Tuesday, May 17, 2011

காங்கேயம் இனப் பசுக்கள்

''காங்கேயம் இனப் பசுக்கள் அதிகளவில் பால் கொடுப்பதில்லை என்பதால், இவற்றை வளர்க்க பலரும் முன்வருவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் நாட்டு மாடுகளின் மகத்துவம் மக்களுக்குப் புரியத் தொடங்கியுள்ளது. பாலை விட, சாணம், சிறுநீர் போன்றவை இயற்கை விவசாயத்துக்குத் தேவைப்படுவதால், காங்கேயம் பசுக்களை விவசாயிகள் இப்போது விரும்பி வளர்க்கத் தொடங்கியுள்ளார்கள். ஆனால், தேவைக்கேற்ற அளவில் காங்கேயம் காளைகள் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை. திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பரவலாக பொலிக்காளைகள் வளர்க்கப்படுகின்றன. சிலர் காங்கேயம் பசுக்களை பருவத்தின்போது பொலிக்காளைகள் கிடைக்காமல் போனால், வேறு இனத்துடன் இனச்சேர்க்கை செய்து விடுகிறார்கள். அதனால் தூய காங்கேயம் கன்று பிறப்பதில்லை.

அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் விண்ணப்பம் செய்தால், காங்கேயம் இனக் காளையின் விந்தணுக் குச்சிகளை (ஸ்ட்ரா) வாங்கித் தருவார்கள். ஓசூரில் உள்ள கால்நடைப் பண்ணையில் காங்கேயம் காளைகளின் விந்தணுக் குச்சிகள் கிடைக்கின்றன.

கன்றுகள் சுழியுடன் பிறந்தால், குடும்பத்துக்கு ஆகாது என்று நம்பப்படுகிறது. அறிவியல் ரீதியாக இது தவறு என்றாலும், பலர் இதை நம்புகின்றனர். அதனால், கால்நடைப் பண்ணைகளில் சுழி இல்லாத காளைகளில் இருந்து சேகரிக்கப்படும் விந்தணுக் குச்சிகளைக் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். நாமேகூட காளைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.''

தொடர்புக்கு: ஓசூர் கால்நடைப் பண்ணை, தொலைபேசி: 0434-4262432.

சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம், அலைபேசி: 99944-33456.

No comments: