Sunday, August 24, 2008

ரஜினி மீது மீண்டும் விஷம் கக்கியிருக்கிறது சன் டிவி

ரஜினி மீது மீண்டும் விஷம் கக்கியிருக்கிறது சன் டிவி, குசேலனுக்கு விமர்சனம் எனும் பெயரில்.

குசேலன் நல்ல கதையாம்... அருமையான நடிப்பாம். ஆனால் ரஜினிகாந்த் பகுதி மிகவும் செயற்கையாம். லாஜிக் இல்லாத மேஜிக் நடத்திக் காட்ட முயன்று தோற்றுப் போய் விட்டார்களாம்.

படம் வெளியாகி 25 நாட்கள் கழித்து சன் டிவி கண்டுபிடித்திருக்கும் மாபெரும் உண்மை இது. ஆனால் இதே விமர்சனத்தை சாக்காக வைத்து திரும்பத் திரும்ப ரஜினியைக் காட்டி பல லட்சம் ரூபாயை விளம்பர வருவாயாக கல்லா கட்டினார்களே (25 விளம்பரங்கள். சன் டிவியில் ஒரு விளம்பரத்துக்கான கட்டணம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் - 10 நொடிகளுக்கு!) அப்போதி தெரியவில்லையா இந்த லாஜிக் இல்லா மேஜிக்.

இவர்கள் என்ன நோக்கில் அரை மணி நேர நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப ரஜினியைக் காட்டினார்களோ... அதே லாஜிக்கில்தானே வாசுவும் இந்தப் படத்தை எடுத்திருப்பார்?

இந்த மாதிரி மூன்றாம் தர விமர்சனம் பார்த்த பிறகுதான், மக்கள் அந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என்ற நிலைமை ரஜினியின் எந்தப் படத்துக்கும் இல்லைதான்.

ஆனால் குசேலன் விஷயத்தில் மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அல்லது சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு கடும் விஷத்தைக் கக்கி வருகிறது சன் நெட்வொர்க்.
ரஜினியின் விறுவிறு ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே விரும்பும் ரசிகர்களுக்கு குசேலன் திரைப்படம் ஏமாற்றமாக இருந்தாலும், அது ஒரு நல்ல படம் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

துப்பாக்கி குண்டு எதேச்சையாகப் பாய்ந்ததில் தொண்டையிலிருந்த கேன்சர் நீங்கிவிட்டது என்றும், 12-ம் நூற்றாண்டில் கடலில் போடப்பட்ட ரங்கநாதர் சிலை 10 நூற்றாண்டுகள் கழித்து ரங்கராஜன் நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க சுனாமியை உருவாக்கியது எனும் கேயாஸ் தியரி பகுத்தறிவையும் (பெரியார் இருந்திருந்தால் தாடியாலேயே தூக்கு மாட்டிக் கொண்டிருந்திருப்பார்.... என்னே பகுத்தறிவு!) சிலாகிக்கும் இந்த மோசடிக் கும்பலுக்கு, வாழ்வின் வலிகளையும், நட்பின் உன்னதத்தையும் சொல்லும் குசேலன் லாஜிக் இல்லாத படமாகத்தான் தெரியும்.

கலைஞர் டிவி ரூ.7 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கிவிட்ட குசேலனை இன்னும் எந்தெந்த வழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளிலும் தாக்கவே செய்யும் இந்த நச்சுக் கும்பல்.
என்ன கொடுமையென்றால்... இந்த நச்சுப் பிரச்சாரத்துக்கு அடிமையாகி ரஜினி ரசிகர்கள் சிலரும், குசேலனை நினைத்து வெறுத்துப்போய் உட்கார்ந்திருப்பதுதான்.

முன்பெல்லாம் மொத்த மீடியாவும் தங்கள் தனிப்பட்ட வெறுப்பை விட்டுவிட்டு வியாபாரத்துக்காக ரஜினி படங்களைக் கொண்டாடுவார்கள். ஞானி மாதிரி சிலர் கூனி வோலை செய்வார்கள். அதனால் அது பெரிதாகத் தெரியவில்லை. துரதிருஷ்டவசமாக இன்று பெரும்பாலும் மீடியாவை கூனிகளே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

ரஜினி நல்ல படம்தான் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைய மோசமான நச்சுத்தனம் மிக்க மீடியா உலகில், அவர்களுக்குரிய 'பங்கு' சரியாகப் போய் சேராததன் விளைவுதான் இந்த விமர்சனத் தாக்குதல்கள்.

மாநிலத்துக்கு மாநிலம் நாராயண கவுடாக்களும், வட்டாள் நாகராஜாக்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் வந்தாரை வாழ வைத்துக் கிழித்து விட்டோம் என்ற ஜம்பம் வேறே

No comments: