Friday, November 14, 2008

இது கல்யாணம் ஆகபோறவர்களுக்கு மட்டும்

25 வது திருமண நாளை வெற்றிகரமாக கொண்டாடினார்கள் அந்த தம்பதியர்.

அந்த ஊரில் மிகவும்பிரசித்திபெற்றஜோடிகள்..

காரணம்..அவர்களின் ஒற்றுமை..அவர்களது 25 ஆண்டு கால

வாழ்க்கையில் சண்டை போட்டதே இல்லை..

அதுவும் ஒரு காரணம்..ஏன் அதட்டி ஒரு வார்த்தை கூட அந்த

கணவர் பேசியதில்லை..


அந்த ஊர் தொலைக்காட்சியில் இருந்தும்,பத்திரிக்கையில்

இருந்தும் பேட்டி எடுக்க வந்திருந்தனர்.வீடு முழுவதும் மக்கள்

வெள்ளம்.


பேட்டி ஆரம்பித்தது...


ஒரு நிருபர் கேட்டார்...உங்கள் திருமண வாழ்க்கையின் வெற்றியின்

rakasiyam என்ன?..எவ்வாறு உங்களால் மனைவி மேல் கோபப் படாமல்

இருக்க முடிந்த்தது?...


அவர் கூறினார்...நானும் என் மனைவியும் திருமணம் முடிந்த உடன்

தேனிலவுக்கு சென்றோம்...


அவள் குதிரை சவாரி செல்ல விரும்பினாள்..இருவரும் ஆளுக்கு ஒரு

குதிரையில் சவாரி சென்றோம்..


என்னுடைய‌ குதிரை அமைதியாக‌ சென்றுகொண்டிருந்த‌து..அவ‌ளுடைய‌து
கொஞ்ச‌ம் ச‌ண்டித்த‌ன‌ம் செய்த‌து..சிறிது தூர‌ம் சென்ற‌தும் அந்த‌ குதிரை

அவ‌ளை கீழே த‌ள்ளிய‌து..எழுந்த‌ அவ‌ள் இது உன‌க்கு முத‌ல் சான்ஸ்

என்று கூறி ம‌றுப‌டியும் ச‌வாரியை ஆர‌ம்பித்தாள்...சிறிது தூர‌ம்

சென்ற‌தும் ம‌றுப‌டியும் அவ‌ளை அது கீழே த‌ள்ளிய‌து..ம‌றுபாடியும் அவ‌ள்
எழுந்து இது உன‌க்கு 2 வ‌து சான்ஸ் அப்ப‌டின்னுட்டு ம‌றுப‌டியும் ச‌வாரி

செய்தாள்..இந்த முறையும் அவ‌ளை அந்த‌ குதிரை கீழே த‌ள்ளிய‌து..

எழுந்த‌ அவ‌ள் அவ‌ளுடைய‌ துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை

சுட்டு விட்டாள்...


என‌க்கு உட‌னே க‌டுமையான‌ கோப‌ம் வ‌ந்து அவ‌ளை நோக்கி "உன‌க்கு

அறிவு இருக்கா?...ஐந்த‌றிவு பிராணியை இப்படியா செய்வ‌து?..உன‌க்கும்

அதற்கும் என்ன‌ வித்தியாச‌ம்...ஏன் இப்ப‌டி மிருக‌ம் போல் ந‌ட‌ந்து

கொள்கிறாய்..என்று திட்டினேன்..

அதற்கு அவ‌ள் இது உனக்கு முத‌ல் சான்ஸ் என்று என்னிடம்கூறினாள்..

இது தான் எங்களது மண வாழ்கயின் ரகசியம் ...என்று கூறி முடித்தார் .