Friday, March 2, 2012

கிங் சமோசா

தேவை:

மைதா மாவு – 125 கிராம்
வற்றல் பொடி – 1 1/2 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
பச்சை பட்டாணி – 100 கிராம்
மல்லி இலை – 25 கிராம்
கடலை எண்ணெய் – 1/4 கிலோ
சிட்ரிக் ஆசிட் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 1 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் வற்றல் பொடி மஞ்சள் பொடி, தேவையான உப்பு, இஞ்சி, கரம் மசாலா வேக வைத்த பட்டாணி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை மல்லி, மிளகாய், சிட்ரிக் ஆசிட் எல்லாவற்றையும் கலந்து வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரித்து கலவையை வதக்கி பின்னர் ஆற வைக்கவும். பிறகு மைதாவுடன் 2 மேஜைக்கரண்டி எண்ணெயை விட்டு, தேவையான உப்பும் போட்டு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சுட்டு சப்பாத்திகளாக இட்டு ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் தண்ணீர் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு மீதி பொன்நிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

No comments: