Friday, January 27, 2012

மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்: ............வேர்க்கடலை கட்லெட்:

மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்



தேவையானவை: முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ (கலந்தது) - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், சுத்தம் செய்த முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி... உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

அல்சர் பிரச்னை இருப்பவர்களுக்கு இது சிறந்த கை மருந்து!

- வே.சித்ரா வேடியப்பன், திருவண்ணாமலை

வேர்க்கடலை கட்லெட்

தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 3, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 5, பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - கொத்தமல்லி - கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பொடி செய்த வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இந்தக் கலவை ஆறியவுடன் சிறு சிறு வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.

பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். தட்டிய வடைகளை அதில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் இதற்கு சரியான சைட் டிஷ்!

- சுபஸ்ரீ பரத்வாஜ், வளசரவாக்கம்

30 வகை பக்கோடா

ட்ரை ஃப்ரூட் பக்கோடா

தேவையானவை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா பருப்பை ஒன்றிரண்டாகப் பொடித்து, அதனுடன் உலர் திராட்சை, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

சோள ரவை பக்கோடா

தேவையானவை: சோள ரவை - அரை கப் (100 கிராம்), கடலை மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: சோள ரவையுடன், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

ராகி பக்கோடா

தேவையானவை: கேழ்வரகு மாவு - 100 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு , பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகு மாவுடன், அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி - இஞ்சி - கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.

பாலக் பக்கோடா

தேவையானவை: பொடியாக நறுக்கிய பாலக் கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - சிறிதளவு, கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பச்சை மிளகாய் - 4, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய பாலக் கீரை, உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றுடன் அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து, நெய் விட்டு பிசிறி, தண்ணீர் விட்டு கெட்டி யாகக் கலந்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

வெண்டைக்காய் பக்கோடா

தேவையானவை: நறுக்கிய வெண்டைக்காய் - ஒரு கப் (சற்று நீள வடிவில் நறுக்கி, குறுவாட்டில் நான்கு துண்டுகளாக மீண்டும் நறுக்கிக் கொள்ளவும்), கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வெண்டைக்காயுடன் வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசிறிக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை: காய்ந்த, வறுக்காத வேர்க்கடலை - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையுடன் வெண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசிறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, அதில் கலவையில் சிறிது எடுத்து உதிர்த்தாற் போல் போட்டு, பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் கழித்து கரண்டியால் கிளறினால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக நன்றாக வரும்.

எள் பக்கோடா

தேவையானவை: கறுப்பு எள் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 5, மைதா மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுத்து அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். அதில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர்விட்டு கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, கலந்த மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

மெது பக்கோடா

தேவையானவை: வெங்காயம், கடலை மாவு - தலா 100 கிராம், உருளைக்கிழங்கு - ஒன்று, அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலக்கவும். மாவு கலவையை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

கரம் பக்கோடா

தேவையானவை: பெரிய வெங்காயம் - 250 கிராம், கடலை மாவு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை நீள வடிவில் மெல்லியதாக நறுக்கிக் கொண்டு, அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பிசிறவும். சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலந்து, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

மிக்ஸ்டு வெஜிடபிள் பக்கோடா

தேவையானவை: நீளவடிவில் நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், கோஸ், வெங்காயம், குடமிளகாய்) - ஒரு கப், கடலை மாவு, சோள மாவு - தலா 50 கிராம், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: நீளவாக்கில் நறுக்கிய காய்கறிகளுடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசிறி, பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

நெல்லிக்காய் பக்கோடா

தேவையானவை: துருவிய நெல்லிக்காய் - அரை கப், கோதுமை மாவு, கடலை மாவு - தலா கால் கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: துருவிய நெல்லிக்காயுடன் அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு (சாட் மசாலாத்தூளில் உப்பு இருக்கும்) சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

இஞ்சி பக்கோடா

தேவையானவை: துருவிய இஞ்சி - அரை கப், கோதுமை மாவு, பயத்தம் மாவு - தலா கால் கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: துருவிய இஞ்சியுடன் கறிவேப்பிலை, கோதுமை மாவு, பயத்தம் மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

காராமணி பக்கோடா

தேவையானவை: காய்ந்த காராமணிப்பயறு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: காராமணிப்பயறை 5 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் தண்ணீரை வடித்து... காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதில் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, அரிசி மாவை சேர்த்து கெட்டியாகக் கலந்து, காயும் எண்ணெயில் சிறு சிறு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

சேமியா பக்கோடா

தேவையானவை: சேமியா - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், உப்பு - ­தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க ­தேவையான அளவு.

செய்முறை: சேமியாவுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு பேஸ்ட், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு சிறு சிறு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

மசாலா பக்கோடா

தேவையானவை: பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - 2, கசகசா - ஒரு டீஸ்பூன், மைதா மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, பூண்டு - 2 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா ஆகியவற்றுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன், அரிசி மாவு, வெங்காயம், பொடித்த மசாலா, உப்பு சேர்த்து பூண்டு, இஞ்சியை தட்டிப்போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து கொள்ளவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

சோயா பக்கோடா

தேவையானவை: சோயா உருண்டைகள் - 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: சோயா உருண்டைகளை சுடுநீரில் போட்டு எடுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அதனுடன் வெங்காயம், கோதுமை மாவு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

மஷ்ரூம் பக்கோடா

தேவையானவை: மஷ்ரூம் - 6, கடலைப்பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 4, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: மஷ்ரூமை சுத்தம் செய்து, வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, மஷ்ரூம் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து... காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

சன்னா பக்கோடா

தேவையானவை: சன்னா (வெள்ளை கொண்டைக்கடலை) - 250 கிராம், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் மூன்றும் சேர்த்து அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை 4 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைக்கவும். பின்னர் அதில் கொத்தமல்லி - புதினா - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து... சீரகம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, அதில் மாவை கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

ஓட்ஸ் பக்கோடா

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட், பீட்ரூட், வெங்காயம் எல்லாம் சேர்ந்து - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கேரட், பீட்ரூட், வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றுடன் ஓட்ஸ், கடலை மாவு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

புதினா பக்கோடா

தேவையானவை: புதினா - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், பச்சை மிளகாய் - 3, ரவை - ஒரு டீஸ்பூன், உப்பு ­- தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, ரவை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

தானிய பக்கோடா

தேவையானவை: தானியங்கள் (எள், கொள்ளு, பச்சைப் பயறு, கறுப்பு உளுந்து, கோதுமை, அரிசி, கடலை, மொச்சை, துவரை) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: தானியங்களை ஒன்றாக தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைத்து பெருங்காயத்தூள் கொத்தமல்லி சேர்த்து... காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக் கவும்.

சில்லி பக்கோடா

தேவையானவை: பஜ்ஜி மிளகாய் - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன், உப்பு ­- தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பஜ்ஜி மிளகாயை சிறு நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பின்னர் அதில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, ஆம்சூர் பவுடர், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

பனீர் பக்கோடா

தேவையானவை: பனீர் துண்டுகள் - சிறிதளவு, மைதா மாவு - கால் கப், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், சில்லி சாஸ், சோயா சாஸ், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவு, சோள மாவுடன் அனைத்து சாஸ்களையும் சேர்த்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து, கடைசியாக பனீர் துண்டுகளை சேர்த்துப் பிசிறி எடுக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

பிரெட் பக்கோடா

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 3, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு எல்லாம் சேர்ந்து - அரை கப், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டை சற்று பெரிய துண்டுகளாக செய்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து மைய அரைத்து எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். கலவையை பிரெட்டில் தடவி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புளிப்பு பக்கோடா

தேவையானவை: துருவிய மாங்காய் - 4 கப், பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய மாங்காய், உப்பு, பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

சைனீஸ் பக்கோடா

தேவையானவை: வெங்காயத்தாள் (நறுக்கியது) - கால் கப், மைதா மாவு - அரை கப், அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், சோயா சாஸ், வினிகர் - தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவில் வெங்காயத்தாள், உப்பு, அஜினமோட்டோ, வினிகர், மிளகுத்தூள், சோயா சாஸ், சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

பழ பக்கோடா

தேவையானவை: துண்டுகள் செய்த பழங்கள்(ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம்) - ஒரு கப் , ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பால் பவுடர் - கால் கப், மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



செய்முறை: பழங்களுடன் ஏலக்காய்த்தூள், பால் பவுடர், மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து... காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

சீஸ் பக்கோடா

தேவையானவை: துருவிய சீஸ் - கால் கப், மைதா மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: துருவிய சீஸ் உடன் மைதா மாவு, சோள மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும்.

வாழைப்பூ பக்கோடா

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், அரிசி - 2 டீஸ்பூன், காய்ந்த

மிளகாய் - 6 , சோள மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்புடன் அரிசி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, பின்னர் வாழைப்பூ, உப்பு, கறிவேப்பிலை, சோள மாவு, பெருங்காயத்தூள்சேர்த்து நன்கு கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

கார் பராமரிப்பு & மைலேஜ் டிப்ஸ்

உங்களின் கனவு கார் கைக்கு வந்துவிட்டதா? வாழ்த்துக்கள்! கார் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செலவழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங்களை முழுமையாக அனுபவிக்க முடியும். நடு வழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மைலேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச்னையால் திக்குமுக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கும். இதெல்லாம் காரால் வரும் பிரச்னைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் விட்டதால் ஏற்படும் பிரச்னைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.



காரின் பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், கணிசமான பணத்தை மிச்சம் செய்ய முடியும் என்பதோடு, கசப்பான அனுபவங்களில் இருந்தும் தப்பிக்கலாம்!

உங்கள் காருக்கு நீங்கள்தான் டாக்டர். காரைப் பளிச்சென்று வைத்திருப்பது மட்டுமல்ல... காருக்கு சின்னச் சின்னப் பிரச்னைகள் என்றால், அதை உடனடியாக நீங்களே களைந்து, சர்வீஸ் சென்டரிடம் இருந்து 'பெரிய பில்’ வராமல் தடுக்க முடியும். உங்கள் காரைச் சரியாகப் பராமரிக்க ஒரு ஞாயிற்றுக்கிழமை போதும்! ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் செலவழித்தால், உங்கள் கார் எப்போதும் புத்தம் புதுசாக ஜொலிக்கும்!

கார் பராமரிப்புக்கு என்று

குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் ஒதுக்குங்கள். அதை எக்காரணம் கொண்டும் வேறு எதற்காகவும் செலவு செய்யாதீர்கள். அப்போதுதான் சர்வீஸ் பில்லைப் பார்க்கும்போது, 'இவ்வளவு பணம் கட்டணுமா?’ என்று ஷாக் ஆக மாட்டீர்கள்.

காரைக் கையாள்வதற்கு முன், அதன் உரிமையாளர் கையேட்டினை (யூசர் மேனுவல்) முழுவதும் படியுங்கள்.

எப்போதுமே குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் மட்டுமே பெட்ரோல் நிரப்புவது நல்லது. என்ன பெட்ரோல் உங்கள் காருக்குச் சரியாக இருக்கும் என்று யூசர் மேனுவலிலேயே இருக்கும்.அதற்கேற்றபடியான பெட்ரோல் நிரப்புங்கள். விலை உயர்ந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதைவிட, தரமான பெட்ரோல் பங்க்கில் தொடர்ந்து பெட்ரோலை நிரப்புவதே மேல்! விலை அதிகமான பெட்ரோலை உபயோகப்படுத்துவதால், காரின் மைலேஜ் அதிகரித்துவிடாது. பர்ஸின் கனம்தான் குறையும்.

பெட்ரோல் நிரப்பிவிட்டு, மூடியை பங்க் ஊழியர் சரியாக மூடுகிறாரா என்று செக் செய்யுங்கள். மூடி சரியாக மூடவில்லை என்றால், பெட்ரோல் ஆவியாக வெளியேறிவிடும். அதனால் எப்போதுமே பெட்ரோல் மூடி டைட்டாக மூடப்பட்டிருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.

முடிந்தவரை காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். காரை வெயிலில் நிறுத்துவதால், காரின் கேபின் சூடாகி... சீட் கவர் துவங்கி பிளாஸ்டிக் கவர் வரை சீக்கிரத்திலேயே பழசாகிவிடும்.

அனைத்து கார்களிலுமே, ஒரு குறிப்பிட்ட கி.மீக்கு மேல் ஆயில், ஏர் ஃபில்டர், பிரேக் பேட் போன்றவற்றை மாற்ற வேண்டும் என்பது கட்டாயம்.

எப்போதுமே அலெர்ட்டாக இருங்கள். காருக்குள் ஏதாவது தேவையில்லாத சத்தம் வருகிறதா? அல்லது ஏதாவது ஒயர்கள் எரிவது போன்ற வாசனை வருகிறதா என்று கவனியுங்கள். இது போன்ற பிரச்னைகள் ஏதாவது இருப்பின், உடனடியாக சர்வீஸ் சென்டரை அணுகுங்கள். காரில் மியூசிக் சிஸ்டம் அல்லது வேறு எலெக்ட்ரிக்கல் விஷயங்கள் எதையாவது நீங்கள் வெளி மெக்கானிக்குகளை வைத்து மாட்டினால், தரமான ஒயர்களைப் பயன்படுத்தச் சொல்லுங்கள்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் யாரிடமாவது காரைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் காரில் நீங்கள் உணராத பிரச்னைகள் ஏதாவது இருக்கிறதா என்பது தெரிய வரும்!

ஹெட் லைட்டுகள் ஒழுங்காக ஒளிர்கின்றனவா என்று பாருங்கள். ஹெட் லைட் ஒளிரவில்லை என்றால், நீங்களே ஃப்யூஸ் போன பல்பை அகற்றிவிட்டு, புதியதைப் பொருத்திவிட முடியும். விண்ட் ஸ்கிரீன் வாஷர், பவர் ஸ்டீயரிங் ஆயில், கூலன்ட், பிரேக் ஆயில் ஆகியவை சரியான அளவு இருக்கிறதா என்று தவறாது செக் செய்யுங்கள். எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும் வரை காத்திருக்க வேண்டாம்.

வைப்பர் பிளேடுகள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதை தினமும் சுத்தப்படுத்துங்கள். இல்லையென்றால், அவை விண்ட் ஸ்கிரீனில் கோடுகள் போட்டு பர்ஸைப் பதம் பார்த்துவிடும். வாஷர் ஜெட்டுகள், சரியாக கண்ணாடியில்தான் தெளிக்கிறதா என்று கவனிக்கவும். இல்லையென்றால், அதை அட்ஜஸ்ட் செய்யுங்கள்.

இன்ஜின் பராமரிப்பு...

இப்போது வரும் நவீன கார்களின் இன்ஜின், முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலம் இயக்கப்படுகிறது. அதனால், ட்யூனிங்... இன்ஜின் சார்ந்த விஷயங்களை நாமே செய்ய முடியாது. எனவே, இன்ஜினில் எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்படாமல், காரை நல்ல முறையில் ஓட்ட வேண்டும். மேலும், இன்ஜினைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வாரத்துக்கு ஒருமுறை பானெட்டைத் திறந்து இன்ஜின் மற்றும் அதன் பாகங்களை நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்.

வாகன உரிமையாளர் கையேட்டில் குறிப்பிட்டவாறு ஆயில் மற்றும் கூலன்ட்டை மாற்றவும்.

உங்கள் இன்ஜினில் பொருத்தப்பட்டுள்ள ஆயில் பம்ப், இன்ஜினில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ஆயிலைக் கொண்டு சேர்க்க சில பல விநாடிகள் ஆகும். எனவே, காரை ஸ்டார்ட் செய்தவுடன் 30 முதல் 60 விநாடிகள் வரை ஐடிலிங்கில் வைத்திருந்து, அதன் பிறகு ஓட்ட ஆரம்பியுங்கள். இதனால் இன்ஜின் பாகங்களின் தேய்மானம் குறையும். அதேபோல் இன்ஜினை ஆஃப் செய்வதற்கு முன்பும் 30 முதல் 60 விநாடிகள் ஐடிலிங்கில் விட்டு ஆஃப் செய்வது நல்லது!

சூடாக இருக்கும் இன்ஜினைச் சுற்றி எந்தச் சமயத்திலும் ஈரமான துணியை வைத்துத் துடைக்காதீர்கள். இதனால், விபத்துகள் நிகழ வாய்ப்புகள் அதிகம்.

சமதளத்தில் காரை நிறுத்தி இன்ஜின் ஆயில் சரியான அளவுக்கு இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். இதற்கு 'டிப் ஸ்டிக்'கைப் பயன்படுத்துங்கள்.

ஆயில் மாற்றும்போது, ஆயில் ஃபில்டரையும் சேர்த்து மாற்றிவிடுங்கள். இதனால், இன்ஜின் ஸ்மூத்தாகச் செயல்படும். இல்லையென்றால், ஃபில்டரில் தங்கி இருக்கும் பிசிறுகளால் இன்ஜின் கெட்டுப்போகும் சூழ்நிலை ஏற்படும். பிக்-அப் சரியாக இல்லை என்றாலோ, மைலேஜ் குறைந்தாலோ, சைலன்சர் வழியாக ஆயில் ஒழுகினாலோ, ஏர்ஃபில்டர் மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.

இன்ஜினில் பிரச்னைகள் வருவதற்கு முக்கியக் காரணம் ஓவர்ஹீட்! கூலன்ட் சரியான அளவு இல்லையென்றாலும், ரேடியேட்டரின் முன்பகுதியில் காற்று புகாமல் அடைத்திருந்தாலும் இன்ஜின் ஓவர்ஹீட் ஆகும்.

இன்ஜின் ஓவர்ஹீட் ஆனால், டேஷ்போர்டில் இருக்கும் டெம்ப்ரேச்சர் முள் எப்போதும் இல்லாத அளவுக்குக் கூடுதலாகும். ரேடியேட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் ஓடிக்கொண்டே இருந்தாலோ, கூலன்ட் ஒழுகினாலோ... உடனடியாக காரை சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்லுங்கள்.

பேட்டரி சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். பேட்டரியின் ஆயுள் குறைந்தாலோ, ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தாலோ பேட்டரியைச் சரி பாருங்கள். டிஸ்டில்டு வாட்டர் அளவைக் கவனித்து அதை நிரப்புங்கள். கேபிள், விளக்குகள் ஏதாவது பழுதாகி இருந்தால் மாற்றி விடுங்கள். பேட்டரியில் லீக் இருந்தால், பேட்டரியையே மாற்றுங்கள்.

கியர் பாக்ஸ்

கியர் பாக்ஸ் மிக மிக முக்கியமான பாகம். டிரான்ஸ்மிஷன் ஆயில் சரியான அளவு இருக்கிறதா என்று பாருங்கள். கிளட்ச், கியர் ஷிஃப்ட் ஆகியவற்றை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

ஏ.ஸி

கார் ஏ.ஸியை ரெகுலராகக் கவனிக்க வேண்டும். காரில் இருந்து சரியான அளவுக்குக் குளிர்ந்த காற்று வரவில்லை என்றால், உடனடியாக அதைச் சரி செய்யச் சொல்லுங்கள். ஏ.ஸி காற்று ஒழுங்காக வராததற்கு கேஸ் லீக், பெல்ட் டென்ஷன், கம்ப்ரஸர் லீக் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

பிரேக்

மிகவும் சாஃப்ட்டான பிரேக் பெடல், பிரேக் லைட் எரியாமல் போவது, பிரேக்கில் இருந்து விதவிதமான சத்தங்கள் எழும்புவது... இதெல்லாம் பிரேக்கில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான அடையாளங்கள். பிரேக்கின் பாகங்களை மாற்றியோ... அல்லது பிரேக் ஆயிலை மாற்றியோ இந்தப் பிரச்னைகளைச் சரி செய்துவிட முடியும். 'இப்போதுதானே பிரேக் ஷூ மாற்றினோம்’ என்று நினைக்கக் கூடாது. பிரேக் ஷூ, பிரேக் பேட் ஆகியவை விரைவில் தேயும் தன்மை கொண்டவை. அதனால் சத்தம் கேட்க ஆரம்பித்தவுடனே மாற்றிவிடுவது நல்லது.



உள்ளே...

காருக்குள் இருக்கும் தூசு, மண், குப்பைகளைச் சுத்தம் செய்யுங்கள்! தேவையில்லாத பேப்பர், டோல் டிக்கெட், சிடி என அனைத்தையும் வெளியே எடுங்கள். இப்போது காரின் உள்பக்கம் எந்த நிலையில் இருக்கிறது என்று பாருங்கள். வெறும் தூசு மட்டும்தானா அல்லது அழுக்குக் கறை, துரு ஆகியவை படிந்து மோசமான நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள்.

கார் வைத்திருக்கும் பல குடும்பங்களுக்கு... கார்தான் சிப்ஸ், சிடி, டிஃபன் பாக்ஸ் போன்ற பொருட்களை வைத்துக்கொள்ளும் இடம்! உணவுப் பொருட்கள் மற்றும் தேவையில்லாத பொருட்களை வைக்கும்போது, காருக்குள் தேவையில்லாத அழுக்குகள் சேர்ந்து விடும் என்பதோடு, காருக்குள் கெட்ட வாசனை அடிக்க ஆரம்பித்துவிடும்.

வெளியே...

கார் பராமரிப்பில் மிகவும் முக்கியமான, சுலபமான விஷயம்... கார் வாஷிங்தான்! காரைத் துடைத்துச் சுத்தமாக வைப்பதுதான் அடிப்படைப் பராமரிப்பு! வாரம் ஒருமுறை காரை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்யுங்கள்.

எப்போதுமே காரை நிழலான இடத்தில் வைத்துச் சுத்தம் செய்யுங்கள். காட்டன் டவல்களையே காரைத் துடைப்பதற்குப் பயன்படுத்துங்கள். காரின் உள்ளலங்காரத்தைக் குலைத்து விடாத வகையில், தரமான பாலீஷ் பயன்படுத்துவது அவசியம். உதாரணத்துக்கு, லெதர் சீட்டை பிளாஸ்டிக் பாலீஷ் கொண்டு சுத்தம் செய்தால் காரியமே கெட்டு விடும்!

முதலில் சாஃப்ட் வேக்யூமை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்ஸோல், ஏ.ஸி வென்ட், மீட்டர் டயல்களைச் சுத்தம் செய்யுங்கள். அடுத்ததாக, காரின் மேற்கூரையைச் சுத்தம் செய்யுங்கள். வேக்யூமை வைத்துச் சுத்தம் செய்தபிறகு கொஞ்சம் நனைத்த காட்டன் டவலை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்சோல் அனைத்தையும் துடைத்தெடுங்கள். கப் ஹோல்டர், சீட்டுக்கு அடியில் பெரிய வேக்யூமை வைத்து காரை முழுவதுமாகச் சுத்தப்படுத்துங்கள்.

ஜாம், சாஸ் போன்ற கறைகள் சீட்டில் படிந்துவிட்டால், எலுமிச்சைச் சாறில் உப்பைக் கலந்து தடவுங்கள். கறைகள் காணாமல் போய்விடும்!











காரின் பர்ஃபாமென்ஸுக்கு மிக மிக முக்கியமான விஷயம் டயர்! காரின் எடையைத் தாங்குவதோடு, மேடு பள்ளங்களில் குதித்து எழும்புவதும் டயர்களின் முக்கியமான வேலை. டயரில் பிரச்னை என்றாலும், அது இன்ஜினில் எதிரொலிக்கும். டயருக்கும், இன்ஜினுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்டால், டயர்களும் இன்ஜினும் இணைந்து இயங்கினால் தான் கார் சீராக இயங்கும்.

டயரை மாற்றுங்கள்: 8,000 கி.மீக்கு ஒருமுறை முன் வீல்களைப் பின் பக்கத்திலும், பின் வீல்களை முன் பக்கத்திலும் மாற்றிப் பொருத்த வேண்டும். முன் வீல்கள் சீக்கிரத்தில் தேயும். இதுபோல் மாற்றிப் பொருத்தினால், டயர்களின் ஆயுள் நீடிக்கும்!

டயர் பிரஷர்: வாரத்துக்கு ஒருமுறை டயரில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். காற்றின் அளவு சரியாக இல்லையென்றால், மைலேஜ், கையாளுமை மற்றும் பயண சொகுசில் சிக்கல்கள் வரும்! வேகமாகப் போகும்போது கையில் அதிர்வுகள் அதிகமாகத் தெரிந்தால், டயர்களில் காற்று குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஓவர் வெயிட்: காருக்குள் தேவையான பொருட்களை மட்டுமே வைத்திருங்கள். தேவையில்லாத பொருட்களைப் போட்டு வைக்கும் குடோனாக காரைப் பயன்படுத்தாதீர்கள். காரின் எடை கூடக் கூட, ஓடும் காரின் டயர்கள் ஓவர் ஹீட் ஆகும். அதனால், டயர்கள் சீக்கிரத்தில் பழுதடைந்து, மைலேஜும் குறையும்.

ஸ்பீடு: ஓவர் ஸ்பீடும் டயர்களின் ஆயுளைப் பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட வேகத்தைத்தான் டயர்கள் தாக்குப் பிடிக்கும். அதிகப்படியான வேகத்தால் டயர்கள் ஓவர் ஹீட்டாகி வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.

காரை சர்வீஸ் செய்யக் கொண்டு போகும் முன், அதன் ஓனர்ஸ் மேனுவலை நன்றாகப் படியுங்கள். ஓனர்ஸ் மேனுவல், காரைத் தயாரித்த இன்ஜினீயர், டெக்னீஷியன்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், எல்லோரும் புரிந்து கொள்ளும்படி இதில் டெக்னிக்கல் விஷயங்களைச் சுலபமாகவே விளக்கி இருப்பார்கள். அதனால், இதைப் படிப்பது சுலபமே!

காரை சர்வீஸ் செய்ய, நீங்களே சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டு செல்லுங்கள்! அப்போது தான் காரில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை சர்வீஸ் அட்வைஸர்களிடம் சரியாகச் சொல்ல முடியும்! ஓனர்ஸ் மேனுவலை நீங்கள் ஒருமுறை படித்துவிட்டுப் போகும்போது, என்னென்ன விஷயங்களை மாற்ற வேண்டும்; எவற்றையெல்லாம் மாற்றத் தேவையில்லை என்பது உங்களுக்கே தெளிவாகப் புரிந்து விடும்.

உதாரணத்துக்கு, 20,000 கி.மீ.யில் மாற்றப்பட வேண்டிய கியர் பாக்ஸ் ஆயிலை, சர்வீஸ் அட்வைஸர் 10,000 கி.மீ.யிலேயே மாற்றச் சொன்னால், அவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.



ஸ்பார்க் ப்ளக்கை மாற்றுவது எப்படி?

பெட்ரோல் இன்ஜினில் மட்டும்தான் ஸ்பார்க் ப்ளக்குகள் இருக்கும். டீசல் கார்களில் இருக்காது. ஸ்பார்க் ப்ளக்கினுள் தூசு, அழுக்குகள் சேர்ந்தாலோ, தனது ஆயுளின் இறுதிக் கட்டத்தில் இருந்தாலோ, கார் ஒழுங்காக ஸ்டார்ட் ஆகாமல் மிஸ் ஃபயர் ஆகும். அதனால், மைலேஜும் குறையும்; அதிகப்படியான புகையும் வெளியேறும். 15,000- 20,000 கி.மீ.யில் ஸ்பார்க் ப்ளக்குகளை மாற்றிவிடுவது நல்லது!

4 சிலிண்டர்கள் கொண்ட இன்ஜின் என்றால், நான்கு ஸ்பார்க் ப்ளக்குகள் இருக்கும். ஸ்பார்க் ப்ளக்கை அகற்றி விட்டு, நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். இதனால், அழுக்குகள் எதுவும் இன்ஜின் சிலிண்டருக்குள் நுழையாது.

பழுப்பு நிறம் படிந்த ஸ்பார்க் பிளக்குகள் என்றால், பிரச்னை இல்லை என்று அர்த்தம். அதுவே ஆயில் அதிகமாகப் படிந்தது என்றால், பிஸ்டனில் இருக்கும் ஆயில் கன்ட்ரோல் ரிங்ஸில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். உடனடியாக இதை சர்வீஸ் சென்டரில் கொடுத்துச் சரி செய்யச் சொல்லுங்கள். ஸ்பார்க் ப்ளக் அதிக அழுக்காக இருந்தாலோ, கீறல் இருந்தாலோ உடனடியாக அதை மாற்றி விடுவது நல்லது.

நீங்கள் புதிதாக வாங்கிப் பொருத்தும் ஸ்பார்க் ப்ளக்கின் அளவு, பழைய ஸ்பார்க் ப்ளக்கோடு பொருந்தி இருக்கிறதா என்று ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள். மீண்டும் ஸ்பார்க் ப்ளக்கை அதற்குரிய டூல்ஸ் கொண்டு மேனுவலில் குறிப்பிட்டுள்ளது போலத் திருகுங்கள்.

ஆயில் மாற்றுவது எப்படி?

எரிபொருள் - கார் இயங்குவதற்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதற்கு இன்ஜின் ஆயில் மிக மிக முக்கியம்! அதனால், மேனுவலில் சொல்லி இருப்பதைப்போல, குறிப்பிட்ட கி.மீ.க்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்ற மறக்காதீர்கள். முதலில் டேங்கினுள் இருக்கும் ஆயிலை வெளியேற்றுவதற்காக, காரை ஸ்டார்ட் செய்து இன்ஜினைச் சூடாக்குங்கள். இதன் மூலம் ஆயில் சூடேறி இளகிவிடும். இதனால், ஆயிலை வெளியேற்றுவது சுலபம். இன்ஜினை ஆஃப் செய்து, ஆக்ஸில் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துவிட்டு, 'ட்ரைன் நட்’டை அகற்றி ஆயிலை வெளியேற்றுங்கள். ஆயில் ஃபில்டரை, 'ஆயில் ஃபில்டர் ரிமூவர்’ வைத்து அகற்றுங்கள்.

புதிய ஆயில், சரியான எடை மற்றும் விஸ்காஸிட்டி கொண்டதுதானா என்று செக் செய்துகொள்ளுங்கள். கொஞ்சம் ஆயிலை ஃபில்டர் சீலின் மீது தடவுங்கள். ஓனர்ஸ் மேனுவலில் எந்த அளவுக்கு ஆயில் நிரப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆயிலை நிரப்புங்கள்.

இன்ஜின் டிப் ஸ்டிக்கை எடுத்து, எவ்வளவு ஆயில் இருக்கிறது என்பதை செக் செய்து கொள்ளுங்கள். சரியான அளவு வரும் வரை ஆயிலை நிரப்புங்கள்.

பேட்டரியை மாற்றுவது எப்படி?

கார் பேட்டரியை மாற்றுவது சுலபமான விஷயம் அல்ல. ஆனால், எளிமையான வழிகளைப் பின்பற்றினால், சுலபமாக பேட்டரியை மாற்ற முடியும்.

முதலில், நெகட்டீவ் அதாவது மைனஸ் குறியுடன் இணைக்கப்பட்டுள்ள கேபிளின் இணைப்பை அகற்றுங்கள். அதேபோல், ப்ளஸ் குறியுடன் இணைக்கப்பட்டுள்ள சிவப்பு நிற கேபிளையும் அகற்றுங்கள்.

இப்போது பேட்டரியை வெளியே எடுக்கலாம். பேட்டரி கனமாக இருப்பதால் வெளியே எடுக்கும்போது கவனம் தேவை.

பேட்டரி வைத்திருந்த இடம் அழுக்காக இருந்தால், அதை நன்றாகச் சுத்தப்படுத்துங்கள்.

புதிய பேட்டரியை ஏற்கெனவே பேட்டரி இருந்த இடத்தில் வைத்துவிட்டு, டெர்மினல்களில் பெட்ரோலியம் ஜெல்லி தடவி, ப்ளஸ் கேபிளையும், மைனஸ் கேபிளையும் பேட்டரி டெர்மினலில் இணையுங்கள்.

அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

பிரேக் டவுன் ஆனால்...

சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது, திடீரென கார் பிரேக் டவுனாகி நின்றுவிட்டால், காரை ஓரமாக நிறுத்தி 'வார்னிங் லைட்ஸ்’-ஐ ஒளிரவிடுங்கள். காருக்குள் இருப்பவர்களை சாலையின் ஓரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்து விட்டு, கார் தயாரிப்பாளரின் எமர்ஜென்சி சர்வீஸுக்கு போன் செய்யுங்கள்!

டயர் வெடித்தால்...

காரில் போய்க் கொண்டு இருக்கும் போது, திடீரென டயர் வெடித்தாலோ அல்லது பஞ்சரானாலோ, உங்கள் கார் பஞ்சரான டயரை நோக்கித் திரும்பும். அதாவது முன் வீல் வலது பக்க டயர் பஞ்சரானால், கார் வலது பக்கமாகத் திரும்பும். பின் வீல் பஞ்சரானால் உடனடியாக அலைபாய ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில், காரின் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கார் திரும்புகிறதே என்பதற்காக நீங்கள் ஸ்டீயரிங்கை எதிர் திசையில் திருப்பாதீர்கள். ஆக்ஸிலரேட்டரில் இருந்து உடனடியாக காலை எடுத்து விடுங்கள். காரின் கன்ட்ரோல் உங்கள் கைக்கு வந்து விட்டதென்றால், மெதுவாக பிரேக்கை அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து, காரைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள். எச்சரிக்கை விளக்குகளை ஒளிரவிட்டு, மற்ற வாகனங்களுக்கு சிக்னல் செய்யுங்கள்!

ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...

ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம். கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள். வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள். காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.

திடீரென பிரேக் பிடிக்காமல் போனால்...

மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி... படிப்படியாக கியரைக் குறையுங்கள். ஃபர்ஸ்ட் கியரில், காரை குறைந்த வேகத்துக்குக் கொண்டு வாருங்கள். மெதுவாக ஹேண்ட் பிரேக்கைப் பிடியுங்கள். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய ஹாரன் அல்லது எச்சரிக்கை விளக்குகளைப் போட்டுக் காண்பித்து, சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள்.

உங்கள் எதிரே வேகமாக இன்னொரு வாகனம் வந்தால்..

வீல் ஸ்கிட் ஆகாமல் பிரேக்கை நன்றாக அழுத்திக் கொண்டே ஹாரனையும், ஃப்ளாஷ் லைட்டையும் போட்டுக் காட்டுங்கள். எதிரே வரும் வாகனத்துக்கு எவ்வளவு இடம் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு இடம் கொடுங்கள். எதிரே வரும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மிகவும் வேகமாக நெருங்கி வருகிறது என்றால், உடனடியாக சாலையின் இடது ஓரத்துக்கு வந்துவிடுங்கள். சாலையைவிட்டு வெளியே வந்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் உடனடியாகச் சாலைக்கு வர முயற்சிக்காதீர்கள். ஸ்டீயரிங்கை க்ரிப்பாக பிடித்துக் கொண்டு, பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகு, மீண்டும் சாலைக்குள் செல்லுங்கள்.

கார், தீப்பிடித்து எரிந்தால்...

கார் தீப்பிடித்து எரிகிறது என்றால், 90 சதவிகிதம் எலெக்ட்ரிகல் ஒயர்களில் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட்தான் காரணமாக இருக்க முடியும். மெதுவாக காரை நிறுத்தி இன்ஜினை ஆஃப் செய்யுங்கள். உடனடியாக காரை விட்டு வெளியே வந்துவிடுங்கள். முடிந்தால், மற்றவர்களின் உதவியை நாடி, மண், நீர் பயன்படுத்தி தீயை அணைக்கப் பாருங்கள். கார் முழுவதுமாக எரிய ஆரம்பித்துவிட்டால் காரை விட்டு பல அடி தூரத்துக்கு வந்துவிடுங்கள். எரிபொருள் இருப்பதால், வெடிக்கும் அபாயமும் இருக்கிறது.



முதலில் பேட்டரி கனெக்ஷனைத் துண்டித்துவிடுங்கள்.

காருக்குள் இருந்து தேவையற்ற பொருட்களை எடுத்துவிடுங்கள். ஏனென்றால், தேவையற்ற பொருட்கள் காருக்குள் இருக்கும்போது சீட்டுகள் அழுக்காகவும், மெட்டல் பாகங்கள் துருப்பிடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

சென்ட்ரல் லாக் சரியாக லாக் செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

வைப்பர்களை கண்ணாடியுடன் ஒட்டாமல், தூக்கி நிறுத்திவிடுங்கள்.

கொஞ்சம் காற்றோட்டமான இடத்திலேயே காரை நிறுத்தி வையுங்கள்.

நீண்ட நாட்கள் கழித்து காரை எடுக்கும்போது...

டயரில் போதுமான காற்றை நிரப்புங்கள்.

ஆயில், சரியான அளவு இருக்கிறதா என்று பாருங்கள்.

பேட்டரியை சார்ஜ் செய்து மீண்டும் இணையுங்கள்.

மூன்று மாதங்கள் கழித்து காரை எடுக்கிறீர்கள் என்றால், சர்வீஸ் சென்டரில் ஒருமுறை கொடுத்து ஜெனரல் செக்-அப் செய்த பிறகே ஓட்டுவது நல்லது.

சின்னச் சின்ன பயணங்கள் வேண்டாம்!

10 நிமிடத்துக்கும் குறைவான பயணங்களைக் கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். இப்படிச் செய்யும்போது, இன்ஜின் முழுமையாக ஹீட் ஆகாது. இன்ஜின் கம்பஷனில் எரிபொருளும், காற்றும் கலந்து எரிந்து சக்தியாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உயர்ந்த பிறகுதான் எரிபொருள் முழுமையாக எரியும். அதற்கு வெப்பம் தேவை. எரிபொருள் எரிந்து வெளியேறும்போது, புகையாக சைலன்சர் வழியாக வெளியேறும். ஆனால், குறைந்த தூரப் பயணங்கள் செய்யும்போது, எரிபொருள் சரியாக எரியாமல், இன்ஜின் மற்றும் எக்ஸாஸ்ட்டிலேயே தங்கிவிடும். அதனால், எளிதில் துருப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். இன்ஜினுக்குள் தங்கிவிடும் எரிபொருள், ஆயிலின் தன்மையைக் குறைத்துவிடும்.

சிறிது தூரப் பயணங்களுக்கு காரை உபயோகப்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஜிம், மார்க்கெட் போன்ற இடங்களுக்கு காரில் போவதை விட டூவீலர் அல்லது நடந்து செல்வதே நல்லது. கார்களை நாம் அதிகப்படியாக உபயோகப் படுத்தும்போது சுற்றுச்சூழல் மாசு படுகிறது என்பதோடு,எரிபொருளும் வீணாகிக் கொண்டே இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

கார் துருப்பிடிக்காமல் பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு!

கடற்கரை, காற்று புக முடியாத இடங்களில், காரை அதிக நாட்கள் நிற்க வைத்தால், துருப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.



வேகம் (15 சதவிகித சேமிப்பு)

குறைவான வேகத்தில் சென்றாலே எரிபொருளைச் சேமிக்க முடியும். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்வதைவிட 50 கி.மீ வேகத்தில் சென்றால், எரிபொருள் செலவு குறையும்.

திட்டமிடுதல் (20 சதவிகித சேமிப்பு)

எந்த இடத்துக்குச் செல்கிறோமோ அதைத் திட்டமிட்டு, அங்கு செல்ல சுலபமான (கொஞ்சம் அதிக தூரம் என்றாலும் பரவாயில்லை) வழியைத் தேர்ந்தெடுத்துச் சென்றால், 20 சதவிகித எரிபொருளைச் சேமிக்க முடியும்.

கன்ட்ரோல் (18 சதவிகித சேமிப்பு)

அடிக்கடி பிரேக், கிளட்ச் ஆகியவற்றைப் பிடித்துக் கொண்டு ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

வெயிட் (15 சதவிகித சேமிப்பு)

காரில் எடையைக் கூட்டினால், எரிபொருள் வீணாகும். அதிக எடையுடன் காரிலோ, பைக்கிலோ செல்வதைத் தவிர்த்தால், எரிபொருளைச் சேமிக்க முடியும்.

ஏரோ டைனமிக்ஸ் (27 சதவிகித சேமிப்பு)

காரின் மேற்கூரையில் பொருட்கள் வைத்தால், அல்லது கதவுக் கண்ணாடிகளைத் திறந்து வைத்துச் சென்றால், காற்றினால் காரின் ஏரோ டைனமிக்ஸ் பாதிக்கப்படும். அதனால், இன்ஜின் வேகத்தை அதிகரிக்க வேண்டியது வரும். இதனால் எரிபொருள் வீணாகும்.

பராமரிப்பு (8 சதவிகித சேமிப்பு)

வாகனத்தைச் சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்வதோடு, அடிக்கடி இன்ஜின் ஆயில் இருக்கிறதா? டயரில் காற்று இருக்கிறதா என்று 'செக்' செய்துவிட வேண்டும்.

எரிபொருள் (6 சதவிகித சேமிப்பு)

சரியான எரிபொருளைப் பார்த்து நிரப்ப வேண்டும். ஒரே வகையான பெட்ரோலை நிரப்புவதே நல்லது.

எலெக்ட்ரிக்கல்ஸ் (10 சதவிகித சேமிப்பு)

ஏ.ஸியால் அதிக எரிபொருள் வீணாகும். அது தவிர, மியூஸிக் சிஸ்டம் முதல் வைப்பர் வரை மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, பேட்டரியின் ஆயுள் குறையும்.

ஐடிலிங்க் (4 சதவிகித சேமிப்பு):

டிராஃபிக் சிக்னல்களிலோ அல்லது வேறு ஏதாவது இடங்களிலோ 30 விநாடிகளுக்கு மேல் ஒரே இடத்தில் நிற்க வேண்டி வந்தால், இன்ஜினை ஆஃப் செய்து விடுங்கள். ஆஃப் செய்துவிட்டு 'ஆன்’ செய்யும்போது, அதிக பெட்ரோல் செலவாகாது.

கார் ஐடிலிங்கில் நிற்கும்போது, மணிக்கு ஒரு லிட்டர் எரிபொருள் வீணாவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது!



'நீங்கள் கொஞ்சம் பதற்றமாக காரை ஓட்டுகிறீர்கள்’ என்று உடன் இருப்பவர்கள் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். யாராவது டிரைவிங்கைப் பற்றிக் குறை சொல்லும்போது, அதை மறுத்துப் பேசுபவர்கள்தான் மோசமான டிரைவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் டிரைவிங்கைத் தொடர்ந்து நீங்களே விமர்சனம் செய்யுங்கள்! மேம்பாலத்தில் ஓட்டும்போது, நான்கு முனைச் சந்திப்புகளில் திரும்பும்போது என எந்தெந்த இடங்களில் எப்படி ஓட்ட வேண்டும் என்பதை தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முன்னால் போகும் வாகனத்துக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியாக இருக்க வேண்டும். ரேஸ் டிராக்கில் ஓட்டுவது போன்று முன்னால் செல்லும் வாகனத்தை முட்டிக்கொண்டே செல்லக் கூடாது. முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால் சமாளிப்பது சிரமம். எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பேசிக் கொண்டே காரையோ, பைக்கையோ ஓட்டாதீர்கள்!

லேன் மாறுதல்...

உங்களுக்கான லேனில் காரை ஓட்டுங்கள். லேன் மாறும்போது இண்டிகேட்டர் விளக்குகளை ஒளிரவிட்டபடி ஸ்டீயரிங்கைத் திருப்புங்கள். சாலையை சர்க்கஸ் மைதானமாகக் கருதி அந்த மூலைக்கும், இந்த மூலைக்கும் வாகனத்தை ஓட்டாதீர்கள். சாலையில் வேறு யாராவது இப்படி டிரைவ் செய்தால், உடனடியாக அந்த வாகனத்தின் எண்ணை போக்குவரத்து காவல்துறைக்குத் தெரிவியுங்கள். நீங்களாகவே அந்த வாகன ஓட்டுநருடன் சண்டையில் இறங்காதீர்கள். நீங்கள் மெதுவாகத் தான் கார் ஓட்டுவீர்கள் என்றால், வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு வலது பக்கம் வழி கொடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் வாகனத்தின் இடது பக்கமாகச் சென்று ஓவர்டேக் செய்யாதீர்கள். பக்கவாட்டுக் கண்ணாடிகளையும், ரியர் வியூ கண்ணாடியையும் சரியாக வைத்து, பின்னால் வரும் வாகனங்களைக் கவனமாகப் பாருங்கள். பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்றால் மட்டுமே உடனடியாக லேன் மாறுவது, யூ-டர்ன் எடுப்பது போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும்.

ஓவர்டேக்

சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கியமான காரணம், முன்னால் செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்வதுதான். அதனால், ஓவர்டேக் செய்யும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். முதலில் எதிர் திசையில் வரும் வாகனங்களைக் கவனியுங்கள். உங்களுக்கு எதிர் திசையில் எந்த வாகனமும் வரவில்லை, முன்னால் செல்லும் வாகனத்தை ஓவர்டேக் செய்துவிட்டு, மீண்டும் உங்கள் பாதைக்கே திரும்ப முடியும் என்று முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஓவர்டேக் செய்ய வேண்டும். நீங்கள் ஓவர்டேக் செய்வதால் எதிரே வரும் வாகனத்துக்கும், முன்னால் செல்லும் வாகனத்துக்கும் பிரச்னை வரும் என்றால், ஓவர்டேக் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். பாதசாரிகள் கடக்கும் இடம், ரயில்வே கிராஸிங், இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் போன்ற இடங்களில் ஓவர்டேக் செய்யக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், சைரன் ஒலியுடன் வரும் போலீஸ் வாகனங்கள் ஆகியவற்றை ஓவர்டேக் செய்யக் கூடாது! எப்போதுமே வலது பக்கமாகத்தான் ஓவர்டேக் செய்ய வேண்டும். இடது பக்கமாக ஓவர்டேக் செய்யக் கூடாது.

ஆறாவது அறிவை உபயோகப்படுத்துங்கள்!

கார் ஓட்டுவதற்கு மிக மிக அவசியமானது... முடிவெடுக்கும் திறன். சாலையில் செல்லும்போது உடனுக்குடன் முடிவுகளை எடுக்க வேண்டும். இடது பக்கம் திரும்பலாமா? வலது பக்கம் திரும்பலாமா? சினிமாவுக்குப் போகலாமா? பீச்சுக்குப் போகலமா என சாலையின் நடுவில் கார் ஓட்டிக்கொண்டே யோசிக்கக் கூடாது. டிராஃபிக், சாலையின் மேடு பள்ளங்கள், தட்ப வெப்பநிலை, சாலையின் அகல-நீளம் ஆகியவற்றுக்கு ஏற்ப காரை ஓட்டுவது அவசியம். சூழ்நிலைக்கு ஏற்றபடி உடனடியாக முடிவெடுத்து காரை ஓட்ட வேண்டும்!



விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் நான்கு! ஓவர் ஸ்பீடு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சோர்வாக இருக்கும்போது வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பு விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல் (உதாரணம்: சீட் பெல்ட் அணியாமல்) வாகனம் ஓட்டுவது ஆகிய நான்கும்தான்! சாலையில் விபத்தைத் தவிர்க்கும் பொறுப்பு, வாகனத்தை ஓட்டும் டிரைவர்களிடம்தான் 90 சதவிகிதம் இருக்கிறது! வாகனம் ஓட்டும் ஒவ்வொருவருமே இந்த நான்கு விஷயங்களிலும் கவனமாக இருந்தால், விபத்தை எளிதில் தவிர்க்க முடியும்!

ஓவர் ஸ்பீடு

வாகனத்தின் வேகம் எப்போதுமே ஓட்டுபவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாடுகளை மீறினால், போலீஸிடம் மாட்டி அபராதம் கட்ட வேண்டியது இருக்கும். அல்லது மோசமான விபத்தில் சிக்க வேண்டியது இருக்கும்.

வேகமாக வாகனம் ஓட்டினால்...

அதிகபட்ச வேகத்தில் செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம். உங்கள் உயிருக்கும், சாலையில் செல்லும் மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். பாதிப்பு, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மோசமானதாக இருக்கும். பாதசாரிகள் குறுக்கே வந்தாலோ அல்லது மற்ற வாகனங்கள் குறுக்கே வந்தாலோ, உங்களால் உடனடியாக வேகத்தைக் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது!

மற்ற வாகனங்கள் உங்கள் மீது மோதாமல் தடுப்பதற்கு நீங்கள் தரும் நேரம் மிகக் குறைவு.

உங்களுக்கென வகுக்கப்பட்டு இருக்கும் வேக வரையறைக்குள் பயணம் செய்வதே பாதுகாப்பானது.

ஆல்கஹால்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நடக்கும் விபத்துகள்தான் தமிழகத்தில் அதிகம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி தவறு. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உங்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுவிடும்.

விபத்து ஏற்படப் போகிறது என்று ஒரு விநாடிக்கு முன்பு தெரிந்தால்கூட ஸ்டீயரிங்கைத் திருப்பி விபத்தைத் தடுத்துவிட முடியும். ஆனால், பெரும்பாலான விபத்துகள் ஒரு விநாடிக்கும் குறைவாக, அதாவது கண் இமைக்கும் நேரத்தில் நடப்பதால்தான் அவற்றைத் தடுக்க முடியாமல் போய் விடுகிறது. மதுவின் மயக்கத்தில் இருக்கும்போது, ஆல்கஹால் ரத்தத்துடன் கலந்து மூளையின் செயல்பாடுகளை மந்தமாக்கி விடும். இது, விபத்துக்கு வரவேற்பு(!) பண் பாடுவதாக அமையும்!

பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது எவ்வளவு கட்டாயமோ, அதுபோல் கார் ஓட்டுபவர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்!

டிரைவர் சோர்வு...

நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் கணிசமான விபத்துகள், வாகனத்தை ஓட்டுபவர் தூங்கிக் கொண்டே ஓட்டுவதால் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பகலைவிட இரவு நேரத்தில் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் 30 சதவிகிதம் அதிகம்!

சோர்வாக இருந்தால்...

எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவு பத்து மணிக்குப் பிறகு தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் கார் ஓட்டாதீர்கள்.

மதிய உணவு சாப்பிட்ட உடனேயே காரை ஓட்டாதீர்கள். குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஓய்வெடுத்த பிறகு காரை ஓட்டுங்கள்.

உங்களின் காரின் ஓட்டும் வேகம், திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் கூடினாலோ, குறைந்தாலோ வாகனம் ஓட்டுவதை நிறுத்திவிடுங்கள்.

உங்கள் கட்டுப்பாட்டை மீறி வாகனம் சாலையில் அங்கும் இங்கும் அலை பாய்ந்தால், உடனடியாக சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி சற்று நேரம் ஓய்வெடுங்கள்.

தூக்கம் வருவதுபோல் இருந்தால் டீ அல்லது ஜூஸ் அருந்திவிட்டு, பதினைந்து நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு வாகனம் ஓட்டுங்கள்!

கார் ஓட்டும் போது கவனம் தேவை...

விபத்து ஏற்பட்ட உடன் நாம் உடனே சொல்லும் காரணம், 'அந்த வாகனத்தை நான் பார்க்கவே இல்லை’ என்பதுதான். பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமே கவனம் இல்லாமல் காரை ஓட்டுவதுதான். செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டுவது, காருக்குள் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, ரேடியோ கேட்பதில் அதிகக் கவனம் செலுத்துவது அல்லது பகல் கனவு கண்டு கொண்டே காரை ஓட்டுவது... விபத்து நடக்க இப்படி பல காரணங்கள் உள்ளன!

கார் ஓட்டும்போது இதுபோன்ற விஷயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும்போது, 'நான் எந்த வாகனத்துக்கும், எந்தப் பாதசாரிக்கும், எந்தப் பொதுச் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்த மாட்டேன்’ என்று உறுதி எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புங்கள்.

சாலையில் தாறுமாறாக காரை ஓட்டுகிறவர்களைச் சட்டை செய்யாதீர்கள். அவர்களுடன் சண்டை போடாதீர்கள். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே உங்கள் மனதை விட்டு அகன்று விடும். அவர்கள் செய்கின்ற தவறை நீங்களும் செய்யாதீர்கள்.

