Friday, October 4, 2013

கொத்துக்கறி உருண்டை குழம்பு

சுவையான கொத்துக்கறி உருண்டை குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • கொத்துக்கறி – 500 கிராம்
  • வெங்காயம் பெரியது – 1
  • மிளகாய் வற்றல் – 6
  • வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • தேங்காய் – 1 கப்
  • கசகசா – 1 தேக்கரண்டி
  • பட்டை – 1 அங்குலம்
  • கிராம்பு – 3
  • ஏலக்காய் – 2
  • முந்திரிப்பருப்பு – 6
  • எலுமிச்சம் பழம் – 1/2
  • முட்டை – 1
  • மல்லித்தழை, புதினா – சிறிதளவு
  • நெய் – 2 தேக்கரண்டி
  • எண்ணெய்  – 3 தேக்கரண்டி
செய்முறை
  1. மிளகாய் வற்றல், வர கொத்தமல்லி, சோம்பு, கசகசா, முந்திரிபருப்பு  ஆகியவற்றை இளம் சிவப்பாக வறுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொத்துக்கறியை தண்ணீரில்லாமல் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  3. வதக்கிய கறியை மிக்ஸ்யில் போட்டு லேசாக அடித்துக் கொள்ளவும்.
  4. இதனுடன் அரைத்த மசாலாவில் பாதியை சேர்த்து, முட்டையையும் உடைத்து ஊற்றி நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.
  5. அதே குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லித்தழை, புதினா, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி , எடுத்து வைத்துள்ள மீதமுள்ள  அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. இதனுடன் தேங்காய்ப்பால் ஊற்றி நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
  7. குழம்பு கொதிக்கும்போது செய்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும்.
  8. குழம்பை கிளறாமல் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
  9. இறக்கியவுடன் எலுமிச்சம்பழசாறு பிழிந்து விடவும்.
குறிப்பு
கொத்துக்கறி உருண்டைகளை தனியே எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சேர்க்கலாம்.

நன்றி : TAMIL COOK

No comments: