிக்காத கெட்டித்தயிர் - 1 கப், கடுகு - 1/4 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை:

வாழைத் தண்டின், நாரை நீக்கிவிட்டு, மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதனைப் பொடியாக நறுக்கி, அரை டீஸ்பூன் உப்பைப் போட்டு, பிசறிப் பிழிந்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து விழுதாக்கி அதனுடன், தயிரைக் கலக்கவும். பின் மேற்படி, வாழைத் தண்டை இக்கலவையுடன் சேர்த்து கடுகு தாளித்து, கொத்து மல்லித் தழை போட்டுப் பரிமாறவும்.

(ஆம்லா ரைஸ்) நெல்லிக்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

பெரிய அளவிலான நெல்லிக்காய் - 4, பச்சை மிளகாய் - 2, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி, கேரட் சிறியது - 1, நல்லெண்ணெய் - 4 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், கொத்துமல்லி + கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

சாதத்தை உதிர் உதிர்வாக ஒரு தட்டில் ஆற வைத்து, 2 ஸ்பூன் நல்லெண்ணெயைப் பரவலாக ஊற்றவும்.

நெல்லிக்காயைப் பச்சையாகத் துருவி, கொட்டையை நீக்கிவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்துப் பின் மிக்ஸியில் அரைக்கவும். ஒரு வாணலியில் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளித்துப் பின் அரைத்த விழுதை நன்கு வதக்கவும் (தண்ணீர் சுண்டி வரும்வரை) பட்டாணி மற்றும் கேரட் துருவலை வேக வைத்து, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து விழுதுடன் சேர்த்து சாதத்தில் கலக்கவும்.

வறுத்த வேர்க்கடலையை மேலே தூவி, கொத்துமல்லி இலையைத் தூவிப் பரிமாறவும்.

காலிஃப்ளவர் கொஜ்ஜூ

தேவையான பொருட்கள்:

சிறிய காலிஃப்ளவர் - 1, பெரிய வெங்காயம் - 3, பழுத்த தக்காளி - 2, பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, இஞ்சி ( பொடியாக நறுக்கியது) 2 ஸ்பூன், கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, பாசிப்பருப்பு - 1/2 கப், கடலைப் பருப்பு - 1 மேஜைக் கரண்டி, புளி - 1 எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ற அளவு, கடலை மாவு - 1 மேஜைக் கரண்டி, கடுகு + உ.பருப்பு - 2 ஸ்பூன்.

செய்முறை:

காலிஃப்ளவர், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில், கடுகு உளுத்தம் பருப்பைத் தாளிதம் செய்தவுடன் நறுக்கிய பொருட்களையும், பச்சைப் பட்டாணி முத்துக்கள் மற்றும் தக்காளித் துண்டுகளைப் போட்டு, வதக்கவும். பின் தேவைக்கேற்ப உப்பையும், சாம்பார் பொடியையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

குக்கரில் கடலைப் பருப்பு மற்றும் பாசிப் பருப்பைப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். இரண்டு நிமிடத்துக்கு வெயிட் போட்டு, பாதி வெந்தவுடன் மேற்படி வதக்கல் கலவையை அதனுடன் சேர்க்கவும். புளிக் கரைசலுடன், கடலை மாவையும் தூவி மீண்டும் குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் சென்றபின் குக்கரைத் திறந்து அனைத்தையும், கரண்டியால் மசிக்கவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

பலாப்பழ ஹல்வா

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை - 4, சர்க்கரை - 1 கப், நெய் - 2 மேஜைக்கரண்டி, கோதுமை மாவு - 1 மேஜைக்கரண்டி, முந்திரிப் பருப்பு - 8, ஏலக்காப் பொடி - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

கோதுமை மாவை, சிவக்கும்வரை நன்கு வறுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும். பலாச்சுளைகளை மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். விழுதுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுப்பில் வைத்து, மிதமானத் தீயில், தண்ணீர் சுண்டும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும். நன்கு சுண்டி வரும்போது, வறுத்த கோதுமை மாவைக் கொஞ்சம், கொஞ்சமாகத் தூவி, கெட்டிப் பதம் வரும்போது நெயைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும்.

முந்திரிப் பருப்பைத் துண்டுகளாக்கி நெயில் வறுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறியபின் துண்டுகளாகப் போடவும்.

நன்றி: ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த்,சென்னை

ஊறூகாய் வகைகள் முப்பது.

இங்கே 30 வகை ஊறுகாய்களை சூப்பராக தயாரித்து வழங்கியிருக்கும் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். கூடவே அசத்தல் டிப்ஸ்களையும் தந்தார். அவை -

''ஊறுகாய் ரொம்ப நாள் கெடாம இருக்கணும்னா, கட்டாயம் கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்துக்கணும். அதேபோல், தூள் உப்புக்குப் பதிலா... கல் உப்பு சேர்த்தா, காலமெல்லாம் சுவையும் மாறாம இருக்கும். அப்புறம்... தாளிக்கறதுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினா, டேஸ்ட் சூப்பரோ... சூப்பர்தான்!''

'மீல் மேக்கர் 65’ செய்ய முடியுமா..?

உப்புக் கலந்த தண்ணீரில் மீல் மேக்கரை பத்து நிமிடம் ஊற வைத்து... பிறகு, அவற்றைத் தனியாக எடுத்து நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள மசாலாத்தூளில் மீல் மேக்கரைத் தோய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்தால்... 'மீல் மேக்கர் 65’ எனும் சூப்பர் டிஷ் ரெடி! தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

பலாக்கொட்டை ரோஸ்ட் சாப்பிட்டிருக்கிறீர்களா?

பலாக்கொட்டைகளை வேக வைத்து தோல் நீக்குங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசறிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, பிசறிய பலாக்கொட்டைகளைச் சேர்த்து வறுத்தெடுங்கள். அபாரமான டேஸ்ட்டுடன் அசத்தல் ரோஸ்ட் ரெடி!

சுவையான மோர்க் குழம்பு தயாரிக்க வேண்டுமா?

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து... அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து இந்தக் கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியதும், அடுப்பை அணைக்கவும். உடனே, மோரைச் சேர்த்து நன்கு கலக்கி விட, ருசியான மோர்க்குழம்பு தயார். தேவைப்பட்டால்... வெண்டைக்காய், பரங்கிக்காய் என்று சேர்த்தும் தயாரிக்கலாம்.

தக்காளி ஊறுகாய்

தேவையானவை : தக்காளி - ஒரு கிலோ, காய்ந்த மிளகாய் - 150 கிராம், வெந்தயம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு.

தாளிக்க : கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை : தக்காளியை நன்றாகக் கழுவி, துடைத்து... நான்காக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, ஒருநாள் மூடி வைக்கவும். அடுத்த நாள், அதனை வெயிலில் வைத்து எடுக்கவும். அடுத்தடுத்த நாட்களில், நறுக்கிய தக்காளியை 'பிளாஸ்டிக்’ பேப்பர் மேலே பரப்பிக் காய வைக்கவும். பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். தக்காளியில் உள்ள தண்ணீர் உலர்ந்ததும், பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை தக்காளியின் மேல் தெளித்துக் காய விடவும். பாத்திரத்தில் இருக்கும் மொத்த தண்ணீரும் தீரும் வரை இதேபோல் செய்து, தக்காளியை நன்கு உலர்த்தி, காயவைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். கடுகையும் வெந்தயத்தையும் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். காய வைத்த தக்காளியுடன் வறுத்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை அதில் சேர்த்து... மஞ்சள்தூள், பொடித்த கடுகு, வெந்தயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி ஆறவைக்கவும். பிறகு, ஈரமில்லாத பாட்டிலில் போட்டு காற்று புகாதபடி சேமித்து வைக்கவும்.

இந்த ஊறுகாய் 3 மாதம் வரையிலும் கெடாது.

காய்கறி ஊறுகாய்

தேவையானவை : நறுக்கிய கேரட் - அரை கப், பாகற்காய் - கால் கப், பீன்ஸ் - கால் கப், பஜ்ஜி மிளகாய் - கால் கப், பச்சை மிளகாய் - 100 கிராம், பெங்களூர் கத்திரிக்காய் - கால் கப், காய்ந்த மிளகாய் - 100 கிராம், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், வினிகர் - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : காய்ந்த மிளகாய், கடுகு இரண்டையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளுடன் பொடித்த கடுகு, பொடித்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை பெரிய பாட்டிலில் சேர்த்து நன்கு குலுக்கிக் கலந்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் எலுமிச்சம் பழச் சாறு, வினிகர் விட்டுக் கலந்து கொள்ளவும். பின்னர் பெருங்காயத் தூள், கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். காய்கறிகள் அந்தக் கலவையில் நன்கு கலக்கும் வரை ஊறவிட்டு, பிறகு ஊறுகாயைப் பயன்படுத்தலாம்.

இதனை காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

புளி - இஞ்சி ஊறுகாய்

தேவையானவை: நார் இல்லாத இஞ்சி - கால் கிலோ, பச்சை மிளகாய் - 50 கிராம், புளி, பொடித்த வெல்லம் - தலா 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இஞ்சியை நன்றாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்து, நன்றாகக் கொதிக்க விடவும். இஞ்சி நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி இறக்கி ஆறவிட... புளி - இஞ்சி ஊறுகாய் 'கமகம’வென ரெடி

பிளம்ஸ் ஊறுகாய்

தேவையானவை: நறுக்கிய பிளம்ஸ் பழம் - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கடுகு, வெந்தயப்பொடி - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய பிளம்ஸ் பழங்களை அதில் சேர்க்கவும். லேசாக வதங்கியதும்... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, ஆறவிடவும்.

இரண்டு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

மாங்காய் திடீர் ஊறுகாய்

தேவையானவை : தோலுடன் சேர்த்து பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய மாங்காயுடன் பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காய்க் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.

இந்த திடீர் ஊறுகாய் இரண்டு, மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

பச்சை மிளகாய் - எலுமிச்சை ஊறுகாய்

தேவையானவை: எலுமிச்சம்பழம் - 10, இஞ்சி - 100 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எலுமிச்சம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, நீளமானத் துண்டுகளாக நறுக்கவும். கண்ணாடி பாட்டிலில் நறுக்கிய எலுமிச்சம் பழத்துண்டுகள், நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாயுடன் உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பாட்டிலை நன்கு குலுக்கவும். ஒரு வாரம் வரை, இரண்டு மூன்று முறை பாட்டிலைக் குலுக்கவும். அப்போதுதான் எல்லாப் பொருட்களும் ஒன்றாகக் கலந்து நன்றாக ஊறி, ஊறுகாய் சுவையாக இருக்கும்.

இதை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய்

தேவையானவை: நெல்லிக்காய் - 20, வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை நன்றாகக் கழுவி, ஆவியில் இரண்டு நிமிடம் வேக வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... அதில் வேக வைத்த நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி எடுக்கவும். ஆறியதும், அந்தக் கலவையில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்கு கலந்துகொள்ள... விட்டமின் 'சி’ நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி!

இந்த ஊறுகாய் ஒரு வாரம் வரைதான் கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால், கூடுதலாக சில நாட்கள் இருக்கும்.

நாரத்தங்காய் ஊறுகாய்

தேவையானவை : நாரத்தங்காய் - 10, பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை : நாரத்தங்காயை கழுவி, துடைத்து சுருள் சுருளாக நறுக்கி... அதனுள் கல் உப்பை அடைத்து ஊறுகாய் ஜாடியில் வைக்கவும். நாரத்தங்காயின் தோல் தடிமனாக இருப்பதால் நன்கு ஊறுவதற்கு 3 நாட்கள் ஆகும். நன்கு ஊறியதும், அதை தனியாக எடுத்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் போகக் காய்ந்ததும் மீண்டும் பாத்திரத் தில் இருக்கும் உப்புத் தண்ணீரிலேயே போடவும்; மீண்டும் காயவைக்கவும். தோல் நன்றாக ஊறும்வரை இதேபோல் செய்யவும்.

பிறகு வெந்தயத்தை வறுத்து, மிளகாய்த்தூளுடன் சேர்த்து... ஊறவைத்த நாரத்தங்காயில் பிசறி நன்றாகக் கலந்து வைக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வாசம் வந்ததும் பயன்படுத்தலாம்.

ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

மாகாளி ஊறுகாய்

தேவையானவை: மாகாளிக் கிழங்கு - அரை கிலோ, விரலி மஞ்சள் - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 10, வறுத்த வெந்தயம் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாகாளிக் கிழங்கினை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி... நடுவில் இருக்கும் வேரை எடுத்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாயுடன் விரலி மஞ்சள், வறுத்த வெந்தயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர் விட்டு அரைத்து, அந்த விழுதினை நறுக்கிய மாகாளிக் கிழங்குடன் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக, எலுமிச்சம்பழச் சாற்றை சேர்த்துக் கலந்து சில நாட்கள் ஊறவிட்டால்... ஊறுகாய் ரெடி!

இதனை ஒன்றிரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

ஓமம் - மாங்காய் ஊறுகாய்

தேவையானவை: நீளவாக்கில் மெல் லியதாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 15 அல்லது 20, கீறிய பச்சை மிளகாய் - 4, ஓமம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் (அல்லது) கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய மாங்காயுடன் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு ஓமம் சேர்த்துப் பொரிக்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி மாங்காய் - உப்புக் கலவையில் சேர்த்து நன்கு கிளற... ஓமம் - மாங்காய் ஊறுகாய் உடனடியாக சுவைக்க ரெடி!

இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

தேவையானவை: மாங்காய் இஞ்சி - 200 கிராம், பச்சை மிளகாய் - 5, எலுமிச்சம்பழம் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.



செய்முறை: மாங்காய் இஞ்சியை மண் போகக் கழுவி, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை நறுக்கிய இஞ்சியுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு பிழிந்து, அதையும் சேர்த்து நன்கு கலந்து, ஒருநாள் முழுக்க ஊறவிட... சிம்பிள் மாங்காய் இஞ்சி ஊறுகாய் ரெடி!

தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

இரண்டு வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

பச்சை மிளகு ஊறுகாய்

தேவையானவை : பச்சை மிளகு - 250 கிராம், எலுமிச்சம்பழம் - 10, உப்பு - தேவையான அளவு.

செய்முறை : பச்சை மிளகினை காம்பிலிருந்து உதிர்த்துக் கழுவி... ஈரம் போகக் காய விடவும். எலுமிச்சம் பழத்தை நறுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழச்சாற்றில் பச்சை மிளகு, உப்பு சேர்த்து நன்கு குலுக்கி வைக்கவும். மிளகில் எலுமிச்சை சாறு ஊறி, ருசியாக இருக்கும்.

இது தயிர்சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சூப்பர் ஊறுகாய்! இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மாங்காய் தோல் ஊறுகாய்

தேவையானவை : மாங்காய் தோல் - அரை கப், வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தோல் தடிமனாய் உள்ள 7-8 மாங்காய்களை துண்டுகளாக நறுக்கி, கல் உப்பு சேர்த்து குலுக்கி வைக்கவும். அது, இரண்டு நாட்கள் ஊறியதும்... வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க... மாங்காய் தோல் ரெடி! சரியான அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் மாங்காய் தோலைப் போட்டு வேக விடவும். வெந்ததும், தண்ணீரை வடிகட்டி விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அதில் சேர்த்துக் கலந்த பிறகு, பொடித்த மிளகாயையும் சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து கொள்ளவும்.

மாங்காய்த் தோலை பூஞ்சணம் பிடிக்காமல் 'ஸ்டாக்’கில் 6 மாதம் வரை வைத்திருக்க... இந்த திடீர் ஊறுகாயை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

துருவிய மாங்காய் ஊறுகாய்

தேவையானவை: புளிப்பு மாங்காய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 50 கிராம், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காயை தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காய்த் துருவலைச் சேர்க்கவும். சிறிது வதங்கியதும்... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கிக் கிளறவும். கடைசியாக, பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இரண்டு வாரங்கள் கெடாமல் நன்றாக இருக்கும்.

பூண்டு ஊறுகாய்

தேவையானவை : தோல் உரித்த பூண்டு - ஒரு கப், கடுகுப்பொடி - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய். உப்பு - தேவையான அளவு

செய்முறை : தோலுரித்த பூண்டுடன் மிளகாய்த்தூள், கடுகுப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, நல்லெண்ணெய் விட்டு, மீண் டும் ஒருமுறை எண்ணெய் சீராக பரவுமாறு கலந்து வைக்கவும். பூண்டு அந்தக் கலவையில் ஊற ஊற, ஊறுகாய் சுவையுடன் இருக்கும்.

ஒரு மாதம் கெடாமல் இருக்கும் இந்த ஊறுகாய்.

ஊறவைத்த எலுமிச்சை ஊறுகாய்

தேவையானவை : எலுமிச்சம் பழம் - 25, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை : எலுமிச்சம்பழத்தை எட்டுத் துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குலுக்கி வைக்கவும். இப்படி, தினமும் குலுக்க... அவை உப்பில் நன்கு ஊறி மிருதுவாக மாறும். இதற்கு, எலுமிச்சம் பழம் அதிக சாறு உள்ள பழமாக இருப்பது அவசியம்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து ஊறவைத்த எலுமிச்சம்பழம் சேர்த்துக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.

எலுமிச்சம் பழம் நன்கு ஊறிஇருப்பதால், அதிக நேரம் அடுப் பில் வைத்திருக்கத் தேவையில்லை.

இந்த ஊறுகாயை மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும்.

மாவடு ஊறுகாய்

தேவையானவை : மாவடு - ஒரு கிலோ (கீழே விழுந்த மாவடு கூடாது), கடுகுத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், விளக்கெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை : மாவடுவை நன்றாகக் கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து துணியில் பரப்பி 2 மணி நேரம் காய விடவும். ஊறுகாய் ஜாடியில் மாவடுக்களைப் போட்டு, விளக்கெண்ணெய் விட்டுக் குலுக்கவும். பிறகு, கல் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு குலுக்கவும். இதேபோல் நான்கு நாட்களுக்குத் திரும்பத் திரும்பக் குலுக்கவும். அப்போது மாங்காயுடன் உப்பு சேர்வதால், ஜாடிக்குள் நிறைய தண்ணீர் பிரிந்து வந்திருக்கும்.

ஜாடியில் உள்ள மாவடுக்களை வெளியே எடுத்து வேறொரு ஜாடியில் போடவும். மாவடு ஊறிய ஜாடியிலிருக்கும் தண்ணீரை வடிகட்ட வேண்டும். இன்னொரு ஜாடியில் உள்ள மாவடு உடன் கடுகுத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து... வடிகட்டி வைத்துள்ள உப்பு நீரையும் விட்டு நன்கு குலுக்கி வைத்து விட்டால் மாவடு ஊறுகாய் உங்கள் நாவில் எச்சில் ஊறவைக்கும்.

இது மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

ஆவக்காய் ஊறுகாய்

தேவையானவை : முற்றிய புளிப்பு மாங்காய் - 10, வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : புளிப்பு மாங்காயை நடுவில் இருக்கும் ஓட்டுடன் சேர்த்து நறுக்கி, ஒவ்வொரு துண்டையும் நன்றாகத் துடைத்துக் கொள்ள வேண்டும். கடுகு, உப்பு இரண்டையும் சில மணி நேரம் வெயிலில் காயவைத்து, தனித்தனியாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். மாங்காய் தவிர, மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

வாயகன்ற ஒரு ஜாடியில் மாங்காய் துண்டுகளை ஒரு கை போடவும். கலந்து வைத்திருக்கும் பொடிக் கலவையை அதன்மீது ஒரு 'லேயர்’ தூவவும். மீண்டும் மாங்காய் துண்டுகள் ஒரு 'லேயர்’, பொடிக்கலவை ஒரு 'லேயர்’ என மாற்றிமாற்றிப் போடவும். கடைசியில், நல்லெண்ணெய் விட்டு மூடி வைக்கவும். அடுத்த நாள் கிளறி விடவும். ஜாடியின் வாய்ப்பகுதியை வெள்ளைத் துணியால் மூடி இறுகக் கட்டிவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 2-3 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மா இஞ்சி - மாங்காய் ஊறுகாய்

தேவையானவை : தோல் சீவிப் பொடியாக நறுக்கிய மாங்காய் இஞ்சித் துண்டுகள் - அரை கப், மாங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : மாங்காய் இஞ்சியுடன், மாங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து... அரைத்த மாங்காய் - இஞ்சி விழுதையும் சேர்த்துக் கிளறினால், சுவையான மா இஞ்சி - மாங்காய் ஊறுகாய் ரெடி!

இதனை, ஒரு மாதம் வரையிலும் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

வெங்காய ஊறுகாய்

தேவையானவை : சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, புளி - 25 கிராம், கடுகு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து, கழுவி எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும், அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் போது, இறக்கி ஆறவைத்து, ஈரமில்லாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

ஸ்டஃப்டு மிளகாய் ஊறுகாய்

தேவையானவை : இளம் பச்சை நிற மிளகாய் (பெரியது) - 20, கடுகு - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : மிளகாயின் காம்பு நீக்கி, இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடுகைப் பொடித்து, அதனுடன் உப்பு, சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒவ்வொரு மிளகாயின் உள்ளே வைத்து அடைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு ஜாடியில் போட்டு, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலந்து, குலுக்கி வைக்கவும். அவையெல்லாம் ஒன்றாகக் கலந்து, நன்றாக ஊற... மிளகாயின் காரமும் எலுமிச்சையின் புளிப்பும் கலந்து மிகுந்த சுவையுடன் இருக்கும்.

காற்றுப்புகாத, ஈரமில்லாத ஜாடியில் வைத்திருந்தால், ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

புளியங்காய் ஊறுகாய்

தேவையானவை : இளம் புளியங்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 15, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வறுத்த வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : புளியங்காயைக் கழுவித் துடைத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இடித்து, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.தேவைப்படும்போது, இதில்இருந்து சிறிது எடுத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, வெந்தயப்பொடியைச் சேர்த்து நன்கு கிளறவும்.

எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி சேமிக்கவும். ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

காய் - கனி ஊறுகாய்

தேவையானவை: துருவிய ஆப்பிள் - கால் கப், துருவிய கேரட் - கால் கப், துருவிய பரங்கிக்காய் - கால் கப், புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துருவிய கேரட், பரங்கிக்காய், காய்ந்த மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து துருவி வைத்துள்ள ஆப்பிள் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... அரைத்த காய்கறி விழுதைச் சேர்த்து மீண்டும் சுருள வதக்கி இறக்கவும்.

இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்று சுவை கலந்து இருப்பதால் வித்தியாசமாக இருக்கும். இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

எலுமிச்சை திடீர் ஊறுகாய்

தேவையானவை : எலுமிச்சம் பழம் - 10, நறுக்கிய பச்சை மிளகாய் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : எலுமிச்சை பழத்தைக் கழுவி, கொதிநீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு, வெளியே எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி... கால் கப் தண்ணீர் விடவும். நறுக்கிய எலுமிச்சம் பழம் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, இறக்கவும்.

இந்த திடீர் ஊறுகாயை அதிக பட்சம் ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகாய் - 200 கிராம், கடுகுத்தூள், ஆம்சூர்பொடி (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் கடுகுப்பொடி, மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து... ஈரமில்லாத பாட்டிலில் போட்டு, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார்.

இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

மிளகாய் வடை ஊறுகாய்

தேவையானவை : பச்சை மிளகாய் - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : காய்ந்த மிளகாயை அரை மணிநேரம் ஊறவைக்கவும். கறுப்பு உளுந்து, வெந்தயம் இரண்டையும் தனியாக அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு பச்சை மிளகாய் ஊறவைத்த காய்ந்த மிளகாய், உளுந்து, வெந்தயம், உப்பு, தயிர் இவற்றுடன் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை சிறிய கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து 'பிளாஸ்டிக் ஷீட்’டில் இடவும். ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்தவுடன், ஈரமில்லாத, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம்.

தேவைப்படும்போது எண்ணெயில் இட்டுப் பொரித்து... சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

மிளகாய் வடையை இரண்டு, மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

கதுப்பு மாங்காய் ஊறுகாய்

தேவையானவை : சதைப்பற்றுள்ள புளிப்பு மாங்காய் - 2, காய்ந்த மிளகாய் - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : மாங்காயை தோல் நீக்காமல் பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். அவ்வப்போது நன்றாக குலுக்கி விடவும். அதில் தண்ணீர் பிரிந்து வந்ததும், மாங்காய் கதுப்புகளை மட்டும் எடுத்து... வெயிலில் காயவைக்கவும். இதே போன்று 2 நாட்கள் செய்யவும். (மாங்காயில் சிறிது ஈரம் இருக்க வேண்டும்; மொட மொடப்பாக காய வைக்கக்கூடாது.)

வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும். கடுகையும், மிளகாயையும் வெயிலில் காயவைத்து தனித்தனியாக பொடிக்கவும். காய வைத்துள்ள மாங்காயில் கடுகுப்பொடி, வெந்தயப்பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். இந்த ஊறுகாய்க்கு எண்ணெய் தேவை இல்லை. இரண்டு, மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

வெந்தய மாங்காய் ஊறுகாய்

தேவையானவை : மாங்காய் - 2, வறுத்துப் பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

உடனடியாக செய்யக்கூடிய இந்த ஊறுகாயை அதிகபட்சம் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

மாம்பழ ஊறுகாய்

தேவையானவை : மாம்பழம் - 3, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை : மாம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தாளித்து மாம்பழத்தில் சேர்க்கவும். இறுதியாக, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள மாம்பழ ஊறுகாய் ரெடி!

சாம்பாருக்கும், தயிர் சாதத் துக்கும் சரியான ஜோடி, இந்த ஊறுகாய்!

கிடாரங்காய் ஊறுகாய்

தேவையானவை : பழுத்த கிடாரங்காய் - 2, மிளகாய்த்தூள் - 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை : கிடாரங்காயை பொடிப்பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய கிடாரங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். பாதிக்குப் பாதியாக வதங்கியதும் மிளகாய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறி இறக்கவும்.

இது, ஒன்றிரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நன்றி : அவள் விகடன்

Wednesday, July 27, 2011

அம்மா இது என்ன ? உங்கள் பலமும் பலவினமும் புரிந்து கொள்ளவேண்டிய நேரம் இது

புதுடெல்லி, ஜூலை 27, 2011

சமச்சீர் கல்வி சட்டத் திருத்தம் தொடர்பாக விளக்கம் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழக அரசையே குறைகூறியது உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் விசாரணை தொடங்கியது.

சமச்சீர் கல்வி தொடர்பாக சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது ஏன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், 'சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அளித்த தீர்ப்பில், சமச்சீர் கல்வியை 2011-ம் கல்வி ஆண்டிலோ அல்லது அதற்குப் பிறகோ நடைமுறைப்படுத்தலாம் என கூறப்பட்டது.

இந்தத் தீர்ப்பைச் சரியாக புரிந்துகொள்ளாததால், சமச்சீர் கல்வி திட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது.

தமிழக அரசுக்கு கல்வி மற்றும் சட்டத்துறையில் சரியான ஆலோசனை வழங்குவதற்கு உரியவர் எவரும் இல்லை.


இதனால், இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து நீதிமன்ற நேரத்தை தமிழக அரசு வீணடித்துவிட்டது. சரியான ஆலோசனை இருந்திருந்தால், இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்க மாட்டாது,' என்று தனது வாதத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராவ் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்று என்றும், அடுத்த ஆண்டுக்குள் குறைகளைச் சரிசெய்து, வரும் 2012 கல்வியாண்டில் திருத்தப்பட்ட சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், ஏற்கெனவே இரண்டு மாத காலமாக புத்தகங்கள் இன்றி மாணவர்கள் பாதிப்பு உள்ளாகி வருகிறார்கள் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, சமச்சீர் கல்வி புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்கும் நடவடிக்கையை அரசு இதுவரை தொடங்கவில்லை என்றும் எதிர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்த நிலையில், அக்கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறுவது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது கவனத்துக்குரியது.


நன்றி :விகடன்

பண்டிகை பலகாரங்கள் ...பல,பல

முந்திரி-தேங்காய் பால்கோவா

தேவையானவை: பால் - 8 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 2 கப், ஊற வைத்த முந்திரி - 10, தேங்காய் துருவல் - ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். பால் பாதியாகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, காய்ச்சிய பாலுடன் கலந்து, மீண்டும் பாதியாக வந்ததும், சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு, நெய் விட்டு, சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

வழக்கமாக செய்யும் பால்கோவாவைவிட, இது அதிக சுவையோடு இருக்கும்.

கர்ச்சிக்காய்

தேவையானவை: அரிசி மாவு - இரண்டு கப், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து, பொட்டுக்கடலை, வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பொடித்து பூரணமாக செய்து கொள்ளவும். கொதிக்க வைத்த தண்ணீரை அரிசி மாவில் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவில் சிறிது எடுத்து, உருட்டி சிறு சொப்பு போல் செய்து, அரை டீஸ்பூன் பூரணத்தை அதனுள் வைத்து, நீளவாக்கில் ஓரத்தை கவனமாக மூடினால்... இதுதான் கர்ச்சிக்காய். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, இரண்டு அல்லது மூன்று கர்ச்சிக்காய்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

பழமையான இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று.

ட்ரை ஃப்ரூட் போளி

தேவையானவை: ஊற வைத்து தோல் உரித்த பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் - தலா 4, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், மைதா மாவு - ஒரு கப் கப், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு சிறிய கப், நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, திராட்சை ஆகியவற்றை 10 நிமிடம் ஊற வைத்து... தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து கெட்டியான பூரணமாகக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருட்டிக் கொள்ளவும்.

மைதா மாவுடன் கேசரி பவுடர், நல்லெண்ணெய் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து,. சிறிய சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். இதை ஒரு வாழை இலையில் வைத்து, நடுவில் பூரண உருண்டை வைத்து மூடி, போளியாக தட்டி, தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.

பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த போளியை, முந்தைய நாளே பூரணம் செய்து வைத்துக் கொண்டு, மறுநாள் தயாரிக்கலாம். வேலை சுலபமாக இருக்கும்.

மைசூர்பாகு


தேவையானவை: கடலை மாவு, நெய் - தலா ஒரு கப், சர்க்கரை - 2 கப்.

செய்முறை: பாதி அளவு நெய்யில் கடலை மாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு சர்க்கரைப் பாகு (தண்ணீரில் சிறிது பாகை விட்டு பார்த்தால், முத்து போல் திரண்டு வரும் பதம்) காய்ச்சி, வறுத்து வைத்த கடலை மாவை சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக விட்டு, கடலை மாவு கெட்டியாகி தட்டில் கொட்டும் பதம் வந்ததும் இறக்கவும். நெய் தடவிய குழிவான தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போட்டால்... மைசூர்பாகு ரெடி.

கடலை மாவுக்குப் பதிலாக கடலைப்பருப்பு வாங்கி ஊற வைத்து, மாவாக அரைத்துச் செய்தால்... இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.

சாக்லேட் லாலி பாப்

தேவையானவை: பால் - இரண்டரை கப், சாக்லேட் பவுடர் - 4 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிறிய கப், முந்திரி, பாதாம் - தலா 10, லாலிபாப் ஸ்டிக் - 5.

செய்முறை: முந்திரி, பாதாமை அரைத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி, அரைத்த முந்திரி, பாதாம் விழுதை அதில் சேர்த்துக் கிளறி... சர்க்கரை, சாக்லேட் பவுடர் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும். இதை லாலிபாப் ஸ்டிக்கில் பொருத்தி, ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைத்து சாப்பிடவும்.

சாக்லேட் பவுடருக்குப் பதிலாக போர்ன்விட்டா சேர்த்தும் செய்யலாம்.

அத்திப்பழ அல்வா

தேவையானவை: அத்திப்பழத் துண்டுகள், முந்திரி - தலா 20, சர்க்கரை - ஒரு சிறிய கப், நெய் - 6 டீஸ்பூன், பாதாம், பிஸ்தா - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: முந்திரி பத்து, அத்திப்பழத் துண்டுகள், பாதாம், பிஸ்தா ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை தோல் உரித்து, எல்லாவற்றுடனும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு அரைத்த விழுதைப் போட்டு பத்து நிமிடம் கிளறவும். பிறகு, சர்க்கரை சேர்க்கவும். மீதமுள்ள முந்திரிப்பருப்பை உடைத்து, சிறிதளவு நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, அல்வா பதத்தில் ஒட்டாமல் வந்ததும் கிளறி இறக்கவும்.

அட்டகாசமாக இருக்கும் இந்த அல்வா! அத்திப்பழம் இருமலை போக்கும் மருத்துவக் குணம் கொண்டது.

கோவா-கேசரி சுகியன்

தேவையானவை: பால்கோவா, மைதா மாவு - தலா ஒரு கப், ரவை - 2 கப், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு சிறிய கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: நெய்யில் ரவையை சிவக்க வறுக்கவும். ஒரு பங்கு ரவைக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் என்ற அளவில், தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும். இதில் ரவையைப் போட்டுக் கிளறி, வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள், பால்கோவா சேர்த்துக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவில் சிறிது கேசரி பவுடர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து கோவா-கேசரி உருண்டைகளை மைதா மாவில் தோய்த்துப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

வாசனையும், சுவையும் அமோகமாக இருக்கும். தட்டில் வைத்த அடுத்த நொடியில் காணாமல் போய்விடும்.

பயத்தமாவு உருண்டை

தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு சிறிய கப், நெய்யில் வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பு - 10.

செய்முறை: வெறும் கடாயில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரையைக் கலந்து... ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு, காய்ச்சிய நெய் சேர்த்துக் கலந்து, சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

பாசிப்பருப்பு உடலுக்கு மிகவும் நல்லது. சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும் சத்தான உருண்டை இது.

கோவா குலோப் ஜாமூன்

தேவையானவை: ஜாமூன் மிக்ஸ் - ஒரு சிறிய கப், பால்கோவா - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: ஜாமூன் மிக்சுடன் பால்கோவா, பாதி அளவு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் நான்கு, ஐந்து உருண்டைகளாகப் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். மீதமுள்ள சர்க்கரையில் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்த ஜாமூன் உருண்டைகளைப் போடவும். ஊறியதும் சாப்பிடலாம்.

சர்க்கரைப் பாகுடன், கோவா சேர்க்கும்போது ருசியுடன் நல்ல வாசனையாகவும் இருக்கும். விருப்பப்பட்டால் எசன்ஸ் சேர்க்கலாம்.

புரோட்டீன் லட்டு

தேவையானவை: பொடித்த பாதாம், உடைத்த முந்திரி, பிஸ்தா - தலா 10, வறுத்து தோல் உரித்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, பொட்டுக்கடலை - ஒரு கப், வெள்ளரி விதை, நெய் - தலா 4 டீஸ்பூன், பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டி கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும் (தண்ணீரில் சிறிது பாகை விட்டால் முத்து போல் திரண்டு வரும் பதம்). பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, வெள்ளரி விதை, பிஸ்தா ஆகியவற்றை நெய் விட்டு வறுத்து, எல்லாவற்றையும் பாகுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு போஷாக்கான லட்டு. தினமும் இரண்டு சாப்பிட்டால் உடல் வளர்ச்சி கூடும்.

ரங்கோலி லட்டு

தேவையானவை: கடலை மாவு - கால் கிலோ, சர்க்கரை - முக்கால் கிலோ, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, கிராம்பு - 6, சிறிய கல்கண்டு - 25 கிராம், உலர்ந்த திராட்சை - 10, வறுத்த முந்திரிப் பருப்பு - 20, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, மூன்று நிற ஃபுட் கலர் பவுடர்கள் - ஒவ்வொன்றும் சிறிதளவு, நெய், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவுடன் கேசரி பவுடர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் பூந்தி கரண்டியில் சிறிதளவு மாவைப் போட்டு பூந்தி போல் தேய்த்து, கரகரப்பாக வெந்தவுடன் எடுக்கவும். இதே முறையில் சிறிது சிறிது மாவுடன் கலர் பவுடரை சேர்த்து கலரிலும் பூந்தி தயாரித்துக் கொள்ளவும். சர்க்கரையை பாகு காய்ச்சவும் (தண்ணீரில் சிறிது பாகை விட்டு பார்த்தால், முத்து போல் திரண்டு வரும் பதம்). வேக வைத்த கலர் முத்துக்களை பாகில் போடவும். கிராம்பு, திராட்சையை நெய்யில் பொரித்துப் போடவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், கல்கண்டு எல்லாவற்றையும் சேர்க்கவும். ஆறியதும், கெட்டியான லட்டுகளாகப் பிடிக்கவும்.

குழந்தைகளை ஆசையுடன் சாப்பிடத் தூண்டும்... கலர்கலராய் மின்னும் ரங்கோலி லட்டு.

பாஸந்தி

தேவையானவை: பால் - 8 கப், சர்க்கரை - இரண்டரை கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: அடி கனமான அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாலை விட்டு மிதமான தீயில் காய்ச்சவும். பாலின் மேல் படியும் ஏடுகளை ஒரு சிறு கரண்டியால் எடுத்து தனியே வைக்கவும். பால் பாதியாகும் வரை காய்ச்சி பால் ஏடுகளை சேகரித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து சிறிது கெட்டியாக வரும்வரை கிளறி, சேகரித்த பால் ஏடுகளைப் போட்டு... ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

பாஸந்தி படு ருசியாக இருக்கும். சூடாகவோ, ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்'லென்றோ சாப்பிடலாம்.

பீட்ரூட் அல்வா

தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய பீட்ரூட் துண்டுகள் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாதாம், முந்திரி - தலா 10 (ஊற வைத்து தோல் உரித்து நைஸாக அரைக்கவும்).

செய்முறை: பீட்ரூட் துண்டுகளை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் நெய் விட்டு, பீட்ரூட் விழுதினைப் போட்டு வதக்கி, அரைத்த முந்திரி, பாதாம் விழுதை சேர்த்து நெய் விட்டுக் கிளறவும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி, வறுத்த முந்திரிப் பருப்பு போட்டு இறக்கவும்.

பீட்ரூட் ரத்த விருத்திக்கு நல்லது.உடல் மெலிந்த குழந்தைகளின் உடல் எடை கூடுவதற்கு உகந்த அல்வா இது.

பாதாம் அல்வா

தேவையானவை: பாதாம், முந்திரி - தலா 20, பால்கோவா - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை, நெய் - 4 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப்.

செய்முறை: பாதாம், முந்திரியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். இதை கடாயில் போட்டு சர்க்கரை, பால் கோவாவை சேர்த்து நெய் விட்டுக் கிளறவும். குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

திருமணங்களில் முக்கிய இடம் வகிக்கும் இனிப்புகளில் பாதாம் அல்வாவும் ஒன்று. செய்வது எளிது... சத்தும், சுவையும் அதிகம்.

ரோஜா குல்கந்து

தேவையானவை: இளஞ்சிவப்பு ரோஜாப்பூ - 10, சர்க்கரை - 2 கப், பால்கோவா - ஒரு சிறிய கப், குங்குமப்பூ, நெய், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: ரோஜாப்பூவை இதழ்களாக உதிர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் பால்கோவா, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி... நெய், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து திரும்பவும் கிளறி இறக்கவும்.

ரோஜா சீஸனின்போது இந்த குல்கந்து தயாரிக்கலாம். சாப்பிட்டவுடன் வாயே மணக்கும்.

லட்டு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை, டைமண்ட் கல்கண்டு, எண்ணெய் - தேவையான அளவு, சர்க்கரை - 2 கப், பச்சைக் கற்பூரம் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவுடன் கேசரி பவுடர், தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பூந்திக் கரண்டியில் மாவை ஊற்றித் தேய்த்து, பூந்தி தயாரிக்கவும். பிறகு, சர்க்கரையில் தேவையான தண்ணீர் சேர்த்து இளம்பாகாக காய்ச்சவும். இந்தப் பாகில் பூந்தி, முந்திரி, கல்கண்டு, திராட்சை, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து புரட்டவும். சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.

கையில் நெய் தடவிக் கொண்டு லட்டு பிடிக்க வேண்டும். ஆறிவிட்டால் பிடிக்க வராது.

ஜாங்கிரி

தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு, சர்க்கரை - தலா ஒரு கப், சிவப்பு கேசரி கலர் - ஒரு சிட்டிகை, ரோஸ் எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, கம்பிப்பாகு பதத்தில்காய்ச்சி இறக்கி, எசன்ஸ் சேர்க்கவும். உளுத்தம்பருப்பை 30 நிமிடம் ஊற வைத்து, பொங்கப் பொங்க அரைக்கவும். அரைக்கும்போதே அதில் கலர் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், ஜாங்கிரி துணியில் ('ரிட்' எனப்படும் ஜாங்கிரி பிழியும் துணி கடைகளில் கிடைக்கும். அல்லது வெள்ளை நிற காடா துணியின் நடுவில் ஒரு ஓட்டை போட்டால்... ஜாங்கிரி துணி தயார்). அரைத்த மாவைப் போட்டு, துணியை மடித்துப் பிழியவும். நன்றாக வெந்ததும் எடுத்து, ஜாங்கிரியை சர்க்கரைப் பாகில் ஊறவிட்டு எடுத்து வைக்கவும்.

பளபளவென ஜோராக இருக்கும் இந்த ஜாங்கிரி.

குஜராத்தி லாடு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், கோதுமை மாவு, நெய் - தலா கால் கப், வனஸ்பதி - 5 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு, சர்க்கரை - ஒன்றரை கப்.

செய்முறை: கடலை மாவு, கோதுமை மாவு இரண்டையும் கடாயில் போட்டு, வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரையை சேர்த்துப் பொடிக்கவும். திராட்சை, முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து சேர்த்துப் பிசிறவும்.

கடாயில் நெய், வனஸ்பதியை விட்டு சூடாக்கி, பிசறிய மாவில் கொட்டிக் கிளறி, சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குஜராத்தியர்களின் வீடுகளில் இந்த உருண்டைகள் எப்போதுமே ஸ்டாக்கில் இருக்கும்.

பாதுஷா

தேவையானவை: மைதா மாவு - 3 கப், வனஸ்பதி - ஒரு கப், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தயிருடன் சமையல் சோடா சேர்த்து, ஒரு தட்டில் நுரை வரும்வரை தேய்க்கவும். இதில் மைதா மாவைக் கொட்டி வனஸ்பதி சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்றாகப் பிசையவும். இந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்து, கைகளால் உருண்டையை கொஞ்சம் தட்டையாக்கி, நடுவில் கட்டை விரலால் அழுத்தி விடவும். இவ்வாறு செய்தவற்றை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சர்க்கரையைப் பிசுக்கு பதத்தில் பாகாக காய்ச்சவும். இந்தப் பாகில் பாதுஷாவை முக்கி எடுத்து வைக்கவும்.

பாதுஷாவை, சின்னச் சின்னதாக செய்தால், குழந்தைகள் சாப்பிட வசதியாக இருக்கும்.

அதிரசம்

தேவையானவை: ஊற வைத்து அரைத்த பச்சரிசி மாவு, பொடித்த வெல்லம் - தலா 2 கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி, மீண்டும் வெல்லப் பாகை அடுப்பில் வைத்து, உருட்டு பதத்தில் காய்ச்சி இறக்கவும் (தண்ணீரில் சிறிது பாகை விட்டு பார்த்தால், முத்து போல் திரண்டு வரும் பதம்). இதில், மாவை சிறிது சிறிதாகப் போட்டு கட்டியில்லாமல் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசையவும். மறுநாள் இந்த மாவை எடுத்து, இலை (அ) பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, வட்டமாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுட்ட அதிரசத்தின் மேல் கரண்டியால் அழுத்தி, அதிகப்படியான எண்ணெயைப் பிழிந்து எடுக்கவும்.

மாவு பிசையும்போது தளர்வாக இல்லாமல், அளவு சரியாக இருந்தால்தான், அதிரசம் நன்றாக வரும்.

ஜிலேபி

தேவையானவை: மைதா மாவு - 2 கப், அரிசி மாவு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பேகிங் பவுடர் - கால் டீஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 கப், மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன், அரிசி மாவு, மஞ்சள் ஃபுட் கலர், பேகிங் பவுடர், தயிர் சேர்த்து வடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதை 2 மணி நேரம் புளிக்கவிட்டு, ஜாங்கிரி பிழியும் துணியில் மாவைப் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து, பொரித்தெடுக்கவும்.

சர்க்கரையை கம்பிப் பாகு பதத்தில் காய்ச்சி, அதில் ஜிலேபிகளைப் போட்டு எடுத்து பரிமாறவும்.

மாவை முதல் நாளே கரைத்து புளிக்கவிட்டு செய்வதாக இருந்தால் பேகிங் பவுடர் சேர்க்க வேண்டாம்.

சோமாஸ்

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், ரவை, சர்க்கரை - தலா கால் கப், பொட்டுக்கடலை - கால் கப் (மாவாக்கிக் கொள்ளவும்), தேங்காய் - அரை மூடி (துருவி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - 2 சிட்டிகை.

செய்முறை: மைதா மாவில் ரவை, உப்பு சேர்த்துப் பிசிறி, தேவையான தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பொட்டுக்கடலை மாவுடன், சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக செய்து கொள்ளவும். ஈரத்துணியில் சுற்றிய மாவை எடுத்து, சிறுசிறு சப்பாத்திகளாக இட்டு, நடுவில் பூரணத்தை வைத்து ஓரங்களை மூடி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சோமாஸ் அச்சிலும் வைத்து செய்யலாம்.

குலோப் ஜாமூன்

தேவையானவை: மைதா மாவு, சர்க்கரை இல்லாத கோவா - தலா ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் கோவா, நெய், சமையல் சோடா ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டியில்லாமல் பிசையவும். தேவைப்பட்டால் பால் சேர்த்துப் பிசையலாம். தண்ணீர் சேர்க்கக் கூடாது. ஒரு மணி நேரம் கழித்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் அந்த உருண்டைகளைப் பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து இளம்பாகாக காய்ச்சி, செய்து வைத்துள்ள உருண்டைகளை அதில் போடவும். விருப்பப்பட்டால் பாகில் எசன்ஸ் சேர்க்கலாம்.

வாயில் போட்டதும் கரைந்து விடும் சூப்பர் ஜாமூன் இது.

பொட்டுக்கடலை மாவு உருண்டை (மாலாடு)

தேவையானவை: பொட்டுக்கடலை, சர்க்கரை - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு, நெய் - அரை கப்.

செய்முறை: பொட்டுக்கடலை, சர்க்கரை இரண்டையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும், நெய்யை சூடாக்கி, மாவில் கொட்டி சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

திருமண நிச்சயதார்த்தத்தின் போது இந்த உருண்டை செய்வது சில இனத்தினரிடையே சம்பிரதாயமாக இருக்கிறது.

தேங்காய் பர்ஃபி

தேவையானவை: தேங்காய் துருவல், சர்க்கரை - தலா 2 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பிப் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். இதில் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மிதமான தீயில், கைபடாமல் கிளறவும். கலவை சுருண்டு வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளலாம்.

தேங்காயை அடி ஓடுவரை துருவாமல், மேலோட்டமாகத் துருவி செய்தால், பர்ஃபி வெள்ளை வெளேரென இருக்கும்.

ரவா லட்டு

தேவையானவை: ரவை, சர்க்கரை - தலா ஒரு கப், முந்திரி - சிறிதளவு, நெய் - அரை கப்.

செய்முறை: ரவையை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து நைஸாக பொடிக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து, அதில் சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு சூடாக்கி, மாவில் கொட்டிக் கிளறி, சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.

நெய் பாதி, வனஸ்பதி பாதியாக சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்.

எள் உருண்டை

தேவையானவை: எள், வெல்லம் - தலா ஒரு கப்.

செய்முறை: எள்ளை சுத்தம் செய்து, வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்து இடித்து, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இது சுலபமாக பிடிக்க வரும். உடலுக்கு நல்ல வலுவைத் தரும்.

கடலை உருண்டை

தேவையானவை: நிலக்கடலை, வெல்லம் - தலா 2 கப், தேங்காய் துருவல் - ஒரு கப்.

செய்முறை: கடலையை வறுத்து, தோல் நீக்கி, ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும். இதனுடன் வெல்லம் சேர்த்து மீண்டும் இடித்து, தேங்காய் துருவல் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

நெடுநாள் வைத்திருக்க வேண்டுமென்றால், தேங்காய் சேர்க்காமல் செய்யலாம்.

காஜு கத்லி

தேவையானவை: முந்திரி, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - சிறிதளவு.

செய்முறை: முந்திரியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரையைப் போட்டு, தண்ணீரை விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, ஒரு கம்பிப் பாகு பதம் வந்ததும், அரைத்த முந்திரி விழுதை சேர்த்துக் கிளறவும். நன்றாக சேர்ந்து கடாயில் ஒட்டாமல் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறியதும் விரும்பிய வடிவில் வெட்டவும்.

முந்திரியை பொடித்தும் செய்யலாம். வளரும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

டைமண்ட் பிஸ்கட்

தேவையானவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை - அரை கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவில் சமையல் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசையவும். பிசைந்த மாவை பூரிகளாக இட்டு சிறிய டைமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும். இதை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

ஈஸியாக செய்யக்கூடிய டேஸ்ட்டான இனிப்பு பிஸ்கட் இது.

பின்குறிப்பு : பண்டிகை காலங்களுக்கு வெகு முன்பாக நான் இதை வெளிட காரணம், நீங்கள் டரியல் & எரர் பார்த்து பழகவே....

அடுத்த தமாசு ஆரம்பம்............

பாமகவின் பொதுக்குழு இன்று 27.07.11 சென்னையில் கூடி எடுத்த முடிவுகள் கண்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.அது இன்ப அதிர்ச்சி எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பாமக தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முடிவே இதற்கு காரணம்.

தமிழகத்தின் பெரிய கட்சிகளாக விளங்கும் அதிமுகவும் திமுகவும் மிக ரகசியமாக பட்டாசு வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் இந்த முடிவினைக் கொண்டாடியதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தங்கள் பெயரை வெளியிடக்கூடாது என்ற வாக்குறுதியை நம்பி ஜெயலலிதாவும் கருணா நிதியும் சொன்னது என்னவென்றால், கடைசி வரை நம் அணிக்கு வருவாரா, இல்லை எதிர் அணிக்குப் போவாரா என ஒவ்வொரு தேர்தலிலும் ரத்த அழுத்தம் ஏற்றும் ஒரு பிரச்சினை தீர்ந்ததாக மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர். இருவரும் ஒத்த கருத்தோடு இருந்த ஒரே விஷயம் இதுதான் என்பது பொன்னெழுத்துக்களில் பொறிக்கத்தக்க செய்தி.



மக்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்றே நாம் பேசிய அனைவரும் கூறுகின்றனர். ஓட்டுப் போடும் வரை ஒரு அணியில் இருப்பது, போட்டவுடன் அணி மாறுவது என்றிருந்ததால் நாம் போடும் ஓட்டு எந்த அணிக்காக இருக்கும் என்று தெரியாமலேயே வாக்களித்து வந்ததாகவும், இனி அந்த குழப்பம் இல்லாமல் ஓட்டுப் போடமுடியும் என்பதாலே மகிழ்ச்சி எனவும் கூறினர். மேலும் பாமக தனியாக நிற்பதால் அவர்களுக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவது மிக சுலபமாகிவிட்டது எனவும் பலர் தெரிவித்தனர்.

பாமகவின் ஜிகே மணி அவருக்கே கூட தெரியாமல் ரகசியமாக அளித்த பேட்டியில் கூறியது.அடிக்கடி அணி மாறும் கட்சி என்ற அவப்பெயரை நீக்கவே மருத்துவர் ஐயா இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாகவும் இதன் பிறகு யாருமே அந்தக் குற்றச்சாட்டைக்கூற முடியாது எனவும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார். விளக்கமாகச் சொல்லும்படிக் கேட்டதற்கு அணித் தலைமையாக பாமகவே இருப்பதால் அணியிலிருந்து நீங்கவே முடியாது. அதனால் இனி அணி மாறும் பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்தார்.


(காப்புரிமை பெறாத செய்திகள் - இதனை யார் மீண்டும் பிரசுரித்தாலும் பாமகவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்)

Monday, July 25, 2011

பூனை வெளியே வந்தாச்சு..........

இந்த வாதப்படி ராஜா சொல்லுவது சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது . அப்படி இருக்கும் பட்சத்தில் சோனியா , கருணாநிதி ஆகிய இருவரின் பெயர்களும் குற்றபத்திரிகயீல் முதன்மை
பெயர்களாக சேர்க்கவேண்டும். இந்த 2 ஜி பணத்தில் 90% இவர்களின் குடும்பதிற்கும் மீதி ராஜா உட்பட பலருக்கும் போக வாய்ப்பு உள்ளது.


Former Telecom Minister A Raja today sought to rope in Prime Minister Manmohan Singh and the then Finance Minister P Chidamabaram in the 2G scam case, telling a court that the issue of dilution of equity by spectrum licencees was discussed with them.

Defending himself against corruption charges in 2G scam, the 47-year-old DMK MP also submitted before Special CBI Judge O P Saini there was nothing wrong in his decision of not auctioning 2G spectrum and that he was merely following the policies pursued by his predecessors and the NDA government.

"I have implemented only what I have inherited," he said.

Senior Advocate Sushil Kumar appearing for Raja, now behind bars, said that when Home Minister Chidambaram was the Finance Minister he had told the Prime Minister that dilution of shares by the accused licencees to attract FDI did not amount to sale of licence.

Arguing that sale of equity was not sale of licence, Raja said he cannot be accused of corruption in the controversial 2G spectrum allocation.

"The matter (about sale of equity by spectrum licencees) was discussed between the Prime Minister and the then Finance Minister (P Chidambaram).

"The then Finance Minister( who is now Home Minister) had said in front of the Prime Minister that dilution of shares does not amount to sale of 2G licence as per the corporate law," asserted Raja, who even said "Let the Prime Minister deny this."

Raja further said, "When sale of equity does not amount to sale of licence, there in no question of earning profit. How can (then) be corruption there in this regard?"

Raja said if he is being prosecuted for following a certain policy then all Telecom ministers since 1993 are liable to be prosecuted and should be in jail along with him as they too followed the same policy.

"If policy pursued by me was wrong, then all former Telecom ministers since 1993 should also be in jail with me (Raja)," he said while opposing framing of charges against him.

இது தாண ராஜ வாழ்க்கை என்பது

உலகிலேயே பெரிய பணக்கார நாடான புருனே நாட்டின் சுல்தான் . இவர் தான் உலகலேயே தங்கத்தை அதிகமாக பயன்படுத்துபவர்.

The Palace

The largest and most luxurious palace in the world...
Consists of 1788 rooms with some furnished in gold and diamond-encrusted
257 bath inlaid with gold and silver
and a garage to accommodate 110 cars
The palace has 650 suites ... each furnished at not less than 150,000 thousand euros
This requires the visitor to spend 24 hours just to inspect each room for 30 seconds


The Sultan of Brunei's plane

Most luxurious aircraft in the world, inlaid with gold
The Sultan has also a Boeing 747 worth a hundred million dollars,
and then re-designed as a home at a cost of more than one hundred and twenty million dollars.
Featured add-ons such as a whirlpool bath of pure gold
He also has six small aircraft and two helicopters.

At the special request of the Sultan of Brunei, theRolls Royce company combined their car designs with that of Porsche.
This vehicle is currently in London for use during his stay in Britain

When the Sultan of Brunei's daughter married,
the legendary celebrations continued for 14 days,
at a cost of about five million dollars,
attended by more than 25 heads of state and family members.

Sultan of Brunei car inlaid with pure gold


The Princess wears a crown of diamonds
and carries a small bouquet of flowers studded with diamonds.
She also wears huge diamonds as earrings, adding sparkle to her face.

Wikipediasays he has
531 Mercedes-Benzes
367 Ferraris
362 Bentleys
185 BMWs
177 Jaguars
160 Porsches
130 Rolls-Royces
And 20 Lamborghinis

Bringing the total number of his cars to 1,932

நேர்மைக்கு தண்டனை ?

திருவனந்தபுரத்தில் பத்மநாப ஸ்வாமி ஆலயத்தில், சில ரகசிய அறைகள் இருக்கின்றன என்ற செய்தி அல்ல –

வியப்புக்குரியது அந்த ரகசிய அறைகளில் குவிந்து கிடக்கின்ற எண்ணற்ற தங்க நகைகளும், நாணயங்களும், ரத்தினம், வைரம் போன்றவை பதித்த ஆபரணங்களும் அல்ல – ஜொலிக்கின்றவை;
அந்த நகைகள், நாணயங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்களையும் மீறுகிறது என்ற மதிப்பீடு அல்ல – பிரமிப்பைத் தருவது.

பத்மநாப ஸ்வாமி ஆலயம்


கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்த பொக்கிஷத்தில் கை வைக்க வேண்டும் என்கிற ஆசையே இல்லாத, கோவில் சொத்தை அபகரிக்கும் எண்ணமே இல்லாத, நெருப்பு போன்ற நேர்மை கொண்ட ஒரு மன்னர் பரம்பரை, 250 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே இருந்து வந்திருக்கிறதே... அதுதான் ஜொலிக்கிறது ;
அதுதான் வியப்பைத் தருகிறது; அதுதான் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

1750ஆம் ஆண்டில், முதல் மார்த்தாண்டவர்மன் என்ற மன்னர்தான், இந்த விலை மதிப்பிட முடியாத நகைகளையும், தங்க நாணயங்களையும், பத்மநாப ஸ்வாமிக்கே சமர்ப்பித்ததாகவும், அந்த மன்னர் தன்னை ‘பத்மநாப தாஸன்’ என்றே குறிப்பிட்டுக் கொண்டதாகவும் வருகிற செய்திகள் திருவிதாங்கூர் சமஸ்தான சரித்திரத்தை எடுத்துச் சொல்கின்றன.
வாயளவில் சமத்துவம் பேசாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவில்களைத் திறந்து விட்ட, ‘சித்திரைத் திருநாள்’ என்று அழைக்கப்பட்ட பலராம வர்மன், இந்தப் பரம்பரையைச் சார்ந்தவர்; அதற்கு உறுதுணையாக இருந்தவர் ஸர்.ஸி.பி.ராமஸ்வாமிஐயர். அதே போல, மனித உரிமை பற்றி மேடை போடாமல், மரண தண்டனையை ரத்து செய்த இந்தியாவின் முதல் ராஜ்யமாக திருவிதாங்கூரை திகழச் செய்ததும், இதே சித்திரைத் திருநாள் மன்னர்தான்.
இப்படிப்பட்ட உண்மையான முற்போக்குச் சிந்தனை உடைய இந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் அனைவருக்கும், பத்மநாப ஸ்வாமி கோவில் பொக்கிஷத்தைப் பற்றித் தெரிந்துதான் இருந்தது. 1930ல் இந்த ரகசிய அறை ஒன்றில் இருக்கின்ற நகைகள் பற்றிய கணக்குக் கூட எடுக்கப்பட்டது. 1941ல் மலையாளக் கவிஞர் பரமேஸ்வர ஐயர், தனது புத்தகத்தில் இந்தப் பொக்கிஷம் பற்றிய விவரங்களைக் கூறியிருக்கிறார். பின்னர் 12 பகுதிகளாக வந்த, திருவிதாங்கூர் அரண்மனை சரித்திரத்திலும், இது பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கோவில், தொடர்ந்து மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. அங்கு இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருப்பதை அறிந்திருந்தும், அந்தப் பரம்பரையில் வந்த ஒரு மன்னர் கூட, இத்தனை பொக்கிஷத்தையோ, இவற்றில் ஒரு பகுதியையோ எடுத்து அயல் நாடுகளில் பதுக்கிக் கொள்ளவோ, ஸ்விட்சர்லாந்த் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ளவோ, வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளவோ முனையவில்லை.
அவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல. கோவில் கோபுரத்தை பீரங்கி வைத்துப் பிளப்போம் என்று முழக்கமிட்ட, பகுத்தறிவுக் கூட்டத்தைச் சாராத இந்த மன்னர் பரம்பரை, ‘கோவில் சொத்து, குல நாசம்’ என்று நம்பியது. பொதுச் சொத்து விஷத்திற்குச் சமமானது என்று உணர்ந்தது. அன்று முதல் இன்று வரை – இன்று உள்ள உத்திராடத் திருநாள், மார்த்தாண்ட வர்மன் உட்பட – எந்த மன்னரும், இந்த பொக்கிஷத்தை கபளீகரம் செய்யவில்லை.

மக்கள் சொத்து எனில், அது தங்கள் குடும்ப சொத்து; நாட்டின் வளமை என்றால், அது வாரிசுகளின் வளமை... என்று செயல்படுகிற இந்திய அரசியல்வாதிகள் – அதாவது இன்றைய அரசர்கள் – கையில் இந்த பொக்கிஷம் சிக்கியிருந்தால், என்ன கதி ஆகியிருக்கும்!
இப்போதும் சில ‘சமூக பிரக்ஞை’ உள்ளவர்கள், இதை அரசியல்வாதிகளிடம் கொண்டு போய் சேர்த்து விட வழி தேடுகிறார்கள். ‘மக்களின் ஏழ்மையை, மக்களின் துயரைப் போக்கி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த பொக்கிஷம் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்பது அவர்கள் வாதம். அதாவது, இந்தப் பொக்கிஷத்தில் உள்ள விலையுயர்ந்த நகைகளை விற்று, கிடைக்கிற பணத்தில், ஏழைகளின் துயரை இவர்கள் தீர்த்து விடுவார்களாம்!
ஆமாம், தீர்த்து விடுவார்கள்; பொக்கிஷத்தைத் தீர்த்து விடுவார்கள். அதில் ஒரு சிறு துளி, ஏழைகளுக்குப் போய்ச் சேர்ந்தாலே அதிசயம்தான்! அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பங்கு போட்டு கொண்டு ‘இருந்ததில், பாதிக்கு மேல் பித்தளை’ என்று அறிக்கை விட்டால் கூட வியப்பதற்கில்லை.

250 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கோவில் பொக்கிஷம் – பெருமாள் சொத்து – அப்படியே இருப்பதுதான் முறை. ஆனால் அதை இனி விட்டு வைப்பார்களா என்பது சந்தேகம்தான். ஸ்விட்சர்லாந்திலும், மற்ற சில நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வருகிற யோக்கியதை இல்லாத அரசியல்வாதிகளிடம், இந்த கோவில் சொத்தை ஒப்படைக்கக் கூடாது.

ஏன்?

நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கணக்கெடுக்கப்படட்டும்; அவற்றிலிருந்து சட்டவிரோதமாகக் கிட்டியவை ஒதுக்கப்பட்டு, அவை விற்கப்படட்டும்; அந்தப் பணம் பொது மக்களுக்குப் பயன்படுத்தப்படட்டுமே!

ஏன் அதை யாரும் வற்புறுத்தவில்லை?


சட்டம், சமூகம், தர்மம், நியாயம், பச்சாதாபம், பரிதாபம் – எல்லாம் அங்கே ஒளிந்து கொண்டு விடுகின்றனவே – ஏன்?
ஸ்விட்சர்லாந்திலும், பல அயல் நாடுகளிலும், பல அரசியல்வாதிகளிடமும், அவர்களுடைய பினாமிகளிடமும் புகுந்திருக்கிற பொக்கிஷங்கள், ஏழைகளுக்குப் பயன்படட்டும்.
சுப்ரீம் கோர்ட்டில், இன்றைய மன்னர் வாரிசு உத்திராடத் திருநாள், ‘இந்தச் சொத்து தன்னுடையதோ, தன் குடும்பத்தினரையோ சார்ந்தது அல்ல’ – என்று கூறியிருக்கிறார். ‘கோவில் சொத்தாகிய அது, தெய்வ கைங்கர்யங்களுக்கும், மக்கள் நலனுக்கும் பயன்பட வேண்டியது’ என்ற அவருடைய நேர்மையான கருத்து ஏற்கப்பட வேண்டும்;

அதை விட்டு, ‘இது பொதுச் சொத்து’ என்ற பெயரில், அரசியல்வாதிகளின் அறம் நிலையற்ற துறையிடம் இதை ஒப்படைத்து – திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பாதுகாத்து வந்துள்ள, பெருமாள் கோவில் பொக்கிஷத்தைச் சூறையாட வேண்டாம். அது மன்னர் பரம்பரையினரின் நேர்மைக்குக் கொடுக்கப்படுகிற தண்டனை ஆகிவிடும்.

Sunday, July 24, 2011

மதுரைக்கு துணை முதல்வர் பொட்டு சுரேஷ்

மதுரை 'மதுரா கோட்ஸ்’ மில் ஊழியரான நடராஜப் பிள்ளையின் மகன் சுரேஷ் பாபு. ஆனால்,அது 20 வருடங்களுக்கு முன்பு. இப்போது, 'மதுரைக்கு துணை முதல்வர் பொட்டு சுரேஷ்’ என்று ஜெயலலிதாவே பயோடேட்டா கொடுக்கும் அளவுக்கு, தி.மு.க-வில் ஜெகஜ்ஜாலக் கில்லாடி!

ஆரம்பத்தில் இந்த சுரேஷ்பாபு, அ.தி.மு.க. அனுதாபி. நைட்டி வியாபாரம்தான் தொடக்கம். அப்போது சார் பேரே 'நைட்டி சுரேஷ்’தான். நைட்டி பிசினஸ் ஏனோ அலுத்துப்போனதால், மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஒரு டீக்கடை ஓரத்தில், பஜ்ஜிக் கடை போட்டார். ம்ஹூம்... அதுவும் போணி ஆகவில்லை.

'அமைதிப் படை’ படத்தில் சத்யராஜின் கேரக்டர்தான் சாருக்கு இன்ஸ்பிரேஷன். அரசியலில் இறங்கினார். 90-களில் அ.தி.மு.க. எம்.பி-க்களாக இருந்த ராஜன் செல்லப்பா, முத்துமணி ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்தார். 96-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சுறுசுறுப்பான பஜ்ஜி சுரேஷ், எப்படியோ நூல் பிடித்து அமைச்சர் பரிதி இளம்வழுதியைப் பற்றிக்கொண்டார்.

நெற்றியில் மங்களரமாக குங்குமப் பொட்டு சகிதம் சுரேஷ் செய்த 'பணிவிடை’கள் பிடித்துப்போனதால், அவரைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார் அமைச்சர். ஒரு கட்டத்தில் அங்கேயும் சிக்கலாகி, மீண்டும் மதுரைக்கு வந்தவருக்கு சென்னையில் கற்ற 'வித்தை’கள் நன்றாகவே கைகொடுத்தன.

மறைந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் வீட்டில் பசை தேடி ஒட்டிக்கொண்டார். ஏற்கெனவே 'கிரம்மர்’ சுரேஷ் (இப்போது இவர் அ.தி.மு.க-வில் இருக்கிறார்!) என்பவர் பி.டி.ஆர். முகாமில் இருந்தார். பி.டி.ஆர். ஒரு முறை, ''சுரேஷைக் கூப்பிடுங்கப்பா'' என்று சொல்ல, அங்கே இருந்தவர்கள் கிரம்மரை உள்ளே அனுப்பிவிட்டார்கள். ''இவன் இல்லப்பா... அந்த பொட்டு வெச்சிருக்கிற சுரேஷைக் கூப்பிடு!'' என்றார் பி.டி.ஆர். அதில் இருந்துதான், நைட்டி சுரேஷ் என்ற பஜ்ஜி சுரேஷ், 'பொட்டு சுரேஷ்’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தால் அழைக்கப்படலானார்.

பிறகு, பி.டி.ஆரை விட்டுப் பிரிந்த பொட்டு, அழகிரிக்கு நெருக்கமான

நா​கேஷிடம் ஒட்டிக்கொண்டு, அப்படியே அழகிரியின் நிழலுக்குள் நுழைந்தார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஆறேழு மாதங்கள் கழித்துத்தான் பொட்டு சுரேஷ், அழகிரி​யின் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்தார். வழக்கமாக அழகிரி மூலமாக ஏதாவது காரியத்தை முடித்தால், அதில் வரும் நன்மையை தனக்கு இவ்வளவு, அண்ணனுக்கு இவ்வளவு என்றுதான், கட்சியினர் கணக்குப் பிரிப்பார்கள். ஆனால், எவ்வளவு கிடைத்தாலும், அதை அப்படியே அழகிரியிடம் கொடுத்துவிட்டு, ''செலவுக்கு ஏதாச்சும் குடுங்கண்ணே...'' என்று பணிவான பவ்யம் காட்டுவது பொட்டு ஸ்டைல். 'இவ்வளவு விசுவாசமாக்கிடக்கிறானே’ என அழகிரி மனதில் இடம் பிடித்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு மது​ரையில் அழகிரிக்கு சொந்தமான 'தயா திருமண மஹால்’ கட்டி முடிக்கப்​பட்டது. பொட்டுவின் தம்பி சரவணனின் திரும​ணம்தான், அங்கு நடந்த முதல் விசேஷம். தமிழகம் முழுவதிலும் இருந்து வி.ஐ.பி-க்கள் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். மொய் வரவு மட்டும் கோடிகளில் கொட்டியது. திருமணம் முடிந்த கையோடு அந்தப் பணத்தை மூட்டையாகக் கட்டிக்கொண்டு அழகிரியின் வீட்டுக்கு போனார் பொட்டு. உறக்கத்தில் இருந்த அழகிரியை எழுப்பி, அவருக்கு எதிரில் மூட்டையை அவிழ்த்​தாராம். ''என்னய்யா இதெல்லாம்?'' என்​றதற்கு, ''என் தம்பி கல்யாணத்துக்கு வந்த மொய்ப் பணம்ணே. இது எனக்கு வந்த பணம் இல்லைண்ணே... எனக்கு நீங்களா பார்த்துப் போட்ட பிச்சை!'' என்று கண்​ணீர் மல்க காலில் விழுந்த கதை, மதுரையில் பிரபலம்.

அழகிரி அன்றே, ''பொட்டு எது சொன்னாலும், அது நான் சொன்னதாத்தான் அர்த்தம். அவரு சொல்றதை செஞ்சு குடுங்க; எங்கிட்ட கேக்கணும்கிறது இல்லை...'' என்று முதல​மைச்சரின் தனிச் செயலாளருக்கே ஆர்டர் போட்டதாக ஒரு பரபரப்பான பேச்சும் மதுரையில் உண்டு. அழகிரியை இவர் நெருங்க நெருங்க... ஏற்கெனவே அழகிரியோடு நெருக்கமாக இருந்த பலர் விலக்கிவைக்கப்பட்டார்கள்.

இதை எல்லாம்வைத்துத்தான் அழகிரி முதலமைச்சர் என்றால், பொட்டு சுரேஷ் துணை முதலமைச்சர் என்று ஜெயலலிதா பட்டம் கொடுத்தார்!

- ஜூ.வி. க்ரைம் டீம்

கிளம்பிட்டாங்க ஐயா! கிளம்பிட்டாங்க............

ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. மீது திடுக் புகார்

திரும்பிய பக்கம் எல்லாம் தி.மு.க. பிரமுகர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு கள். ஆனால், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலோ, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.வீரமணி மீது புகார் கிளம்பிக் கிடுகிடுக்கிறது.

புகார் கொடுத்த செந்தில்குமார் ஜோலார் பேட்டையை சேர்ந்தவர். அவரை சந்தித்தோம். ''நான் கடந்த மூணு வருஷமா பெப்சி டீலர்ஷிப் எடுத்து, திருப்பத்தூர், ஏலகிரி, நாட்றாம்பள்ளிக்கு சப்ளை பண்ணிட்டு வர்றேன். போன மே மாசம் நான் ஏலகிரியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய என்னுடைய வண்டியில் போனேன். அப்போது அங்கே இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ்காரங்க என்கிட்ட, 'இனி கடைக்காரங்க மட்டும் இல்லை. உங்களை மாதிரி டீலர்களும் மாமூல் கொடுத்தாகணும்’னு சொன்னாங்க. 'என்னால் மாமூல் தர முடியாது’ன்னு அப்பவே கட் அண்ட் ரைட்டா சொன்னேன். உடனே அவங்க கோபமாகி, அந்த இடத்திலேயே என்னை அடிச்சாங்க. நான் ஏலகிரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தேன். அதுக்கு பிறகுதான் எம்.எல்.ஏ. வீரமணி என்கிட்ட பிரச்னைக்கு வந்தார்.

'போலீஸ்ல கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு! அவங்களை மீறி நீ ஏலகிரியில் வியாபாரம் செய்ய முடியாது.’னு மிரட்டினார். என்னை அடிச்சவங்க மேல் நான் புகார் கொடுத்து இருக்கேன், எதுக்காக வாபஸ் வாங்கணும்? முடியாதுனு சொல்லிட்டேன்.

கடந்த 18-ம் தேதி இரவு எங்க வீட்டுக்கு சிலர் வந்தாங்க. 'எம்.எல்.ஏ. உன்னை கூட்டிட்டு வரச் சொன்னார், வா...’ன்னு கூப்பிட்டாங்க. நானும் எம்.எல்.ஏ. வீட்டுக்குப் போனேன். அவர் வீட்டுல ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரோஜினி, அசோக்குமார் இருந்தாங்க.

'நான் அவ்வளவு தூரம் சொல்லியும், நீ ஏன் ஏலகிரியில் கொடுத்த கேஸை வாபஸ் வாங்கலை?’னு எம்.எல்.ஏ. என்கிட்ட கேட்டார். 'என்னை அடிச்ச துக்கு நான் புகார் கொடுத்திருக்கேன். அதை வாபஸ் வாங்கச் சொல்லி, நீங்க எதுக்கு தொல்லை கொடுக்குறீங்க?’னு கேட்டேன்.

'நீ நான் சொல்றதைக் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறியா? சரி... அதை நீ வாபஸ் வாங் கலைன்னா பரவாயில்லை. நாட்றாம்பள்ளியில் உனக்கு 1,200 சதுரஅடி நிலம் இருக்குல்ல... அது எனக்குத் தேவைப்படுது. அதுக்கு என்ன ரேட்டோ, அதை வாங்கிட்டு எனக்கு எழுதிக் கொடுத்துடு’ன்னு எம்.எல்.ஏ. கேட்டார். எனக்கு தூக்கி வாரிப்போட்டுச்சு. 'என்னோட நிலத்தை நான் விற்கிற ஐடியா இல்லைங்க’னு சொன்னதும் எம்.எல்.ஏ-வுக்கு கோபம் வந்துடுச்சு. 'நான் பொறுமையா இருக்கேன். என்னை சோதிக்காதே. இன்னும் 10 நாள்தான். அப்புறம் நான் மந்திரி ஆகிடுவேன். அதுக்குப் பிறகு, உன் குடும்பத்தையே காலி பண்ணிடுவேன். உன் மேலேயும் உன் குடும்பத்தார் மேலேயும் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ள, எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? நான் சொன்னா, இந்த இன்ஸ்பெக்டர் செய்ய மாட்டார்னு நினைக்கிறியா... என்னய்யா செய்வேல்ல?’னு இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் கேட்டார். உடனே அவர், 'செஞ்சிடலாம் சார்’னு சொன்னார். அந்த இடத்தில் என்ன பண்றதுனு எனக்குத் தெரியலை. தப்பிச்சாப் போதும்னு தலையை ஆட்டிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன். அதுக்குப் பிறகு தினமும் எனக்கு மிரட்டல் வந்துட்டே இருக்கு. தி.மு.க. ஆட்சியில் இப்படி நடந்த விஷயங்களைத் தோண்டி எடுத்துத்தான் முதல்வர் கேஸ் போடச் சொல்லி இருக்காங்க. ஆனா, அவங்க கட்சி எம்.எல்.ஏ. ஒருத்தரே இப்படி கட்டப்பஞ்சாயத்து பண்ற கொடுமையை நாங்க எங்கே போய் சொல்றது? ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனே எம்.எல்.ஏ. வீட்டுலதான் நடக்குது. அப்புறம் எப்படி நான் போலீஸுக்குப் போறது?'' என்று வேதனையோடு கேட்டார்.

ஜோலார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான கே.சி.வீரமணியிடம் குற்றச்சாட்டு களைச் சொல்லி விளக்கம் கேட்டோம். ''அந்த ஆளு சொல்ற மாதிரி எல்லாம் நான் மிரட்டக் கிடையாதுங்க. என்னைப்பற்றி ஜோலார்பேட்டையில் விசாரிச்சுப் பாருங்க. மக்களே உங்களுக்குச் சொல்லுவாங்க. புகார் கொடுத்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அதான், என் மீது பழி போடுறார். தொகுதி மக்களை சந்திக்கவும், கட்சிப் பணி ஆற்றவுமே எனக்கு நேரம் சரியா இருக்குது. இதுல கட்டப்பஞ்சாயத்து பண்ண எங்கே நேரம் இருக்கு? எனக்குத் தேவையான அளவு சொத்து இருக்கு. நான் எதுக்கு மத்தவங்க நிலத்தை அபகரிக்க நினைக்கப்போறேன்? என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காம சிலர் அவரைத் தூண்டிவிடுறாங்கனு நினைக்கிறேன். அது யாருன்னு நானே விரைவில் கண்டுபிடிக்கிறேன்...'' என்று சொன்னார்.

பிரச்னையில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக் டர் ராஜேந்திரனிடம் பேசினோம். ''எம்.எல்.ஏ. வீட்டுக்கு நாங்க போனது உண்மைதான். ஆனா, அவர் சொல்ற மாதிரி எந்த சம்பவமும் அங்கே நடக்கவில்லை. எதுக்காக இப்படி ஒரு தப்பான தகவலை சொல்லி இருக்கிறார்னு விசாரிக்கிறேன்!'' என்றார்.

பிரச்னையில் ஜோலார்பேட்டை போலீஸ் சிக்கி இருப்பதால், வேறு போலீஸ் டீம் இந்த விவகாரத்தை விசாரிப்பது நல்லது!

நன்றி: ஜூனியர் விகடன்

கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!-- நல்ல ஜோக், நன்றி: சிநேகிதன்

அண்ணே! இது நல்லதில்லண்ணே நல்லதில்ல... ஏண்ணே எம்மேல இம்புட்டு கோவம்? அப்டி என்ன சொல்லிபுட்டேன்னு கொலவெறியோட அலையிறே நீயி... அப்டியே அடிக்கிறதா இருந்தாலும் நேர்ல வந்து அடி... யார் கேட்பா?.. வாரவன் போறவம்லாம் அடிச்சிட்டு போம்போது என் அண்ணன் நீ, உனக்கு அடிக்க உரிமையில்லையா?! நீ எம்புட்டு அடிச்சாலும் தாங்குவேம்ணே அத விட்டுட்டு சின்னபுள்ளதனமா ஆளை வச்சு அடிக்க சொல்றியே... பெரிய மனுஷன் பண்ற காரியமாயா இது?....

உனக்கும் எனக்கும் பிரச்சனை இருந்ததென்னவோ உண்மைதான், ஆனா உன்னைய தேர்தல்ல எதிர்ப்பேன்னு சும்மா ஒரு பேச்சுக்குதாண்ணே சொன்னேன். அதை நம்பி பயபுள்ளைக திடீர்னு ஒரு நா வந்து நீயும் ரவுடிதான் ஜீப்ல ஏறுன்னுட்டாங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த்தில்லையான்னு சொன்னாலும் ஒருத்தன் கேக்கலையே... சரி விடு ஆனது ஆயிபோச்சு ஹிஸ்டிடில நம்ம பேரும் வரட்டும்னு நெனச்சி சரின்னு தலையாட்டுனேன்.

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதூன்னு பிரச்சாரத்துக்கு போனா... சும்மா சொல்லப்பிடாது நம்ம மக்கள் பாசக்கார பயபுள்ளைகண்ணே... போற எடம்மெல்லாம் கூட்டமா கூடி உசுப்பேத்தி விட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா இப்பதான் தெரியுது என்னை ரணகளமாக்கத்தான் கூடியிருக்காங்கன்னு.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அப்போ அங்கே பேசுனதெல்லாம் உனக்கு கெட்டதா தெரியும். ஆனா நல்லா யோசிச்சி பார்ண்ணே. நான் உனக்கு செஞ்சது எல்லாமே நல்லதுதாண்ணே.

உன்ன குடிகாரன்னேன் எதுக்கு?... தமிழ் நாட்ல முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடதான் இருக்கு. நாட்டுல முக்காவாசி பேரு குடிகாரன்தான் (மன்னிச்சுகிங்கையா ஒரு ஃப்லோல வந்துடுச்சி இனிமே குடிகாரர்னே சொல்றேன் நீங்களும் கெளம்பி வந்து கும்மிராதிங்க)... நான் உன்னை குடிகாரர்னு அடையாளம் காட்ட போய்தான்...அத்தனை பேரும், ஓ நம்மாளு... இவரு செயிச்சா நமக்கும் ஏதாவது செய்வாருன்னு நினைச்சு அவன்பாட்டுக்கு "ஙங்கு ஙங்குன்னு" குத்தி தள்ளி, உன்னை ஜெயிக்கவச்சான். ஞாயப்படி எனக்கு நன்றி சொல்லி மாலை போட்டு தூக்கி வச்சி ஆடணுமாக்கும் நீ....அத விட்டுட்டு அடிக்க வர்றாராமாம் அடிக்க...

அப்புறம் எதிர் கட்சி டிவில என்னிக்காவது உன்னய காட்டியிருக்காங்களா?... ஆனா தேர்தல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்க தலிவர டிவில காட்னத விட உன்ன பத்தி காட்னதுதாண்ணே அதிகம். அதுக்கெல்லாம் காரணம் இந்த கைப்புள்ளங்கிறதையே மறந்துட்டு பேசுறே நீ.

நான் எதிர்த்தவன்லாம் வீணா போனதா சரித்திரமே இல்லைண்ணே. ஒத்த எம்மெல்ஏ.வா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு இம்புட்டு எம்மெல்ஏ எப்படிகிடைச்சாங்க அப்படிங்கிறதை யோசிச்சு பார்த்தேன்னா இம்புட்டு கோவம் வராது உனக்கு.

இது தெரிஞ்சுகிட்டுதான் நம்ம சிங்கும், ஒபாமாவும் அடுத்த எலெக்ஷனுக்கு அவங்களுக்கு எதிரா பேசச்சொல்லி இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணியிருக்காங்க.... வேணும்னா நீயும் ஒன்னு போட்டுக்கோ.

அத விட்டுட்டு அடிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு அலையிற நீயி. உனக்கு ஆசையாயிருந்த பார்டர்ல போயி தீவிரவாதியை பிடி, தெருவுல போற ரவுடியை அடி ஆனா இந்த பச்ச மண்ண போயி அடிக்கணும்னு நெனக்கிறியே வெக்கமாயில்லை... உன்னைய நினைச்சா சிப்பு சிப்பாத்தான்யா வருது.

ஆனா ஒன்னுண்ணே யார் என்னை சீண்டுனாலும், போங்கடான்னு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருந்தப்பல்லாம் இம்பூட்டு பிரச்சனை இல்லண்ணே. என்னைக்கு திரும்பி சீண்டனூம்னு நினைச்சனோ அன்னியிலிருந்துதான் பிரச்சனை. எல்லாத்தையும் சிரிக்க வச்ச எம்பொழப்பு இன்னிக்கு சிரிப்பா சிரிக்கிது...

அப்புறம் இன்னொரு விசயம்... ஸ்..ஸ்ஸ்ஸ்.. காத பக்கத்துல கொண்டா... அந்த கட்சியினாலதான் நீ செயிச்சேன்னு சொன்னேன்ல அது சும்ம பேச்சுக்கு... உன்ன உசுப்பேத்தி உடுறதுக்காகத்தான் அப்படி சொன்னேன்...

ம்ம்ம்ம்... உங்களையெல்லாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் பொழப்பு ரணகளாமாகி கிடக்கு...

தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள்: ( ஜோக் )

நாளை, ஜூலை 24ம் தேதி மாலை கோவையில் நடக்கும் பொதுக்குழுவின் தீர்மான நகல் தமிழ் லீடருக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இதை அனுப்பி வைத்த ‘உடன்பிறப்புக்கு’ நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்தீர்மானங்களை பிரத்யேகமாக வெளியிடுவதில் தமிழ் லீடர் பெருமை கொள்கிறது.
தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள்:
1. 120 தொகுதிகளில் திமுக கூட்டணி ஜெயிக்கும் என்றும், 2-ஜி வழக்கில் கனிமொழிக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் இறுதி வரை நம்பிக்கை அளித்து, இன்று தி.மு.க.வை முச்சந்தியில் நிறுத்தியிருக்கும் கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கான காரணங்களை நன்றாக ஆராய்ந்த போது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும்பாலான ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட்டதே காரணம் என்பது தெரிய வந்தது. நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றமே என்று சொல்லும் இதழைப் போல இல்லாமல், மற்ற ஊடகங்கள் திமுகவின் ஊழல்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வந்ததால் மக்கள் மனதில் தி.மு.க. மீது வெறுப்பு உண்டாகியது. இதற்கு காரணமான அனைத்து ஊடகங்களையும் இந்தப் பொதுக்குழு கடுமையாக கண்டிக்கிறது.
< நில அபகரிப்பு மோசடி வழக்கில் கைது நடவடிக்கைகள் தொடங்கினால் உத்தேசமாக எடுத்த கணக்கின் படி, வெறும் 18 தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள் என்பதால், நில அபகரிப்பு பிரிவு சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் அ.தி.மு.க. அரசின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை மன்றாடி மீண்டும் மீண்டும் மன்றாடி இந்த பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
4. நில அபகரிப்பு சட்டப் பிரிவின் கீழ் முன்னாள் அமைச்சர்கள் கோசி.மணி,
வெள்ளக்கோவில் சாமிநாதன், பாளையங்கோட்டை மைதீன்கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

5. காவல்துறை தனது கடமையை சரிவரச் செய்து, நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்திருந்தால், இந்தப் பொதுக்குழுவில், திமுக தலைவரும், பொதுச் செயலாளரும் மட்டுமே இருந்திருப்பார்கள். அவ்வாறு செய்யாத காரணத்தால் தான் இந்தப் பொதுக்குழுவுக்கு இத்தனை உறுப்பினர்கள் வருகை தர முடிந்தது. இதற்காக தமிழக காவல்துறைக்கு பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
6. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்டால் மீண்டும் கடும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதாலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடிய திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருப்பதனாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் விட்டுக் கொடுக்கிறோம் என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
karunanidhi-in-pattu-vaetti-sattai7. தென் மண்டல அமைப்பை மாற்றக் கூடாது என்று அழகிரிக்கு ஆதரவாக பேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு போக மாட்டார்கள் என்று உறுதி கொடுத்ததால் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை தொடர்ந்து நீட்டிக்க இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
8. ஒரு குடும்ப ஆதிக்கத்தால் திமுக தோற்கவில்லை என்று பேசிய 1823 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திமுக தலைமை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
9. நமது கட்சித் தொண்டர்கள் மீதும் நமக்கு உறுதுணையாக இருக்கும் சன் டிவி நிறுவனத்தார் மீதும் தொடரப்படும் வழக்குகளுக்கான செலவுகளை மத்திய அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் அவர்களும், கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆகியோர் ஏற்றுக் கொள்வதாக அளித்த வாக்குறுதிக்கு நன்றி தெரிவிக்கப்jayafast படுகிறது.
10. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தனக்கு வேண்டாமென்றும் திகார் சிறையில் தொடர்ந்து இருக்க சம்மதம் தெரிவித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கடிதம் அனுப்பியிருப்பதால், அப்பதவியில் இருந்து அவர் விலக்கப்படுகிறார்.
தலைவர் கலைஞருக்கு கண்ணுக்கு கண்ணாக இருந்து பணிவிடை செய்து வரும் நித்தி என்கிற நித்யானந்தத்துக்கு அந்தப் பதவியை வழங்க பொதுக்குழு தீர்மானிக்கிறது.
11. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று திமுகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும், கரை வேட்டிகளை அவிழ்த்து வைத்து விட்டு, மாறு வேடத்தில் சுற்றியபோதும், திமுக சார்பாக அன்று தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் குஷ்பூ அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
12. இந்தியா முழுவதிலும் இருக்கும் கோயில்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். பின்னர் அக்கோயில்களை நிர்வகிக்க இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தி, அதற்கு ஓர் கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி உருவாக்க வேண்டும். அப்பதவியை தி.மு.க.வுக்கு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
13. வைகைப் புயல் வடிவேலுவுக்கு சிறப்பு அழைப்பு அனுப்பியும் அவருக்கு அழைப்பிதழ் போய் சேரவில்லை. மேலும், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்து வருவதாக தெரிகிறது. ’தினந்தோறும் வடிவலு’ என்ற தொடர் கலைஞர் டிவியில் அவருக்காக கொண்டு வர வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.(அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது)
14. தி.மு.க.வின் தலைவராக இருந்து வரும் கலைஞருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் மனைவி துர்கா கூட, இதற்கு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் கலைஞரே தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என்று இந்தப் பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிப்பதோடு, 2016ல் கருணாநிதியை ஆறாவது முறை முதல்வராக அமர்த்தியே தீர்வது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது. (பலத்த கைத்தட்டல். அக்கைத்தட்டல் 27 நிமிடங்கள் 18 வினாடிகள் நீடித்தது).
-இந்த 14 தீர்மானங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற பொதுக்குழு முடிவு செய்திருப்பதாக நமக்கு ஓர் உடன்பிறப்பு, அதன் விவரங்களை அப்படியே அனுப்பி வைத்திருக்கிறார்.
இத்தீர்மானங்கள், அப்படியே தி.மு.க. இயற்றப்போகும் தீர்மானங்களுடன் ஒத்துப்போனால், அது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே. பொதுக்குழுவுக்கு முன்பாக, தீர்மானம் கசிந்துவிட்டதே, என்று நினைத்து தி.மு.க. தலைமை அதை மாற்றிவிட்டாலும் தமிழ் லீடருக்கு மகிழ்ச்சியே.

விகடன் குழுமத்துக்கு நன்றியுடன்!

ஒரு காம்பவுண்டு கொட்டடிக்குள் இருப்பது ஒன்றைத்தவிர திஹார் சிறையில் வேறு குறை ஏதுமில்லாததனால் ஆ.ராசாவுக்குத் தெனா வெட்டும்,நக்கலும் கொஞ்சம் கூடக் குறையவில்லை போல!

மனிதர் சிறையில் இருப்பதைக் குறித்து எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார்!கம்பி எண்ணுவது உறுதியானால், தான் மட்டுமே அல்ல, கூடவே பெட்டிகளை வாங்கிக் கொண்ட பேர்வழிகளும் தன்னுடன் கூடவே வரவேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது குறிப்பால் உணர்த்திவிட்டு அமைதியாக இருக்கிறார்.

எல்லாமே பிரதமருக்குத் தெரிந்து, அவருடைய ஒப்புதலுடன் தான் நடந்தது என்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமரையும் மாட்டி விடுகிற மாதிரித் தான், அவருடைய தற்காப்புவாதமாக இருக்கும் என்பதை அடிக்கடி கோடி காட்டி விட்டு அமையாதிவிடுகிறார்.கனிமொழிபோல அழுது புலம்புவதில்லை!


பிரதமரைக் காப்பாற்றுவதற்காகவோ என்னவோ, கடந்த சில நாட்களாக சி பி ஐ எடுத்து வைக்கும் வாதங்கள், ராஜா பிரதமரை நம்ப வைத்து, முடிவுகளைத் தன்னிச்சையாக எடுத்தார், தனக்கு வேண்டப் பட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார், அமைச்சரவைக் குழு கூடி எடுக்கவேண்டிய முடிவுகளைத் தானே தன்னிச்சையாக எடுத்தார், பிரதமரிடமிருந்து உண்மையை மறைத்தார் என்ற ரீதியில் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னாள் சிபிஐ, நீதிபதி அனுமதியுடன் ஆ.ராசாவை மறுபடி விசாரித்தது. வருமானவரித்துறை மறுபடியும் விசாரிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறது.

சம்மரி ஷீட் என்ற ரகத்தில் சிபிஐ, ஆ.ராசா தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு லைசன்ஸ் அளித்தது , ஸ்வான் நிறுவனம் அனில் அம்பானியின் முகமூடி நிறுவனம்,அரசுக்கு இழப்பு ஏற்படும் விதத்தில் முடிவுகளை மேற்கொண்டது, டிபி ரியாலிடி நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் கொடுத்தது, அப்புறம் அது திருப்பிச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுவது எல்லாவற்றையும் தொகுத்து ஒரு ஆவணமாகத் தாக்கல் செய்திருக்கிறது.

சிபிஐ விசாரணையை, இன்றைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தபோது, சந்தடிசாக்கில் நக்கல் செய்திருக்கிறார் ஆ.ராசா! சிபிஐ வழக்கு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறதாம்!

சிபிஐ தரப்பு வழக்கறிஞர் லலித் பேசுவது சரியாகக் காதில் விழவில்லை என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் சார்பில் சொல்லப் பட்டபோது, சந்தடிசாக்கில் ஆ.ராசா புகுந்து, இந்த கமென்ட் அடித்திருக்கிறார். யுனிடெக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "திரு லலித்! நேற்றைக்காவது கொஞ்சம் சத்தமாக பேசினீர்கள் இன்றைக்கு உங்கள் குரல் மிகவும் தணிவாக இருக்கிறது" என்று சொன்னபோது, ஆ.ராசா இடைமறித்து, "அது நாளுக்கு நாள் அவர்கள் தரப்பு பலவீனமாகிக் கொண்டிருப்பதால் தான்!" என்று சொன்னாராம்.

நுணலும் தன் வாயால் கெடும் என்ற கதையாகிவிடப்போகிறது!!
---------------------------------------------------------------------------------------
******
கம்பல்சரி ரிடைர்மென்ட்டில் இருக்கும் சுர்ஜீத் சிங் பர்னாலாவிடம் திமுகவினர் மனுக்கொடுத்து இன்னொரு கேலிக் கூத்தை இன்றைக்கு அரங்கேற்றியிருக்கிறார்கள்!


கோவை ராசியே இல்லை, பொதுக்குழு திருப்பூருக்கு மாற்றப்படுமா, தொடர்ந்து கைதுகள், புறக்கணிக்கப்போவதாக அழகிரி தரப்பில் இருந்து மிரட்டல்,இப்படி வரிசையாக வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்தாலும், திமுக பொதுக்குழு நாளை மறுநாள் கோவையில் கூட இருப்பதாகத்தான் இந்த நிமிடம் வரை செய்திகள் சொல்கின்றன.

எப்போதும்போல, காங்கிரசுடன் உறவு முறிவு, ஆட்சிக்கு ஆதரவு வாபஸ், உள்ளாட்சித் தேர்தலைத் தனியாகவே சந்திப்பது (இவர்கள் இப்படி முடிவெடுப்பதற்கு முன்னாலேயே, பாமக உட்பட அத்தனை கூட்டாளிகளும்,உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்!!}என்று டமாரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஆட்சியில் இருந்தபோது, டமாரங்கள் சத்தத்தில் கேட்பவர் காது கிழியும்!இப்போதோ, டமாரங்களே கிழிந்து கிடக்கின்றன!

இந்த வார ஆனந்தவிகடன் இதழில் வெளியாகியிருக்கும் செய்திக் கட்டுரை நாட்டு நடப்பை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது! விகடன் குழுமத்துக்கு நன்றியுடன்!

Friday, July 22, 2011

இதுதாண்டா ஜெ. போலீஸ்!--------- ஆயிரமாயிரம் புகார்கள்... அதிரடிக் கைதுகள்

அடி உதவுற மாதிரி அண்ணன், தம்பிகூட உதவ மாட்டான்’ என்ற பழமொழிதான் ஜெயலலிதாவின் இன்றைய புது வழி!

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க-வை - இன்றும் மத்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள தி.மு.க-வை - 'லப்டப்... லப்டப்...’ என்று திகைக்கவைக்க லத்தியே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர்.

'இன்னும் 30 நாட்களில் போலீஸ் ராஜ்யம்’ ஆரம்பமாகப் போகிறது என்று ரெட் சிக்னல் காட்டுகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். இதற்கென இட்டுக்கட்டியோ... பொய்யாகப் புனைந்தோ, வழக்குகளை அவர் பாய்ச்சப்போவது இல்லை.

தி.மு.க-வினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, யார் யாரை எல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீண்டி னார்களோ... அந்த நபர்களைவைத்தே திருப்பி அடிக்கவிடுவதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.

சன் டி.வி. முதல் நில மோசடி வரையிலான ஜெ... மு.க... ரிலே ரேஸ் இதோ!

சன் நோக்கி 'கன்’!


'சன் டி.வி-க்கும் தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று கருணாநிதி சொன்னால்கூட, அதை ஜெயலலிதா ஏற்கத் தயாராக இல்லை. கருணாநிதிக்கான ஆக்சிஜனாக சன் டி.வி-யைத்தான் ஜெ. நினைக் கிறார். ஆட்சிக்கு வந்ததுமே அவர் அசைத்துப் பார்க்க நினைத்தது இவர்களைத்தான்.

''போன தடவை, கருணாநிதி கைதைத் தமிழகம் முழுக்கப் பரப்பி, அனுதாபம் தேடவைத்தது இவர்கள்தான். எனவே, இந்தத் தடவை என்ன நடந்தாலும் தங்கள் மீடியா பலத்தால் இதையே செய்வார்கள். எனவே, அவர்களை முதலில் தட்டிவைக்க அம்மா நினைக்கிறார்'' என்கிறார் அமைச்சர்களில் ஒருவர். அதனால்தான், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனைப் புதுப்பிக்கப் பேசினார். டி.வி. தொழிலுக்கு கேபிள் உயிர் என்பது ஜெ. கணக்கு!

அடுத்து 'சன் இன் லா' குடும்பத்தின் பக்கமும் ஜெ. முகம் திரும்பியது. சினிமாக்காரர்கள் மொத்தப் பேரையும் சினம்கொள்ளவைத்ததாக சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்கப் புற்றீசல் மாதிரி எத்த னையோ தயாரிப்பாளர்கள் புறப்பட்டார் கள். சேலம் கந்தன் ஃபிலிம்ஸ் செல்வராஜ் முதல் 'மாப்பிள்ளை’ ஹித்தேஷ் ஜபக் வரையில் சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்த பல படங்களுக்கு எஃப்.ஐ.ஆர். போடுகிறார்கள். இன்றைய தின நிலவரப்படி... சக்சேனா சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. இது கலாநிதி மாறனையும் குறிவைக்கும் சுழலாகவே சுற்ற ஆரம்பித்து உள்ளது. கடந்த 13-ம் தேதி 'கலைஞர் கருணாநிதி நகர்’ காவல் நிலையத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும். 26-ம் தேதி வரை அவருடைய வக்கீல்கள் அவகாசம் கேட்டு உள்ளார்கள். '26-ம் தேதி வரை பார்ப்போம்’ என்கிறார் அந்தப் பகுதி டெபுடி கமிஷனர். அதற்குப் பிறகு?

மதுர... குலுங்கக் குலுங்க!

'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த அரை நாளில் அழகிரியிடம் இருந்து மதுரை மீட்கப்படும்’ என்று மதுரையில் நின்று சபதம் போட்ட ஜெயலலிதா, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை டெல்லியில் இருந்து தொடங்கினார். அழகிரி மீதான 59 வழக்குகளுக்கான ஆவணங்கள், தமிழக அரசிடம் இருந்து டெல்லி மேலிடத்துக்குத் தரப்பட்டு உள்ளன. அதில் 17 வழக்குகள் அழகிரி நேரடியாகச் சம்பந்தப்பட்டவை என்கிறார்கள். மற்ற வழக்குகள் அழகிரியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அடியாட் கள் நடத்திய அராஜகங்கள். அழகிரி முதலமைச்சர் என்றால், 'பொட்டு’ சுரேஷ் துணை முதல்வர் என்பதில் தொடங்கி, 'அட்டாக்’ பாண்டி வரை அத்தனை பேர் பெயரையும் ஜெயலலிதா மேடையில் வாசித்தார். இந்த நபர்களை வளைக்க கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் சிறப்புப் படை போடப்பட்டு உள்ளது. முதல் வழக்கில் 'அட்டாக்’ பாண்டி கைதாகிவிட்டார். மதுரை தினகரன் நாளிதழ் தாக்குதல் தொடங்கி... வெளிச்சத்துக்கு வராத காரியங்கள் வரை எல்லாமே ரத்த சரித்திரம். 'மொத்தத்தையும் மதுரையில் ஸ்பெஷல் கோர்ட் போட்டு விசாரிக் கலாமா?’ என்ற யோசனை யில் இருக்கிறார் ஜெ..

கொலை கொலையாய்...

இன்னும் மர்மமாக இருக் கும் சில மரணங்கள், தி.மு.க. அமைச்சர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன. அதில் முக்கியமானது திருச்சி இரட்டைக் கொலை. ரியல் எஸ்டேட் புரோக்கர் சகோ தரர்களில் ஒருவர் விஷம் குடித்தும் இன்னொருவர் உயிரோடு எரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட விவகாரத் தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருடைய தம்பி ராம ஜெயம் இருவர் பெயரும் பரவிக்கிடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவராகச் சொல்லப்படும் திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்... கஞ்சா வழக்கில் கைதாகி உள்ளார். இன்னும் பல தி.மு.க-வினரையே சுற்றிச் சுற்றி விசாரிக்கிறது போலீஸ். திருச்சி எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், தனது சொந்தத் தொகுதி என்பதால், இந்தக் கொலையை சீரியஸாகப் பார்க்கிறார் ஜெ.

சேலம் குப்புராஜ் குடும்பத்தில் ஆறு பேர் கொலையானதில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் பாரப்பட்டி சுரேஷ் கைதானார். அவரை ஜெயிலுக்குச் சென்று சந்தித்து, சர்ச்சையில் சிக்கினார் ஆறுமுகம். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இப்போது துரித விசாரணையில் இறங்கி இருக்கும் நிலையில், ஆறு பேர் கொல்லப்பட்ட வீடு மர்மமான முறையில் எரிக்கப்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம். தடயங்களை மறைக்க நடந்ததாகவே இதை சி.பி.சி.ஐ.டி. பார்க்கிறது.

முன்னாள் அமைச்சர் ஈரோடு என்.கே.கே.பி.ராஜா, சிவபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தாலும், மேலே கொண்டுசெல்ல இன்றைய அரசு முயற்சிக்கிறது. தஞ்சைப் பகுதி தி.மு.க. மாவட்டச் செயலாளர் கொலையிலும் மர்மம் இன்னும் விடுபட வில்லை. இப்படிப் பல முடிச்சுகளை அவிழ்க்க அவசர உத்தரவுகள் போட்டு இருக்கிறார் ஜெ!

மந்திரி... தந்திரிகள்!

வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்த வழக்கு, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் கே.என். நேரு, துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள் ளிட்ட பலர் மீது போடப்பட்டது. அடுத்து, ஆட்சி மாறியது. விசாரணைகள் முடிந்து தீர்ப்பும் வந்து சிலர் விடுதலை ஆனார் கள். இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டப்போகின்றன. மேலும், 2006-11 ஆண்டு கால ஆட்சியிலும் இதுபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தவர்கள் பட்டியலைத் தயாரிக்கச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.

மெகா கல்லூரிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சாராய ஆலைகள், மணல் குவாரிகள், தொழிற்சாலைகள் எனப் பட்டவர்த்தனமாக உருவாக்கிக்கொண்ட 9 அமைச்சர்கள் மீது முதல் வரிசையில் வழக்குகள் போடப்பட உள்ளன. அதற்கான ரெய்டு நாட்கள் குறிக்கப்பட உள்ளன.

பினாமிகள் ஜாதகம்...

கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பினாமிகள் பெயர்கொண்ட முதல் பட்டியல் தயாராகி உள்ளது. 100 கோடிக்கு மேல் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் தயாராகும் இந்தப் பட்டியலில், சென்னை, மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் பெயர்களும் அடக்கம்.

தி.மு.க. வேஷம் போட ஆரம்பித்த கான்ட்ராக்டர்கள் முதல் இவர்களிடம் பணம் வாங்கி வட்டிக்குவிட்ட கோடீஸ்வர மார்வாடிகள் சிலர் வரை இந்தப் பட்டிய லில் வருகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய மாதத்திலேயே இவர்களில் சிலர் வெளி நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி விட்டார்கள். அறிவாலயத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த நபர் ஒருவரும் இந்தப் பட்டியலில் வருகிறார். விரக்தியில் இருக்கும் தி.மு.க. புள்ளிகள் மூலமாகவே இவர்கள் ஜாதகம் திரட்டப்பட்டு வருகிறது!

பணப் பாதை அடைப்பு!

எதிர்க் கட்சியாக இருக்கும்போதே ஜெயலலிதா கண்காணித்தது இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தைத்தான். கருணாநிதி முதல்முறை முதல்வராக இருந்த காலம் முதல் இன்று வரை அவருக்கும் இந்தக் குழுமத்துக்குமான தொடர்புகளை வெளிப்படையாக ஜெ. போட்டு உடைத்து வந்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத் தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது முதல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமாகச் செய்வது வரை அனைத்துமே இந்த குரூப்தான் செய்து வருகிறது. ''அரசுப் பணம் இந்த குரூப் மூலமாக வெளியே போய்... மீண்டும் கருணாநிதி குடும்பத்துக்கு வருகிறது. அதைவைத்துத்தான் இவர்கள் படம் எடுக்கிறார்கள்'' என்றார் முதல்வர்.

எனவே ஜெ. செய்த முதல் காரியம், புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானத்தை நிறுத்தி விசாரணை கமிஷன் போட்டார். இனி இ.டி.ஏ-வுக்குப் போட்ட பணமும் கிடைக்காது. வர வேண்டியதும் வராது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு 750 கோடி வரை இதுவரை தரப்பட்டு வந்த பிரிமியம் இனி கிடைக்காது. இந்த ஒரு திட்டத்துக்காகவே அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்த 1,200 பேரை ஜூலை 6-ம் தேதி வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இவர்களைப்போலவே 'லம்ப்பாக’ லாபம் அடைந்த நிறுவனங்களைக் கண்டுபிடித்து பணப் பாதையை அடைக்க நினைக்கிறார் ஜெ.

லோக்கல் மனிதர்களுக்குக் கொக்கி!

மந்திரிகள் வி.ஐ.பி-க்களைத் தாண்டி குறிப்பிட்ட ஏரியாவில் செல்வாக்காக இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அதிக ஆபத்தாக ஜெ. பார்க்கிறார். நிலபுலன்கள், கைவச கரன்சி மூலமாகக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த இரண்டாம் கட்ட மாவட்டப் பிரமுகர்கள்... அடுத்து வரும் ஆண்டுகளில் செல்வாக்குப் பெற்று, கட்சிப் பதவிகளைப் பிடிக்கப்போகிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில்கூட இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இவர்கள் மீதான புகார்கள் தூசி தட்டப்படுகின்றன.

'உங்கள் ஊர் லோக்கல் தி.மு.க. பொறுப்பாளர்கள் செய்யும் முறைகேடுகளை தலைமைக் கழகத்துக்கு எழுதுங்கள்’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஜெ. சொல்லி... மலையளவு கடிதங்கள் குவிந்தன. இந்தக் கடிதங்களை ஆதாரமாக வைத்து இவர்களுக்குக் கொக்கி போடப் போகிறார்கள்.

குடும்ப டார்கெட்!

கடந்த முறை முதல்வராக வந்ததும்... ஒருநாள் நள்ளிரவில் கருணாநிதியைத் தூக்கியதுபோன்ற சம்பவம் இனி தேவை இல்லை என்று நினைக்கிறாராம் ஜெ.

ஆனால், அவருடைய குடும்பப் பிரமுகர்கள் 10 பேருக்கு நிச்சயம் தலைவலி காத்து இருக்கிறதாம். ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கலாநிதி மாறன், அழகிரியின் மருமகன்களான வெங்கடேசன், விவேக், ஸ்டாலின் மகன் உதயநிதி, அழகிரி மகன் துரை தயாநிதி... என்று பெயர்களும் சொல்லப்படுகின்றன. இதில் இடம் பெற்ற கனிமொழி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி, சிறையில் இருக்கிறார். தயாநிதியும் சர்ச்சைச் சுழலில் சிக்கிவிட்டார். மீதியுள்ள எட்டு பேருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளனவாம்.

வளைக்கப்பட்ட மண்ணும் மனிதனும்...

தி.மு.க-வை முடக்க ஜெ. கண்டுபிடித்த அபார வழிதான், நில மோசடி வழக்குகள். போலீஸ், வருவாய் மற்றும் பத்திரப் பதிவு அதிகாரிகள், உள்ளூர் ரவுடிகள் மூவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தட்டிப்பறிக்கப்பட்ட நிலங்கள் ஏராளம். அதிகாரத்தில் இருப்பதால் புகார் சொல்ல முடியாமல் தவித்தவர்கள், ஆளும் கட்சி மாறியதும் துணிச்சலாக வெளியில் வந்தார்கள். மே 13 முதல் ஜூலை 1-ம் தேதி வரை மட்டும் தமிழகம் முழுவதும் 1,449 புகார்கள் வந்தன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தி.மு.க. பிரமுகர்கள். இந்த நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கவே சிறப்புப் பிரிவைப் போட்டுவிட்டார் ஜெ. 'நிலம் அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நிலத்தை இழந்தவர்களுக்கு நிலம் கிடைக்கும்’ என்று கொடுத்த வாக்குறுதி, பலருக்கும் பால் வார்த்தது. தி.மு.க-வினருக்கோ வேர்த்தது. கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆனந்தன், திருச்சி கோ.அபிஷேகபுரம் அறிவுடை நம்பி தொடங்கி, கொடைக்கானல் நகர சபைத் தலைவர் முகமது இப்ராஹிம் என கைதுப் பட்டியல் நீள்கிறது. தி.மு.க-வினர் கதறலை அதிகப்படுத்தி இருப்பதும் இது தான்.

வதந்திகளை நம்புங்கள்!

புதருக்குள் கல்லைப் போட்டால், உள்ளே இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும் என்பார்கள். அது மாதிரியே... இவரைக் கைது பண்ணப் போறோம்... அவரை அமுக்கப்போறோம்... என்பது மாதிரியான வதந்திகளைக் கிளப்பிவிட்டு, அதனால் வெளியே வரும் தகவல்களை ரிக்கார்டு செய்ய ஆரம்பித்து உள்ளது போலீஸ்.

தி.மு.க. புள்ளிகளைச் சுற்றி வந்த கரும்புள்ளிகள் அத்தனை பேரைப்பற்றியும் இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதனால் அவர்கள் திகிலடைந்து இருக்கிறார்கள்.

அறிவாலயத்துக்கும் கருணாநிதிக்கும் 'கைது’ வதந்திகள்தான் அதிகமாக வருகின்றன. இதைக் கேள்விப்பட்டு சூடான கருணாநிதி, 'தி.மு.க. வக்கீல்கள் என்ன ஆனார்கள்?’ 'வழக்கறிஞர் அணி என்ற ஒன்று இருக்கிறதா?’ என்று கொந்தளித்துள்ளார்.

ஆளும் கட்சியாக இருக்கும்போது கான்ட்ராக்டர்கள் அணியை மட்டும் நம்பினால், எதிர்க் கட்சியாக ஆகும்போது வக்கீல் அணியைத்தான் நாட வேண்டி இருக்கும்!