நீங்கள் கார் ஓட்டும்போது பின்னால் வரும் வாகனங்களுக்குத் தொடர்ந்து சரியான சிக்னல்களைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் திரும்பும்போது, இண்டிகேட்டர்களைப் போட்டுக் காட்ட மறக்காதீர்கள். அதேபோல், லேன் மாறும்போதும் சிக்னல் செய்யுங்கள். சாலையில் ஆட்கள் இல்லை என்றாலும் இந்தப் பழக்கத்தைப் பழகுங்கள். அப்போது தான் இது எப்போதுமே மறக்காது. பிரேக் அடிக்கும் போது, பிரேக் லைட்டுகள் ஒளிர்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

காரின் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பராமரிப்பு முறைகளும் மாறும். காரின் பராமரிப்பு குறித்து உங்களுக்குத் தெரியாத விஷயங்களை சர்வீஸ் சென்டரில் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

உங்களின் காரை முறையாகப் பராமரிக்கும்போது, அநாவசியச் செலவுகள் குறையும், காரின் மைலேஜ் அதிகரிக்கும் என்பதோடு... காரை நீங்கள் விற்கும்போதும் நல்ல விலைக்கு விற்க முடியும், அனைத்துக்கும் மேலாக நீங்கள் காரில் செல்லும்போது பாதுகாப்பாக உணர்வீர்கள்!

உங்கள் பயணம் இனிதாக அமைய

மோட்டார் விகடனின்

வாழ்த்துக்கள்!

Channa Masala Dosa

Since ever i choosed dressing up leftovers for kids as this week's theme for running blogging marathon, am just breaking my head to come with kid's friendly dishes,but fortunately my small brain works out wonder...Who will say no to masala dosas, definitely not me,whenever i go to Indian restaurants here,my first ever order will be definitely masala dosas eventhough i make quite often at home..Here comes my one of the new creation with leftover channa masala i prepared yesterday for our dinner which i served along with chappathis.. There were some leftovers channa masala, usually i'll have them next day with rice,but this time for a change i prepared as filling for making these special masala dosa, i cooked those leftover channa masala again for few minutes and added few scrambled paneer to make the masala bit more thick, by god's grace they turned thick and super delicious..My teddies had a wonderful dinner with this super crispy and fantastic channa masala dosas with mixed veggies sambar...Do check out the other blogger buddies running blogging marathon with me here..


2cups Idli Batter
1cup Channa masala
1/4cup Scrambled Paneer

Bring boil the channa masala and add the scrambled paneer to them,put the flame in simmer until the channa masala gets thicken,keep aside and let them cool completely..

If the idly batter is thick, add water to turn them little bit thin..Heat a pan, brush the pan with oil..Pour a ladle of the idli batter,drizzle oil and cook on both sides..

Place enough channa masala in the middle of dosa,roll it and serve immediately with spicy chutneys or sambar..

Thursday, January 19, 2012

Mangalorean Sprouted Moong Curry(Kirlele Moogachi curry)

Mangalorean Sprouted Moong Curry(Kirlele Moogachi curry)

A tasty curry, goes well with rice.

How to make moong sprouts?

For moong / payaru

1 cup (100 g) moong (green gram)

2 cups water

1/2 metre muslin cloth (or suitable clean / hygienic cotton cloth)

Method

Wash and soak moong in 2 cups water for 6 hours or over night. Drain out water thoroughly, pack it loosely in clean cloth. Set aside in a bowl for 2 days to allow moong to sprout or germinate. Sprinkle water occasionally (must ensure the pack is not immersed in water - the moong may get spoiled instead of germinating).

Serves: 3 – 4

You will need

200 g sprouted green gram

2 green chillies

2 ½ cups water (500 - 525 ml)

For the coconut paste:

75 g (1 cup) grated coconut

1 teaspoon dry roasted coriander seeds

4 dried red chillies

¼ teaspoon turmeric powder

1 teaspoon thick tamarind paste

2 tablespoons water

Make a thick paste of above ingredients with 2 tablespoons water. Keep aside.

Method

Wash sprouted moong carefully. Pour enough water to cover the sprouts and add green chilli and pressure cook till 1 whistle on high heat (more than 2 whistles will overcook moong sprouts). Switch off the heat. Allow the cooker to cool naturally.

Add ground coconut paste and salt. Adjust with extra ¼ cup (50 ml) water if required. Mix well. Cover with a lid and cook on a low heat for 10 minutes or until done and gravy slightly thickens.

For seasoning:

2 teaspoons oil

½ teaspoon mustard seeds

½ teaspoon jeera (cumin seeds)

1/2 teaspoon methi ( fenugreek ) seeds

6 curry leaves

Method

Heat oil in a frying pan. Add mustard seeds. When they splutter, add jeer, methi and curry leaves. Saute for 2 minutes until fragrant and crisp. Pour the seasoning over curry and mix well. Serve with rice.

Monday, January 16, 2012

நேசிக்கவும் நேசிக்கபடவுமே வாழ்க்கை !

இந்த பதிவை எழுதுவதா வேண்டாமா என பெரிய தயக்கம் இருந்தது. ஹவுஸ் பாசுக்கு இதை வெளியில் சொல்ல கூடாது என்று எண்ணம். இருந்தும் இதை பகிர வேண்டும் என மனம் சொல்கிறது. ஹவுஸ் பாஸ் ஆர்டரை மீறும் மிக சில செயல்களில் இது ஒன்றாக இருக்கட்டும்.

2003 -ஆம் வருடம் என நினைக்கிறேன். என் பெண் சிறியவளாக இருந்த போது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனது. டாக்டர்கள், லேப்கள் என அலைந்து அலைந்து மனம் நொந்து போயிருந்தோம். அப்போது வீட்டுக்கருகில் எங்களுக்கு நன்கு தெரிந்த பெண்மணி ஒருவர் எங்கள் ஜாதகம் பார்த்து விட்டு சில விஷயங்கள் சொன்னார். அப்போது தந்தையான நான் வார வாரம் அன்ன தானம் தந்து வந்தால், அவள் உடல் நிலை சரியாகும் என்றார். அப்படித்தான் அன்னதானம் செய்கிற பழக்கம் எனக்கு துவங்கியது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாரம் நான்கு பேருக்காவது அன்ன தானம் செய்து வருகிறேன். ஏழை சிறுவர்களுக்கு, அரசு பள்ளிகளுக்கு உதவுவது என சின்ன சின்ன நற் காரியங்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடு பட்டாலும் முழுக்க முழுக்க எங்கள் குடும்பம் மட்டும் செய்யும் நற் காரியம் என்கிற நிம்மதி இதில் உண்டு.

இந்த வித்தியாச அனுபவத்திலிருந்து சில துளிகள்:

அன்ன தானம் தர ஆரம்பத்தில் கையில் சாப்பாட்டு பையுடன் ஆட்களை தேடி அலைந்திருக்கிறேன். பின் ரயில்வே நிலையம் ஒட்டி நிறைய ஏழைகள் தங்கி இருப்பது தெரிந்து மவுன்ட் ஸ்டேஷன் அருகே சென்று வாரா வாரம் சாப்பாடு தர ஆரம்பித்தேன்.

முதலில் வெவ்வேறு வித உணவுகள் குடுத்து வந்தவன் இப்போது பெரும்பாலும் "நான்கு இட்லிகள் அடங்கிய உணவு பொட்டலமே " தருகிறேன். சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்பதால் நன்கு செரிக்க உதவும் என்பதால் !

ஆரம்பத்தில் இட்லி நான்கு பேருக்கு வாங்கி தந்த போது ஆளுக்கு பத்து ரூபாய் என நாற்பது ரூபாய் செலவாகும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் விலை ஏறி நான்கு இட்லி இருபது ருபாய் என வாரம் என்பது ரூபாய் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏறியதால் பெரிதாக தெரிய வில்லை.

வழக்கமாய் வாங்கும் கடையில் இன்று அன்ன தானம் செய்கிறேன் என்றால் 15 நிமிடம் முன்பே போன் செய்து பார்சல் கட்ட சொல்லிடுவேன். போகும் போது ரெடி ஆக வைத்திருப்பார்கள்.

ஹவுஸ் பாஸ் உடன் வேலை பார்ப்போரில் சிலர் தங்கள் திருமண நாள் அல்லது குழந்தைகள் பிறந்த நாள் போது மட்டும் " பத்து பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்" என எங்கள் மூலம் செய்ய சொல்வார்கள். இப்படி சற்று அதிகமான நபர்களுக்கு தர வேண்டுமெனில் ரயில்வே ஸ்டேஷன் அருகே தான் தந்தாக வேண்டும் ! அங்கு தான் ஒரே நேரத்தில் இத்தனை பேரை பார்க்க முடியும். அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். எல்லோரும் " எனக்கு சாப்பாடு; எனக்கு சாப்பாடு" என்று கேட்பார்கள். எல்லோருக்கும் தர முடிய வில்லையே என்று சற்று வருத்தமாக இருக்கும் !

சமீபமாக மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் வயதான பாட்டிகள் மற்றும் தாத்தாவிற்கு உணவு தந்து வருகிறேன். இதில் ஒரு பாட்டி பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இந்த பாட்டி எப்போதும் தனக்கு சாப்பாடு மற்றும் சாம்பார் தனியாக கவரில் போட்டு தான் தர வேண்டும் என்று சொல்லும் ! சில நேரம் கடையில் சாப்பாடு கட்டுபவர் அனைத்தையும் ஒரே கவரில் போடுவார். அப்போது எல்லோருக்கும் தனி தனியே எடுத்து தர வேண்டி இருக்கும். ஆனால் நம்ம பாட்டியோ கவர் இன்றி வாங்க மாட்டேன் என உறுதியாய் இருக்கும். இதனால் மற்றவர்களுக்கு கவர் இன்றி தந்து விட்டு, கடைசியாக கவர் உடன் இந்த பாட்டிக்கு தருவேன். அப்போதெல்லாம் " இந்த நிலையிலும் இந்த பாட்டி தான் நினைத்ததில் விடாபிடியாய் இருந்து சாதிக்கிறதே !" என்று மனதுக்குள் சிரித்து கொள்வேன் ! ஒன்றை பாருங்கள் ! உங்களுக்கு எது தேவை என்பதில் நீங்கள் தெளிவாக, உறுதியாக இருந்தால் அது உங்களுக்கு கிடைக்கிறது !

பொன்னியம்மன் கோயிலில் வாரா வாரம் கோயிலுக்கு உள்ளேயே செல்லாமல், வெளியில் நின்று உணவு மட்டும் தந்து விட்டு சென்று விடுவது எனக்கே சற்று வித்தியாசமாக தான் இருக்கும். ஆனாலும் காலை நேரம், அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் உள்ளே செல்ல நேரம் இருக்காது.

வாரா வாரம் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் என வைத்து கொள்வதில்லை. அப்படி செய்தால் அவர்களுக்கும் ஒரு எதிர் பார்ப்பு வந்து விடும். சில காரணங்களால் நம்மால் அன்று தரா விடில் நமக்கும் மன கஷ்டம். அவர்களுக்கும் ஏமாற்றம். எப்படியும் வாரம் ஒரு முறை நான்கு பேருக்கு என்பது மட்டும் தான் ரூல். இதிலும் கூட சில வாரங்கள் தர விடுபட்டு விடும். அப்போது அடுத்த வாரம் நான்கு பேருக்கு பதில், எட்டு பேருக்கு தந்து கணக்கை சரி செய்வேன்.

பார்த்த சாரதி கோயில், வேளாங்கண்ணி என கோயில்கள் செல்லும் போதெல்லாம் வெளியில் வயதானவர்கள் அமர்ந்திருப்பது பார்த்தால், அந்த வார அன்னதானத்தை அங்கு முடித்து விடுவது வழக்கம்.

சில நேரம் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் வசிக்கும் ஏழைகள், அவர்கள் குழந்தைகளுக்கு தரும் போது, அந்த குழந்தைகள் பையை பெற்று கொண்டு மகிழ்ச்சியாக சிரிக்கும். அந்த நேரம் நமக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த அன்ன தானத்தால் எனக்கு ஏதும் நல்லது நடந்ததா?

முன்பே சொன்ன மாதிரி எங்கள் பெண் உடல் நலனுக்காக துவங்கியது இது. அதன் பின் அவள் பெரியவள் ஆக ஆக சின்ன வயதில் இருந்த உடல் தொந்தரவுகள் முழுதும் மறைந்து விட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம் என ஹவுஸ் பாஸ் உறுதியாக நம்புகிறார். ஏதாவது பிரச்சனை வந்தால், "இந்த வாரம் சாப்பாடு குடுத்தீங்களா? " என கேட்பார். நான் "குடுத்துட்டேன்" என்றால் ஓகே. இல்லா விடில் " இந்த வாரம் குடுக்காததால் தான் இப்படி" என்பார்.

எப்போதும் ஏதோ யோசனையுடனே வண்டி ஓட்டும் என் டூ வீலரை எத்தனையோ முறை லாரி அல்லது பஸ் முத்தமிடுவது போல் ஒட்டி சென்றுள்ளன. அப்படி தப்பும் போதெல்லாம். " தர்மம் தான் தலை காக்கிறது " என நினைத்து கொள்வேன்.

நிஜமான நன்மை என்றால் நம் மனதில் தோன்றும் திருப்தி. அது தான் இதை தொடர்ந்து செய்ய வைக்கிறது. நான் ஒன்றும் அநியாயத்துக்கு நல்லவன் கிடையாது. எல்லோரையும் போல கடவுள் பாதி மிருகம் பாதி தான் ! ஆனால் நம்மை நாமே மதிக்க, இது போன்ற செயல்கள் தான் உதவுகின்றன.

மேலும் நிஜமாக வேலை பார்க்க முடியாமல், பிள்ளைகளாலும் கை விடப்பட்ட இத்தகைய வயதானோருக்கு, பிற ஏழைகளுக்கு உதவுவது ஒரு சின்ன சமூக கடமை என்று தான் நினைக்கிறேன். சில பேராவது இப்படி ஈடு பட்டால், பட்டினியை ஓரளவு ஒழிக்கலாம் !

இதை வாசிக்கும் யாரோ ஒருவர் அடுத்த முறை கோயிலுக்கு போகும் போது வெளியில் இருக்கும் இருக்கும் வயதானவருக்கு சாப்பாடு வாங்கி தந்தால், நான் இந்த பதிவு எழுதியதற்கான ஒரு அர்த்தம் கிடைக்கும் !! குழந்தைகள் பிறந்த நாள் போன்ற நேரத்திலாவது செய்து பாருங்கள் ! உங்களை நீங்களே இன்னும் அதிகமாக மதிக்க துவங்குவீர்கள் !

Thursday, January 12, 2012

வெண் பொங்கல்

தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டு, மூன்று அல்லது மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் இஞ்சியைப் பொடியாகத் துருவிச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் (இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்), கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறிப் போடவும்) சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

கத்திரிக்காய் கொஸ்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Tuesday, January 10, 2012

கிராமிய சமையல் 30 வகை

எங்க பாட்டி, அம்மா எல்லாம் சமைக்கும்போது வீடே மணக்கும். அவங்க கைப்பக்குவமே தனி!'' என்று நாக்கை சுழற்றியபடி சொல்லி ஆதங்கப்படுபவர்கள்... நம்மில் ஏராளம்! சுவைக்காக மட்டுமல்லாமல், சுகாதாரத்துக்காகவும் அவர்களெல்லாம் சமைத்ததுதான் அதற்குக் காரணம். அப்படிப்பட்ட கிராமிய மணம் கமழும் 30 வகை உணவுகளை இங்கே வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.

''கம்பு, சோளம், கொள்ளு, காய்கறி, கீரை, கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்தி... சுவையுடன், பலத்தையும் தரும் உணவு வகைகளை கொடுத்துள்ளேன். நம் உணவு முறையை சற்றே மாற்றிக் கொண்டு, நிறைவான ஆரோக்கியம் பெறுவோம் வாருங்கள்!'' என்றபடியே பத்மா சமைத்திருக்கும் ரெசிபிகளை, கலை உணர்வுடன் அலங்கரித்து, கண்ணுக்கும் விருந்து படைக்கிறார் செஃப் ரஜினி!

கருப்பட்டி பணியாரம்

தேவையானவை: கருப்பட்டி - 200 கிராம், கேழ்வரகு மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி.

செய்முறை: கருப்பட்டியை நன்கு பொடித்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி... கேழ்வரகு மாவு, அரிசி மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி, மாவை சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: கிராமங்களில் வெல்லம், சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியை காபி, டீ, பலகாரம் என இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்துவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

வேப்பம்பூ துவையல்

தேவையானவை: வேப்பம்பூ - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காடாயில் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை வறுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும். வேப்பம்பூ, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் எண்ணெய் விட்டு வேப்பம்பூ துவையலை பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுப் பூச்சி வரமால் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

பூண்டு மிளகு குழம்பு

தேவையானவை: தோல் உரித்த பூண்டுப் பல் - 10, மிளகு - 20, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டுப் பல்லை சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி, வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து, புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். காடாயில் கடுகு தாளித்து, அரைத்த விழுது, வேக வைத்த பூண்டு, உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: பூண்டு வாயுத்தொல்லையை நீக்கும். மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும்.

எள் உருண்டை

தேவையானவை: கறுப்பு எள் - 250 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: எள்ளை தண்ணீர் விட்டுக் களைந்து, கல் அரித்து, வடிகட்டி, வெறும் வாணலியில் போட்டு பொரியும்படி வறுக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிக்கட்டி பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு, உருட்ட வந்தால்... அதுதான் சரியான பதம்). வறுத்த எள்ளை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகு விட்டு நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்பு: எள், எலும்புகளுக்கு நல்ல வலிமையைத் தரும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - 100 மில்லி, முந்திரிப்பருப்பு - 10.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, நன்கு மசித்துக் கொள்ளவும். சர்க்கரையை தண்ணீர் சிறிது விட்டு கொதிக்கவிடவும். கம்பி பாகு பதம் வந்த உடன் அதில் மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து, நெய் விட்டு கிளறவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து, இதனுடன் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரி அடுப்பில் வைத்து சுட்டும் சாப்பிடலாம். வேக வைத்து அப்படியே சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.

பருப்புக் கஞ்சி

தேவையானவை: பாசிப்பருப்பு - 250 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வாழைப்பழம் - ஒன்று, கொப்பரைத் தேங்காய் (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, பால் - 200 மில்லி, நெய் - சிறிதளவு.

செய்முறை: பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, நன்கு குழையும்படி வேக வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிக்கட்டி கொதிக்க விடவும். சிறிது கெட்டியானதும் வேக வைத்த பருப்பை போட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும். ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த கொப்பரையை சேர்க்கவும். வாழைப்பழத்தை பொடியாக நறுக்கிப் போட்டு, பால் விட்டு நன்கு கலக்கவும்.

குறிப்பு: இந்தப் பருப்புக் கஞ்சி வயிற்றுப்புண்ணை ஆற்றும். வெல்லத்துக்குப் பதிலாக உப்பு, மோர் சேர்த்தும் கஞ்சி தயாரிக்கலாம்.

சோள ரவை உப்புமா

தேவையானவை: காய்ந்த சோளம் - 200 கிராம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோளத்தை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி (தோல் சீவி), பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். ஒரு பங்கு ரவைக்கு மூன்று மடங்கு என்ற அளவில் தண்ணீரை கடாயில் கொதிக்கவிடவும். மற்றொரு காடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு நன்கு வதக்கி... கொதிக்கும் நீரில் போட்டு தேவையான உப்பு சேர்த்து, சோள ரவையைப் போட்டு நன்கு கிளறவும். சிறிது ஒரு ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழிந்து, மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவவும்..

குறிப்பு: சோளக் கதிரை சுட்டு சாப்பிடலாம். வேக வைத்து சாப்பிடலாம். அடை, வடை, கஞ்சி என்று பலவிதமாக தயாரித்தும் சாப்பிடலாம். பிஞ்சு சோளத்தை அப்படியே சாப்பிடலாம். இதில் மாவு சத்து அதிகம்.

வெந்தயக்கீரை சாம்பார்

தேவையானவை: வெந்தயக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப், சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - 100 கிராம், கடுகு, வெந்தயம் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெந்தயக்கீரையை ஆய்ந்து இலைகளை நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியே வைக்கவும். புளியைக் கரைத்து கடாயில் விட்டு... சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, பிறகு வதக்கிய வெந்தயக் கீரையை சேர்த்து, மேலும் கொதித்ததும் வேக வைத்த துவரம்பருப்பு சேர்க்கவும். எல்லாம் கலந்து கொதித்த உடன் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

குறிப்பு: வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும். வெந்தயக் கீரை சேர்த்து சப்பாத்தி தயாரிக்கலாம்.

வெந்தய பணியாரம்

தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, வெந்தயம் - 50 கிராம், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கேரட் துருவல் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... இஞ்சி, கேரட், வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பணியாரக் கல்லில் எண்ணை சிறிது விட்டு, மாவை ஊற்றி, இருபுறமும் ஒரு சிறிய குச்சியில் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வெந்தய பணியாரத்துக்கு கொத்தமல்லி சட்னி சிறந்த காம்பினேஷன்.

அவல் உப்புமா

தேவையானவை: சிவப்பு அவல் - 250 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அவலை மிக்ஸியில் உப்புமா ரவை பதத்துக்கு லேசாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, ஒரு பங்கு அவலுக்கு இரு பங்கு தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதித்த உடன் தாளித்ததை போட்டு... உப்பு, பொடித்த அவலை போட்டு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி , மேலே கொத்தமல்லி தூவவும்.

குறிப்பு: அவல், பசியை அடக்கும். கார்போஹைட்ரேட் அடங்கியது.

கம்பு அடை

தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், கம்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும், கம்பையும் தனித் தனியாக ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒன்று சேர்த்து ஊற வைக்கவும். எல்லாம் நன்றாக ஊறிய உடன்... அரிசி, கம்பு இரண்டையும் மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்துக்கு அரைக்கவும். பருப்புகளை தனியாக அரைத்து, எல்லா மாவையும் ஒன்று சேர்த்து... உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். மாவை தோசைக்கல்லில் சிறிய அடைகளாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: சத்து நிறைந்த கம்பை பயன்படுத்தி, இனிப்பு அடையும் தயாரிக்கலாம்.

கொள்ளு துவையல்

தேவையானவை: கொள்ளு - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கொள்ளு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து... புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: கொள்ளு, உடலுக்கு பலம் தரும். உடலில் உள்ள அதிகமான கொழுப்புச் சத்தை குறைக்கும்.

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

தேவையானவை: கொத்தவரங்காய் - கால் கிலோ, கடலைப்பருப்பு - 150 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - ஒரு ஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஊற வைத்து களைந்து கெட்டியாக அரைத்து, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த பருப்பு சேர்த்து உதிரி உதிரி உதிரியாக வரும்வரை மிதமான தீயில் வைத்துக் கிளறி, வேக வைத்த கொத்தவரங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: பருப்புக்கு பதில், கொள்ளு ஊற வைத்தும் இதே முறையில் தயாரிக்கலாம்.

கருணைக்கிழங்கு மசியல்

தேவையானவை: கருணைக்கிழங்கு - கால் கிலோ, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், கடுகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கருணைக்கிழங்கை குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கி, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பொட்டுக்கடலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் தாளிக்கவும். மசித்த கருணைக்கிழங்கை அதில் சேர்த்து... உப்பு, வெல்லத்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கெட்டியானதும் எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும்.

குறிப்பு: மூல நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை துவையல், மசியல் என்று தயாரித்து சாப்பிட... நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சிப் புளி

தேவையானவை: புளி - 100 கிராம், குருத்து இஞ்சி - 200 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், வெல்லம் - 100 கிராம், கறுப்பு எள் - 50 கிராம், கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். எள்ளை களைந்து, கல் நீக்கி, வெறும் கடாயில் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரம் கொதித்த பின்பு வெல்லத்தை தூளாக்கிப் போட்டு கொதிக்க வைத்து, எள்ளுப்பொடியை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

குறிப்பு: நீராகாரம், பழைய சாதத்துக்கு... இஞ்சிப் புளி சிறந்த காம்பினேஷன்.

மொச்சை கத்திரி சாம்பார்

தேவையானவை: வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், பச்சை மொச்சை (தோல் உரித்து) - 100 கிராம், கத்திரிக்காய் - 2, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சை அளவு, பெருங்காயம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மொச்சையை குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கி எடுத்து வைக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, சாம்பார் பொடி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்த உடன் கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு, வேக வைத்த மொச்சையும் போட்டு, சிறிது கொதித்ததும் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து கொட்டி... பெருங்காயம் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.

குறிப்பு: மொச்சையில் புரதச் சத்து அதிகம் உள்ளது. சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.

மணத்தக்காளி குழம்பு

தேவையானவை: பச்சை மணத்தக்காளிக்காய் - ஒரு கப், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு... கடுகு, வெந்தயம், கட்டிப் பெருங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... மணத்தக்காளிக்காயை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: மணத்தக்காளிக்காயை உப்பு கலந்த தயிரில் 4 நாள் ஊற வைத்து, காய வைத்து... எண்ணெயில் வறுத்து, ரசம் சாதத்துடன் சாப்பிடலாம்.

கறிவேப்பிலை துவையல்

தேவையானவை: கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்), புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, இஞ்சி, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு, புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: சூடான சாதம், கறிவேப்பிலை துவையல், சுட்ட அப்பளம்... இது சூப்பர் காம்பினேஷன்!

பிரண்டை துவையல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய இளம் பிரண்டை - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, பிரண்டையை வதக்கிக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுத்து... அதனுடன் வதக்கிய பிரண்டை, இஞ்சி, புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும் சமயத்தில் இந்தத் துவையல் மிகவும் நல்லது. பிரண்டை ஜீரண சக்தியை அதிகரித்து, பசி எடுக்க வைக்கும்.

பயறு வெள்ளரி தயிர்பச்சடி

தேவையானவை: முளைகட்டிய பயறு - 100 கிராம், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தயிர் - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் (சிறியது) - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பயறு, நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் தயிர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்து சேர்த்து நன்றாக கலக்கவும்.

குறிப்பு: கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் அருமையான பச்சடி இது. சிறிய வெங்காயம், தக்காளியையும் சேர்க்கலாம்.

சுண்டைக்காய் பொரியல்

தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - கால் கிலோ, கடுகு - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை லேசாக தட்டிப் போட்டு வதக்கவும். பிறகு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் தண்ணீரை வடிக்கவும். பிறகு கடுகு தாளித்துக் கொட்டி... பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. பிஞ்சு சுண்டைக்காயை சமைத்தால்.. மிகவும் ருசியாக இருக்கும்.

வாழைத்தண்டு மோர்கூட்டு

தேவையானவை: இளம் வாழைத்தண்டு - 2 துண்டு (வில்லைகளாக நறுக்கி, நார் எடுத்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, மோர், தயிர் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சிறிது தண்ணீரில் மோர் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை போட்டு வைத்து எடுத்து, பின்பு தண்ணீரில் வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஆறியவுடன் சிறிது தயிர் கலக்கவும்.

குறிப்பு: பித்தப்பையில் கல் இருந்தால், வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட... குணமாகும். நிரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து வாழைத்தண்டு.

வாழைப்பூ வடை

தேவையானவை: வாழைப்பூ (சிறியது) - ஒன்று, துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து களைந்து, வடிக்கட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதில் மஞ்சள்தூள், வதக்கிய வாழைப்பூவை சேர்த்துப் பிசையவும். காடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வாழைப்பூ உடலுக்கு மிகவும் நல்லது.

பொட்டுக்கடலை உருண்டை

தேவையானவை: பொட்டுக்கடலை - கால் கிலோ, பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீர் விட்டுக் கரைத்து வடிக்கட்டி, பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு உருட்ட வந்தால்... அதுதான் சரியான பதம்). பொட்டுக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகை விட்டு கிளறி, உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: புரோட்டீன் சத்து அதிகம் உள்ள இந்த உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

காராமணி கூட்டு

தேவையானவை: காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காராமணியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்து தனியே வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை சேர்த்து அரைக்கவும். இதை வேக வைத்த காராமணியுடன் சேர்த்து, வேக வைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

நாரத்தை இலைப் பொடி

தேவையானவை: நாரத்தை இலை ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை: நாரத்தை இலையின் நடுவில் உள்ள நரம்பினை நீக்கி... இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கெட்டியான சிறு உருண்டைகளாக பிடிக்கவும். காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.

குறிப்பு: தயிர்சாதத்துக்கு இது சிறந்த காம்பினேஷன். மிகவும் முற்றிய இலையாக இருக்காமல், இளம் துளிர் இலையில் தயாரிக்கவும்.

கறுப்பு உளுந்து பொடி

தேவையானவை: முழு கறுப்பு உளுந்து - 200 கிராம், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கறுப்பு உளுந்து, மிளகு, மிளகாயை ஒன்று சேர்த்து எண்ணெயில் வறுத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட... மிகவும் ருசியாக இருக்கும். உளுந்து பொடி எலும்புகளை வலுவடையச் செய்யும்.

வேர்க்கடலை உருண்டை

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - கால் கிலோ, பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வேர்க்கடலையை நன்றாக தேய்த்துப் புடைத்து, தோல் நீக்கவும். வெல்லத்தைப் பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு, உருட்ட வந்தால் அதுதான் சரியான பதம்). கடலையை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, பாகை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, பிறகு உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: கிராமப்புறங்களில் கடலை உருண்டை முக்கியமான தின்பண்டம்.

கேழ்வரகு இனிப்பு தோசை

தேவையானவை: கேழ்வரகு மாவு - 250 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு கப், நெய் - 100 மில்லி.

செய்முறை: கேழ்வரகு மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, வடிகட்டவும். இதை மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்து, தோசைகளாக வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.

குறிப்பு: தொட்டுச் சாப்பிட ஏதும் தேவை இல்லை. திடீர் மாவுகளுக்கு பதிலாக கேழ்வரகு மற்றும் அரிசியை தனித்தனியாக ஊற வைத்து அரைத்தும் தயாரிக்கலாம். வெல்லத்துக்கு பதில் கருப்பட்டியும் சேர்க்கலாம்.

முருங்கைக்கீரை பொரியல்

தேவையானவை: பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன், முருங்கைக்கீரை - 10 ஆர்க்கு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு உளுத்தம்பருப்பு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பாதி வெந்ததும், ஆய்ந்து நறுக்கிய முருங்கைக்கீரையை அதில் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி, கலவையை பிழிந்து நீரை நீக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல், கீரை - பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: முருங்கைக் கீரையில் தங்க பஸ்பம் சத்து உள்ளது. இரும்பு சத்தும் உள்ளது. அடை, வடை, கூட்டு, பொரியல், பக்கோடா என்று பலவிதமாக தயாரித்து பயன்பெறலாம்

Friday, January 6, 2012

மேலப்பாளையம் ஸ்பெஷல், வெண்டைக்காய் மீன் குழம்பு,பருப்பு ரசம் & புளிச்சாறு,சுறா முருங்கைக்கீரை ஆணம் & சுறாப்புட்டு,கூனி தட்டைபயறு கத்திரிக்காய்

தேவையான பொருட்கள்; மீன் - அரைக்கிலோ, வெண்டைக்காய் - கால்கிலோ, வெங்காயம் - 2, தக்காளி -2 பச்சை மிளகாய் -3 பூண்டு - 6பல் மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன் மீன் மசாலாத்தூள் -2டேபிள்ஸ்பூன் புளி - எலுமிச்சை அளவு தேங்காய் 3டேபிள்ஸ்பூன்(விரும்பினால்) எண்ணெய் -5டேபிள்ஸ்பூன் வெந்தயம் - அரைடீஸ்பூன் உ.பருப்பு -1டீஸ்பூன் கருவேப்பிலை -3இணுக்கு உப்பு -தேவைக்கு மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்,மீன் வெள்ளையாக ஆகும் அளவு குறைந்தது 5தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும்,மீனில் மஞ்சள் தூள் ,உப்பு போட்டு கடைசியாக பிரட்டி அலசி எடுக்கவும்.மீன் வாடை சுத்தமாக இருக்காது.மணமாக இருக்கும். வெண்டைக்காய் கழுவி துடைத்து கொஞ்சம் பெரிய துண்டாக போட்டு வைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்.நறுக்க வேண்டியவற்றை ரெடி செய்து வைக்கவும்.
ஒரு வாணலியில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காயை வதக்கி எடுக்கவும்.தனியாக எடுத்து வைக்கவும்.

மீன் குழம்பு வைக்க ஒரு வாணலியில் 3டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்தயம்,உ.பருப்பு,கருவேப்பிலை வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.

வெங்காயம்,பூண்டு வதங்கியதும்,நறுக்கிய தக்காளி,மிளகாய் சேர்க்கவும்.வதக்கி விடவும்.

சிறிது உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைக்கவும்,எல்லாம் சேர்ந்து மசிந்து வரும்.
த்துடன் மிள்காய்த்தூள்,மீன் மசாலாத்தூள் சேர்க்கவும்.
வதக்கியவற்றுடன் மசாலா சேர்த்து பிரட்டவும்.
கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
பின்பு மீனை சேர்க்கவும்,நான் ஊளி மீன் உபயோகித்து உள்ளேன்,விரைவில் வெந்து உடையும் மீன் என்றால் முதலில் வெண்டைக்காய் சேர்த்து விட்டு,பின்பு மீன் சேர்க்கவும். அடிக்கடி அகப்பை போட வேண்டாம்.
நன்கு கலந்து விடவும்.மீனும் வெண்டைக்காயும் சேர்ந்து கொதித்து மணம் வரும்.தேங்காய் விரும்பாதவர்கள் இப்படியே சாப்பிடலாம்.
விரும்பினால் அரைத்த தேங்காய் விழுது விட்டு கொதிக்க விடவும்,சிம்மில் சிறிது நேரம் அடுப்பை வைக்கவும்.நன்கு தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் தெளிந்து மேல் வரும்.
சுவையான கமகமக்கும் வெண்டைக்காய் மீன் குழம்பு ரெடி.

இதில் உள்ள வெண்டைக்காய் சாப்பிட மீனை விட ருசியாக இருக்கும்.

இதனை சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசையுடன் பரிமாறாலாம்.
மீன் அளவு,வெண்டைக்காய் அளவு உங்கள் விருப்பமே. எண்ணெய்,காரம்,தேங்காய் உங்கள் ருசிக்கு தகுந்தபடி சேர்த்து கொள்ளலாம்.

பருப்பு ரசம் & புளிச்சாறு

ரசப்பொடி தேவையான பொருட்கள் ; மிளகு -1டேபிள்ஸ்பூன் சீரகம் -1டேபிள்ஸ்பூன் மல்லி - 2டேபிள்ஸ்பூன் கடலைபருப்பு - 2டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1டீஸ்பூன் பெருங்காயப்பொடி - 1டீஸ்பூன் மஞ்சள்பொடி - 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 8 கருவேப்பிலை - ஒரு கைப்பிடி மஞ்ச்ள் பொடி,பெருங்காயப்பொடி பொடி தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொறுமையாக லேசாக சிவற வறுத்து எடுக்கவும்.
வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடித்த பின்பு அத்துடன் மஞ்சள் பொடி,பெருங்காயப்பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். ரசப்பொடி ரெடி.
ரெடி செய்த ரசப்பொடியை ஆற வைத்து ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் தேவைக்கு உபயோகிக்கலாம்.

சிம்பிளாக ரசம் வைக்க புளியைக் கரைத்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு தட்டிய பச்சை மிளகாய்,பூண்டு போட்டு வதக்கி,ரசப்பொடி சேர்த்து,கரைத்த புளியை விட்டு,உப்பு சேர்த்து,மல்லி இலை நறுக்கி போட்டு,நுரை கூடியதும் அடுப்பை அணைத்தால் சிம்பிள் ரசம் ரெடி,வேண்டுமானால் சிறிய தக்காளி பிணைந்து விடலாம்.


பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்;

பருப்பு - ஒரு கையளவு

புளி - சிறிய எலுமிச்சை அளவு

பூண்டு - 4பல்

தக்காளி -1

மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்

ரசப்பொடி - 1டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் -1

மல்லி,கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்

கடுகு - அரைஸ்பூன்

மிள்காய்வற்றல் - 1

உப்பு - தேவைக்கு

ஊறிய பருப்பு, நறுக்கிய தக்காளி, 2பல்பூண்டு, மஞ்சள் பொடி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.
மிக்ஸியில் ரசப்பொடி, சிறிது கருவேப்பிலை,மல்லி இலைகாம்பு, 2பல் பூண்டு, பச்சை மிளகாய், விரும்பினால் 2சின்ன வெங்காயம் சேர்த்து பரபரவென்று சுற்றி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து மிக்ஸியில் சுற்றியதை போட்டு,கொதிக்க விடவும்.
பருப்பு வெந்து இப்படி காணப்படும்.
புளி இப்படி கொதி வரவும், வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.ரசத்தில் நுரை கூடியவுடன் இறக்கவும்.
சுவையான பருப்பு ரசம் ரெடி. மேலப்பாளையம் புளிச்சாறு :

தேவையான பொருட்கள்;

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மிளகு - 1டீஸ்பூன்

சீரகம் - அரைஸ்பூன்

வெந்தயம் - கால்ஸ்பூன்

கடுகு - கால் + அரைடீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரைடீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

சிறிய தக்காளி - 1

சிறிய பச்சை மிளகாய் -1

பூண்டு - 4பல்

சின்ன வெங்காயம் - 2

மஞ்சள் பொடி - கால்டீஸ்பூன்

எண்ணெய் -3டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

மிளகு சீரகம் அம்மியில் அரைத்து, அத்துடன், வெங்காயம், தக்காளி, பூண்டு, சிறிது மல்லி கருவேப்பிலை, பச்சை மிளகாய், கால்ஸ்பூன் கடுகு வைத்து தட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், உ.பருப்பு, வற்றல், கருவேப்பிலை தாளித்து, ரசத்திற்கு அரைத்தவற்றை போட்டு,மஞ்சப்பொடியும் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் புளிக்கரைசல் விடவும்.உப்பு சரியாகப் போடவும்.
ரசம் இப்படி நுரை கூடி கொதி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான மேலப்பாளையம் புளிச்சாறு ரெடி.
எங்க ஊரில் வெறுஞ்சோறு, கட்டிப்பருப்பு, புளிச்சாறு,சுருட்டு கறி எல்லார் வீட்டிலும் செய்யக்கூடிய காம்பினேஷன், சூப்பராக இருக்கும்.

எங்க ஊர் கட்டி பருப்பு செய்ய 100கிராம் பருப்புடன்,சிறிய தக்காளி,ஒரு சிறிய வெங்காயம்,ஒரு பச்சை மிளகாய்,ஒரு டீஸ்பூன் எங்க ஊர் மசாலா,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லி இலை சிறிது, மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.வெந்த பின்பு வழக்கம் போல் கடுகு,வற்றல்,கருவேப்பிலை,வெங்காயம் தாளித்து கொட்டவும். ருசி செமையாக இருக்கும்.


சுறா முருங்கைக்கீரை ஆணம் & சுறாப்புட்டு

சுறா முருங்கைக்கீரை ஆணம் தேவையான பொருட்கள்: சுறா மீன் துண்டுகள் - அரைக்கிலோ முருங்கைக்கீரை - ஒரு கப் சின்ன வெங்காயம் -100கிராம் தக்காளி -1 பூண்டுபல்- 10 மிளகுத்தூள் - ஒன்னரை டீஸ்பூன் சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் - முக்கால் டீஸ்பூன் மல்லித்தூள் -2டீஸ்பூன் மீன் மசாலா - 1டீஸ்பூன் (விரும்பினால்) தேங்காய் - 3டேபிள்ஸ்பூன் புளி - நெல்லியளவு உப்பு - தேவைக்கு நல்ல எண்ணெய் -4டேபிள்ஸ்பூன் கடுகு,உ.பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் சுறா மீனை நன்கு கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் குறிப்பிட்ட மசாலா தூள் வகைகள், பூண்டு,சின்ன வெங்காயத்தில் முக்கால் பாகம், தக்காளி,தேங்காய் துருவல் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும். புளி சிறிது கரைத்து எடுக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் மிக்ஸியில் அரைத்த மசாலா,தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.மசாலா வாடை அடங்கியதும். சிறிதளவு புளிக்கரைசல் விடவும்.நன்கு மூடினால் பொங்கி வடியும், திறந்தே கொதிக்கட்டும்.
அதற்குள் முருங்கைக்கீரையை ஆய்ந்து அலசி எடுக்கவும்.
கொதித்த ஆணத்தில் சுறா மீன் துண்டுகளை போடவும்.மீன் வேகட்டும். எலும்பு துண்டுகள் தவிர மற்ற துண்டுகளை புட்டுவிற்கு தனியாக எடுத்து வைக்கவும்.
ஆணத்தில் ஆய்ந்த முருங்கைக்கீரையை போடவும்.நன்கு வேகட்டும்.
ஒரு பாத்திரத்தில் தாளிக்க எண்ணெய் விட்டு, காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு போட்டு வெடித்ததும் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு சிவற வதக்கவும்.
கொதித்து கொண்டிருக்கும் சுறா முருங்கைக்கீரை ஆனத்தில் தாளிசத்தை கொட்டவும். அடுப்பை அணைத்து விடவும். நெலு நெலுன்னு ஆணம் சூப்பராக இருக்கும்.
சுவையான சத்தான சுறா முருங்கைக்கீரை ஆணம் ரெடி. குளிர்,பனிக்காலத்தில் செய்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது.பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் நல்லது.இந்த ஆணத்திற்கு, பூண்டு, நல்ல எண்ணெய், முருங்கைக்கீரை தான் தனி ருசியை தரும். ப்லைன் ரைஸில் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்,பொரித்த அப்பளம்,சுறாப்புட்டு உடன் பரிமாறலாம்.

சுறாப்புட்டு :

சுறா மீன் வேகவைத்தது - கால் கிலோ

வெங்காயம் - கால் கிலோ

பூண்டு -6பல்

தக்காளி - 1

பச்சை மிள்காய் - 2

தேங்காய் -3டேபிளஸ்பூன் மிளகுத்தூள் - அரைஸ்பூன்

சீரகத்தூள் - அரைஸ்பூன்

மிளகாய்த்தூள் -அரைஸ்பூன்(விரும்பினால்)

மல்லி,கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் -3டேபிள்ஸ்பூன்

கடுகு,உ.பருப்பு - 1டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

வெங்காய்ம், பூண்டு, தக்காளி, மல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாய் மிக்சியில் பரபரவென்று அரைத்து வைக்கவும்.
ஆணத்தில் இருந்து எடுத்த எலும்பு இல்லாத மீன் ஆற வேண்டும்.ஆணம் வைக்கவில்லை என்றால் தனியாகவும் மீனை கழுவி மஞ்சள் தூள்,உப்பு போட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விடாமல் வெந்து எடுக்கலாம்.
மீனை இப்படி உதிர்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு,கருவேப்பிலை தாளித்து நறுக்கியவற்றை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்,சிறிது நேரம் மூடவும்.
வெங்காயம், தக்காளி,பூண்டு வதங்கிய பின்பு உதிர்த்த மீனை சேர்க்கவும், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும், காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.பிரட்டி விடவும், உப்பு சரி பார்க்கவும்.

அரைத்த தேங்காய் மிளகாய் கலவையை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்,புளிப்பு தேவைப்பட்டால் அரை எலுமிச்சை பழம் பிழியவும், நன்கு பிரட்டி விடவும்.

.
சுவையான சுறாப்புட்டு ரெடி.

இதனை சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும், மீதியானால் ப்ரெட்டில் வைத்து சாண்ட்விச் செய்தும் சப்பாத்தியில் ரோல் செய்தும் சாப்பிடலாம்.

என்னுடைய மற்றொரு சுறாப்புட்டு ரெசிப்பியை இங்கு காணலாம்.



கூனி தட்டைபயறு கத்திரிக்காய்

தேவையான பொருட்கள்:
காய்ந்த கூனி இறால் - 2கைபிடியளவு
கத்திரிக்காய் -கால்கிலோ
தட்டைப்யறு -100கிராம்
வெங்காயம் -2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
பூண்டு பல் -4
குழம்பு மசாலா அல்லது மீன் மசாலா - 2டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - 1டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் அரைத்தது - 3டேபிள்ஸ்பூன்
புளி - பெரிய நெல்லியளவு
உப்பு - தேவைக்கு
கூனி இறாலை மணம் வரும்படி சிவறாமல் வறுத்து கொள்ளவும்.தட்டை பயறை குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் பயறுடன் தேவைக்கு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு, உ.பருப்பு கருவேப்பிலை சேர்த்து வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாய் போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு மூடி போட்டு வேக விடவும்.

கத்திரிக்காய் வெந்ததும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.

வறுத்த கூனி இறால், மசாலா தூள் சேர்க்கவும்,நன்கு பிரட்டி விடவும்.

வேக வைத்த தட்டை பயறு சேர்க்கவும்.


நன்கு பிரட்டி விடவும்.

புளிக்கரைசல் விடவும், உப்பு சரிபார்க்கவும்.நன்கு கொதிக்க விடவும்.மசாலா,புளி வாடை மடங்க வேண்டும்.


அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு கொதிவரவும், சிம்மில் சிறிது வைத்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான கூனி தட்டைபயறு கத்திரிக்காய் ரெடி. இதனை ப்லைன் ரைஸ், சப்பாத்தி,அரிசி மாவு ரொட்டியிடனும் பரிமாறலாம்.வெஜ் சாப்பிடுறவங்க தட்டை பயறு கத்திரிக்காய் மட்டும் போட்டு இம்முறையில் செய்யலாம்.

சுவையான ட்ரை மட்டன் சுக்கா

தேவையான பொருட்கள் ;

மட்டன் - முக்கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒன்னரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரைஸ்பூன்
தயிர் -1 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் - கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
மிள்குத்தூள் - முக்கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - முக்கால் ஸ்பூன்
சீரகத்த்தூள் - முக்கால் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2 பெரியது
மிளகாய் - 2
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு

மட்டனை சுத்தம் செய்து கழுவி சுமார் அரைமணி நேரம் தண்ணீர் வடிகெட்டவும்.
குக்கரில் மட்டன்,இஞ்சி பூண்டு விழுது,கரம்மசாலா,மஞ்சள் தூள்,உப்பு,தயிர் சேர்த்து கலந்து வைத்து மூடி 5 விசில் விசில் வைத்து சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

மட்டனில் இப்படி தண்ணீர் சேர்க்காவிட்டாலும் ஊறி இருக்கும்.
ஊறிய தண்ணீரை வற்ற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்துடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.
மட்டனுடன் அனைத்து மசாலாவும் சேர்த்து விடவும்.
மசாலாவை மட்டனுடன் சேர்த்து பிரட்டிவிடவும்.
சிறிது தண்ணீர் தெளித்து சிம்மில் மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.
மூடியை திறந்து கட் செய்த மல்லி இலை தூவவும்.
சுவையான ட்ரை மட்டன் சுக்கா ரெடி.இதனை ப்லைன் ரைஸ், வெரைட்டி ரைஸ்,பிரியாணி,ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.

மட்டன் கோலா உருண்டை குழம்பு

வழங்கியவர் : இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
ஆயத்த நேரம் : 20 நிமிடங்கள்.
சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்.
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு.



தேவையான சாமான்கள்:
* கொத்தின (கைமா) ஆட்டிறைச்சி - 1/2 கிலோ,
* பெரிய வெங்காயம் - 2+2,
* தேங்காய் - 1 மூடி,
* இஞ்சி - சிறு துண்டு,
* பூண்டு - 10 பல்,
* மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
* தனியா தூள் - 2 தேக்கரண்டி,
* சோம்பு - 1/2 தேக்கரண்டி,
* கசகசா - 2 தேக்கரண்டி,
* தக்காளி - 4,
* மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
* உருளைக்கிழங்கு - 3,
* பட்டை - சிறிது,
* கிராம்பு - 2,
* கறிவேப்பிலை - சிறிது,
* கொத்தமல்லி தழை - சிறிது,
* எண்ணெய் - 4 ஸ்பூன்,
* உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* சோம்பு, கசகசா, தேங்காய், கிராம்பு, பட்டை, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள்,
* இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
* இறைச்சியை கழுவி சிறிது உப்பு, அரைத்த விழுதில் பாதி, 2 வெங்காயம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.
* அரைத்த விழுதுடன் சிறிது எண்ணெய் விட்டு,சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
* மீதி வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
* பாத்திரத்தில்எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.
* சிறிது நேரம் வதக்கிய பின், மீதியுள்ள தேங்காய் மசாலாவை போட்டு, கிளறி, தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
* கலவை நன்றாக கொதிக்கும் பொழுது, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, தக்காளி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
* கிழங்கு வெந்ததும், உருட்டி வைத்துள்ள கறி உருண்டைகளை இரண்டிரண்டாக போட்டு, உருண்டைகள் வெந்ததும் இறக்கவும்.

Note:

உருண்டைகள் கரைந்து விடுமென நினைத்தால், உருண்டைகளை லேசாக எண்ணெயில் (light fry) பொரித்து போடலாம்.

Hyderabadi chicken dum ka biryani

authentic hyderabadi biryani, very elaborate but sinfully tasty.
Filed in Rice Dishes
Serves 4 people
very tasty original hyderabadi biryani

Ingredients

* chicken - 1/2kg
* basmathi rice - 1/2 kg
* pudina paste - 1/2 cup
* ginger and garlic paste - 1/2 cup
* curd - 2 cup
* chillie powder - 3tsp
* saffron - 1 pinch
* milk- 1/4 tsp
* turmeric powder - 1/2 tsp
* coriander and green chillie paste - 1/4 cup
* ghee - 3tsp
* oil - 1 cup
* garam masala powder- 1tsp
* shahjeera - 2tsp.
* salt as required
* chopped pudina(mint) - 1tsp
* Chopped coriander - 3tsp
* slit green chillies - 6
* maida dough - 1cup.
* golden fried sliced onions - 1 1/2 cup.

Directions

1. choose leg pieces in chicken and wash thouroughly.
2. In a thick bottomed vessel add chicken, pudina paste, curd, coriander and chillie paste, salt, ginger and garlic paste, turmeric powder, chillie powder, oil, slit green chillies. mix well and marinate it for 3-6 hrs.
3. Then boil marinated chicken in low flame for 15mins and keep it aside
4. wash basmath rice and boil it in water mixed with garam masala powder, elaichi , salt and shahjeera till 1/2 done and drain water and keep rice aside.
5. Now take a thick bottomed vessel and layer chicken at the bottom, then add basmathi rice and repeat the process. make sure that top layer is rice and bottom layer is chicken.
6. then pour remaining chicken gravy on rice and sprinkle golden fried onions, and saffron soaked in milk, ghee, chopped pudina and coriander.
7. cover vessel with a well fitted lid and seal it with maida, then put a heavy water vessel on the top of lid to avoid burning and cook on low flame for 1hour.
8. serve hot with raitha

Mutton Rogan Josh

A fine delicacy form Kashmir which derives its name from red Kashmiri Chillies and literally means Red lamb.


Ingredients

* 1 Kg mutton
* 5 tbsp oil
* 1 cup curd
* 2 oniond finely chopped
* 2 tbsp ginger paste
* 2 tbsp garlic paste
* 1 1/2 tsp kashmiri red chilly powder
* 1 tsp garam masala powder
* 1 tsp ginger powder(Dry sonth)
* 2 tbsp Coriender powder
* 1/2 tsp turmeric powder
* 1tsp cumin powder
* 1tsp black pepper corns
* 12 cloves
* 8 green cardamom
* 5 stickds of cinnamon
* few threads of mace
* 2 tbsp white cream
* Salt
* Chopped coriender to garnish

Directions

1. In a bowl mix mutton with curd and little salt, and keep aside.
2. Heat oil in a pan and put whole garam masala, when they start to crackle, put chopped onions anf fry till golden brown.
3. Add ginger-garlic paste and fry again for two minutes.
4. Add all the masala powder and fry till oil comes up.
5. Now add mutton with marinade and stir fry on a high flame for 2 minutes.
6. Now add water and lttle salt and cook with closed lid till meat is tender and gravy is medium thick in consistancy.
7. Keep in mind that, we have already put salt while marinating the mutton, so adjust the seasoning accordingly.
8. Now add cream and stir well and cook for another 3 minutes.
9. Garnish with chopped coriender.
10. Serve with Rice, pulao or roti if you like.