Tuesday, April 26, 2011

கருணாநிதி அரசின் ஐந்தாண்டு சாதனைகள்

கருணாநிதி அரசின் ஐந்தாண்டு சாதனைகள் :
1.ஸ்பெக்ட்ரம் மூலம் ஒருலட்சத்து எலுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் சுருட்டியது (அமெரிக்க பத்திரிக்கை வரை தமிழனை அறிமுகபடுத்தியது)
2.இரண்டு மகன்கள் ஒரு மகள் பேரன் முதலானோருக்கு பதவி
3.குடும்ப சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது
4.ஐந்தாண்டுகளில் 634 பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்கியது
6.ஐந்தாண்டுகளில் ஏழு உலக புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது
7.ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
8.கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்காமல் அடுத்த கட்சியினரை விலைக்கு வாங்கியது (மதிமுக கூட்டரத்தையே காலி பண்ணிய புண்ணியவான்)
9.ஒட்டு மொத்த ஊடகத்தையும் (பத்திரிக்கை ,தொலைக்காட்சி உட்பட) தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
10.ஓட்டுக்கு பணம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கே அறிமுகபடுத்தியது
11.ஐந்தாண்டு காலம் தினம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் (சென்னையை தவிர) இதுதான் மிகப்பெரிய சாதனை
12.பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரம் ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசு இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு
13.அரைமணி நேரம் உண்ணாவிரதம் (கின்னஸ் சாதனை இதுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை) இருந்து இலங்கை போரை நிறுத்தியதாக நாடகம் ஆடியது
14.அரசு பணத்தை செலவு செய்து கோவையில் குடும்ப மாநாடு நடத்தியது(தனது குடும்பம் மட்டும் பார்த்து ரசிக்க தனி மேடை)
15.அரசு பணத்தில் இலவச டிவி கொடுத்து கேபிள் இணைப்பை தனது பேரன்கள் மூலம் குடுத்து (சுமங்கலி கேபிள், ராயல் கேபிள்) குடும்ப வருமானத்தை பெருக்கியது
16.மனைவி, துணைவி, பெரியமகன், சின்னமகன், பேரன்கள், ஆகியோர் இடையே சண்டை சச்சரவுகள் வராமல் தமிழ் நாட்டை தனித்தனி மண்டலங்களாக பிரித்து கொடுத்தது (ஐந்தாண்டு காலம் இவர் இதற்க்கு தான் அதிக நேரம் செலவிட்டார்)
17.இலவசங்கள் கொடுத்து ஆட்சியை பிடிக்கலாம் என நிரூபித்த மேதை
இன்னும் நிறைய சாதனைகள் செய்துள்ளார் எழுதிக்கொண்டே போகலாம் தமிழக மக்களே மீண்டும் இவரை ஆறாவது முறையாக முதல்வராக்கினால் இது போல் நிறைய சாதனை செய்வார். திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் மீண்டும் திருவாரூக்கே போகிறார் மன்னனாக.
18. தற்போது மீண்டும் ஸ்பெக்ட்ரம் திருடனாக மீண்டும் திருவாரூரில் போட்டியிடும் செம்மலாகிறார்

Read more: http://truetamilans.blogspot.com/2011/03/27-03-2011.html#ixzz1Ht2qyWBB

No comments: