Saturday, March 28, 2009

ராமதாசின் கபட நாடகம் ..ஒரு காங்கிரஸ் தொண்டனின் கேள்வி .

ராமதாஸ் நேத்து ஒரு ட்ராமா நடத்தினது எல்லாருக்குமே தெரியும். அதெப்டிங்க மருத்துவரே... நீங்க பொதுக் குழுவை கூட்டுவிங்க. அதுல அதிமுகவா, திமுகாவா என்று கேட்டு ஒரு அட்டையை எல்லார்கிட்டயும் குடுப்பிங்க. அவங்க எந்தக் கூட்டணின்னு சொல்வாங்க. அப்பால அந்தக் கூட்டணியில நீங்க சேருவிங்க. உங்களுக்கே இதெல்லாம் சிரிப்பு வரலை? :))

சரி.. எல்லாரும் அதிமுகன்னு சொல்லிட்டாங்க. இப்போ அதிமுக உங்களை சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னா என்னா செய்விங்க? :))
(ஒரு பத்திரிக்கையாளர் கூட இதைக் கேட்கலை.. யாரும் சீரியசா எடுத்துக்கலையோ? :)) )

போறதுன்னா வழக்கம் போல வேட்டியை இறக்கிவிட்டு துண்டை இடுப்புல கட்டிகிட்டு தலையைக் குனிஞ்சி கை கூப்பிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே. அதான் இரண்டு பக்கமும் ஆள்விட்டுப் பேசி எங்க வெயிட்டா கெடைக்கிதோ அங்க சேருவதுன்னு முடிவு பண்ணியாச்சி இல்ல.

அதென்னா மருத்துவரே பூவாத் தலையா போடற மாதிரி ஒரு வாக்கெடுப்பு? . உங்களுக்குன்னு கொள்கை தான் ஒன்னும் இல்லை. இப்போதைய சூழல்ல யாரோட செயல்பாடு நல்லா இருக்குன்னு பார்த்து போறதா சொல்லி இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும். அதை விட்டு பள்ளிக் கூட பசங்களை மாதிரி சரியான விடையை தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிங்க. நல்லா இருங்கய்யா..

அன்புச்சகோதரி கிட்ட ஏற்கனவே பேசி ஒப்பந்தம் எல்லாம் போட்டாச்சி இல்ல. அதை நேரடியாக அமல்படுத்த வேண்டியது தானே. எதுக்கு பொதுக் குழு ட்ராமா?. ஒருவேளை உங்க கட்சிக்காரங்க திமுக கூட்டணிதான்னு சொல்லி இருந்தா என்ன செஞ்சிருபிங்க? அவங்க தான் ஒரு மாவட்ட செயலாளர் அல்லது மந்திரிக் கூட உங்க கிட்ட வந்து பேசலையே.

ஆனா ஒன்னு மருத்துவரே.. இந்த தேர்தல் முடியறதுக்குள்ள நீங்க அனுபவிக்கப் போறதை எல்லாம் நினைச்சா உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுங்க.. :(

அதிக அளவில் பல்டி அடிச்சது நீங்க தான்னு தினமலர்ல நியூஸ் போட்டிருக்காங்க. அவிங்க கெடக்கறாய்ங்க. குடும்பத்துல இருந்து யார்னா அரசியலுக்கு வந்தா முச்சந்தியில வச்சி சவுக்கால அடிக்க சொன்ன கொள்கை வீரர் நீங்க. இதுக்கெல்லாம் கவலைப் படாதிங்க.

சரி சரி.. போனோமா.. 6 சீட்டு வாங்கினோமா 2 எடம் ஜெயிச்சோமான்னு சட்டு புட்டுன்னு கிளம்பி வாங்க. அங்கயே ரொம்ப நாள் இருந்துடாதிங்க. அன்புமணிக்கு மந்திரிப் பதவி தொடரனும்ல.

தேர்தல் முடிந்த கையோடு உங்கள் வரவை எதிர் நோக்கிக் காத்திருக்கும்
ஒரு காங்கிரஸ் தொண்டன்.

No comments: