Friday, April 24, 2009

ஜெ மட்டும் சென்னைக் கூட்டத்தில் பேசியதையே ரிப்பீட்டலாம். நான் அந்தப் பதிவில் எடுத்ததை ரிப்பீட்டக் கூடாதா?

இந்த இடுகை "சோம்பேறி " என்ற வலை தலத்தில் இருந்து எடுக்கப்பட்டது .


ஜெயலலிதா நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வை.கோ மற்றும் P.மோகனை ஆதரித்துப் பேச, முறையே சிவகாசி மற்றும் மதுரைக்கு விஜயம் செய்திருந்தார். 'அதைத் தடுப்பதற்காகவே கருனாநிதி இந்த 'பந்த்'தை அறிவித்திருக்கிறார்' என்று நான் சொல்லவில்லை; நேற்று ஜெயா டிவியில் மன்னிக்கவும் விருதுநகர் பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா சொன்னார்.

மேலும், ஈழப் பிரச்சனைக்காக தீக்குளித்தவர்களுக்காக(குறிப்பாக அதிமுக தொண்டர் மணிக்காக) மௌன அஞ்சலி செலுத்தினார். இனி யாரும் அப்படி செய்யக் கூடாதென வேண்டிக் கொண்டார். தமிழ் திருநாட்டு அரசியல்வாதிகளின் செயல்களை ஊகிக்கவே முடிய வில்லை. நாளையே ஜெ கருனாநிதிக்காக ஓட்டு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மதுரை கள்ளழகர் திருவிழாவின் போது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்குவதன் மூலம் கள்ள ஓட்டு போட அழகிரி திட்டமிட்டிருப்பதாக ஜெ.க்கு செய்தி வந்திருக்கிறதாம். ஏன்யா ஏன்.. ஏன் அந்தப் பச்சப் புள்ளையைப் பாத்து ஏன் இவ்ளோ பயப்படுறீங்க. ஜெ யூ டூ?

ஜெ பேசிய போது, பல இடங்களில் சென்னையில் பேசியதை மறு ஒளிபரப்பு செய்கிறார்களோ என்று சந்தேகம் வந்தது. அதிலும், 'எனக்கு உங்களை விட்டால் யாருமில்லை. உங்களைத் தான் நம்பியிருக்கிறேன்' என்ற வசனம், 'நாளை நமதே நாற்பதும் நமதே' போல ஜெவின் மற்றொரு பன்ச் டயலாக் ஆகி விட்டது போல. அடிக்கடி ரிப்பீட்டுகிறார். மண்டபத்தில் எழுதிக் கொடுத்த மகானே, ரஸ்ய பட டிவிடிகளிலிருந்து சுட்டாவது கொஞ்சம் சுவாரஸ்யமாக எழுதித் தரவும்.

(ஜெ மட்டும் சென்னைக் கூட்டத்தில் பேசியதையே ரிப்பீட்டலாம். நான் அந்தப் பதிவில் எடுத்ததை ரிப்பீட்டக் கூடாதா?)

விளம்பர இடைவேளையின் போது, கருனாநிதி பேட்டி ஒளிபரப்பானது. அதில் ஒரு நிருபர் கருனாநிதியிடம் 'ஈழ பிரச்சனைக்காக என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு கருனாநிதி 'தீக்குளிக்கப் போகிறேன். நீயும் வர்றியா' என்று கேட்கிறார். பின்னனியில் 'இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் ஒளிபரப்பாகிறது.

மிகவும் சுவாரசியமான விளம்பர உத்தி. முந்தைய தேர்தல் போல் மொக்கையாக, இருபது நிமிடங்களுக்கு ஜெ டாட்டா போடுவதையே காட்டாமல், இந்த முறை புதிதாக முயற்சித்திருக்கிறார்கள்.

பின் குறிப்பு : நேற்று என் சித்தப்பா இந்தக் கூட்டத்தை (ஓரமாக நின்று வேடிக்கை) பார்க்கப் போயிருந்ததால், அவரை தொலைக்காட்சித் திரையில் பார்க்கும் அல்ப ஆசையின் விளைவாகவே ஜெயா டிவியில் இந்த கூட்டத்தைப் பார்த்தேன். மற்றபடி, இதுவே நான் அதிமுக பொதுக் கூட்டம் பற்றி எழுதும் இரண்டாம் மற்றும் இறுதி இடுகை என்று எங்கள் விருதுநகர் தொகுதி வேட்பாளர்கள் தலையிலடித்து சத்தியம் செய்கிறேன்.
----------------------------------------------------------------------------
சோம்பேறி முன்னேற்றக் கழக உறுப்பினர்கள்
ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது...

No comments: