Friday, April 17, 2009

கோமாளிகளின் கூத்து !

நடிகர் மன்சூர்அலிகான் தன்னை டி.ராஜேந்தரின் இலட்சிய திமுகவில் இணைத்துக்கொண்டார். மன்சூர்அலிகான் ராஜேந்தருக்கு சால்வை அணிவித்து வீரவாள் பரிசு வழங்கி கட்சியில் இணைந்தார்.

இது குறித்து மன்சூர் அலிகான், இலங்கை தமிழர்களை காக்க கூட்டு பிரார்த்தனைக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. சினிமாவில் மட்டும் கதாநாயகியை காப்பாற்றுவதற்கு வில்லன்களை பந்தாடுகிறார்.

நிஜத்தில் தமிழர்களை பாதுகாக்க மண்டியிட வேண்டும் என்கிறார். ராஜேந்தர் தமிழ் இன உணர்வுமிக்கவர். அவருடன் இணைந்து இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்போம்'' என்றார்.

No comments: