Thursday, April 18, 2013

காசன்காடு கிராம கோழி குழம்பு


நபர்கள்: 4
சமைக்கும் நேரம்: 30 நிமிடம்

தேவையான பொருட்கள்:
  1. கோழி இறைச்சி - 1/2 கிலோ
  2. தக்காளி - 1 எண்ணிக்கை
  3. வெங்கயாம் நறுக்கியது - 1/2 கப்
  4. இஞ்சி - 1/2 விரல் நீளம் ( 1" Inch)
  5. பூண்டு - 4 பள்ளு
  6. மஞ்சள்  பொடி - 1/4 தேக்கரண்டி
  7. மல்லி பொடி - 3 மேசை கரண்டி
  8. மிளகாய் தூள் - 1/2 மேசை கரண்டி அல்லது தேவைகேற்றவாறு
  9. சோம்பு - 1 மேசை கரண்டி
  10. சீரகம் - 1/2 மேசை கரண்டி
  11. மிளகு - 2 மேசை கரண்டி
  12. கொத்தமல்லி தலை -  2 தலைகள் -  தேவைகேற்றவாறு
  13. துருவிய தேங்காய் - 1/4 கப்
  14. உப்பு - தேவைகேற்றவாறு
தாளிக்க:
  1. எண்ணெய் - 1 மேசை கரண்டி
  2. சோம்பு - 1 தேக்கரண்டி
  3. கருவேப்பில்லை இலை - 10 இலைகள்
சமைக்கும்  முறை:

  1. சோம்பு, சீரகம், மிளகு போன்றவற்றை (மிளகு வெடிக்கும் வரை) வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
  2. தேங்காய், மல்லிபொடி, மிளகாய்பொடி, மேலே அரைத்த பொடி, சிறிய வெங்கயாம் (1) சேர்த்து நேவாக அரைத்து கொள்ளவும்.
  3. இஞ்சி, பூண்டு துவையலாகும் வரை அரைத்து கொள்ளவும்.
  4. குழம்பு வைக்கும் பத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் வைக்கவும்.
  5. எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
  6. அதனுடன் கோழி, இஞ்சி பூண்டு துவையல்,  மஞ்சத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறிவிடவும்.
  7. 10 - 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  8. கறி நன்றாக வெந்தவுடன் (Step 2) அரைத்த மசாலாவை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. 5 - 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  10. வாணலியில் எண்ணையை ஊற்றி மிதமான சூடு செய்யவும்.
  11. எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு, கருவேப்பில்லை இலை சேர்த்து முன்பு கொதித்த குழம்பில் ஊற்றவும்.
  12. நன்றாக குழம்பை கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  13. சுவையான காசாங்காடு கிராம கோழி குழம்பு தயார்.

No comments: