Sunday, September 28, 2008

இது எப்படி இருக்கு ?

சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.

துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.

சன் டிவி இன் மலிவான விளம்பரம் .............

காதலில் விழுந்தேன் திரைப்படம் மதுரையில் திரையிடப் படவில்லை , அத்திரைப்படத்தை திரையிட திட்டமிட்டிருந்த திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வர் மகன் திரு மு.க அழகிரி அவர்களின் பெயரை சொல்லி பேசிய சில ரவுடிகளால் மிரட்டப் பட்டதாகவும் , அதனால் அத்திரைப்படம் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களிலும் வெளியிட முடியவில்லை என்றும், நேற்றிலிருந்து சன் டிவியின் செய்திகளிலும் , சன் நியூஸ் செய்திகளிலும் மீண்டும் மீண்டும் கூறப் பட்டு வருகிறது.


ஆனால் மதுரையில் இருந்து எனக்கு கிடைத்த தகவல் வேறு மாதிரி உள்ளது. அதாவது சன் டிவி கூறுவது போல் எந்த திரையரங்கு உரிமையாளர்களும் இந்த திரைப்படத்தை திரையிட ஒப்புகொண்டதாக தெரியவில்லை, ஏனெனில் திரைப்படம் மாநிலலத்தின் மற்ற பகுதிகளில் வெளியான அன்று வரை மதுரை நகரின் எந்த திரையரங்கு சார்பிலும் அத்திரைபடத்தை தங்கள் திரையரங்கில் திரையிடப் போவதாக , எந்த விதமான சுவரொட்டி விளம்பரங்களையோ, நாளிதழ் விளம்பரங்களையோ செய்யவில்லை ,


எப்போதுமே மதுரையில் ஒரு திரைப்படம் வெளியாகிறதென்றால் அதற்கு ஒருவாரம் முன்பிருந்தே விளம்பரங்கள் செய்யப்படும்.இந்தப் படத்தை தயாரிக்கும் சன் டிவி குழுமத்தின் பத்திரிகையான தினகரனில் கூட முதல்நாள் வரை எந்த திரையரங்கையும் குறிப்பிட்டு விளம்பரம் செய்யப்படவில்லை. திரைப்படத்தின் விளம்பரத்தில் சென்னையை சேர்ந்த திரையரங்கங்களின் பெயர்கள்தான் குறிப்படப் பட்டிருந்தது.


சன் டிவி செய்திகளில் கூறுவது போல திரையரங்கு உரிமையாளர்கள் திரையிட ஒப்புக் கொண்ண்டு கடைசி நேரத்தில் மிரட்டப் பாட்டிருந்தால் , திரைப்படம் சம்பந்தமான விளம்பரங்கள் செய்யப் பட்டிருக்கும் அது போல் எதுவும் நடக்காத போது சன் டிவி கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை ...


அப்படியே சன் டிவி கூறுவதை நாம் நம்புவோமானால் , அரசுக்கோ அல்லது திரு மு.க.அழகிரி அவர்களுக்கோ பிடிக்காதவர்களின் திரைப்படங்கள் அவர்களால் தடுக்கப்படுகிறது என்றால் பின்னர் எப்படி அவர்களை நேரடியாக எதிர்க்கும் சரத்குமார் , விஜயகாந்த் ஆகியோரின் திரைபடங்கள் மட்டும் எந்த சிக்கலும் இன்றி தமிழகம் முழுவதும் வெளியாகின்றன ?


மதுரையும் அதைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களிலும் சன் டிவி தயாரித்த காதலில் விழுந்தேன் திரைப்படம் வெளியாகாதது எந்த அளவிற்கு மக்களை பாதிக்கும் என்று தெரியவில்லை, ஆனால் சன் டிவி தனது செய்திகளில் டெல்லியில் இன்று நடந்த குண்டுவெடிப்புக்கு ஒதுக்கிய நேரத்தை விட காதலில் விழுந்தேன் திரைப்படத்தை மதுரையில் வெளியிட முடியாதையும் ,, திரைப்படம் மக்களால் நன்றாக ரசிக்கப்படுவதாகவும், திரைப்படம் நன்றாக ஓடுவதாகவும் கூறுவதற்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இதுதானேமக்களின் முக்கிய பிரச்சினை.


இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு சில ஊர்களில் திரையிட முடியாமலோ அல்லது தாமதமாக திரையிடப்படும் நிலையோ ஏற்பட்டது உண்டு.
இந்த திரைப்படத்தை சன் டிவி தயாரித்துள்ளதால்தான் இந்த பிரச்சனைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே,



இந்த விவகாரத்தில் முதல்வர் மகன் மு.க.அழகிரி அவர்களின் தலையீடு இருப்பதாக சன் டிவி மீண்டும் மீண்டும் கூறி வருவதன் மூலம் மிகவும் புத்திசாலித் தனமாக தங்களின் திரைப்படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் முயற்சியாகவே எனக்குப் படுகிறது.



தன்னுடைய எதிரிகளை கூட தனது புத்திசாலித் தனத்தால் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சன் டிவி அதிபர் கலாநிதி மாறனின் புத்திசாலித் தனத்தை கண்டிப்பாக நாம் பாராட்டியே ஆகத்தான் வேண்டும்.....



அதே நேரம் தான் தயாரித்த திரைப்படத்திற்கு மலிவான முறையில் விளம்பரம் தேடுவதும் , தன்னுடைய தனிப்பட்ட கோபதாபங்களுக்காக - எந்த விவகாரமாக இருந்தாலும் யார் பெயரை வேண்டுமானாலும் அப்பட்டமாக குறை கூறுவதும் - அவற்றிற்காக மக்களிடம் சன் டிவிக்கு உள்ள நம்பிக்கையை மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்வது , அந்த நம்பிக்கையை சிறுது சிறிதாக இழக்கச் செய்துவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது

TATA vs West Bengal.................. final match

West Bengal Chief Minister Buddhadeb Bhattacharjee on Saturday said he would be meeting Ratan Tata soon to discuss the Singur imbrogliio. Addressing a student's rally in Kolkata, Bhattacharjee said: "I had written to the Tatas. I have received their letter today. In the letter Ratan Tata has said he wants to talk to me. I have said yes to that." The Chief Minister, however, did not divulge when Ratan Tata is expected to be in Kolkata.

Lambasting the Opposition for the continuing stand-off in Singur, Bhattacharjee said if the situation continues it would become difficult to hold back the Tatas from leaving West Bengal.

"I am trying my best to see that the Tatas stay. But they (the Opposition) are pulling down walls, pelting stones and threatening the staff there. Is it possible to carry out any kind of work under these circumstances? If they decide to leave, who will shoulder the responsibility? The Opposition will be blamed for betraying the people of West Bengal," said Bhattacharjee. "We are not bothered about the Tatas or the Birlas. All we want is to ensure jobs for 6,000 youths," he added.

He urged the youth to stir up a campaign in cities and villages in support of industrialisation. "We need industries in West Bengal. We have to take the path of industrialisation if we have to progress. The Opposition is saying no to everything-be it the power projects in Katwa or the widening of national highways. Who will decide whether there has to be industrialisation or not, the Trinamool Congress or the new generation?" Bhattacharjee asked.

He also ruled out the possibility of handing over 300 acres land to the unwilling farmers. "I asked her (Trinamool Congress leader Mamata Banerjee) whether she wants the factory or not. The bickering over 300 acres will not help. It will not be possible to set up the factory then. If she wants the factory to stay, she has to accept the package announced by the Government," said Bhattacharjee.

Monday, September 22, 2008

சட்டமும் விட்டமும் ...

உலகெங்கிலுமுள்ள நாடுகளில் சட்டம் , ஒழுங்கு என்கிற பெயரில் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளனர் . அவற்றுள் பல வித்தியாசமானவை சில விபரீதமானவையும் கூட...., சிலவற்றை படித்து வியப்படையாமலும் கூட இருக்க முடியாது .
அவற்றுள் சில ......
*ஒகியோ மாகாணத்தின் பால்டிங் நகரில் குரைக்கும் நாயை அடக்க சட்டப்படி போலிஸ்காரர் நாயை அடிக்கலாம்.

*நியூ யார்க் மாகாணத்தில் கரமெல் பகுதியில் பொருத்தமற்ற ஜக்கெட் ,பேன்ட் அணிந்து வெளியே செல்லக் கூடாது.

*கெண்டகி மாகணத்தில் கோர்ர்ன் ஐஸ்கிரிமை சட்டைப் பையில் கொண்டு செல்வது தடை செய்யப்படடுள்ளது.

*மசாசு செட்ஸ் பகுதியில் உள்ள நாய்கள் அனைத்துக்கும் ஏப்ரல் மாதத்தில் பின்னங்கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

*மிச்சிகன் பகுதியில் பெண்ணின் தலை முடி கணவனுக்கு சொந்தம், எனவே கணவனின் சம்மதமின்றி முடி வெட்டி கொள்ளக்கூடாது.

*சால் வாடர் மாகாணத்தில் மது அருந்திவிட்டு கார் ஓடுபவர்களுக்கு மரண தண்டனை கூட வழங்கப்படலாம்.

*புளோரிடா மாகாணத்தில் கன்னிப் பெண்கள் ஞாயிற்று கிழமைகளில் பரசூடிலிருந்து குதிப்பது சட்ட விரோதமானது

*வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர்கள் ,கண்களை கட்டிக்கொண்டு ஓட்டுவது அலபாமா மாகாணத்தில் குற்றமாகும்.

*வெர்மான்ட் மாகாணத்தில் பெண்கள் பல்செட் அணிய கணவனின் அனுமதி பெற வேண்டும் .

Monday, September 8, 2008

Singur imbrolgio resolved, Trinamool withdraws agitation

The News given below is from : HINDUSTAN TIMES" News paper



Peace returned to Singur late Sunday night, as Governor Gopal Krishan Gandhi stood flanked by Buddhadeb Bhattacharjee and Mamata Banerjee and announced the crisis was over.

But would Nano stay? There was no word from Tata Motors till the filing of this report. For a moment on Sunday, it nearly didn’t happen.Gandhi read out a statement saying farmers who had not accepted compensation for land acquired from them by the government will be given land within the Nano project area and outside it.

A committee would be set up to look at the demand of these farmers and to identify the land needed to compensate them. It has only a week to finish. Till then, work will remain suspended in the ancillary units.

Mamata left for Singur shortly to announce the end of her agitation.

But would Nano stay? There was no word from Tata Motors till the filing of this report. For a moment on Sunday, it nearly didn’t happen.

The two bitterest of political foes met — their first face-to-face meeting in eight years — Sunday in the presence of the governor and came out smiling. The word went out like a lightning: deal had been struck.

News channels went on air with the breaking story: Singur Solved. And then within a few minutes, a punctuation mark appeared in the heading: Singur Solved? That pretty much told the story.

Later in the evening, word came of another meeting, with several ministers "rushing" to the governor’s house, led by the chief minister.

What happened? Mamata was reportedly not happy with the size of the land she had won for the farmers within the Nano project area. She also wanted the decision on ancillary units to be left to a special committee.

Raj Bhavan was the focus of endless meetings on a rain-drenched Sunday. The first one to arrive was the chief minister at about 11 am. This meeting lasted an hour.

The next in was the Trinamool leader, who came at 3 pm. After an hour, they were joined by the chief minister, who left after a while for the CPI(M) headquarters at Alimuddin Street. Mamata stayed back at Raj Bhavan.

It had then seemed that the meetings had gone off well. Word went around that the governor would make a pronouncement at a news conference in about 30 minutes. That never happened, and finally it was called off.

Hindustan Times has been told by sources that the government has offered Mamata 40 acres of land, which belongs to the West Bengal Development Corporation, within the project area.

Another 50 acres was offered outside the project area when Mamata kept on demanding more land inside the project area. The chief minister argued that that was not possible without consulting Tata Motors.

And that, if forced, the Tatas may leave.

It was then decided that a four-member committee would be formed with members from the state government and local Trinamool Congress representatives to look for more land outside the project area.

The committee would also look into the rehabilitation package for the affected farmers. And then Mamata upped the ante asking for suspension of work in the area marked out for the ancillary units till the committee gave its report.

While the Trinamool leader and the chief minister disagreed on some issues, both were in a mood to give Nano a chance. To that end, Mamata gave up her demand of 400 acres within the plant site for the farmers.

And Buddha agreed to reconsider the rehabilitation package.

Saturday, September 6, 2008

ரஜினி பற்றிய ஒரு உண்மையான விமர்சனம்

அது ஒகேனக்கலா கட்டும், குசேலனா கட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி எது செய்தாலும் அது பரபரப்பாகி வருகிறது. பத்திரிகைகளுக்கு தீனியாகிவிடுகிறது. அரசியல், நாட்டு நிலவரம் பற்றி எப்போ வாவது விழாக்களில் ஒரு வரியில் அவர் தன் மனம் திறந்துவிட்டால் கூட அதற்கு வெவ்வேறு கோணங்களில் ஆராயப் படும் அளவிற்கு சூப்பர் ஸ்டார் அரசியல் தலைவர்களாலும், பல லட்சக்கணக்கான ரசிகர்களாலும் உற்று கவனிக்கப்படுகிறார். தமிழக அரசியலில் தீவிரமாக நுழைவதற்கு முன்பே இப்படிப்பட்ட ஓர் ஈர்ப்பு சக்தி எம்.ஜி.ஆருக்கு இருந்தது. ஏறத்தாழ அப்படியொரு காந்தசக்தியை இந்த மனிதர் பெற்றிருக்கிறார் என்பதுஅசாதாரணமான விஷயம். `பாட்சா', `அருணாசலம்', `முத்து', `படையப்பா', `சந்திரமுகி', `சிவாஜி' என்று ரஜினியின் அண்மைக்கால வெற்றிப்படங்கள் தமிழக திரையுலகில் எப்படியொரு புயலைக் கிளப்பியதோ அதே போன்று `பாபா', `குசேலன்' போன்ற சுமாராக ஓடிய ஒரு சில படங்களும் ஏற்படுத்தியுள்ளதுதான் ஆச்சர்யம்.

``நான் மொத்தம் எழுபத்தைந்து படங்கள் டைரக்ட் பண்ணியிருக்கேன் என்றால் ரஜினியை மட்டும் வைத்து இருபத்தைந்து படங்கள் செய்திருக்கேன். `புவனா ஒரு கேள்விக் குறி'யிலிருந்து `பாண்டியன்' வரை! ஏ.வி.எம். தயாரிப்பில் `முரட்டுக்காளை', `பாயும் புலி' போன்ற சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தேன் என்றால்; பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் `ஆறிலிருந்து அறுபது வரை', `எங்கேயோ கேட்ட குரல்', `ப்ரியா' என்று பட்டியல் நிளூம். கே.பி. சாரின் புரொடெக்ஷனில் `நெற்றிக் கண்', `வேலைக்காரன்', `ராகவேந்திரா ' போன்ற படங்களைத் தந்திருக்கிறேன்.

எதற்கு இந்த லிஸ்ட்டைத் தருகிறேன் என்றால் இப்படிப்பட்ட பலவிதமான படங்களில் 90 சதவிகிதம் வெற்றிப் படங்கள்! மற்றவை நஷ்டமல்ல. லாபம் குறைச்சலாக கிடைத்தவை. ஆக என் படங்கள் எல்லாமே வெள்ளிவிழா, அல்லது நூறு நாள் கண்டவை. அதுதான் ரஜினியின் மகிமை'' என்று ஒரே மூச்சில் சூப்பர் ஸ்டாரின் ஆரம்ப கால வெற்றிப் பயணத்தை அசைபோட்டார் பழம் பெரும்இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர்ஹிட் படங்களால் ஏதோ தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் மட்டும்தான் கொழித்தார்கள் என்று நீங்கள் அவசர கணக்குப் போட்டால் அதோடு ரஜினி என்கிற அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் வெற்றிவாகை முடிந்து விடவில்லை என்பது இவரது கருத்து.

``ரஜினி படம் பூஜை போட்டவுடனேயே ஏதோ மின்சார அதிர்வுகள் போல் கோடம்பாக்கமே சுறுசுறுப்பாகிவிடும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். போஸ்டர் ஒட்டுபவர், தியேட்டரில் சைக்கிள் காண்ட்ராக்ட் எடுப்பவர், பெட்டிக்கடையில் முறுக்கு, பாப்கார்ன் விற்பவர் என்று திரையுலகைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கமே குஷியாகிவிடும். அதனால்தான் ஒரு முறை ரஜினியிடம் சொன்னேன்.. `நீங்கள் ஒரு பொதுச் சொத்து. நீங்கள் படம் பண்ணுவது உங்களுக்காக மட்டுமல்ல. மிகப் பெரிய கூட்டத்திற்காக. எனவே அடிக்கடி படம் பண்ணுங்கள்' என்றேன். வழக்கம் போல் சிரித்தார்'' என்ற எஸ்.பி. முத்துராமன், தன் யூனிட்டுக்காக சூப்பர் ஸ்டார் செய்த பெரிய உதவியைச் சொல்லும் போது சற்று கண்கலங்கினார்.

``என் யூனிட்டில் ஒரு பதினைந்து பேர் பலகாலமாக என்னோடு இருப்பவர்கள். அவர்கள் எதிர்காலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டாமா என்ற உள்ளுணர்வு எனக்குள் ரொம்ப காலமாக தொந்தரவு செய்ய, ரஜினியிடமே இதைச் சொல்லிவிட்டேன். சொன்னால் உங்களால் நம்ப முடியாது. அடுத்த நாளே `பாண்டியன்' படத்திற்கு ஒப்புக்கொண்டார். டைரக்டர் முதல் கடைசி டெக்னீஷியன் வரை 15 பேரும் லாபத்தை சமமாக எடுத்துக் கொண்டோம். அதுதான் ரஜினியின் மனிதநேயம்! நான் ஏழெட்டு வருடமாக படம் பண்ணலை என்றாலும் உணவு, உடை என்று அடிப்படை வசதிகளுக்கு நாங்கள் யாரும் கஷ்டப்படவில்லை! ஆக, சூப்பர் ஸ்டார் என்கிற சுரங்கத்தில் மனித நேயம், அன்பு, பாசம், ஆன்மிகம் போன்ற பல அற்புதங்கள் இருக்கு. அதனால்தான் உலகம் அவரைப் போற்று கிறது..'' முத்துராமன் பட படப்போடு பேசினார்.

``அவரைப்பற்றி நான் பேசக்கூடாதுங்க. மற்றவர்கள் அவரைப்பற்றி பேசும்போது நான் ரசிக்கணும்'' என்று தயங்கினார் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவரான சத்ய நாராயணா. 1981-ம் வருடத்திலிருந்து மன்றத்தின் பொறுப்புகளை கவனித்துக் கொள்பவர்.

``எனக்கு 58 வயசாயிடுச்சு. நான் தலைவரிடம் சேர்ந்த போது எனக்கு என்ன வயசு தெரியுமா? 29. ஆக, சரியா என்னோட சரிபாதி வாழ்க்கையை அவரோடு கழித்தவன். நான் முதன் முதல்ல அவரை எப்படிப் பார்த்தேனோ அதே மாதிரிதான் இன்றைக்கும் பார்க்கிறேன். அதே பாசம், கருணை, மனிதநேயம்! வெற்றிகள், சோதனைகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கும் மிகப்பெரிய மனப்பக்குவம் அவருக்குண்டு. அசாத்திய தன்னம்பிக்கையும், தெய்வ பலமும் உள்ளவர்களால் மட்டுமே அது சாத்தியம்..'' என்று முடித்துக் கொண்டார் சத்யநாராயணா.

ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்த ரஜினிக்கு இன்று குசேலன் எதிர்பார்த்த அளவுக்கு வசூலாகவில்லை என்றதும் பல பக்கங்களிலிருந்து சர்ச்சைகள், கேள்விக் கணைகள். இத்தனைக்கும் `குசேலனில் என்னுடைய பங்கு 25 சதவிகிதம்தான்' என்று அவர் ஆரம்பத்திலிருந்தே கூறியவர்.

``இதில் அவர் ஹீரோவும் இல்லை. கௌரவ வேடம்தான். குசேலன் அவரது சொந்தப் படமும் இல்லை. ஆனால் அவர் தலையில் எல்லா பொறுப்பும் விழுவது ஏன் என்று தெரியவில்லை'' என்கிறார் சூப்பர் ஸ்டாரின் நீண்ட கால நண்பரும், துக்ளக் ஆசிரியருமான சோ. ஏறத்தாழ இதே போன்றதொரு மனநிலையில் பேசுகிறார் டைரக்டர் கே. பாலசந்தர்.

``குசேலன் பற்றி ஊடகங்களில் வெளிவந்த எண்ணற்ற தகவல்கள் எதிலும் உண்மையில்லை. அனைத்தும் தவறானவை. ஒன்றை மட்டும் இப்போது குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன். எனது கவிதாலயா நிறுவனத்திற்கு உதவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தானே முன்வந்த புண்ணியவான் ரஜினி பற்றி பலவாறான விமர்சனங்களும், வாக்குவாதங்களும் வெளிவர மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவனான நானே காரணமாயிட்டேன் என்பதற்காக கூனிக் குறுகி நிற்கிறேன்.'' - சற்று உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார் கே.பி.

தமிழ்த் திரையுலகத்தில் இதமான அதிர்வுகளை ஏற்படுத்தி இருபத்தைந்து ஆண்டுகாலமாக பல குடும்பங்களை வாழவைத்த ரஜினியைப் பற்றிய சமீபகால விமர்சனங்கள் இயக்குநர் சிகரத்தை காயப்படுத்தியுள்ளது புரிந்தது.

``அடுத்த படத்தில் பெரிய ஹிட் கொடுத்த பிறகு இதே தமிழ்த் திரையுலகம் நாளைக்கு அவரைத் தூக்கி வைத்து கொடிபிடித்துக் கொண்டாடும். பெரிய பரபரப்போடு பேசப்படுவார். அப்போதும் ஒன்றுமே அறியாதவர் போல புன்னகைப்பார் அவர். அடிக்கடி இமயமலைக்குப் போய் ரிஷிகளைப் பார்த்துப் பேசுவதாலும், தியானம் இருப்பதாலும் அவருக்கு ஒருவித சாத்வீக மனசு வந்து விட்டது. நீங்கள் அவரை எவ்வளவு தூண்டி விட்டாலும் `இந்த சினிமாவுக்கு இவ்வளவு செஞ்சவன்' என்ற வார்த்தை அவரிடம் எப்போதும் வராது. அதனால்தான் வெற்றி, தோல்வி எல்லாவற்றையும் துவண்டுவிடாமல் அவரால் பார்க்க முடிகிறது.'' _ என்று ரஜினியின் மனநிலையை சற்று தத்துவார்த்தமாக அலசினார் ரஜினி மற்றும் அவரது அண்ணன் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான பாபு ராஜேந்திரன்!

உண்மைதான். திரையுலகில் பல சாதனைகளைக் கண்ட ரஜினியை தமிழகம் அறியும். அதே சமயம், அவருக்குள் இருக்கும் இன்னொரு அற்புதமான முகத்தை அவ்வளவு சுலபமாக அறிய முடியுமா?.

ரஜினி வாய்ஸ் குறைந்துவிட்டதா?

இந்தக் கேள்வியை சென்னையில் பல பகுதிகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களிடம் கேட்டபோது, பெரும்பான்மையினர் சட்டென்று சிரித்தார்கள். ``எப்படி சார்..? எத்தனை பேர் புதுசா வந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்!'' என்று ஏதோ சொல்லி வைத்தாற்போல் கூறினார்கள். இதோ எங்கள் மெகா சர்வே ரிஸல்ட்! ரஜினியின் மவுசு என்றுமே குறையாது என்றவர்கள் 86 சதவிகிதம். இவர்கள் பெரும்பாலும் இளசுகள். குசேலனால் சற்று பாதித்துள்ளது என்றவர்கள் பத்து சதவிகிதம்! நான்கு சதவிகிதம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

Thursday, September 4, 2008

கூகிள் க்ரோம் பார்க்க வெகு எளிமையாக இருக்கிறது.

புதிதில் இணையத்தில் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பது இம்சையான விசயம். அந்த நேரத்தில் எனக்கு அடைக்கலம் அளித்து காத்தது தான் Lynx எனப்படும் உலாவி. அதில் படம் எதுவும் தெரியாது எழுத்து மட்டும் தான் என்பதால் அதை மேலோட்டமாகப் பார்த்தால் நாம் இணையத்தில் இருப்பது போலவே தெரியாது.

LYNX

இந்த சம்பவம் தான் எனக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் தவிர உலகில் வேறு சில உலாவிகளும் உண்டு என்பதையும் அதனாலும் சில பயன்கள் உண்டு என்பதையும் புரிய வைத்தது. இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு சரியான மாற்று எதுவும் இல்லாத காலம் அது. நெட்ஸ்கேப் நேவிகேட்டர் மரணப்படுக்கையில் கிடந்தது. சஃபாரி விண்டோஸில் வேலை செய்யாது. பீனிக்ஸ், ஓபெரா எல்லாம் பெரும்பாலானோர் (முக்கியமாக இந்தியாவில்) கேள்விப்படாத பெயர். எனவே ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற கதையாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் ஆட்சி செய்து வந்தது.

சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய மகன் மற்றும் மகள் மூலம் ஃபயர்பாக்ஸ் அறிமுகமானது. ஃபயர்பாக்ஸ் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட எந்த விசயத்தில் உசத்தி என்று அப்பொழுது புரியவில்லை என்றாலும் என் குழந்தகள் (அதுவும் அறிவுஜீவி் குழந்தகள் ) சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி ஃபயர்பாக்ஸை சரணடைந்தேன். பின்னர் ஃபயர்பாக்ஸின் Add-ons பற்றித் தெரிய வந்ததும், மொத்தமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மறந்தேன்.

பின்னர் சஃபாரி, ஓபெரா என்று அனைத்தையும் முயற்சித்து ஒவ்வொன்றிலும் ஒரு விசயம் பிடித்துப் போக அனைத்தையும் கலந்து கட்டி உபயோகிக்க ஆரம்பித்தேன். இன்றைக்கும் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க வேண்டும் என்றால் லின்க்ஸ் (Lynx) தான். தொட்டில் பழக்கம்! அனைத்து உலாவிகளையும் உபயோகித்தாலும் ஃபயர்பாக்ஸ் தான் செல்லக் குழந்தை.
இந்த நிலையில் கூகிள் ஒரு உலாவியை உருவாக்கி வருவதாக பேச்சு எழும்பியதும் அதை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு முக்கிய காரணம் கூகிளின் எளிமை. முதன்முதலில் ஜி-மெயில் பார்த்ததும் அதன் வெறுமையைக் கண்டு கொஞ்சம் அரண்டு தான் போனேன். மெயில்களை பகுத்து வைக்க ஃபோல்டர் (folder) கூட இல்லாமல் அலங்காரமற்று மொக்கையாக இருந்தது. பிறகு பழகப் பழக ஜி-மெயிலின் சக்தி புரிய ஆரம்பித்தது. இது கூகிளின் பிற வெளியீடுகளுக்கும் பொருந்தும்.

நேற்று கூகிள் க்ரோம் வெளியிடப்பட்ட இரண்டாவது நிமிடம் அதை தரவிரக்கி உபயோகிக்க ஆரம்பித்தேன். அதைப் பற்றிய சில குறிப்புக்கள் (அப்பாடி ஒரு வழியாக விசயத்துக்கு வந்தாச்சு!)

*எதிர்பார்த்த மாதிரியே பார்க்க வெகு எளிமையாக இருக்கிறது. உலாவி என்ற மென்பொருள் ஒன்று இருப்பது போலவே தோன்றவில்லை.

* மற்ற உலாவிகளுடன் ஒப்பிடும் போது க்ரோம் வேகமாகவே உள்ளது. உலாவியில் இயங்கும் ஜாவாஸ்கிரிப்ட் மொழியின் வேகத்தைப் பரிசோதிக்க கூகிள் சிபாரிசு செய்யும் தளம் இது: http://code.google.com/apis/v8/run.html. கூகிளின் தயாரிப்பை கூகிள் தளத்திலேயே போய் சோதிப்பதா என்று நினைப்பவர்கள் இங்கே செல்லலாம். இரண்டிலும் சோதனை செய்து பார்த்ததில் ஃபயர்பாக்ஸ், சபாரி மற்றும் ஓபெராவை விட க்ரோம் பல மடங்கு வேகமாக இருக்கிறது. (IE பற்றிக் கேட்கவே வேண்டாம். மொத்தமாக படுத்து விட்டது).

*ஒரு கோப்பை தரவிரக்க க்ரோம் எடுத்துக் கொள்ளும் நேரமும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் ஓபெரா அளவுக்கு வேகமாக இருக்காது என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு துல்லியமாக அளந்து பார்க்க என்னிடம் வசதி கிடையாது.

* Web standard எனப்படும் இணைய தரத்திலும் க்ரோம் முந்துகிறது. http://acid3.acidtests.org/ தளத்தில் சோதித்துப் பார்த்த பொழுது க்ரோம் நூற்றுக்கு 78 மதிப்பெண்கள் எடுத்து ஓபெராவிற்கு அடுத்த நிலையில் இருக்கிறது (ஓபெரா = 83/100, ஃபயர்பாக்ஸ் = 70/100, சஃபாரி = 75 / 100, IE6 = 11 / 100).

*பிற உலாவிகளில் இருப்பது போல இணைய தள முகவரி அடிப்பதற்கு ஒரு டப்பா (text box), தேடுவதற்கு ஒரு டப்பா என்றில்லாமல் க்ரோமில் ஒரே டப்பா தான். எனக்கு இது வசதியாகவே இருக்கிறது.

*புதிதாக ஒரு பக்கத்தை திறந்தால் நீங்கள் அடிக்கடி செல்லும் தளங்களை எல்லாம் காட்டுகிறது. அதில் இருந்து நீங்கள் விரும்பும் தளத்துக்கு செல்லலாம். இது வசதியா இல்லை தொல்லையா என்பது நீங்கள் எந்த மாதிரி தளங்களுக்கு அடிக்கடி செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது! :) இது எறக்குறைய ஓபெராவில் இருக்கும் 'Speed Dial' போலத் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஓபெராவில் நீங்கள் விரும்பும் தளங்களை காட்டும் மாதிரி செய்யலாம். க்ரோமில் அது முடியாது.

*நான் ஒரு முறை என் நண்பருக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் அமேசானில் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் என் நண்பருக்கு உலாவியைப் பயன்படுத்தும் போது நான் முன்னமே தேடிய பக்கங்களை பார்த்து விட்டதால் என் திட்டம் தெரிந்து எல்லாம் புஸ்ஸானது! க்ரோமில் இப்பிரச்சனையை தடுக்க வசதி உண்டு. நீங்கள் விரும்பினால் இதற்கான சிறப்பு பக்கத்தில் உலாவுங்கள். நீங்கள் பார்த்த எந்த விபரமும் கணினியில் பதிவாகாது, பிறரும் நீங்கள் எந்த எந்த பக்கங்களை பார்த்தீர்கள் என கண்டுபிடிக்க முடியாது. பிரவுசிங் சென்டர் போன்ற பொது இடங்களில் உலாவும் போது இது மிக வசதியாக இருக்கும். பலான தளங்களை பார்க்கவும் தான். (இதே வசதி சஃபாரியில் 'Private Browsing' என்று உள்ளது).

*விண்டோஸில் உள்ள 'Task Manager' பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். உங்கள் கணினியில் என்ன என்ன மென்பொருட்கள் ஓடுகின்றன, ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு மெமரி மற்றும் ப்ராசசர் பயன்படுத்துகிறது போன்ற தகவல்களைத் Task Managerஐப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதே போன்ற ஒரு Task Manager க்ரோமிலும் உண்டு. நீங்கள் பல தளங்களைப் திறந்து வைத்திருந்தால், எது உங்கள் கணினியை அதிகம் பாதிக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். உங்கள் உலாவி வேகமாக இல்லை என்று தோன்றினால், எந்த தளத்தில் கோளாறு என்று தெரிந்து கொண்டு அதை மட்டும் மூடி விடலாம்.

*பக்கங்களில் தேடும் வசதியும் நன்றாக உள்ளது. இன்டெர்நெட் எக்ஸ்புளோரரில் உலாவும் போது நீங்கள் ஒரு வார்த்தையை அந்தப் பக்கத்தில் தேட வேண்டும் என்றால், அந்த வார்த்தையை முழுவதுமாக தட்டச்சு செய்து Enter அடித்தால் தான் தேடல் ஆரம்பிக்கும். க்ரோமில் நீங்கள் ஒவ்வொரு எழுத்தாக அடிக்க அடிக்க பொருத்தமான வார்த்தைகள் வேறு வண்ணத்தில் தெரிய ஆரம்பித்து விடுகிறது (சஃபாரி போலவே).

*நீங்கள் மற்ற உலவிகளில் 'Tabbed Browsing' மூலம் பல தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் ஒரே ஒரு தளம் தவறாக இயங்கினாலும் மொத்த உலாவியும் திணறும் அல்லது மொத்தமாக நொறுங்கி (க்ராஷ் ஆகி) விடும். க்ரோமில் அந்தப் பிரச்சனை இருக்காது என்று கூகிள் கூறியிருக்கிறது. பிரச்சனைக்குரிய தளம் மட்டுமே க்ராஷ் ஆகும் மற்ற தளங்கள் எல்லாம் உறுதியாக நிற்கும் என்பது கூகிளின் உறுதிமொழி. ஆனால் உலாவியை மொத்தமாக க்ராஷ் ஆகும் வழியை இப்பொழுதே கண்டுபிடித்து விட்டார்கள் (பார்க்க http://evilfingers.com/advisory/google_chrome_poc.php). பீட்டா வெர்ஷன் என்பதால் மன்னித்து பொறுத்தருள்வோம்.

*க்ரோம் பயன்படுத்துவதின் உங்கள் கணினியில் ஆபத்தான மென்பொருளை நிருவி அழிச்சாட்டியம் செய்யும் malware தளங்கள் மற்றும் உண்மையான தளம் போல நடித்து உங்களிடமிருந்து தகவல்களை திருடும் போலியான phishing தளங்களின் தொல்லை பெருமளவு குறையும் என நம்பலாம்.

உபயோகித்த வரையிலும் நான் கண்ட பிரச்சனைகள்

-சில தளங்களில் scrolling செய்தால் மூன்றாவது கியரில் வண்டி ஸ்டார்ட் செய்வது போல ஜெர்க் அடிக்கிறது.

-சில தளங்களில் இருந்து வார்த்தைகளை காப்பி செய்ய முடிவதில்லை (உதாரணம்: தினமலர்)

-குமுதம், விகடன், தினமலர் போன்ற தளங்கள் திணறுகின்றன. அதிகப்படியான flash plug-in இருப்பதினால் என்று நினைக்கிறேன்.

-ஒரு பக்கத்தை புக்மார்க் செய்வது எளிதாக இருந்தாலும், புக்மார்க் செய்த பக்கத்தை திறக்க தலையை சுத்தி மூக்கைத் தொடுவதை போல உள்ளது.

-இப்போதைக்கு க்ரோம் விண்டோஸில் மட்டுமே வேலை செய்யும். லினக்ஸ் மற்றும் மேக் மக்கள் பொறுத்திருக்க வேண்டியது தான்.

-க்ரோம் வந்ததில் இருந்து என்னுடைய ஃபயர்பாக்ஸுக்கு காய்ச்சல். ரொம்பவே தூங்கி வழிகிறது. க்ரோமை நிறுத்தினால் ஃபயர்பாக்ஸ் சுறுசுறுப்பாக எழுந்து விடுகிறது. இது குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையா இல்லை க்ரோம் தான் ஃபயர்பாக்ஸுடன் மல்லுக்கட்டுகிறதா என்று தெரியவில்லை. உறுதியாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

முடிவாக,
பீட்டா வெர்சன் மட்டுமே என்றாலும் பெரிதாக குறை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. கூகிள் தளங்கள் க்ரோமில் நன்றாக இயங்கும் என்று எனக்குப் படுவதால், தற்போதைக்கு கூகிள் தளங்களை (ஜி-மெயில், ரீடர், மேப்ஸ், டாக்குமெண்ட்ஸ் போன்றவை) க்ரோமிலும், மற்றதை ஃபயர்பாக்ஸிலும் உலாவலாம் என்று இருக்கிறேன்.

க்ரோமின் ஆணை மூலம் ஓப்பன் சோர்ஸாக உள்ளதால், ஃபயர்பாக்ஸ் போல விரைவாக வளர்ச்சி அடையும் என நம்பலாம். மக்கள் extension எழுத ஆரம்பித்து விட்டால் நமக்கு கொண்டாட்டம் தான். விஜயகாந்த் வருகையால் பாதிப்படைந்தது தி.மு.கவா இல்லை அ.தி.மு.கவா என்று ஆராய்வது போல, க்ரோமினால் பாதிப்பு இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கா இல்லை ஃபயர்பாக்ஸுக்கா என்று சுவாரஸ்யமான பட்டிமன்றங்களும் ஆராய்ச்சிகளும் நடக்கும்.

க்ரோமின் பயன்பாட்டு விதிமுறைகள் (Terms of Service) பலரையும் திகிலடைய வைத்திருக்கிறது (http://yro.slashdot.org/article.pl?sid=08/09/03/0247205 , http://news.cnet.com/8301-17939_109-10030522-2.html). எனக்கென்னவோ இதை கூகிள் மாற்றி விடும் என்று தோன்றுகிறது.

Adblock என்பது ஃபயர்பாக்ஸ் அன்பர்கள் பலரும் விரும்பி உபயோகிக்கும் ஒரு Add-on ஆகும். இது தளங்களில் வரும் தேவையற்ற விளம்பரங்களை வடிகட்டி நமது பார்வைக்கே வராமல் செய்து விடும். விளம்பரங்களின் மூலம் பணம் அள்ளும் கூகிள், இப்படிப்பட்ட ஒரு விசயத்தை க்ரோமில் அனுமதிக்குமா? இதை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் கூகிள் அதை எப்படி எதிர் கொள்ளும் என்பது எல்லாம் இன்னும் விடை தெரியாத கேள்விகளே.

நீங்கள் அணிந்திருக்கும் அண்டர்வேரின் நிறம் என்னவென்று சொல்லக் கூடிய சக்தியினை இப்பொழுதே கொண்டுள்ள கூகிளாண்டவர், க்ரோமின் துணையுடன் அந்த அண்டர்வேரை நீங்கள் எங்கிருந்து திருடினீர்கள் என்றும் அதை துவைத்து எத்தனை நாள் ஆயிற்று என்றும் ஊருக்கெல்லாம் விளம்பரப்படுத்தி காசு பார்க்கும் அபாயமும் இருக்கிறது.

உலாவி என்பது இணையத்தில் படிக்கவும் பார்க்கவும் மட்டுமே என்று இருந்தது ஒரு காலம். இப்பொழுது உலாவியும், நல்ல இணைய இணைப்பும் இருந்தால் முக்கால்வாசி வேலையை இணையத்தில் வைத்தே முடித்து விடலாம். மீதி கால்வாசி வேலைக்குத் தான் நமக்கு கணினி, ஆப்பரேட்டிங் சிஸ்டம், மைக்ரோசாப்ட் ஆபீஸ், போட்டோஷாப் போன்ற மென்பொருட்கள் எல்லாம் தேவை. அந்த கால்வாசி சுமையையும் இறக்கி 'சர்வம் இணைய மயம்' என்று செய்வதே கூகிளின் குறிக்கோள். அதில் கூகிள் க்ரோம் ஒரு முக்கிய படி.

ஒரு கேள்வி: Chrome என்பதை எப்படி தமிழில் எழுதுவது? சிலர் குரோம் என்று எழுதுகிறார்கள். சிலர் வம்பே வேண்டாம் என்று Chrome என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். எனக்கு என்னமோ உச்சரிப்பின் படி பார்த்தால் க்ரோம் என்பது தான் Chrome-இன் சரியான் தமிழாக்கமாக படுகிறது. இந்த மாதிரி விசயத்தில் எல்லாம் இலக்கணம் பார்க்கத் தான் வேண்டுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?