Sunday, October 2, 2011

சுந்தர்சி படத்தில் வடிவேலு – முடிந்தது வனவாசம்

மறுபடியும் அரசியல்? இப்படி ஒரு கேள்வியை வடிவேலுவிடம் கேட்டால் லைட்டை ஆஃப் பண்ணிட்டு அந்த கடையோட ஷட்டரையும் க்ளோஸ் பண்ணிட்டேன். இப்ப போய் இது என்ன தேவையில்லாத கேள்வி என்கிறார் உஷாராக. தன்னை அணுகி வரும் ஒரு சில அழைப்புகளுக்கான பதிலாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கிடையில் அவர் மீண்டும் கேமிராமுன் நிற்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தனது வனவாசத்தை முடித்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு. டைரகட்ர் சுந்தர் சி இயக்கவிருக்கும் புதுப்படத்தில் நம்மையெல்லாம் சிரிக்க வைக்கப் போகிறவர் நம்ம வைகைப்புயல்தான்.

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், குடும்பத்தோடு பார்த்து ரசிக்கிற மாதிரி நடிக்கிற அற்புதமான நடிகர் வடிவேலு. வவ்வால் கூட்டில் வண்ணத்துப்பூச்சி ஒதுங்கிய மாதிரி ஆகிவிட்டது அவரது அரசியல் ஆசை. நல்லவேளையாக உஷாராகிவிட்ட அவர் இந்த முடிவை எடுத்திருப்பது மறுபடியும் கோடம்பாக்கத்தை சந்தோஷப்படுத்தியிருக்கிறது.

ஆனால் பத்து மணிக்கு ஷுட்டிங் வருவது, ஒன்றிலிருந்து மூன்று வரை மதிய வேளை ரெஸ்ட். மாலை ஐந்து மணிக்கு பேக்கப் என்கிற அவரது படப்பிடிப்பு கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மறுபடியும் கோடம்பாக்கத்திலிருந்து இவருக்கு கிடைக்கப் போவது மடி நிறைய சாபம்தான்…

சேச்சே… இன்னுமா அப்படியிருப்பாரு?

No comments: