Tuesday, February 28, 2012

செட்டிநாட்டு கோழி பிரியாணி

* 1. பாசுமதி அரிசி - 1 1/2 கப்
* 2. கோழி - 1/2 கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது)
* 3. வெங்காயம் - 1 (பெரிதாக நறுக்கியது)
* 4. தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)
* 5. பச்சை மிளகாய் - 5
* 6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
* 7. தேங்காய் பால் - 1 1/2 கப்
* 8. தண்ணீர் - 1 1/2 கப்
* 9. கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
* 10. தயிர் - 1/2 கப்
* 11. எண்ணெய் - 100 மில்லி
* 12. நெய் - 3 தேக்கரண்டி
* 13. உப்பு
* 14. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
* 15. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
* 16. கரம் மசாலா தூள் - 1/4 தேகரண்டி
* 17. பட்டை
* 18. லவங்கம் - 5
* 19. பிரியாணி இலை - 1
* 20. ஏலக்காய் - 3



* கோழியுடன் பாதி தயிர், மஞ்சள் தூள், பாதி உப்பு சேர்த்து கிளறி ஊறவிடவும்.
* அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
* இதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
* இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
* இத்துடன் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதம் உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி 3 நிமிடம் வைக்கவும்.
* நன்றாக குழைந்து மிளகாய் தூள் வாசம் போனதும், ஊற வைத்துள்ள கோழியை சேர்த்து வேக விடவும்.
* கோழி வெந்ததும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
* கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி முக்கால் பாகம் வேக விடவும்.
* இப்போது அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிறுந்தீயில் 10 - 15 நிமிடம் தம் போடவும்.
* சாதம் முழுதாக வெந்ததும் இறக்கி விடவும். சுவையான செட்டிநாட்டு கோழி பிரியாணி தயார்.

No comments: