Tuesday, February 28, 2012

செட்டிநாடு எலும்பு குழம்பு

செட்டிநாடு எலும்பு குழம்பு

mutton-elumbu-kuzhambu

செட்டிநாடு எலும்புக் குழம்பு இது மிகவும் சுவையாக இருக்கும். பாரம்பரியமான செட்டிநாடு சமையல் இதை எளிதில் செய்து விடலாம்.. நீங்களும் செய்து பாருங்கள். நான் சமைத்து ருசித்து பின்பு நீங்களும் செய்து ருசிப்பதற்காக செய்முறை இங்கே! நீங்களும் செய்து பாருங்கள்.நீங்களும் ருசிப்பிர்கள்

தேவையான் பெருட்கள்;-

ஆட்டு எலும்பு - 1/2 கிலோ

தூவரம் பருப்பு – 100 கிராம்

உருளைக்கிழங்கு - 150 கிராம்

கத்திரிக்காய் - 150 கிராம்

முருங்கைக்காய் - 2

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - கால் கிலோ

பச்சைமிளகாய் – 10

வரமிளகாய் - 10

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

பட்டை - 4

பிரியாணி-இலை – 1

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை;-


mutton-elumbu-khzhambu-1

ஒரு குக்கரில் ஆட்டு எலும்பு, தூவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள்தூள், சிறிது உப்பு, மற்றும் 5 கிளாஸ் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம்,சோம்பு, பட்டை,பிரியாணி இலை,பச்சைமிளகாய்,வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் வெங்காயம்(இரண்டும்),தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

அதில் கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,காய் நன்றாக வதங்கியதும்.

இந்த கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புக் கலவையை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும

நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சுவையான செட்டிநாடு எலும்புக் குழம்பு தயார்.

குறிப்பு;-

சாம்பார் தூளுக்கு பதில் மிளகாய்தூள்-2டீஸ்பூன்,மல்லிதூள்-3டீஸ்பூன் சேர்க்கலாம் அப்படி சேர்க்கும் போது மிளகாய் 10ஆக இருப்பதை 5ஆக குறைத்துக் கெள்ளவும்.

No comments: